Wednesday, December 31, 2008

3 in ONE.. but மூணுல ரெண்டுதான்...

இப்ப என் கைல, butterfly அவார்ட் இல்லாம, 4 அவாரட்(by ரெண்டு பேர்) and 1 tag (by ஒருத்தர்) கீது. அதப் பற்றி தான் இந்த போஸ்ட். எனக்கு அவார்ட்னு தெரிஞ்சவுடனே, வழக்கம் போல, ஒண்ணுமே புரியல. மணிரத்னம் படம் மாதிரி, "ஏன், எதுக்கு, எப்படி, எதனால, தாம்பரம், பஸ் ஸ்டாண்ட், சிங்கப்பூர்", இப்படியெல்லாம் என்னை நானே கேட்டுகிட்டேன். அவார்ட் குடுத்த 2 ஆத்மாக்கள், கார்த்திக் and அருண்குமார். இந்த அவார்ட்ஸ் வாங்கரதுல, ஒரு ரூல் இருக்கு. நாமளும் யாருக்காவது இத குடுக்கணும். இங்கதான் சிக்கலே.

அவார்ட் குடுத்ததுதான் குடுத்தீங்க, இவ்ளோ பேருக்கா குடுக்கறது. நான் யாருக்காவது குடுக்கலாம்னு பார்த்தா, அவங்க எல்லாருக்குமே நீங்க ஏதாவது ஒரு அவார்ட் giving. ஏன் இந்த கொல வெறி???. So, நீங்க கட்டாயம் தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நானே assume பண்ணிக்கிட்டு, im going to end this chain of awards.
யாராவது முடிக்கனும்ல. என்னை மன்னிச்சு, எதிர்காலத்துல இத மாதிரி சிக்கல் ஏற்படாம பார்த்துக்கோங்க. மத்தவங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க and கார்த்திக், உங்க tag, கொஞ்சம் மண்டைய தட்டி, யோசிச்சு, போஸ்ட் பண்ண வேண்டிய மேட்டர், எனவே, give me some time. Also explain the tag, im confused.

அவார்ட்ஸ் - AWARDS

1. KREATIV BLOGGER AWARD - குடுத்தது, கார்த்திக்....
சார் என்ன பீல் பண்றார்னா,

"The blog name suggests it- Creativ(et)ty. Few have the talent to blend imagination with humor and real-life incidents. He is the man of such a kind. Kaadal Kasakudaiya and how to write Tamil Lyrics posts defends what I’d mentioned above"


2. BLOG KING AWARD - குடுத்தது, again கார்த்திக்.... (புள்ளைக்கு இன்னா நம்பிக்கை)
இப்ப என்ன சொல்ல வரார்னா,

"Friend of Lancelot needs no better explanation for flair and talent (except me)"


மிக்க
நன்றி கார்த்திக்.. உங்க தன்னம்பிக்கையும், தன்னடக்கத்தையும் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கு. வாழ்க வளமுடன்...

அடுத்தது

3. AMAZING BLOGGER AWARD &
4. EXTRAORDINARY BLOGGER AWARD...

வக்கீல் சார் சொன்னது,

"
I give him two awards for his versatile blogs, from Short film to count down to email messages to everyday life to interesting info to whatever. I award him AMAZING BLOGGER AWARD and EXTRAORDINARY BLOGGER AWARD (claps X 2). You deserve this award dude. The amazing goes to the Short film you've shot off late and the story style of it in your blog and extra ordinary goes to all the other blogs you have posted in your blogspace. Keep up the good work and very soon you are gonna get some shocking news from Kartik and Me. Keep guessing about it and don't use your usual silencer effect for this award showing your humbleness etc. Just accept it and spread it to others as well. Bring in more bloggers as we need competitors. Don't forget to book me as the hero for your first feature film. (Kartik you will be my KO PAA SE). How is beauty and Meera? :P"


கோடி நன்றிகள் அருண்குமார் அண்ணா.....

So, இப்படியாகத்தானே, இந்த ஆங்கில வருஷத்துல, ஏமாந்த ரெண்டு பேர் மாட்னதுல, எனக்கு 5 AWARDs கிடைத்தது. ரெண்டு பேருக்கும் நன்றிஸ். அடுத்த போஸ்டில் சந்திப்போமா.....

p.s.1 - எண்ணிப் பார்த்தேன் will continue for sure. நான் இப்ப ஹைதராபாத்இருக்கேன். So, ப்ளோக time அவ்வளவா இல்ல. இந்த சிறு பெடியனை மன்னிக்கவும்...

p.s. 2 - எனக்கென்னமோ அருணும் கார்த்திக்கும் தான் beauty and மீரானு வெளையாடுராங்கனு தோணுது. இது உண்மையா இருந்தா, எல்லாத்தையும் நிறுத்திருங்க. இல்ல.............. ஒண்ணும் பண்ண முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்.... தலைவர் சொன்னது....

