Friday, February 19, 2010

மற்றும் பல... (cinema special)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் முதல் நாளே பாத்தாலும், அதற்கான விமர்சனம் எழுதனுன்னு எனக்கு தோணவே இல்லை. வழக்கம் போல நம்ம பதிவுலகத்துல, படத்தை பல பேர் கிழிச்சி தொங்க போட்டாலும், சில பேர் வாயார வாழ்த்தினாங்க. எல்லாருமே பொதுவா சொன்ன ஒரு விஷயம், இப்படி வித்தியாசமா சிந்திச்சு ஒரு படத்தை எடுத்த செல்வராகவனை பாராட்டியே ஆகணும்னு. எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்துது. படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே நம்மை படத்துக்குள்ள, டைரக்டர் எடுத்துட்டுப் போய்ட்டார். மொக்க சவுண்ட் இருக்குற சங்கம் தியேட்டர்லையே இப்படினா, சத்யம் தியேட்டர்ல இன்னும் நல்லா இருந்திருக்கும். முதல் பாதி வேகம், ரெண்டாவது பாதி சொதப்பல்னு நான் எந்த குறையும் சொல்லப் போறதில்லை. சில குறைகள் இருந்தாலும், எனக்குப் படம் மொத்தமுமே பிடிச்சிருந்துது.
------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து, மறுபடியும், நான் ரொம்பவே ரசிச்ச, கோவா பத்தி பேச வேண்டியிருக்கு. படம் பார்த்து முடிச்ச உடனே சொன்னேன், வயசான ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்காதுன்னு.  அதேமாதிரி, பல பதிவர்களுக்கு இந்த படம் பிடிக்கல. என்ன குறைய கண்டாங்கன்னு தெரியலை. படத்தை கண்டபடி கண்டம் பண்ணாங்க. வெங்கட் பிரபு, சவுந்தர்யா காசுல கூத்தடிச்சிருக்காரு, ரெண்டாவது பாதி சரியில்லை, blah blah blah. படம் பார்க்கும்போது எந்த குறையும் தெரியலை. எனக்கு மட்டும்தான் இப்படியான்னு பார்த்தா, என் நண்பர்கள் எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்துது. முக்கியமா சில பொண்ணுங்களுக்கு, சம்பத் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துது. ஒரு வேளை எங்களுக்கு படம் பார்க்க தெரியலியோ???
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் படம்னு ஒரு படம் வந்துருக்கு இல்லையா. எல்லாருமே சிலாகிச்சு, தலைல தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. நானும் ரொம்பவே எதிர்பார்த்தேன். நேத்து அந்த படத்தை பார்த்தேன். Surprisingly, என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை. முதல் பாதி நல்லா இருந்துச்சு. இரண்டாவது பாதி ரொம்ப இழுவை. அதுவும் கிளைமாக்ஸ்ல, ஒவ்வொரு தடையா தாண்டி போறது, ரொம்ப மொக்கை. கண்டிப்பா படம் மோசம் இல்லை. நிஜமாவே பாராட்டப் படவேண்டிய முயற்சி தான். எல்லாருக்கும் செம்ம தில்லுதான். ஆனா, என்னால புரண்டு புரண்டு சிரிக்க முடியலை. சில காட்சிகள் எல்லாம், கண்டிப்பா இந்த படத்தை கலாய்ச்சே ஆகணும்னு திணிச்சா மாதிரி இருக்கு. இதோட பார்ட்-2 வந்தா எப்படி இருக்குன்னு பார்க்கணும். (வரவிடுவாங்களா, நான் எடுக்கறேன்...:)
------------------------------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலேஜ் டூர் விஷயமா டெல்லி போறேன். வர ஒரு பத்து நாள் ஆகும். ஏதாவது சுவாரசியமா நடந்தா, வந்து பதிவரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்... டாட்டா..... :)

  
ஒரு வேளை நகசுத்தியோ????

No comments: