Showing posts with label செம்மக் காமெடி. Show all posts
Showing posts with label செம்மக் காமெடி. Show all posts

Thursday, December 3, 2009

வராம்பாரு வேட்டைக்காரன்...

இதை எடிட் பண்ணவரு அஜித் ரசிகரா இருந்தாலும், புத்திசாலித்தனமா பண்ணிருக்காரு.. முக்கியமா, சில இடங்கள்ல டயலாக் இடம் விட்டுட்டு, அப்பறம் தொடருது... அட அட அட.. அருமை... எனக்கென்னமோ, இந்தப் பாடல், விஜயைவிட, நம்ம கவுண்டருக்கு நல்லா செட் ஆவுதுன்னு தோணுது... என்ஸாய்....

Monday, September 28, 2009

இப்படியும் ஒருவன் (mindvoice - நான் இல்ல)

எல்லா பதிவர்கள் மாதிரி, எனக்கும், உன்னைப்போல் ஒருவன் படத்தோட விமர்சனம் எழுதனும்னு ஆர்வமாதான் இருக்கு.(உனக்கு வேற ஏதாவது எழுதத்  தெரியுமா) ஆனா, என்ன எழுத?? ஒரு பக்கம் என்னடான்னா, ரொம்ப thinkittu படத்தை திட்டறாங்க. (முற்போக்குவாதிகளாமா) இன்னொரு பக்கம் "நாங்க சாதாரண, பத்து ரூவா டிக்கெட் ரசிகர்கள், ரொம்ப யோசிக்காம படங்களை பார்த்தல் போதும். தேவையில்லாம எங்களை சிந்திக்க வெச்சி கெடுக்காதீங்கன்னு கேட்கறவங்க ஒரு பக்கம் (ரொம்ப நல்லவன்களாமா).

இதுல வேடிக்கை என்னன்னா, இப்படி சொல்ற பதிவர்கள், இதுக்கு முன்னாடியே, பல பதிவுகள்ள, மொக்கையா, சாதாரண மக்களுக்கு கருத்து சொல்லிருக்காங்க. இந்தப் படம் பார்க்கும்போது மட்டும் ஏன் சாதாரண மக்களா மாறிட்டாங்கன்னு தெரியல (இது இப்ப தேவையா). எது எப்படியோ, என் கருத்தை சொல்லாம விட மாட்டேன். (அதான் தெரியுமே) படம் எனக்கு பிடித்தது. பாட்டு இல்லைனா, ஒரு படம் எவ்வளவு வேகமா இருக்கும்னு காமிக்க, இந்த படம் ஒரு உதாரணம். 

படத்தோட ஹீரோ மோகன்லாலின் (இன்னாது) நடிப்பு, வழக்கம் போல சோப்பர். கமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிருக்கார் (வேற வழி). பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். டைப் அடிக்கும்போது எனக்கே dejavu மாதிரி இருக்கு (இங்கயுமா). அதனால இதுக்கு மேல படத்தப் பற்றி நான் சொல்ல விரும்பலை. வேற எங்கயாச்சும் review பார்த்துக்கோங்க. மொத்தத்துல, கமல் போட்ட திட்டம் (இவன் karamchandlala - HINDU )  அவருக்கே back -fire ஆயிடுச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சிந்திச்சாலே இதான் பிரச்சனை. 
___________________________________________________________________________
இதுக்கு முன்னால, நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. சன் டிவி ஸ்டைல்ல சொல்லனும்னா, "நினைத்தால் மட்டும் இனிக்கும்" பாத்துறாதீங்க. (லேட் வார்னிங்)
___________________________________________________________________________
விஜயின் வேட்டைக்காரன் (!?!?!?!) பாடல்கள் வழக்கம் போல செம்ம massala. எனக்கு மூணு பாட்டு (அனுஷ்கா!!!) புட்சிகிது. ஆனா சார் எதுக்கு அட்வைஸ் பண்றாருன்னு தெரியல(எதோ எதோ கவசாகி). புலி வருது புலி வருதுனு பாடல்,(கொ.... எடுத்ததா எடுக்காததா???) இதுக்கு நம்ம தளபதி குதிரைல வராராமா. எனக்கு வில்லு flashback + போக்கிரி போலீஸ் சீன் ஞாபகம் வந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதோ ஆடி மாசம் அம்மன் பாட்டு கேட்ட effect. இதனால படம் ஓடுமான்னு கேட்டீங்கன்னா..................... "மதுர" அப்படீன்னு ஒரு படம் வந்துச்சுல்ல??(மச்சான் பேரு மதுர) அத ஞாபகத்துல வைங்க.
___________________________________________________________________________
 ஜெயா டிவில, நாங்க வர finals episode, இந்த வாரம், சனிக்கிழமை காலை, telecast ஆச்சு (மறைந்திருந்து பார்க்கும் + காதல் கசக்குதய்யா). மிஸ் பண்ணவங்க, வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு பாருங்க. இல்லை பொறுத்திருந்து youtubela பாருங்க. 


