Showing posts with label Announcements. Show all posts
Showing posts with label Announcements. Show all posts

Friday, December 23, 2011

ஒண்ணுமே புரியலை


சத்தியமா என்ன நடக்குதுன்னு தெரியலை.
நிறைய ஐடியாக்கள் இருந்தும் ஒரு கோர்வையா உட்கார்ந்து பதிவு போட முடியலை.
அடிக்கடி என் ப்ளாக் பக்கம் வந்து ஏமாறும் ஒரு சில நண்பர்களுக்கு என்னோட சிரம் தாழ்ந்த SORRY.
மன்னிச்சிடுங்க. கூடிய சீக்கரத்துல முன்னாடி மாதிரி FORM வந்துடும்னு நம்பறேன்.
நன்றி. விரைவில் சந்திப்போம்..


p.s. - வழக்கம் போல இந்த வருடக் கடைசியிலும் எண்ணிப் பார்த்தேன் பதிவுகள் எழுத்தப்படும். மீண்டும் நன்றி :)

Saturday, July 31, 2010

இசை விமர்சனம் - கொஞ்சம் பெரிய முன் குறிப்பு

இனி வரும் இசை சம்பந்தப்பட்ட பதிவுகள் விமர்சனம் அல்ல. ரசனைப் பகிர்தல் என்று சொல்லலாம். பொதுவாகவே திரைப்படங்களைப் பற்றி பேசும் அளவுக்கு, இங்கே இசையைப் பற்றி நான் பேசுவதில்லை. பிடித்த, பிடிக்காத இசையைப் பற்றி விவரிக்க, சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருப்பதே பொதுவான காரணம். பயன்படுத்தும் ஓரிரு வார்த்தைகளும், அனேக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, படிக்கும்போது, எனக்கே புதியதாக இருக்காது. இப்படி பல இசைப் பற்றிய பதிவுகள் எழுதி, அதை அழித்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பது. போரடித்தாலும், படிப்பவர்கள் படிக்கட்டும் என்று இப்போது துணிந்துவிட்டேன். யார் வேண்டுமானாலும் இசையை விமர்சனம் செய்யலாம் என்ற நிலையில், என்னுடைய இந்தப் பதிவுகளை விமர்சனம் என்று கூற விரும்பவில்லை. என் இசை அறிவுக்கு எட்டிய விஷயங்களை, என் ரசனையைப் பொருத்து, அதைப்  பதிவு செய்கிறேன். இதில் கண்டிப்பாக உங்கள் ரசனைக்கு மாறான கருத்துக்கள் இருக்கும். எனவே, தேவையில்லாமல் விவாதித்து அலட்டிக்கொள்ளாதீர்கள்.

இவ்வளவு பெரிய முன்குறிப்புக்கு அவசியமில்லைதான். இருந்தாலும் எழுத ஒரு விஷயம் கிடைத்து விட்டதல்லவா. விட்டு விட மனமில்லை. இசையைப் பற்றி நான் பேசுவதற்கான காரணம், (ஒரு சின்ன தம்பட்டம்) நான் ஒரு பாடகன். முறையான சங்கீதம் கற்றிருக்கிறேன். சில பல காரணங்களால் தொடர முடியவில்லை. தொடருவதற்கு எண்ணங்கள் இருக்கின்றன. இசையைப் பற்றிய பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. இன்றும் பல்வேறு மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறேன். இது போதுமென நினைக்கிறேன் :P

இந்தத் தருணத்தில், நண்பர் அகிலன், வல்லினத்தில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையிலிருந்து சில வார்த்தைகள், "இசையோடு வருபவர்களை காட்டிலும் சினிமா கனவோடு வருபவர்கள்தான் அதிகம். ஒன்றை கண்டிப்பாக நம்புங்கள். சினிமா இசையின் காலம் முடிந்து விட்டது அதன் கடந்த கால வெற்றிகளில்தான் பலரும் அதன் ஆயுளை நீட்டி வருகிறார்கள். புதிய இசைகளுக்கான வாய்ப்புகள் விஸ்தாரமாக இருக்கிறது. அவைகளுக்கான தளம் சினிமா அல்ல. அப்படி வலிய முயற்சிக்கும் போது கார்த்திக்ராஜாவின் அச்சமுண்டு அச்சமுண்டு இசைபோலவோ அல்லது உன்னைப் போல் ஒருவன் இசைப்போலவோ யாராலும் கவனிக்கப்படாமல் போகும். சினிமாவில் இசை கவனிக்கப்படுவது இல்லை. எந்த சினிமா விமர்சனமும் இசையை பொருட்படுத்தியதும் இல்லை" - உன்னைப்போல் ஒருவனைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்து, வழிமொழிகிறேன்.

சரி, அடுத்த பதிவிலிருந்து வேலையை ஆரம்பிக்கிறேன்.

Thursday, August 13, 2009

வருக வருக...

