Showing posts with label என்ன ஆச்சுன்னா.... Show all posts
Showing posts with label என்ன ஆச்சுன்னா.... Show all posts

Tuesday, January 24, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 4

போன வருஷம் நான் பார்த்து ரசிச்ச படங்கள், பாடல்களோட லிஸ்ட் இது.
எதுவும் மிஸ் பண்ணலை. உங்க ரசனையோட ஒத்து போகலன்னா ரொம்ப அலட்டிக்காதீங்க. என்னடா இதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானேன்னு கமெண்ட் பண்ண வேணாம்.

படங்கள்
சரியா எண்ணி பார்த்தா, போன வருஷம்தான் நான் நிறைய படங்கள் பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். ரசனையும் கொஞ்சம் liberalஆ மாறிருக்குன்னு தோணுது. லிஸ்ட் போட்டா அது பெருசா மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி போகுது. கொஞ்சம் கூட்டி குறைச்சு, இங்க ஃபைனல் லிஸ்டை கொடுக்கறேன்.

ஜாலியா ரசிச்ச படங்கள் - தமிழ்

  • ஆடுகளம்
  • காவலன்
  • யுத்தம் செய்
  • பயணம்
  • கோ
  • பயணம்
  • அழகர்சாமியின் குதிரை
  • எங்கேயும் எப்போதும்
  • ஆரண்ய காண்டம்
  • வேங்கை
  • தெய்வத் திருமகள்
  • மங்காத்தா
  • முரண்
  • வேலாயுதம்
  • மயக்கம் என்ன
  • ஒஸ்தி
  • போராளி

இதுல சூப்பர்
ஆடுகளம், காவலன், யுத்தம் செய், கோ, அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆரண்ய காண்டம், முரண்

இதுல என்னோட PICK
ஆரண்ய காண்டம்

நான் மொக்கை வாங்கிய படங்கள்

  • சிறுத்தை (first half + சந்தானம் காமெடி மட்டுமே ரசிச்ச விஷயங்கள்), 
  • நடுநிசி நாயகள்
  • எங்கேயும் காதல்
  • அவன் இவன்
  • வந்தான் வென்றான்
  • வாகை சூட வா
  • 7ஆம் அறிவு (ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆவாது), 
  • ராஜ பாட்டை
  • வானம்
இந்த லிஸ்ட்ல, மங்காத்தவையும், தெய்வத் திருமகள் படத்தையும் சேர்க்கலாம். மங்காத்தா புத்திசாலித்தனமா இருக்கறா மாதிரி ஏமாத்தின ஒரு படம். முதல் முறை அஜீத்தும் பாட்டும் படத்தை காப்பாத்தினாலும், ரெண்டாவது தடவை தியேட்டர்ல உட்கார முடியலை. மொக்கையான மேட்டரை நல்லா மூடி மறைச்சு, ஹைப் பண்ணி மக்களை ஏமாத்திருக்காங்கன்னே தோணிச்சு. கோவா படத்துல தெரிஞ்ச சின்ன சின்ன ஸ்மார்டான விஷயங்கள் கூட இதுல இல்லை. தெய்வத் திருமகள், காபி அடிச்ச படம்னு கடைசி வரைக்கும் படத்தோட சம்பந்தபட்டவங்க ஒத்துக்கவே இல்லை. அதுவே எனக்கு செம்ம கடுப்பு. இதுதான் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா? விக்ரமும் நல்லா ஒப்பேத்தினாரு.

பார்க்க முடியாமல் போன படங்கள்
180, காஞ்சனா, வெப்பம், பட்டா பட்டி, மௌன குரு

இந்திய அளவுல ரசிச்ச படங்கள்
Telugu - Alaa Modalaindhi,
Hindi - Pyaar ka Punchnama, Delhi Belly, Dirty Picture

பார்க்க முடியாமல் போனது
Telugu - Dookudu, Sri Rama Rajyam, 100% love, Golconda High School,
Hindi - No one killed jessica, Stanley ka dabba, Shaitan, Buddha Hoga tera Baap, Aarakshan, That girl in yellow boots

மொக்கை
Ra - One - வலிக்காம அடிச்ச படம். அப்பறம் எல்லாம் ஊமை காயம்.

இதுல டெல்லி பெல்லி படத்துக்கும், தமிழ்ல வந்த ஓரம் போ படத்துக்கும் சில ஒற்றுமைகளை பார்க்க முடிஞ்சுது. ஹிந்தி அளவுக்கு இல்லைனாலும், தமிழ்ல வசனம் கொஞ்சம் வெளிப்படையா இருந்துச்சு. அதே மாதிரி, வைர கடத்தல் மேட்டரும்.

உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
சில படங்கள் பத்தி, சில வரிகள்.
  • Harry Poter Final Part - கண்ணீர் மல்க விடை கொடுக்கலாம்னு நினைச்சேன். தனியா படம் பார்த்ததுனால அழ முடியலை :P
  • Kungfu Panda 2 - முதல் பார்ட் அளவு இல்லைனாலும் enjoyable.
  • Hangover 2 - அதே டெய்லர், அதே வாடகை, ட்ரெஸ் கலர் மட்டும் வேற. நல்லா யோசிக்கறாங்க ரூம் போட்டு.
  • Ides Of March - எவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சரியான பொலிடிகல் த்ரில்லர் படம்
  • Source Code - கொஞ்சம் குழப்பறா மாதிரி எடுத்த படம். ஆனா அப்படி ஒண்ணும் இல்லை. 
  • Bridesmaids - பெண்கள் மட்டுமே முக்கிய பாத்திரங்கள்ள இருக்கற இந்த படத்தை எழுதினதும் ஒரு பெண்தான். அவங்களுக்குள்ள இருக்கற பாசம், நேசம், ஈகோ இப்படி நிறைய விஷயங்களை எந்த சப்பைகட்டும் இல்லாம சொல்லிருக்காங்க.
  • X Men First Class - இன்னா கிராபிக்ஸ். இன்னா ஸ்க்ரீன்ப்ளே.
  • Super 8 - momentum எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தறதுனு கண்டிப்பா அவங்க ஊருக்கு போய் ஒழுங்கா படிச்சிட்டு வரணும். சாதாரண சின்ன பசங்க கதைய, ஏலியன் இன்வேஷனோட முடிச்சு போட்டு, அட்டகாசமா present பண்ணிருந்தாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம ஸ்பீல்பெர்க் தயாரிப்பாச்சே.
  • Bad Teacher
  • Horrible Bosses
  • Crazy, Stupid Love
  • Rise Of Planet Of Apes - இந்த படத்துக்காவது Andu Serkisகு ஒரு ஆஸ்கர் கொடுத்தா நல்லா இருக்கும். சீஸர்னு மனித குரங்கா அவர் நடிச்சிருந்த விதம் எனக்கு தெரிஞ்சு வேற யாருமே பண்ண முடியாத ஒரு விஷயம். 
  • Johny English Reborn
  • MI 4 - Brad Bird மேல வெச்ச நம்பிக்கை வீண் போகலை. பின்னு பெடல் எடுத்திருந்தாரு
  • Tin Tin
  • Tangled

பார்க்க முடியாமல் போனது
Fast Five, Cars 2, Rio, Rango, Transformers, Attack the Block, Sherlock Holmes

இந்த படங்களோட என்னை யோசிக்க வெச்ச இன்னொரு முக்கியமான விஷயம் டிக்கேட் ரேட். ரேட் ஃபிக்ஸ் பண்ண சட்டம் இருக்குனு தெரியும். ஆனா நம்ம கேபிள் அண்ணாச்சி சொன்ன அப்பறம்தான் டிக்கேட்டோட ரேட் இவ்வளவுனு தெரிஞ்சுகிட்டேன். முடிஞ்ச வரைக்கும் சூப்பரான சத்யம்ல பாக்கறதுனால அவங்களுக்கு கொடுத்தா பரவாயில்லைனு தோணுது. ஆனா 
டிக்கேட் மட்டும் இல்லாம, பார்க்கிங் + காண்டீன் சமாச்சாரங்கள்ல மத்த தியேட்டர்கள் அடிக்கற கொள்ளை, யாரும் கண்டுகிட்டா மாதிரி தெரியலை. 


ரசித்த பாடல்கள்

அய்யய்யயோ நெஞ்சு - ஆடுகளம்
யாரது - காவலன்
நான் ரொம்ப ரொம்ப - சிறுத்தை
கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
என்னமோ ஏதோ, அக நக - கோ
வாடா பின்லேடா - மங்காத்தா
கொலைகாரி, நேற்று இல்லை - தம்பு வெட்டோத்தி சுந்தரம்
நெஞ்சில் நெஞ்சில், நாங்கை - எங்கேயும் காதல்
சந்திக்காத, ஊசெல்லா, நியாலமே - 180
காற்றில் ஈரம் - வெப்பம்
சர சர - வாகை சூட வா
சில்லாக்ஸ் - வேலாயுதம்
காதல் என் காதல் - மயக்கம் என்ன
வில்லாதி வில்லன் - ராஜ பாட்டை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு
Kutta - Pyar ka punchnama
Kalaya Nijama - Sri Rama Rajyam

எனவே, இப்படித்தான் எனது 2011 சினிமா வாழ்க்கை கழிந்தது. 2012ல் மேலும் நிறைய ரூபாய்களையும், சக்தியையும் செலவழித்து, படங்கள் பார்த்து மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு டாடா :)

Monday, January 23, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 3

புது வருஷம் பொறந்து ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் என்ன எண்ணிப் பாக்கறதுனு சில பேர் கேட்கலாம். என்ன செய்ய. ஏற்கனவே யோசிச்சு, ஹின்ட்ஸ் வேற எழுதி பதிவுல ஏத்தாம போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா படிச்சிருங்க. இதுக்கப்பறம் இன்னும் ஒரே ஒரு பதிவுதான். அப்பறம் வழக்கம் போல மொக்கை பதிவுகளை ஆரம்பிக்கறேன்.

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி... முடிவு

கன்னத்தில் குத்துவிட்டால்


நவம்பர் மாசம் விவாசயத்துறை அமைச்சர் சரத் பவார் வாங்கின அறையோட சத்தம் இந்தியா முழுக்க கேட்டுது. ஹர்விந்தர் சிங்னு ஒரு சீக்கிய இளைஞர் அத்தியாவசிய பொருட்களோட விலையேற்றத்துல காண்டாகி, நம்மளை மாதிரி பதிவு மட்டும் போடாம அமைச்சரோட கன்னத்துல ஒரு அறையும் போட்டாரு. 
அடிச்சு முடிச்சிட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது என்னோட பதில்னு கையில கத்திய வெச்சிகிட்டே சத்தமும் போட்டாரு. இதுக்கப்பறம் இன்னும் நிறைய பேர் அடி வாங்குவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கலை. still, கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துட்டு வராங்கன்னு நினைக்கறேன். மாட்டிக்கமாட்டேன்னா கண்டிப்பா நானும் உதை கொடுக்க தயார் :)


