Thursday, December 31, 2009

எண்ணிப் பார்த்தேன் - 2009

எல்லார மாதிரி நானும் சென்ற வருடக் கடைசியில, நான் ரசிச்ச படங்கள் மட்டும் பாடல்கள் பற்றிய பதிவியிருந்தேன் (link -->இங்க) இந்த வருடமும் அதை செய்யலாமா வேணாமான்னு மதில் மேல பூனையா யோசிச்சிகிட்டே இருந்தேன். எல்லா பதிவர்களும் அதை ஆரம்பிச்சு, பதிவிகிட்டும் இருக்காங்க. நானும் அதே மாதிரி எழுதுனா cliche ஆகிடுமேன்னு பயம் வேற. நாம சொல்ற சில விஷயங்கள மத்தவங்க படிச்சு பாராட்டுவாங்களோன்னு ஒரு ஆசை. சின்ன பசங்க மாதிரி, மத்தவங்க கவனத்தை ஈர்க்க வேலைகள செய்யறது. நாம என்ன நினைச்சாலும் இந்த trait நம்மள விட்டு போகறது ரொம்பவே கஷ்டம். அப்புறம்தான் ஒரு விஷயம் strike ஆச்சு.

"நான் யாருக்காக blog ஆரம்பிச்சேன் ?", "எனக்காக". என் எண்ணங்களுக்கு வடிகாலா இருக்குமேன்னு. ஆனா, கொஞ்ச நாட்கள்லையே, கமெர்ஷியல் டைரக்டர் மாதிரி, "இந்த பதிவு மக்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா. படிப்பாங்களா மாட்டாங்களா, ஓட்டு போடுவாங்களா இல்லையா"ன்னு பலவிதமா யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் போடும் பதிவு மத்தவங்க படிச்சா என்ன, படிக்காட்டி என்ன. படிக்கலைன்னா நான் பதிவு எழுதறத விட்டுருவேனா?? கண்டிப்பா இல்லை. இதை படிக்கும் உங்க யாரையும் நான் insult பண்றதா நினைக்காதீங்க. ஆனா பொதுவான உண்மை இது மட்டுமே. (இருந்தும், இதை நான் யாருக்கோ சொல்லற நடைல தான் எழுதிகிட்டு இருக்கேன் பாருங்க)

ரொம்ப சிந்திச்சு, தெளிவான அப்பறம் தான்,  உட்கார்ந்து type பண்ணிக்கிட்டு இருக்கேன். cliche ஆனா என்ன இப்போ. எனக்காக நான் இப்போ, எனக்கு பிடித்த படங்கள் மற்றும் பாடல்கள் பற்றி எழுததான் போறேன். என் பதிவுகளுக்காக என்னை தொடரும் அன்பர்கள், க்ளிஷேவா இருந்தாலும் படிக்கதான் போறாங்க. இந்த முறை, வெறும் பெயர்களை மட்டும்தான் எழுதியிருக்கேன். காரணங்களை தனியா குறிப்பிடலை. பெருசா என்ன காரணம் இருந்திட முடியும். பிடிச்சிருக்கு. அவ்ளோதான். So here s my list....

ரசித்த திரைப்படங்கள்  
சிவா மனசுல சக்தி - விமர்சனம் -->இங்க 
யாவரும் நலம் - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
அயன் - விமர்சனம் --> இங்க 
பசங்க - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
நாடோடிகள் - விமர்சனம் --> இங்க
நியூட்டனின் மூன்றாம் விதி -விமர்சனம் -->இங்க (கடைசி பத்தியில்)
உன்னை போல் ஒருவன் - விமர்சனம் --> இங்க

நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் லெவல்ல நான் ரசிச்ச படங்கள் சில
TELUGU
அருந்ததி
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் 
கிக்
PETER
Angels and Demons
2012 - விமர்சனம் --> இங்க 
Hangover
HP-6 - விமர்சனம் --> இங்க (இராண்டாவது பகுதியில)
UP
Confessions of a shopaholic
HINDI
பா
              அடுத்து பாடல்கள்னு பார்த்தீங்கன்னா... பதிவு ரொம்ப பெருசாகுதோ???....சரி இப்போதைக்கு பொழச்சி போங்க.. ஒரு நாலு மணி நேரம் கழிச்சு மறுபடியும் வரேன்...


film running successfully......

Tuesday, December 22, 2009

எல்லாம் முடிஞ்சுபோச்ச்ச்.....

ஒவ்வொரு மொக்கை படம் தியேட்டர்ல முடியும்போதும், இப்படிதான் நான் சொல்லிகிட்டிருப்பேன். பதிவுலகத்துல வேட்டைக்காரன் இப்படி ஒரு phenomenon ஆகும்னு நினைச்சே பார்க்கலை. tamilsh.கம, வேட்டைக்காரன் பற்றிய பதிவுகளை சேர்க்க, தனியா ஒரு லிங்கே உருவாக்கியிருக்காங்க. பெருசா என்னால விமர்சனம் எதுவும் எழுத முடியாது, ஏன்னா ஏற்கனவே படத்தை pre-mortem, post-mortem எல்லாம் செஞ்சு தொங்கபோட்டுட்டாங்க. ஒரே ஒரு விஷயம் சொல்லனும்னா, இந்த விமர்சனப் பதிவுகள்ள எவ்வளவு மொக்கைனு போட்டுருக்காங்களோ, அதைவிட படம் மொக்கை.              
விஜய் ரசிகர்களே தியேட்டர்ல கமென்ட் அடிச்சு கலாய்க்கறாங்க. Assembled கம்ப்யூட்டர் பார்த்துருப்பீங்க. இது ஒரு assembled படம். அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்னு இஷ்டத்துக்கு உருவி ஒரு படம். காறிதுப்பக் கூட நாக்குல எச்சில் இல்லை. அவரும் அவர் பையனும் ஆடும்போது, சிம்புவும் டி.ஆரும் நியாபகத்துல வராங்க. பாடல்கள் கேட்க மட்டுமே நல்லா இருக்கு. நடன அமைப்பு ரொம்பவே amateur. அனுஷ்காவுக்காகவும் படத்தை பார்க்க முடியாது. அவங்களுக்கு முதல் தமிழ் படம்னு தனியா தெரியுது. அவங்க தெலுங்கு படங்கள்ல இருக்குறா மாதிரி இல்லாம ரொம்ப செயற்க்கைத்தனமா இருக்கு அவங்க நடிப்பும் ஆட்டமும். விஜயவிட நாலு இன்ச் உயரம் வேற.   

இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் cliche ஆகிடும். இத்தோட நிறுத்திக்கறேன். வழக்கம் போல சன் டிவி அவங்களோட propaganda ஆரம்பிச்சிட்டாங்க. மெகா ஹிட்டாம். வசூல் சாதனையாம். கோபாலபுரத்துல மட்டும் நல்லா ஓடுது போல. இங்க சென்னைல நேத்து வரைல, சத்யம் தவிர எல்லா அரங்குலையும், எல்லா ஷோவுக்கும், இந்த வாரம் முழுக்க டிக்கெட் இருக்கு. எப்படி சன் டிவில எந்த படம் போட்டாலும் பார்ப்பமோ, அது மாதிரி தான் சத்யம் தியேட்டரும். நான் பார்த்த தியேட்டர்ல பால்கனில இருக்குற 100 சீட்டும் full. கீழ இருந்த 500+ சீட்டுகள் காலி. அதை போட்டோ எடுக்க விடலை.    

சில படங்களை விமர்சனத்துல கொஞ்சம் ஓவராவே கலாய்ப்பாங்க. அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீங்க. போஸ்டர் கூட பாத்துறாதீங்கன்னெல்லாம் சொல்லுவாங்க. இந்த பட விமர்சனத்துக்கு அதை விட மோசமா ஏதாவது சொல்லனும்னு பார்த்தா, சரியா எதுவும் மாட்டலை. மக்களை இவ்வளவு தூரம் முட்டளா பார்க்குற படங்கள் வர்றது இதுவே கடைசியா இருக்கணும். ஆனா, இந்த படத்தை ஹிட்டாக்க இன்னொரு நல்லா விஷயம் பண்ணிருக்கலாம். ஒரு சில காட்சிகளை மாத்திட்டு, ஒரு குழந்தைங்க படமா இதை மார்கெடிங் பண்ணிருந்தா, படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகிருக்கும். என்ன நான் சொல்றது??? 

விஜய்: புலி உறுமுது புலி உறுமுது....
மக்கள்: கொட்டை எடுத்ததா எடுக்காததா???
...
p.s.ஆயிரத்தில் ஒருவன் டிரைலர் போட்டாங்க. எடுத்தவுடனேயே, ரீமா சென்னும் ஆண்ட்ரியாவும் பச்சை மஞ்சள்னு கலர் கலரா திட்டிக்கறாங்க. கட் பண்ணா A SELVARAGHAVAN FILMனு வருது. டைரக்டர் டச்???

Sunday, December 13, 2009

டெலிவெட்டியும் கிரியேடிவெட்டியும்

சக பதிவர்கள் பல பேர், பல விதமான போட்டிகள, தொடர்ந்து நடத்திட்டு வராங்க. அப்படி ஒரு போட்டிதான் இந்த டெலிவெட்டி. நான் நடத்தலைங்க. கலந்துகிட்டேன். இத நடத்துறது BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம். அவங்க ப்ளோக்ல சில பல வருஷங்களாகவே இத நடத்திட்டு வராங்க. ரொம்ப சிம்பிள் விளையாட்டுங்க. படம் பார்த்து கதை சொல்றா மாதிரி பெயர்கள் சொல்லணும். அவ்வளவே. இது வரை எனக்கு கலந்துக்க ஆர்வம் எதுவும் வந்ததில்லை. ஆனா கடந்த போட்டி, நம்ம தலைவர் ரஜினியப் பற்றி. விடுவனா. எல்லா படமுமே சல்பியா இருந்ததால டக்கு டக்குனு பதில மைல் பண்ணிட்டேன். First come first serve மாதிரி, முந்துபவர்களுக்கே பரிசுன்னு நினைக்கறேன். இன்னிக்கு முடிவுகள பார்த்தா, என் பேரும் முதலிடப் பட்டியல்ல இருக்கு. 15/15... எப்பூடி?? இதனால நான் சகல மாணவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.... ஒண்ணும் இல்லை. எல்லாரும் நல்லா இருங்க. BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம்-க்கு நன்றி.

சொல்ல மறந்துட்டனே, www.blogeswari.blogspot.com படிக்க மறக்காதீங்க. அவா இவா பாஷைல இவங்க அடிக்கிற நக்கல் இருக்கே, நான் படிச்ச தம்லீஷ் ப்ளோக்லையே இதுலதான் உச்சக்கட்டம். அப்படி ஒரு நையாண்டி. முக்கியமா இவங்க கந்தசாமி படத்துக்கும், குர்பான் படத்துக்கும் எழுதியிருக்குற விமர்சனம், ஒரு பானை சோறு.
வோட்டு போட மறக்காதீங்க. (சேய், நானும் இப்படி கேட்க ஆரம்பிச்சுட்டனே)




இதெல்லாம் வரலாறுல இடம்பிடிக்கும். 
எனக்கு சிலை வெப்பாங்க. பசங்க நோட்ஸ் எடுப்பாங்க..... 

Saturday, December 12, 2009

PLAYLIST - NOVEMBER

மன்னிச்சிருங்க, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. போன மாச playlistla இருந்த சில பாடல்கள், இன்னமும் இருக்கு. அவை,

1. வேட்டைக்காரன் படத்துல வழக்கம் போல மூணு பாட்டு - புலி உறுமுது, கரிகாலன், நான் அடிச்சா. இன்னும் பாடல்கள் போர் அடிக்கலைங்கறதே பெரிய விஷயம். ஒரு வேளை படம் வந்து, காட்சியமைப்பு நல்லா இல்லைன்னா வெளிய போய்டும்.

2. கண்டேன் காதலை - சுத்துது சுத்துது. இந்தப் பாடலை பற்றி இன்னமும் சொல்லனுமா??

3. யோகி - சீர்மேவும் கூவத்திலே. இதே மாதிரி நவராத்திரி படத்துலயும் ஒரு பாட்டு இருக்குங்க.

4. பேராண்மை - ஏறத்தாழ.

போன மாச playlist -->இங்க<--

நவம்பர் மாத playlistla புதுசா சேர்ந்திருக்கும் பாடல்கள்.

மோதி விளையாடு - படத்தை பார்த்து நொந்து போனாலும் (விமர்சனம்) இரண்டு பாடல்கள் நல்லா இருக்கறது ரொம்பவே லேட்டா காதுல விழுந்துச்சு. "பாதி காதல்" and "வெள்ளைக்காரி"னு ரெண்டு பாட்டு. ஹரிஹரன் இசைல, தமிழ்ல வந்துருக்கும் முதல் படம். பாவம். வேற ஒரு நல்லா படத்துல இந்த பாடல்கள் வந்திருக்கலாம்.

பா - இதை விடமுடியுமா. ஹல்கே ஸே போலே, ஹிச்சிகி and கும் ஸும். புதுசா என்ன சொல்றது இந்த பாடல்களை பத்தி. இளையராஜாவின் இசை. அவ்ளோதான்.

புதுசா வந்ததுல, பையா பட பாடல்கள் ஓரளவு நல்லா இருக்கு. அப்பாவி பாடல்களும் சுமாராதான் இருக்கு. கேட்க கேட்க நல்லா இருக்குமோ?? அடுத்த மாசம் பார்க்கலாம்.


துரதிர்ஷ்டவசமா என் headset காலி. புதுசு வாங்கணும். :(


p.s. பதிவுகள் போடாம ரொம்ப கதை பண்றேன்னு எனக்கே தெரியுது. கொஞ்சம் அவகாசம் குடுங்க. நல்லா பதிவா போடறேன். அப்பறம், நம்ம ராதா மாதவன் அண்ணன் இன்னொரு முறை அந்த சிறுகதை போட்டி பத்தி நியாபகப்படுத்தி "expecting ur participation" அப்படின்னு வேற சொல்லிட்டார். நம்மளை ரௌடினு நம்பிட்டாரோ? கண்டிப்பா அனுப்பறேன் அண்ணா. விருப்பம் இருக்குற எல்லாரும் கலந்துகொண்டு கலக்கவும்.

Thursday, December 3, 2009

வராம்பாரு வேட்டைக்காரன்...

இதை எடிட் பண்ணவரு அஜித் ரசிகரா இருந்தாலும், புத்திசாலித்தனமா பண்ணிருக்காரு.. முக்கியமா, சில இடங்கள்ல டயலாக் இடம் விட்டுட்டு, அப்பறம் தொடருது... அட அட அட.. அருமை... எனக்கென்னமோ, இந்தப் பாடல், விஜயைவிட, நம்ம கவுண்டருக்கு நல்லா செட் ஆவுதுன்னு தோணுது... என்ஸாய்....

Monday, November 30, 2009

மேல் படிப்பு

மு.கு. நகைச்சுவை உணர்வு இல்லாத பொண்ணுங்க, தயவு செஞ்சு கெளம்புங்க, காத்து வரட்டும்...
  
நீங்க நினைக்கற மேல் படிப்பு இல்லைங்க இது. நான் சொல்லப் போறது Male, அதாவது பசங்க படிக்கற படிப்பு பத்தி. 'அதென்ன படிப்புல male படிப்பு female படிப்பு. எல்லாம் ஒண்ணுதான. இதுல என்ன பெரிய ஆராய்ச்சி பதிவு வேண்டி கெடக்கு', இதான உங்க டவுட்டு. கண்டிப்பா வித்தியாசம் இருக்குங்க. எல்.கே.ஜில ஆரம்பிச்சு, இப்போ post graduation வரைக்கும் நான் இந்த வித்தியாசத்தை பாத்துகிட்டு இருக்கேங்க. எஸ்.ஜே சூர்யா சொல்றாப்போல, சில சமயங்கள்ல, பொண்ணுங்க படிக்கறத பார்த்தா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கும். பசங்களுக்கு, Pass - Fail, இப்படி ரெண்டு  மேட்டர் தான் முக்கியம். ஆனா பொண்ணுங்களுக்கு???????????  வாங்க அலசுவோம்.

எப்பவும், படிச்சிகிட்டே இருந்து, எப்பாவாச்சும் சும்மா இருப்பாங்கல்ல, அப்போ, மத்த விஷயங்களை யோசிக்கறவங்க பொண்ணுங்க. ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க,  இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க.

இந்த பசங்க பொண்ணுங்க வித்தியாசம், பரீட்சை சமயங்கள்ல பாத்தீங்கன்னா அப்பட்டமா தெரியும். எனக்கு தெரிஞ்சு, முக்கால் வாசி பசங்க (என்னையும் சேர்த்து), பரீட்சைக்கு முன்னாடி நாள்தான் படிக்க ஆரம்பிக்கறதே. அதுவும் மனப்பாடம் பண்றதெல்லாம் இல்லை. சும்மா, அப்டீ திருப்பி பாக்கறது. அப்படி பார்க்கும்போதுதான், நம்மகிட்ட சில நோட்ஸ் இல்லைன்னே தெரியவரும். சரி, நம்ம தோஸ்து எவனாவது வெச்சிருப்பானான்னு மெசெஜோ, காலோ பண்ணா, அவன் "மச்சான், படிக்க ஆரம்பிச்சுட்டியா?? கேடி நாய்டா நீ. எதுவும் படிக்கலை படிக்கலை சொல்லியே நிறைய மார்க் வாங்கிருவ. ஒ*!@ உன்னை நம்பவே கூடாதுடா". இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நாயும் அங்க புக்க வெச்சிகிட்டு முக்கிட்ருப்பான்.                                          

எதுக்கு phone பண்ணமோ, அதில்லாம, வெட்டியா வேற ஏதாவது பேசிட்டு வெச்சிருவோம். சரி, பரவாயில்லைன்னு, வெக்கத்தை விட்டு பொண்ணுங்க யாருக்காவது phone பண்ணுவோம். அவங்க விடுவாங்க பாருங்க ரீலு. "ஹே, நான் சத்தியமா படிக்கலபா. Group study பண்ணலாம்னு நினைச்சோம், ஆனா முடியலை. காலைல அம்மாகூட வெளியில போயிட்டேன். அப்பறம் வீட்ல ஒரே வேலை (சாஞ்சிகிட்டு TV பாக்கறது ஒரு வேலையா) கொஞ்ச நேரம் முன்னாடிதான் புக்கை கையில எடுத்தேன், கரெக்டா நீ கால் பண்ற". அடுத்த முக்கியமான விஷயம், அந்த பொண்ணு எப்பவோ இதெல்லாம் படிச்சிருக்கும். சும்மா ஒரு தடவை பார்த்தாலே அதுக்கு எல்லாம் ஞாபகத்துல வந்துரும்.

சில பொண்ணுங்க, ஹாரி பாட்டர் hermione மாதிரி, புத்தகத்துல இருக்கறத வார்த்தைக்கு வார்த்தை மனபாடம் செஞ்சு ஒப்பிபாங்க. நான் பல முறை இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்து, அடங்கொக்கா மக்கான்னு ஷாக் ஆகிருக்கேன். சில நல்ல பொண்ணுங்க, எக்ஸாம் ஹால்ல நமக்கு சொல்லியும் தரதுண்டு. அவங்கெல்லாம் வாழ்க. சிலதுங்க, அப்படியே எழுதற ஷீட் மேல படுத்துகிட்டு எழுதுங்க. உள்ள இறங்கி தூர் வாருதோன்னு சந்தேகம் கூட நமக்கு வரு. என்ன சிக்னல் குடுத்தாலும் திரும்பாம இருந்து பல்பு குடுத்துருவாங்க. இடி இடிச்சா கூட "யாரோ கடுகு தாளிக்கரான்களோ" reaction தான் கிடைக்கும்.

வெளியில வந்து, ஏன் திரும்பியே பார்க்கலைன்னு கேட்டா, "நீ கூப்டியா???" அப்படின்னு கேப்பாங்க. இதெல்லாம் இருக்கட்டும். அந்த எக்ஸாம் பேப்பர் குடுக்கும்போது வரும் பாருங்க reactions. வாய்ப்பே இல்ல. எவ்வளவு மார்க் போட்டாலும், குடுத்த ஆள் கிட்ட போய், "சார், இதுல மார்க் கம்மி, இதுல total கம்மி, இங்க நான் நல்லாதான எழுதியிருக்கேன் ஏன் இப்படி மார்க் போட்டுருக்கீங்க??" அப்டி இப்டி ஏதாவது நொட்டு சொல்லி, வாத்தியாருக்கே அவர் படிச்ச படிப்பு மேல சந்தேகம் வர அளவுக்கு நச்சரிச்சு, குறைந்தபட்சம் அரை மார்க்காவது கூடுதலா வாங்கிட்டு, வெற்றி களிப்புல ஒரு இளிப்பு வேற இருக்கும் பாருங்க......

பசங்க பாவமா, என்ன மார்க், என்ன கேள்வி, என்ன பதில்னு புரியாம இருப்பானுங்க. முடிஞ்ச வரைக்கும், கரெக்ஷன் பண்ண பேப்பர்ல சந்தேகம் எதுவும் கேக்காம கமுக்கமா இருப்பாங்க. ஏன்னா நம்மாளுக்குதான் கேள்வியே ஒழுங்கா தெரியாதே. எங்க ஏதாவது  ஏடாகூடமா கேட்டு இருக்குற மார்க்கும் போய்டுமோன்னு ஒரு கிலி இருக்கும். குடுத்து முடிச்சிட்டு போன அப்புறம், பொண்ணுங்க மத்தியில, அத பத்தி ஒரு மணி நேரம் விவாதம் வேற நடக்கும். "அந்த சாருக்கு என்னை பிடிக்கலை, அதான் மார்க் கம்மி. அன்னிக்கு நான் அந்த மேடமுக்கு குட் மார்னிங் சொல்லல, அந்த காண்டுல சரியா கரெக்ஷன் பண்ணலை"னு புதுப் புது காரணமா, கும்பலா, கண்டுபுடிச்சிகிட்டிருப்பாங்க.

பொறவு யார் highest மார்க் அப்படின்னு calculation வேற நடக்கும். "நீ என்னைவிட ஜஸ்ட் மூன்றை மார்க் ஜாஸ்தி. பரவாயில்லை, நான் fail ஆயிருவேன்னு நினைச்சேன்"னு மனசாட்சியே இல்லாம பேசுவாங்க. ஒருத்தி 98, இன்னொருத்தி 95 வாங்கிருப்பா. எந்த பொண்ணுங்களையும் அசிங்கப் படுத்த நான் இந்த பதிவை போடலைங்க. எல்லாம் ஒரு பொறாமைலதான். என்னுடைய இஸ்கூல் படிப்புலேர்ந்து, இப்போ PG வரைக்கும் இதே கதை தாங்க. என்ன, இப்போ சில பொண்ணுங்க பீட்டர்ல feel பண்றாங்க. பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. பொண்ணுங்க இப்படிதான் எப்பவுமேவா, இல்லை எப்பவுமே இப்படிதானான்னு எனக்கு ஒரே குழப்பம்.

வேணும்னா நான் சொன்னதை டெஸ்ட்டு பண்ணி பாக்கலாம். இந்த பதிவை நீங்க படிச்சிட்டு, பொறவு வேற ஒரு பொண்ணை படிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு படிச்சிட்டு, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க அப்படி கிடையாது, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்" அப்படின்னு சொல்லிச்சுன்னா, அதுவே என் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. நான் கடைசில "HENCE PROVED" அப்படின்னு சேத்துக்கறேன். :))))




வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??

Wednesday, November 25, 2009

மற்றும் பல...

வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சில updates பதிவுகளுக்கு தான் இப்போ மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி, அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும், அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??    
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
 நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->லிங்க்  
 --------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->இங்க
------------------------------------------------------------------------------------------------------------- 
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...       
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

Sunday, November 15, 2009

உலகம் சூப்பரா அழியுதுடோய்.....

அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழகா உலகத்தை அழிக்கறாங்க பாருங்க. கண்கொள்ளா காட்சி. அட அட அட.சொல்ல வார்த்தையே இல்லை. கிராபிக்ஸ்ல விளையாடியிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. வருமான்னும் தெரியலை. என்ன, இந்த டைரக்டரோட The Day After Tomorrow பார்க்கும்போதும் நான் இப்படிதான் நினைச்சேன். Raising the bar அப்படின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, அந்த படத்தை விட, இந்த படம் ஒரு விஷுவல் விருந்து. 2012 படத்துலதான் இந்த கூத்தெல்லாம்.

கதைனு பார்த்தா..... இந்த மாதிரி படத்துக்கு கதை ரொம்ப அவசியமா?? இங்க கதைன்னு பார்த்தோம்னா, இத மாதிரி படத்துக்கு இருக்குற ஒரு default கதைக்களம்தான். உலகம் அழியுது. ஒருத்தர் அத தொலைநோக்கராறு. அதுக்கான ஏற்பாட, அரசாங்க உதவியோட செய்யறாரு. நினைச்சத விட சீக்கிரமாவே அந்த அழிவு வர, பல மக்கள் மண்டையப் போட, சில மக்கள் தப்பிக்கறாங்க. இதுக்கு நடுவுல, நம்ம ஹீரோ, அவரோட மனைவி மக்களோட எப்படி தப்பிக்கராருன்னு, லைட்டா ஊறுகா மாதிரி செண்டிமென்ட தொட்டுகிட்டு, காமிக்கறாங்க.

முழுக்க முழுக்க VFX ஆதிக்கம்தான். படம் பார்க்கும்போது வேற ஒண்ணும் யோசிக்கவே தோணாது. கலிபோர்னியா அழியும்போது, வெள்ளை மாளிகை நொறுங்கும்போது, yellow stone எரிமலை உருவாகும்போது, ஹிமயமலைல கடலலை வரும்போது இப்படி பல காட்சிகள் இன்னும் கண்ணுலேயே நிக்குது. தமிழ் சினிமா மாதிரி, இந்த படத்துலயும், ஹீரோவுக்கு எதுவுமே ஆகாம, கடைசி வரை, அவர் பல மயிறிழைகள்ல தப்பிக்கராறு. அதுலயும் ஒரு சீன், விஜய் படம் பாக்கறா மாதிரியே இருந்துச்சு. ஒரு சில டச்சிங்கான சீன்கள் இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு எதுவும் இல்ல.   

படத்துல முதல்ல ஒரு இந்தியர்தான் ஆபத்தை கண்டுபுடிச்சு சொல்றாரு. தப்பிக்கறதுக்கு கட்டற பெரிய நோவா ஆர்க் கப்பலுக்கு போக, அவருக்கு பிளைட் அனுப்பறாரு அவர் நண்பர், ஆனா அது அவரை பிக் அப் பண்ணாம, கடைசியில தன குடும்பத்தோட அவர் இறந்துபோராறு. எல்லா விஷயமும் இந்தியாவிலிருந்து போய், அது நமக்கே ரிவர்ஸ்ல ஆப்பா மாறுதுன்னு ரொம்ப அழகா காமிச்சிருக்கார் இயக்குனர். (அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன். எப்படி நம்ம நுண்ணரசியல் கண்டுபிடிப்பு??)

என்னதான் இருந்தாலும், இது போல ஒரு படத்தை எடுத்ததுக்காக, டைரக்டர் Roland Emmerich மற்றும் கொலம்பியா பிக்ச்சர்சுக்கும், முக்கியமா கிராபிக்ஸ் பண்ண Uncharted Territory, Digital Domain, Double Negative, Scanline, Sony Pictures Imageworks ஆகிய நிறுவனங்களுக்கு மூன்றாவது வட்டம் சார்பாகவும், என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். படத்தை கண்டிப்பா ஒரு பெர்ய ஸ்க்ரீன்ல, நல்ல சவுண்டோட பாருங்க. என்னுடைய ஆதரவு தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளுக்கு. அடுத்ததா நான் எதிர்பார்க்கும் படம், ஜேம்ஸ் கேமரூனோட "அவ்தார்". Lets Wait......


விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??

Thursday, November 12, 2009

PLAYLIST - OCTOBER

அக்டோபர் மாத playlistல பெரிய மாற்றங்கள் ஒண்ணும் இல்லை. சென்ற மாதம் வந்த பாடல்கள் பெருசா ஒண்ணும் என்னை ஈர்க்கல. புதுசா சேர்த்த மூணு பாடல்கள்ல, ஒண்ணு பேராண்மை படத்துல வர "ஏறத்தாழ ஏழு மணி பாடல்". ரொம்பவே அழகான மெலடி. வித்யாசாகர் இசைல, சாதனா சர்கம் சூப்பரா பாடியிருக்காங்க.
இங்க க்ளிக்கி கேட்கலாம் ..

அடுத்த பாடல், ஹிந்தி ப்ளூ படத்துல, ரஹ்மான் இசைல வந்த, Kylie Minogue + சோனு நிகம் பாடியிருக்கும் Chiggy Wiggy. இங்கிலீஷ் பாட்டு மாதிரி ஆரம்பிச்சு, அதையே பாங்க்ரா ஸ்டைல்ல மாத்தறது அழகா இருக்கு. -->இங்க கேளுங்க<--

யோகி படத்துல வரும் சீர்மேவும் கூவத்திலே ரொம்பவே வித்தியாசமான முயற்சி. யுவன் மறுபடியும் கலக்கியிருக்கார். இந்த படத்தின் தீம் மியூசிக்கும் நல்லாதான் இருக்கு. படத்தோட ட்ரைலர் பாத்தீங்களோ???

மற்றபடி, வரிசையிலிருந்து வெளியேறும் பாடல்கள், ஹசிலி பிசிலி & வானம் எல்லை...
சென்ற மாத லிஸ்ட் -->இங்க<--



siiiiiiiiiiiiiiiing in the rain...

Thursday, November 5, 2009

Eagle Eye

ஸ்பீல்பெர்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தோட படம் தான் இந்த ஈகிள் ஐ. படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷம் ஆனாலும், இப்பதான் பார்க்க முடிஞ்சுது. நான் எந்த இங்கிலீஷ் படம் பார்த்தாலும், மொக்கையோ, நல்ல படமோ, எதுவா இருந்தாலும், விகிபீடியால அந்தப் படத்தை பத்தி பாத்துட்டு, rottentomatoesla அதோட சில ரிவ்யூவ படிச்சிட்டு, அப்பறம் தான் பார்ப்பேன். இந்தப் படமும் அப்படிதான் பார்த்தேன். எதிர்பார்த்த ஹிட் ஆகலைனாலும், ஏதொ சுமாரான வெற்றி பெற்றிருக்கும் படம் இது.

படத்தோட ஹீரோ வழக்கம் போல ஒரு உதவாக்கரை. சரியா படிக்காம, சாதாரண வேலைல, நண்பர்களோட சீட்டு ஆடிட்டு, வாடகைக்கு காசு இல்லாம, அப்பா அம்மாவ பிரிஞ்சு இருக்குற ஒரு ஆள். இரட்டை பிறவியான இவரோட அண்ணா, ஆர்மியில, வேலைல இறந்து போக, அதுக்கு அடுத்த நாள் இவரோட பிச்சைகார அக்கவுண்ட்ல பல்லாயிரம் டாலர்கள் இருக்கு. யார், என்ன, எப்போ, எப்படின்னு ஒண்ணும் புரியாம, காச எடுத்துகிட்டு, வீட்டுக்கு வர. உள்ள வெடி மருந்துகள், துப்பாகிகள்னு ஏகப்பட்ட விவகாரமான சமாசாரம் குவிஞ்சு கெடக்க, ஹீரோவுக்கு ஒரு போன் வருது.

அதுல ஒரு பெண் குரல், இன்னும் 30 secsல FBI உன்னை அரஸ்ட் பண்ண வரப்போவுது, தப்பிச்சிருன்னு சொல்ல, ஹீரோ குழப்பமா என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்க, FBI வந்து அவரை அதிரடியா அரெஸ்ட் பண்ணுது. அங்கிருந்தும் தப்பிக்க, இந்த பெண் போன் குரலே வழி சொல்ல, ஹீரோ அங்கிருந்து தப்பிக்க.கூடவே, இன்னொரு காரெக்டரும் இருக்காங்க. அவங்கதான் ஹீரோயினி. இவங்களோட மகனை கடத்தி வெச்சிகிட்டு, அதே பெண் குரல், போன் மூலமா மட்டும் இவங்களை ஆட்டிப் படைக்குது. ஹீரோயினியும் ஹீரோவும், ஓடுறாங்க ஓடுறாங்க ஓடுறாங்க, அமெரிக்காவோட ஓரத்துக்கே ஓடுறாங்க. 

அந்தப் பெண் குரல் யாரு. இவங்க ரெண்டுபேரையும் ஏன் அந்த குரல் இப்படி கலாய்க்குது. அதுக்கு அப்படி என்ன காரியம்தான் ஆகணும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நீங்க படத்தை பார்த்து விடை தெரிஞ்சுக்கோங்க. படம் ஆரம்பிச்சு, படம் முடியும் ஒரு 20 நிமிடங்கள் முன்னாடி வரைக்கும் அப்படியொரு வேகம். ஹீரோ ஹீரோயினோட நாமளும் அவ்வளவு வேகமா போறோம். அருமையான திரைக்கதை. கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் காமெடியா இருக்கு. அதை தவிர எனக்கு படத்துல வேற எந்த குறையும் தெரியல. ஹாலிவுட் படங்கள்ல ஒரு நல்லா விஷயமா நான் நினைக்கறது என்னன்னா, ஓடாத flop படத்துலயும், திரைக்கதை நல்லாவே இருக்கும். நம்ம ஆளுங்க அந்த வித்தையை எப்படியாவது கத்துகிட்டா நல்லா இருக்கும்.

எனவே மக்களே, நான் பார்த்த சமீபத்திய திரைப்படங்கள்ல, ஈகிள் ஐ ஒரு அருமையான, ஹாலிவுட், கமர்ஷியல், மசாலா படம். மிஸ் பண்ணிறாதீங்க. என்னடா, படத்தோட ஹீரோ, டைரக்டார் பத்தி வேற எதுவும் சொல்லலியேன்னு நினைக்கற ஆளுங்க -->ங்க<-- போய் படிச்சிக்கோங்க. Torrent சுலபமா கிடைக்குது. வர்டா....


 இந்த நேரத்துல யாருப்பா மிஸ்டு கால் குடுக்கறது...
 

p.s. யூ ட்யூப்ல படத்தோட alternate கிளைமாக்ஸ் கீது. முடிஞ்சா அதையும் பாருங்க. கொஞ்சம் சுமார்தான்.

Tuesday, October 20, 2009

கோ-வா Trailer...

இப்பதான் கண்ணுல பட்டுது. வெங்கட் பிரபு சொன்னா மாதிரியே, இது american pie மாதிரி படமாதான் இருக்குமோ?? எது எப்படியோ, trailer ஜாலியா இருக்கு. யுவன் இசையும் நல்லாத்தான் இருக்கு. டிசம்பர் 12 ஆடியோ ரிலீஸாம்.. lets wait..... 

Sunday, October 18, 2009

குருவிக்கு மேல, அயனுக்குக் கீழ

 நீங்க நினைக்கறது கரிக்டு. ஆதவன் படத்தை பத்தின கமெண்ட் தான் தலைப்பு. படம் ஆவரேஜ் தான். சூர்யா ரசிகர்களை ஏமாத்தும். கே எஸ் ரவிக்குமார் ரசிகர்கள், சாமி சத்தியமா ஏமாறமாட்டாங்க. சூர்யாவுக்கு இது முதல் முழு நீள மசாலா படம்னு நினைக்கறேன். படத்துல ரெண்டு ஹைலைட். சூர்யா & வடிவேலு. இவங்க இரண்டு பேர் மட்டுமே படத்தை காப்பாத்தறாங்க. அதுவும் முதல் பாதி அட்டகாசமா இருக்கு. சண்டைக் காட்சிகள் + ஒளிப்பதிவும் டக்கர். இதெல்லாம் படத்துல இருக்குற ப்ளஸ்.

இரண்டாவது பாதிதான் கொஞ்சம் வலுவிழக்குது. நாம நினைக்கறா மாதிரியே கதையும் போகுது. மோசமான கிராபிக்ஸ். அதுவும் அந்த பத்து வயசு சூர்யா பெருசா ஒண்ணும் ஆச்சரியப்படுத்தலை. குறைஞ்சது மூணு பாடல்களை தவிர்த்திருக்கலாம். பாடல்கள் placementம் சரியில்லை.கிளைமாக்ஸ்ல சண்டை நல்லா இருக்கு, ஆனா அந்த ராக்கெட் மேட்டர் காமெடி. திரைக்கதையின் வேகமும், இரண்டாம் பாதில அடி வாங்குது. நயன்தாராவ பத்த தப்பா சொல்லக் கூட எதுவும் இல்லை. இதெல்லாம் மைனஸ்.

இந்த டைரக்டரிடமிருந்து நான் கலைப் படைப்பு எதையும் எதிர்பார்க்கலை. போனமா, ஒரு ரெண்டரை மணி நேரம் பொழுது போச்சா. அவ்வளவே. அதனால எனக்கு பெரிய ஏமாற்றம் ஒண்ணும் இல்லை. எதுவும் எதிர்பார்க்காம போனீங்கன்னா கண்டிப்பா மொக்கை வாங்க மாட்டீங்க. சூர்யாவுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை. இந்தப் படம் ஓகே. b&c சென்டர்கள்ல  ஓடும்னு நம்பறேன். ஆனா, இதே மாதிரி ரெண்டு படம் கொடுத்தார்னா, விஜய்க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும். சாக்கிரதை. சொல்லிப்புட்டேன். மத்தபடி, இது மற்றுமொரு 50நாள் வெற்றி படம். போட்ட காசுக்கு மேலேயே எடுப்பாங்க.



  உதய்: அந்த ஆடு அந்த அருவா, இந்த மனுஷன் இந்த மாலை. ரெண்டும் ஒரே மாதிரி இல்லை??
 KSR: இல்லை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Update: தியேட்டர் அந்தர் quality. சவுண்டும் லுக்கும் ஸூபர். சத்யமா விட சவுண்ட் நல்லா கீது. ஒவ்வொரு சீட்டுக்கும் அழகா space விட்டுருக்காங்க. டிஜிட்டல் ப்ரோஜக்ஷன் பண்ணா, அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. அதுவும், முதல்ல போட்ட 2012 படத்தோட trailer, கெத்து. கண்டிப்பா அந்த படத்தை, தேவில மட்டுமே பாருங்க. இருக்குற ஒரே பிரச்சனை, பார்க்கிங். மேட்னீ ஷோ முடிஞ்சு, பார்க்கிங் பிரச்சனைகள்னால, 6.30 மணி ஈவினிங் ஷோ 7.15ku தான் ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு குழப்பம். சாந்தி தியேட்டர் வரை வாகனங்கள், உள்ள நுழைய, வரிசை கட்டி நின்னுச்சு. இந்த ஒரு மேட்டர கரக்ட் பண்ணாக்கா, தேவிய அடிச்சிக்க ஆள் இல்ல. (நன்றி கனகு அண்ணன் for reminder)


பார்க்கிங்க்னால ஏற்பட்டக் குழப்பக் கூட்டம்...

Friday, October 16, 2009

தேவி தரிசனம்

என் வாழ்க்கையில, தியேட்டர்களோட பங்கை நான் முன்னாடியே சொல்லிருந்தேன். ஒரு படம் நல்லா இருக்க, அந்த தியேட்டரும் நல்லா இருந்தாதான் ரசிக்க முடியும். இல்லை, குடுத்த காசு உ... ஊ..... தான். சென்னைல இப்ப, எனக்கு பிடிச்ச தியேட்டர்கள் ரெண்டு. ஒண்ணு சத்யம் தியேட்டர். அடுத்து ஹோம் தியேட்டர். வேற எந்த ஸ்க்ரீனும் எனக்கு புடிக்கலை. ஒண்ணு sound மொக்கையா இருக்கும், இல்ல சீட்டு மொக்கையா இருக்கும், இல்ல environment மொக்கையா இருக்கும். இதனாலேயே சில படங்கள் எனக்கு பிடிக்காம போயிருக்கு. நான் ஸ்கூல்ல இருந்த காலத்துல (ஒரு 4-5 வருஷங்கள் முன்னாடி) மவுண்ட் ரோட்ல இருக்கற தேவி தியேட்டர்தான் என்(ங்க) favourite.

அங்க படம் பார்க்கற அனுபவமே அலாதியானது. அவ்வை ஷண்முகி, வாலி, முத்து, சிட்டிசன், தூள், கில்லி, மன்மதன், காக்க காக்க இன்னும் எவ்வளவோ படங்களை நான் அங்க பாத்துருக்கேன். மேல நான் சொன்னதுல சில படங்கள்,மக்கள் மத்தியில படம் பார்க்கற அந்த அனுபவத்துக்காகவே ரெண்டு மூணு முறை பாத்துருக்கேன். தூள் படத்தோட கடைசி பாடல் வரும்போது, தியேட்டரே எழுந்து நின்னு ஆடினது இன்னும் கண்ணுலேயே இருக்கு. எம்மாம் பெரிய ஸ்க்ரீனு, இன்னா சவுண்டு. செம்ம ஸீனா இருக்கும். ப்ளாக் டிக்கெட் பிரச்சனைகள் இருந்தாலும், மற்றபடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இங்கதான் முதல் முறையா DTS, Dolby advertisements பார்த்தேன்.  

ஆனா, கடந்த 3-4 வருடங்களாகவே, தேவி தியேட்டர் சரியா பராமரிக்கப்படாம நாசமாகிட்டே வந்தது. ஓனர் பீல் பன்னிருப்பாரோ இல்லையோ, நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சேன். தேவியோட வீழ்ச்சியில, கொஞ்சம் கொஞ்சமா சத்யம் வளர ஆரம்பிச்சுது. இப்ப ஒரு அசைக்க முடியாத இடத்துல இருக்கு. சில படங்கள் சத்யம்ல பார்க்கும்போது கூட, "இதே படத்தை தேவில பார்த்தா எப்படி இருக்கும்"னு யோசிச்சிப் பாத்துருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு (கேடி படம் வந்த சமயம்னு நினைக்கறேன்), தேவி தியேட்டர் புதுப்பிக்கப் போறாங்கன்னு கேள்விப் பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

ஆனா வேலை ஒண்ணும் நடக்கறா மாதிரியே தெரியலை. அஞ்சாதே, தசாவதாரம், குருவி மாதிரி படங்கள் பார்க்கும்போதும் வேலை நடந்துகிட்டேடடடடடடடடடட தான் இருந்துச்சு. அங்க மறுபடியும், முன்ன மாதிரி படம் பார்க்க முடியாதுன்னே முடிவு பண்ண சமயத்துலதான். கந்தசாமி அங்க ரிலீஸ் பண்ணப் போறதா செய்தி வந்தது. அரங்கத்த நல்லா ஆக்கிட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஆனா கந்தசாமி அங்க ரிலீஸ் ஆகலை. மறுபடியும் பல்பு. ஆனா, இப்ப தீபாவளிக்கு திறக்கப் போறாங்கன்னு உறுத்திய செய்தி வந்துச்சு. ஒரு வழியா, தியேட்டர சோப்பரா ஆக்கிட்டாங்க.(வெளிய பார்க்கும்போது அப்படிதான் இருக்கு). ஆன்லைன் புக்கிங் வேற. முதல் நாளே டிக்கெட் எடுத்துட்டேன்.

மறுபடியும் அங்க போய் படம் பார்க்கறத நினைச்சா நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத மாதிரி எந்த கிறுக்கனாவது இருப்பானான்னு நீங்க நினைக்கறது என் காதுல விழுது. அப்படி நினைக்கறதுல தப்பே இல்லை. நான் அப்படி ஒரு சினிமா கிறுக்கன்தான். ஆனா, தியேட்டர் ஆளுங்க ரொம்ப யோசிச்சு, ஆர்வக்கோளாரா ஒரு வேளை செஞ்சிருக்காங்க. பத்து ரூவா டிக்கெட்டுக்கு ஆன்லைன் புக்கிங் வெச்சிருக்காங்க. இப்படி வெச்சா, அதை நம்பியே கவுண்டருக்கு வர ஏழைங்க கதி என்ன ஆகறது??? படம் பார்க்கனும்னு வெறியில இருக்குற என்னை மாதிரி ரசிகர்கள், ஆன்லைன்ல எந்த டிக்கெட் கெடைச்சாலும் பரவாயில்லைனு அதையும் புக் பண்ணிடுவாங்கல்ல..

இருக்கட்டும், facebookல கமெண்ட்ஸ் சொல்லிருக்கேன். இன்னும் சில பேரும் இதையே சொல்லிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். எப்படியோ, சென்னையோட ஒரு கலாசார அடையாளத்துக்கு (!?!?!?!) மறுபடியும் உயிர் வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. போயிட்டு வந்துட்டு, உள்ளார எப்படி இருக்குன்னு சொல்றேன்.


இங்க ஒரு பெரிய தட்டு வந்து, டப்பு டப்புன்னு ஒடையும். அதுக்கே 10 ரூவா போய்டும்....


எல்லாருக்கும் தீவாளி நல்வாழ்த்துக்கள்...

Sunday, October 11, 2009

அதாகப்பட்டது சார்....

வாணி அக்கா (நான் ரொம்ப சின்ன பையனாக்கும் ;) ஒரு tag கொடுத்துருக்காங்க. அதாவது, என் வாழ்க்கைல, நான் உபயோகப்படுத்தற, பிரபலமான brands பத்தி. எவ்வளவு வேணும்னாலும் சொல்லலாம். இருந்தாலும், கொஞ்சம் லிமிட்டிக்கறேன்...

காலைல எழுந்ததுமே, முதல்ல பல்லு தேய்க்கணும். அதுக்கு நான் பயன்படுத்துவது, உங்கள் ஹிமாலாயா டூத் பேஸ்ட். பல பேர் கேள்விப் பட்டிருக்கவே மாட்டீங்க. இனிமே கேள்விப் படுவீங்க. இதை நான் வாங்க இரண்டு காரணங்கள். 1. இது ஒரு சுதேசி product. 2. நிஜமாவே நல்லாத்தான் இருக்கு.

அடுத்ததா குளிக்க use பண்றது, godrej Cinthol soap. டாக்டர் பல பேர் இததான் recommend பண்ணாங்க. அடுத்து, இதுவும் சுதேசி product.

பயன் படுத்தற கைப்பேசி, சோனி எரிக்சன் k810i. முதல்ல நோக்கியா வெச்சிருந்தேன். அது செத்துப் போனதால, இப்ப சோனி. பேரு தான் சோனி, (என்னை மாதிரி ;) ஆனா நல்லா உழைக்குது (இதுவும் என்னை மாதிரி). உள்ள இருக்குற சிம் கார்டு, airtel.

அடுத்ததா, நான் சாப்பிடுவது, அம்மா பிராண்ட் சமையல். அதாவது எங்கம்மா கையால சமைச்சுப் போடுறத சாப்பிடுவேன். ரொம்ப நாளா பயன்படுத்தரேனே, அதனால, இதுவும் எனக்கு பிராண்ட் மாதிரி தான். (வேறு எங்கும் கிடைக்காது :)

தினமும் சாப்பிடற, நோவர்டிஸ் கம்பெனியோட trioptal மாத்திரைகள். என் நிதானத்திருக்கும், தெளிவிற்கும், இதுவே காரணம்.   
   
இது தவிர, நிறைய பேர் பயன்படுத்தற விண்டோஸ், மோசெர் பேயர் cd, ஹீரோ ஹோண்டா வண்டின்னு என் வாழ்க்கைல பல பிராண்டுகளின் பங்கு கீது.

இந்த நேரத்துல, நான் உங்க கிட்ட கேக்கறது ஒண்ணே ஒண்ணு தான். முடிஞ்ச வரை, இந்தியால தயாரிக்கற பொருட்களையே பயன் படுத்துங்க. தரம் சரியில்லைனு நினைக்கற ஆளுங்க, அட்லீஸ்ட், உங்க அன்றாட வாழ்க்கைல, ஒரு பொருளையாவது, சுதேசி பொருளா மாத்துங்க. கீழ, இருக்குற சுதேசி பொருட்களோட விவரங்களை தரேன், மற்றவங்களுக்கும் குடுங்க. இது, இந்திய பொருளாதாரம் வளரவும் ஒரு பெரிய உதவியா இருக்கும். மறுபடியும் சொல்றேன், அட்லீஸ்ட் ஒரு பொருளையாவது தொடர்ந்து வாங்குங்க. அகிம்சைல மட்டும் இல்லாம, இந்த விஷயத்துலையும் காந்திய follow பண்ணுங்க. இதுல எவ்வளவு பொருட்களை நீங்க அன்றாடம் பயன்படுத்தறீங்கன்னு பாருங்க. ஜெய்ஹிந்த்

BATHING SOAP:
USE   - CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
INSTEAD OF - LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE



TOOTH PASTE:
USE   - NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK
INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT  


TOOTH BRUSH:
USE - PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B 


SHAVING CREAM:
USE - GODREJ, EMANI
INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETE



BLADE:
USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA
INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365 , GILLETTE


TALCUM POWDER:
USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS
INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER



MILK POWDER:
USE - INDIANA , AMUL, AMULYA
INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID. 


SHAMPOO:
USE - LAKME, NIRMA, VELVET
INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE 



MOBILE CONNECTIONS
USE - BSNL, AIRTEL
INSTEAD OF - HUTCH


இந்த tagஐ சர்வேசன் அண்ணனுக்கும் (நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியும் இருந்தாலும்....), கனகு அண்ணனுக்கும், தம்பி கிருஷ்ணா குமாருக்கும், கார்த்திக் தம்பிக்கும், பூர்ணா மேடமுக்கும் பாஸறேன்......


Nandri வாணி அவர்களே. உங்களால எனக்கு ஒரு நல்லா விஷயம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது....

Monday, October 5, 2009

PLAYLIST - SEPTEMBER

ரெகுலரா பதிவு போட முடியலனா என்ன பண்றது??? மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சா கூட, பதிவுக்கான ஐடியாவெல்லாம் அதுவா வரணும். ஆனாலும், என்னை நம்பி FOLLOW பண்றவங்களை, ரொம்ப நாள் காக்க வைக்க எனக்குப் பிடிக்கலை. SO, ஒவ்வொரு மாசாமும், அந்த மாதத்துல நான் ரசிச்ச பாடல்களைப் பற்றியும், படங்களைப் பற்றியும் சொல்லலாம்னு நினைக்கறேன். சில சமயங்கள்ல, இத மாதிரி ஏதாவது சுலபமா எழுதும்போது, அடுத்த பதிவுக்கான ஐடியா கிடைக்கும். எனவே, இப்போது நான் சொல்லப் போவது, சென்ற மாதத்துல, நான் ரசிச்ச நல்ல பாடல்கள். கொஞ்சம் பழைய பாடல்களும் இருக்கும்.
      
 1. பாடல் - சுத்துது சுத்துது, படம் - கண்டேன் காதலை. ஹரிஹரன் நிஜமாவே விளையாடுகிறார் பாட்டுல. அதுவும் ஒவ்வொரு FINISHING வரும்போதும், செம்ம RENDITION. கூடவே வரும் FLUTE, அற்புதம். ரொம்ப நாள் கழிச்சு, வித்யாசாகர் இசைல ஒரு அழகான பாடல்.

2. பாடல் - ஹசிலி பிசிலி, படம் - ஆதவன் - ஒரு DEFAULT ஹாரிஸ் பாட்டு. கார்த்திக் வழக்கம் போல நல்லா பாடிருக்கார். வழக்கம் போல எல்லா ஹாரிஸ் பாட்டு மாதிரியும், இதுலயும் ஏதோ ஒரு குருவிக்கார பாஷை வருது. வழக்கம் போல என்னன்னு புரியலை.
BUT VERY CATCHY.

3. வேட்டைக்காரன் படத்துல வர மூணு பாடல்கள் - கரிகாலன், புலி உறுமுது, உச்சிமண்டை. எனக்கு எப்பவுமே குத்து பாடல்கள்னா பிடிக்கும். கொஞ்சம் டீசண்டா சொல்லனும்னா பெப்பி SONGS ;). அதனாலேயே இந்த பாடல்கள் பிடிச்சிருக்கு. CRITICALA ANALYSE பண்ணா, மூணுமே குப்பை தான். விஜய் ஆண்டனி வேற என்னதான் பண்ண முடியும். நாய் வேஷம் போட்டா.......

4. பாடல் - உன் மேல ஆசைதான், படம் - ஆயிரத்தில் ஒருவன். தனுஷின், ஒரு மாதிரி அலட்சியமான பாடும் விதம் தான் இந்தப் பாட்டு நல்லா இருக்க காரணம்னு நினைக்கறேன். இசை ஜி.வியா, யுவியானு இன்னும் சரியா தெரியலை. யாராயிருந்தாலும், இந்த பாட்டு நல்லா இருக்கு.

5. பாடல் - முத்தம்மா, படம் - அழகர் மலை. நிறையப் பேரு கேள்விப் பட்டுருக்க மாட்டீங்க. படம் வந்து போயாச்சு. இளையராஜா இசைல, மத்த பாடல்கள் சுமாராதான் இருக்கு. ஆனா இந்த FOLK ஸ்டைல் பாடல் நல்லாவே இருக்கு. கொஞ்சம் "சிட்டு பறக்குது" பாடலை ஞாபகப்படுத்தினாலும், GOOD ONE.

6. பாடல் - வானம் எல்லை, படம் - உ.போ.ஒ. இந்தப் படத்தின் வேற எந்த பாடலும் என் மனசுல நிக்கல. BLAAZEவின் ராப் + ஸ்ருதி ஹாசனோட VOCALS அழகா பொருந்துது. (மியூசிக் வீடியோ இன்னும் நல்லா இருக்கு ;) "EASIER SAID THAN DONE" என்கிற ஆரம்ப வரி வார்த்தைகள், ரொம்ப நாள் புரியாம, இப்பதான் இணைய உதவியோட கண்டுபுடிச்சேன். ஒரு வேளை, கமல் ரசிகர்களை, பாடலோட வரிகள் கவரலாம்.

மத்தபடி, என் PLAYLISTLA எப்பவும் இருக்குற, எமினெம் பாடின/ராப்பின WE MADE YOU, MY BAND ஆகிய பாடல்களும் இருக்கு. அடுத்த மாதம் எவ்வளவு மாற்றங்கள் இருக்குன்னு பார்க்கலாம்/கேட்கலாம்...


நான் "பாட்டுக்கு" ஏதோ சொல்றேன்னு நினைச்சுராதீங்க.... 

Monday, September 28, 2009

இப்படியும் ஒருவன் (mindvoice - நான் இல்ல)

எல்லா பதிவர்கள் மாதிரி, எனக்கும், உன்னைப்போல் ஒருவன் படத்தோட விமர்சனம் எழுதனும்னு ஆர்வமாதான் இருக்கு.(உனக்கு வேற ஏதாவது எழுதத்  தெரியுமா) ஆனா, என்ன எழுத?? ஒரு பக்கம் என்னடான்னா, ரொம்ப thinkittu படத்தை திட்டறாங்க. (முற்போக்குவாதிகளாமா) இன்னொரு பக்கம் "நாங்க சாதாரண, பத்து ரூவா டிக்கெட் ரசிகர்கள், ரொம்ப யோசிக்காம படங்களை பார்த்தல் போதும். தேவையில்லாம எங்களை சிந்திக்க வெச்சி கெடுக்காதீங்கன்னு கேட்கறவங்க ஒரு பக்கம் (ரொம்ப நல்லவன்களாமா).

இதுல வேடிக்கை என்னன்னா, இப்படி சொல்ற பதிவர்கள், இதுக்கு முன்னாடியே, பல பதிவுகள்ள, மொக்கையா, சாதாரண மக்களுக்கு கருத்து சொல்லிருக்காங்க. இந்தப் படம் பார்க்கும்போது மட்டும் ஏன் சாதாரண மக்களா மாறிட்டாங்கன்னு தெரியல (இது இப்ப தேவையா). எது எப்படியோ, என் கருத்தை சொல்லாம விட மாட்டேன். (அதான் தெரியுமே) படம் எனக்கு பிடித்தது. பாட்டு இல்லைனா, ஒரு படம் எவ்வளவு வேகமா இருக்கும்னு காமிக்க, இந்த படம் ஒரு உதாரணம். 

படத்தோட ஹீரோ மோகன்லாலின் (இன்னாது) நடிப்பு, வழக்கம் போல சோப்பர். கமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிருக்கார் (வேற வழி). பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். டைப் அடிக்கும்போது எனக்கே dejavu மாதிரி இருக்கு (இங்கயுமா). அதனால இதுக்கு மேல படத்தப் பற்றி நான் சொல்ல விரும்பலை. வேற எங்கயாச்சும் review பார்த்துக்கோங்க. மொத்தத்துல, கமல் போட்ட திட்டம் (இவன் karamchandlala - HINDU )  அவருக்கே back -fire ஆயிடுச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சிந்திச்சாலே இதான் பிரச்சனை. 
___________________________________________________________________________
இதுக்கு முன்னால, நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. சன் டிவி ஸ்டைல்ல சொல்லனும்னா, "நினைத்தால் மட்டும் இனிக்கும்" பாத்துறாதீங்க. (லேட் வார்னிங்)
___________________________________________________________________________
விஜயின் வேட்டைக்காரன் (!?!?!?!) பாடல்கள் வழக்கம் போல செம்ம massala. எனக்கு மூணு பாட்டு (அனுஷ்கா!!!) புட்சிகிது. ஆனா சார் எதுக்கு அட்வைஸ் பண்றாருன்னு தெரியல(எதோ எதோ கவசாகி). புலி வருது புலி வருதுனு பாடல்,(கொ.... எடுத்ததா எடுக்காததா???) இதுக்கு நம்ம தளபதி குதிரைல வராராமா. எனக்கு வில்லு flashback + போக்கிரி போலீஸ் சீன் ஞாபகம் வந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதோ ஆடி மாசம் அம்மன் பாட்டு கேட்ட effect. இதனால படம் ஓடுமான்னு கேட்டீங்கன்னா..................... "மதுர" அப்படீன்னு ஒரு படம் வந்துச்சுல்ல??(மச்சான் பேரு மதுர) அத ஞாபகத்துல வைங்க.
___________________________________________________________________________
 ஜெயா டிவில, நாங்க வர finals episode, இந்த வாரம், சனிக்கிழமை காலை, telecast ஆச்சு (மறைந்திருந்து பார்க்கும் + காதல் கசக்குதய்யா). மிஸ் பண்ணவங்க, வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு பாருங்க. இல்லை பொறுத்திருந்து youtubela பாருங்க. 


 விஜய் மாதிரி நாம எப்போ வித்தியாசமா நடிக்கப்போகிறோம்????

Monday, September 14, 2009

எனகுக் Dylsexia !?!?!?!?!?! உகங்ளுக்கு ???

ரொம்ப வருடகாலமாகவே எனக்கு சில சின்னச்  சின்ன விஷயங்கள்ல பிரச்சனைகள் இருக்கு. என்னால ஒழுங்க left, right sides சொல்ல முடியாது. மெசேஜ் டைப் பண்ணும்போது நிறைய வார்த்தைகள் மாற்றியோ, தப்பாகவோ அடிச்சிடுவேன். என் நண்பர்கள் கூட சகஜமா பேசர அளவுக்கு என்னால மேடைல பேச முடியறதில்லை. (அதாவது ரசிகர்களா என் நண்பர்களே இருந்தால் கூட) நாள் நேரம் எல்லாம் தப்பா எழுதிகிட்டு சொதப்புவேன். ஒரு இடத்துல உட்கார்ந்து படிக்கவே முடியாது. எப்பவுமே restless . இத மாதிரி பெரிய ஒப்பாரியா வெச்சிகிட்டே போகலாம்.

தாரே சமீன் பர படம் வந்த அப்பறம், இந்த dyslexia பத்தி நிறைய பேச ஆரம்பிச்சாங்க. என்னாடான்னு பார்த்த அது ஒரு வியாதியாம். யாருக்கு வேணும்னாலும் வருமாம். ஆனா அதனால பெரிய பாதிப்பு எதுவும் வராதுன்னு சொன்னாங்க. அதுக்கான symptoms என்னவா இருக்கும்னு பார்க்கும்போது, நான் மேலே சொன்ன சில விஷயங்களையும், இன்ன பிற விஷயங்களையும் போட்டிருந்தாங்க. அப்புறம் நானே எனக்கு dyslexia இருக்குன்னு முடிவு பண்ணிட்டேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஒரு ஆன்லைன் டெஸ்ட் பார்த்தேன். ரொம்ப அருமையா கீது. ஒரு வேளை, நான் மேல சொன்ன விஷயங்கள்ல ஏதாவது உங்களுக்கும் பொருந்திச்சுன்னா, இந்த டெஸ்ட அட்டென்ட் பண்ணி, உங்களுக்கு dyslexia இருக்கான்னு பார்த்துக்கோங்க..
மு.கு. டெஸ்ட், ஆம் - இல்லை வடிவத்துல, பீட்டர்ல கீது, கண்டுக்காதீங்க....
Yes No
1. Do you find difficulty telling left from right?
2. Is map reading or finding your way to a strange place confusing?
3. Do you dislike reading aloud?
4. Do you take longer than you should to read a page of a book?
5. Do you find it difficult to remember the sense of what you have read?
6. Do you dislike reading long books?
7. Is your spelling poor?
8. Is your writing difficult to read?
9. Do you get confused if you have to speak in public?
10. Do you find it difficult to take messages on the telephone and pass them on correctly?
11. When you say a long word, do you sometimes find it difficult to get all the sounds in the right order?
12. Do you find it difficult to do sums in your head without using your fingers or paper?
13. When using the telephone, do you tend to get the numbers mixed up when you dial?
14. Do you find it difficult to say the months of the year forwards in a fluent manner?
15. Do you find it difficult to say the months of the year backwards?
16. Do you mix up dates and times and miss appointments?
17. When writing cheques do you frequently find yourself making mistakes?
18. Do you find forms difficult and confusing?
19. Do you mix up bus numbers like 95 and 59?
20. Did you find it hard to learn your multiplication tables at school?
  
So, கேள்விகளோட முக்கியத்துவப் படி, சொன்ன பதில்களை வரிசை படுத்தி, உங்களுக்கு எந்த அளவு பாதிப்பு இருக்குன்னு பாருங்க..(இப்ப எனக்கு ஒரு சந்தேகம். இத மாதிரி, பதில்ல கேளிவிகளோட முக்கியத்துவத்தை சொல்லிட்டு, ஆர்டர் மாத்தி எழுதினத விட, முதல் கேள்வி ரொம்ப முக்கியம், அடுத்த கேள்வி கொஞ்சம் முக்கியம்னு வரிசைப் படுத்தி இருக்கலாம்ல????)
  1. Q17
  2. Q13
  3. Q7
  4. Q16
  5. Q18
  6. Q10
  7. Q19
  8. Q14
  9. Q20
  10. Q4
  11. Q1
  12. Q11
 ஆனா கெட்டவார்த்தை பேசும்போது மட்டும் எதுவும் ஆகறதில்லை...