 விஜய் மாதிரி நாம எப்போ வித்தியாசமா நடிக்கப்போகிறோம்????

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

Wednesday, July 1, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -2

முதல் பகுதி -->இங்க<--

தொடர்ந்தான் சிகாமணி, "அதாவது படம் எவ்வளவு கேவலமா இருந்தாலும், பிரம்மாண்டத்த வெச்சு ஒட்டிரலாம்னு பல பேர் நினைக்கறதால, அத மாதிரியே ஒரு கதை. மொத சீன்லயே மவுண்ட் ரோடு LIC பில்டிங் மேல ஒரு டைனோசர் நிக்குது". உடனே நான், "அது எப்படி மச்சான். கிராபிக்ஸ்ஸா??". "இல்லைடா, ஒரு யானைக்கு டைனோசர் make up போட்டு நிக்க வெக்கறோம். இதுக்கு, ஆப்ரிக்கா வனப் பகுதிலேர்து ஒரு make up மேன வரவழைப்போம். இன்னும் கேளு. அந்த டைனோசர பார்க்க, மவுண்ட் ரோடு முழுக்க ஜனங்க குவியறாங்க"

"எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட். என்னப் பண்றதுன்னே தெரியாம குழப்பத்துல இருக்குற நம்ம டைனோசர், பக்கத்துல இருக்குற பில்டிங் எல்லாத்தையும், தன் வாலாலையும், காலாலையும், (சென்சார்) அடிச்சு நொறுக்குது. அத கிராபிக்ஸ் பண்றோம். ஆனா, ரியலிஸ்டிக்கா இருக்கணுமே, அதனால, மவுண்ட் ரோட்ல இருக்குற எல்லா பில்டிங்குக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கிறோம். சுண்ணாம்பு பரவுதே. அப்புறம், அந்த டைனோசர அழிக்க, இந்திய ராணுவமே அங்க குவியுது. விமானப் படைலேர்ந்து, பிளைட்டெல்லாம் வருது. குண்டு போட்டு, டைனோசர அழிக்கப் பாக்கறாங்க, ஆனா எதுவும் நடக்கலை"

"கீழ இருக்குற மக்கள், என்ன ஆகப் போகுதோன்னு, அன்னாக்கா ஆ போட்டு, ஆகாயத்தை பார்க்க சொல்ல, நம்ம ஹீரோ, டைனோசர் ஸ்டொமக்க கிழிச்சிகிட்டு வெளிய வந்து, டைனோசர அழிக்கராறு. எப்பூடி??"

"மச்சான், பேரரசு உடம்புல, ஷங்கர் ஆவி புகுந்தா மத்திரி இப்படியொரு கதை யோசிச்சு வெச்சிருக்கியே. பட்ஜெட் எவ்வளவு??"

"10 கோடி"

"பத்துமா??"