கால்-திண்டாட்டம்


அடுத்த அதிர்ச்சி இண்டோர் நகரத்துலேர்ந்து வந்த செய்தி. அந்த ஊர் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களோட விளையாட்டுக்கான செலவுகளை பார்த்துக்க, கிரிக்கேட் ஸ்டேடியத்தை சுத்தம் பண்ணாங்களாம். என்ன கருமமோ. இந்த ஒரு செய்தியே, இந்தியால மற்ற விளையாட்டுகளோட நிலைமையையும்,  கிரிக்கேட்டுக்கு நாம தர தேவையில்லாத முக்கியத்துவத்தையும் காட்டிச்சு. தங்களோட கிழிஞ்ச ஷூக்களையும், விளையாட தேவையான பழைய பொருட்களையும் மாத்த இந்த காசு உதவும்னு அந்த வீரர்கள் சொல்லிருக்காங்க. இந்த நிலைமை அந்த மாநிலத்தில மட்டும்தானா இல்லை எல்லா இடத்துலையுமானு தெரியலை. ஒழுங்கா விளையாட தெரிஞ்சதா சொல்லிக்கற கிரிக்கேட்லையும் மரண அடி வாங்கிட்டு இருக்கோம். இதுக்கு செலவழிக்கற பணத்துல கால்வாசிய மத்த விளையாட்டுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஐடியாக்களை லட்சம் பேர் சொல்லிருப்பாங்க. என்ன நடந்துச்சு. எல்லாரும் ஒரு அறை கொடுத்தா சரியா வரும்னு நினைக்கறேன். 


குடிவெறி


கொலைவெறி ஹிட்டான கையோட தமன்னாவோட பர்த்டே பார்டில தனுஷ் போதைல பாடின கொலைவெறிக்கும் நல்ல ஹிட்ஸ் வந்துச்சு. கூடவே நல்ல போதைல தமன்னாவும் பூனம் பாஜ்வாவும் இருக்காங்க. வேற யாரெல்லாம் இருந்திருப்பாங்க்ன்னு ஊகிக்க முடியுது. இதை பார்த்த அப்பறம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ஒண்ணும் திருந்திடப்போறதில்லைனு நினைக்கறேன். தொடர்ந்து நடிகர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்போம். பாலாபிஷேகம் பண்ணுவோம். கோயில் கட்டுவோம். வாழ்க பாரதம்.

அடுத்த பதிவுல. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள்,  2011 பாடல்கள் + படங்களை பத்தி சொல்லிட்டு, இந்த வருட எண்ணிப்பார்த்தேனை முடிச்சிக்கறேன்.. நன்றி :)

Saturday, January 7, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 2

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..

ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்

நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல  பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும்  சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க.  இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india

டின் டின்

சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.

கொலைவெறி

2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.

தற்கொலை


தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....

Wednesday, January 4, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 1


வருஷக் கடைசில பதிவு போடறேன்னு சொன்னது வழக்கம் போல லேட் ஆனதுக்கு வழக்கம் போல மன்னிக்கனும். போன வருஷத்தை எண்ணிப் பார்த்ததுல, சில விஷயங்கள் நல்லதாவும், பல விஷயங்கள் கெட்டதாவும் நடந்திருக்கு. கெட்ட விஷயங்களை வாழ்க்கைப் பாடமா எடுத்துகிட்டேன். வேற என்ன பண்றது. இப்போ, போன வருஷம் நடந்து, பதிவு போட முடியாம போன சில விஷயங்களைப் பத்தி கடகடன்னு சுருக்கமா சொல்லிடறேன். அதை நீங்க விரிவா படிச்சு தெளிவாய்டுங்க :)

பவர் 

கரென்ட் கட் பிரச்னை பெருசாகி அதுவும் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமா இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, தொடர்ந்து பல இடங்கள்ள பவர் கட் தொடர்ந்துட்டேதான் இருக்கு. என் நண்பர்கள் பல பேர் புலம்பிட்டே இருக்காங்க. இதனால அவங்களோட முக்கியமான வேலைகளும் கெட்டு போறதா பீல் பண்றாங்க. இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சுரணை இழந்து அதை தட்டி கேட்க மறந்துட்டாங்க. அடுத்த எலெக்ஷன்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ (ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்ல இவங்களேதான் வின் பண்ணாங்க). யார் செஞ்ச புண்ணியமோ தெரியலை, என் ஏரியால கரென்ட் கட் ஆகறதே இல்லை. (நான்  திருவல்லிக்கேணி வாசி). அதே மாதிரி இந்த லைப்ரரிய மாத்தற திட்டமும் ஏகோபித்த எதிர்ப்ப சம்பாதிச்சிருக்கு. மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம். இவங்களுக்கு யார் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லிதராங்கன்னு தெரியலை.

BBC பறந்து போச்சு 

என் BBC வேலையை விட்டதைப் பத்தி --> இங்க ரெண்டாவது பத்தில  எழுதிருந்தேன். இன்னமும் சரியான வேலை கெடைக்கல. மத்த துறைகள்ல இருக்கற ஒரு முக்கியமான விஷயம் மீடியால இல்லைன்னு படுது. வேற எங்கயுமே, அந்த கம்பெனி HR ஆளை நேரடியா காண்டாக்ட் பண்ணி வேலை கேட்கலாம். அவங்களும் பொறுப்பா இருக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க. ஆனா, மீடியால மட்டும் HRனு ஒரு ஆள் இருந்தாலும், நாம அனுப்பற resume ஒழுங்கா போய் சேருதானு தெரியலை. கால் பண்ணாலும் ஒழுங்கான பதில் வரதில்லை. முக்கியமா ஏதாவது ஒரு வடிவத்துல சிபாரிசு தேவைப்படுது. கடுப்பா இருக்கு. சும்மா இருக்ககூடாதுன்னு பல வேலைகளை செஞ்சிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம், நமக்குன்னு ஒரு வேலை இல்லாமலா போய்டும்.

