Friday, December 31, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2010

போன வருஷங்கள்ல நான் எழுதின எண்ணிப்பார்த்தேன் பதிவுகளுக்கு மக்கள் கொடுத்த  அமோக (!!!!) வரவேற்ப்பை முன்னிட்டு. இந்த வருஷக் கடைசியிலும் வழக்கம் போல, 2010ல் எனக்கு பிடிச்ச, படங்கள் + பாடல்கள் பற்றிய ஒரு பதிவு... இந்தப் படங்கள் பிடிக்க பெரிய காரணங்கள் என்ன இருந்திடப் போகுது. அதனால, ரொம்ப நீட்டி முழக்காம, பெயர்களையும், சில படங்களுக்கு நான் எழுதின விமர்சனங்களோட லிங்கையும் கொடுத்திருக்கேன்.

பிடித்த படங்கள்
  • ஆயிரத்தில் ஒருவன்
    நிறைய பேர் வறுத்தெடுத்தாலும், இந்தப் படம் நல்ல அனுபவம். ரசிகர்கள்னு பொதுவா சொல்ல முடியல, ஆனா படத்துக்கான மனநிலைய எனக்கு சரியா செட் பண்ணிச்சு... விமர்சனம் --> இங்க முதல் பத்தியில.
  • கோவா
    மறுபடியும், ஊர் ஆயிரம் சொன்னாலும், எனக்கும், என் நண்பர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம். செம்ம கலாட்டா... விமர்சனம் --> இங்க
  • விண்ணைதாண்டி வருவாயா
    மூணு தடவை தியேட்டர்லையே பாத்தேன். இதுக்கு மேல எதாவது சொல்லணுமா?? சிம்பு பேர், கார்த்திக்னு இருந்தது முக்கியமான காரணம்...
  • சிங்கம்
    இந்த வருஷத்தோட சிறந்த மாஸ்னு சொல்லலாம். எந்திரனைவிட செம்ம மாஸ்.
  • பாஸ் என்கிற பாஸ்கரன்
    நோ நான்சென்ஸ் படம்னு சொல்லலாம். ரொம்ப light-hearted, feel good படம். விமர்சனம் -->இங்க ஆறாவது பத்தியில ரெண்டே லைன்..
  • எந்திரன்
    தலைவரோட மேஹ்........ ப்ளாக் ஷீப் சீனுக்காகவே ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன். இன்னொருமுறை பார்க்கலாமான்னு யோசிக்கறேன். ஷங்கர் என்கிற ஒற்றை ஆளோட சாதனை. மேக்கிங் பார்த்த அப்பறம், இன்னமும் பிடிச்சுது... விமர்சனம் --> இங்க
உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
  • இன்ஸெப்ஷன்
    (இதை பத்தி நான் எழுத்திய சில உரைநடை விளக்கப் பதிவுகள்
    இங்க --> ஒண்ணு - இன்னொன்னு - இன்ன்ன்னொன்னு - கடைசியா ஒண்ணு)
  • ஹாரி பாட்டர் 7
    நான் பாட்டர் fan. அதை விட எம்மா வாட்ஸன் fan. இதுக்கு மேலையுமா காரணங்கள் தேவை??
  • UnStoppable
    படம் நல்லா விறு விறுனு இருக்குனு சொல்லுவாங்களே. அப்படி இருந்துச்சு...
  • டாய் ஸ்டோரி 3 - விமர்சனம் --> இங்க
  • ஷட்டர் ஐலாண்ட்
  • கராதே கிட்
  • How to Train your Dragon
  • Kick - Ass
  • Easy A .. விமர்சனம் --> இங்க  ரெண்டாவது பத்தி
  • The Social Network.. விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தி
மொக்கை கொடுத்த/வாங்கிய படங்கள்
  • தமிழ் படம் - விமர்சனம் ---> இங்க மூணாவது பத்தியில.
  • கச்சேரி ஆரம்பம் - விமர்சனம் --> இங்க
  • பையா - விமர்சனம் --> இங்க
  • ராவணன் - விமர்சனம் --> இங்க
  • இனிது இனிது
    ஒரிஜினல்ல இருந்த எளிமை, இதுல இல்லாதது பெரிய குறை. பெருசா ஒன்றமுடியலை.
  • நந்தலாலா
    மிஷ்கினின் திமிருக்கும், கர்வத்துக்கும் கிடைச்ச சரியான் அடி. ரொம்ப ஸ்லோ.
    நான் பெரிய அறிவாளி இல்லை. அதனால் கூட இந்தப் படம் பிடிக்காம இருந்திருக்கலாம்...
  • ரத்த சரித்திரம்
    ரத்தம் மட்டும்தான் இருந்தது.. சரித்தரம் ஒண்ணுத்தையும் காணோம்.
  • ஈசன் - விமர்சனம் --> இங்க  முதல் பத்தியில
  • Owl - Guardian - விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தியில
  • அவதார்
    மொக்கை வியட்னாம் காலனி கதைய, ரீ மாடல் பண்ணி கொடுத்து ஊரை ஏமாத்திட்டாங்க். டெக்னிகலா நிஜமாவே மிரட்டலான படம். ஆனா கதை திரைக்கதையெல்லாம் அப்படியே ஒரு மொக்கை தமிழ் படம் மாதிரி இருந்த்து எனக்கு பெரிய disappointment.
  • மன்மதன் அம்பு - விமர்சனம் ----> இங்க கடைசி பத்தியில
ரசித்த பாடல்கள்
கொஞ்சம் பெரிய லிஸ்டு. ஓவரா வர்ணிக்காம பெயர்களை மட்டும் எழுதறேன்...
  • ஆரோமலே (கலெக்டர்ஸ் எடிஷன்ல இருக்கற ஸ்ரேயா கோஷல் வெர்ஷனும் சேர்த்து) - விண்ணைத்தாண்டி வருவாயா
  •  ஹே துஷ்யந்தா - அசல்
  • இது வரை -கோவா
  •  என் காதல் சொல்ல - பையா
  • தாக்குதே - பாணா காத்தாடி
  • அடடா மழைடா - பையா
  • அம்மா தல்லே - புலி (தெலுங்கு)
  • பெஹெனே தே - ராவண் (இந்தி)
  • கிளிமஞ்சாரோ - எந்திரன்
  • ஊத்து தண்ணி - மகிழ்ச்சி
  • உன்னை கண் தேடுதே - வ கு.க
  • அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
  • இமைத்தூதனே - இளைஞன்
  • நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
  • Love the Way you Lie - Eminem ft Rihaana - Recovery
விட்டுப்போனவை
  • என் நெஞ்சில் - பாணா காத்தாடி
  • ஏழேழு தலைமுறைக்கும் - கோவா
  • சிரிக்கிறேன் - பலே பாண்டியா
  • Dhochey, பவர் ஸ்டார் - புலி (தெலுங்கு)
  • அரிமா அரிமா - எந்திரன் - அருமையான picturization.
  • உச்சுக் கொட்ட - மகிழ்ச்சி
  • உஸ்ஸுமலரசே - உத்தம்புத்திரன்
  • காதல் வந்தாலே - சிங்கம்
  • தகிடுதத்தோம் - மன்மதன் அம்பு
  • தோழா வானம் - இளைஞன்
  • நாங்கை - எங்கேயும் காதல்
பொதுவா நான் சிறந்த படம், பாட்டுனு அவார்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, இந்த வருஷம் கொடுக்கலாமோன்னு தோணுது... அதனால,
என்னை பொறுத்த வரைக்கும், இந்த வருஷத்தோட
சிறந்த பாடல் கோவா படத்துல வர இது வரை,
சிறந்த படம் - விண்ணைத்தாண்டி வருவாயா...
சிறந்த இசையமைப்பாளர் - யுவன்








எல்லாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Thursday, December 30, 2010

மற்றும் பல (30/12/2010)

கடைசி ரெண்டு மூணு வாரத்துல, நிறைய சினிமா ஆட்களைப் பார்த்துட்டேன். கிடைக்கற சாக்குல ஃபோட்டோவும் எடுத்து, சும்மா ஸீனுக்கு ஃபேஸ்புக்கல போடறேன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல வரவேற்பு...
 ------------------------------------------------------------------------------------------------------------------
மன்மதன் அம்பின் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க மாட்டேன்னு அறிவிச்ச அன்னைக்கு சாயங்காலமே நீக்கப்படும்னு அறிவிச்சது செம்ம காமெடி. கமலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ரசிகர்களும், அடுத்த எலெக்‌ஷன்ல திமுகவுக்கு ஓட்டு போடற ஆட்களும் ஒரே மாதிரிதான். இவங்க ரெண்டு பேருக்குமே என்ன சொன்னாலும் புரியாது, உரைக்காது. அதனால, இப்படிப்பட்ட ஆட்களோட விவாதத்துல இறங்காதீங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
 இப்பவே சிறந்த படத்துக்கான ஆஸ்கார் எந்தப் படத்துக்குப் போகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்துல வந்த ப்ளாக் ஸ்வான் அப்படிங்கற படத்துக்கும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. எனக்கென்னமோ இன்செப்ஷன் படத்துக்கு கொடுக்கலாம்னு தோணுது. ஏற்கனவே இருக்கறத வெச்சி ஒண்ணும் பண்ணாம, புதுசா ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை சிக்கலாக்கி, மக்களுக்கு புரியறாமாதிரி தந்து, அவங்களை யோசிக்கவும் வெச்ச படம் இது. வேற என்ன தகுதி எதிர்பார்க்கறாங்கன்னு தெரியலை. ஆஸ்கார் கமிட்டிக்கும், இயக்குனர் நோலனுக்கும் ஆகாதுன்னு வேற பேசிக்கறாங்க. ம்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் சங்க விழா ஒண்ணு வெச்சாங்க. மொக்கையா டான்ஸ், பாட்டுனு போய்கிட்டு இருந்த விழாவுல, அப்பப்போ யாராவது வந்து கலகலப்பாக்குனாங்க. ஆனா, ராஜாவும், பாராதிராஜாவும் பேசினது, சகிக்கலை. ராஜா இன்னும் ஒரு குழந்தை மாதிரியே சண்டை போடுறத பார்க்கும்போது மகேந்திரன் சார் சொன்னது தான் ஞாபகம் வருது. பாரதிராஜாவும் சளைக்காம சண்டை போட்டாரு. ரெண்டு பெரிய மனுஷங்க இப்படி பண்ணது, நல்லாவே இல்லை. அதே நேரத்துல, யுவன், வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன் மேடைல ஜாலியா பேசிகிட்டதைப் பார்க்க நல்லா இருந்த்துச்சு. Little Girls are wiser than men அப்படிங்கற கதையும் ஞாபகம் வந்துது. கடைசி வரைக்கும் ரஜினி இண்டர்வியூவை போடாம ஏமாத்திட்டாங்க. :(
------------------------------------------------------------------------------------------------------------------
புதுசா ஆரம்பிச்சிருக்கற தேவியின் டால்பி 3டி, டிக்கெட் காசு போக 30ஓவாயும் கண்ணாடிக்கு கொடுக்கணுமாம். அங்க எந்த 3டி படமும் பார்க்க வேணாம்னு இருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்னியின் Tangled படம், இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகும்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா மாதிரியே, சீரியலும் எடுத்தா நல்லா இருக்கும்னு பல காலமா சொல்லிகிட்டு இருக்கேன். அதுவும் பிலிம்ல எடுத்து, அதே தரத்துல கொடுத்தா கண்டிப்பா வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். நான் நினைச்சதை, இயக்குனர் கவுதம் மேனன் பண்ணப்போறாரு. சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டிலதான் இத சொன்னாரு. அவருடைய ஃபோட்டான் கதாஸ் நிறுவனமே தயாரிக்கற இந்த டி வி சீரிஸ், ஏ ஆர் ரகுமானின் இசைல இருக்கப்போகுது. இன்னும் எந்த சேனல்னு முடிவு பண்ணலியாம். CSI, Friends ரேஞ்சுல, தமிழ்ல ஒரு சீரியல்னு நினைக்கவே நல்லா இருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சேர்ந்து  http://sa-pa-sa.blogspot.com/ அப்படின்னு, ஒரு இசை சம்பந்தப்பட்ட blog ஆரம்பிச்சிருக்கோம். படிச்சுப் பாருங்க..

Wednesday, December 29, 2010

நாலு படம் - நாலு பத்தி

இந்த மாதம் பார்த்த நான்கு படங்களைப் பற்றிய என் எண்ணங்கள்...

ஈசன்
எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பார்த்த பிறகு நினைத்தேன். சுப்ரமணியபுரம் பார்க்கும்போதும், கிளைமாக்ஸ் வரை, என்ன ஒரே வெட்டு குத்து, என சலித்துக்கொண்டேன். கிளைமாக்ஸ் உண்மையாகவே அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படத்திலும் அப்படி எதாவது இருக்குமென, ஐந்து வயது குழந்தைகூட யூகிக்க்கூடிய வகையில் அமைந்திருந்த கதையை, பார்த்துக் காத்திருந்தேன். கடைசி வரை ஒன்றும் வரவில்லை. பழிவாங்கும் ஆள் மட்டும் புதுசே தவிர, காரணங்கள் எல்லாம் ஒன்று தான். ஒரு சில வசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், (எனக்கு) ஏமாற்றமே.

Easy A
தன இமேஜை காப்பாற்றிக்கொள்ள, ஹீரோயினி, தான் ஒருவனோடு டேட்டிங் போனதாக தன நண்பியிடம் சொல்ல, அதை ஒட்டுக் கேட்கும் இன்னொரு பெண், பள்ளி முழுவதும் அதைப் பற்றி பரப்ப, பிறகு தனது gay நண்பனின் இமேஜைக் காப்பாற்ற, ஒரு பார்டியில், மூடிய கதவிற்கு அந்தப்பக்கம், அவனோட செக்ஸ் வைத்துக்கொளவது போல் பாவனை செய்ய (பாய்ஸ்), இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அத்தனை பையன்களும், இவளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாய், சிலர் இவளின் ஒப்புதலுடனும், சிலர் பொய்யும் சொல்ல ஆரம்பிக்க, இவளின் இமேஜ் என்னவாகிறது என்பதை, நிறைய நகைச்சுவை, கொஞ்சம் செண்டிமெண்ட் + கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினி எம்மா ஸ்டோனின் தெளிவான நடிப்பு, படத்தைக் காப்பாற்றுகிறது. நல்ல பொழுதுபோக்கு.

The Social Network
இந்தப் படம், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பெர்கின் கதை என சொல்லப்படுகிறது. ஸுக்கர்பெர்கின் ஒன்றிரண்டு பேட்டிகளைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. ஆரம்பம் முதல், முடிவு வரை, படம் எந்த விதத் தோய்வும் இன்றிச் செல்கிறது. பைட் கிளப் இயக்குனர் ஃபிஞ்சரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நடித்த அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாய் ஹீரோ ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், கிட்டத்தட்ட அப்படியே ஸுக்கர்பெர்கின் உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் கார்பீல்டும் நன்றாகவே நடித்திருந்தார்கள். அருமையான திரைக்கதை, வசனங்கள். (ஸப்டைடில்ஸாய நமஹ:) நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மன்மதன் சொம்பு
உலகநாயகன், கலைஞானியின் படைப்பை விமர்சனம் செய்யும் அளவு எனக்குத் தகுதியிருக்கிறதா எனத்தெரியவில்லை. அதனால், எதுவும் சொல்வதற்கில்லை..
என்ன சார், ஃபர்ஸ்ட் காபி பார்த்தே உஷார் ஆகிட்டீங்க போல??

Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..

    

Monday, December 13, 2010

PLAYLIST - November

ரொம்ப நாளைக்கு பொறவு, மறுபடியும் களத்துல நம்ம வழக்கமான ப்ளேலிஸ்டோட குதிக்கறேன்...

இந்த டாப் டென்ல எல்லாம் சொல்றா மாதிரி, எதாவது சொல்லி ஆரம்பிக்க்லாம்னு பாக்கறேன். ஒண்ணும் மாட்ட மாட்டேங்குது. :(.. சரி சரி... ரொம்ப வருத்தப்படாம, ப்ளேலிஸ்டை பார்ப்போம்....
-->இங்க<-- கொடுத்துருக்கற பாடல்கள்ல, வ படத்தோட உன்னைக் கண் தேடுதே, உத்தமபுத்திரனின் (காபியான) உஸ்ஸுமுலரஸே, மகிழ்ச்சியில் ஊத்துத் தண்ணி ஆகிய பாடல்கள் இப்பவும் இடம் பிடிக்குது.. புதுசா லிஸ்டுக்கு வர பாடல்கள்,

விண்ணைத்தாண்டி வருவாயா - இந்த படத்தோட collectors edition பாடல்கள் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இதுல, எக்ஸ்ட்ரா ரெண்டு பாட்டு இருக்கு. Jessie's Landனு ஒரு பாடல். ரொம்ப சுமாரா இருக்கு. ஆனா மற்றொரு பாடலான, ஆரோமலே sad, முதல்ல இருக்கற ஆரோமலேவ விட நல்லா இருக்கு. ஷ்ரேயா கோஷல் வழக்கம் போல நல்லா பாடிருக்காங்க. படத்துல்லையும் இது, அங்க அங்க பிண்ணனில வரும். Great Rendition. 
  
ஆடுகளம் - வழக்கம் போல, எல்லாருக்கும் பிடித்த யாத்தே யாத்தே என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை, ஆனா அய்யயோ பாடல் மட்டுமே இந்த படத்துக்கு போதும். இந்த மாதிரி எஸ்.பி.பி பாடி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. மனுசன் இந்த வயசுலையும் இன்னாமா பாடுறாரு. பாட்டு மொத்தமும் ஒரு மாதிரி சிரிச்சிகிட்டே பாடி,  பின்னி பெடலெடுக்கறாரு. ஜி.வி இப்படி ஒரு நல்ல பாட்டு கொடுப்பாருன்னு எதிர்பார்க்கலை. பாட்டோட beat இஞ்சி இடுப்பழகி பாடலை ஞாபகப்படுத்தினாலும், கண்டிப்பா இந்த வருஷத்துல ஒரு ஹிட் பாடல்.

மன்மதன் அம்பு - தேவிஸ்ரீபிராசத்தின் வழக்கமான இசை. போர். தகிடுதத்தோம் பாடல் கொஞ்சம் பரவாயில்லை.

இளைஞன் - படத்தோட ஹீரோவா இருந்து, பாடல்களும் எழுதிருக்கற பா.விஜய் (பேரை சேர்த்துபடிக்காதீங்க) சொன்னாரு, அவருக்கு பிடிச்சது இமைத்தூதனே அப்படின்னு ஒரு பாட்டாம். வித்யாசாகர், நிஜமாவே வித்தியாச சாகரா மாறி, மேற்கத்திய இசைல ஒரு தமிழ் மெலடி கொடுத்திருக்காரு. சின்மயி பாடிருக்காங்க. choir  எல்லாம் வெச்சு, ரொம்ப grand ah இருக்கு பாட்டு. அதே சமயத்துல இரைச்சலா இல்லாம, ரொம்ப இனிமையான பாட்டு. படத்துல மத்த பாடல்களும் இதே ஸ்டைல்ல, நல்லா இருந்தாலும், இது என்னோட pick.

எங்கேயும் காதல் - நாங்கை - வரிகள் ஒரு எழவும் புரியலைன்னாலும், நம்க்கு இயல்புலையே துள்ளலிசை பாடல்கள் மேல ஒரு ஈர்ப்பு இருக்கர்தால, அப்படியே ஒட்டிகிச்சு. அதுவும் மைக்கல் ஜாக்ஸனோட பாடலின் beat loopஐ அப்படியே உருவி, ஹாரிஸ், வேற டியூன் போட்டு கொடுத்திருக்காரு. ஆனாலும் நல்ல ஜாலியா இருக்கு. சரணம் முடியர இடத்துல வர குத்து ஸடைல், நல்ல ஐடியா..
நெஞ்சில் நெஞ்சில் -  ரொம்ப நாளக்கப்பறம் சூப்பர் சாருகேசி ராக சினிமா பாட்டு. ஒரு semi-classical பாட்டுன்னே சொல்லலாம். அதுவும், பல்லவி நடுவுல மிருதங்கம் சேருதே, செம்ம இடம். பாட்டு முழுக்கவே நல்ல கட்டமைப்பு.
படங்களோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்...

p.s. 1. சமீபத்துல கூட, மதராசபட்டினம் படத்துல, ஜி.வி ஒரு சாருகேசி ட்ரை பண்ணிருந்தாரு (ஆருயிரே), அதுவும் ரஹ்மானை காப்பியடிச்சு (ஏதோ ஏதோ ஒன்று). சல்பெடுக்கலை (ரெண்டும்)...

p.s.2. சாருகேசி ராகத்துல, உங்களுக்கும் தெரிஞ்ச, எனக்கும் பிடித்த சில பாடல்கள்

வாத்தியார் வீட்டு பிள்ளை - மணமாலையும் மஞ்சளும்
உதயா - உதயா உதயா
ஹரிதாஸ் - மன்மத லீலையை வென்றார்
ஸ்ரீ ராகவேந்திரா - ஆடல் கலையே
திருட்டு பயலே - தையத்தா
சிங்காரவேலன் - தூது செல்வதாரடி..
ரைட்டு, இப்போத்தைக்கு அப்பீட்டு.... டாடா...
விருதகிரி வாழ்க...

Wednesday, November 17, 2010

PLAYLIST - September, October

வழக்கம் போல, போன ப்ளேலிஸ்ட் மாதிரியே, இந்த லிஸ்ட்டும் லேட்டாகிடுச்சு. தப்பா நெனச்சிக்காமா, பதிவ படிச்சிட்டு, பாட்டை கேட்டுட்டு, கமெண்ட்டும் போட்ருங்க.

போன முறை, எந்திரன், புலி, மகிழ்ச்சி, பாஸ் மற்றும் வ படத்தோட பாடல்கள் இடம் பெற்ற ப்ளேலிஸ்ட்ல, இப்போ அதுலேர்ந்து சில பாடல்கள்தான் இந்த முறை.

ஊத்து தண்ணி + உச்சு கொட்ட - மகிழ்ச்சி. முதல் பாட்டை விட, ரெண்டாவது மெலடி பாடல் நல்லா இருக்கறா மாதிரி இருந்தாலும், ரெண்டுமே எனக்கு புடிச்சிருக்கு.

படத்துல, சார்ப்பு சார்ர்ப்பு ஜி பாடலை தப்பான இடத்துல வெச்சதோட மட்டுமில்லாம, picturisation சொதப்பிட்டாங்க. பாட்டு கேட்கற மூடே போயிருச்சு. அதானால, அந்த படத்துலேர்ந்து தப்பிச்ச ஒரே பாடல், உன்னை கண் தேடுதே. (சவுதி பாஷா பாடல்ல வர நடனம் கொஞ்சம் கிளுகிளுப்பா இருந்தாலும், நம்ம லிஸ்டுக்கு தேவையான மசாலா இல்ல)

பாஸ் படத்தின் "யாரிந்த பெண்" பாடல அடிக்கடி ரேடியோல கேட்கறேன். ஒரு சேனல் மாத்தி அடுத்த சேனலுக்கு போனாலும் அதே பாடல். நிஜமாவே அடிக்கு அடி. எனக்கு அவ்வளவா புடிக்கலை. தத்தித்தாவும் பாடல், போன லிஸ்ட்டுல இருந்தாலும், இந்த மாசம் வரைக்கும் தாக்கு புடிக்கல.                       

மந்திரப் புன்னகை
படப் பாடல்களை முழுசாவே கேட்க நேரம் வரலை. எதாவது ஒண்ணு வந்து distract பண்ணுது. இருந்தாலும், கிடைச்ச நேரத்துல கேட்ட "தண்ணி போட வாப்பா" சுமாரா இருந்துச்சு. ஒரு மாதிரி மெதுவான குத்து பாடல்னு சொல்லலாம். பாடகர் கார்த்திக்கோட குரல், ரொம்ப ஒழுங்கா இருக்கறதால, இந்த மாதிரி சில பாடல்களுக்கு, அவர் குரல் செட் ஆகலை. என்ன நான் சொல்றது.