Wednesday, September 9, 2009

சென்சார் என்ற கேலிக்கூத்து

நண்பர்களே, திரைப்படங்களுக்கு சென்சார் போர்ட் என்கிற விஷயம் எதுக்கு இருக்கு (தமிழ்ல தணிக்கைனு சொல்றாங்க) எதை தணிக்கை பண்றாங்க? ஏதாவது விவகாரமான கசமுசா காட்சிகளோ, வெறி ஏத்தற (அந்த 'வெறி' அல்ல) ரத்தக் களரியான காட்சிகளோ, பொதுவுல, நாட்டுக்கு விரோதமான விஷயங்களோ இருந்தா, அதை சென்சார் செய்யவே இந்த போர்ட்.

ஆனா இவங்க பண்ற தணிக்கைல எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்தது கிடையாது. சினிமாவப் பற்றி படிப்பதற்கு முன்னாடியே இப்படின்னா, கொஞ்சம் சுமாரா விஷயம் தெரிஞ்ச அப்பறம், சுத்தமா நம்பிக்கை போய், அவங்க ஒரு காமெடி பீஸாவே தெரியறாங்க. முதல்ல எனக்கு வந்த சந்தேகம், எதுக்கு ஒரு படத்துக்கு A certificate குடுக்கறாங்கன்னு. காரணம் என்னனா, நான் மேலே சொன்னா மாதிரி, பலான பலான காட்சிகளோ, கத்திக் குத்துக்களோ இருந்தா அப்படி குடுப்பாங்க. ஆனா அதையும் நாய் வாய்ல பன்னு மாதிரி முழுசா இல்லாமா, குதறி வெச்சி, அப்பறம் குடுப்பாங்க. அதான் Adults ஒன்லின்னு குடுத்துட்டாங்கல்ல, அப்புறமும் எதுக்கு கட்டிங்க்னு பார்த்தா, அதுக்கான காரணம் வெளங்கலை.

இந்த சென்சார் பிரச்சனை பெரும் பிரச்சனை ஆகி, சண்டை போட்டு பல்பு வாங்கின ஆட்கள்ல சில பேர் நம்ம கமல், எஸ்.ஜே.சூர்யா, வேலுபிரபாகரன். இப்ப சமீப காலங்கள்ல, அதாவது 2-3 வருடங்களா வர படங்களுக்கு குடுக்குற rating எல்லாமே செம்ம காமெடியா கீது. உதாரணத்திற்கு சில படங்கள எடுத்துப்போம்,

குசேலன் படத்துல, எப்படி நட்பை விலாவரியா, விலா நோக சொன்னாங்கன்னு பாத்தீங்க. ஆனா அதோட இல்லாம,  நம்ம தலைவி நயன்தாரா எப்படி நடிச்சி காமிச்சிருப்பாங்கன்னு நீங்க எல்லாரும் நல்லா பாத்துருப்பீங்க, ஆனா அந்த படத்துக்கு, A குடுக்கவேணாமய்யா  அட்லீஸ்ட் ஒரு UA ....ம்ஹூம்.... இல்லையே . U குடுத்தாங்க..

அடுத்து, யாரடி நீ மோகினி அப்படின்னு ஒரு கலைப் படைப்பு. அதுல ரகசியா, கொடுமையான ஆட்டம் ஒண்ணு போட்டிருப்பாங்க. அதோட இல்லாம, படத்துல "இயற்கையா" சில விஷயங்களைப் பத்தி வசனங்கள் வேற, காமெடியா, வரும். இந்தப் படத்துக்கும் U.......

அடுத்து, சமீபத்துல வந்த நாடோடிகள். நிஜமாவே நல்லா படமா இருந்தாலும், படத்துல வன்முறை காட்சிகள் எந்த அளவு இருந்ததுன்னு பார்த்தவங்களுக்கு தெரியும். இந்த படத்துக்கும் U அளிக்கப்பட்டது...

இவ்வளவு ஏன், ரெண்டு வாரம் முன்ன வந்து, இப்ப நாறிக்கிட்டு இருக்குற கந்தசாமில, நம்ம ஸ்ரேயா அம்மணி எப்படி கலை சேவை செஞ்சாங்கன்னு பாத்திருப்பீங்க. அட்லீஸ்ட் யாரவது சொல்லிருப்பாங்க. அதைவிட, அந்தப் படத்துல, கடைசில, மீனாகுமாரி பாட்டு, உச்சக்கட்டம். டிரஸ் இருக்கா, இல்லையான்னே சந்தேகம் வர அளவுக்கு இருக்கும் பாடல் அது.

So, இப்படியாக சொல்லிகிட்டே போகலாம். நீங்களும் நோகாம படிச்சுகிட்டே இருப்பீங்க. எனக்கு ரொம்ப பிடித்த rating சிஸ்டம், ஹாலிவுட்ல இருக்கறது. அங்க ரொம்ப அழகா பிரிச்சிருக்காங்க. அதப் பற்றி மேல படிக்கனும்னா -> இங்க <- போங்க. அங்க நம்ம ஸ்பீல்பெர்க் அண்ணாச்சி, தன்னோட முயற்சியில, ஒரு புது rating முறையவே கொண்டு வந்திருக்கார். நாம ஊர்ல யாரும் மூச்சு கூட விட முடியாது. ஒரு வேளை  இதுலையும், அரசியல், ஊழல் எல்லாம் இருக்குமோ?? எனக்கென்னமோ சத்தியமா இருக்கும்னுதான் தோணுது.

திரைப் படங்களுக்கு சென்சார் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் முற்போக்குவாதி இல்லை. Atleast, கொஞ்சம் கேனத்தனமா இல்லாம, ஒழுங்க இருந்தா சரி.என்ன சொல்றீங்க???


 சின்னத்திரைக்கு சென்சார் தேவைன்னு நினைக்கறீங்க???

Monday, August 24, 2009

The கிரேட் கந்தசாமி challenge ...

நீங்க கந்தசாமி படம் பார்த்து நொந்த ஆளா?? குறைந்தது, அந்த படத்த பற்றி கேள்விப்பட்ட ஆளா?? அப்ப இந்த challenge உங்களுக்குதான். கீழ, என்னுடைய ரசனையின் அடிப்படையில், ஒரு match the following இருக்கு. அதுக்கு கீழ, ஒவ்வொரு வார்த்தைக்கும் equivalent வார்த்தையும் இருக்கு. உங்களால கரிக்டா match பண்ண முடியுதான்னு பார்க்கலாம். பின்னூட்டத்துல உங்க பதிலைப் போடுங்க.

for ex - கந்தசாமி -

1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
2. சுசி கணேசனின் கலைப் படைப்பு
3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்

இதுக்கு சரியான தேர்வு 1
got it??? இப்ப விளையாடுவோமா ??
கவலைப் படாதீங்க, ரொம்ப ஈசியாதான் இருக்கும்.

படம் நல்லா வரணும்னு சீட்டெழுதி போட்டிருக்கலாமோ???

The கிரேட் கந்தசாமி challenge ...

கந்தசாமி - 1
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -

பதில்கள்
  1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
  2. கணேசனின் கலைப் படைப்பு
  3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
  4. மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடித்து மொக்கை வாங்குபவர்
  5. தனி ஆளாக படத்தை காப்பாற்றுபவர்
  6. தான் பார்த்த/நடித்த பழைய படங்களை மறப்பவர்
  7. ராவணன் கைவிட்டால், காப்பற்ற இருக்கும் ஒரே ஆள்
  8. கந்தசாமி பார்த்துவிட்டு யோசிப்பவர்
  9. எந்த ஒரு மொக்கை படத்தையும் சுமாராக ஆக்கும் இடம்
  10. கேலிக்கூத்து
  11. குடுத்த பணத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்வது
  12. ஸ்ரேயா ஆடியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
  13. கொக்கரக்கோ கோழி
  14. தேவையில்லாமல் வந்து போவது
  15. மன ஆறுதலை தரும் ஒரே விஷயம்
  16. city of god படத்தை நிறைய முறை பார்த்தவர்
  17. இப்பொழுதுதான் தொழிலை கற்றுக்கொள்பவர்
  18. கொஞ்சம் கமெர்சியலா பண்றோம்
  19. எல்லா காட்சிகளிலும் தண்ணி அடித்தது போல் பேசுபவர்
  20. படத்திற்கு உறுதுணையாக இருப்பது
  21. நம் மண்டையை பிளப்பது
  22. பட்ஜெட்டில் துண்டு
  23. எவ்வளவு மொக்கை வாங்கினாலும் ஸ்டெடியாக இருப்பவர்
  24. பதிவு போடவே படம் பார்க்கும் கேசு
  25. அடுத்தடுத்து ஆப்புகளை பெறுபவர்
  26. தூக்கக் கலக்கத்தில் பேசுபவர்
  27. சில காட்சிகளில் நினைவிற்கு வந்து upset ஆக்குபவர்
  28. கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்
  29. மஞ்ச மாக்கான்
  30. வெளிப்படையாக நடிப்பவர்
  31. பல்காக இருப்பவர்
  32. பிள்ளையின் மானத்தை வாங்குபவர்
  33. பல்ராம் நாயுடுவிற்கு போட்டி
  34. தேடினாலும் கிடைக்காது
  35. மனதில் ஹிட்ச்காக் என்று நினைத்து கொள்பவர்
  36. எப்பொழுதும் மர்மமான ரோலில் நடிப்பவர்
  37. என்ன கொடுமை சரவணன் இது
  38. சூப்பரப்பு
  39. உரிச்ச கோழி
  40. அப்படின்னா??
ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருப்ப்பது போல இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ, அத செலக்ட் பண்ணுங்க...

மச்சான் ஒருத்தன் சிக்கிருக்காண்டா, வரியா படம் எடுப்போம்?? நான் உளவுத்துறை போலீசா நடிக்கிறேன்..

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

Thursday, August 13, 2009

வருக வருக...

நம்ம பதிவுலகத்திலே மற்றுமொரு புதுவரவு. அண்ணன் விஜய குமார் அவர்கள்...
நான் வெட்டியா இருக்கும்போது தான் வித்தியாசமா யோசிப்பேன், அண்ணனோ வெட்டியா இருக்கும்போது தான் சாதா"ரணமா" யோசிப்பாரு. நான் லூசு, அவரு என்னை விட...... கொஞ்சம் ஓவரா புகழறேனோ??? சரி, எப்படியோ, என் inspirationல அவர் ஆரம்பித்த ப்ளோக், லட்சக்கணக்கான ஆதரவாளர்களை பெற்று, பல ஆயிரம் அமுக்கிகளை (hits) பெற வேண்டும் என, இறைவனை வேண்டிக் கொண்டு, இத்துடன் என் உரையை பொத்திக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்....

லிங்க்: http://boreadikudhu.blogspot.com/


சொல்லிகுடுக்கறேன்னு சொன்ன இந்த காக்கி எங்க???


(சொல்லுங்க விஜய் அண்ணா, என்ன doubt????)

Saturday, July 25, 2009

மோதி, உடைந்தோம்.....

எனக்கு மட்டும்தான் நேரம் சரியில்லைனு நினைச்சேன். என் நண்பர்களுக்கும் சரியில்லை. ஏன், தமிழ் சினிமாவுக்கே நேரம் சரியில்லை. நம்மாளுங்க, நல்ல படம் எடுக்க போட்டி போடறாங்களோ இல்லையோ, யார் மோசமான படம் எடுக்கறதுன்னு நல்லாவே மோதி விளையாடறாங்க. நல்ல production values மட்டுமே, ஒரு படத்தை காப்பாற்ற முடியாதுன்னு மறுபடியும் நிரூபிக்கற படம்தான் மோதி விளையாடு...

மொத்தம் எட்டு பேர், 2.5 மணி நேரம், தலைக்கு 50 ரூவா, மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கினோம் பாருங்க. மாசிலமணியவிட ஒரு மொக்கையான படம் வராதுன்னு நினைச்சேன் (குருவி பார்க்கும்போதும் same பீலிங்க்ஸ்), ஆனா இந்தப் படம் 15 முறை ATM படத்தை பார்த்த effect தருது. கதை நல்லாத்தான் இருக்கு. எடுத்த விதம் தான் why blood same blood. நான் பெற்ற இன்பமோ / துன்பமோ, பெருக இவ்வையகம். So, கதைய நான் சொல்ல மாட்டேன். தைரியம் இருந்தா நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கங்க.

நடிப்புகள பார்க்கும் போது, நம்ம கலாபவன் மணிய, குழந்தையப் போட்டு தாண்டி, கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணி சொன்னாலும், கொடீஸ்வரர்னு நம்பமுடியலை. வினய் பணக்கார வீட்டுப் பையன் வேஷத்துக்கு நல்லாவே போருந்தறார். ஆனா, ஏன்யா உனக்கு இந்த கொலை வெறி. தலைகீழாகத்தான் குதிக்கப்போகிறேன்னு சொல்றா மாதிரி, சொந்தக் குரல்லதான் பேசுவேன்னு பேசி, டோட்டல் damage பண்ணிட்டார். சகிக்கலை. ஹீரோயினி வழக்கம் போல, வராங்க, பாடுறாங்க, ஆடுறாங்க, ஹீரோவா உற்சாகப் படுத்தறாங்க, போறாங்க.