Revolution  2020

இந்த வருஷம் வெளியான சேட்டன் (மலையாளி இல்லை) பகத்தோட இந்த நாவல், ப்ரீ ஆர்டர் பண்ணி, ரிலீசுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து சேர, ஒரே மூச்சுல படிச்சேன். அவரோட க்ளீஷே நிறைய இருந்துது.  ஒவ்வொரு கேரக்டரோட உணர்வுகளை கரெக்டா சொல்லிருந்தாலும், ஒரு கட்டத்துல கதை எழுத்தாளரோட கண்ட்ரோல்ல இல்லையோன்னு தோண ஆரம்பிச்சுது. க்ளைமாக்ஸ்ல அது conform ஆச்சு. ஆனாலும் சேட்டனுக்கு மற்றுமொரு வெற்றி.

Facebook Page
என்ன கருமத்துக்கெல்லாம் page ஆரம்பிக்கறதுன்னு இல்லையா. இந்த page பாருங்க. https://www.facebook.com/Tamilanchors . என்ன ஒரு மகா வெட்டி வேலை. சாதாரண போட்டோ இல்லமா, டிவில வரதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேற போடறாங்க. இதை சில பேர் ஷேர் வேற பண்ணாங்க. கலி முத்திடுச்சுனு தெரிஞ்சுது.

நானும் ஜட்ஜ் ஆனேன்


காலேஜ்ல நடந்த பாட்டு போட்டியோட முதல் ரவுண்டுக்கு என்னை நாட்டமையா வர சொல்லி என் ஜூனியர்ஸ் கூப்டாங்க. முதல்ல தயக்கமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். அங்க போன அப்பறம், இன்னும் பல பேர் என்னை ஞாபகம் வெச்சிருக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. வழக்கம் போல பல ப்ளாஷ் பேக் நிகழ்வுகள் வந்து மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துது. என்ன செய்ய. its all fate.

தொடரும்.....

Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..

    

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Sunday, September 26, 2010

மற்றும் பல... (26/9/2010)

ஒரு வழியா வேலை கிடைச்சிடுச்சுனு சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் அவ்வளவு தீவிரமா தேடி, எல்லாம் எடத்துலயும் NO VACANCY போர்ட் பார்த்து, காண்டாகி, வேலையே கிடைக்கலைன்னு கத்தலை. என்னோட முதல் இன்டர்வியூ  இதுதான். அதுலயே வேலை கிடைச்சிடுச்சு. அதனாலயே ரொம்ப சந்தோஷம். காலை முதல் இரவு வரை அயராது உழைக்கர்தால, பதிவ டைம் தேட வேண்டியதா இருக்கு. வழக்கம் போல, எதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதனும்னு நினைக்கும்போது, ஒண்ணு வேற யாராச்சும் எழுதிருவாங்க, இல்லை எனக்கு மறந்துரும். அது மாதிரிதான் எந்திரன் பத்தி எழுத நினைச்சதும்....
------------------------------------------------------------------------------------------------------------------
காலைலதான் எழுதலாம்னு நினைச்சேன், நம்ம கேபிள் முந்திகிட்டாரு. ஆனா, அவரு எழுதின பாயிண்ட் of வியூ வேற. நான் எழுத நினைச்சது, இந்த தியேட்டர்கள் பண்ற அநியாயத்தை பத்தி. சென்னைல முக்கால்வாசி தியேட்டர்கள்ள, முதல் மூணு நாள் டிக்கெட்டையும் கார்பரேட்டுக்கு குடுத்துட்டாங்க. என்ன ஒரு அநியாயம். நிறைய காசு தரவங்களுக்கு தான் டிக்கெட்டுன்னு, இது என்ன ஏலத்துல எடுக்கறா மாதிரி. இன்னொரு முக்கியமான விஷயம், முதல் மூணு நாள் டிக்கெட்டு மாயாஜால்ல இருந்தாலும், அங்க அந்த மூணு நாளைக்கும், ரூ.320 தான் டிக்கெட் ரேட். காம்போ ஏதொ சாப்ட தராங்க. அது கம்பல்ஸரியாம். செம்ம டென்ஷன் ஆகிட்டேன். மீதி டிக்கெட் இருக்கற தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு, இல்ல, அட்டு தியேட்டரா இருக்கு. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.
p.s. படம், முதல் நாலு நாளைக்கு எல்லாம் இடத்துலையும் fullu. இப்பவே  வெற்றி விழா கொண்டாடிடலாமே ???   
------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை ஆரம்பிச்ச முதல் வாரத்துலயே, பசங்க படக்குழுவைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கெடச்சுது. சசிகுமார் நிஜமாவே சூப்பர் ஆளு. ரொம்ப எளிமையா இருந்தாரு. பேசறாரு. செம்ம காஷுவலா இருக்காரு. எல்லாரும் பார்த்து கத்துக்கணும்...