உத்தம புத்திரன் படத்துல வர "உஸ்ஸுமுலரசே" கேட்க நல்லா ஜாலியா இருக்கு. வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்டைல்ல, அவரோட குரல்ல, திணிக்கப்பட்ட, விசித்திரமான உளறல் வார்த்தைகளோட, நல்ல குத்து பாட்டு. என்னடா இவர் திடீர்னு ஒரு நல்ல மாஸ் பாட்டு குடுத்துருக்காறேன்னு பாத்தா, பய புள்ள, hangover படத்துல வர ஒரு பாட்ட சுட்டு, புரட்டி போட்டு குடுத்திருக்கு. (கொஞ்சம் சிங்கம் படத்தோட "காதல் வந்தாலே பாடலோட rap மாதிரியும் இருக்கு) மூணு பாட்டோட சாம்பில்களும், கீழ.

உஸ்ஸுமுலரசே


You Spin My Head



சிங்கம்


சிக்கு புக்கு பட பாடல்கள் எதுவும் கேட்க சகிக்கலை. ஒரு வேளை படம் வந்த அப்பறம், பாடல்கள் புடிக்கலாம்.

சமீபத்துல வந்த எங்கேயும் காதல், ஆடுகளம் +  விண்ணைத்தாண்டி வருவாயா கலெக்டர்ஸ் எடிஷன் பாடல்கள், நவம்பர் மாச ப்ளேலிஸ்ட்ல வரும்.

பொறுமையோடு இருக்கும் உள்ளங்களுக்கு என் நன்றி.
படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Friday, October 22, 2010

இவங்க பண்ற காமெடிக்கு.....

எங்களுக்கு ஜர்னலிசம் சொல்லி கொடுக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் சொன்னாங்க. தமிழ்நாட்ல, ரஜினி, கருணாநிதி அண்ட் ஜெயலலிதா, இவங்க எது பண்ணாலும் அது முக்கியமான நியூஸ். இதுல முக்கியமா நம்ம சூப்பர் ஸ்டார், முக்கினா முனகினா, எது பண்ணாலும் நியூஸ். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரஜினி எப்பவுமே விளம்பரங்கள் பின்னாடி ஓடினது இல்லை. அவர் பின்னாடிதான் எல்லா விளம்பரங்களுமே. சென்னைல, NDTV ஹிந்து அப்படின்னு ஒரு சுமாரான நியூஸ் சானல் வந்துகிட்டு இருக்கு. நடுவுல, ஹாண்ட்ஸ் அப் அப்படீங்கற ப்ரோக்ராம்ல, வெங்கட் பிரபு + தமிழ் பட டைரக்டர் + இந்த சானல், எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி பரபரப்பு க்ரியேட் பண்ணாங்க.அப்போதான் நிறையே பேருக்கு இந்த சேனலைப் பத்தி தெரிய வந்துச்சு.

இதே சேனல்ல, சென்னை ஸ்பீக்ஸ் அவுட் அப்படின்னு தரை மொக்கையா ஒரு விவாத நிகழ்ச்சி போய்கிட்டு இருக்கு. போன வாரத்துல ரஜினிய  வெச்சி ஏதொ டாபிக். நிறைய பேர் அதைப் பத்தி சொன்னதால, யூ டியூப்ல பார்த்தேன். ஞானி + சுதாங்கன் ரஜினிக்கு எதிராகவும், சின்மயி + ஸ்ரீதர் பிள்ளை ஆதரவாகவும் பேசினாங்க. உளறினாங்கனு சொல்றதுதான் கரெக்டா இருக்கும். எந்த சைடும் ஒழுங்கா பேசாம, ஒரே மேலோட்டமான விவாதமாவே இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த பதிவு எதுக்குன்னா, தயவு செஞ்சு இந்த மாதிரி மொக்கை ப்ரோக்ராமை என்கரேஜ் பண்ணாதீங்க.

இதோ அந்த ரஜினி விவாதம் எபிசொட்....











ஞானி + சுதாங்கன் ரெண்டு பேருக்கும் நல்லாவே வயசாகிடுச்சுன்னு நினைக்கறேன்... இதுல சுதாங்கன் வேற தப்பு தப்பா ஸ்டாடிஸ்டிக்ஸ் கொடுக்கறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சின்மயி அவங்க ட்விட்டர் பக்கத்துல, "ரஜினிக்கு ஆதரவா பேச நாங்க இருந்தோம், எதிர்த்து பேசதான் ஆள் இல்லை. அதனாலதான் சுதாங்கன்னும் ஞானியும் பேசினாங்க. அவங்க ரெண்டு பேருமே ரஜினி ரசிகர்கள் தான். ஆள் இல்லாததால, அவங்க பேசினா பிரச்னை வராதுன்னு நினைச்சதால, அவங்கள பேச வெச்சாங்க"ன்னு சொல்லிருக்காங்க.. யார் இன்னா சொன்னான் என்ன, தூற்றுவார் தூற்றட்டும். கீழ இருக்கற படங்களைப் பாருங்க. ஒரு மெகா ஹிட்டு படம் கொடுத்த மனுஷன் மாதிரியா இவர் இருக்கறாரு...???

 
 

Saturday, October 9, 2010

தெய்வ குத்தம்

ஊரே எந்திரனப் பத்தி பரபரப்பா பேசிகிட்டிருக்கும்போது, நானும் எதாவது பதியலன்னா தெய்வ குத்தமாகிடும்னு நண்பர்கள் எல்லாம் கவலை படறாங்க. சரி எதாவது எழுதி வெப்போம்னு, இதோ, ஆரம்பிச்சிட்டேன். ஒரே பத்தில முடிச்சிடறேன். கவலை படாதீங்க.

படம் ஆஹா ஓஹோனு இல்லை. ஆனா நல்லாயிருக்கு. அதுவும் வில்லன் ரோபோ ரஜினிதான் படத்துக்கு பெரிய பலம் (அந்த கருப்பு ஆடு சீன், ரஜினி மட்டுமே செய்யக்கூடிய சீன்) . செலவழிச்ச காசு எல்லாம் ரோபோடிக்ஸ்கே போயிருக்கும்னு நினைக்கறேன். கிராபிக்ஸ் அப்படியே ஓலகத்தரம் எல்லாம் இல்லை. இருந்தாலும், அரிமா அரிமா பாடல்ல வர 100+ ரஜினி கிராபிக்ஸ் சூப்பர். முதல் பாதிய விட, ரெண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோ. கடைசி இருபது நிமிஷம் செம்ம ஜாலி. கிளைமாக்ஸ் சண்டை எல்லாம் குழந்தைகள கண்டிப்பா குஷிபடுத்தும். படம் மொத்தத்துலையுமே வசனங்கள் நல்லா இருந்தாலும், தன்னைத்தானே கழட்டிகும்போது, ரோபோ பேசற வசனமும் குறிப்பா நல்லா இருக்கு. இண்டர்வல் ப்ளாக்ல, ரஜினி கொடுக்கற ரியாக்ஷன் செம்ம. படத்துல நிறைய இடங்கள்ல ரஜினி நடிச்சிருக்கார். மத்தபடி, ஒலக அழகி நல்லா ஆடிருக்காங்க. அரிமா + காதல் அணுக்கள் பாடல்களைத் தவிர, மத்ததெல்லாம் வேஸ்ட். படம் கண்டிப்பா ஓலகத்தரம் இல்லை. போலிகளைக் கண்டு ஏமாறாதீங்க. என்னதான் குத்தம் சொன்னாலும், கொஞ்சம் ஒரிஜினலா யோசிச்சு, கிடைச்ச காசுல அதை திரைக்கு கொண்டு வந்துருக்கார் டைரக்டர் ஷங்கர். மத்த ஷங்கர் படங்கள கம்பேர் பண்ணும்போது, இந்தப் படத்துல அழுத்தம் கொஞ்சம் கம்மிதான். என்னதான் இருந்தாலும், தலைவர் படம். நல்ல முயற்சிக்காக, கண்டிப்பா ஒரு தடவை, தியேட்டர்ல மட்டுமே, குடும்பத்தோட, பாருங்க. நல்லா பொழுதுபோகும்.

p.s. - கருப்பு - எந்த ற/ர வரும்???

அங்க ஒரு துப்பாக்கி குண்டு போயிட்டிருக்கு. அதை சுடணும்....

Sunday, September 26, 2010

மற்றும் பல... (26/9/2010)

ஒரு வழியா வேலை கிடைச்சிடுச்சுனு சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் அவ்வளவு தீவிரமா தேடி, எல்லாம் எடத்துலயும் NO VACANCY போர்ட் பார்த்து, காண்டாகி, வேலையே கிடைக்கலைன்னு கத்தலை. என்னோட முதல் இன்டர்வியூ  இதுதான். அதுலயே வேலை கிடைச்சிடுச்சு. அதனாலயே ரொம்ப சந்தோஷம். காலை முதல் இரவு வரை அயராது உழைக்கர்தால, பதிவ டைம் தேட வேண்டியதா இருக்கு. வழக்கம் போல, எதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதனும்னு நினைக்கும்போது, ஒண்ணு வேற யாராச்சும் எழுதிருவாங்க, இல்லை எனக்கு மறந்துரும். அது மாதிரிதான் எந்திரன் பத்தி எழுத நினைச்சதும்....
------------------------------------------------------------------------------------------------------------------
காலைலதான் எழுதலாம்னு நினைச்சேன், நம்ம கேபிள் முந்திகிட்டாரு. ஆனா, அவரு எழுதின பாயிண்ட் of வியூ வேற. நான் எழுத நினைச்சது, இந்த தியேட்டர்கள் பண்ற அநியாயத்தை பத்தி. சென்னைல முக்கால்வாசி தியேட்டர்கள்ள, முதல் மூணு நாள் டிக்கெட்டையும் கார்பரேட்டுக்கு குடுத்துட்டாங்க. என்ன ஒரு அநியாயம். நிறைய காசு தரவங்களுக்கு தான் டிக்கெட்டுன்னு, இது என்ன ஏலத்துல எடுக்கறா மாதிரி. இன்னொரு முக்கியமான விஷயம், முதல் மூணு நாள் டிக்கெட்டு மாயாஜால்ல இருந்தாலும், அங்க அந்த மூணு நாளைக்கும், ரூ.320 தான் டிக்கெட் ரேட். காம்போ ஏதொ சாப்ட தராங்க. அது கம்பல்ஸரியாம். செம்ம டென்ஷன் ஆகிட்டேன். மீதி டிக்கெட் இருக்கற தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு, இல்ல, அட்டு தியேட்டரா இருக்கு. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.
p.s. படம், முதல் நாலு நாளைக்கு எல்லாம் இடத்துலையும் fullu. இப்பவே  வெற்றி விழா கொண்டாடிடலாமே ???   
------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை ஆரம்பிச்ச முதல் வாரத்துலயே, பசங்க படக்குழுவைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கெடச்சுது. சசிகுமார் நிஜமாவே சூப்பர் ஆளு. ரொம்ப எளிமையா இருந்தாரு. பேசறாரு. செம்ம காஷுவலா இருக்காரு. எல்லாரும் பார்த்து கத்துக்கணும்...
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சிலர் முதுகுல குத்துவாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்ச சில பேர் முகத்துலேயே குத்திட்டாங்க. பல நாள் பழகின நட்பை, எப்படி நொடியில தூக்கிப் போட்டு அசிங்கப் படுத்தமுடியுதுன்னு தெரியலை. நம் முகத்துக்கு நேர நம்மை பத்தி தப்பா சொன்னா கூட பரவாயில்லை, மத்தவங்க கிட்ட, ஏதொ நாம கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசறது எல்லாம் சுத்த பத்தாம் பசலித்தனம். அதுவும் அவங்க குடுக்கற justifications எல்லாம் கேட்கணுமே, அட அட அட, ரொம்பவே அருமையா இருக்கும். அது ஏன் கூட இருக்கற இவ்வளவு நாள் நம்ம குறைகள் இவங்களுக்கு தெரியாம, பிரியக்  காரணங்கள் தேடும்போது மட்டும் கிடைக்குதுன்னு தெரியலை. இதை எல்லாம், எக்கச்சக்க டைம் + எனர்ஜி செலவு பண்ணி, இவங்களுக்காக உதவின சமயங்கள்லையே சொல்லிருந்தா, அப்பவே கொஞ்சம் நம்மளோட பாசத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம். இப்ப, ஏமாற்றமும், கண்ணீரும்தான் மிச்சம். அவங்கள சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை, என்னை உதைக்கணும். இவங்களையெல்லாம் நான் ஒதுக்கப்போரதில்லை. எனக்கு நல்ல பாடங்கள கத்து கொடுத்திருக்காங்களே. அதனால, இன்னும் என் நண்பர்களாதான் பார்க்கறேன். இதை படிக்கற என் நண்பர்கள் சிலருக்கு, உங்களை குத்தம் சொல்றா மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொதுவா சொன்னேன்...
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் லண்டன் லேன்சை வருக வருக என வரவேற்கிறேன்....சீக்கரமா வந்து ட்ரீட் குடுங்க பாஸு..
------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வாரங்கள்ல, இன்ஸோம்ன்யா, அப் இன் தி ஏர் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் பார்த்தேன். இன்ஸோம்ன்யா சூப்பரா இல்லைனாலும், நல்லா இருந்துச்சு. நம்ம அல்-பசினோ பின்னிட்டாரு. ராபின் வில்லியம்சும் நல்லா நடிச்சிருந்தாரு. அப் இன் தி ஏர் படம், கொஞ்சம் எதார்த்தத்தோட நல்லா இருந்தாலும், மொக்கையா முடிச்சிட்டாங்க. பாஸ், ரொம்ப நாள் கழிச்சு, தியேட்டரே வாய் விட்டு சிரிச்சிகிட்டே இருந்ததை பார்த்தேன். எல்லாரும் சந்தானத்தை பாராட்டினாலும், இப்படி ஈகோ எதுவுமே இல்லாம நடிச்ச ஆர்யாவுக்கு ஒரு சபாஷ். இதுலயும் படத்தோட முடிவு மொக்கை...
------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்கேப் சினிமாஸ்ல couple seatனு  சொல்லி ஏமாத்தறாங்க (எதுவும் விபரீதமா நினைக்காதீங்க). அதுவும், அறுவது ரூவா பார்க்கிங்குக்கே போயிடுது. ஆனா, எப்பவும் கூட்டம் அள்ளுது. கவனிக்க, இந்தியா ஏழை நாடு.
------------------------------------------------------------------------------------------------------------------
காமன் மேனோட காசையெல்லாம், காமன்வெல்த்னு, வெளுத்துக்கட்டி, ஊழல்ல புது சாதனையே பண்ணிருக்காங்க. மீடியாவோட எந்த குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லாம, தட்டி கழிக்கறாங்க. இப்ப, இத வெச்சு பார்வர்ட் ஜோக் எல்லாம் வருது. நாட்டுக்கே வெட்க கேடான இத வெச்சி, ஒரு கூட்டம் உட்கார்ந்து, காமெடி பண்ண யோசிச்சிகிட்டு இருக்கு. ஊழல் பண்றவங்களுக்கு, இவங்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ரெண்டு பேருமே பொறுப்பில்லாதவங்கதான். இப்ப முடிஞ்ச ரமணா படத்துல காமிச்சா மாதிரி, இவனுங்க எல்லாரையும் எதாவது பண்ணனும்னு தோணுது... ஓ@!#@ தேவ@!#$%(&%)$&)....
------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா டக்கருன்னா என்ன????