படத்துல நிஜமான relief, சந்தனாம், மயில்சாமி & ஹனீ ஃபா. மூணு பேருமே காமடியில கலக்காறாங்க. தியேட்டர்ல வந்த 3 விசில் சத்தங்கள்ள, ஒண்ணு, சந்தானம் காமடிக்கு, ரெண்டு, மயில்சாமி காமடிக்கு, மூணு, மோதி விளையாடு பாட்டுல வர தேவாவுக்கு. அழகான காமிராவைக் கூட, மோசமான திரைக்கதை பின்னுக்குத் தள்ளுது. எடிட்டிங், சில இடங்களில் நல்லா இருந்தாலும், பெருசா சொல்லிக்கறா மாதிரி ஒண்ணும் இல்லை. பாடல்கள் சுமார் ரகம். படத்தோட லோகேஷங்கள்ள பயங்கர குழப்பம். சென்னைனு சொல்லி பாண்டிச்சேரிய காட்டலாம், மலேசியாவ காட்டலாமோ???

இந்தப் படத்துக்குப் போகலாம்னு சொன்னதால என் மேல தான் என் நண்பர்கள் எல்லாருக்கும் காண்டு. படம் ஆரம்பிச்ச 20 நிமிடத்தில் ஒருத்தன் தூங்கிட்டான். இரண்டாவது பாதியின் நடுவிலேயே இன்னும் ரெண்டு பேரு கிளம்பிட்டாங்க. ஆனா நான் அசருவனா, வில்லு படத்தையே பார்த்த ஆளாச்சே. மன தைரியத்தோட, முழுசையும் பார்த்துட்டுதான் வந்தேன். இல்லைனா உங்க எல்லாரையும் காப்பாற்ற முடியாதே. வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையா, தலைல சொட்டை விழுந்துருக்கான்னு கண்ணாடியில பார்த்தேன். நல்ல வேளை, எதுவும் இல்லை.

ஆகவே, மக்களே, ரொம்ப போர் அடிச்சா, சன் டிவியில போடுற டப்பிங் படத்த கண் கொட்டாம பார்த்துட்டு, குப்புற படுத்துக்கங்க. நான் இவ்வளவு சொல்லியும், "இல்லை, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள், படம் அப்படியெல்லாம் இல்லை"னு யாரவது சொன்னீங்க, உங்க வீட்டுக்கு, ஷேர் ஆட்டோல, ATM, ஏகன், வில்லு, குருவி, கீதை, உதயா, ஆஞ்சநேயா, ஜனா படங்கள் அடங்கிய DVD, தேடி வரும்.....

இவர் பேரு வினய். இந்தப் படத்தப் பார்த்தது நான் செஞ்ச வினை.....

Wednesday, July 22, 2009

நாடோடிகளும் அரை ரத்த இளவரசனும்

நாடோடிகள்

நான் என்ன பெரிய விமர்சனம் எழுதறது. எனக்கு முன்னாடியே, பல நல்லவர்கள், படத்தை பார்த்து எழுதித் தள்ளிட்டாங்க, எனக்கு மிச்சம் வைக்காம. இது, எதை மாதிரியான படம்னு வரையறுக்க முடியலை. எந்த மாதிரி வேணாலும் புரிஞ்சிக்கலாம். வேறு வேறு விதமான நண்பர்களுக்குள்ள நடக்கும் கதையாகவும் பார்க்கலாம், வேறு வேறு விதமான தந்தைகளைப் பற்றிய படமாகவும் எடுத்துக்கலாம், வேறு வேறு பெண்களை/காதலிகளை/அம்மாக்களைப் பற்றிய படமாகவும் பார்க்கலாம்னு, இந்தப் படத்திற்கு, எக்கச்சக்க கோணங்கள். ஒரு தேவையில்லாத பாடலைத் தவிர (யக்கா யக்கா) படம் வேறு எங்கயுமே போர் அடிக்கல. திரைக்கதை அப்படி.

அருமையான ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம், நடிப்புன்னு படம் நெடுக ஒரே positives மட்டுமே. இருந்தும் எனக்கு, மூன்று முறை பார்க்கும் போதும், கண்ணை உறுத்திய சில விஷயங்கள். முன்னமே சொன்னது போல அந்த யக்கா யக்கா பாடல். பாட்டும் சுமார்தான், அதில் ஒளிப்பதிவு, ரொம்பக் கீழ்த் தரம், நிறைய low angles. தேவையில்லாத திணிப்பு. சசிகுமாரின் amateur நடிப்பு. அவருக்கு ஹீரோ வேஷம் பொருந்தினாலும், பல இடங்களில் அவர் நடிக்கக் கஷ்டப்படுவது தெரிகிறது. மொக்கை பின்னணி இசை. அந்தக் கடத்தல் இடத்துல வரும் இசையைத் தவிர, வேற எங்கையும் பெருசா ஒட்டலை. பல இடங்களில், ஒரே இசையை மீண்டும் மீண்டும் போட்டு, வெறுப்பேத்தறாங்க.

மற்றபடி இது கன கச்சிதமான படம்.

இப்படி கை தூக்கினவங்க எல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா...

ஹாரி பாட்டர்

இது வரை வந்த ஹாரி பாட்டர் படங்கள்லேயே, இது தான் உன்னதமான படைப்புன்னு வந்த பல நூறு விமர்சனங்களை பார்த்து, வழக்கம் போல ஏமாறாம, என் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கிட்டு, படம் பார்க்க போனேன். முதல் நாளே பார்க்கனும்னு இருந்தேன், ஆனா என்னை விட பல ஆர்வக் கோளாறுகள் இருந்ததால, அவங்க முந்திகிட்டாங்க. ஒரு வழியா நாலாவது நாள் நைட் ஷோ, சத்யம் தியேட்டர்ல, நடு சென்டர் ஸீட்டாப் பார்த்து புக் பண்ணேன்.

படம் பெருசா ஒண்ணும் ஏமாத்தலை. ஆனா புத்தகத்தை படிச்சவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். நான் இந்தப் படத்தை தூற்றவும் இல்லை, போற்றவும் இல்லை. கிடைத்த 2.5 மணி நேரத்துல, முடிந்த வரை, பரபரப்பா கதை சொல்லிருக்காங்க. திரைக்கதை நல்ல வேகம். ஆனா, தேவையே இல்லாம, புத்தகத்துல இல்லாத ஒரு fight சீன் படத்துல இருக்கு. படத்துல சில பல இடங்கள், செம்ம humorous. நடிப்புன்னு பார்த்தா, இந்த படத்துல, dumbledore பாத்திரத்துல வர michael gambon நல்லா நடிச்சிருக்கார். daniel, படத்துல பெரிய வேலை ஒண்ணும் இல்லாம வரார். rupert grint நல்ல காமெடி நடிகரா வருவார்னு நினைக்கறேன். அவரோட reactions எல்லாம் செம்மக் காமெடி.

நம்ம emma watson, வழக்கம் போல நல்லாவே நடிச்சிருக்காங்க. அவங்க எதுக்கு நடிக்கணும். சும்மா வந்து நின்னா போதும். அட அட அட. அதுவும் RDX ஸ்க்ரீன்ல இன்னும் அழகா இருக்காங்க. alan rickman, tom felton, எல்லாருமே கிடைச்ச ஸ்க்ரீன் டைம்ல, நல்லா நடிச்சிருக்காங்க. படத்துக்கு முக்கியமான பலம், கிராபிக்ஸ், கேமரா & எடிட்டிங். எல்லாமே உச்சக்கட்டம். Almost, படத்தோட எல்லா காட்சியிலுமே கிராபிக்ஸ் இருக்கு. அதுவும் சிறந்த தரத்தோட. மொத்ததுல, படம் நல்ல பொழுதுபோக்கு. ஆனா, வந்த படங்கள்லேயே சூப்பர்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் புத்தகங்களை முன்னமே படிச்துனால இருக்கலாம்.

அடுத்த படத்தை நான் பெருசா ஒண்ணும் எதிர் பார்க்கலை. ஆனா, அடுத்த படத்துல நம்ம emma watsonku இன்னும் கொஞ்சம் ஸ்க்ரீன் டைம் கொடுத்தா நல்லா இருக்கும். மற்றபடி, இது, பாட்டர் படங்களில், மற்றுமொரு வெற்றிப் படம்.
படத்தை, சத்யம் தியேட்டர்ல மட்டும் பாருங்க.

இதப் பாரு. கிருஷ்ணா ரொம்ப நல்லவன்னு போட்டிருக்கு...

(பி.கு. இந்த அரை ரத்த இளவரசன் என்கிற மொழி மாற்றம், நான் முன்னமே யோசிச்சது. அதனால, நண்பர் lancelot ராயல்டி கேட்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்)

Sunday, July 12, 2009

மற்றும் பல...

ஆரம்பிச்சிட்டாங்க...

கல்லூரி திறந்தாச்சு. இந்த முறை பாடங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நான் எதிர்பார்த்தா மாதிரி, practical வேலைகள் கொஞ்சம் நிறையவே இருக்கும்னு நினைக்கறேன். அதானால, நிறைய ப்ளோக முடியாதுன்னும் நினைக்கறேன். எங்க music band மீட்டிங்கும் நடந்தது. புதுசா நாலைந்து பேர் தேவைப்படறாங்க. இப்பதான் கவுன்சிலிங் நடக்குது. லைன்ல நிக்கற பசங்களையும், அப்பா அம்மாக்களையும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும்...

நாடோடிகள்

நாடோடிகள் பட விமர்சனத்தை எழுதச் சொல்லி, என் நண்பர்கள் சில பேர் கேட்டாங்க. 3 முறை அந்த படத்தை பார்த்துட்டேன். இதுக்கு மேல அதை பற்றி வேற என்ன சொல்ல. இருந்தும், அவர்களோட விருப்பத்திற்கு இணங்க, வரும் வாரம், எழுதுகிறேன். (உங்க தலை விதி அப்படி)

பைக்

புது பைக் ஒன்னு வாங்கினேன். (paasion plus). நான், ஏன் அண்ணனோட வண்டி (discover) ஓட்டி பழகியதால, புது வண்டியில, இன்னும் gear pattern பழகல. ரொம்ப பேஜாரா கீது. அதனால, என் அண்ணனோட வண்டியவே இன்னும் ஓட்டிங். ஏன் தலை விதி பாருங்க, புது பைக் இருந்தும், ஓட்ட தெரிஞ்சும், ஆண்டவன் இப்படி பண்ணிட்டான். இருந்தும், பொங்கி எழுந்து, பழகிக் கொண்டு, ஏன் பைக்கை ஓட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் வாரம், படம் ரிலீஸ். பார்க்க நான் ரெடி, நீங்க ரெடியா??

Wednesday, July 1, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -2

முதல் பகுதி -->இங்க<--

தொடர்ந்தான் சிகாமணி, "அதாவது படம் எவ்வளவு கேவலமா இருந்தாலும், பிரம்மாண்டத்த வெச்சு ஒட்டிரலாம்னு பல பேர் நினைக்கறதால, அத மாதிரியே ஒரு கதை. மொத சீன்லயே மவுண்ட் ரோடு LIC பில்டிங் மேல ஒரு டைனோசர் நிக்குது". உடனே நான், "அது எப்படி மச்சான். கிராபிக்ஸ்ஸா??". "இல்லைடா, ஒரு யானைக்கு டைனோசர் make up போட்டு நிக்க வெக்கறோம். இதுக்கு, ஆப்ரிக்கா வனப் பகுதிலேர்து ஒரு make up மேன வரவழைப்போம். இன்னும் கேளு. அந்த டைனோசர பார்க்க, மவுண்ட் ரோடு முழுக்க ஜனங்க குவியறாங்க"

"எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட். என்னப் பண்றதுன்னே தெரியாம குழப்பத்துல இருக்குற நம்ம டைனோசர், பக்கத்துல இருக்குற பில்டிங் எல்லாத்தையும், தன் வாலாலையும், காலாலையும், (சென்சார்) அடிச்சு நொறுக்குது. அத கிராபிக்ஸ் பண்றோம். ஆனா, ரியலிஸ்டிக்கா இருக்கணுமே, அதனால, மவுண்ட் ரோட்ல இருக்குற எல்லா பில்டிங்குக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கிறோம். சுண்ணாம்பு பரவுதே. அப்புறம், அந்த டைனோசர அழிக்க, இந்திய ராணுவமே அங்க குவியுது. விமானப் படைலேர்ந்து, பிளைட்டெல்லாம் வருது. குண்டு போட்டு, டைனோசர அழிக்கப் பாக்கறாங்க, ஆனா எதுவும் நடக்கலை"

"கீழ இருக்குற மக்கள், என்ன ஆகப் போகுதோன்னு, அன்னாக்கா ஆ போட்டு, ஆகாயத்தை பார்க்க சொல்ல, நம்ம ஹீரோ, டைனோசர் ஸ்டொமக்க கிழிச்சிகிட்டு வெளிய வந்து, டைனோசர அழிக்கராறு. எப்பூடி??"