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சிலர் முதுகுல குத்துவாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்ச சில பேர் முகத்துலேயே குத்திட்டாங்க. பல நாள் பழகின நட்பை, எப்படி நொடியில தூக்கிப் போட்டு அசிங்கப் படுத்தமுடியுதுன்னு தெரியலை. நம் முகத்துக்கு நேர நம்மை பத்தி தப்பா சொன்னா கூட பரவாயில்லை, மத்தவங்க கிட்ட, ஏதொ நாம கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசறது எல்லாம் சுத்த பத்தாம் பசலித்தனம். அதுவும் அவங்க குடுக்கற justifications எல்லாம் கேட்கணுமே, அட அட அட, ரொம்பவே அருமையா இருக்கும். அது ஏன் கூட இருக்கற இவ்வளவு நாள் நம்ம குறைகள் இவங்களுக்கு தெரியாம, பிரியக்  காரணங்கள் தேடும்போது மட்டும் கிடைக்குதுன்னு தெரியலை. இதை எல்லாம், எக்கச்சக்க டைம் + எனர்ஜி செலவு பண்ணி, இவங்களுக்காக உதவின சமயங்கள்லையே சொல்லிருந்தா, அப்பவே கொஞ்சம் நம்மளோட பாசத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம். இப்ப, ஏமாற்றமும், கண்ணீரும்தான் மிச்சம். அவங்கள சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை, என்னை உதைக்கணும். இவங்களையெல்லாம் நான் ஒதுக்கப்போரதில்லை. எனக்கு நல்ல பாடங்கள கத்து கொடுத்திருக்காங்களே. அதனால, இன்னும் என் நண்பர்களாதான் பார்க்கறேன். இதை படிக்கற என் நண்பர்கள் சிலருக்கு, உங்களை குத்தம் சொல்றா மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொதுவா சொன்னேன்...
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் லண்டன் லேன்சை வருக வருக என வரவேற்கிறேன்....சீக்கரமா வந்து ட்ரீட் குடுங்க பாஸு..
------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வாரங்கள்ல, இன்ஸோம்ன்யா, அப் இன் தி ஏர் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் பார்த்தேன். இன்ஸோம்ன்யா சூப்பரா இல்லைனாலும், நல்லா இருந்துச்சு. நம்ம அல்-பசினோ பின்னிட்டாரு. ராபின் வில்லியம்சும் நல்லா நடிச்சிருந்தாரு. அப் இன் தி ஏர் படம், கொஞ்சம் எதார்த்தத்தோட நல்லா இருந்தாலும், மொக்கையா முடிச்சிட்டாங்க. பாஸ், ரொம்ப நாள் கழிச்சு, தியேட்டரே வாய் விட்டு சிரிச்சிகிட்டே இருந்ததை பார்த்தேன். எல்லாரும் சந்தானத்தை பாராட்டினாலும், இப்படி ஈகோ எதுவுமே இல்லாம நடிச்ச ஆர்யாவுக்கு ஒரு சபாஷ். இதுலயும் படத்தோட முடிவு மொக்கை...
------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்கேப் சினிமாஸ்ல couple seatனு  சொல்லி ஏமாத்தறாங்க (எதுவும் விபரீதமா நினைக்காதீங்க). அதுவும், அறுவது ரூவா பார்க்கிங்குக்கே போயிடுது. ஆனா, எப்பவும் கூட்டம் அள்ளுது. கவனிக்க, இந்தியா ஏழை நாடு.
------------------------------------------------------------------------------------------------------------------
காமன் மேனோட காசையெல்லாம், காமன்வெல்த்னு, வெளுத்துக்கட்டி, ஊழல்ல புது சாதனையே பண்ணிருக்காங்க. மீடியாவோட எந்த குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லாம, தட்டி கழிக்கறாங்க. இப்ப, இத வெச்சு பார்வர்ட் ஜோக் எல்லாம் வருது. நாட்டுக்கே வெட்க கேடான இத வெச்சி, ஒரு கூட்டம் உட்கார்ந்து, காமெடி பண்ண யோசிச்சிகிட்டு இருக்கு. ஊழல் பண்றவங்களுக்கு, இவங்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ரெண்டு பேருமே பொறுப்பில்லாதவங்கதான். இப்ப முடிஞ்ச ரமணா படத்துல காமிச்சா மாதிரி, இவனுங்க எல்லாரையும் எதாவது பண்ணனும்னு தோணுது... ஓ@!#@ தேவ@!#$%(&%)$&)....
------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா டக்கருன்னா என்ன????