"மொத சீனுக்கு கரெக்டா இருக்கும்"

"அடப்பாவி, முதல் சீனுக்கேவா. ரைட் விடு. எனக்கு கொஞ்சம் கியாரா இருக்கு, நான் வரட்டா??"

"அட இருடா. அடுத்து நாம எப்ப பார்க்கறது. இந்த கதயவே முடிக்கல. ஆனா, சிம்பிளா இன்னும் ஒரே ஒரு கதை சொல்றேன். கேட்டுட்டு போயேன்"

"நான் பாவம்ல. சரி சீக்கரமா சொல்லு. ஆனா இதோட நிறுத்திக்க. start music"

முதல்ல அவ்வளவு சிம்பிளா இருக்கும்னு நினைக்கல. கதைல இருக்குற செண்டிமென்ட கேட்டு எனக்கு வயறு upset ஆகிருச்சுனா பாருங்களேன்.

......will end in next post

Monday, June 15, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -1

நம்ம சிகாமணிக்கு, தமிழ் சினிமான்னாலே aversion. நல்ல கதையம்சம் இருக்குற படம் வருதேன்னு சொன்னா கூட, "என்ன நூத்துல ஒரு படம். அதாவது, நூறு shit வந்தா, ஒரு Hit" அவ்வளவுதான்னு சொல்லுவான். அதுவும் நம்மூரு படத்துல வர காதல் காட்சிகள்னா, அவன் வாய்லேர்ந்து கலர் கலரா கெட்ட வார்த்தைகள் வரும். "*#@!த பாட்டா எழுதறானுங்க, எழுதுற lyrics எல்லாம் !@#று மாதிரி இருக்கு. மேட்டர் படத்துல எல்லாத்தையும் காமிக்கரானுங்க, ஆனா இவனுங்க எழுதுறது அத விட வக்கிரமா யோசிக்க வைக்கும்"னு பொங்கி எழுந்துருவான்.

ஒரு நாள், வழக்கம் போல இத மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தவன நிறுத்தி "நீ எவ்வளவு சொன்னாலும், இத மாதிரி சின்னபுள்ளத்தனமான படம் எடுக்கவும் கொஞ்சம் அறிவு வேணும். எங்க, உன்னால முடியுமா?? நீ விமர்சனம் மட்டும்தான் பண்ண லாயக்கு"னு சொன்னேன். "ஆமாம், பெரிய அறிவு. மண்டைல மசாலான்னு சொன்னத உன் directors எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு, ஒரே மொக்க மசாலா படமா தள்ளிகிட்டு இருக்காங்க. நான் அவங்கள விட மோசமா யோசிச்சு ஒரு கதை சொல்லட்டா??"னு கேட்க, நான் சரின்னு சொன்னேன் ... அவன் ஆரம்பிச்சான்...

"அதாவது, இது ஒரு மசாலா படத்துக்கான கதை. படத்தோட ஹீரோ பேரு சைதாபேட்டை, படத்தோட பேரும் சைதாபேட்டை. நம்ம, ஹீரோ, கலைஞர் ஆர்ச் பக்கத்துல டீ கடை வெச்சிருக்காரு.மொத சீனே மோதலோட ஆரம்பிக்குது ரொம்ப நாளா கடன் சொல்லி டீ குடிக்கிற, அந்த பேட்டை தாதா ஆளுங்கள அடிச்சு வெரட்டுராறு. கேள்வி கேட்க வந்த தாதாவையும் பின்னி பெடலேடுக்குராறு. அடிச்சு முடிசித்ட், "டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"னு மொக்கையா பன்ச் dialogue விட்டு,

//சைதாபேட்டை சைதாபேட்டை சைதாபேட்டை,
ஒரு ஆத்து ஆத்துனா, நீ கண்ணம்மாபேட்டை//னு intro சாங் பாடுரார்.