நம்ம பதிவுலகத்திலே மற்றுமொரு புதுவரவு. அண்ணன் விஜய குமார் அவர்கள்...
நான் வெட்டியா இருக்கும்போது தான் வித்தியாசமா யோசிப்பேன், அண்ணனோ வெட்டியா இருக்கும்போது தான் சாதா"ரணமா" யோசிப்பாரு. நான் லூசு, அவரு என்னை விட...... கொஞ்சம் ஓவரா புகழறேனோ??? சரி, எப்படியோ, என் inspirationல அவர் ஆரம்பித்த ப்ளோக், லட்சக்கணக்கான ஆதரவாளர்களை பெற்று, பல ஆயிரம் அமுக்கிகளை (hits) பெற வேண்டும் என, இறைவனை வேண்டிக் கொண்டு, இத்துடன் என் உரையை பொத்திக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்....

லிங்க்: http://boreadikudhu.blogspot.com/


சொல்லிகுடுக்கறேன்னு சொன்ன இந்த காக்கி எங்க???


(சொல்லுங்க விஜய் அண்ணா, என்ன doubt????)

Saturday, June 20, 2009

Tag எடுக்கலியோ Tagu...

நம்ம வாணி மேடம் ஒரு tag அனுப்பிருக்காங்க. Full பீட்டர். நமக்கும் லைட்டா பீட்டர் விட தெரியும்னு இத மாதிரி சமயங்கள்ல தான் comicalaa காமிக்க முடியும். எனவே, இதோ அந்த பெ.................................ரி........................ய்....................ய.................tag.
(சில கேள்விகளுக்கு மட்டும், என்னோட ஆதங்கம்/mindvoice/comments include பண்ணிருக்கேன். கண்டுக்காதீங்க)

Q: When you looked at yourself in the mirror today, what was the first thing you thought?
A:must have a shave asap
(மத்தபடி எப்பவும் பீல் பண்றா மாதிரி, இதெல்லாம் ஒரு மூஞ்சு and so on self sympathy dialogues)

Q: How much cash do you have in your wallet right now?
A:122rs

Q: What’s a word that rhymes with DOOR?
A: more

Q: What is your favorite ring tone on your phone?
A: sax prelude in "Vaan Nilaa" song from Kadhal virus

Q: Who is the 4th person on your missed call list on your cell phone?
A: My அம்மா (!!!!)

Q: What are you wearing right now?
A: trousers and vest

Q: Do you label yourself?
A: NO

Q: Name the brand of the shoes you’re currently own?
A:No shoes

Q: Bright or Dark Room?
A:Me sitting brightly in Dark room

Q: What do you think about the person who took this survey before you?

A:Good blogger. Nice narration. the wordpress template sucks though.

Q: What does your watch look like?
A:no watch (என் கை sizekku watch போட்டா, watchla கை போட்டா மாதிரி இருக்கும்)

Q: What were you doing at midnight last night?
A: Playing SIMS3

Q: What did your last text message you received on your cell say?
A: YA

Q: What’s a word that you say a lot?
A: dunno- dont tak this dunno as the word i say a lot. i really dunno.

Q: Who told you he/she loved you last? (Please exclude spouse , family, children)
A: NONE so far (ஆமாம், இது வேற)

Q: Last furry thing you touched?
A: my hair?? (come under furry???)

Q: Favorite age you have been so far?
A:from 5-18

Q: What was the last thing you said to someone?
A:match பாக்கல??? (to my அண்ணா)

Q: The last song you listened to?
A: "உன் மேல ஆசதான்" frm ஆயிரத்தில் ஒருவன்

Q: Where did you live in 1987?
A: hospital and home, cause born on last month of the year. so have to tak hospital in to acc.

Q: Are you jealous of anyone?
A: LOT

Q: Is anyone jealous of you?
A: சத்தியமா இல்லை

Q: Name three things that you have on you at all times?
A:Mobile, mobile cover, bike key

Q: What’s your favorite town/city?
A: Madras

Q: When was the last time you wrote a letter to someone on paper and mailed it?
A: I think some 6years back, reply to a akka met in a camp.

Q: Can you change the oil on a car?
A: car???

Q: Your first love/big crush: what is the last thing you heard about him/her?
A: let me know her name first...

Q: Does anything hurt on your body right now?
A: none but sore throat and cold disturbs...

Q: What is your current desktop picture?
A: Aqueduct in Segovia, Spain (wiki wallpaper)

Q: Have you been burnt by love?
A: ஏன் இப்படி வயத்தெரிச்சல கெளப்பறீங்க.
No Love, No failure....

Now iam passing this to Swathi, My Kid Brother and Poorna...
Thanks to Vani for Passing the tag :)

Thursday, May 21, 2009

creatiவெட்டியின் முதல் வருடம்...