Sunday, May 30, 2010

மற்றும் பல...

இனிமே, பதிவு எழுத நேரமே இல்லைன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே மக்கள், "ஆமா, நீங்க ரொம்ப பிஸி, அதான, அட போயா"னு கத்தறாங்க. அதனால, இனிமே அப்படி சொல்ல வேணாம்னு பாக்கறேன். இருந்தாலும், திடீர் திடீர்னு காணாம போறதுக்கு காரணம் இருக்கணும் இல்லையா, அதுவும் இல்லாம என் ரசிகப் பெருமக்கள் வேற வருத்தப்படுவாங்களா, அதனாலா ஒரு சின்ன விளக்கம் கொடுக்க கடமை பட்டிருக்கேன்..

பதிவு எழுதாம இருக்கா இப்போ ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சின்னதா நான் ஒரு internship பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்து, i just run of ideas a bit fast. தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதேன்னு நினைக்காதீங்க, தமிழ்ல கரிக்டா சொல்ல முடில. மனசுல இருக்கறத, சரியா பதிவு வடிவத்துக்கு மாத்த முடியல. வேற சில பிரச்சனைகளும் இருக்கு. ஆனா, அதெல்லாம் ஒரு நாலு வருஷம் கழிச்சு சொல்றேன், ஞாபகப்படுத்துங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
திரை விமர்சனப் பதிவுகள், ரொம்பவே clicheவா ஆகிட்டு வருது. வார்த்தைப் பிரயோகம், பாராட்டும்/திட்டும் விதம், எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. என்னோட சில விமர்சனங்களும் அப்படி மாறி வர்றத உணர்ந்து தான், ஒரு பத்தில விமர்சனம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இருந்தாலும், இன்னமும் நம்ம கேபிள் ஷங்கர் சாரோட பதிவுகளுக்கு, ஹிட்ஸ் குவியுது. அவர், சத்யம் தியேட்டர், சன் டிவி, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஆகிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
சுறாவோட தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டேன். வழக்கம் போல விஜய், "படம் ஹிட்டு"ன்னு பெட்டி குடுக்க, அடுத்த நாளே ரெட் கார்ட் போடப் போறாங்கன்னு செய்தி வருது. இதையே படமா எடுத்துருக்கலாம், செம்ம காமெடியா இருந்திருக்கும் and இரும்புகோட்டை முரட்டு சிங்கம், எனக்கும் ரொம்ப புடிச்சுது. முக்கியமா, அந்த translator சாம்ஸ் மற்றும் பாஸ்கர், காட்சிக்கு காட்சி கோல் அடிக்கறாங்க. பாடல்கள் ஒண்ணும் வேலைக்கு ஆகல. மறுபடியும், ஜி.வி.பிரகாஷ்சுமார் தான். முக்கியமா, குழந்தைகள் படத்துல, அந்த லக்ஷ்மி ராய் பாட்டு, totally irrelevant...
------------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு முன்னாடி, என் ஆங்கில அறிவுக்கு வந்த சோதனையைப் பத்தி எழுதியிருந்தேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, இந்த இரண்டு வருடங்கள்ல, என் ஆங்கிலம் கொஞ்சம் நல்லாவே improve ஆகிருக்குன்னு நினைக்கறேன். சில வார்த்தைகள், வாக்கியங்கள், பீட்டர்ல மட்டுமே சிந்திக்க வருது. முக்கியமா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்கவே மாட்டேங்குது. (and vice-versa). எப்படியோ, நானும், பீட்டர்ல கொஞ்சம் சீன் போட முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. பார்க்கலாம், 'எதாவது' நடக்குதான்னு... ;)
------------------------------------------------------------------------------------------------------------------
வேலை இன்னும் கிடைக்கல, கிடைச்ச அப்பறம் கண்டிப்பா சொல்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
"உன் பிரச்சனைக்கு அவன் காரணமா, இல்ல இவன் காரணமா இல்ல அந்த பொண்ணு காரணமா"னு கேள்வி கேட்ட என் நண்பன் கிட்ட, சமீபத்தில் நான் உதிர்த்த தத்துவம்.. "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, எல்லாத்துக்கும் என் எண்ணமும் செயலும் மட்டுமே காரணம். வேற யாரும் இல்லை. அதனால FV". (fv means freeya vidu). கரெக்டாதன சொல்லிருக்கேன். Sometime i get too philosophical you see.. :P..

இந்த நேரத்துல, வேற ஒரு காமெடி நினைவுக்கு வருது. போன வருஷம், என் பேரைச் சொல்லி, எடை பாக்கற மெஷின்ல, என் நண்பிகள் சில பேரு, சீட்டு எடுத்தாங்க, (என்ன பாசம் பாருங்க) அதுல என்ன போட்டிருந்துதுனா, "நீங்கள் சிந்தித்து கொண்டே இருப்பாதால், உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது". இப்போ நினைக்கறேன், "So true"
------------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் சொல்லிட்டேன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கறேன். மீண்டும், மீண்டு வருக... இப்போதைக்கு நான் ஜூட்டு...

எங்க போயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்...

Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

Wednesday, March 3, 2010

டில்லி - பயணானுபவங்கள்

விலாவரியா ஒண்ணும் விவரிக்க போறதில்லை. அதனாலா தைரியமா படிங்க.

காலேஜ்ல Industrial Visitனு (I.V) ஒரு விஷயம் இல்லன்னா, ரொம்பவே மொக்கையா இருக்கும். ஊர் சுத்த அது ஒரு சாக்கு. சாதரணமாவே நண்பர்களோட சுற்றுவேன்னாலும், I.Vனு சொல்லிட்டு போறது கொஞ்சம் எக்ஸ்ட்ரா த்ரில். போறதுக்கு முன்னாடி பலப் பிரச்சனைகள். நான் வரலை, நீ வரலை. நீ போகாதே. டிக்கெட் கிடைக்காது. டில்லில பனி, சிம்லால சனி, இப்படி எச்சகச்ச தடைகள் இருந்தாலும், ஒரு வழியா, 21 பேரோட கிளம்பினோம். போகும்போது RAC. அதனால, TTRஅ கரெக்ட் பண்ணி (ஏதொ பாத்து செஞ்சீங்கனா......), அல்மோஸ்ட் எல்லாருக்கும் பெர்த் ஏற்பாடு பண்ணிட்டு. ரெண்டு தியாகிகள் மட்டும் ஒரே பெர்த்ல அட்ஜஸ்ட் பண்ணிகிட்டோம்.            

மதுரா கிருஷ்ணர் கோவில் இல்லாம, வழக்கம் போல, எல்லாரும் சுற்றி பார்க்கும் இடங்களான, தாஜ் மஹால், பிர்லா கோயில், குதுப்மினார், அக்ஷர்தாம் கோவில் (உள்ள பெரிய imax கீது),  இந்தியா கேட் (எகிறி குதிக்க முடில), கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோட ஜீ டிவி, அப்பறம் சிம்லா (யப்பா இன்னா குளுரு. டாப் டு பாட்டம் ப்ரீஸ்) அங்க ரெண்டு மலை உச்சி, பொறவு மறுபடியும் டில்லி வந்து ஷாப்பிங்க்னு நான் ஸ்டாப் பயணம். சிம்லா குளிர் எனக்கு ரொம்ப புதுசு. வந்த எல்லாரும், ஷூ, கைலயும் கால்லயும் ஸாக்ஸ், ரெண்டு ஜெர்கின், ஸ்வெட்டர்னு ரெடியா வந்திருந்தாங்க. நான் மட்டும் கேவலமா ஒரே ஒரு ஜெர்கினோட, ஜெர்க்கு விட்டுகிட்டிருந்தேன். ஸ்வெட்டர், ஷூ, ஸாக்ஸ் எதுவுமே இல்லாம.