Friday, December 26, 2008

கதை பண்றது....Part-3

போன பாகம் --->இங்கே<--- இப்ப, சிறுகதை, எழுத்தில்....

------------------------------------------------------------------------------------------------
ஒரு சின்ன short film ...


டக்.... டக்... டக்....கதவு தட்டும் சத்தம் கேட்டுது.

நான்
என்னோட ஆபீஸ்ல பெருசா வேலை எதுவும் இல்லாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன். மறுபடியும் கதவு தட்டப்பட்டது. அந்த பசங்கதான் வராங்கன்னு தெரியும். மறுபடியும் டக்... டக்... டக்... எவ்வளவு முறை சொன்னாலும் கேக்கமாட்டனுங்க. சத்தமா "போதும்பா கதவ தட்டுனது உள்ள வா" அப்படின்னேன். உள்ள வரும்போதே "நாங்க தான்னு முன்னாடியே தெரியுமா சார்?"னு கேட்டுகிட்டேதான் வந்தான் ரெண்டு பேர்ல ஒருத்தன்.

"இந்த காலத்துல யாருடா கதவ தட்டிட்டு உள்ள வராங்க, வர எல்லாரும், உள்ள வந்துட்டு, அப்பறம் excuse me சார், may i enter sirனு கேக்கறாங்க. நீங்க மட்டும்தான் கதவ தட்டிட்டு வரீங்க. சரி, இன்னிக்கு என்ன shoot பண்ணிருக்கீங்க?". "நீங்களே பாருங்க sir"னு சொல்லிட்டு, தோள்ல மாட்டிருந்த handy cam baga ஓபன் பண்ணி, கேமரா குடுத்தான், பதில் சொன்னவன். அதுல LCD screena ஓபன் பண்ணி play பண்ணேன்.

வழக்கம் போல ஏதோ நியூஸ் ரீல் மாதிரி ஒரு டாகுமெண்டரி. எடிட் பண்ணாத அந்த footage ஓடிச்சு. இந்த ரெண்டு பசங்கள பத்தி சொல்ல மறந்துட்டனே. இந்த கேமரா குடுத்த பையன், என்னோட சிஷ்யன் மாதிரி. நல்ல creativity இருக்குற, கஷ்ட்டப்படுற பையன். நான்தான் financiala கொஞ்சம் ஹெல்ப் பண்ணி, Visual Communication படிக்க சொன்னேன். கடந்த ஒரு வாரமா, அவனோட நண்பனோட, காலேஜ்ல ஏதோ போட்டிக்காக, ஒவ்வொரு படமா எடுத்து, என்கிட்ட opinion கேட்க வந்துகிட்டு இருக்கான். நானும், அவன வெறுப்பேத்த, எதுவும் நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.

இந்த படம் முடிஞ்ச அப்பறமும், கேமரா வழக்கம் போல கீழ வெச்சிட்டு, "அப்பறம் சொல்லுங்கப்பா"னு சகஜமா ஆரம்பிச்சேன்.

அவன் - "என்ன sir அப்பறம், எப்படி இருக்குன்னு சொல்லுங்க".

நான் - "எப்பவும் போலதான், ஒரே மாதிரி montage, interview and ஒரே மாதிரி சாதாரணமா இருக்கு".

அவன் - "இதுக்கு மேல எப்படி sir எடுக்க முடியும்"

நான் - "என்னை கேட்டா எப்படி, நீ தான vis com student. நீதான் வித்தியாசமா யோசிக்கணும். இத கொண்டு போய் காலேஜ்ல குடுத்த, அப்படியே எடுத்து ஓரமா வெச்சிட்டு, போயிட்டுவான்னு அனுப்பிருவாங்க"

ரெண்டு பேரும் ஒருத்துர ஒருத்தர் குழப்பமா பாத்துகிட்டாங்க. அப்பறம் அவன், "ஓகே sir, நாளைக்கு நாங்க ஒண்ணு shoot பண்ணிக்கிட்டு வரோம், அத பாத்து நீங்க கட்டாயம் ஷாக் ஆகப் போறீங்க பாருங்க"னு சொன்னான்

"பாக்கலாம் பாக்கலாம். சரி, நீங்க இப்ப கிளம்புங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"னு அவங்கள கிளப்பினேன்.

