Sunday, October 18, 2009

குருவிக்கு மேல, அயனுக்குக் கீழ

 நீங்க நினைக்கறது கரிக்டு. ஆதவன் படத்தை பத்தின கமெண்ட் தான் தலைப்பு. படம் ஆவரேஜ் தான். சூர்யா ரசிகர்களை ஏமாத்தும். கே எஸ் ரவிக்குமார் ரசிகர்கள், சாமி சத்தியமா ஏமாறமாட்டாங்க. சூர்யாவுக்கு இது முதல் முழு நீள மசாலா படம்னு நினைக்கறேன். படத்துல ரெண்டு ஹைலைட். சூர்யா & வடிவேலு. இவங்க இரண்டு பேர் மட்டுமே படத்தை காப்பாத்தறாங்க. அதுவும் முதல் பாதி அட்டகாசமா இருக்கு. சண்டைக் காட்சிகள் + ஒளிப்பதிவும் டக்கர். இதெல்லாம் படத்துல இருக்குற ப்ளஸ்.

இரண்டாவது பாதிதான் கொஞ்சம் வலுவிழக்குது. நாம நினைக்கறா மாதிரியே கதையும் போகுது. மோசமான கிராபிக்ஸ். அதுவும் அந்த பத்து வயசு சூர்யா பெருசா ஒண்ணும் ஆச்சரியப்படுத்தலை. குறைஞ்சது மூணு பாடல்களை தவிர்த்திருக்கலாம். பாடல்கள் placementம் சரியில்லை.கிளைமாக்ஸ்ல சண்டை நல்லா இருக்கு, ஆனா அந்த ராக்கெட் மேட்டர் காமெடி. திரைக்கதையின் வேகமும், இரண்டாம் பாதில அடி வாங்குது. நயன்தாராவ பத்த தப்பா சொல்லக் கூட எதுவும் இல்லை. இதெல்லாம் மைனஸ்.

இந்த டைரக்டரிடமிருந்து நான் கலைப் படைப்பு எதையும் எதிர்பார்க்கலை. போனமா, ஒரு ரெண்டரை மணி நேரம் பொழுது போச்சா. அவ்வளவே. அதனால எனக்கு பெரிய ஏமாற்றம் ஒண்ணும் இல்லை. எதுவும் எதிர்பார்க்காம போனீங்கன்னா கண்டிப்பா மொக்கை வாங்க மாட்டீங்க. சூர்யாவுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை. இந்தப் படம் ஓகே. b&c சென்டர்கள்ல  ஓடும்னு நம்பறேன். ஆனா, இதே மாதிரி ரெண்டு படம் கொடுத்தார்னா, விஜய்க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும். சாக்கிரதை. சொல்லிப்புட்டேன். மத்தபடி, இது மற்றுமொரு 50நாள் வெற்றி படம். போட்ட காசுக்கு மேலேயே எடுப்பாங்க.



  உதய்: அந்த ஆடு அந்த அருவா, இந்த மனுஷன் இந்த மாலை. ரெண்டும் ஒரே மாதிரி இல்லை??
 KSR: இல்லை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Update: தியேட்டர் அந்தர் quality. சவுண்டும் லுக்கும் ஸூபர். சத்யமா விட சவுண்ட் நல்லா கீது. ஒவ்வொரு சீட்டுக்கும் அழகா space விட்டுருக்காங்க. டிஜிட்டல் ப்ரோஜக்ஷன் பண்ணா, அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. அதுவும், முதல்ல போட்ட 2012 படத்தோட trailer, கெத்து. கண்டிப்பா அந்த படத்தை, தேவில மட்டுமே பாருங்க. இருக்குற ஒரே பிரச்சனை, பார்க்கிங். மேட்னீ ஷோ முடிஞ்சு, பார்க்கிங் பிரச்சனைகள்னால, 6.30 மணி ஈவினிங் ஷோ 7.15ku தான் ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு குழப்பம். சாந்தி தியேட்டர் வரை வாகனங்கள், உள்ள நுழைய, வரிசை கட்டி நின்னுச்சு. இந்த ஒரு மேட்டர கரக்ட் பண்ணாக்கா, தேவிய அடிச்சிக்க ஆள் இல்ல. (நன்றி கனகு அண்ணன் for reminder)


பார்க்கிங்க்னால ஏற்பட்டக் குழப்பக் கூட்டம்...

Friday, October 16, 2009

தேவி தரிசனம்

என் வாழ்க்கையில, தியேட்டர்களோட பங்கை நான் முன்னாடியே சொல்லிருந்தேன். ஒரு படம் நல்லா இருக்க, அந்த தியேட்டரும் நல்லா இருந்தாதான் ரசிக்க முடியும். இல்லை, குடுத்த காசு உ... ஊ..... தான். சென்னைல இப்ப, எனக்கு பிடிச்ச தியேட்டர்கள் ரெண்டு. ஒண்ணு சத்யம் தியேட்டர். அடுத்து ஹோம் தியேட்டர். வேற எந்த ஸ்க்ரீனும் எனக்கு புடிக்கலை. ஒண்ணு sound மொக்கையா இருக்கும், இல்ல சீட்டு மொக்கையா இருக்கும், இல்ல environment மொக்கையா இருக்கும். இதனாலேயே சில படங்கள் எனக்கு பிடிக்காம போயிருக்கு. நான் ஸ்கூல்ல இருந்த காலத்துல (ஒரு 4-5 வருஷங்கள் முன்னாடி) மவுண்ட் ரோட்ல இருக்கற தேவி தியேட்டர்தான் என்(ங்க) favourite.

