Thursday, November 27, 2008

வேலை போச்சே?!?!?!?!?!? [;(]


உலகளவுல ஏற்பட்டிருக்குற நிதி நெருக்கடியால, உலகளவுல புகழ் பெற்ற கம்பெனிகள்ள வேலை போனவர்களோட குத்து மதிப்பான எண்ணிக்கை...

கம்பெனி/Company - அபீட்டு ஆனவர்கள்

HSBC (Europe) - 500

Pepsi Bottling group (US) - 3150

Citigroup - 52,000

Fidelity Investments - 3000 and counting

Royal bank of Scotland - 3000
(சச்சினுக்கு சட்டை தெக்கர ஆளுங்க)

Sun Microsystems - 6000

British telecom - 10000

Virgin Media - 2200

Nokia-Siemens networks - 1820

DHL US - 9500

Ford Motor - 2600

American Epress - 7000

Volvo - 6000

Nokia - 600

இதெல்லாம் இல்லாம இன்னும் நெறைய கீது... டைப் அடிக்க சோம்பேறித்தனமா இருக்கு, tats wy...இதுக்குதான் நம்மள மாதிரி இருக்கனம்னு சொல்றது.. இருப்பவனுக்கு ஒரு வேலை, இல்லாதவனுக்கு பல வேலை...

http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/rma/lowres/rman1521l.jpg
இப்படி இருந்தா இன்னா ஆவும்???

Mail Courtesy - Ramesh anna

p.s. another important matter is , this is my 50th post... !!?!?!?!??!?!?!?!?!!

Saturday, November 22, 2008

சர்தார்ஜியின் சந்தேகம்


ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல forward மெயில் வந்தது... ஒரே ஒரு படம்தான்... நெறைய யோசிக்கவெக்குது...



Mail courtesy - Swathi(GNC)

Monday, November 17, 2008

Design change

Im trying to change the template design of my blog, so if u find it awkward while u visit, pls dnt panic and close the window, jus read the latest entry....

என்னடா திடீர்னு design மாத்தறேன்னு நினைக்கறவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது....
- "இது என் blog, நான் என்ன வேணா பண்ணுவேன்"..
நீங்க படிச்சிட்டு உங்க கருத்த மட்டும் சொல்லிட்டு போங்க"....

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமிருந்து

இந்த வருஷத்த "ரொம்ப எதிர்பார்த்தா ஏமாந்து போய்டுவீங்க" வருஷம்னு கொண்டாடலாம் OR "தமிழ் சினிமா ரசிகர்கள் பல்பு வாங்கின வருடம்"னு கொண்டாடலாம். பீமா, குருவி, குசேலன், ஏகன் வரிசைல அடுத்து வாரணம் ஆயிரம். நேத்து (nov 14) இந்த படத்த, கமலா தியேட்டர்ல என் அண்ணாத்த + his friends கூட பாத்தேன்.. தியேட்டர்ல sound effect நல்ல இருந்துச்சு. A/C off பண்ணிட்டு fan போட்டது நல்லா technique.

கதைனு பெருசா ஒன்னும் இல்ல. ராணுவத்துல வேலை செய்யற (ஒரு rescue operationku helicopeterla பயணம் பண்ணிக்கிட்டு இருக்குற) ஜூனியர் சூர்யாவுக்கு அவர் அப்பா (சீனியர்) சூர்யா இறந்துட்டார்னு தகவல் வருது. கண்ணீரோட தன் அப்பாவ பற்றிய நினைவுகள அசை போடுறார் ஜூனியர் சூர்யா. இந்த படத்த நிஜமாவே முழு நீ............ள...... படம்னு சொல்லலாம். மொத்தம் மூணு மணி நேரம்.

கதைய பத்தி சொல்றத விட்டுட்டு, மத்த விஷயங்கள சொல்றேன். மொத்த படமும் சூர்யா தான். சூப்பரா நடிச்சிருக்காரு. குறிப்பிட்டு சொல்லனும்னா, அப்பாவா வர எல்லா காட்சிகளும் and மகனா வரும்போது, போன்ல அழுதுகிட்டே தன் காதலிய பற்றி சொல்லும்போது + drugs addict ஆனா அப்பறம் தன் அப்பா அம்மாகிட்ட கெஞ்சும்போது and trainla first time சமீராரெட்டிய பாக்கும்போது.