என்னுடைய ஞாபகமறதி முத்திடிச்சுன்னு நினைக்கறேன். நான் blog ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடிஞ்சாச்சு. இப்பதான் அந்த விஷயமே strike ஆச்சு. கொஞ்சம் கொஞ்சமா, என் blog, தத்தி தத்தி நடக்க ஆரம்பிச்சிருக்கு. என்ன ஆகுதுன்னு பார்ப்போம். இந்த வேளையிலே, ரமணா ஸ்டைல் statistics கொஞ்சம் பார்க்கலாமா???.
  • ஆரம்பிச்சது மே 3 2008.
  • இதுவரை போட்ட பதிவுகளின் எண்ணிக்கை 87
  • அதுல ஒரிஜினல், அதாவது forward mails, tags மாதிரி எதுவும் இல்லாம, நானேசொந்தமா யோசிச்சு பதிவியது 60
  • கிடைத்த followers 5 (அவர்களுக்கு மிக்க நன்றி)
  • கிடைத்த நண்பர்கள் 5
  • (நான் ஆரம்பிச்சது இல்லாம) தூண்டிவிட்டது 2
  • வாங்கிய அவார்ட்ஸ் 7
  • அதிகமா கமெண்ட் வந்த போஸ்ட் வெட்டுனேன் பாருங்க

இதுக்கு
மேல எதுவும் சொல்றா மாதிரி இல்லை. எனக்கு பெரிய frustration என்னன்னா, என் friends பல பேர் ப்ளோக படிச்சிட்டு, scrap பண்ணியோ, sms பண்ணியோ, chat பண்ணியோ கமெண்ட் சொல்றாங்களே தவிர, இங்க கமெண்ட் போட மாட்டேங்கறாங்க. நானும் பல முறை, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்க, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்கனு சொல்லிட்டேன். ம்ஹூம். எதுவும் நடக்கல. But its ok. நான் ப்ளோகறது, ப்ளோகிகினே தான் இருப்பேன். யாரு படிக்கறாங்களோ இல்லையோ. மற்றபடி, என் ப்லோகை தொடர்ந்து படித்து வரும், அத்தனை நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், நன்றிகள் கோடி.

பெருசா 1உம் நடக்கல

Saturday, April 25, 2009

கமெண்டுங்க....

login பண்ணி, கமெண்ட் செய்ய சோம்பேறித்தனப் பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம்.. இனிமே யார் வேணும்னாலும், என் ப்ளோக்ல கமெண்ட் பண்ணலாம்.. இதுவரை, ஜிமெயில் id இருந்தா மட்டுமே கமெண்ட் பண்ணலாம், இனிமே, நீங்க ஜஸ்ட்,

Gmail
OpenID LiveJournal WordPress TypePad AOL
Anonymous

இந்த மூணுத்துல, ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணி கமெண்ட் பண்ணலாம்... ம்ம்ம் இனியாவது ஏதாவது புது ஆளுங்க கமெண்ட் பண்றாங்களான்னு பார்ப்போம்...

pic: நன்றி luckylook...

Monday, March 16, 2009

மற்றும் பல...

காலேஜ்ல பயங்கராம வேலை குடுத்துகினே இருக்காங்க. இதுக்கு நடுவுல, music events வேற வருது. என்ன பண்றதுன்னு தெரியல. எனக்கு time management சரியா வராது, இருந்தாலும், இவ்வளவு வேலைய ஒரே நேரத்துல manage பண்றது பொதுவா எல்லாருக்குமே கஷ்டம்னு நினைக்கறேன். So, blog பக்கம் வர முடியலன்னா (both urs and mine) தப்பா நினைக்காதீங்க.

--------------------------------------------------------------------------------------------------

அடுத்த முக்கியமான விஷயம், கார்த்திக் தம்பி ஒரு tag குடுத்துருக்காரு. மேல சொன்ன விஷயத்துனால, எனக்கு time அவ்வளவா இல்லை. எனக்கு யோசிச்சு bloga கொஞ்சம் time வேணும். இதுக்கு முன்னாடி நீங்க குடுத்த theatre tag still pending. அதுக்கும் ஒரு தடவை sorry. கூடிய விரைவுல, அடுத்தடுத்து ரெண்டையும் ப்ளோகறேன்.

--------------------------------------------------------------------------------------------------

காலேஜ்ல என்னை சுற்றி சில கிசுகிசுக்கள் வருது. என் பெர்சனாலிடிக்கு இது கொஞ்சம் ஓவர். அதனால, எல்லாத்தையும் இதோட நிறுத்திருங்க. எனக்கு அவ்வளவு scope இல்லை. ஒரு எதிர்கால சினிமா ஆளுக்கு, இதெல்லாம் சகஜமாக இருந்தாலும், இத மாதிரி, ஒரு பெண்ணை சேர்த்து வெச்சு பேசுவதை நான் விரும்பலை. (மத்தவங்களுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ;). Default celebrity reply will be: "இந்த கிசுகிசுக்கள் எல்லாத்தையும் பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது. எங்களுக்குள்ள இருப்பது, வெறும் நட்பு மட்டும்தான். மத்தபடி ஒண்ணும் இல்லை" :)

--------------------------------------------------------------------------------------------------

Monday, March 9, 2009

மறுபடியும் பார்ரா....