"மச்சான், பேரரசு உடம்புல, ஷங்கர் ஆவி புகுந்தா மத்திரி இப்படியொரு கதை யோசிச்சு வெச்சிருக்கியே. பட்ஜெட் எவ்வளவு??"

"10 கோடி"

"பத்துமா??"

"மொத சீனுக்கு கரெக்டா இருக்கும்"

"அடப்பாவி, முதல் சீனுக்கேவா. ரைட் விடு. எனக்கு கொஞ்சம் கியாரா இருக்கு, நான் வரட்டா??"

"அட இருடா. அடுத்து நாம எப்ப பார்க்கறது. இந்த கதயவே முடிக்கல. ஆனா, சிம்பிளா இன்னும் ஒரே ஒரு கதை சொல்றேன். கேட்டுட்டு போயேன்"

"நான் பாவம்ல. சரி சீக்கரமா சொல்லு. ஆனா இதோட நிறுத்திக்க. start music"

முதல்ல அவ்வளவு சிம்பிளா இருக்கும்னு நினைக்கல. கதைல இருக்குற செண்டிமென்ட கேட்டு எனக்கு வயறு upset ஆகிருச்சுனா பாருங்களேன்.

......will end in next post

Friday, June 26, 2009

MASS - இல்லா - mani

வழக்கம் போல, இந்த வாரமும் ஏதாவது படம் பார்க்கணுமே, So, வழக்கம் போல ரமேஷ் அண்ணாவ இட்டுகுனு, அண்ணா theatre பக்கம் போனேன். அங்க, முத்திரை படம் ரிலீஸ். படம் கொஞ்சம் சுமாரா இருப்பதாகவே கேள்விப்பட்டதனாலதான் போனேன். ஆனா டிக்கெட் கிடைக்கல. நாமதான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா யார் பேச்சையுமே கேட்கமாட்டோமே, படம் பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, பார்த்தே தீரணும். அண்ணா கிட்ட, "வேற வழியில்லை, மாசிலாமணி பார்ப்போமா"னு கேட்டேன். அவரும் "எதுவா இருந்தாலும் ஓகே" அப்படின்னாரு. அங்கேர்ந்து ஆல்பர்ட் theatre. டிக்கெட் வாங்கிட்டு (85ஓவா) உள்ள போனோம்.

வழக்கம் போல, படம் செம்ம மொக்கை. அதாவது நீங்க எவ்வளவு மொக்கைனு நினைக்கறீங்களோ, அத விட மொக்கை. வழக்கம் போல, நானும் அண்ணாவும் அடுத்தடுத்து வர காட்சிகள யூகிச்சிட்டே வரோம், அதே மாதிரி வந்துகினே இருக்கு. நாங்களும் எவ்வளவு தான் யூகிக்கறது. ஒரு கட்டத்துல, நாங்க சொல்றது எல்லாமே வந்ததால, போர் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. ஹீரோ முகத்த தியேட்டர்ல அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க முடியல. ஹீரோயினயாவது கொஞ்சம் கமர்ஷியலா காமிச்சிருக்கலாம், அவங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க. அதனால, அதுவும் தேறலை. அவங்க டான்ஸராமா, சங்கமம் விந்தியா கிட்ட கத்துகிட்டாங்கன்னு நினைக்கறேன். இடைவேளைக்கு அப்பறம், நாங்களாகவே சில சீனுக்கு கை தட்டி, சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, "சூப்பரப்பு" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். காமெடி track இருந்ததா வெளிய பேசிக்கறாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியல.

கிளைமாக்ஸ்ல, ஹீரோ சண்டை போடுறப்போ, எனக்கு பசங்க படம் டயலாக் ஞாபகத்துல வர, நானே சத்தமா "அய்யய்யோ, மாசி கைய முறிக்கிட்டானே, அவனுக்கு கோவம் வந்துருச்சே, இப்ப பல்லக் கடிப்பான் பாரு"னு சத்தமா கமெண்ட் விட்டேன். அந்த ஹீரோவும் அதே மாதிரி செய்யறாரு. ஷப்பா, முடியல. 2.5 மணி நேரம், மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கி வீட்டுக்கு வந்தோம். படம் நல்லா இல்லைன்னு அவங்களுக்கே தெரியும் போல. அதனாலேயே படத்துல அவங்களே "சூப்பரூ"அப்படின்னு ஒரு பாட்டு பாடிக்கறாங்க. சன் டிவிக்கு மட்டும் மற்றொமொரு வெற்றிப் படம். எங்களுக்கு வழக்கம் போல, ஒரு நாள் தூக்கம் + 100 ரூவா காலி. எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் பார்க்கராணுங்கடா, இவனுங்க ரொம்ப நல்லவங்கனு நீங்க சொல்றது எனக்கு காதுல விழுது. என்ன செய்ய.

மீண்டும், மீண்டு வந்து, அடுத்து ஒரு படத்த பார்த்து, பதிவறேன். வர்ட்டா....


அய்யயோ, ஸாரி, ஸ்டில் மாறிடிச்சு. விடுங்க, எல்லாம் ஒண்ணுதான்.

Saturday, June 20, 2009

Tag எடுக்கலியோ Tagu...

நம்ம வாணி மேடம் ஒரு tag அனுப்பிருக்காங்க. Full பீட்டர். நமக்கும் லைட்டா பீட்டர் விட தெரியும்னு இத மாதிரி சமயங்கள்ல தான் comicalaa காமிக்க முடியும். எனவே, இதோ அந்த பெ.................................ரி........................ய்....................ய.................tag.
(சில கேள்விகளுக்கு மட்டும், என்னோட ஆதங்கம்/mindvoice/comments include பண்ணிருக்கேன். கண்டுக்காதீங்க)

Q: When you looked at yourself in the mirror today, what was the first thing you thought?
A:must have a shave asap
(மத்தபடி எப்பவும் பீல் பண்றா மாதிரி, இதெல்லாம் ஒரு மூஞ்சு and so on self sympathy dialogues)

Q: How much cash do you have in your wallet right now?
A:122rs

Q: What’s a word that rhymes with DOOR?
A: more

Q: What is your favorite ring tone on your phone?
A: sax prelude in "Vaan Nilaa" song from Kadhal virus

Q: Who is the 4th person on your missed call list on your cell phone?
A: My அம்மா (!!!!)

Q: What are you wearing right now?
A: trousers and vest

Q: Do you label yourself?
A: NO

Q: Name the brand of the shoes you’re currently own?
A:No shoes

Q: Bright or Dark Room?
A:Me sitting brightly in Dark room

Q: What do you think about the person who took this survey before you?

A:Good blogger. Nice narration. the wordpress template sucks though.

Q: What does your watch look like?
A:no watch (என் கை sizekku watch போட்டா, watchla கை போட்டா மாதிரி இருக்கும்)

Q: What were you doing at midnight last night?
A: Playing SIMS3

Q: What did your last text message you received on your cell say?
A: YA

Q: What’s a word that you say a lot?
A: dunno- dont tak this dunno as the word i say a lot. i really dunno.

Q: Who told you he/she loved you last? (Please exclude spouse , family, children)
A: NONE so far (ஆமாம், இது வேற)

Q: Last furry thing you touched?
A: my hair?? (come under furry???)

Q: Favorite age you have been so far?
A:from 5-18

Q: What was the last thing you said to someone?
A:match பாக்கல??? (to my அண்ணா)

Q: The last song you listened to?
A: "உன் மேல ஆசதான்" frm ஆயிரத்தில் ஒருவன்

Q: Where did you live in 1987?
A: hospital and home, cause born on last month of the year. so have to tak hospital in to acc.

Q: Are you jealous of anyone?
A: LOT

Q: Is anyone jealous of you?
A: சத்தியமா இல்லை

Q: Name three things that you have on you at all times?
A:Mobile, mobile cover, bike key

Q: What’s your favorite town/city?
A: Madras

Q: When was the last time you wrote a letter to someone on paper and mailed it?
A: I think some 6years back, reply to a akka met in a camp.

Q: Can you change the oil on a car?
A: car???

Q: Your first love/big crush: what is the last thing you heard about him/her?
A: let me know her name first...

Q: Does anything hurt on your body right now?
A: none but sore throat and cold disturbs...

Q: What is your current desktop picture?
A: Aqueduct in Segovia, Spain (wiki wallpaper)

Q: Have you been burnt by love?
A: ஏன் இப்படி வயத்தெரிச்சல கெளப்பறீங்க.
No Love, No failure....

Now iam passing this to Swathi, My Kid Brother and Poorna...
Thanks to Vani for Passing the tag :)

Monday, June 15, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -1

நம்ம சிகாமணிக்கு, தமிழ் சினிமான்னாலே aversion. நல்ல கதையம்சம் இருக்குற படம் வருதேன்னு சொன்னா கூட, "என்ன நூத்துல ஒரு படம். அதாவது, நூறு shit வந்தா, ஒரு Hit" அவ்வளவுதான்னு சொல்லுவான். அதுவும் நம்மூரு படத்துல வர காதல் காட்சிகள்னா, அவன் வாய்லேர்ந்து கலர் கலரா கெட்ட வார்த்தைகள் வரும். "*#@!த பாட்டா எழுதறானுங்க, எழுதுற lyrics எல்லாம் !@#று மாதிரி இருக்கு. மேட்டர் படத்துல எல்லாத்தையும் காமிக்கரானுங்க, ஆனா இவனுங்க எழுதுறது அத விட வக்கிரமா யோசிக்க வைக்கும்"னு பொங்கி எழுந்துருவான்.

ஒரு நாள், வழக்கம் போல இத மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தவன நிறுத்தி "நீ எவ்வளவு சொன்னாலும், இத மாதிரி சின்னபுள்ளத்தனமான படம் எடுக்கவும் கொஞ்சம் அறிவு வேணும். எங்க, உன்னால முடியுமா?? நீ விமர்சனம் மட்டும்தான் பண்ண லாயக்கு"னு சொன்னேன். "ஆமாம், பெரிய அறிவு. மண்டைல மசாலான்னு சொன்னத உன் directors எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு, ஒரே மொக்க மசாலா படமா தள்ளிகிட்டு இருக்காங்க. நான் அவங்கள விட மோசமா யோசிச்சு ஒரு கதை சொல்லட்டா??"னு கேட்க, நான் சரின்னு சொன்னேன் ... அவன் ஆரம்பிச்சான்...

"அதாவது, இது ஒரு மசாலா படத்துக்கான கதை. படத்தோட ஹீரோ பேரு சைதாபேட்டை, படத்தோட பேரும் சைதாபேட்டை. நம்ம, ஹீரோ, கலைஞர் ஆர்ச் பக்கத்துல டீ கடை வெச்சிருக்காரு.மொத சீனே மோதலோட ஆரம்பிக்குது ரொம்ப நாளா கடன் சொல்லி டீ குடிக்கிற, அந்த பேட்டை தாதா ஆளுங்கள அடிச்சு வெரட்டுராறு. கேள்வி கேட்க வந்த தாதாவையும் பின்னி பெடலேடுக்குராறு. அடிச்சு முடிசித்ட், "டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"னு மொக்கையா பன்ச் dialogue விட்டு,

//சைதாபேட்டை சைதாபேட்டை சைதாபேட்டை,
ஒரு ஆத்து ஆத்துனா, நீ கண்ணம்மாபேட்டை//னு intro சாங் பாடுரார்.

ஒரு நாள் அந்த பக்கமா வர நம்ம ஹீரோயின், ஹீரோ டீ ஆத்துற ஸ்டைல பார்த்து மயங்கி, ஊட்டில போய், "டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க. இவங்க கருமம் புடிச்ச லவ்வு, கன்னாபின்னான்னு develop ஆவுது. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ, அந்த ஏரியா counsilor மாதிரி, ஏரியா பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைக்கறார். அதே சமயத்துல, லவ்வே புடிக்காத ஹீரோயினோட அண்ணன், ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். இதுல பெரிய ஹீரோ யாரவது நடிச்சாக்கா, அவங்களுக்கு ஏத்த மாதிரி,
"மழைல மனுஷன்தான் நனைவான், புயல் நனையாது"னு பன்ச் டயலாக் எதையாவதோ சேர்த்துக்கலாம். எப்பூடி????"

சொல்லி முடிச்ச சிகாமாணிய ஏற இறங்க பாத்துட்டு, "நீ தமிழ் சினிமாவால இவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன்னு தெரியாம போச்சுடா. இந்த ஒரு கதை தான் யோசிச்சியா, இல்லை இன்னும் இருக்கா??"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஆமாம் இதுக்கெல்லாம் உட்கார்ந்து யோசிக்கறாங்க, இன்னொரு கதை சொல்றேன் கேட்கறியா"னு ஆரம்பிச்சான். அந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான கதைய எப்படிதான் யோசிச்சானோன்னு இருக்கு........

......will continue