Tuesday, September 7, 2010

PLAYLIST - July, August

போன ப்ளேலிஸ்ட் --> இங்க

எவ்வளவு கேட்டாலும், நான் மகான் அல்ல பாட்டும், எந்திரன் பாட்டும் ஒட்டலை. முயற்சிய கை விட்டுட்டேன்.

புதுசா வந்த பாடல்கள்ல நம்மளோட சமீபத்திய எண்ட்ரீஸ்...


எந்திரன் - கிளிமஞ்சாரோ

புலி (தெலுங்கு) - மூணு பாட்டு - பவர் ஸ்டார், அம்மா தல்லே, தோச்சே


வித்யாசாகரோட மகிழ்ச்சின்னு  ஒரு படம் வந்துருக்கு. ரெண்டு பாட்டு சூப்பர் - ஊத்து தண்ணி பாடல், பசும்பொன் தாமர பூவுக்கும் பாடலை நியாபகப்படுத்தினாலும், அருமையா இருக்கு. உச்சு கொட்ட பாடலும், நல்ல மெலடி. ரொம்ப நாள் கழிச்சு, வித்யாசாகர் நல்லா பியூசிக் போட்ருக்காரு.

பாஸ் என்கிற பாஸ்கரன் - தத்தி தாவும் - ஹிந்தி கஜினியின் பெஹகா பாடல் வந்தாலும் வந்துச்சு, அது மாதிரியே நிறைய பாட்டை கேட்டுட்டேன். இதுவும் அது மாதிரி ஒரு பாடல். கார்த்திக்கின் குரல், ஆரம்பத்துல யுவன் குரல் மாதிரி இருக்கு.

கடைசியா, வா குவாட்டர் கட்டிங் படத்தோட ரெண்டு பாட்டு - சார்ப்பு சார்பு ஜி + உன்னை கண் தேடுதே. ரெண்டு பாட்டுக்குமே ரொம்ப ஜாலியான டியூனும், காமெடியான லிரிக்சும் அமைஞ்சிருக்கு. உன்னை கண் தேடுதே பாடல்ல ஜீவியின் புத்திசாலித்தனமும் தெரியுது.

படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்..

Monday, September 6, 2010

நான் எடுத்த இன்செப்ஷன்

இந்தப் படத்துக்கும் இன்செப்ஷனுக்கு இருக்கற ஒரே ஒற்றுமை, ரெண்டுமே ஒப்பன் எண்டிங். அவ்வளவே. அதனாலையோ என்னமோ, இன்செப்ஷனோட முடிவை நான் யூகிச்சிட்டேன். இந்த படம் எடுத்து ரெண்டரை வருஷம் ஆவுது. ஏற்கனவே -->இங்க<-- இதை பத்தி சொல்லிட்டேன், இருந்தாலும் இன்செப்ஷன் காத்தடிக்கும்போதே தூத்திக்கலாம்னு... தயவு செஞ்சு பாக்காதவங்களும், ரிப்பீட் ஆடியன்சும், உங்க கருத்துக்களை சொல்லுங்க...

Saturday, September 4, 2010

Inception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா????

போன மாசம் மொத்தமுமே இன்செப்ஷன் படத்தை வெச்சி பதிவு ஒப்பேத்தியாச்சு. இதுக்கு மேல மாவ அரைக்க முடியாது. அதனால, போன பதிவுல சொன்னா மாதிரி, நண்பர் பத்மநாபன் கேட்டதற்காக, கதையை, முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்ல முயற்சி பண்றேன். இது என்னோட புரிதலுக்கு ஏற்ப, என்னோட பார்வைல கதை. அதனால, "சொல்லப் படுகிறது, இருக்கலாம்" மாதிரியான வார்த்தைகள் இருக்காது.. நான் நம்பறத, உங்களுக்கு சொல்றேன்..

கதை

மு.கு - extraction - ஒருத்தரோட சப் கன்ஷியஸ்லேர்ந்து ஒரு நினைவை, ரகசியத்தை திருடுவது.
inception - ஒருத்தரோட சப் கான்ஷியஸ்ல ஒரு நினைவை விதைப்பது...

படம் ஆரம்பிப்பது லிம்போல. கடற்கரைல ஒரு ஆள் 
ஒதுங்கராறு. அது நம்ம ஹீரோ காப் (டிகாப்ரியோ), அங்க தன்னோட குழந்தைகள் மணல்ல விளையாடறத பாக்கறாரு. (இந்த காட்சிய, படம் முழுக்க,  அவர் பல முறை பாக்கறாரு) நாலு பேர் தூக்கி கொண்டு போய், தொண்டு கிழமான ஒரு சைனாகாரர் (சைடோ) முன்னாடி அவரை ஒக்கார வெக்கறாங்க. காப் கிட்டேர்ந்து ஒரு சின்ன பம்பரம் மாதிரி உள்ள பொருளை பாத்து, இதே மாதிரி ஒண்ணு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டயும் இருந்துதுனு அந்த கிழவர் சொல்றாரு. 

CUT TO

அடுத்த காட்சி, காப், இளமையான சைடோ, ஆர்தர் மூணு பேரும் ஒரு எடத்துல பேசிகிட்டு இருக்காங்க. காப், சைட்டோகிட்ட, அவரோட சப் கான்ஷியாஸின்  பாதுகாப்பு அவசியம்னும், அதுக்கு தன்னால உதவ முடியும்னு சொல்றாரு. யோசனை பண்ணி சொல்றேன்னு சைட்டோ அந்த எடத்த விட்டு கிளம்பறாரு..

அது சைட்டோவோட கனவுன்னும், அங்க காப், ஏதோ ரகசியத்த திருட முயற்சி பண்றாருன்னும் 
அப்பறம் நமக்கு தெரிய வருது . அங்கேயே, மால் அப்படிங்கற ஒரு பெண்ணையும் சந்திக்கறார். அவங்க காட்டி கொடுக்கறதுனால, கனவுக்குள்ள கனவுன்னு, ரெண்டு லேயர்ல திட்டம் போட்டும், காபோட முயற்சி வீணாகுது. (இங்க இன்னொரு முக்கியமான விஷயம், மால், ஆர்தரோட கால்ல ஷூட் பண்றதுக்கு முன்னாடி, கனவுல ஒருத்தர கொலை பண்றதுனால நிஜத்துல அவங்க கண்ணு முழிச்சிருவாங்க. ஆனா, காயப்படுத்தினா, அந்த வலி ரொம்ப பயங்கரமானதா இருக்கும்னு சொல்லிட்டு சுடறாங்க)

அந்த முயற்சி தோல்வி அடையறதுனால, காபுக்கு வேலை கொடுத்தவங்க அவரை கொலை செய்யலாம்னு பயந்து, காப், தலைமறைவாக யோசிக்கறாரு. (காப், ஏதோ ஒரு குற்றத்துக்காக, தன்னோட ரெண்டு குழந்தைகள பிரிஞ்சு, அமெரிக்காவுலேர்ந்து தலை மறைவா இருக்கார்னு 
அப்போ நமக்கு தெரிய வருது). 

காப் தலைமறைவாகறதுக்கு முன்னாட், சைட்டோ அவரை சந்திச்சு, இன்செப்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. அப்படி வெற்றிகரமா பண்ணிட்டா, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காப, அமெரிக்கவுல இருக்கற அவரோட குழந்தைகளோட சேர்த்து வேக்கறேன்னு வாக்கு கொடுக்கறாரு. ஆர்தர், இன்செப்ஷன் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொன்னாலும், காப், தன்னால பண்ண முடியும்னு ஒத்துக்கராறு.

காப், இன்செப்ஷன் செய்ய ஒரு அணியை திரட்டராறு. இதுல, அரியாட்னே - கனவுகளை வடிவமைக்கரவங்க (architect), இயாம்ஸ் - சித்தரிப்பாளன்னு  சொல்லலாமா?? பாவனை பண்றவர்னு சொல்லலாமா???(forger),  ஆர்தர் - ஆராய்ச்சியாளர் (point man) நம்ம காப் - களவாடப்போறவர்.. (extractor) (களவானின்னு சொல்லலாமா??), அப்பறம் யூசுப் - இவர்தான் மயக்க மருந்துக்கு பொறுப்பு (chemist) கூடவே சைட்டோ, இவங்க செய்யறத கண்காணிக்க வரார்.