இப்ப பூர்ணா அக்கா எனக்கு அவார்ட் givings...நான் அவகளுக்கு அவார்ட் குடுத்த ஒரே காரணத்துனாலதான் குடுக்கராங்களோன்னு தோணுது... இருந்தாலும் accountla keeping... குடுத்த அவார்ட் "significant blogger award". காரணம் "for constantly encouraging me in the blogosphere"... encouraging எல்லாம் நமக்கு சகஜம். இதுக்கு ஒரு award குடுத்து என்னை கௌரவப் படுத்தியதற்கு நன்றி.. :)

இதோ அந்த award

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo7w2jmowm1Rr7zE1-iiUo5XZuTVGncHnB34EPpMqjHNsDoW-9B1Xe1EomRAKM2f77v79u_dayu1UP1AFRn7jBVfHC1FcAbnfqMUQKgCPWl0X_Sjlbfip-7D61cFRutZnKf-nh33acYfU/s320/SignificantBloggerAwards.jpg

Sunday, March 1, 2009

ஊட்டில ஒரு கான்வெண்டு....

காலேஜ் industrial visitகாக, நாளைக்கு ஊட்டி கிளம்பறேன்.. so, ஒரு வாரத்துக்கு no blogging... ப்ளோகில் பதிவ, சில செய்தி கிடைக்கும்னு நம்பறேன்... வாழ்த்தி வழி அனுப்புங்கள்... கட்டாயமாக அடுத்த ஞாயிறு ஒரு பதிவு போடறேன்.. அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது,
கார்த்திக்
கார்த்திக்
கார்த்திக்
கார்த்திக்
கார்த்திக்...

Wednesday, December 31, 2008

3 in ONE.. but மூணுல ரெண்டுதான்...

இப்ப என் கைல, butterfly அவார்ட் இல்லாம, 4 அவாரட்(by ரெண்டு பேர்) and 1 tag (by ஒருத்தர்) கீது. அதப் பற்றி தான் இந்த போஸ்ட். எனக்கு அவார்ட்னு தெரிஞ்சவுடனே, வழக்கம் போல, ஒண்ணுமே புரியல. மணிரத்னம் படம் மாதிரி, "ஏன், எதுக்கு, எப்படி, எதனால, தாம்பரம், பஸ் ஸ்டாண்ட், சிங்கப்பூர்", இப்படியெல்லாம் என்னை நானே கேட்டுகிட்டேன். அவார்ட் குடுத்த 2 ஆத்மாக்கள், கார்த்திக் and அருண்குமார். இந்த அவார்ட்ஸ் வாங்கரதுல, ஒரு ரூல் இருக்கு. நாமளும் யாருக்காவது இத குடுக்கணும். இங்கதான் சிக்கலே.

அவார்ட் குடுத்ததுதான் குடுத்தீங்க, இவ்ளோ பேருக்கா குடுக்கறது. நான் யாருக்காவது குடுக்கலாம்னு பார்த்தா, அவங்க எல்லாருக்குமே நீங்க ஏதாவது ஒரு அவார்ட் giving. ஏன் இந்த கொல வெறி???. So, நீங்க கட்டாயம் தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நானே assume பண்ணிக்கிட்டு, im going to end this chain of awards.
யாராவது முடிக்கனும்ல. என்னை மன்னிச்சு, எதிர்காலத்துல இத மாதிரி சிக்கல் ஏற்படாம பார்த்துக்கோங்க. மத்தவங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க and கார்த்திக், உங்க tag, கொஞ்சம் மண்டைய தட்டி, யோசிச்சு, போஸ்ட் பண்ண வேண்டிய மேட்டர், எனவே, give me some time. Also explain the tag, im confused.

அவார்ட்ஸ் - AWARDS

1. KREATIV BLOGGER AWARD - குடுத்தது, கார்த்திக்....
சார் என்ன பீல் பண்றார்னா,

"The blog name suggests it- Creativ(et)ty. Few have the talent to blend imagination with humor and real-life incidents. He is the man of such a kind. Kaadal Kasakudaiya and how to write Tamil Lyrics posts defends what I’d mentioned above"


2. BLOG KING AWARD - குடுத்தது, again கார்த்திக்.... (புள்ளைக்கு இன்னா நம்பிக்கை)
இப்ப என்ன சொல்ல வரார்னா,

"Friend of Lancelot needs no better explanation for flair and talent (except me)"


மிக்க
நன்றி கார்த்திக்.. உங்க தன்னம்பிக்கையும், தன்னடக்கத்தையும் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கு. வாழ்க வளமுடன்...