இருந்தாலும், அசராம, ரெண்டு மலை உச்சியும் (குதிரை பயணம்) தொட்டுட்டுதான் இறங்கினேன். ட்ரிப் முழுக்க மூணு வேளையும் சப்பாத்தி. தொட்டுக்க, பனீர் கலந்த ஏதாவது இரு டிஷ். சோறு இருந்தாலும் ஒரு பருக்கை உள்ள போகலை. அவங்க ஊர் ஹோட்டல் எங்கயுமே நம்ம ஊர் சாப்பாடு நல்லா இல்லை. விலையும் ஜாஸ்தி. டில்லி அவ்வளவு குளிர் இல்லை. நம்ம ஊர் பொண்ணுங்களை, அங்க இருக்குற பசங்க, முழுங்கரா மாதிரியே பாக்கறானுங்க. சில தைரியசாலிகள் வந்து இடிக்கவும் செய்யறாங்க.

இதுல முக்கியமான விஷயம் இன்னானா, எனக்கு டில்லி சுத்தமா புடிக்கலை. ஊரு முழுக்கவே, ஏதொ எல்லாரும் வேற வழி இல்லாம இருக்கறா மாதிரி, சூன்யமா இருக்கு. எல்லாரோட பார்வைலயும் ஒரு விரோதம் இருக்கு. கட்டாயத் தாலி கட்டினா மாதிரியே அலையறாங்க. ஒருத்தருக்கும், எனக்கு தெரிஞ்ச அளவு கூட இங்க்லீஷ் தெர்ல. எல்லாரும் இந்திலயே குளிக்கறாங்க (mein hindi 'bath' kartheen hoon). பொண்ணுங்க, மைதா மாவுல புடிச்சு வெச்சா மாதிரி இருக்காங்க. சரியா சைட் அடிக்க கூட முடியலை. நல்ல டிராபிக். பொண்ணுங்க ஷாப்பிங் பண்ண எக்கச்சக்கமா கொட்டிகிடக்கு. பசங்களுக்கு ரொம்பவே கொஞ்சம் தான். பைய தூக்கிட்டு, பின்னாடியே போக வேண்டியதுதான்.

மத்தபடி பெருசா நான் ஒண்ணும் கவனிக்கலை. ரயில் பயணத்துல பெரிய தொல்லை ஒண்ணு இருக்கு. திருநங்கைகள் கும்பலா வந்து, பசங்கள மிரட்டி காசு புடுங்கறாங்க. காசு குடுக்காதவங்களுக்கு என்ன ஆகும்னு என்னால இங்க 'ஓபனா' விவரிக்க முடியாது. போலீஸ் இருந்தும் கண்டுக்கலை. இப்படி டிரைன்ல வர (திரு)நங்கைகள் தன்னை தானே கேவலப்படுத்திகிட்டு ஏன் இப்படி மட்டமா நடந்துக்கராங்கன்னு தெரியலை. இதுக்கெல்லாமும் அரசாங்கத்தையே குற்றம் சொல்றது வேலைக்கு ஆகாது.

ஓட்டு மொத்தத்துல, என்னுடைய இந்த முதல் வட இந்திய பயணம், இனிதே நிறைவடைந்தது. பெர்சனலா எனக்கு இது மறக்க முடியாத அனுபவம். எக்கச்சக்க படங்கள் க்ளிக்கினோம். ஒரு நல்ல காமெரா இல்லாம, டில்லிய சுற்றி பாக்கறது வேஸ்ட். இதெல்லாத்தையும் விட, நிறைய விஷயங்களை புரிஞ்சிகிட்டேன், தெரிஞ்சிகிட்டேன்.  முக்கியமா ஒரு நாலு வார்த்தை கத்துக்கோங்க. "முஜே ஹிந்தி நஹி மாலூம்".. ரொம்ப வசதியா இருக்கும். இப்போதைக்கு இவ்ளோதான். வர்டா....


ஷாஜஹான் இவ்ளோ பெரிய சின்ன வீடு கட்டிருக்காரு...இது காதல் சின்னமாம். ஏன் அவரை இப்டி அசிங்கப் படுத்தறீங்க....

Sunday, December 13, 2009

டெலிவெட்டியும் கிரியேடிவெட்டியும்

சக பதிவர்கள் பல பேர், பல விதமான போட்டிகள, தொடர்ந்து நடத்திட்டு வராங்க. அப்படி ஒரு போட்டிதான் இந்த டெலிவெட்டி. நான் நடத்தலைங்க. கலந்துகிட்டேன். இத நடத்துறது BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம். அவங்க ப்ளோக்ல சில பல வருஷங்களாகவே இத நடத்திட்டு வராங்க. ரொம்ப சிம்பிள் விளையாட்டுங்க. படம் பார்த்து கதை சொல்றா மாதிரி பெயர்கள் சொல்லணும். அவ்வளவே. இது வரை எனக்கு கலந்துக்க ஆர்வம் எதுவும் வந்ததில்லை. ஆனா கடந்த போட்டி, நம்ம தலைவர் ரஜினியப் பற்றி. விடுவனா. எல்லா படமுமே சல்பியா இருந்ததால டக்கு டக்குனு பதில மைல் பண்ணிட்டேன். First come first serve மாதிரி, முந்துபவர்களுக்கே பரிசுன்னு நினைக்கறேன். இன்னிக்கு முடிவுகள பார்த்தா, என் பேரும் முதலிடப் பட்டியல்ல இருக்கு. 15/15... எப்பூடி?? இதனால நான் சகல மாணவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.... ஒண்ணும் இல்லை. எல்லாரும் நல்லா இருங்க. BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம்-க்கு நன்றி.

