Showing posts with label Feelings. Show all posts
Showing posts with label Feelings. Show all posts

Tuesday, January 24, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 4

போன வருஷம் நான் பார்த்து ரசிச்ச படங்கள், பாடல்களோட லிஸ்ட் இது.
எதுவும் மிஸ் பண்ணலை. உங்க ரசனையோட ஒத்து போகலன்னா ரொம்ப அலட்டிக்காதீங்க. என்னடா இதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானேன்னு கமெண்ட் பண்ண வேணாம்.

படங்கள்
சரியா எண்ணி பார்த்தா, போன வருஷம்தான் நான் நிறைய படங்கள் பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். ரசனையும் கொஞ்சம் liberalஆ மாறிருக்குன்னு தோணுது. லிஸ்ட் போட்டா அது பெருசா மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி போகுது. கொஞ்சம் கூட்டி குறைச்சு, இங்க ஃபைனல் லிஸ்டை கொடுக்கறேன்.

ஜாலியா ரசிச்ச படங்கள் - தமிழ்

  • ஆடுகளம்
  • காவலன்
  • யுத்தம் செய்
  • பயணம்
  • கோ
  • பயணம்
  • அழகர்சாமியின் குதிரை
  • எங்கேயும் எப்போதும்
  • ஆரண்ய காண்டம்
  • வேங்கை
  • தெய்வத் திருமகள்
  • மங்காத்தா
  • முரண்
  • வேலாயுதம்
  • மயக்கம் என்ன
  • ஒஸ்தி
  • போராளி

இதுல சூப்பர்
ஆடுகளம், காவலன், யுத்தம் செய், கோ, அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆரண்ய காண்டம், முரண்

இதுல என்னோட PICK
ஆரண்ய காண்டம்

நான் மொக்கை வாங்கிய படங்கள்

  • சிறுத்தை (first half + சந்தானம் காமெடி மட்டுமே ரசிச்ச விஷயங்கள்), 
  • நடுநிசி நாயகள்
  • எங்கேயும் காதல்
  • அவன் இவன்
  • வந்தான் வென்றான்
  • வாகை சூட வா
  • 7ஆம் அறிவு (ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆவாது), 
  • ராஜ பாட்டை
  • வானம்
இந்த லிஸ்ட்ல, மங்காத்தவையும், தெய்வத் திருமகள் படத்தையும் சேர்க்கலாம். மங்காத்தா புத்திசாலித்தனமா இருக்கறா மாதிரி ஏமாத்தின ஒரு படம். முதல் முறை அஜீத்தும் பாட்டும் படத்தை காப்பாத்தினாலும், ரெண்டாவது தடவை தியேட்டர்ல உட்கார முடியலை. மொக்கையான மேட்டரை நல்லா மூடி மறைச்சு, ஹைப் பண்ணி மக்களை ஏமாத்திருக்காங்கன்னே தோணிச்சு. கோவா படத்துல தெரிஞ்ச சின்ன சின்ன ஸ்மார்டான விஷயங்கள் கூட இதுல இல்லை. தெய்வத் திருமகள், காபி அடிச்ச படம்னு கடைசி வரைக்கும் படத்தோட சம்பந்தபட்டவங்க ஒத்துக்கவே இல்லை. அதுவே எனக்கு செம்ம கடுப்பு. இதுதான் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா? விக்ரமும் நல்லா ஒப்பேத்தினாரு.

பார்க்க முடியாமல் போன படங்கள்
180, காஞ்சனா, வெப்பம், பட்டா பட்டி, மௌன குரு

இந்திய அளவுல ரசிச்ச படங்கள்
Telugu - Alaa Modalaindhi,
Hindi - Pyaar ka Punchnama, Delhi Belly, Dirty Picture

பார்க்க முடியாமல் போனது
Telugu - Dookudu, Sri Rama Rajyam, 100% love, Golconda High School,
Hindi - No one killed jessica, Stanley ka dabba, Shaitan, Buddha Hoga tera Baap, Aarakshan, That girl in yellow boots

மொக்கை
Ra - One - வலிக்காம அடிச்ச படம். அப்பறம் எல்லாம் ஊமை காயம்.

இதுல டெல்லி பெல்லி படத்துக்கும், தமிழ்ல வந்த ஓரம் போ படத்துக்கும் சில ஒற்றுமைகளை பார்க்க முடிஞ்சுது. ஹிந்தி அளவுக்கு இல்லைனாலும், தமிழ்ல வசனம் கொஞ்சம் வெளிப்படையா இருந்துச்சு. அதே மாதிரி, வைர கடத்தல் மேட்டரும்.

உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
சில படங்கள் பத்தி, சில வரிகள்.
  • Harry Poter Final Part - கண்ணீர் மல்க விடை கொடுக்கலாம்னு நினைச்சேன். தனியா படம் பார்த்ததுனால அழ முடியலை :P
  • Kungfu Panda 2 - முதல் பார்ட் அளவு இல்லைனாலும் enjoyable.
  • Hangover 2 - அதே டெய்லர், அதே வாடகை, ட்ரெஸ் கலர் மட்டும் வேற. நல்லா யோசிக்கறாங்க ரூம் போட்டு.
  • Ides Of March - எவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சரியான பொலிடிகல் த்ரில்லர் படம்
  • Source Code - கொஞ்சம் குழப்பறா மாதிரி எடுத்த படம். ஆனா அப்படி ஒண்ணும் இல்லை. 
  • Bridesmaids - பெண்கள் மட்டுமே முக்கிய பாத்திரங்கள்ள இருக்கற இந்த படத்தை எழுதினதும் ஒரு பெண்தான். அவங்களுக்குள்ள இருக்கற பாசம், நேசம், ஈகோ இப்படி நிறைய விஷயங்களை எந்த சப்பைகட்டும் இல்லாம சொல்லிருக்காங்க.
  • X Men First Class - இன்னா கிராபிக்ஸ். இன்னா ஸ்க்ரீன்ப்ளே.
  • Super 8 - momentum எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தறதுனு கண்டிப்பா அவங்க ஊருக்கு போய் ஒழுங்கா படிச்சிட்டு வரணும். சாதாரண சின்ன பசங்க கதைய, ஏலியன் இன்வேஷனோட முடிச்சு போட்டு, அட்டகாசமா present பண்ணிருந்தாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம ஸ்பீல்பெர்க் தயாரிப்பாச்சே.
  • Bad Teacher
  • Horrible Bosses
  • Crazy, Stupid Love
  • Rise Of Planet Of Apes - இந்த படத்துக்காவது Andu Serkisகு ஒரு ஆஸ்கர் கொடுத்தா நல்லா இருக்கும். சீஸர்னு மனித குரங்கா அவர் நடிச்சிருந்த விதம் எனக்கு தெரிஞ்சு வேற யாருமே பண்ண முடியாத ஒரு விஷயம். 
  • Johny English Reborn
  • MI 4 - Brad Bird மேல வெச்ச நம்பிக்கை வீண் போகலை. பின்னு பெடல் எடுத்திருந்தாரு
  • Tin Tin
  • Tangled

பார்க்க முடியாமல் போனது
Fast Five, Cars 2, Rio, Rango, Transformers, Attack the Block, Sherlock Holmes

இந்த படங்களோட என்னை யோசிக்க வெச்ச இன்னொரு முக்கியமான விஷயம் டிக்கேட் ரேட். ரேட் ஃபிக்ஸ் பண்ண சட்டம் இருக்குனு தெரியும். ஆனா நம்ம கேபிள் அண்ணாச்சி சொன்ன அப்பறம்தான் டிக்கேட்டோட ரேட் இவ்வளவுனு தெரிஞ்சுகிட்டேன். முடிஞ்ச வரைக்கும் சூப்பரான சத்யம்ல பாக்கறதுனால அவங்களுக்கு கொடுத்தா பரவாயில்லைனு தோணுது. ஆனா 
டிக்கேட் மட்டும் இல்லாம, பார்க்கிங் + காண்டீன் சமாச்சாரங்கள்ல மத்த தியேட்டர்கள் அடிக்கற கொள்ளை, யாரும் கண்டுகிட்டா மாதிரி தெரியலை. 


ரசித்த பாடல்கள்

அய்யய்யயோ நெஞ்சு - ஆடுகளம்
யாரது - காவலன்
நான் ரொம்ப ரொம்ப - சிறுத்தை
கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
என்னமோ ஏதோ, அக நக - கோ
வாடா பின்லேடா - மங்காத்தா
கொலைகாரி, நேற்று இல்லை - தம்பு வெட்டோத்தி சுந்தரம்
நெஞ்சில் நெஞ்சில், நாங்கை - எங்கேயும் காதல்
சந்திக்காத, ஊசெல்லா, நியாலமே - 180
காற்றில் ஈரம் - வெப்பம்
சர சர - வாகை சூட வா
சில்லாக்ஸ் - வேலாயுதம்
காதல் என் காதல் - மயக்கம் என்ன
வில்லாதி வில்லன் - ராஜ பாட்டை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு
Kutta - Pyar ka punchnama
Kalaya Nijama - Sri Rama Rajyam

எனவே, இப்படித்தான் எனது 2011 சினிமா வாழ்க்கை கழிந்தது. 2012ல் மேலும் நிறைய ரூபாய்களையும், சக்தியையும் செலவழித்து, படங்கள் பார்த்து மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு டாடா :)

Monday, January 23, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 3

புது வருஷம் பொறந்து ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் என்ன எண்ணிப் பாக்கறதுனு சில பேர் கேட்கலாம். என்ன செய்ய. ஏற்கனவே யோசிச்சு, ஹின்ட்ஸ் வேற எழுதி பதிவுல ஏத்தாம போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா படிச்சிருங்க. இதுக்கப்பறம் இன்னும் ஒரே ஒரு பதிவுதான். அப்பறம் வழக்கம் போல மொக்கை பதிவுகளை ஆரம்பிக்கறேன்.