திட்டம் போடும்போது, அப்படியே புது ஆளான அரியாட்னேவுக்கும் பயிற்சி கொடுக்கறாங்க. அப்படி ஒரு பயிற்சியப்போ, அரியாட்னே மால் பத்தின விஷயத்தை தெரிஞ்சிக்கறாங்க.  மால், காபோட இறந்து போன மனைவி. ஏதோ ஒரு பிரச்சனைனால, காபோட எல்லா கனவுகள்ளையும் மால் வந்து சதி பண்ணிடறாங்க. இதனாலேயே, காப் கனவுகள வடிவமைக்கரத நிறுத்திக்கராறு. ஏன்னா, அவருக்கு தெரிஞ்சா, அவரோட நினைவுகள்ல இருக்கற மாலுக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். அவங்க அங்க வந்து திட்டத்தை கெடுத்துடுவாங்க. 

இதனால கனவோட வடிவமைப்ப பத்தி தெரிஞ்சிக்கறதயும் நிறுத்திக்கராறு. இதைப் பத்தி, அணில இருக்கற மத்தவங்களுக்கும் அரியாட்னே சொல்ல சொல்றாங்க , ஆனா காப் இது அவ்வளவு சீரியஸ் பிரச்னை இல்லை. அதனால அவங்களுக்கு தெரிய வேணாம்னு மழுப்பிடராறு.

இந்த பயிற்சியில டாட்டம்னு ஒரு விஷயத்தைப் பத்தியும் சொல்றாங்க. எல்லார் கிட்டயும் ஒரு டாட்டம் இருக்கும். அதை வெச்சி, அவங்கவங்க, தான் கனவுல இருக்'கோமா', நிஜத்துல இருக்கோமான்னு கண்டுபுடிச்சிப்பாங்க. அப்படியொரு டாட்டம்தான், முதல் காட்சில காப் கைல இருக்கற பம்பரம். அது காபோட டாட்டம். அதை சுத்தி பார்த்து, விழுந்தா நிஜம்னும், சுத்திகிட்டே இருந்தா கனவுன்னும் காப் தெரிஞ்சிப்பாறு. 
இதை படத்துல பல முறை அவர் செஞ்சி பாக்கறாரு. 

அடுத்து கிக். ஒரு கனவுலேர்ந்து முழிக்க, நிஜத்துல கிக்குனு ஒரு விஷயத்தை பயன்படுத்தறாங்க. ஒரு இடத்துலேர்ந்து, எந்த பிடிமானமும் இல்லாம கீழ விழறது (freefall) தான் கிக். உதாரணத்துக்கு நாற்காலிலேர்ந்து பின்னாடி சாஞ்சு விழறது. அப்படி கனவுலகத்துல விழுந்தா, நிஜத்துல முழிக்கலாம்.

இவங்க இன்செப்ஷன் செய்ய வேண்டியது பிஷர்னு ஒரு இளம் தொழிலதிபரோட தலைக்குள்ள. செத்துப்போகப்போற தன்னோட அப்பாவின் மூலமா வர தொழில் சாம்ராஜ்யத்தை அவரே உடைக்கரா மாதிரி யோசனைய விதைக்கனும். அதுக்கு இன்செப்ஷன் பண்ணனும். இந்த வேலைக்காக பிஷர பத்தின எல்லா தகவலையும் சேகரிக்கறாங்க. இறந்த அப்பாவ பார்க்க, பிஷர் விமானத்துல போகும்போது, இன்செப்ஷன் பண்ணலாம்னு முடிவெடுக்கறாங்க.  


இங்க இன்னொரு முக்கியமான விஷயம். இன்செப்ஷன் செய்ய மூணு லேயர்னு முடிவு பண்ணி திட்டம் போடறாங்க. அடுத்தது, நிஜ உலகத்துல பத்து மணி நேரம்னா, கனவுல ஒரு வாரம், கனவோட ரெண்டாவது லேயர்ல ஆறு மாசம் அப்பறம் மூணாவது லேயர்ல பத்து வருஷம்னு கணக்கு மாறும். 

இதுல, லிம்போனு, நம்மூரு அரசியல்வாதி மாதிரி இன்னொரு சார்பற்ற லேயர் இருக்கு. இந்த லேயர் யாருக்கும் சொந்தமில்லை. இங்க இருக்கும்போது, நிஜமா கனவான்னு எந்த சந்தேகமும் வராது. ஆயுசுக்கும் அங்கேயே கெடக்க வேண்டியதுதான். நிஜவுலகத்துல முழிக்கவும் மாட்டாங்க. கோமா மாதிரி ஆகிடும்.

ஒரு சக்தி வாய்ந்த மயக்க மருந்து கொடுத்து பிஷர தூக்கத்துல ஆழ்த்தி, பிஷரோட ஆழ்மனசுல போக இன்செப்ஷன ஆரம்பிக்கறாங்க. 


முதல் லேயர், யூசுப்போட கனவு.

இயாம்ஸும்  சைட்டோவும், ஆர்தரோட சேர்ந்து பிஷர ஒரு வேன்ல கடத்தி கொண்டு போறாங்க. 
போற வழியில பல பேர் இவங்கள தாக்கறாங்க. காப், அதெல்லாம் பிஷரோட மனசுல அவரே ஏற்படுத்தி வெச்சிருக்கற தற்காப்பு. இந்த மாதிரி இன்செப்ஷன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு யார்கிட்டையோ பயிற்சி எடுத்துட்டுகிட்டு இருக்காருன்னு விளக்காராறு.

நடு ரோட்ல திடீர்னு ஒரு ரயில் வேற வருது. அது எப்படின்னு யாருக்கும் புரியல. எப்படியோ கஷ்டப்பட்டு, பின்னி மில் மாதிரி ஒரு எடத்துக்கு வராங்க. ஆனா சைட்டோ உடம்புல ஒரு குண்டு பாஞ்சிருக்கு. இதுக்கு மேல இவரால மேற்கொண்டு தொடர முடியாது. அதனால அவரை சுட்டு, நிஜ உலகத்துல முழிக்க வெச்சிடலாம்னு ஆர்தர் சைட்டோவ சுட முயற்ச்சி பண்றாரு. 

ஆனா, இவ்வளவு பவர்புல்லான மயக்க மருந்தோட வீரியம் குறையறதுக்கு முன்னாடியே, கனவுல இறந்து போனா, அவங்க லிம்போவுக்குதான் போவாங்க, முழிக்க மாட்டாங்கன்னு, காப் ஆர்தரை தடுக்கராறு. அரியாட்னே, ரயில் பத்தி காப் கிட்ட கேட்கும்போது, அது மால்னால தான் வந்துச்சுன்னு ஒத்துக்கராறு. அதை பத்தின முழு கதைய சொல்றாரு.

FLASHBACK

காப் மால் ரெண்டு பேருமே இந்த மாதிரி கனவுல திருடர வேலைல ஈடுபடறவங்க. ஒரு முறை இதை வெச்சி பரிசோதிச்சு பார்க்கும்போது, எக்கு தப்பா ரெண்டு பேரும் லிம்போவுக்கு போயிடறாங்க. காப், லிம்போ உண்மையில்ல, கனவுன்னு மால் கிட்ட சொல்லியும் அவங்க அங்கேர்ந்து வர மறுக்கறாங்க. அம்பது வருஷம் லிம்போவுலையே சந்தோஷமா இருக்காங்க.


கடைசியா எப்படியோ காப், மால்-ஐ நிஜ உலகத்துக்கு வர சம்மதிக்கவெக்கராறு. ஒரு ரயில் தண்டவாளத்துல ரெண்டு பேரும் தலையவெச்சி, இறந்து போய், நிஜவுலகத்துக்கு திரும்ப வராங்க. ஆனா அந்த லிம்போவோட தாக்கம் அதிகமா இருக்கறதுனால, நிஜ உலகத்துக்கு வந்த அப்பறமும், மால், அதுதான் கனவுன்னும், அங்க இறந்துபோனா நிஜவுலகத்துக்கு போகலாம்னும் நினைக்க ஆரம்பிக்கறாங்க. 

இதனால, அவங்களோட கல்யாண நாள் அன்னிக்கி, அவங்க எப்பவும் கொண்டாடுற ஹோட்டல் ரூம்லேர்ந்து மால் கீழ விழுந்து, தான் நிஜ உலகத்துக்கு போகனும்னு தற்கொலை பண்ணிக்கறாங்க. அதுக்கு முன்னாடியே, தன்னோட லாயர் கிட்ட, காப் தன்னை கொல்ல முயற்சி பன்றார்னும் சொல்லிடறாங்க. அப்போதான், தன் கூடவே காப் வருவார்னு அப்படி பண்றாங்க. இதனால, அவங்க இறந்த அப்பறம், கொலை பழி காப் மேல விழ, காப் அந்த நாட்டை விட்டு ஓடறாரு. 

Back to கனவு

இங்க முதல் லேயர்ல, இயாம்ஸ், பிஷரோட காட்பாதர் பிரவுனிங் மாதிரி வேஷம் போட்டு, தன்னை யாரோ டார்ச்சர் பண்றா மாதிரி கத்தறாரு. ஆர்தரும் காபும், பிஷர்கிட்ட ஒரு கஜானாவை திறக்கத் தேவையான நம்பர் கேட்ட்கறாங்க.
ஆனா அவருக்கு ஒண்ணும் தெரியலை. பக்கத்துல பிரவுநிங்கோட கத்தல் வேற.. பிஷர், பிரவுனிங்கோட பேசி பார்க்கறேன்னு சொல்றாரு. 

பிரவுனிங்கும் (இயாம்ஸ்) பிஷரும் பேசும்போது, பிஷர் அப்பா எழுதுன ரெண்டாவது உயில் பத்தி பிரவுனிங் சொல்றாரு. அது வெளிய வந்தா, மொத்த சாம்ராஜ்யமும் ஒண்ணுமில்லாம ஆகிடும், பிஷர் தேவைப்பட்டா அதை பயன்படுத்திக்கலாம். பிஷர், தான் எதுக்கு மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கணும்னு கேட்கும்போது, "ஒரு வேளை உன் அப்பா, நீ உன்னோட சொந்த முயற்சில பெரிய ஆளா வரணும்னு நினைச்சிருக்கலாம்"னு பிரவுனிங் சொல்றாரு.

இதே நேரத்துல, பிஷரோட (கனவுலக) பாடிகார்ட்ஸ் அந்த இடத்தை நெருங்கறாங்க. அந்த இடத்தை காலி பண்றதுக்கு முன்னாடி, பிஷர் கிட்ட மறுபடியும் 
காபும் ஆர்தரும் கஜானா நம்பர கேட்கறாங்க . ஆனா பிஷர் தெரியாதுன்னு சொல்ல, ஏதொ ஒரு நம்பர சொல்லுனு அவங்க மிரட்ட, பிஷர், வாய்க்கு வந்த நம்பர சொல்றாரு. அங்கேர்ந்து ஒரு வேன்ல எல்லாரும் போறாங்க. அதுலையே மயக்க மருந்து கொடுத்து, அடுத்த லேயர் கனவுக்குப் போறாங்க. வண்டிய யூசுப் ஓட்டறாரு. 

ரெண்டாவது லேயர் ஆர்தரோட கனவு . 
(முதல் லேயர்ல கிக், வேனோட, எல்லாரும் ஒரு பாலத்துலேர்ந்து, தண்ணியில விழறது)

ரெண்டாவது லேயர்ல, ஒரு ஹோட்டல்ல, காப், பிஷர் கிட்ட வந்து, தான் அவரோட பாதுகாப்பு அதிகாரி சார்லஸ்னு அறிமுகப்படுத்திக்கராறு. அவர் இருக்கறது கனவுன்னும் நம்பவைக்கராறு. பிரவுன்ங்கை நம்பாதீங்க, அவர் கொஞ்சம் சரியில்லைனு ஒரு விஷயத்தையும் சொல்லி வைக்கறாரு. கொஞ்சம் கொஞ்சமா பிஷரோட மனசே பிரவுனிங்க கெட்டவரா சித்தரிக்குது. காப் இன்னும் பல விஷயங்கள் பேசலாம்னு பிஷரை ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போறாரு. அங்க இருக்கற பிரவுனிங் (forger) , தான் தப்பு பண்ணதா பிஷர் கிட்ட ஒத்துகிட்டு, இவ்வளவு வருஷமா உழைச்ச குடும்பம், ரெண்டாவது உயில்னால உடையறதை விரும்பாம அப்படி செஞ்சதா சொல்றாரு.. 