அடுத்தது

3. AMAZING BLOGGER AWARD &
4. EXTRAORDINARY BLOGGER AWARD...

வக்கீல் சார் சொன்னது,

"
I give him two awards for his versatile blogs, from Short film to count down to email messages to everyday life to interesting info to whatever. I award him AMAZING BLOGGER AWARD and EXTRAORDINARY BLOGGER AWARD (claps X 2). You deserve this award dude. The amazing goes to the Short film you've shot off late and the story style of it in your blog and extra ordinary goes to all the other blogs you have posted in your blogspace. Keep up the good work and very soon you are gonna get some shocking news from Kartik and Me. Keep guessing about it and don't use your usual silencer effect for this award showing your humbleness etc. Just accept it and spread it to others as well. Bring in more bloggers as we need competitors. Don't forget to book me as the hero for your first feature film. (Kartik you will be my KO PAA SE). How is beauty and Meera? :P"


கோடி நன்றிகள் அருண்குமார் அண்ணா.....

So, இப்படியாகத்தானே, இந்த ஆங்கில வருஷத்துல, ஏமாந்த ரெண்டு பேர் மாட்னதுல, எனக்கு 5 AWARDs கிடைத்தது. ரெண்டு பேருக்கும் நன்றிஸ். அடுத்த போஸ்டில் சந்திப்போமா.....

p.s.1 - எண்ணிப் பார்த்தேன் will continue for sure. நான் இப்ப ஹைதராபாத்இருக்கேன். So, ப்ளோக time அவ்வளவா இல்ல. இந்த சிறு பெடியனை மன்னிக்கவும்...

p.s. 2 - எனக்கென்னமோ அருணும் கார்த்திக்கும் தான் beauty and மீரானு வெளையாடுராங்கனு தோணுது. இது உண்மையா இருந்தா, எல்லாத்தையும் நிறுத்திருங்க. இல்ல.............. ஒண்ணும் பண்ண முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்.... தலைவர் சொன்னது....

Saturday, December 13, 2008

டிசம்பர் சீசனா....

டிசம்பர் மாதம், உலகம் முழுக்க follow பண்ற Gregorian காலெண்டர்ல கடைசி மாதம்.. asusual எல்லா டிவி சேனலும் countdown ஆரம்பிச்சிருவாங்க. சில ப்ளாக்ளையும் ஆரம்பிச்சிருவாங்க... இது என்னோட முதல் டிசம்பர் blog என்பதனால, நானும் அந்த ஆட்டைல குதிக்கலாம்னு பாக்கறேன்..... நான் ரொம்ப வெட்டிப் பையன் என்கிற காரணத்துனால, ஒவ்வொரு categoryla ஒவ்வொரு countdown சொல்லலாம்னு முடிவு பண்ணிருக்கேன்... அந்த அஞ்சு கோடி பேர்களும், alt+f4 அமுக்க ரெடியா இருங்க....

கஷ்டப்பட்டு படிக்கிற அந்த அஞ்சு பேரும், அஞ்சு கோடில இருக்காங்க, அதான்... :)

Friday, December 5, 2008

Butterfly Effect....ச்சே... sorry.... award..

யாரோ எங்கயோ ஆரம்பிச்ச ஒரு விஷயம், இப்ப இங்க வந்துருக்கு.. இதுக்கு முன்னாடியே நான் ஒண்ணு - ரெண்டு - மூணு - tag ஏத்துகிட்டேன்... இப்ப அடுத்ததா விருதுனு சொல்லி ஒரு tag அனுப்பிருக்காரு தோழர் (கம்யூனிஸ்ட் இல்ல) அருண்குமார்... என் ப்லோக் ரொம்ப படிச்சு, (பித்து) புடிச்சு போய் எனக்கு இந்த அவார்ட் குடுத்திருக்கார்... அவரோட ப்ளோக்ல என்ன சொல்லிருக்கார்னா...
"நண்பா நமக்குள் நிறைய ஒற்றுமைகள் (உருவத்தை தவிர)...உன் ப்லோக்கிற்கு நிறைய பேர் வருகை தருகிறார்கள் அதனால் சில சமூக கருத்துக்களை தெரிவிப்பாயானால் இன்னும் நன்றாக இருக்கும். நீ தன்னடக்கம் உள்ளவன் என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இந்த அவார்டை ஏற்று கொள்ளுமாறு 50வது வட்டத்தின் சார்பாக பணிவண்புடன் கேட்டு கொண்டு, வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். தம்பியின் நாமம் வாழ்க ! வீரத்தளபதி நாமம் வாழ்க ! !"