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி... முடிவு

கன்னத்தில் குத்துவிட்டால்


நவம்பர் மாசம் விவாசயத்துறை அமைச்சர் சரத் பவார் வாங்கின அறையோட சத்தம் இந்தியா முழுக்க கேட்டுது. ஹர்விந்தர் சிங்னு ஒரு சீக்கிய இளைஞர் அத்தியாவசிய பொருட்களோட விலையேற்றத்துல காண்டாகி, நம்மளை மாதிரி பதிவு மட்டும் போடாம அமைச்சரோட கன்னத்துல ஒரு அறையும் போட்டாரு. 
அடிச்சு முடிச்சிட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது என்னோட பதில்னு கையில கத்திய வெச்சிகிட்டே சத்தமும் போட்டாரு. இதுக்கப்பறம் இன்னும் நிறைய பேர் அடி வாங்குவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கலை. still, கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துட்டு வராங்கன்னு நினைக்கறேன். மாட்டிக்கமாட்டேன்னா கண்டிப்பா நானும் உதை கொடுக்க தயார் :)


கால்-திண்டாட்டம்


அடுத்த அதிர்ச்சி இண்டோர் நகரத்துலேர்ந்து வந்த செய்தி. அந்த ஊர் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களோட விளையாட்டுக்கான செலவுகளை பார்த்துக்க, கிரிக்கேட் ஸ்டேடியத்தை சுத்தம் பண்ணாங்களாம். என்ன கருமமோ. இந்த ஒரு செய்தியே, இந்தியால மற்ற விளையாட்டுகளோட நிலைமையையும்,  கிரிக்கேட்டுக்கு நாம தர தேவையில்லாத முக்கியத்துவத்தையும் காட்டிச்சு. தங்களோட கிழிஞ்ச ஷூக்களையும், விளையாட தேவையான பழைய பொருட்களையும் மாத்த இந்த காசு உதவும்னு அந்த வீரர்கள் சொல்லிருக்காங்க. இந்த நிலைமை அந்த மாநிலத்தில மட்டும்தானா இல்லை எல்லா இடத்துலையுமானு தெரியலை. ஒழுங்கா விளையாட தெரிஞ்சதா சொல்லிக்கற கிரிக்கேட்லையும் மரண அடி வாங்கிட்டு இருக்கோம். இதுக்கு செலவழிக்கற பணத்துல கால்வாசிய மத்த விளையாட்டுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஐடியாக்களை லட்சம் பேர் சொல்லிருப்பாங்க. என்ன நடந்துச்சு. எல்லாரும் ஒரு அறை கொடுத்தா சரியா வரும்னு நினைக்கறேன். 


குடிவெறி


கொலைவெறி ஹிட்டான கையோட தமன்னாவோட பர்த்டே பார்டில தனுஷ் போதைல பாடின கொலைவெறிக்கும் நல்ல ஹிட்ஸ் வந்துச்சு. கூடவே நல்ல போதைல தமன்னாவும் பூனம் பாஜ்வாவும் இருக்காங்க. வேற யாரெல்லாம் இருந்திருப்பாங்க்ன்னு ஊகிக்க முடியுது. இதை பார்த்த அப்பறம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ஒண்ணும் திருந்திடப்போறதில்லைனு நினைக்கறேன். தொடர்ந்து நடிகர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்போம். பாலாபிஷேகம் பண்ணுவோம். கோயில் கட்டுவோம். வாழ்க பாரதம்.

அடுத்த பதிவுல. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள்,  2011 பாடல்கள் + படங்களை பத்தி சொல்லிட்டு, இந்த வருட எண்ணிப்பார்த்தேனை முடிச்சிக்கறேன்.. நன்றி :)

Saturday, January 7, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 2

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..

ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்

நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல  பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும்  சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க.  இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india

டின் டின்

சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.

கொலைவெறி

2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.

தற்கொலை


தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....

Wednesday, January 4, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 1


வருஷக் கடைசில பதிவு போடறேன்னு சொன்னது வழக்கம் போல லேட் ஆனதுக்கு வழக்கம் போல மன்னிக்கனும். போன வருஷத்தை எண்ணிப் பார்த்ததுல, சில விஷயங்கள் நல்லதாவும், பல விஷயங்கள் கெட்டதாவும் நடந்திருக்கு. கெட்ட விஷயங்களை வாழ்க்கைப் பாடமா எடுத்துகிட்டேன். வேற என்ன பண்றது. இப்போ, போன வருஷம் நடந்து, பதிவு போட முடியாம போன சில விஷயங்களைப் பத்தி கடகடன்னு சுருக்கமா சொல்லிடறேன். அதை நீங்க விரிவா படிச்சு தெளிவாய்டுங்க :)

பவர் 

கரென்ட் கட் பிரச்னை பெருசாகி அதுவும் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமா இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, தொடர்ந்து பல இடங்கள்ள பவர் கட் தொடர்ந்துட்டேதான் இருக்கு. என் நண்பர்கள் பல பேர் புலம்பிட்டே இருக்காங்க. இதனால அவங்களோட முக்கியமான வேலைகளும் கெட்டு போறதா பீல் பண்றாங்க. இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சுரணை இழந்து அதை தட்டி கேட்க மறந்துட்டாங்க. அடுத்த எலெக்ஷன்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ (ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்ல இவங்களேதான் வின் பண்ணாங்க). யார் செஞ்ச புண்ணியமோ தெரியலை, என் ஏரியால கரென்ட் கட் ஆகறதே இல்லை. (நான்  திருவல்லிக்கேணி வாசி). அதே மாதிரி இந்த லைப்ரரிய மாத்தற திட்டமும் ஏகோபித்த எதிர்ப்ப சம்பாதிச்சிருக்கு. மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம். இவங்களுக்கு யார் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லிதராங்கன்னு தெரியலை.

BBC பறந்து போச்சு 

என் BBC வேலையை விட்டதைப் பத்தி --> இங்க ரெண்டாவது பத்தில  எழுதிருந்தேன். இன்னமும் சரியான வேலை கெடைக்கல. மத்த துறைகள்ல இருக்கற ஒரு முக்கியமான விஷயம் மீடியால இல்லைன்னு படுது. வேற எங்கயுமே, அந்த கம்பெனி HR ஆளை நேரடியா காண்டாக்ட் பண்ணி வேலை கேட்கலாம். அவங்களும் பொறுப்பா இருக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க. ஆனா, மீடியால மட்டும் HRனு ஒரு ஆள் இருந்தாலும், நாம அனுப்பற resume ஒழுங்கா போய் சேருதானு தெரியலை. கால் பண்ணாலும் ஒழுங்கான பதில் வரதில்லை. முக்கியமா ஏதாவது ஒரு வடிவத்துல சிபாரிசு தேவைப்படுது. கடுப்பா இருக்கு. சும்மா இருக்ககூடாதுன்னு பல வேலைகளை செஞ்சிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம், நமக்குன்னு ஒரு வேலை இல்லாமலா போய்டும்.

Revolution  2020

இந்த வருஷம் வெளியான சேட்டன் (மலையாளி இல்லை) பகத்தோட இந்த நாவல், ப்ரீ ஆர்டர் பண்ணி, ரிலீசுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து சேர, ஒரே மூச்சுல படிச்சேன். அவரோட க்ளீஷே நிறைய இருந்துது.  ஒவ்வொரு கேரக்டரோட உணர்வுகளை கரெக்டா சொல்லிருந்தாலும், ஒரு கட்டத்துல கதை எழுத்தாளரோட கண்ட்ரோல்ல இல்லையோன்னு தோண ஆரம்பிச்சுது. க்ளைமாக்ஸ்ல அது conform ஆச்சு. ஆனாலும் சேட்டனுக்கு மற்றுமொரு வெற்றி.

Facebook Page
என்ன கருமத்துக்கெல்லாம் page ஆரம்பிக்கறதுன்னு இல்லையா. இந்த page பாருங்க. https://www.facebook.com/Tamilanchors . என்ன ஒரு மகா வெட்டி வேலை. சாதாரண போட்டோ இல்லமா, டிவில வரதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேற போடறாங்க. இதை சில பேர் ஷேர் வேற பண்ணாங்க. கலி முத்திடுச்சுனு தெரிஞ்சுது.

நானும் ஜட்ஜ் ஆனேன்


காலேஜ்ல நடந்த பாட்டு போட்டியோட முதல் ரவுண்டுக்கு என்னை நாட்டமையா வர சொல்லி என் ஜூனியர்ஸ் கூப்டாங்க. முதல்ல தயக்கமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். அங்க போன அப்பறம், இன்னும் பல பேர் என்னை ஞாபகம் வெச்சிருக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. வழக்கம் போல பல ப்ளாஷ் பேக் நிகழ்வுகள் வந்து மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துது. என்ன செய்ய. its all fate.

தொடரும்.....

Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..

    

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Friday, October 22, 2010

இவங்க பண்ற காமெடிக்கு.....

எங்களுக்கு ஜர்னலிசம் சொல்லி கொடுக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் சொன்னாங்க. தமிழ்நாட்ல, ரஜினி, கருணாநிதி அண்ட் ஜெயலலிதா, இவங்க எது பண்ணாலும் அது முக்கியமான நியூஸ். இதுல முக்கியமா நம்ம சூப்பர் ஸ்டார், முக்கினா முனகினா, எது பண்ணாலும் நியூஸ். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரஜினி எப்பவுமே விளம்பரங்கள் பின்னாடி ஓடினது இல்லை. அவர் பின்னாடிதான் எல்லா விளம்பரங்களுமே. சென்னைல, NDTV ஹிந்து அப்படின்னு ஒரு சுமாரான நியூஸ் சானல் வந்துகிட்டு இருக்கு. நடுவுல, ஹாண்ட்ஸ் அப் அப்படீங்கற ப்ரோக்ராம்ல, வெங்கட் பிரபு + தமிழ் பட டைரக்டர் + இந்த சானல், எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி பரபரப்பு க்ரியேட் பண்ணாங்க.அப்போதான் நிறையே பேருக்கு இந்த சேனலைப் பத்தி தெரிய வந்துச்சு.

இதே சேனல்ல, சென்னை ஸ்பீக்ஸ் அவுட் அப்படின்னு தரை மொக்கையா ஒரு விவாத நிகழ்ச்சி போய்கிட்டு இருக்கு. போன வாரத்துல ரஜினிய  வெச்சி ஏதொ டாபிக். நிறைய பேர் அதைப் பத்தி சொன்னதால, யூ டியூப்ல பார்த்தேன். ஞானி + சுதாங்கன் ரஜினிக்கு எதிராகவும், சின்மயி + ஸ்ரீதர் பிள்ளை ஆதரவாகவும் பேசினாங்க. உளறினாங்கனு சொல்றதுதான் கரெக்டா இருக்கும். எந்த சைடும் ஒழுங்கா பேசாம, ஒரே மேலோட்டமான விவாதமாவே இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த பதிவு எதுக்குன்னா, தயவு செஞ்சு இந்த மாதிரி மொக்கை ப்ரோக்ராமை என்கரேஜ் பண்ணாதீங்க.

