Friday, June 18, 2010

சில குழப்பங்கள்....

பொதுவாகவே, ரொம்ப யோசிச்சா, அதனால பல குழப்பங்கள் வரும்னு சொல்லுவாங்க. நம்மைச் சுத்தி நடக்கற சில பல விஷயங்களும், இந்த மாதிரி குழப்பங்களுக்கு காரணமா இருக்கும். அப்படி, நான் கவனிச்ச, தெளிவு பெறாத சில விஷயங்கள தான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன்.

குழப்பம் 1
இந்த, கட்டாய மதமாற்ற சட்டம் மாதிரி, கட்டாய ஹெல்மெட் சட்டம் ஒண்ணு எடுத்துட்டு வந்தாங்க. நம்ம அம்பி டிராபிக் ராமாசாமி பேரு கூட அதுல அடி பட்டுச்சு. இப்போ அந்த சட்டம் என்ன ஆச்சுன்னு எனக்கு ஒரே குழப்பம். ஏன்னா, நான் கடந்த ஒண்ணு ரெண்டு மாசமா, ஹெல்மெட் போடாம தான் வண்டி ஓட்றேன். என்னை சுத்தி, பல பேர் அப்படியே. தைரியமா சிக்னல்ல நிக்கறாங்க, போலீஸ் முன்னாடியே நல்லா கைய கால ஆட்டிட்டு போறாங்க. ஆனா, திடீர்னு ஒரு நாள், அவசரமான வேலையா திருவான்மியூர் பக்கம் போயிட்டிருக்கும்போது, ஒரு மாமா புடிச்சு, அவசரத்துல, நியாயம் பேச நேரமில்லாம, அம்பது ரூவா மொய் எழுதிட்டு கிளம்பினேன். திரும்பி அதே வழில வரும்போதும் ஹெல்மெட் இல்லாமா தான் வந்தேன். ஆனா யாரும் தடுக்கலை. இது என்ன எழவு சட்டம்னு, ஒரு ஹேரும் புரியல. யாராவது தெளிவுப்படுத்துங்க. ப்ளீஸ்..போன வாரத்துல ஒரு நாள், நம்ம கேபிளார், ஆட்டோகாரங்களைப் பத்தி ஒரு பதிவு எழுதினாரு. அதுல பின்னூட்டமா, என்னோட இந்த குழப்பத்தை எழுதினேன், பதில் எதுவும் கிடைக்கலை, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

குழப்பம் 2
இதுவும் ஒரு நீதி நியாயம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். கல்வி கட்டணம எல்லா பள்ளிகள்ளையும் இவ்வளவு தான் இருக்கணும்னு ஒரு சட்டம்  வந்துச்சே, அது என்ன ஆச்சு. ஏதொ, நாகர் கோவில், திருநெல்வேலி பக்கம் ரெண்டு மூணு பள்ளிகள், அளவுக்கு அதிகமா கட்டணம் வாங்கறாங்கன்னு கேள்விப்பட்டு நடவடிக்கை எடுத்தாங்களாம். எல்லா பள்ளியும் இப்போ திறந்தாச்சு. சென்னைல இருக்கற எல்லா பள்ளிகல்லையும் இன்னும் பழைய கட்டணம்தான் வசூலிக்கப்படுது. இப்போ அந்த சட்டம் இருக்கா, இல்லையா??  யாராவது கம்ப்ளைன்ட் குடுத்தாதான் நடவடிக்கை எடுப்பாங்களா??? இவங்களுக்கு என்ன தான் பிரச்னை?? மறுபடியும், யாராவது தெ.படுத்துங்க..

குழப்பம் 3
பெண்ணியம் பெண்ணியம்னு நிறைய பேர் பேசறாங்களே, அப்படின்னா என்ன?

குழப்பம் 4
நாத்திகம்னா  அத்திகவாதிகளா குத்தம் சொல்றதா?? அதுவும் முக்கியமா ஒரு மதத்தை மட்டும் குறிவெச்சு தாக்கனுமா?? ஆத்திகவாதிகள் என்ன செய்யறாங்க?? ஒரு காலத்துல வாழ்ந்ததா நம்பப்படுற சிலரை கடவுளாய் பாக்கறாங்க. மூதாதையர்கள், முனிவர்கள் எழுதி வெச்சிட்டு போன வேதங்களை படிக்கறாங்க. முடிஞ்ச வரை அதை கடை பிடிக்கறாங்க. அப்படி பார்த்தா, இந்த நாத்திகமும் ஒரு வகைல மதம் தான?? நூறு வருடங்களுக்கு அப்பறம் வர சந்ததி, நாத்திகத்தை எப்படி அணுகுவாங்க ?? இவங்க இப்போ எழுதற புத்தகங்கள், வெக்கற சிலைகள் எல்லாத்தையும் என்ன பண்ணுவாங்க?? யாரோ எழுதிவெச்சது, எல்லாம் மூட நம்பிக்கை, பகுத்தறிவு வேணும் அப்படி இப்படின்னு அவங்களும் இதே மாதிரி உளறுவாங்களா ??? அப்படிபார்த்த இப்போ இவங்க சொல்றது எல்லாமே வேஸ்ட். பாவம் நாத்திக மதம்.... (வழக்கம் போல நாத்திகவாதிகள், மொக்கையா பின்னூட்டம் போடாம, புள்ளகுட்டிங்கள போய் படிக்க வைங்க)

குழப்பம் 5
சுறா, வேட்டைக்காரன் எல்லாம் ஹிட்டா???