இந்த நேரத்துல, காப், பிரவுனிங் மனசுல இருக்கற ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டுதான் ஆகணும்னு பிஷர சம்மதிக்க வெச்சி, அவரோட கனவுக்குள்ள போறாங்க. ரெண்டாவது லெவல்ல காவல் ஆர்தர். இதே நேரத்துல, பிஷரோட தற்காப்புகள், ஆர்த்தர தாக்க வர, அவர் அவங்கள அடிச்சி வீழ்திட்டு, இவங்க இருக்கற ரூமுக்கு வரும்போது, முதல் லெவல்ல கிக் ஆரம்பிக்குது. 

வேன் மேலேர்ந்து கீழ விழர்தால, ரெண்டாவது லெவெல்ல புவியீர்ப்பு விசை இல்லாம போகுது. இப்படி இருந்தா கிக்  கொடுக்கறது கஷ்டம்னு உணர்ற ஆர்தர், இருக்கற எல்லாரையும் எடுத்து கொண்டு போய், லிப்டோட கட்ராறு.

மூணாவது லேயர் (பிஷரின் கனவு), 


ஒரு பனி மலைல எல்லாரும் இருக்காங்க. அங்க ஒரு கட்டிடத்த நிறைய பேர் பாதுகாக்கறாங்க. காப், பிஷர்கிட்ட, அதுதான் பிரவுனிங் ரகசியத்தை வெச்சிருக்கற இடம்னு சொல்லி. அங்க போக சொல்றாரு. எல்லாரும் பிரிஞ்சு, அங்க இருக்கறவங்க கிட்ட சண்டை போட்டு, எப்படியோ பிஷர் அந்த கட்டிடத்தோட முக்கியமான பகுதிய அடைய உதவி பண்றாங்க. 

இதுக்கு நடுவுல, ஒரு குறுக்கு வழிய அரியாட்னே சைட்டோகிட்ட சொல்லும்போது, காபும் அதை கேட்டுடறாரு. இதனால, பிஷர் அந்த ரகசிய அறையை திறக்கதுக்கு முன்னாலேயே மால் அங்க வராங்க. தூரத்துலேர்ந்து இதை பாத்திக்கிட்டு இருக்கற அரியாட்னே, கூட இருக்கற காபை, சுட சொல்றாங்க. தன்னோட மனைவிய சுட தயங்கற அந்த நேரத்துல, மால் பிஷர சுட்டுடறாங்க. அப்பறம் காப் மாலை சுட்ராறு.

எல்லாரு பிஷர் விழுந்துருக்கற எடத்துக்கு வராங்க. சைட்டோவும் இறந்து போகராறு. பிஷர் இன்னும் இறந்து போகலைன்னும், அவர் காபோட லிம்போவுலதான் இருக்கனும்னும் அரியாட்னே சொல்றாங்க. ஏன்னா, காப் தன்னை தேடி வர, மால், அங்க தான் பிஷர வெச்சிருப்பாங்கன்னு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம், மால் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.


இயாம்சை, பிஷருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டு, அரியாட்னேவும் காபும், அம்பது வருஷம் காப் - மால் வாழ்ந்த காபோட லிம்போவுக்கு போறாங்க. அங்க ஒரு வீட்ல மால் இருக்காங்க. அவங்க, காப், வயசாற வரைக்கும் பிரிய மாட்டோம்னு கொடுத்த தன்னோட வாக்குறுதிய காப்பத்தலைன்னு குத்தம் சொல்றாங்க. காப் குழப்பத்துல இருக்கார்னும், லிம்போதான் நிஜம்னும் சொல்றாங்க. இங்க காப் இன்னொரு பிளாஷ்பாக் சொல்றாரு.

முன்னாடி லிம்போவுல இருக்கும்போது, மால், அவங்களோட டாட்டம், அதாவது இப்போ காப் பயன்படுத்தற பம்பரத்தை, எடுத்து ஒழிச்சு வெச்சிடறாங்க. காப் இதை கண்டுபுடிச்சு, மால் இருக்கறது நிஜ உலகம் இல்லைன்னு 
மாலுக்கே ஒரு இன்செப்ஷனை செய்யறாரு. இதனால்தன், மால் காப் சொல்றதை கேட்டு, ரயிலுக்கடியில தலை வெக்கறாங்க. ஆனா நிஜத்துல வந்த அப்பறமும், இது கனவுன்னு காப் விதைச்ச எண்ணம் அவங்களவிட்டு போகாததுனால,  அவங்க தற்கொலை பண்ணிக்கறாங்க. இதனால்தான், இன்செப்ஷன் சாத்தியம்னும் காபுக்கு தெரிய வருது. 

மறுபடியும், இங்க லிம்போவுல, பிஷர கண்டு புடிக்கறாங்க. காப், தான் சைட்டோவ கண்டுபுடிக்கனும்னு சொல்றாரு. இதனால, அரியாட்னே, பிஷர கீழ தள்ளிவிட்டு, தானும் கீழ விழறாங்க. மூணாவது லேயர்ல இயாம்ஸ் கொடுக்கற ஷாக்கோடா, இந்த கிக்கு வேலை செஞ்சி, மூணாவது லேயர்க்கு போறாங்க. பிஷர் உயிரோட வராரு. அந்த ரகசிய அறைல இருக்கற விஷயத்தையும் தெரிஞ்சிக்கராறு.


இதே நேரத்துல, அந்த கட்டிடம் தகர்க்கப்பட்டு, எல்லாரும் அஸ்திவாரத்துக்குள்ள விழறாங்க, அதே நேரத்துல ரெண்டாவது லேயர்ல இருக்கற லிப்டுல ஏதொ செஞ்சி, ஆர்தர் அதை ப்ரீஃபால் ஆக்கராறு , அப்படியே முதல் லேயர்ல கரெக்டா வேன் தண்ணில விழுது. எல்லா கிக்கும் சரியா வேலை செய்ய, எல்லாரும் கரெக்டா கண்ணு முழிக்கறாங்க. இன்செப்ஷன் வெற்றிகரமா முடியுது.

மறுபடியும் முதல் காட்சி வருது. காப், லிம்போவுல பார்க்கற அந்த கிழட்டு சைனா காரரு நம்ம சைட்டோதான். காப் அவர் கிட்ட பேசி, ரெண்டு பேரும் சுட்டுகிட்டு, நிஜத்துக்கு வராங்க. வாக்கு கொடுத்தா மாதிரி, சைட்டோ, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காபை அமெரிக்காவுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாம நுழைய வெக்கறாரு. 


காப் தன்னோட வீட்டுக்கு வந்து, எப்பவும் குழந்தைகள் விளையாடுற அந்த காட்சிய பாக்கறாரு. இது கனவா நிஜமான்னு தெரிஞ்சக்க, டாட்டம எடுத்து சுத்தராறு,  ஆனா இந்த முறை, குழந்தைகள் முகத்தை காமிக்கறாங்க. அப்பாகிட்ட ஓடி வராங்க. காபும், சுத்தி விட்ட பம்பரத்தை மறந்து, அவங்க கிட்ட ஓட, கேமரா சுத்திகிட்டு இருக்கற பம்பரத்த காமிக்குது. அது இன்னும் சுத்திகிட்டே இருந்து, விழறா மாதிரி நிலை தடுமாற, படம் முடியுது.



ங்கொக்கா மக்கா... ஒரு வழியா சொல்லிட்டேண்டா சாமி... 
ரொம்ப சொதப்பலைன்னு நினைக்கறேன். 
மறுபடியும் எல்லாருக்கும் நண்ணி...


வெற்றி வெற்றி வெற்றி.. சொல்லி முடிச்சிட்டேன்...

Wednesday, August 18, 2010

Inception பதில்கள் - 3

இன்னும் தொடருது...

@ஜெய்
//படத்துல புரியாதது காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... //
 கண்டிப்பா அப்படி இல்லை...

//நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு,
நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்... //
இருக்கலாம்... ஆனா நூறு சதவீதம் அப்படியேன்னு நினைக்கவும் முடியாதே...

//இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா... //
நோலனுக்கு வேற வேலையே இல்லைங்க. வாங்க ஆர்க்யூ பண்ணுவோம் :)

//முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) //
அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்...

//முடிவு கனவுன்னு சொல்லணும்னா.......அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...//
எனக்கு அதே மாதிரி டிரெஸ்னு தான் தோணுது..

//குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்... //
நீங்களும் காப் மாதிரியே பேசறீங்களே...

//ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ...//
கண்டிப்பா அது  ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க.

//அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)//
இதை ரெண்டு விதமா சொல்லலாம். அவர் தண்ணிக்குள்ள மயக்கத்துல இருக்கார்னும், ஏற்கனவே லிம்போல இருக்கறதால, அங்கேர்ந்தே சைட்டோவா தேடற வேலைய தொடங்கரார்னும் வெச்சுக்கலாம். ஏன்னா, ஃபிஷர காப்பாத்தின அப்பறம், அவர் எந்த கிக்கும் பயன்படுத்தலை

//ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்............
மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)//
இது என்னோட புரிதல் கூடவும் கொஞ்சம் ஒத்துப்போகுது. ஃபிஷர் செத்ததா முடிவு பண்ணவே இல்லை. இயாம்ச ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டுதான் அவங்க லிம்போவுக்கு போறாங்க.

//நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்.....அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க... //
அது லிம்போதாங்கர்துல இன்னும் என்னக்கு எந்த டவுட்டும் வரலை. இனிமேலும் வராதுன்னு நினைக்கறேன்.

//இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... //
அதுதான் டைரக்டரும் எதிர்பார்க்கறார்...
 
//மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக்....... தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா?//
இந்த இடத்துல, இன்னொரு interpretationஉம் சில பேர் முன்வைக்கறாங்க. இயாம்சொட இடத்துல போயிட்டு, அந்த செடேஷன பரிசோதிக்கற இடத்துலேர்ந்து (தாத்தா டயலாக் அப்பறம்) எல்லாமே காபோட கனவுன்னும் சொல்றாங்க.

//Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one.//
படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது.

@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.

//ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.//
தல, நானும் கனடா கபோதிக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்கள refer பண்ணி, இதைப் பத்தி எழுதி, ஒரு மெயில் அனுப்பினேன். பப்ளிஷ் பண்ணலை. இலக்கியவாதிகள மதிக்கத் தெரியாத கம்மனாட்டி பசங்க.. இதைப் பத்தி, ராணி முத்துல வேலை செய்யற என்னோட தோழிகிட்ட கூட, டப்ளிங்க்ல ஒக்காந்து பேசியிருக்கேன்.

@ஜெய் 
//நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?//
கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் ....

@ஜெய் + பாலி
ஸ்வேதா யாரு??

அடுத்த பதிவுல, நண்பர் பத்மநாபன் கேட்டா மாதிரி, படத்தோட கதைய முடிஞ்சவரைக்கும் சிம்பிளா எழுதறேன்.. மறுபடியும் எல்லாருக்கும் நன்றி.. :)
கேள்விகள் இல்லாமையே பதில் சொன்னா அதுக்கு என்ன பேரு???

Thursday, August 12, 2010

Inception பதில்கள் - 2

போன பதிவுல சொன்ன பதில்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா, அதுவே கமெண்ட் பேஜ்ல நிறைய வந்துருச்சு. அதனால தனிப்பதிவா போட்டு, கல்லா கட்டலாம்னு பாக்கறேன் :P

@எஸ் கே -
மிக்க நன்றி :)

@பாலி -
தல, நீங்க வேற ஒரு முக்கியமான வேலைல இருந்தாதால உங்க வேலை பளுவ குறைக்க முயற்சி செஞ்சேன் :)
கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது. இத மாதிரி ரெண்டு மூணு சந்தேகங்களுக்காகவே ரெண்டு முறை படத்தை பார்த்தேன்...
அண்ட்மன்னிக்கவும், முதல் கேள்விய ஒழுங்கா படிக்காம பதில் சொல்லிட்டேன். ஓபன் எண்டிங்னு சொன்னது முடிவ. ஆரம்பம் லிம்போதான்..
ஏன், விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னீங்க??? இங்க கண்டிப்பா வேற யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க. கவலைபடாதீங்க.