இதோ அந்த ரஜினி விவாதம் எபிசொட்....











ஞானி + சுதாங்கன் ரெண்டு பேருக்கும் நல்லாவே வயசாகிடுச்சுன்னு நினைக்கறேன்... இதுல சுதாங்கன் வேற தப்பு தப்பா ஸ்டாடிஸ்டிக்ஸ் கொடுக்கறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சின்மயி அவங்க ட்விட்டர் பக்கத்துல, "ரஜினிக்கு ஆதரவா பேச நாங்க இருந்தோம், எதிர்த்து பேசதான் ஆள் இல்லை. அதனாலதான் சுதாங்கன்னும் ஞானியும் பேசினாங்க. அவங்க ரெண்டு பேருமே ரஜினி ரசிகர்கள் தான். ஆள் இல்லாததால, அவங்க பேசினா பிரச்னை வராதுன்னு நினைச்சதால, அவங்கள பேச வெச்சாங்க"ன்னு சொல்லிருக்காங்க.. யார் இன்னா சொன்னான் என்ன, தூற்றுவார் தூற்றட்டும். கீழ இருக்கற படங்களைப் பாருங்க. ஒரு மெகா ஹிட்டு படம் கொடுத்த மனுஷன் மாதிரியா இவர் இருக்கறாரு...???

 
 

Sunday, September 26, 2010

மற்றும் பல... (26/9/2010)

ஒரு வழியா வேலை கிடைச்சிடுச்சுனு சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் அவ்வளவு தீவிரமா தேடி, எல்லாம் எடத்துலயும் NO VACANCY போர்ட் பார்த்து, காண்டாகி, வேலையே கிடைக்கலைன்னு கத்தலை. என்னோட முதல் இன்டர்வியூ  இதுதான். அதுலயே வேலை கிடைச்சிடுச்சு. அதனாலயே ரொம்ப சந்தோஷம். காலை முதல் இரவு வரை அயராது உழைக்கர்தால, பதிவ டைம் தேட வேண்டியதா இருக்கு. வழக்கம் போல, எதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதனும்னு நினைக்கும்போது, ஒண்ணு வேற யாராச்சும் எழுதிருவாங்க, இல்லை எனக்கு மறந்துரும். அது மாதிரிதான் எந்திரன் பத்தி எழுத நினைச்சதும்....
------------------------------------------------------------------------------------------------------------------
காலைலதான் எழுதலாம்னு நினைச்சேன், நம்ம கேபிள் முந்திகிட்டாரு. ஆனா, அவரு எழுதின பாயிண்ட் of வியூ வேற. நான் எழுத நினைச்சது, இந்த தியேட்டர்கள் பண்ற அநியாயத்தை பத்தி. சென்னைல முக்கால்வாசி தியேட்டர்கள்ள, முதல் மூணு நாள் டிக்கெட்டையும் கார்பரேட்டுக்கு குடுத்துட்டாங்க. என்ன ஒரு அநியாயம். நிறைய காசு தரவங்களுக்கு தான் டிக்கெட்டுன்னு, இது என்ன ஏலத்துல எடுக்கறா மாதிரி. இன்னொரு முக்கியமான விஷயம், முதல் மூணு நாள் டிக்கெட்டு மாயாஜால்ல இருந்தாலும், அங்க அந்த மூணு நாளைக்கும், ரூ.320 தான் டிக்கெட் ரேட். காம்போ ஏதொ சாப்ட தராங்க. அது கம்பல்ஸரியாம். செம்ம டென்ஷன் ஆகிட்டேன். மீதி டிக்கெட் இருக்கற தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு, இல்ல, அட்டு தியேட்டரா இருக்கு. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.
p.s. படம், முதல் நாலு நாளைக்கு எல்லாம் இடத்துலையும் fullu. இப்பவே  வெற்றி விழா கொண்டாடிடலாமே ???   
------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை ஆரம்பிச்ச முதல் வாரத்துலயே, பசங்க படக்குழுவைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கெடச்சுது. சசிகுமார் நிஜமாவே சூப்பர் ஆளு. ரொம்ப எளிமையா இருந்தாரு. பேசறாரு. செம்ம காஷுவலா இருக்காரு. எல்லாரும் பார்த்து கத்துக்கணும்...
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சிலர் முதுகுல குத்துவாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்ச சில பேர் முகத்துலேயே குத்திட்டாங்க. பல நாள் பழகின நட்பை, எப்படி நொடியில தூக்கிப் போட்டு அசிங்கப் படுத்தமுடியுதுன்னு தெரியலை. நம் முகத்துக்கு நேர நம்மை பத்தி தப்பா சொன்னா கூட பரவாயில்லை, மத்தவங்க கிட்ட, ஏதொ நாம கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசறது எல்லாம் சுத்த பத்தாம் பசலித்தனம். அதுவும் அவங்க குடுக்கற justifications எல்லாம் கேட்கணுமே, அட அட அட, ரொம்பவே அருமையா இருக்கும். அது ஏன் கூட இருக்கற இவ்வளவு நாள் நம்ம குறைகள் இவங்களுக்கு தெரியாம, பிரியக்  காரணங்கள் தேடும்போது மட்டும் கிடைக்குதுன்னு தெரியலை. இதை எல்லாம், எக்கச்சக்க டைம் + எனர்ஜி செலவு பண்ணி, இவங்களுக்காக உதவின சமயங்கள்லையே சொல்லிருந்தா, அப்பவே கொஞ்சம் நம்மளோட பாசத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம். இப்ப, ஏமாற்றமும், கண்ணீரும்தான் மிச்சம். அவங்கள சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை, என்னை உதைக்கணும். இவங்களையெல்லாம் நான் ஒதுக்கப்போரதில்லை. எனக்கு நல்ல பாடங்கள கத்து கொடுத்திருக்காங்களே. அதனால, இன்னும் என் நண்பர்களாதான் பார்க்கறேன். இதை படிக்கற என் நண்பர்கள் சிலருக்கு, உங்களை குத்தம் சொல்றா மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொதுவா சொன்னேன்...
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் லண்டன் லேன்சை வருக வருக என வரவேற்கிறேன்....சீக்கரமா வந்து ட்ரீட் குடுங்க பாஸு..
------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வாரங்கள்ல, இன்ஸோம்ன்யா, அப் இன் தி ஏர் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் பார்த்தேன். இன்ஸோம்ன்யா சூப்பரா இல்லைனாலும், நல்லா இருந்துச்சு. நம்ம அல்-பசினோ பின்னிட்டாரு. ராபின் வில்லியம்சும் நல்லா நடிச்சிருந்தாரு. அப் இன் தி ஏர் படம், கொஞ்சம் எதார்த்தத்தோட நல்லா இருந்தாலும், மொக்கையா முடிச்சிட்டாங்க. பாஸ், ரொம்ப நாள் கழிச்சு, தியேட்டரே வாய் விட்டு சிரிச்சிகிட்டே இருந்ததை பார்த்தேன். எல்லாரும் சந்தானத்தை பாராட்டினாலும், இப்படி ஈகோ எதுவுமே இல்லாம நடிச்ச ஆர்யாவுக்கு ஒரு சபாஷ். இதுலயும் படத்தோட முடிவு மொக்கை...
------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்கேப் சினிமாஸ்ல couple seatனு  சொல்லி ஏமாத்தறாங்க (எதுவும் விபரீதமா நினைக்காதீங்க). அதுவும், அறுவது ரூவா பார்க்கிங்குக்கே போயிடுது. ஆனா, எப்பவும் கூட்டம் அள்ளுது. கவனிக்க, இந்தியா ஏழை நாடு.
------------------------------------------------------------------------------------------------------------------
காமன் மேனோட காசையெல்லாம், காமன்வெல்த்னு, வெளுத்துக்கட்டி, ஊழல்ல புது சாதனையே பண்ணிருக்காங்க. மீடியாவோட எந்த குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லாம, தட்டி கழிக்கறாங்க. இப்ப, இத வெச்சு பார்வர்ட் ஜோக் எல்லாம் வருது. நாட்டுக்கே வெட்க கேடான இத வெச்சி, ஒரு கூட்டம் உட்கார்ந்து, காமெடி பண்ண யோசிச்சிகிட்டு இருக்கு. ஊழல் பண்றவங்களுக்கு, இவங்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ரெண்டு பேருமே பொறுப்பில்லாதவங்கதான். இப்ப முடிஞ்ச ரமணா படத்துல காமிச்சா மாதிரி, இவனுங்க எல்லாரையும் எதாவது பண்ணனும்னு தோணுது... ஓ@!#@ தேவ@!#$%(&%)$&)....
------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா டக்கருன்னா என்ன????

Saturday, July 31, 2010

இசை விமர்சனம் - கொஞ்சம் பெரிய முன் குறிப்பு

இனி வரும் இசை சம்பந்தப்பட்ட பதிவுகள் விமர்சனம் அல்ல. ரசனைப் பகிர்தல் என்று சொல்லலாம். பொதுவாகவே திரைப்படங்களைப் பற்றி பேசும் அளவுக்கு, இங்கே இசையைப் பற்றி நான் பேசுவதில்லை. பிடித்த, பிடிக்காத இசையைப் பற்றி விவரிக்க, சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருப்பதே பொதுவான காரணம். பயன்படுத்தும் ஓரிரு வார்த்தைகளும், அனேக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, படிக்கும்போது, எனக்கே புதியதாக இருக்காது. இப்படி பல இசைப் பற்றிய பதிவுகள் எழுதி, அதை அழித்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பது. போரடித்தாலும், படிப்பவர்கள் படிக்கட்டும் என்று இப்போது துணிந்துவிட்டேன். யார் வேண்டுமானாலும் இசையை விமர்சனம் செய்யலாம் என்ற நிலையில், என்னுடைய இந்தப் பதிவுகளை விமர்சனம் என்று கூற விரும்பவில்லை. என் இசை அறிவுக்கு எட்டிய விஷயங்களை, என் ரசனையைப் பொருத்து, அதைப்  பதிவு செய்கிறேன். இதில் கண்டிப்பாக உங்கள் ரசனைக்கு மாறான கருத்துக்கள் இருக்கும். எனவே, தேவையில்லாமல் விவாதித்து அலட்டிக்கொள்ளாதீர்கள்.