அடுத்து யாரு நல்லா நடிச்சிருக்காங்கன்னு பார்த்தா, சிம்ரன். வயசு உணர்ந்து [;)] நடிச்சிருக்காங்க. Exacta சொல்லனும்னா முதிர்ந்த நடிப்பு. யாருமே over the topனு சொல்றா மாதிரி இல்ல. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க. படத்துக்கு தேவையில்லாத விஷயம்னு பார்த்தா நிறைய இருக்கு.. First half நல்லா இருக்கு. But second half எங்கெங்கயோ போகுது.

படத்துல வர ரெண்டு resue operation, ரொம்ப நீளமா இருக்கு. கடைசில அப்பா கேரக்டர் இறந்த அப்பறம் டக்குனு படத்த முடிப்பாங்கனு பார்த்தா, அதுக்கு அப்பறமும் ஒரு பெரிய action sequence. தியேட்டர்ல பல பேர் பொறுமையே இல்லாம கமெண்ட்ஸ் அடிச்சிகிட்டே இருந்தாங்க.படத்துல நிறைகள்னு பார்க்கும்போது ஒளிப்பதிவு, Realistic சண்டை காட்சிகள் and superb songs. எல்லா பாட்டுமே semma choreo + picturisation. Especially ஏத்தி ஏத்தி and அஞ்சல songs. அனல் மேலே பாட்டு மட்டும் நம்ம பொறுமைய சோதிக்குது.

Double action காட்சிகள் எல்லாமே, excellentaa shoot பண்ணிருக்காங்க. நல்லா இருக்கு. அந்த கால சென்னைய ரொம்பவே அக்கறை எடுத்து காட்டிருக்காங்க. படத்துக்கு இசை ஹாரிஸ் இளையராஜ்னு சொல்ற அளவுக்கு, படத்துல நிறைய pop-culture reference. இளையராஜாவா ரொம்ப பெருமைபடுத்திருக்காரு கௌதம். ஆனா இந்த படத்துக்கு இவ்ளோ நீளம் தேவையான்னு தெரியல. Post-interval, theatre முழுக்க எக்கச்சக்க கொட்டாவீஸ் அண்ட் நிறைய கமெண்ட்ஸ்.

பாட்டு மட்டும் இல்லனா ரொம்பவே போர் அடிச்சிருக்கும். படம் ரிலீஸ் முன்னாடியே டைரக்டர், இந்த படம் தவமாய் தவமிருந்து மாதிரி இருக்கும். சேரன் எனக்கு ரொம்ப புடிச்ச டைரக்டர்னு எல்லாம் alibi create பண்ணிகிட்டாறு. அதுக்காக அதே type of narration வெச்சு பண்ணிருக்க வேண்டாம். த.தவமிருந்து மட்டுமில்ல, ஆட்டோகிராப், 7gனு பல படங்களோட பாதிப்பு தெரியுது.

படம் முடிஞ்ச அப்பறம், படத்த, கௌதம், அவரோட அப்பாவுக்கு dedicate பண்றாரு. அது ஏன் மத்தவங்க காசுல எடுத்த படத்த, தன்னோட அப்பாவுக்கு dedicate பண்றாருனு தெரியல. கடைசில போனா போகுதுன்னு படத்தோட தலைப்புக்கான அர்த்தத்த, வாரணம் ஆயிரம்னு தொடங்குற திருப்பாவை பாசுரத்த வெச்சு சொல்லிகிறாங்க.

Overall, இசைக்காகவும், சூர்யாவோட உழைப்புக்காகவும், நடிப்புக்காகவும் படத்த பார்க்கலாம். மத்தபடி எல்லாம் average. கடவுள்தான் படத்த காப்பாத்தனும்...


http://im.sify.com/sifycmsimg/nov2007/Entertainment/Movies/Tamil/14568385_vaaranam7a.jpg
இனிமே நீங்கதான் mujik போடுவீங்களா???

Friday, November 7, 2008

காதல் கசக்குதய்யா - Part 2

முதல் பாகம் படிக்காதவங்க --> இங்க போய் <-- படிச்சிட்டு அப்பறம் தொடருங்க...

என் முறை வந்ததும் பாடறத்துக்கு மேடை ஏறினேன். கூட வாசிக்க ஒரு drumpad + keyboard இருந்துச்சு.. அவங்க குத்து மதிப்பா வாசிக்கறதா சொன்னாங்க. நான் வழக்கம் போல பெருசா பீல் பண்ணாம " காதல் கசக்குதய்யானு" ஆரம்பிச்சேன். அவ்வளவுதான். எல்லாரும் கத்த ஆரம்பிச்சாங்க. கத்தல்னு சொல்றத விட, ஆரவாரம்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும். அவ்ளோ ஆரவாரத்துக்கு மத்தியில, கண்ண மூடிகிட்டு நெஜமாவே ரொம்ப ரசிச்சு பாடினேன்.