தலைவா, தங்களது நம்பிக்கைக்கும் பாராட்டிற்கும் நன்றி.. நான் ஆரம்பத்திலேயே கூறியது போல், சமுதாயத்திற்கு கருத்துக்கள் தெரிவிக்க எனக்கு விருப்பமும் அனுபவமும் இல்லை. அதோடல்லாமல் அதைப் போன்ற ப்ளோகுகள் வலையில் ஏராளம். இருந்தாலும், சமுதாயத்தை கெடுக்கும் அளவிற்கு எனது பதிவுகள் இருக்காது என உறுதியளிக்கிறேன். என் ப்ளோகிற்கு நிறைய வாசகர்கள் இருப்பதைப்ப் போன்ற புரளிகளை கிளப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வீரத் தளபதி என்ற பட்டம், அண்ணன் ரித்தீஷ் அவர்களயே சாரும் எனவே, எனக்கு வேறு ஒரு பட்டம் யோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். செந்தமிழ் கொஞ்சம் கஷ்டமா கீது. இப்ப சாதா"ரணமா" சொல்றேன். நண்பர் சொன்னது போல எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு. நான் இவர சந்திச்சது முதல் முதல ஒர்குட்ல "copy cat filmmakers" அப்படீங்கற communityla. ஹாரி பாட்டர் vs நம்ம ஊர் புராணம் மாதிரி ஒரு தலைப்புல, ரெண்டு பேருமே நம்ம ஊர் புராணத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுனோம்.

அங்க ஆரம்பிச்சது எங்க நட்பு இப்ப இங்க வந்துருக்கு. வேற வழியில்லாமாதன் எனக்கு இந்த அவார்ட் குடுக்குராரோனு கூட தோணுது. நண்பா any sarcasm here??? ஏதோ விடுங்க, குடுத்துட்டாரு. இந்த அவார்ட் வாங்குனவங்க செய்ய வேண்டிய காரியங்கள் சிலது கீது, அது இன்னானா...
  • Put the logo on your blog.
  • Link the person who awarded it to you.
  • Link the bloggers you are about to honor.
எனவே பாருங்க, இடது பக்கம் மேல லோகோ போட்டுட்டேன். Already நம்ம தல என் "அக்கம் பக்கம்" லிஸ்ட்ல இருக்காரு. வலது பக்கம் "lancelot"னு இருக்கு பாருங்க. அடுத்து நான் யாருக்கு இந்த அவார்ட் தரப்போறேன்னா என் ஜூனியர் சுவாதிக்கு . பொண்ணோட language செம்ம ஷார்ப், அதே மாதிரி தான் பதிவுகளும். மேடமுக்கு வருது பாருங்க கோவம், நீங்களே போய் படிச்சு பாருங்க. வாழ்த்துக்கள் சுவாதி. என்னதான் என் அறிவுரையின் பேர்ல நீ ப்ளோக் பண்றதா இருந்தாலும், உனக்கு குரு என்கிற விதத்துல உன்னை பாராட்ட வேண்டியது என் கடமை. All the best, keep blogging. (try to divide paragraphs in ur blog)

அவ்வளவே, எனது கடைமை இப்போதைக்கு முடிந்தது. நான் வரேன். அண்ணன் அருணிற்கு மீண்டும் எனது நன்றி.


Thursday, December 4, 2008

வெட்டுனேன் பாருங்க...

இந்த மாதிரி ஆகும்ன்னு நினைச்சே பாக்கல. ஆனா இதுக்கு நான் காரணம் இல்ல. என்ன சுத்தி இருக்குற "சமுதாயமும்" "மக்களும்"தான் காரணம். நானும் எவ்ளோதான் முயற்சி பண்றது..........................
நீங்க திட்டுறதுக்கு முன்னாடி மேட்டர் என்னான்னு சொல்றேன். என் பிறந்தநாளுக்கு (இன்னிக்கு - 4/12) கேக் வெட்டுனதப் பற்றிதான் நான் மேல சொன்ன விஷயம் எல்லாம்...

என் கிளாஸ்ல யாருக்காவது பர்த்டேனா கேக் வெட்டி கொண்டாடுறது வழக்கம். அந்த பிறந்தநாள் குழந்தைக்கு புடிக்குதோ இல்லையோ, எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி, அத சாப்பிடவும் செய்யாம மூஞ்சில அடிச்சு வெளையாடுரதுனு அன்னிக்கு ஒரே பாசம்ஸ் of இந்தியாவா மாறிடுவாங்க. எனக்கு இந்த கேக் வெட்டி கொண்டாடுறதுல விருப்பம் கிடையாது. அதே சமயத்துல யாராவது கேக் வெட்டுன அவங்க கைய புடிச்சு நியாயம் பேசமாட்டேன். ஏன்னா என் பாலிசி எனக்கு.

எப்பவும் date of birth கொண்டாடாம, ஸ்டார் பர்த்டே மட்டும்தான் கொண்டாடுவேன். ஏதோ தமிழ் பித்துன்னு வெச்சுக்கோங்களேன். அதுவும் இல்லாம நான் பிறந்தது கார்த்திகை தீபம் அன்னிக்கு (பெயர் காரணம் கவனிக்க). ஏதோ அன்னிக்கு ஊரே சந்தோஷமா இருக்கும், நாம இன்னும் எக்ஸ்ட்ராவான சந்தோஷத்தோட இருப்பமேனு ஒரு நல்ல எண்ணம்தான். இன்னிக்கு பிறந்தநாள் ஆர்பாட்டம் எதுவும் இல்லாம, வழக்கம் போல காலேஜ் போனேன். ஆனா விஷயம் தெரிஞ்ச ரெண்டு பேர் விஷ் பண்ணதுல எல்லாருக்கும் மேட்டர் தெரிஞ்சுபோச்சு...