இவ்வளவு பெரிய முன்குறிப்புக்கு அவசியமில்லைதான். இருந்தாலும் எழுத ஒரு விஷயம் கிடைத்து விட்டதல்லவா. விட்டு விட மனமில்லை. இசையைப் பற்றி நான் பேசுவதற்கான காரணம், (ஒரு சின்ன தம்பட்டம்) நான் ஒரு பாடகன். முறையான சங்கீதம் கற்றிருக்கிறேன். சில பல காரணங்களால் தொடர முடியவில்லை. தொடருவதற்கு எண்ணங்கள் இருக்கின்றன. இசையைப் பற்றிய பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. இன்றும் பல்வேறு மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறேன். இது போதுமென நினைக்கிறேன் :P

இந்தத் தருணத்தில், நண்பர் அகிலன், வல்லினத்தில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையிலிருந்து சில வார்த்தைகள், "இசையோடு வருபவர்களை காட்டிலும் சினிமா கனவோடு வருபவர்கள்தான் அதிகம். ஒன்றை கண்டிப்பாக நம்புங்கள். சினிமா இசையின் காலம் முடிந்து விட்டது அதன் கடந்த கால வெற்றிகளில்தான் பலரும் அதன் ஆயுளை நீட்டி வருகிறார்கள். புதிய இசைகளுக்கான வாய்ப்புகள் விஸ்தாரமாக இருக்கிறது. அவைகளுக்கான தளம் சினிமா அல்ல. அப்படி வலிய முயற்சிக்கும் போது கார்த்திக்ராஜாவின் அச்சமுண்டு அச்சமுண்டு இசைபோலவோ அல்லது உன்னைப் போல் ஒருவன் இசைப்போலவோ யாராலும் கவனிக்கப்படாமல் போகும். சினிமாவில் இசை கவனிக்கப்படுவது இல்லை. எந்த சினிமா விமர்சனமும் இசையை பொருட்படுத்தியதும் இல்லை" - உன்னைப்போல் ஒருவனைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்து, வழிமொழிகிறேன்.

சரி, அடுத்த பதிவிலிருந்து வேலையை ஆரம்பிக்கிறேன்.

Friday, June 18, 2010

சில குழப்பங்கள்....

பொதுவாகவே, ரொம்ப யோசிச்சா, அதனால பல குழப்பங்கள் வரும்னு சொல்லுவாங்க. நம்மைச் சுத்தி நடக்கற சில பல விஷயங்களும், இந்த மாதிரி குழப்பங்களுக்கு காரணமா இருக்கும். அப்படி, நான் கவனிச்ச, தெளிவு பெறாத சில விஷயங்கள தான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன்.

குழப்பம் 1
இந்த, கட்டாய மதமாற்ற சட்டம் மாதிரி, கட்டாய ஹெல்மெட் சட்டம் ஒண்ணு எடுத்துட்டு வந்தாங்க. நம்ம அம்பி டிராபிக் ராமாசாமி பேரு கூட அதுல அடி பட்டுச்சு. இப்போ அந்த சட்டம் என்ன ஆச்சுன்னு எனக்கு ஒரே குழப்பம். ஏன்னா, நான் கடந்த ஒண்ணு ரெண்டு மாசமா, ஹெல்மெட் போடாம தான் வண்டி ஓட்றேன். என்னை சுத்தி, பல பேர் அப்படியே. தைரியமா சிக்னல்ல நிக்கறாங்க, போலீஸ் முன்னாடியே நல்லா கைய கால ஆட்டிட்டு போறாங்க. ஆனா, திடீர்னு ஒரு நாள், அவசரமான வேலையா திருவான்மியூர் பக்கம் போயிட்டிருக்கும்போது, ஒரு மாமா புடிச்சு, அவசரத்துல, நியாயம் பேச நேரமில்லாம, அம்பது ரூவா மொய் எழுதிட்டு கிளம்பினேன். திரும்பி அதே வழில வரும்போதும் ஹெல்மெட் இல்லாமா தான் வந்தேன். ஆனா யாரும் தடுக்கலை. இது என்ன எழவு சட்டம்னு, ஒரு ஹேரும் புரியல. யாராவது தெளிவுப்படுத்துங்க. ப்ளீஸ்..போன வாரத்துல ஒரு நாள், நம்ம கேபிளார், ஆட்டோகாரங்களைப் பத்தி ஒரு பதிவு எழுதினாரு. அதுல பின்னூட்டமா, என்னோட இந்த குழப்பத்தை எழுதினேன், பதில் எதுவும் கிடைக்கலை, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

குழப்பம் 2
இதுவும் ஒரு நீதி நியாயம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். கல்வி கட்டணம எல்லா பள்ளிகள்ளையும் இவ்வளவு தான் இருக்கணும்னு ஒரு சட்டம்  வந்துச்சே, அது என்ன ஆச்சு. ஏதொ, நாகர் கோவில், திருநெல்வேலி பக்கம் ரெண்டு மூணு பள்ளிகள், அளவுக்கு அதிகமா கட்டணம் வாங்கறாங்கன்னு கேள்விப்பட்டு நடவடிக்கை எடுத்தாங்களாம். எல்லா பள்ளியும் இப்போ திறந்தாச்சு. சென்னைல இருக்கற எல்லா பள்ளிகல்லையும் இன்னும் பழைய கட்டணம்தான் வசூலிக்கப்படுது. இப்போ அந்த சட்டம் இருக்கா, இல்லையா??  யாராவது கம்ப்ளைன்ட் குடுத்தாதான் நடவடிக்கை எடுப்பாங்களா??? இவங்களுக்கு என்ன தான் பிரச்னை?? மறுபடியும், யாராவது தெ.படுத்துங்க..

குழப்பம் 3
பெண்ணியம் பெண்ணியம்னு நிறைய பேர் பேசறாங்களே, அப்படின்னா என்ன?

குழப்பம் 4
நாத்திகம்னா  அத்திகவாதிகளா குத்தம் சொல்றதா?? அதுவும் முக்கியமா ஒரு மதத்தை மட்டும் குறிவெச்சு தாக்கனுமா?? ஆத்திகவாதிகள் என்ன செய்யறாங்க?? ஒரு காலத்துல வாழ்ந்ததா நம்பப்படுற சிலரை கடவுளாய் பாக்கறாங்க. மூதாதையர்கள், முனிவர்கள் எழுதி வெச்சிட்டு போன வேதங்களை படிக்கறாங்க. முடிஞ்ச வரை அதை கடை பிடிக்கறாங்க. அப்படி பார்த்தா, இந்த நாத்திகமும் ஒரு வகைல மதம் தான?? நூறு வருடங்களுக்கு அப்பறம் வர சந்ததி, நாத்திகத்தை எப்படி அணுகுவாங்க ?? இவங்க இப்போ எழுதற புத்தகங்கள், வெக்கற சிலைகள் எல்லாத்தையும் என்ன பண்ணுவாங்க?? யாரோ எழுதிவெச்சது, எல்லாம் மூட நம்பிக்கை, பகுத்தறிவு வேணும் அப்படி இப்படின்னு அவங்களும் இதே மாதிரி உளறுவாங்களா ??? அப்படிபார்த்த இப்போ இவங்க சொல்றது எல்லாமே வேஸ்ட். பாவம் நாத்திக மதம்.... (வழக்கம் போல நாத்திகவாதிகள், மொக்கையா பின்னூட்டம் போடாம, புள்ளகுட்டிங்கள போய் படிக்க வைங்க)

குழப்பம் 5
சுறா, வேட்டைக்காரன் எல்லாம் ஹிட்டா???

குழப்பம் 6
நான் எப்படி இவ்வளவு மார்க் எடுத்து பாஸ் பண்ணேன்??

குழப்பம் 7
அடுத்து என்ன பண்ணப் போறேன்.

குழப்பம் 8
அடுத்து என்ன பதிவு போடறது??

குழப்பம் 9 
இந்த பதிவுக்கு, பின்னூட்டமும், வாக்குகளும் கிடைக்குமா கிடைக்காதா???

இப்போ புரியுதா?? என் வழி, தனி வழி.....

Sunday, May 30, 2010

மற்றும் பல...

இனிமே, பதிவு எழுத நேரமே இல்லைன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே மக்கள், "ஆமா, நீங்க ரொம்ப பிஸி, அதான, அட போயா"னு கத்தறாங்க. அதனால, இனிமே அப்படி சொல்ல வேணாம்னு பாக்கறேன். இருந்தாலும், திடீர் திடீர்னு காணாம போறதுக்கு காரணம் இருக்கணும் இல்லையா, அதுவும் இல்லாம என் ரசிகப் பெருமக்கள் வேற வருத்தப்படுவாங்களா, அதனாலா ஒரு சின்ன விளக்கம் கொடுக்க கடமை பட்டிருக்கேன்..