பாடி முடிச்சு மேடை இறங்கி வரும்வரை ஆரவாரமும் கைதட்டலும் நிக்கல. கீழ இறங்கி வந்ததும், தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லாம் பாராட்ட ஆரம்பிச்சுடாங்க. இதுவரைக்கும் நான் பாடின எல்லா சமயங்கள்ளையும், பாடி முடிச்சவுடனே எல்லாரும் பாராட்றது சகஜம் (என்ன தன்னடக்கம்!!!). அந்த மாதிரி பலபேர் பாராட்டுனாலும், நெறைய தடவ எனக்கு பரிசு கிடைச்சதில்ல. இதுவும் அது மாதிரி ஒரு பாராட்டுதான்னு நெனச்சேன். ஆனா, எனக்கு கெடச்சது முதல் பரிசு. நம்பவே முடியாத ஒரு தருணம் அது.

போட்டில participate பண்ணவே முடியாதுங்கற நிலைம போய், முதல் பரிசுனா எப்படி நம்ப முடியும். வாய்நெறைய, நம்பமுடியாத சிரிப்போட போய், prize வாங்கினேன். நான் பாடினத விட, பாடினதுக்கும், அந்த பாட்டிற்கும் கெடச்ச கைதட்டலும் ஆரவாரமும்தான் எனக்கு பரிசு வாங்கி கொடுத்துச்சு. அப்பதான் புரிஞ்சிகிட்டேன், போட்டிகள்ள, judgea விட, பாட்டு கேக்கற ரசிகர்களோட response தான் முக்கியம்னு. அடுத்த ரெண்டு வருஷம், என் காலேஜ்ல நடந்த ரெண்டு பாட்டு போட்டிலயும் (வருசத்துக்கு ஒண்ணுதான் நடக்கும்) நான்தான் first prize வாங்கினேன்.

Second year "பனிவிழும் மலர்வனம்" and third year, போக்கிரி படத்துல வர "வசந்த முல்லை" பாடல்களும் பாடினேன். அந்த ரெண்டு வருஷமும் judgea வந்தது, எனக்கு முதல் வருஷம் studenta இருந்து ஹெல்ப் பண்ண என்னோட சீனியர்s, கௌதம் பரத்வாஜ் and ஹரிணி. இந்த hat-trick அடிச்சதுல, என்ன விட, என் அம்மாவுக்கும் நண்பர்களுக்கும்தான் ரொம்ப பெருமை. இந்த வெற்றிகள்ள என் seniors பங்கும் இருக்கு. அவங்க நான் எப்ப பாடுனாலும் நல்லா உற்சாகப்படுத்துவாங்க.

இப்ப recenta, என்னோட PG first yearla, போன வாரம் எங்க காலேஜ்ல (அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த பாட்டு போட்டியிலையும், முதல் முறையா (அதாவது இந்த காலேஜ்ல முதல் முறையா), காதல் கசக்குதய்யா பாடல் பாடி first prize வாங்கினேன். பரிசு வாங்கினதும், அந்த மேடைலையே, இளையராஜா sirku ஒரு தாங்க்ஸ் சொன்னேன். என் seniorsoda விருப்பத்திற்கு இணங்க, காதல் கசக்குதய்யா பாடல நான் பல மேடைகள்ல சும்மா போய் பாடிருக்கேன். என் நண்பன் ரகுவும் அந்த பாடல பாடும்போது ரொம்ப ரசிப்பான்.

So, இதுதான் காதல் கசக்குதய்யா பாடல் என் வாழ்க்கைல ஒரு அங்கமா மாறின கதை. இத்தருணத்திலே, என்னை சிறு வயதிலிருந்து, பாட உற்சாகப்படுத்திவரும் என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும், என் seniorskum முக்கியமாக இளையராஜாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கீழ அந்த play buttona கிளிக்கினா அந்த பாடல் கேட்கலாம்... கவலை படவேண்டாம், இது நான் பாடினது இல்ல, original version of the song...
காதல் கசக்குதய்யா முற்றும்..

Saturday, November 1, 2008

காதல் கசக்குதய்யா - Part 1

பி.கு.feelingsa நான் எதுவும் சொல்ல வரல. இது காதல் கசக்குதய்யானு ஆரம்பிக்கற ஒரு பாட்டு பற்றி சொல்ற பதிவு..