உடனே எனக்கு தெரியாம கேக் வாங்க பிளான் போட்டாங்க. (கொஞ்சம் மெதுவா பேசிருக்கலாம்) நானும் ரொம்ப தன்னடக்கத்தோட "மக்களே, எனக்கு கேக் வெட்டுவது புடிக்காது, எனக்கு அதுல நம்பிக்க இல்ல. So, தயவுசெஞ்சு வாங்கிடாதீங்க"னு சொன்னேன். கேப்பாங்களா?? "மவனே மத்தவங்க பொறந்தநாள்ல மூஞ்சுல கேக் பூசும்போது மட்டும் பாத்துகிட்டு சும்மா இருந்தல்ல, இன்னிக்கு வா நீ மாட்டுனா"னு நெனச்சிருப்பாங்க போல.
"கான்டீன் வா"னு சொல்லிட்டு, Galleryla கேக் வெச்சு வெட்ட சொன்னாங்க.

அப்பவும் ஏதாவது சீன் create பண்ணி கேக் வெட்ரத புறக்கணிக்கலாமானு பார்த்தேன். But அவங்க பாசமா வாங்கிட்டு வந்தத அப்படி பண்ணா நல்லா இருக்காதுனு பட்டுது. எனவே நானும் வெட்டுனேன் பாருங்க, வழக்கம் போல யாரும் சரியா கேக் ஈட்டாம, என் முகத்துக்கே குறி வெச்சு பூசுனாங்க. இவுங்கள இன்னான்னு சொல்றது. இது இல்லாம என் அளவு (உயரத்துல)ஒரு பெரிய greeting கார்டு + leather purse(உள்ள காசுதான் இல்ல) அன்பளிப்பு வேற. இப்படியாகத்தானே என் பிறந்தநாள் என் கல்லூரி நண்பர்களுடன் இனிதே நடந்து முடிந்தது.

அடுத்த முறை எப்படி இருந்தாலும் கேக் வெட்டக்கூடாதுனு முடிவு பண்ணிருக்கேன். என் எண்ணங்களுக்கு என் நண்பர்கள் மரியாதை குடுப்பாங்கன்னு நம்பறேன். இத்தருணத்திலே, என்னை வாழ்த்திய அனைத்து உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகளும், இந்தத் தருணம் வரை பிறந்தநாளை மறந்து 'belated wishes" சொல்லப்போகிறவர்களுக்கு மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியா ஒரு குட்டி அறிவுரை + கவிதை..

Veg கேக்,
Non-Veg கேக்,
எதுவா இருந்தாலும் சரி..
கேக் வெட்டுறது தப்பு இல்ல...
கேக்காம வெட்டுறதுதான் தப்பு...
!!!...

small correction Its "Karthick Krishna"

Monday, November 17, 2008

Design change

Im trying to change the template design of my blog, so if u find it awkward while u visit, pls dnt panic and close the window, jus read the latest entry....

என்னடா திடீர்னு design மாத்தறேன்னு நினைக்கறவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது....
- "இது என் blog, நான் என்ன வேணா பண்ணுவேன்"..
நீங்க படிச்சிட்டு உங்க கருத்த மட்டும் சொல்லிட்டு போங்க"....

Monday, September 8, 2008

Bloga Time கோடி வேண்டும்

நான் blog ஆரம்பிச்ச நோக்கமே, "நம்ம ஒளரள 4-5 பேர் படிப்பாங்கன்னு" நம்பிதான்... நெஜமாவே ஒரு 4-5 பேர்தான் படிக்கறாங்க... அவங்களுக்காக கொஞ்சம் regulara blogalamnu பாத்தா அதுக்கு டைம் கெடைக்க மாட்டேங்குது... தினமும் காலைல 7 மணிக்கு எழுந்து அடுத்த ஒரு மணி நேரத்துல காலேஜ் கெளம்பி போகவேண்டி இருக்கு... சாயங்காலம் 4 மணிக்கு வந்த அப்பறம் என்னோட மத்த வேலைகள கவனிக்க நேரம் சரியா இருக்கு... நைட் வீட்டுக்கு வந்து பாத்தா என்னோட அண்ணாத்த system use பண்ணிக்கிட்டு இருப்பாரு.. என்னத்த சொல்ல... கெடைக்கற நேரத்துல கொஞ்சம் கொஞ்சமா Bloga ட்ரை பண்றேன்... எனவே, அந்த 4-5 வாசகர்கள் தயைகூர்ந்து என்னை மன்னித்தருளி, நான் post செய்யும் அந்த 2-3 (2 வாரத்திற்கு ஒரு முறை) பதிவுகளை படித்து மகிழ்ச்சியோடு இருக்குமாறு வேண்டுகிறேன்... நன்றி வணக்கம்...