பதிவு எழுதாம இருக்கா இப்போ ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சின்னதா நான் ஒரு internship பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்து, i just run of ideas a bit fast. தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதேன்னு நினைக்காதீங்க, தமிழ்ல கரிக்டா சொல்ல முடில. மனசுல இருக்கறத, சரியா பதிவு வடிவத்துக்கு மாத்த முடியல. வேற சில பிரச்சனைகளும் இருக்கு. ஆனா, அதெல்லாம் ஒரு நாலு வருஷம் கழிச்சு சொல்றேன், ஞாபகப்படுத்துங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
திரை விமர்சனப் பதிவுகள், ரொம்பவே clicheவா ஆகிட்டு வருது. வார்த்தைப் பிரயோகம், பாராட்டும்/திட்டும் விதம், எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. என்னோட சில விமர்சனங்களும் அப்படி மாறி வர்றத உணர்ந்து தான், ஒரு பத்தில விமர்சனம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இருந்தாலும், இன்னமும் நம்ம கேபிள் ஷங்கர் சாரோட பதிவுகளுக்கு, ஹிட்ஸ் குவியுது. அவர், சத்யம் தியேட்டர், சன் டிவி, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஆகிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
சுறாவோட தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டேன். வழக்கம் போல விஜய், "படம் ஹிட்டு"ன்னு பெட்டி குடுக்க, அடுத்த நாளே ரெட் கார்ட் போடப் போறாங்கன்னு செய்தி வருது. இதையே படமா எடுத்துருக்கலாம், செம்ம காமெடியா இருந்திருக்கும் and இரும்புகோட்டை முரட்டு சிங்கம், எனக்கும் ரொம்ப புடிச்சுது. முக்கியமா, அந்த translator சாம்ஸ் மற்றும் பாஸ்கர், காட்சிக்கு காட்சி கோல் அடிக்கறாங்க. பாடல்கள் ஒண்ணும் வேலைக்கு ஆகல. மறுபடியும், ஜி.வி.பிரகாஷ்சுமார் தான். முக்கியமா, குழந்தைகள் படத்துல, அந்த லக்ஷ்மி ராய் பாட்டு, totally irrelevant...
------------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு முன்னாடி, என் ஆங்கில அறிவுக்கு வந்த சோதனையைப் பத்தி எழுதியிருந்தேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, இந்த இரண்டு வருடங்கள்ல, என் ஆங்கிலம் கொஞ்சம் நல்லாவே improve ஆகிருக்குன்னு நினைக்கறேன். சில வார்த்தைகள், வாக்கியங்கள், பீட்டர்ல மட்டுமே சிந்திக்க வருது. முக்கியமா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்கவே மாட்டேங்குது. (and vice-versa). எப்படியோ, நானும், பீட்டர்ல கொஞ்சம் சீன் போட முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. பார்க்கலாம், 'எதாவது' நடக்குதான்னு... ;)
------------------------------------------------------------------------------------------------------------------
வேலை இன்னும் கிடைக்கல, கிடைச்ச அப்பறம் கண்டிப்பா சொல்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
"உன் பிரச்சனைக்கு அவன் காரணமா, இல்ல இவன் காரணமா இல்ல அந்த பொண்ணு காரணமா"னு கேள்வி கேட்ட என் நண்பன் கிட்ட, சமீபத்தில் நான் உதிர்த்த தத்துவம்.. "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, எல்லாத்துக்கும் என் எண்ணமும் செயலும் மட்டுமே காரணம். வேற யாரும் இல்லை. அதனால FV". (fv means freeya vidu). கரெக்டாதன சொல்லிருக்கேன். Sometime i get too philosophical you see.. :P..

இந்த நேரத்துல, வேற ஒரு காமெடி நினைவுக்கு வருது. போன வருஷம், என் பேரைச் சொல்லி, எடை பாக்கற மெஷின்ல, என் நண்பிகள் சில பேரு, சீட்டு எடுத்தாங்க, (என்ன பாசம் பாருங்க) அதுல என்ன போட்டிருந்துதுனா, "நீங்கள் சிந்தித்து கொண்டே இருப்பாதால், உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது". இப்போ நினைக்கறேன், "So true"
------------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் சொல்லிட்டேன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கறேன். மீண்டும், மீண்டு வருக... இப்போதைக்கு நான் ஜூட்டு...

எங்க போயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்...

Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

Sunday, March 21, 2010

குழப்பMATICAL

மு.கு - தலைப்பு கொடுத்து உதவிய பாலா அண்ணாவிற்கு நன்றி...

என்ன எழுதறது, எப்படி எழுதறதுன்னு ஒண்ணுமே புரியல. ஆனா, எழுத மட்டும் நிறைய விஷயம் இருக்கு. நான் பார்த்த விண்ணைத்தாண்டி வருவாயா, 3 இடியட்ஸ், படங்களை பத்தி எழுதறதா, இல்ல IPL பத்தி எழுதறதா, இல்ல சாரு நித்யானந்தா, சாரி, சாரு நிவேதிதா பத்தி எழுதறதா, இல்ல பதிவுலகத்துல பல முறை பதிவப்படுற ராஜா-ரஹ்மான், அஜித்-விஜய், ஆத்திகம்-நாத்திகம் மாதிரியான விஷயங்கள் பற்றிய என்னோட எண்ணங்களை எழுதறதா, இல்ல என் ரிசர்ச் பத்தி எழுதறதானு, இப்படி பத்தி பத்தியா எழுத விஷயம் இருந்தும், அவகாசமும்  இல்ல, பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

போஸ்ட் எழுதுவது எப்படின்னு நான் பல பேருக்கு அட்வைஸ் பண்ண காலம் போய், இப்போ நானே திருவிழாவுல தொலஞ்ச குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டிருக்கேன். ஆனாலும், பாடின வாயும், ஆடின காலும், எழுதுன கையும் சும்மா இருக்காதுன்னு சொல்றா மாதிரி, வந்துட்டு சும்மா போகக் கூடாது இல்லையா, அதனால ஒரு சில விஷயங்களை சொல்லிட்டு போறேன். என் முதுகலைப் பட்டப் படிப்பு இன்னும் இரண்டு மாதங்கள்ல நிறைவடையுது. என் மேல அக்கறையுள்ள பல பேர், அடுத்து என்ன பண்ண போறேன்னு பார்க்கும்போதெல்லாம் விசாரிக்கறாங்க. ஆனா, சாமி சத்தியமா சொல்றேன், அடுத்து என்ன பண்றதுன்னு நான் இன்னும் முடிவு பண்ணலை. எனக்கு எல்லாமே குழப்பமாதான் இருக்கு. நான் இளங்கலை (UG) சேரும்போதே எந்த திட்டமும் போட்டு சேரலை. எல்லாரும் படிக்கறா மாதிரி என்னால ஒரு இடத்துல உட்கார்ந்து, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க முடியாது.

என் அண்ணன், "உன்னை மாதிரி ஆளுங்களுக்குனே விஸ் காம், எலக்ட்ரானிக் மீடியா படிப்பு இருக்கு. அப்ளை பண்ணு"னு சொல்லவே, நானும் விண்ணப்பிச்சு, ஒரு வழியா படிச்சும் முடிச்சேன். அப்பவே எங்க வூட்ல சொன்னேன், வேலைக்கு போறேன்னு. ஆனா, வீட்ல ஒரு முதுகலை பட்டதாரி கூட இல்லையே, நீ முயற்சி பண்ணலாமேன்னு சொல்ல, அண்ணா யுனிவர்சிடீல நமக்கெல்லாம் கிடைக்காதுன்னு அசைக்க முடியாத நம்பிக்கையோட நானும் விளையாட்ட அப்ளிக்க, அது வினையாகி, நான் நுழைவுத் தேர்வுல செலக்ட் ஆகி, இப்போ இப்டி பதிவிகிட்டு இருக்கேன். அடுத்து ஏதாவது டி.வி சேனல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமான்னு யோசனை பண்ணிகிட்டிருக்கேன்.

ரொம்ப தெனாவட்டா பேசறதா நினைக்காதீங்க. என் நிலைமை அப்படி... இருந்தாலும், ஏதாவது பண்ணிருவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஏன்னா இது வரை என் வாழ்க்கைல எதுவுமே நான் பிளான் பண்ணதில்லை. ஆனாலும் நான் பெருசா எதுவும் கவலை இல்லாம, நல்லாதான் இருக்கேன். இனிமேலும் அப்படியே தான் இருப்பேன்னு நினைக்கறேன். பழகிடுச்சுல்ல. பாக்கலாம் ஏதாவது நடக்காமலா போயிரும். அதானால, என்னுடைய இந்த குழப்பமான மன நிலைய புரிஞ்சிகிட்டு, ரெகுலரா பதிவலைன்னா, உங்க வீடு பிள்ளையா நெனச்சு என்ன மன்னிச்சு விட்டுருங்க. வரட்டா... டாட்டா...  
                    
நீங்க சொல்லுங்க. இப்போ நான் என்ன செய்ய...

Monday, November 30, 2009

மேல் படிப்பு

மு.கு. நகைச்சுவை உணர்வு இல்லாத பொண்ணுங்க, தயவு செஞ்சு கெளம்புங்க, காத்து வரட்டும்...
  
நீங்க நினைக்கற மேல் படிப்பு இல்லைங்க இது. நான் சொல்லப் போறது Male, அதாவது பசங்க படிக்கற படிப்பு பத்தி. 'அதென்ன படிப்புல male படிப்பு female படிப்பு. எல்லாம் ஒண்ணுதான. இதுல என்ன பெரிய ஆராய்ச்சி பதிவு வேண்டி கெடக்கு', இதான உங்க டவுட்டு. கண்டிப்பா வித்தியாசம் இருக்குங்க. எல்.கே.ஜில ஆரம்பிச்சு, இப்போ post graduation வரைக்கும் நான் இந்த வித்தியாசத்தை பாத்துகிட்டு இருக்கேங்க. எஸ்.ஜே சூர்யா சொல்றாப்போல, சில சமயங்கள்ல, பொண்ணுங்க படிக்கறத பார்த்தா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கும். பசங்களுக்கு, Pass - Fail, இப்படி ரெண்டு  மேட்டர் தான் முக்கியம். ஆனா பொண்ணுங்களுக்கு???????????  வாங்க அலசுவோம்.

எப்பவும், படிச்சிகிட்டே இருந்து, எப்பாவாச்சும் சும்மா இருப்பாங்கல்ல, அப்போ, மத்த விஷயங்களை யோசிக்கறவங்க பொண்ணுங்க. ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க,  இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க.

இந்த பசங்க பொண்ணுங்க வித்தியாசம், பரீட்சை சமயங்கள்ல பாத்தீங்கன்னா அப்பட்டமா தெரியும். எனக்கு தெரிஞ்சு, முக்கால் வாசி பசங்க (என்னையும் சேர்த்து), பரீட்சைக்கு முன்னாடி நாள்தான் படிக்க ஆரம்பிக்கறதே. அதுவும் மனப்பாடம் பண்றதெல்லாம் இல்லை. சும்மா, அப்டீ திருப்பி பாக்கறது. அப்படி பார்க்கும்போதுதான், நம்மகிட்ட சில நோட்ஸ் இல்லைன்னே தெரியவரும். சரி, நம்ம தோஸ்து எவனாவது வெச்சிருப்பானான்னு மெசெஜோ, காலோ பண்ணா, அவன் "மச்சான், படிக்க ஆரம்பிச்சுட்டியா?? கேடி நாய்டா நீ. எதுவும் படிக்கலை படிக்கலை சொல்லியே நிறைய மார்க் வாங்கிருவ. ஒ*!@ உன்னை நம்பவே கூடாதுடா". இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நாயும் அங்க புக்க வெச்சிகிட்டு முக்கிட்ருப்பான்.                                          

எதுக்கு phone பண்ணமோ, அதில்லாம, வெட்டியா வேற ஏதாவது பேசிட்டு வெச்சிருவோம். சரி, பரவாயில்லைன்னு, வெக்கத்தை விட்டு பொண்ணுங்க யாருக்காவது phone பண்ணுவோம். அவங்க விடுவாங்க பாருங்க ரீலு. "ஹே, நான் சத்தியமா படிக்கலபா. Group study பண்ணலாம்னு நினைச்சோம், ஆனா முடியலை. காலைல அம்மாகூட வெளியில போயிட்டேன். அப்பறம் வீட்ல ஒரே வேலை (சாஞ்சிகிட்டு TV பாக்கறது ஒரு வேலையா) கொஞ்ச நேரம் முன்னாடிதான் புக்கை கையில எடுத்தேன், கரெக்டா நீ கால் பண்ற". அடுத்த முக்கியமான விஷயம், அந்த பொண்ணு எப்பவோ இதெல்லாம் படிச்சிருக்கும். சும்மா ஒரு தடவை பார்த்தாலே அதுக்கு எல்லாம் ஞாபகத்துல வந்துரும்.