என்னோட இரண்டாம் கிளாஸ் படிக்கும்போதுதான் முதல் தடவை ஒரு பாட்டுப் போட்டியில கலந்துகிட்டேன். என்னோட முதல் பாடல் "காதல் ரோஜாவே" from "ரோஜா", அதுல எனக்கு first prize. அதுக்கப்பறம் நெறைய போட்டிகள்ள கலந்துகிட்டு நெறைய மொக்கைகளும், சில பரிசுகளும் வாங்கிருக்கேன். காலேஜ் போன அப்பறம் கூட, பாட்டு போட்டி பழக்கத்த விடாம வெச்சிருந்தேன். முதல் வருஷம் நான் கலந்துகிட்ட ஒரு போட்டியாலதான் எனக்கு ஒரு ஞானோதயம் கெடச்சுது..

காலேஜ்ல என்னோட சீனியர்s, airtel super singer புகழ், கௌதம் பரத்வாஜ் and காதல் படத்துல வர்ற "தொட்டு தொட்டு என்னை" பாடல் பாடுன ஹரிணி. அதுவரைக்கும் பல பரிசுகள் வாங்கினவங்க, அவங்களோட final yearla, organising teamla வந்துட்டாங்க. So, அவங்க மேற்பார்வைல நடந்த ஒரு போட்டிக்கு நான் போனேன், நான் நல்லா(!!!) பாடுறத பாத்துட்டு(கேட்டுட்டு), கௌதம் என்னபத்தி கேட்டாரு. விசாரிச்சதுல அவருக்கு என் அண்ணன நல்லா தெரியும்னு தெரிஞ்சுது. (என் அண்ணனும் அதே கல்லூரிதான்)

கௌதம் பரிச்சயம் கெடச்சதுனால, பல போட்டிகள் பற்றி தெரிய ஆரம்பிச்சுது (including ஆஹா பாடலாம் in DD). ஆனா காலேஜ் annual day song competition பற்றி எனக்கு சொல்ல மறந்துட்டாரு. competition finals எங்க காலேஜின் பெரிய ஹால்ல நடக்கும். So அத shoot பண்ண சொல்லி எங்க சார் சொல்லும்போதுதான் எனக்கு அந்த போட்டிய பத்தி தெரியவந்துச்சு. போற வழில கௌதம் வர, நான் அவர பாத்து, ஏன் சொல்லலனு கேட்டேன். அவர் நெஜமாகவே மறந்து போயிருந்தாரு, organiser வேற.

So அத ஒரு பெரிய mattera எடுத்துக்காம (பெருந்தன்மையோட) "சரி அடுத்த முறை கலந்துக்கறேன்"னு சொல்லிட்டேன். நானும் என் cameraman friend பிரேமும், கொஞ்ச நேரம் அங்க கேமாராவும் கைகளுமா அலைஞ்ச அப்பறம், திடீர்னு கௌதம் என்கிட்டே வந்து, "நாங்க பத்து participants செலக்ட் பண்ணிருந்தோம், அதுல ஒரு பையன் வரல, அதுக்கு பதிலா நீ பாடுறியா"னு கேட்டாரு, நானும் இதுல என்ன இருக்குன்னு நெனச்சிகிட்டு சரின்னு சொன்னேன்.

பிரேம், "என்ன பாட்டு பாடப்போறே"னு கேட்டான். அந்த காலகட்டத்துல, என்னோட இன்னொரு friend ரகுநாத், ஆண் பாவம் படத்துல வர்ற "காதல் கசக்குதய்யா" பாடல டவுன்லோட் பண்ண சொல்லி கேட்டுகிட்டிருந்தான். நானும் டவுன்லோட் பண்ணேன், அத எங்க ஆடியோ லேப்ல போட்டு கேட்டுகிட்டே இருப்போம். So, அந்த பாடல் பாடலாம்னு முடிவு பண்ணேன். Judge யாருனா, டைலாமோ பாடல பாடுனா திருமதி.சங்கீதா ராஜேஸ்வரன். கடைசியா என்னோட முறை வந்துச்சு. பாடறத்துக்கு மேடை ஏறினேன்......

தொடரும்....

http://www.city.sendai.jp/kikaku/kokusai/english/images/simc.jpg
இவ்ளோ பிரம்மாண்டமா இல்லனாலும், ஏதோ இருந்துச்சு