p.s. இதற்கு நடுவில் திரு சர்வேசன் அவர்களை (ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கையில்) taagugiren. Mr.Surveysan, யு've been tagged <---- click the link to know about this tag

Thursday, September 4, 2008

RIGHT TO EMERGENCY CARE

நம்ம ஊர்ல, அடிபட்டவங்களுக்கு ஹெல்ப் பண்ண வர்றவங்களவிட, வேடிக்கை பாக்க நெறைய பேரு வருவாங்க... போலீஸ், கேஸ், கோர்ட் மாதிரி தலைவலி வேணாம்னு நெனைக்கற பொதுநலவாதிங்களுக்கு ஒரு நல்ல செய்தி... இனிமே நீங்க அதமாதிரி accidentla மாட்னவங்களுக்கு உதவி பண்ணலாம்... அவங்கள hosipitalல அட்மிட் பண்றதோட உங்க பொறுப்பு ஓவர்... மத்த எல்லா formalitiesஉம் hospital பாத்துப்பாங்க.. அந்த உத்தரவுக்கான details கீழ (mail உபயம் - VK அண்ணா ).. (ஆங்கிலம் தெரியாதவங்க சொல்லுங்க, உங்களுக்கு தமிழ்ல மெயில் பண்றேன்)


RIGHT TO EMERGENCY CARE

Date of Judgment: 23.02.2007

Case No: Appeal (civil) 919 of 2007

The Supreme Court has ruled all that injured persons especially in the case of road accidents, assaults, etc.., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.

The hospital bears the responsibility of informing the police, first aid, etc.



Saturday, August 2, 2008

New Recruitment

A small intervel to my Chennaiplexes sereis of post(s)....

I received a joke as a forward and dint understand the last 2 lines of it, neither some of my frnds did.... so i searched and got the answer... here s the joke wit correct translation in the lst 2 lines...

New Recruitment

Bill Gates organized an enormous session to recruit a new Chairman for Microsoft Europe.

5000 candidates assembled in a large room. One candidate is Kantibhai Shah.

Bill Gates: Thank you for coming. Those who do not know JAVA may leave.

2000 people leave the room.

Kantibhai says to himself, 'I do not know JAVA but I have nothing to lose if I stay. I'll give it a try'

Bill Gates: Candidates who never had experience of managing more than 100 people may leave.

2000 people leave the room.

Kantibhai says to himself ' I never managed anybody by myself but I have nothing to lose if I stay. What can happen to me?' So he stays.

Bill Gates: Candidates who do not have management diplomas may leave.

500 people leave the room.

Kantibhai says to himself, 'I left school at 15 but what have I got to lose?' So he stays in the room.

Lastly, Bill Gates asked the candidates who do not speak Serbo - Croat to leave.

498 people leave the room.

Kantibhai says to himself, ' I do not speak one word of Serbo - Croat but what do I have to lose?' So he stays and finds himself with one other candidate. Everyone else has gone.

Bill Gates joined them and said 'Apparently you are the only two candidates who speak Serbo - Croat, so I'd now like to hear you have a conversation together in that language.'

Calmly, Kantibhai turns to the other candidate and says

'Kem Chho' (how are you) [in Gujarati]

The other candidate answers

'Ek Dam Majama' (absolutely fine) [in Gujarati]



http://rambodoc.files.wordpress.com/2007/09/do_sardar.jpg

p.s.Click the 0 comments link below to post ur comments


Sunday, June 8, 2008

Operation "PLATE"


Dont assume things after reading the post's title and seeing the picture above. This operation is nothing to do with the picture above. I've just uploaded it to giv the post some effect. This operation is about removing the plate in my right hand. Ya, till now im a man of steel but will lose the qualification by tmrw afternoon. The doctors hav told me not to strain much for atleast 2 weeks, so i think i cant BLOG for another 10days atleast. But im gonna use this situation to see as many movies as possible, cause i've some 50 movies in dvd and another 20 in my pc, yet to be watched (grammar correcta??). I think i'l have some interesting things to post after the operation. எனவே friends, i'l c u in a week or two and wil resume my blogging. Wish me. அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது


KARTHICK KRISHNA
KARTHICK KRISHNA
KARTHICK KRISHNA
KARTHICK KRISHNA
KARTHICK KRISHNA
-
-
-
-
TOTTODO TOING (music)





Wednesday, May 14, 2008

TALK ME...................................

well.... my blog is 11days old now.... i've informed as many frnds as possible abt the blog, but still iam waiting for a (good) feedback........எதாவது சொல்லுங்க....... dont scrap, sms, mail or tel in person.... please post ur comments on the comments section of the blog....the link to post comments is @ the end of every post... click tat "0 comments" link for posting..... i too wanna knw hw many r reading my blog, isnt it???... pls co-operate.... thank u, நன்றி.....



p.s.
im using a 19inch widescreen (lcd) monitor, can anyone tel me how the blog looks in normal monitors??? the fonts, the colors and all??