@சர்வேசன்
//லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?//
எனக்கு நிஜமாவே உங்க கேள்வி புரியலைன்னுதான் சொல்லணும் :(
இருந்தாலும் கொஞ்சம் விளக்கிடறேன்.
முதல் லெவல் -  யூசுபின் கனவு - அங்க கிக் அந்த தண்ணில விழற வண்டி
இரண்டாவது லெவல் -  ஆர்தரின் கனவு - அங்க கிக் லிப்ட்டு
மூணாவது லெவல் - இயாம்ஸோட கனவு - அங்க கிக் அந்த இடம் தகர்க்கபடுவது, அப்போதான் எல்லாரும் அப்படியே கீழ இருக்கற அஸ்திவார பள்ளத்துல விழுவாங்க.
நாலாவது லெவல் - யாரோட கனவும் இல்லை, லிம்போ - அங்க கிக் எப்படியாவது நாம லிம்போல இருக்கோம்னு உணர்ந்து, சாவறது or free fallaa கீழ விழறது...

@ஜெய்
//அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... //
மிக்க நன்றி :)

//இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை...//
வாங்க பழகலாம் :))

//நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்...//
எனக்கு பாம்பே டைம்ஸ் படிக்கற தோழி கூட இல்லை... யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. :(
நான் சென்னை டைம்ஸ் படிப்பேன் :P

// கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா//
மொத்த டெம்ப்ளேட் தான் மாத்தணும் தல ;(

//முதல் காட்சி ரியல் இல்லைதானே?//
மறுபடியும் மன்னிச்சு.. கேள்விய ஒழுங்கா பார்க்கலை..அது ரியல் இல்லை. லிம்போ

//இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல/?
நேரடியா எங்கயும் சொல்லல. ஆனா சில டயலாக் imply பண்ணுது. அதனாலதான் சொன்னேன்.

// எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...?//
ஃபிஷர் போனது காபின் லிம்போவுக்கு. அதனால அவரை ஈசியா கண்டுபுடிக்கறாங்க. முதல்ல டென்ஷன் ஆவர்துக்கான காரணம், அவங்க அவங்களோட லிம்போவுல காணாம போயிடுவாங்கன்னு காரணத்துனால. சைட்டோவ காப்பத்த காபுக்கு எவ்வளவு காலம் புடிச்சிதுனு படத்துல சொல்லல. ஆனா அவர் சைட்டோவை கண்டு புடிக்கும்போது,  சைட்டோ தொண்டுக்கெழமா இருக்கறாரு. காபிற்க்கும் ஒரு 40-50 வயசு இருக்கறா மாதிரி முடி எல்லாம் நரைச்சிருக்கு.

//ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க??//
மால் அங்க வரக்கூடாதுன்னு தான், கனவுகளோட ஆர்க்கிடேக்ச்சர காப் தெரிஞ்சிக்காம இருக்காரு. ஆனா, அரியாட்னே எமேர்ஜன்சி என்ட்ரி பத்தி சொல்லும்போது காபும் அதை கேட்டுடறார். அதனால மாலுக்கும் இப்போ அங்க எப்படி போறதுன்னு தெரியும். அப்படிதான் மால் அங்க வராங்க. ஹீரோவின்  மனைவி எப்பவுமே லிம்போலதான் இருக்காங்க. காபுக்காக வெயிட் பண்றாங்க. இங்க முக்கியாமான விஷயம், லிம்போல இருக்கறதும், ஒவ்வொவொரு முறையும் பிளான கெடுக்கர்தும் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.

//மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?//
திருத்தம், மூணாவது லெவல்ல அடிபட்டு, நாலாவது லிம்போவுக்கு போயிட்டு, மறுபடியும் மூணாவது லெவலுக்கு வரார். வீரியம் குறைஞ்சு போய், திரும்ப defibrillatorஅ கிக்கோடா சின்கரனைஸ் பண்ணி அவர உயிரோட கொண்டு வராங்க.

//சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? //
அதானால்தான் அரியாட்னே சுட வரும்போது தடுத்து, அவர் லிம்போலயே இருக்காரு.

//அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?//
அவங்க ஒரு பதட்டத்துல சுட வரும் போதுதான் காப் சொல்லுவாரு, சைட்டோ இந்த நேரத்துக்கு இறந்துருப்பாறு, அதனால அவர தேடி கூப்ட்டுட்டு வரேன்னு.

//மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...//
நான் கவனிக்கலை. ஒரு யூகத்துலதான் சொன்னேன்.

//ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு?//
முன்னாடியே சொன்னா மாதிரி, இதுக்கு எந்த significanceஉம் இருக்கணும்னு அவசியம் இல்லை. நாம கொஞ்சம் ஓவராவே யோசிக்கறோம் ;)

// நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும்//
இத மாதிரி ஓபன் எண்டிங் படங்கள்ல, தப்பு எது, ரைட்டு எதுன்னு சொல்லவே முடியாது.

 மறுபடியும் கேள்வி கேட்ட எல்லாருக்கும் நன்றி. இன்னும் இருந்தாலும் கேளுங்க. எதையும் தாங்கும் 'இதையும்'.. :)

இன்னுமா நான் யாருன்னு தெரில??? ஹா ஹா ஹா

Inception பதில்கள்

என்னடா சின்னப் பையனாச்சேன்னு யாரும் கேள்வி கேட்காம விட்டுருவாங்களோன்னு நினைச்சேன். இருந்தாலும், என்னையும் மதிச்சு சில கேள்விகள் கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இப்போ பதில்களுக்கு போவோம்.

திரு பத்மநாபனின் கேள்வி
  • please explain the story na?
முதல்லையே போட்டாரு பாருங்க ஒரு போடு. கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடிச் சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு வந்துடறேன்.

திரு ரமியின் கேள்விகள்

  • Is the movie is begin in dream or real?
 அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending.
  • Actually what is the climax in this movie?
பாசிடிவா சொல்லனும்னா, அவங்க வெற்றிகரமா வேலைய முடிச்சிட்டு, நாயகன் காப் தன்னோட குழந்தைங்களோட இணையராருனு வெச்சிக்கலாம். இல்லை, நெகடிவா போனா, காப் வேலையை சரியா முடிக்காம, லிம்போல மாட்டிகிட்டாருனு வெச்சிக்கலாம். இல்ல, ஒரு தரப்பினர் சொல்றா மாதிரி, படம் முழுக்கவே, காபோட கனவா இருக்கலாம். இதுக்கு பதில் இல்லைனு சொல்றதுதான் உண்மையான பதிலா இருக்கும். 
  • Different between extraction and inception?
ரொம்ப சிம்பிள். Extraction - சப் கான்ஷியஸ்ல / மண்டைல இருக்கற ஒரு விஷயத்தை திருடறது. Inception - அப்படியே உல்டா. அவங்க சப் கான்ஷியஸ்ல, அவங்களுக்கே தோணுவது மாதிரி ஒரு எண்ணத்த விதைப்பது. இதுல, Inception தான் ரொம்பக் கடினமான வேலை, ஏன்னா, விதைக்கற எண்ணம் அந்நியமா இல்லாம, அவங்களே யோசிச்சா மாதிரி இருக்கணும். 
  • Is there any explanation in movie that these are all possible or not?
இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன். இதெல்லாம் சாத்தியமா இல்லையான்னு இந்தப் படத்துல எங்கயும் ஆதாரத்தோட காமிக்கல.

திரு ஜெய்யின் கேள்விகள்
  • அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?

    அது லிம்போதான்..
  • அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா? 
                  அது லிம்போதான்னு நான் சொல்றதுக்கான காரணங்கள். லிம்போ யாரோட கனவும் கிடையாது. அது ஒரு பொரம்போக்கு நிலம் மாதிரி. அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். தெரிஞ்ச இடத்துக்கு நாம ஈசியா மத்தவங்கள கூட்டிட்டு போறதில்லியா, அது மாதிரி. ஹீரோவும் அரியாட்னேயும், ஹீரோவோட கனவுல இருக்கற லிம்போவுக்கு போறாங்க. ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. ஏன்னா, அவங்களோட முதல் + கடைசி விருப்பம் காபோட எப்பவும் ஒண்ணா இருக்கனும்ங்கறது மட்டுமே. அரியாட்னேயும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்பி வரதுதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே. லிம்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிகிட்டு வராத பாக்கற அர்யாட்னே, மேல உள்ள லெவல்ல கிக் ஆரம்பமானதா உணர்ந்து, ஃபிஷர கீழ தள்ளி விட்டுட்டு, தானும் குதிக்கறாங்க.
  • ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
அது லிம்போதான். காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க. ஃபிஷரின் வலியின்மைக்கான காரணங்கள், என்னோட யூகத்தின் அடிப்படைல சொல்லனும்னா,  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டு திரும்ப வந்ததுனால இருக்கலாம். ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம்.
  • ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு? 
செத்துப்போனவுடனே  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டாரு. உடனே, மாலும் சுடப்படறாங்க. முன்னாடியே சொன்னா மாதிரி, லிம்போவுக்கு போயிட்டு வந்தவங்களால, மறுபடியும் அதுக்குள்ள சுலபமா போக முடியும். போன பதில்ல சொன்னா மாதிரி, காபுக்காக ஃபிஷர பணயக்கைதி மாதிரி ஒழிச்சு வெக்கறாங்க மால். இதுல முக்கியமான விஷயம், இது எல்லாமே, காபையும் அறியாம, அவரோட குற்றஉணர்வின் பிரதிபலிப்பான மால் செய்யறாங்க. உண்மையான மால் எப்பவோ இறந்து போய்ட்டாங்க.
  • முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)
இது சொல்ல வந்த காண்டக்ஸ்ட்ல நீங்க எடுத்துக்கலைன்னு நினைக்கறேன். அவங்க லிம்போலதான் இருக்காங்க. நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். ஆங்கிலத்துல வர டயலாக் இதுதான், "Don't lose yourself!! Find Saito and bring him back!"  . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க.
  • ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?
ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு.

  • முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?
கண்டிப்பா ஓபன் எண்டு தான். ரெண்டு வாட்டி டோட்டம் விழுந்ததற்கான காரணம் ரொம்ப சிம்பிள்னுதான் நான் நினைக்கறேன். அதோட சரியான வடிவமைப்பும், எடையும், எப்படி வேலை செய்யும்னும்  காபுக்கு நல்லாவே தெரியும். அது ஏன் அவர் கனவுல ஒழுங்க வேலை செய்யக்கூடாது. முக்கியமா, டோட்டம், நாம மத்தவங்க கனவுல இருக்கோமா இல்லையாங்கறத சொல்லுமே தவற, நம்மலோடதுல இல்லை.
  • க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), 
முன்னாடியே sollitten. ஓபன் எண்டு.
  • ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.
அப்படியும் ஷட்டர் ஐலாண்ட் மாதிரி யோசிக்கலாம். ஒப்பன் எண்டு தான்
  • ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?
சில நேரங்கள்ல, டைரக்டர் சொல்ல வராத விஷயங்களைக் கூட நாமே புரிஞ்சிப்போம். அப்படியே தான் நீங்க கேட்கறதும் இருக்கு, அதனால, அதே மாதிரியே பதிலும் சொல்றேன்.  ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். நிஜத்துல அதுவரை அவர் போடாததுக்கு காரணம், தன்னோட மனைவியோட நியாபகங்களும், அது தர குற்ற உணர்வும் தான். கிளைமாக்ஸ்தான் படத்தோட முதல் காட்சி. அப்படி அது வேற காட்சியா இருந்தா, படம் முழுக்கவே ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துக்கலாம். ஷட்டர் ஐலாண்ட் தியரிய அடிப்படையா வெச்சு, ஹீரோ தன்னோட குற்ற உணர்வ போக்க, இதையே திரும்ப திரும்ப செய்யறாருன்னு வெச்சிக்கலாம்.