குழப்பம் 6
நான் எப்படி இவ்வளவு மார்க் எடுத்து பாஸ் பண்ணேன்??

குழப்பம் 7
அடுத்து என்ன பண்ணப் போறேன்.

குழப்பம் 8
அடுத்து என்ன பதிவு போடறது??

குழப்பம் 9 
இந்த பதிவுக்கு, பின்னூட்டமும், வாக்குகளும் கிடைக்குமா கிடைக்காதா???

இப்போ புரியுதா?? என் வழி, தனி வழி.....

Sunday, May 30, 2010

மற்றும் பல...

இனிமே, பதிவு எழுத நேரமே இல்லைன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே மக்கள், "ஆமா, நீங்க ரொம்ப பிஸி, அதான, அட போயா"னு கத்தறாங்க. அதனால, இனிமே அப்படி சொல்ல வேணாம்னு பாக்கறேன். இருந்தாலும், திடீர் திடீர்னு காணாம போறதுக்கு காரணம் இருக்கணும் இல்லையா, அதுவும் இல்லாம என் ரசிகப் பெருமக்கள் வேற வருத்தப்படுவாங்களா, அதனாலா ஒரு சின்ன விளக்கம் கொடுக்க கடமை பட்டிருக்கேன்..

பதிவு எழுதாம இருக்கா இப்போ ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சின்னதா நான் ஒரு internship பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்து, i just run of ideas a bit fast. தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதேன்னு நினைக்காதீங்க, தமிழ்ல கரிக்டா சொல்ல முடில. மனசுல இருக்கறத, சரியா பதிவு வடிவத்துக்கு மாத்த முடியல. வேற சில பிரச்சனைகளும் இருக்கு. ஆனா, அதெல்லாம் ஒரு நாலு வருஷம் கழிச்சு சொல்றேன், ஞாபகப்படுத்துங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
திரை விமர்சனப் பதிவுகள், ரொம்பவே clicheவா ஆகிட்டு வருது. வார்த்தைப் பிரயோகம், பாராட்டும்/திட்டும் விதம், எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. என்னோட சில விமர்சனங்களும் அப்படி மாறி வர்றத உணர்ந்து தான், ஒரு பத்தில விமர்சனம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இருந்தாலும், இன்னமும் நம்ம கேபிள் ஷங்கர் சாரோட பதிவுகளுக்கு, ஹிட்ஸ் குவியுது. அவர், சத்யம் தியேட்டர், சன் டிவி, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஆகிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
சுறாவோட தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டேன். வழக்கம் போல விஜய், "படம் ஹிட்டு"ன்னு பெட்டி குடுக்க, அடுத்த நாளே ரெட் கார்ட் போடப் போறாங்கன்னு செய்தி வருது. இதையே படமா எடுத்துருக்கலாம், செம்ம காமெடியா இருந்திருக்கும் and இரும்புகோட்டை முரட்டு சிங்கம், எனக்கும் ரொம்ப புடிச்சுது. முக்கியமா, அந்த translator சாம்ஸ் மற்றும் பாஸ்கர், காட்சிக்கு காட்சி கோல் அடிக்கறாங்க. பாடல்கள் ஒண்ணும் வேலைக்கு ஆகல. மறுபடியும், ஜி.வி.பிரகாஷ்சுமார் தான். முக்கியமா, குழந்தைகள் படத்துல, அந்த லக்ஷ்மி ராய் பாட்டு, totally irrelevant...
------------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு முன்னாடி, என் ஆங்கில அறிவுக்கு வந்த சோதனையைப் பத்தி எழுதியிருந்தேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, இந்த இரண்டு வருடங்கள்ல, என் ஆங்கிலம் கொஞ்சம் நல்லாவே improve ஆகிருக்குன்னு நினைக்கறேன். சில வார்த்தைகள், வாக்கியங்கள், பீட்டர்ல மட்டுமே சிந்திக்க வருது. முக்கியமா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்கவே மாட்டேங்குது. (and vice-versa). எப்படியோ, நானும், பீட்டர்ல கொஞ்சம் சீன் போட முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. பார்க்கலாம், 'எதாவது' நடக்குதான்னு... ;)
------------------------------------------------------------------------------------------------------------------
வேலை இன்னும் கிடைக்கல, கிடைச்ச அப்பறம் கண்டிப்பா சொல்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
"உன் பிரச்சனைக்கு அவன் காரணமா, இல்ல இவன் காரணமா இல்ல அந்த பொண்ணு காரணமா"னு கேள்வி கேட்ட என் நண்பன் கிட்ட, சமீபத்தில் நான் உதிர்த்த தத்துவம்.. "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, எல்லாத்துக்கும் என் எண்ணமும் செயலும் மட்டுமே காரணம். வேற யாரும் இல்லை. அதனால FV". (fv means freeya vidu). கரெக்டாதன சொல்லிருக்கேன். Sometime i get too philosophical you see.. :P..

இந்த நேரத்துல, வேற ஒரு காமெடி நினைவுக்கு வருது. போன வருஷம், என் பேரைச் சொல்லி, எடை பாக்கற மெஷின்ல, என் நண்பிகள் சில பேரு, சீட்டு எடுத்தாங்க, (என்ன பாசம் பாருங்க) அதுல என்ன போட்டிருந்துதுனா, "நீங்கள் சிந்தித்து கொண்டே இருப்பாதால், உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது". இப்போ நினைக்கறேன், "So true"
------------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் சொல்லிட்டேன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கறேன். மீண்டும், மீண்டு வருக... இப்போதைக்கு நான் ஜூட்டு...

எங்க போயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்...