ஒரு நாள் அந்த பக்கமா வர நம்ம ஹீரோயின், ஹீரோ டீ ஆத்துற ஸ்டைல பார்த்து மயங்கி, ஊட்டில போய், "டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க. இவங்க கருமம் புடிச்ச லவ்வு, கன்னாபின்னான்னு develop ஆவுது. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ, அந்த ஏரியா counsilor மாதிரி, ஏரியா பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைக்கறார். அதே சமயத்துல, லவ்வே புடிக்காத ஹீரோயினோட அண்ணன், ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். இதுல பெரிய ஹீரோ யாரவது நடிச்சாக்கா, அவங்களுக்கு ஏத்த மாதிரி,
"மழைல மனுஷன்தான் நனைவான், புயல் நனையாது"னு பன்ச் டயலாக் எதையாவதோ சேர்த்துக்கலாம். எப்பூடி????"

சொல்லி முடிச்ச சிகாமாணிய ஏற இறங்க பாத்துட்டு, "நீ தமிழ் சினிமாவால இவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன்னு தெரியாம போச்சுடா. இந்த ஒரு கதை தான் யோசிச்சியா, இல்லை இன்னும் இருக்கா??"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஆமாம் இதுக்கெல்லாம் உட்கார்ந்து யோசிக்கறாங்க, இன்னொரு கதை சொல்றேன் கேட்கறியா"னு ஆரம்பிச்சான். அந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான கதைய எப்படிதான் யோசிச்சானோன்னு இருக்கு........

......will continue

Tuesday, March 17, 2009

ஒரு மொக்கை...


மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..


கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது

அப்படியே ஆகுகன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.


ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
யாரப்பா.. நீ?ன்னு கேட்டாராம்..


இவன் சொன்னானாம்...மொக்கைமி


பாவம்.. அவனுக்கு சாவே வரல!

Saturday, March 14, 2009

ஒரு விளம்பரம்.... :)

நம்மையும் மனுஷன்னு மதிச்சு, ஒரு ஆள் interview எடுத்துருக்காரு. அத அவரோட சைட்லயும் போட்டுருக்காரு. இதோ அந்த லிங்க்.


அநேகமா, என் பெயர போட்டு குடுத்தது, அண்ணன் LLதான்னு நினைக்கிறேன். அவ்வளவு நல்லா answer பண்ணல, இருந்தாலும், நமக்கு ஒரு வெளம்பரம்.... ;)


update: அதேபோல, நம்மையும் மனுஷன்னு மதிச்சு, ரெண்டு பேர் கலாய்க்கறாங்க. இதோ அந்த லிங்க்

லாய்

என்ஸாய்....

Sunday, February 8, 2009

மற்றும் பல...

என் அண்ணன் கல்யாணம், சிறப்பாக நடந்து முடிந்தது. வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அழைப்பு வராதவர்கள் மன்னிக்கவும். அழைப்பு வந்தும், வராதவர்களை, நான் மன்னிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------
வில்லு, படிக்காதவன் படங்களை B2B பார்த்தேன். ரெண்டுமே மொக்கை என்றாலும், படிக்காதவன் least worst. தமிழ் ரசிகர்களை, விஜயை விட, வேறு யாரும் அவமானப் படுத்த முடியாது. நல்ல வேளை படம் ஓடலை.
---------------------------------------------------------------------------------------------------
காலேஜ் music troupela நான் சேர்ந்திருக்கேன்/சேர்க்கப்பட்டேன். அநேகமா "techofes" culturalsla perform பண்ணலாம்..
---------------------------------------------------------------------------------------------------
golden globe அடுத்து oscar விருதுக்கு போட்டி போடும் சேரி நாய் (அதான் slum dog) பாட்டு ரொம்ப சுமாராதான் இருக்குன்னு நான் நினைக்கறேன். நீங்க??? oscar மட்டும் கிடைச்சுது, ARR அபிமானிகள கைல புடிக்க முடியாது. படம் பற்றி ப்ரியதர்ஷன் சொன்ன கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்/வழிமொழிகிறேன்.
நான் சொல்றது என்னனா, நம் வீட்டினரை நாம் திட்டலாம், பக்கத்து வீட்டுக்காரன் திட்டலாமா??
---------------------------------------------------------------------------------------------------
அழகும் அறிவும் பதிவுல நான் சொன்ன கருத்துக்கள, சில அன்பர்கள் , தெளிவா தப்பா புரிஞ்சிகிட்டாங்க. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல. பெண்களை மட்டும் அங்க குறிப்பிட்டு சொல்லக் காரணம், அழகு என்ற சொல்லே, பெண்கள் சம்பந்தப் பட்டது. அழகும் அறிவும் சேர்ந்து ஒரு பெண் கிடைப்பது அபூர்வம்னு பல பேர் சொல்லி கேட்டிருப்பீங்க. அதனாலதான் அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி, நிரூபிக்க, அந்த blonde quotes வேற போட்டிருந்தேன். இன்னும் சமாதானம் ஆகாதவங்க, alt + f4 press பண்ணிட்டு, வேற வேலை எதாவது இருந்தா பாருங்க.