அங்க படம் பார்க்கற அனுபவமே அலாதியானது. அவ்வை ஷண்முகி, வாலி, முத்து, சிட்டிசன், தூள், கில்லி, மன்மதன், காக்க காக்க இன்னும் எவ்வளவோ படங்களை நான் அங்க பாத்துருக்கேன். மேல நான் சொன்னதுல சில படங்கள்,மக்கள் மத்தியில படம் பார்க்கற அந்த அனுபவத்துக்காகவே ரெண்டு மூணு முறை பாத்துருக்கேன். தூள் படத்தோட கடைசி பாடல் வரும்போது, தியேட்டரே எழுந்து நின்னு ஆடினது இன்னும் கண்ணுலேயே இருக்கு. எம்மாம் பெரிய ஸ்க்ரீனு, இன்னா சவுண்டு. செம்ம ஸீனா இருக்கும். ப்ளாக் டிக்கெட் பிரச்சனைகள் இருந்தாலும், மற்றபடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இங்கதான் முதல் முறையா DTS, Dolby advertisements பார்த்தேன்.  

ஆனா, கடந்த 3-4 வருடங்களாகவே, தேவி தியேட்டர் சரியா பராமரிக்கப்படாம நாசமாகிட்டே வந்தது. ஓனர் பீல் பன்னிருப்பாரோ இல்லையோ, நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சேன். தேவியோட வீழ்ச்சியில, கொஞ்சம் கொஞ்சமா சத்யம் வளர ஆரம்பிச்சுது. இப்ப ஒரு அசைக்க முடியாத இடத்துல இருக்கு. சில படங்கள் சத்யம்ல பார்க்கும்போது கூட, "இதே படத்தை தேவில பார்த்தா எப்படி இருக்கும்"னு யோசிச்சிப் பாத்துருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு (கேடி படம் வந்த சமயம்னு நினைக்கறேன்), தேவி தியேட்டர் புதுப்பிக்கப் போறாங்கன்னு கேள்விப் பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

ஆனா வேலை ஒண்ணும் நடக்கறா மாதிரியே தெரியலை. அஞ்சாதே, தசாவதாரம், குருவி மாதிரி படங்கள் பார்க்கும்போதும் வேலை நடந்துகிட்டேடடடடடடடடடட தான் இருந்துச்சு. அங்க மறுபடியும், முன்ன மாதிரி படம் பார்க்க முடியாதுன்னே முடிவு பண்ண சமயத்துலதான். கந்தசாமி அங்க ரிலீஸ் பண்ணப் போறதா செய்தி வந்தது. அரங்கத்த நல்லா ஆக்கிட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஆனா கந்தசாமி அங்க ரிலீஸ் ஆகலை. மறுபடியும் பல்பு. ஆனா, இப்ப தீபாவளிக்கு திறக்கப் போறாங்கன்னு உறுத்திய செய்தி வந்துச்சு. ஒரு வழியா, தியேட்டர சோப்பரா ஆக்கிட்டாங்க.(வெளிய பார்க்கும்போது அப்படிதான் இருக்கு). ஆன்லைன் புக்கிங் வேற. முதல் நாளே டிக்கெட் எடுத்துட்டேன்.

மறுபடியும் அங்க போய் படம் பார்க்கறத நினைச்சா நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத மாதிரி எந்த கிறுக்கனாவது இருப்பானான்னு நீங்க நினைக்கறது என் காதுல விழுது. அப்படி நினைக்கறதுல தப்பே இல்லை. நான் அப்படி ஒரு சினிமா கிறுக்கன்தான். ஆனா, தியேட்டர் ஆளுங்க ரொம்ப யோசிச்சு, ஆர்வக்கோளாரா ஒரு வேளை செஞ்சிருக்காங்க. பத்து ரூவா டிக்கெட்டுக்கு ஆன்லைன் புக்கிங் வெச்சிருக்காங்க. இப்படி வெச்சா, அதை நம்பியே கவுண்டருக்கு வர ஏழைங்க கதி என்ன ஆகறது??? படம் பார்க்கனும்னு வெறியில இருக்குற என்னை மாதிரி ரசிகர்கள், ஆன்லைன்ல எந்த டிக்கெட் கெடைச்சாலும் பரவாயில்லைனு அதையும் புக் பண்ணிடுவாங்கல்ல..

இருக்கட்டும், facebookல கமெண்ட்ஸ் சொல்லிருக்கேன். இன்னும் சில பேரும் இதையே சொல்லிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். எப்படியோ, சென்னையோட ஒரு கலாசார அடையாளத்துக்கு (!?!?!?!) மறுபடியும் உயிர் வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. போயிட்டு வந்துட்டு, உள்ளார எப்படி இருக்குன்னு சொல்றேன்.


இங்க ஒரு பெரிய தட்டு வந்து, டப்பு டப்புன்னு ஒடையும். அதுக்கே 10 ரூவா போய்டும்....


எல்லாருக்கும் தீவாளி நல்வாழ்த்துக்கள்...