சில பொண்ணுங்க, ஹாரி பாட்டர் hermione மாதிரி, புத்தகத்துல இருக்கறத வார்த்தைக்கு வார்த்தை மனபாடம் செஞ்சு ஒப்பிபாங்க. நான் பல முறை இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்து, அடங்கொக்கா மக்கான்னு ஷாக் ஆகிருக்கேன். சில நல்ல பொண்ணுங்க, எக்ஸாம் ஹால்ல நமக்கு சொல்லியும் தரதுண்டு. அவங்கெல்லாம் வாழ்க. சிலதுங்க, அப்படியே எழுதற ஷீட் மேல படுத்துகிட்டு எழுதுங்க. உள்ள இறங்கி தூர் வாருதோன்னு சந்தேகம் கூட நமக்கு வரு. என்ன சிக்னல் குடுத்தாலும் திரும்பாம இருந்து பல்பு குடுத்துருவாங்க. இடி இடிச்சா கூட "யாரோ கடுகு தாளிக்கரான்களோ" reaction தான் கிடைக்கும்.

வெளியில வந்து, ஏன் திரும்பியே பார்க்கலைன்னு கேட்டா, "நீ கூப்டியா???" அப்படின்னு கேப்பாங்க. இதெல்லாம் இருக்கட்டும். அந்த எக்ஸாம் பேப்பர் குடுக்கும்போது வரும் பாருங்க reactions. வாய்ப்பே இல்ல. எவ்வளவு மார்க் போட்டாலும், குடுத்த ஆள் கிட்ட போய், "சார், இதுல மார்க் கம்மி, இதுல total கம்மி, இங்க நான் நல்லாதான எழுதியிருக்கேன் ஏன் இப்படி மார்க் போட்டுருக்கீங்க??" அப்டி இப்டி ஏதாவது நொட்டு சொல்லி, வாத்தியாருக்கே அவர் படிச்ச படிப்பு மேல சந்தேகம் வர அளவுக்கு நச்சரிச்சு, குறைந்தபட்சம் அரை மார்க்காவது கூடுதலா வாங்கிட்டு, வெற்றி களிப்புல ஒரு இளிப்பு வேற இருக்கும் பாருங்க......

பசங்க பாவமா, என்ன மார்க், என்ன கேள்வி, என்ன பதில்னு புரியாம இருப்பானுங்க. முடிஞ்ச வரைக்கும், கரெக்ஷன் பண்ண பேப்பர்ல சந்தேகம் எதுவும் கேக்காம கமுக்கமா இருப்பாங்க. ஏன்னா நம்மாளுக்குதான் கேள்வியே ஒழுங்கா தெரியாதே. எங்க ஏதாவது  ஏடாகூடமா கேட்டு இருக்குற மார்க்கும் போய்டுமோன்னு ஒரு கிலி இருக்கும். குடுத்து முடிச்சிட்டு போன அப்புறம், பொண்ணுங்க மத்தியில, அத பத்தி ஒரு மணி நேரம் விவாதம் வேற நடக்கும். "அந்த சாருக்கு என்னை பிடிக்கலை, அதான் மார்க் கம்மி. அன்னிக்கு நான் அந்த மேடமுக்கு குட் மார்னிங் சொல்லல, அந்த காண்டுல சரியா கரெக்ஷன் பண்ணலை"னு புதுப் புது காரணமா, கும்பலா, கண்டுபுடிச்சிகிட்டிருப்பாங்க.

பொறவு யார் highest மார்க் அப்படின்னு calculation வேற நடக்கும். "நீ என்னைவிட ஜஸ்ட் மூன்றை மார்க் ஜாஸ்தி. பரவாயில்லை, நான் fail ஆயிருவேன்னு நினைச்சேன்"னு மனசாட்சியே இல்லாம பேசுவாங்க. ஒருத்தி 98, இன்னொருத்தி 95 வாங்கிருப்பா. எந்த பொண்ணுங்களையும் அசிங்கப் படுத்த நான் இந்த பதிவை போடலைங்க. எல்லாம் ஒரு பொறாமைலதான். என்னுடைய இஸ்கூல் படிப்புலேர்ந்து, இப்போ PG வரைக்கும் இதே கதை தாங்க. என்ன, இப்போ சில பொண்ணுங்க பீட்டர்ல feel பண்றாங்க. பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. பொண்ணுங்க இப்படிதான் எப்பவுமேவா, இல்லை எப்பவுமே இப்படிதானான்னு எனக்கு ஒரே குழப்பம்.

வேணும்னா நான் சொன்னதை டெஸ்ட்டு பண்ணி பாக்கலாம். இந்த பதிவை நீங்க படிச்சிட்டு, பொறவு வேற ஒரு பொண்ணை படிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு படிச்சிட்டு, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க அப்படி கிடையாது, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்" அப்படின்னு சொல்லிச்சுன்னா, அதுவே என் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. நான் கடைசில "HENCE PROVED" அப்படின்னு சேத்துக்கறேன். :))))




வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??

Wednesday, November 25, 2009

மற்றும் பல...

வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சில updates பதிவுகளுக்கு தான் இப்போ மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி, அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும், அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??    
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
 நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->லிங்க்  
 --------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->இங்க
------------------------------------------------------------------------------------------------------------- 
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...       
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

Friday, October 16, 2009

தேவி தரிசனம்

என் வாழ்க்கையில, தியேட்டர்களோட பங்கை நான் முன்னாடியே சொல்லிருந்தேன். ஒரு படம் நல்லா இருக்க, அந்த தியேட்டரும் நல்லா இருந்தாதான் ரசிக்க முடியும். இல்லை, குடுத்த காசு உ... ஊ..... தான். சென்னைல இப்ப, எனக்கு பிடிச்ச தியேட்டர்கள் ரெண்டு. ஒண்ணு சத்யம் தியேட்டர். அடுத்து ஹோம் தியேட்டர். வேற எந்த ஸ்க்ரீனும் எனக்கு புடிக்கலை. ஒண்ணு sound மொக்கையா இருக்கும், இல்ல சீட்டு மொக்கையா இருக்கும், இல்ல environment மொக்கையா இருக்கும். இதனாலேயே சில படங்கள் எனக்கு பிடிக்காம போயிருக்கு. நான் ஸ்கூல்ல இருந்த காலத்துல (ஒரு 4-5 வருஷங்கள் முன்னாடி) மவுண்ட் ரோட்ல இருக்கற தேவி தியேட்டர்தான் என்(ங்க) favourite.

அங்க படம் பார்க்கற அனுபவமே அலாதியானது. அவ்வை ஷண்முகி, வாலி, முத்து, சிட்டிசன், தூள், கில்லி, மன்மதன், காக்க காக்க இன்னும் எவ்வளவோ படங்களை நான் அங்க பாத்துருக்கேன். மேல நான் சொன்னதுல சில படங்கள்,மக்கள் மத்தியில படம் பார்க்கற அந்த அனுபவத்துக்காகவே ரெண்டு மூணு முறை பாத்துருக்கேன். தூள் படத்தோட கடைசி பாடல் வரும்போது, தியேட்டரே எழுந்து நின்னு ஆடினது இன்னும் கண்ணுலேயே இருக்கு. எம்மாம் பெரிய ஸ்க்ரீனு, இன்னா சவுண்டு. செம்ம ஸீனா இருக்கும். ப்ளாக் டிக்கெட் பிரச்சனைகள் இருந்தாலும், மற்றபடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இங்கதான் முதல் முறையா DTS, Dolby advertisements பார்த்தேன்.  

ஆனா, கடந்த 3-4 வருடங்களாகவே, தேவி தியேட்டர் சரியா பராமரிக்கப்படாம நாசமாகிட்டே வந்தது. ஓனர் பீல் பன்னிருப்பாரோ இல்லையோ, நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சேன். தேவியோட வீழ்ச்சியில, கொஞ்சம் கொஞ்சமா சத்யம் வளர ஆரம்பிச்சுது. இப்ப ஒரு அசைக்க முடியாத இடத்துல இருக்கு. சில படங்கள் சத்யம்ல பார்க்கும்போது கூட, "இதே படத்தை தேவில பார்த்தா எப்படி இருக்கும்"னு யோசிச்சிப் பாத்துருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு (கேடி படம் வந்த சமயம்னு நினைக்கறேன்), தேவி தியேட்டர் புதுப்பிக்கப் போறாங்கன்னு கேள்விப் பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

ஆனா வேலை ஒண்ணும் நடக்கறா மாதிரியே தெரியலை. அஞ்சாதே, தசாவதாரம், குருவி மாதிரி படங்கள் பார்க்கும்போதும் வேலை நடந்துகிட்டேடடடடடடடடடட தான் இருந்துச்சு. அங்க மறுபடியும், முன்ன மாதிரி படம் பார்க்க முடியாதுன்னே முடிவு பண்ண சமயத்துலதான். கந்தசாமி அங்க ரிலீஸ் பண்ணப் போறதா செய்தி வந்தது. அரங்கத்த நல்லா ஆக்கிட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஆனா கந்தசாமி அங்க ரிலீஸ் ஆகலை. மறுபடியும் பல்பு. ஆனா, இப்ப தீபாவளிக்கு திறக்கப் போறாங்கன்னு உறுத்திய செய்தி வந்துச்சு. ஒரு வழியா, தியேட்டர சோப்பரா ஆக்கிட்டாங்க.(வெளிய பார்க்கும்போது அப்படிதான் இருக்கு). ஆன்லைன் புக்கிங் வேற. முதல் நாளே டிக்கெட் எடுத்துட்டேன்.