Sunday, February 1, 2009

அழகும் - அறிவும்

அழகுக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லைன்னு நிறைய பேர் சொல்லி கேட்டுருக்கேன். (im a living proof ;) இது பொண்ணுங்க விஷயத்துல உண்மைனு என் நண்பர்கள் பல பேர் சொல்லிருக்காங்க. அவங்க கணிப்பு இன்னானா, "அழகான ஒரு பொண்ணுக்கு, அவ்வளவு அறிவு இருக்காது". நான், "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை"னு பல முறை சொல்லிருக்கேன். ஏன்னா எனக்கு தெரிந்த பல பெண்கள் (என் அம்மா உட்பட) அழகானவர்களாகவும் அறிவாளிகளாகவும் இருக்காங்க.

ஒரு வேளை இந்த தியரியும் மேற்கிலிருந்து வந்திருக்குமோன்னு நினைக்க வைக்கறா மாதிரி, ஒரு feature படிச்சேன்/பார்த்தேன். படிச்ச இடம் sify.com. அவங்க இதுக்கு குடுத்திருந்த டைட்டில் "Top 10 dumb blonde quotes". படிச்சேன். மொத்தம் எட்டு தான் இருந்துச்சு. ஆனா நிஜமாவே செம்ம காமெடி. அத ஒரு பதிவா போடலாம்னு தோணிச்சு. அதான் இங்க. அங்க (each) ரெண்டு மூணு குடுத்திருந்தாலும், அதுல எனக்கு பிடிச்ச ஒண்ணு மட்டும் இங்க இருக்கு. எல்லாம் பீட்டர்ல கீது...

1. Paris Hilton has several bloopers to her credit. Wal-Mart... do they like make walls there?

2. Jessica Simpson on her first day at high school: A teacher asked us if anybody knew the names of the continents. I was sooo excited. I was like, Damn it! It`s my first day of 7th grade, I`m in junior high and I know this answer. So I raised my hand, I was the first one, and I said A-E-I-O-U!

3. Alicia Silverstone on her role in Clueless: I think that the film was very deep. I think it was deep in the way that it was very light. I think lightness has to come from a very deep place if it`s true lightness.

4. Chantelle Houghton when Big Brother said she had changed since becoming a celebrity: I`ve changed? What do you mean... I`ve changed my clothes?

5. Jodie Marsh in a recent interview: Eskimos are uncivilised because they don`t have any shops.

6. Goldie Hawn on her favourite types of films: Comedy is funny.
There`s a reason why we don`t see her anymore.

7. Samantha Fox on fitness clothes: I’ve got 10 pairs of training shoes - one for every day of the week.

8. Britney Spears on her taste in clothes: So many people have asked me how I could possibly be a role model and dress like a tramp and get implants... all I have to say is that self-esteem is how you look at yourself and I feel good enough about myself so wear that kind of clothing... the breast implant issue has nothing to do with that...

blonde ஜோக்ஸ் படிச்சிருக்கேளோ???