"சரி sir"னு சொல்லிட்டு அவங்க போன நேரம், எனக்கு ஒரு போன் வந்தது. கொஞ்ச நேரம் பேசுன அப்பறம், சரியா சிக்னல் கிடைக்கல, அதனால, "கொஞ்சம் இருங்க sir"னு போன்ல சொல்லிகிட்டே, கதவை திறந்து, balcony வந்து, பேச ஆரம்பிச்சேன். கீழ வேடிக்கை பாத்துகிட்டே பேசும் போது, அந்த ரெண்டு பசங்களும் ஏதோ discuss பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, என்னோட சிஷ்யன் ஏதோ சைகை செய்ய, அவன் நண்பன் வண்டிய ஸ்டார்ட் பண்ணான். "அப்பறம் பேசறேன் sir"னு போன் லைன கட் பண்ணிட்டு, கவனிச்சேன்.

கேமராவும் கையுமா, பின்னாடி உட்கார்ந்த சிஷ்யன், அப்படியே ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு என்ன shoot பண்ண போறாங்கன்னு புரிஞ்சிடுச்சு. நான் பார்த்த அவங்க பாக்கல. சிரிச்சுகிட்டே மறுபடியும் உள்ள போனேன்.

அடுத்த நாள்.

டக்... டக்... டக்... மறுபடியும் சிஷ்யன். "வாங்கப்பா உள்ள, உங்கள கதவு தட்ட வேணாம்னு எவ்வளவு தடவ சொல்றது". ரெண்டு பேரும் உள்ள வந்தாங்க. ஆனா இப்ப எதுவும் பேசாம, என் கைல கேமரா குடுத்துட்டு உட்கார்ந்தாங்க. "எப்படியும் என்ன shoot பண்ணேன்னு சொல்ல மாட்டீங்க, சரி குடுங்க"னு கேமரா வாங்கி play பண்ணேன். நான் நினைச்ச மாதிரியே, வண்டியில் உட்கார்ந்துகிட்டே, வர டிராபிக் எல்லாத்தையும் shoot பண்ணிருந்தாங்க. சிரிச்சிகிட்டே சொன்னேன், "நான் அப்பவே நினச்சேன், நீங்க இப்படிதான் shoot பண்ணுவீங்கனு. எதுக்கும் fulla பாக்கறேன்".

Footage ஓட ஆரம்பிச்சது. போகும்போது இவங்க பேசுனதும் ரெகார்ட் ஆகி இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் போர் அடிக்க ஆரம்பிச்சது. கரெக்டா, அத சொல்லலாம்னு நினைக்கும் போது, ஒரு அதிர்ச்சி. இவங்க வண்டிய நோக்கி ஒரு லாரி வேகமா வர, இவங்க அத கவனிக்கல போல. லாரி வண்டிய மோத, அதுவும் ரெகார்ட் ஆகியிருந்தது. திடீர் சுவாரஸ்யம் தாங்காம பாத்துகிட்டே இருந்தேன். கேமரா கொஞ்சம் நேரம் blank ஆகி, மறுபடியும் உயிர்வரும்போது, கேமராசுத்தி, இல்ல, இவங்கள சுத்தி ஒரு கூட்டம்.

கூட்டத்துல ஒருத்தருக்கொருத்தர் ஏதோ பேச, ஆனா யாரும் எதுவும் உதவி செய்ய முன் வரல. அவங்கள்ல ஒருத்தன், இந்த கேமரா பாத்து அத எடுக்க கைய வெக்க, casseette முடிஞ்சு static வர ஆரம்பித்தது. எனக்கு ஒண்ணும் புரியல. குழப்பத்தோட, கேமரா கீழ வெச்சிட்டு, "என்னப்பா எடுத்திருக்கீங்க"னு கேட்டேன். ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாங்க. அப்பறம், மெதுவா காத்துல மறஞ்சிடாங்க.

நிஜமாவே காத்துல மறஞ்சிடாங்க.

அதிர்ச்சியோட, கீழ இருந்த கேமரா பார்த்தா , அதுவும் அங்க இல்ல.
அடுத்த வினாடி,

டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது....

-------------------------------------------------------------------------------------------------

First person narrative was kind of easy to me. So wrote it that way. but the film was not taken as FPN. Here is the video of the short film. I dont have previous experience both in writing short story and taking a short film. So, please excuse me.... thank you...