மறுபடியும் அங்க போய் படம் பார்க்கறத நினைச்சா நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத மாதிரி எந்த கிறுக்கனாவது இருப்பானான்னு நீங்க நினைக்கறது என் காதுல விழுது. அப்படி நினைக்கறதுல தப்பே இல்லை. நான் அப்படி ஒரு சினிமா கிறுக்கன்தான். ஆனா, தியேட்டர் ஆளுங்க ரொம்ப யோசிச்சு, ஆர்வக்கோளாரா ஒரு வேளை செஞ்சிருக்காங்க. பத்து ரூவா டிக்கெட்டுக்கு ஆன்லைன் புக்கிங் வெச்சிருக்காங்க. இப்படி வெச்சா, அதை நம்பியே கவுண்டருக்கு வர ஏழைங்க கதி என்ன ஆகறது??? படம் பார்க்கனும்னு வெறியில இருக்குற என்னை மாதிரி ரசிகர்கள், ஆன்லைன்ல எந்த டிக்கெட் கெடைச்சாலும் பரவாயில்லைனு அதையும் புக் பண்ணிடுவாங்கல்ல..

இருக்கட்டும், facebookல கமெண்ட்ஸ் சொல்லிருக்கேன். இன்னும் சில பேரும் இதையே சொல்லிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். எப்படியோ, சென்னையோட ஒரு கலாசார அடையாளத்துக்கு (!?!?!?!) மறுபடியும் உயிர் வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. போயிட்டு வந்துட்டு, உள்ளார எப்படி இருக்குன்னு சொல்றேன்.


இங்க ஒரு பெரிய தட்டு வந்து, டப்பு டப்புன்னு ஒடையும். அதுக்கே 10 ரூவா போய்டும்....


எல்லாருக்கும் தீவாளி நல்வாழ்த்துக்கள்...

Monday, September 28, 2009

இப்படியும் ஒருவன் (mindvoice - நான் இல்ல)

எல்லா பதிவர்கள் மாதிரி, எனக்கும், உன்னைப்போல் ஒருவன் படத்தோட விமர்சனம் எழுதனும்னு ஆர்வமாதான் இருக்கு.(உனக்கு வேற ஏதாவது எழுதத்  தெரியுமா) ஆனா, என்ன எழுத?? ஒரு பக்கம் என்னடான்னா, ரொம்ப thinkittu படத்தை திட்டறாங்க. (முற்போக்குவாதிகளாமா) இன்னொரு பக்கம் "நாங்க சாதாரண, பத்து ரூவா டிக்கெட் ரசிகர்கள், ரொம்ப யோசிக்காம படங்களை பார்த்தல் போதும். தேவையில்லாம எங்களை சிந்திக்க வெச்சி கெடுக்காதீங்கன்னு கேட்கறவங்க ஒரு பக்கம் (ரொம்ப நல்லவன்களாமா).

இதுல வேடிக்கை என்னன்னா, இப்படி சொல்ற பதிவர்கள், இதுக்கு முன்னாடியே, பல பதிவுகள்ள, மொக்கையா, சாதாரண மக்களுக்கு கருத்து சொல்லிருக்காங்க. இந்தப் படம் பார்க்கும்போது மட்டும் ஏன் சாதாரண மக்களா மாறிட்டாங்கன்னு தெரியல (இது இப்ப தேவையா). எது எப்படியோ, என் கருத்தை சொல்லாம விட மாட்டேன். (அதான் தெரியுமே) படம் எனக்கு பிடித்தது. பாட்டு இல்லைனா, ஒரு படம் எவ்வளவு வேகமா இருக்கும்னு காமிக்க, இந்த படம் ஒரு உதாரணம். 

படத்தோட ஹீரோ மோகன்லாலின் (இன்னாது) நடிப்பு, வழக்கம் போல சோப்பர். கமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிருக்கார் (வேற வழி). பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். டைப் அடிக்கும்போது எனக்கே dejavu மாதிரி இருக்கு (இங்கயுமா). அதனால இதுக்கு மேல படத்தப் பற்றி நான் சொல்ல விரும்பலை. வேற எங்கயாச்சும் review பார்த்துக்கோங்க. மொத்தத்துல, கமல் போட்ட திட்டம் (இவன் karamchandlala - HINDU )  அவருக்கே back -fire ஆயிடுச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சிந்திச்சாலே இதான் பிரச்சனை. 
___________________________________________________________________________
இதுக்கு முன்னால, நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. சன் டிவி ஸ்டைல்ல சொல்லனும்னா, "நினைத்தால் மட்டும் இனிக்கும்" பாத்துறாதீங்க. (லேட் வார்னிங்)
___________________________________________________________________________
விஜயின் வேட்டைக்காரன் (!?!?!?!) பாடல்கள் வழக்கம் போல செம்ம massala. எனக்கு மூணு பாட்டு (அனுஷ்கா!!!) புட்சிகிது. ஆனா சார் எதுக்கு அட்வைஸ் பண்றாருன்னு தெரியல(எதோ எதோ கவசாகி). புலி வருது புலி வருதுனு பாடல்,(கொ.... எடுத்ததா எடுக்காததா???) இதுக்கு நம்ம தளபதி குதிரைல வராராமா. எனக்கு வில்லு flashback + போக்கிரி போலீஸ் சீன் ஞாபகம் வந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதோ ஆடி மாசம் அம்மன் பாட்டு கேட்ட effect. இதனால படம் ஓடுமான்னு கேட்டீங்கன்னா..................... "மதுர" அப்படீன்னு ஒரு படம் வந்துச்சுல்ல??(மச்சான் பேரு மதுர) அத ஞாபகத்துல வைங்க.
___________________________________________________________________________
 ஜெயா டிவில, நாங்க வர finals episode, இந்த வாரம், சனிக்கிழமை காலை, telecast ஆச்சு (மறைந்திருந்து பார்க்கும் + காதல் கசக்குதய்யா). மிஸ் பண்ணவங்க, வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு பாருங்க. இல்லை பொறுத்திருந்து youtubela பாருங்க. 


 விஜய் மாதிரி நாம எப்போ வித்தியாசமா நடிக்கப்போகிறோம்????

Monday, September 14, 2009

எனகுக் Dylsexia !?!?!?!?!?! உகங்ளுக்கு ???

ரொம்ப வருடகாலமாகவே எனக்கு சில சின்னச்  சின்ன விஷயங்கள்ல பிரச்சனைகள் இருக்கு. என்னால ஒழுங்க left, right sides சொல்ல முடியாது. மெசேஜ் டைப் பண்ணும்போது நிறைய வார்த்தைகள் மாற்றியோ, தப்பாகவோ அடிச்சிடுவேன். என் நண்பர்கள் கூட சகஜமா பேசர அளவுக்கு என்னால மேடைல பேச முடியறதில்லை. (அதாவது ரசிகர்களா என் நண்பர்களே இருந்தால் கூட) நாள் நேரம் எல்லாம் தப்பா எழுதிகிட்டு சொதப்புவேன். ஒரு இடத்துல உட்கார்ந்து படிக்கவே முடியாது. எப்பவுமே restless . இத மாதிரி பெரிய ஒப்பாரியா வெச்சிகிட்டே போகலாம்.

தாரே சமீன் பர படம் வந்த அப்பறம், இந்த dyslexia பத்தி நிறைய பேச ஆரம்பிச்சாங்க. என்னாடான்னு பார்த்த அது ஒரு வியாதியாம். யாருக்கு வேணும்னாலும் வருமாம். ஆனா அதனால பெரிய பாதிப்பு எதுவும் வராதுன்னு சொன்னாங்க. அதுக்கான symptoms என்னவா இருக்கும்னு பார்க்கும்போது, நான் மேலே சொன்ன சில விஷயங்களையும், இன்ன பிற விஷயங்களையும் போட்டிருந்தாங்க. அப்புறம் நானே எனக்கு dyslexia இருக்குன்னு முடிவு பண்ணிட்டேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஒரு ஆன்லைன் டெஸ்ட் பார்த்தேன். ரொம்ப அருமையா கீது. ஒரு வேளை, நான் மேல சொன்ன விஷயங்கள்ல ஏதாவது உங்களுக்கும் பொருந்திச்சுன்னா, இந்த டெஸ்ட அட்டென்ட் பண்ணி, உங்களுக்கு dyslexia இருக்கான்னு பார்த்துக்கோங்க..
மு.கு. டெஸ்ட், ஆம் - இல்லை வடிவத்துல, பீட்டர்ல கீது, கண்டுக்காதீங்க....
Yes No
1. Do you find difficulty telling left from right?
2. Is map reading or finding your way to a strange place confusing?
3. Do you dislike reading aloud?
4. Do you take longer than you should to read a page of a book?
5. Do you find it difficult to remember the sense of what you have read?
6. Do you dislike reading long books?
7. Is your spelling poor?
8. Is your writing difficult to read?
9. Do you get confused if you have to speak in public?
10. Do you find it difficult to take messages on the telephone and pass them on correctly?
11. When you say a long word, do you sometimes find it difficult to get all the sounds in the right order?
12. Do you find it difficult to do sums in your head without using your fingers or paper?
13. When using the telephone, do you tend to get the numbers mixed up when you dial?
14. Do you find it difficult to say the months of the year forwards in a fluent manner?
15. Do you find it difficult to say the months of the year backwards?
16. Do you mix up dates and times and miss appointments?
17. When writing cheques do you frequently find yourself making mistakes?
18. Do you find forms difficult and confusing?
19. Do you mix up bus numbers like 95 and 59?
20. Did you find it hard to learn your multiplication tables at school?
  