திரு சர்வேசன் கேட்ட கேள்வி
  • பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?
நீங்க முதல்ல வர பனிச்சரிவ  சொல்றீங்கன்னு நினைக்கறேன். அது, அவங்க முதல் லெவல்ல வர van நிலை தடுமாறி ஒரு ரோலிங் அடிச்சிட்டு நிக்கர்துனால ஏற்படுவது. அது நல்ல வேளையா கிக்கா மாறாம, எல்லாரும் அதை மிஸ் பண்ணிடறாங்க. அந்த  அதிர்வு, பனிச் சரிவோட போய்டுது.இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக. (தில்லாலங்கடி கிக்கு இல்லை)

இன்னும் கேள்விகள் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க, அதுக்கு பார்ட் 2 பதிவு போட்டுடலாம். திரு பத்மநாபன் கேட்டா மாதிரி, வேற ஒரு பதிவுல, முழுக்கதையும் சொல்றேன். ஒரு வேளை நான் சொன்னதும், என்னோட புரிதலும் தப்பா இருந்தா திருத்துங்க. கேள்வி கேட்ட அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.. :)



இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??


Monday, August 9, 2010

Inception பற்றிய கேள்விகளுக்கு

நான் ஏதொ பெரிய லாடு லபக்கு தாஸ் மாதிரி பேசறேன்னு நினைக்காதீங்க... இந்தப் படம் எனக்கு கொஞ்சம் நல்லாவே புரிஞ்சிருச்சுனு தைரியத்துல சொல்றேன். உங்களுக்கு இந்த படத்தைப் பத்தின எதாவது சந்தேகம் இருந்தா, பின்னூட்டமா போடுங்க, பதில் சொல்றேன். பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மூடிகிட்டு இருக்கும்போது, உனக்கென்னனு ஈகோவோட யோசிக்காதீங்க. ஏதொ என்னால முடிஞ்ச சமூக சேவை.. :)

பி.கு யாரும் எந்த சந்தேகமும் கேட்காம மொக்கை கொடுத்துருவாங்கனு ஒரு பயமும் இருக்கு. இருந்தாலும் பரவால்ல. வந்தா மலை.

பி.கு 2 - ஏதோ யோசிச்சேன். மறந்துட்டேன்

எதுவா இருந்தாலும் தைரியமா பயப்படமா கேளுங்க...

Thursday, August 5, 2010

எந்திர-ப்-புலி

சீனியாரிட்டி படி, புலி படத்தோட பாடல்கள் பற்றி பேசுவோம்/சறேன்

புலி, தெலுங்கு படம். சிரஞ்சீவி தம்பி, பவன் கல்யான் ஹீரோவா நடிக்கறார். நம்ம BF எஸ்.ஜே. சூர்யா (best friend)  டைரக்டர். இவங்க காம்பினேஷன்ல முதல்ல வந்த, தமிழ் குஷி ரீமேக், ஆந்திரப் பிரதேசத்துல மிகப் பெரிய ஹிட்டு. அதனால, இந்தப் படத்துக்கு நியாயமான எதிர்பார்ப்பு இருக்கு. மியூசிக் வேற நம்ம ஆஸ்கர்மான். So, அதுக்கும் எதிர்பார்ப்பு. படத்துல மொத்தம் ஆறு பாடல்கள். ரகுமானின் தாக்கத்தோட, சூர்யாவோட தாக்கம் அதிகமா இருக்கு. ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த பாடல்கள். எல்லா பாடலைப் பற்றியும் ஓரிரு வரி/வார்த்தைகள்..


பவர் ஸ்டார் - அநேகமாக ஒபெனிங் சாங். நல்ல ரிதம். ஹோசன்னா விஜய் பிரகாஷ் பாடிருக்கார். கூடவே தன்வி, தெலுங்கையும் கடிச்சு துப்பிருக்காங்க. தெலுங்கு சுமாரா தெரிஞ்ச எனக்கே தெரியுது, லிரிக்ஸ் கொஞ்சம் காமெடியா இருக்குனு. மத்தபடி, பாடல் சூப்பர் ஹிட் ஆக நிறைய அறிகுறிகள் இருக்கு.

அம்மா தல்லே - ஆங்கிலத்துல டங் டிவிஸ்டர்ஸ்னு சொல்லுவாங்க, அதுமாதிரி, வார்த்தைகளை வேகமா அடுக்கிட்டே போறாங்க. அழகா பாடவும் செஞ்சிருக்காங்க, பாடகி சுஜாதாவோட பெண் ஸ்வேதா. கூட நம்ம நரேஷ் ஐயர். இந்தப் பாடலைப் பற்றி ஒரு சின்ன எக்ஸ்ட்ரா பிட்டு. நியூ படத்துல உபயோகப்படுத்த முடியாமப் போன மார்கண்டேயா பாடலோட வாடை, இந்தப் பாடல்ல, பலம்மா இருக்கு.

மாரலண்டே
- ரஹ்மானே பாடிருக்கார். அவரோட ரசிகர்கள் சொல்றா மாதிரி, திரும்ப திரும்ப கேட்டாலும், முதல் ரெண்டு பாடல்கள் இம்ப்ரெஸ் பண்ண அளவுக்கு, இது ஈர்க்கலை. ரஹ்மானோட கே.எம் மியூசிக் கன்செர்வேடரி மாணவர்களோட சேர்ந்து இந்தப் பாடலை பண்ணிருக்கார். நாட்டுக்கு நல்லது பண்ண, அட்வைஸ் பண்றா மாதிரி வருது பாடல். வெயிட்டான orchestration.

மஹ மாயே
- அடுத்த டூயட். நம்ம குச்சி சுச்சி பாடிருக்காங்க. ஜாவேத் அலியோட இணைஞ்சு. கேட்க கேட்க பிடிக்கக் கூடிய பாடல். ரஹ்மானோட பெஸ்ட் இல்லை. இருந்தாலும் ரசிக்கலாம். திரைல நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

தோச்சே
- கேட்டவுடனே ஐட்டம் நம்பர்னு உரைக்கும் பாட்டு. காஷ் n க்ரிஸ்ஸினு இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்திருக்கார். இதான் அவங்களுக்கு முதல் திரைப்படப் பாடல்னு நினைக்கறேன். இவங்க ரெண்டு பேர் பாடறது நல்லா இருந்தாலும், ஸ்ரேயா கோஷல் பாடும்போதுதான் அந்தப் பாட்டுக்கே ஒரு அழகு சேருது. இந்தப் பாடல்லயும் நல்ல ரிதம். நல்ல டியூன்.

நம்மகம் - கடவுள் கிட்ட நம்பிக்கை வேண்டி ஒரு பாடல். காற்றில் வரும் கீதமே ஸ்டைல்ல, சித்ரா, மதுஸ்ரீ மற்றும் ஹரிணி சேர்ந்து பாடியிருக்காங்க. ரொம்ப அழகான மெலடி. நைட்டு இந்தப் பாடலை கேட்டீங்கன்னா, தூக்கம் நிச்சயம். ரொம்ப மினிமம் ஆர்கெஸ்ட்ரா. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒத்து வராத, நல்ல, (உண்மையான) பக்திப் பாடல்.

மொத்தத்துல புலி, ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த ஒரு மசாலா ஆல்பம். எல்லா தரப்பினருக்கும், எதாவது இருக்கு. மாஸான  சிவாஜிக்கு பிறகு, அடுத்த மாஸ் படம். ரஹ்மானிடமிருந்து (எனக்கு) ஒரு இன்ப அதிர்ச்சி. மிஸ் பண்ணிறாதீங்க. --> இங்க க்ளிக்கினா<-- எல்லாப் பாடல்களையும் கேட்க லிங்கிருக்கேன்.
 
அடுத்து நம்ம ஊர் பரபரப்பான எந்திரன் பாடல்களுக்கு போவோம்

அதிசயமா, புலி படப் பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு, எந்திரன் படப் பாடல்கள் ஈர்க்கலை. உடனே "Rahman Songs requires repeated listening, it should grown on you, you are anti-rahman, uncle-ரஹ்மான்", அது இதுனு கமெண்ட் போடத் துடிக்காதீங்க. எனக்கு முதல் தடவை கேட்கும்போது புடிக்கலன்னா, எவ்வளவு தடவை முயற்சி பண்ணி முக்கினாலும் புடிக்காது. உதாரணத்திற்கு, எனக்கு இன்னைக்குவரை, சக்கரக்கட்டி படப் பாடல்களும், ஹிந்தி கஜினி படப் பாடல்களும் புடிக்கலை. எந்திரன் ரொம்ப மோசமான ஆல்பம் கிடையாது. ஆனா, ரஹ்மானோட பெஸ்ட்டும் கிடையாது. இன்டர்நேஷனல் ரசிகர்களை மனசுல வெச்சே இசையமச்சா மாதிரி இருக்கு. டெக்னோ மியூசிக்கோட ஓவர்டோஸ்னு சொல்லலாம். பாடல்களைப் பற்றி ஓரிருவரி, 

அரிமா அரிமா - வீரபாண்டி கோட்டையிலே பாடலைப் போல, ரிச் orchestration. ஆனால், ஹரிஹரன் பாடுவது இரைச்சலாதான் இருக்கு. ஹீரோவின் புகழ் பாடி ஆரம்பிக்கும், இன்னொரு எம்.ஜி.ஆர் ஸ்டைல் டூயட் (oxymoron??)

பூம் பூம் / சிட்டி டான்ஸ் - டான்ஸ் ப்ளோர்களுக்கு ஏத்த பாட்டு. சிட்டி டான்சைப் பாடல்னு சொல்றதை விட, ஒரு கூடை சன்லைட் மாதிரி, சப்தங்களோட கோர்வைனு சொல்லலாம்.

இரும்பிலே ஒரு - முன்னாடி சொன்ன காஷ் N க்ரிஸ்ஸியோட சேர்ந்து ரஹ்மான் பாடிருக்கார். அதிரடிக்காரன் ஸ்டைல் பாடலாக இருக்காலாம். காஷ் பாடற இடங்கள் எல்லாம், aqua பார்பி கேர்ள் பாடலை நியாபகப்படுத்துது. ஏனோ....

காதல் அணுக்கள் - இந்த ஆல்பத்தோட, முதல் முணுமுணுக்கக்கூடிய பாடல். ஹோசனா பாடலுக்கு அப்பறமா, விஜய் பிரகாஷின் அடுத்த ஹிட் என்பது ஏறக்குறைய உறுதி. என்னைப் பொறுத்த வரை, ரொம்பச் சாதரணமான பாடல். அதனாலதான் ஹிட் ஆகுமோ என்னவோ.

கிளிமான்ஜாரோ
- எனக்குப் பிடித்த ஒரே பாடல். சின்மயி வித்தியாசமான முறைல, கொஞ்சம் கீச்சுனு பாடிருக்காங்க. குலுவாலிலே பாடல் மாதிரி, ரொம்ப வித்தியாசமான பாடல். catchy. கண்டிப்பா ஹிட்டு.

புதிய மனிதா
- சம்பிரதாயமான ஹீரோ ஒப்பனிங் சாங் இல்லை இது. பாடல் ஆரம்பிச்சு, பில்ட் அப் எல்லாம் வந்து, எஸ் பி பி பாட ஆரம்பிக்க ஒண்ணரை நிமிஷம் ஆகுது. வழக்கம் போல தன்னோட சவுண்ட் இஞ்சினியரிங் வித்தையை காமிச்சிருக்கார் ரஹ்மான். டிப்பு குமாரு மாதிரி ஆகிடக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க . அவ்வளவு மோசம் இல்லை, இருந்தாலும் not "that" impressive.

எனவே மக்களே, சமீபத்துல வந்த, ரெண்டு ரஹ்மான் படப் பாடல்கள்ல, என் ஓட்டு, புலி பாடல்களுக்கே. ஒரு வேளை, எந்திரன் பாடல்களோட காட்சியமைப்பு, எல்லா ஷங்கர் படப் பாடல்கள் மாதிரி, ஈர்க்கலாம். ஆனா, தனிச்சு நிற்கும்போது, வழக்கம் போல நிறைய
அடி வாங்குது. ஆனா, எப்பவுமே ஷங்கர் படத்தோட பாடல்கள் சுமாரா இருந்தாதான், அவரால, விஷுவலா நல்லா காட்சியமைக்க முடியுது.  (ஒரு சிலப் பாடல்களைத் தவிர)