So, கேள்விகளோட முக்கியத்துவப் படி, சொன்ன பதில்களை வரிசை படுத்தி, உங்களுக்கு எந்த அளவு பாதிப்பு இருக்குன்னு பாருங்க..(இப்ப எனக்கு ஒரு சந்தேகம். இத மாதிரி, பதில்ல கேளிவிகளோட முக்கியத்துவத்தை சொல்லிட்டு, ஆர்டர் மாத்தி எழுதினத விட, முதல் கேள்வி ரொம்ப முக்கியம், அடுத்த கேள்வி கொஞ்சம் முக்கியம்னு வரிசைப் படுத்தி இருக்கலாம்ல????)
  1. Q17
  2. Q13
  3. Q7
  4. Q16
  5. Q18
  6. Q10
  7. Q19
  8. Q14
  9. Q20
  10. Q4
  11. Q1
  12. Q11
 ஆனா கெட்டவார்த்தை பேசும்போது மட்டும் எதுவும் ஆகறதில்லை...

Wednesday, September 9, 2009

சென்சார் என்ற கேலிக்கூத்து

நண்பர்களே, திரைப்படங்களுக்கு சென்சார் போர்ட் என்கிற விஷயம் எதுக்கு இருக்கு (தமிழ்ல தணிக்கைனு சொல்றாங்க) எதை தணிக்கை பண்றாங்க? ஏதாவது விவகாரமான கசமுசா காட்சிகளோ, வெறி ஏத்தற (அந்த 'வெறி' அல்ல) ரத்தக் களரியான காட்சிகளோ, பொதுவுல, நாட்டுக்கு விரோதமான விஷயங்களோ இருந்தா, அதை சென்சார் செய்யவே இந்த போர்ட்.

ஆனா இவங்க பண்ற தணிக்கைல எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்தது கிடையாது. சினிமாவப் பற்றி படிப்பதற்கு முன்னாடியே இப்படின்னா, கொஞ்சம் சுமாரா விஷயம் தெரிஞ்ச அப்பறம், சுத்தமா நம்பிக்கை போய், அவங்க ஒரு காமெடி பீஸாவே தெரியறாங்க. முதல்ல எனக்கு வந்த சந்தேகம், எதுக்கு ஒரு படத்துக்கு A certificate குடுக்கறாங்கன்னு. காரணம் என்னனா, நான் மேலே சொன்னா மாதிரி, பலான பலான காட்சிகளோ, கத்திக் குத்துக்களோ இருந்தா அப்படி குடுப்பாங்க. ஆனா அதையும் நாய் வாய்ல பன்னு மாதிரி முழுசா இல்லாமா, குதறி வெச்சி, அப்பறம் குடுப்பாங்க. அதான் Adults ஒன்லின்னு குடுத்துட்டாங்கல்ல, அப்புறமும் எதுக்கு கட்டிங்க்னு பார்த்தா, அதுக்கான காரணம் வெளங்கலை.

இந்த சென்சார் பிரச்சனை பெரும் பிரச்சனை ஆகி, சண்டை போட்டு பல்பு வாங்கின ஆட்கள்ல சில பேர் நம்ம கமல், எஸ்.ஜே.சூர்யா, வேலுபிரபாகரன். இப்ப சமீப காலங்கள்ல, அதாவது 2-3 வருடங்களா வர படங்களுக்கு குடுக்குற rating எல்லாமே செம்ம காமெடியா கீது. உதாரணத்திற்கு சில படங்கள எடுத்துப்போம்,

குசேலன் படத்துல, எப்படி நட்பை விலாவரியா, விலா நோக சொன்னாங்கன்னு பாத்தீங்க. ஆனா அதோட இல்லாம,  நம்ம தலைவி நயன்தாரா எப்படி நடிச்சி காமிச்சிருப்பாங்கன்னு நீங்க எல்லாரும் நல்லா பாத்துருப்பீங்க, ஆனா அந்த படத்துக்கு, A குடுக்கவேணாமய்யா  அட்லீஸ்ட் ஒரு UA ....ம்ஹூம்.... இல்லையே . U குடுத்தாங்க..

அடுத்து, யாரடி நீ மோகினி அப்படின்னு ஒரு கலைப் படைப்பு. அதுல ரகசியா, கொடுமையான ஆட்டம் ஒண்ணு போட்டிருப்பாங்க. அதோட இல்லாம, படத்துல "இயற்கையா" சில விஷயங்களைப் பத்தி வசனங்கள் வேற, காமெடியா, வரும். இந்தப் படத்துக்கும் U.......

அடுத்து, சமீபத்துல வந்த நாடோடிகள். நிஜமாவே நல்லா படமா இருந்தாலும், படத்துல வன்முறை காட்சிகள் எந்த அளவு இருந்ததுன்னு பார்த்தவங்களுக்கு தெரியும். இந்த படத்துக்கும் U அளிக்கப்பட்டது...

இவ்வளவு ஏன், ரெண்டு வாரம் முன்ன வந்து, இப்ப நாறிக்கிட்டு இருக்குற கந்தசாமில, நம்ம ஸ்ரேயா அம்மணி எப்படி கலை சேவை செஞ்சாங்கன்னு பாத்திருப்பீங்க. அட்லீஸ்ட் யாரவது சொல்லிருப்பாங்க. அதைவிட, அந்தப் படத்துல, கடைசில, மீனாகுமாரி பாட்டு, உச்சக்கட்டம். டிரஸ் இருக்கா, இல்லையான்னே சந்தேகம் வர அளவுக்கு இருக்கும் பாடல் அது.

So, இப்படியாக சொல்லிகிட்டே போகலாம். நீங்களும் நோகாம படிச்சுகிட்டே இருப்பீங்க. எனக்கு ரொம்ப பிடித்த rating சிஸ்டம், ஹாலிவுட்ல இருக்கறது. அங்க ரொம்ப அழகா பிரிச்சிருக்காங்க. அதப் பற்றி மேல படிக்கனும்னா -> இங்க <- போங்க. அங்க நம்ம ஸ்பீல்பெர்க் அண்ணாச்சி, தன்னோட முயற்சியில, ஒரு புது rating முறையவே கொண்டு வந்திருக்கார். நாம ஊர்ல யாரும் மூச்சு கூட விட முடியாது. ஒரு வேளை  இதுலையும், அரசியல், ஊழல் எல்லாம் இருக்குமோ?? எனக்கென்னமோ சத்தியமா இருக்கும்னுதான் தோணுது.

திரைப் படங்களுக்கு சென்சார் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் முற்போக்குவாதி இல்லை. Atleast, கொஞ்சம் கேனத்தனமா இல்லாம, ஒழுங்க இருந்தா சரி.என்ன சொல்றீங்க???


 சின்னத்திரைக்கு சென்சார் தேவைன்னு நினைக்கறீங்க???

Monday, August 24, 2009

The கிரேட் கந்தசாமி challenge ...

நீங்க கந்தசாமி படம் பார்த்து நொந்த ஆளா?? குறைந்தது, அந்த படத்த பற்றி கேள்விப்பட்ட ஆளா?? அப்ப இந்த challenge உங்களுக்குதான். கீழ, என்னுடைய ரசனையின் அடிப்படையில், ஒரு match the following இருக்கு. அதுக்கு கீழ, ஒவ்வொரு வார்த்தைக்கும் equivalent வார்த்தையும் இருக்கு. உங்களால கரிக்டா match பண்ண முடியுதான்னு பார்க்கலாம். பின்னூட்டத்துல உங்க பதிலைப் போடுங்க.

for ex - கந்தசாமி -

1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
2. சுசி கணேசனின் கலைப் படைப்பு
3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்

இதுக்கு சரியான தேர்வு 1
got it??? இப்ப விளையாடுவோமா ??
கவலைப் படாதீங்க, ரொம்ப ஈசியாதான் இருக்கும்.

படம் நல்லா வரணும்னு சீட்டெழுதி போட்டிருக்கலாமோ???

The கிரேட் கந்தசாமி challenge ...

கந்தசாமி - 1
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -

பதில்கள்
  1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
  2. கணேசனின் கலைப் படைப்பு
  3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
  4. மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடித்து மொக்கை வாங்குபவர்
  5. தனி ஆளாக படத்தை காப்பாற்றுபவர்
  6. தான் பார்த்த/நடித்த பழைய படங்களை மறப்பவர்
  7. ராவணன் கைவிட்டால், காப்பற்ற இருக்கும் ஒரே ஆள்
  8. கந்தசாமி பார்த்துவிட்டு யோசிப்பவர்
  9. எந்த ஒரு மொக்கை படத்தையும் சுமாராக ஆக்கும் இடம்
  10. கேலிக்கூத்து
  11. குடுத்த பணத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்வது
  12. ஸ்ரேயா ஆடியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
  13. கொக்கரக்கோ கோழி
  14. தேவையில்லாமல் வந்து போவது
  15. மன ஆறுதலை தரும் ஒரே விஷயம்
  16. city of god படத்தை நிறைய முறை பார்த்தவர்
  17. இப்பொழுதுதான் தொழிலை கற்றுக்கொள்பவர்
  18. கொஞ்சம் கமெர்சியலா பண்றோம்
  19. எல்லா காட்சிகளிலும் தண்ணி அடித்தது போல் பேசுபவர்
  20. படத்திற்கு உறுதுணையாக இருப்பது
  21. நம் மண்டையை பிளப்பது
  22. பட்ஜெட்டில் துண்டு
  23. எவ்வளவு மொக்கை வாங்கினாலும் ஸ்டெடியாக இருப்பவர்
  24. பதிவு போடவே படம் பார்க்கும் கேசு
  25. அடுத்தடுத்து ஆப்புகளை பெறுபவர்
  26. தூக்கக் கலக்கத்தில் பேசுபவர்
  27. சில காட்சிகளில் நினைவிற்கு வந்து upset ஆக்குபவர்
  28. கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்
  29. மஞ்ச மாக்கான்
  30. வெளிப்படையாக நடிப்பவர்
  31. பல்காக இருப்பவர்
  32. பிள்ளையின் மானத்தை வாங்குபவர்
  33. பல்ராம் நாயுடுவிற்கு போட்டி
  34. தேடினாலும் கிடைக்காது
  35. மனதில் ஹிட்ச்காக் என்று நினைத்து கொள்பவர்
  36. எப்பொழுதும் மர்மமான ரோலில் நடிப்பவர்
  37. என்ன கொடுமை சரவணன் இது
  38. சூப்பரப்பு
  39. உரிச்ச கோழி
  40. அப்படின்னா??
ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருப்ப்பது போல இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ, அத செலக்ட் பண்ணுங்க...

மச்சான் ஒருத்தன் சிக்கிருக்காண்டா, வரியா படம் எடுப்போம்?? நான் உளவுத்துறை போலீசா நடிக்கிறேன்..