சொல்ல மறந்துட்டனே, www.blogeswari.blogspot.com படிக்க மறக்காதீங்க. அவா இவா பாஷைல இவங்க அடிக்கிற நக்கல் இருக்கே, நான் படிச்ச தம்லீஷ் ப்ளோக்லையே இதுலதான் உச்சக்கட்டம். அப்படி ஒரு நையாண்டி. முக்கியமா இவங்க கந்தசாமி படத்துக்கும், குர்பான் படத்துக்கும் எழுதியிருக்குற விமர்சனம், ஒரு பானை சோறு.
வோட்டு போட மறக்காதீங்க. (சேய், நானும் இப்படி கேட்க ஆரம்பிச்சுட்டனே)




இதெல்லாம் வரலாறுல இடம்பிடிக்கும். 
எனக்கு சிலை வெப்பாங்க. பசங்க நோட்ஸ் எடுப்பாங்க..... 

Wednesday, November 25, 2009

மற்றும் பல...

வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சில updates பதிவுகளுக்கு தான் இப்போ மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி, அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும், அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??    
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
 நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->லிங்க்  
 --------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->இங்க
------------------------------------------------------------------------------------------------------------- 
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...       
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

Sunday, July 12, 2009

மற்றும் பல...

ஆரம்பிச்சிட்டாங்க...

கல்லூரி திறந்தாச்சு. இந்த முறை பாடங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நான் எதிர்பார்த்தா மாதிரி, practical வேலைகள் கொஞ்சம் நிறையவே இருக்கும்னு நினைக்கறேன். அதானால, நிறைய ப்ளோக முடியாதுன்னும் நினைக்கறேன். எங்க music band மீட்டிங்கும் நடந்தது. புதுசா நாலைந்து பேர் தேவைப்படறாங்க. இப்பதான் கவுன்சிலிங் நடக்குது. லைன்ல நிக்கற பசங்களையும், அப்பா அம்மாக்களையும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும்...

நாடோடிகள்

நாடோடிகள் பட விமர்சனத்தை எழுதச் சொல்லி, என் நண்பர்கள் சில பேர் கேட்டாங்க. 3 முறை அந்த படத்தை பார்த்துட்டேன். இதுக்கு மேல அதை பற்றி வேற என்ன சொல்ல. இருந்தும், அவர்களோட விருப்பத்திற்கு இணங்க, வரும் வாரம், எழுதுகிறேன். (உங்க தலை விதி அப்படி)

பைக்

புது பைக் ஒன்னு வாங்கினேன். (paasion plus). நான், ஏன் அண்ணனோட வண்டி (discover) ஓட்டி பழகியதால, புது வண்டியில, இன்னும் gear pattern பழகல. ரொம்ப பேஜாரா கீது. அதனால, என் அண்ணனோட வண்டியவே இன்னும் ஓட்டிங். ஏன் தலை விதி பாருங்க, புது பைக் இருந்தும், ஓட்ட தெரிஞ்சும், ஆண்டவன் இப்படி பண்ணிட்டான். இருந்தும், பொங்கி எழுந்து, பழகிக் கொண்டு, ஏன் பைக்கை ஓட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் வாரம், படம் ரிலீஸ். பார்க்க நான் ரெடி, நீங்க ரெடியா??

Friday, June 26, 2009

MASS - இல்லா - mani

வழக்கம் போல, இந்த வாரமும் ஏதாவது படம் பார்க்கணுமே, So, வழக்கம் போல ரமேஷ் அண்ணாவ இட்டுகுனு, அண்ணா theatre பக்கம் போனேன். அங்க, முத்திரை படம் ரிலீஸ். படம் கொஞ்சம் சுமாரா இருப்பதாகவே கேள்விப்பட்டதனாலதான் போனேன். ஆனா டிக்கெட் கிடைக்கல. நாமதான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா யார் பேச்சையுமே கேட்கமாட்டோமே, படம் பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, பார்த்தே தீரணும். அண்ணா கிட்ட, "வேற வழியில்லை, மாசிலாமணி பார்ப்போமா"னு கேட்டேன். அவரும் "எதுவா இருந்தாலும் ஓகே" அப்படின்னாரு. அங்கேர்ந்து ஆல்பர்ட் theatre. டிக்கெட் வாங்கிட்டு (85ஓவா) உள்ள போனோம்.

வழக்கம் போல, படம் செம்ம மொக்கை. அதாவது நீங்க எவ்வளவு மொக்கைனு நினைக்கறீங்களோ, அத விட மொக்கை. வழக்கம் போல, நானும் அண்ணாவும் அடுத்தடுத்து வர காட்சிகள யூகிச்சிட்டே வரோம், அதே மாதிரி வந்துகினே இருக்கு. நாங்களும் எவ்வளவு தான் யூகிக்கறது. ஒரு கட்டத்துல, நாங்க சொல்றது எல்லாமே வந்ததால, போர் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. ஹீரோ முகத்த தியேட்டர்ல அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க முடியல. ஹீரோயினயாவது கொஞ்சம் கமர்ஷியலா காமிச்சிருக்கலாம், அவங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க. அதனால, அதுவும் தேறலை. அவங்க டான்ஸராமா, சங்கமம் விந்தியா கிட்ட கத்துகிட்டாங்கன்னு நினைக்கறேன். இடைவேளைக்கு அப்பறம், நாங்களாகவே சில சீனுக்கு கை தட்டி, சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, "சூப்பரப்பு" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். காமெடி track இருந்ததா வெளிய பேசிக்கறாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியல.

கிளைமாக்ஸ்ல, ஹீரோ சண்டை போடுறப்போ, எனக்கு பசங்க படம் டயலாக் ஞாபகத்துல வர, நானே சத்தமா "அய்யய்யோ, மாசி கைய முறிக்கிட்டானே, அவனுக்கு கோவம் வந்துருச்சே, இப்ப பல்லக் கடிப்பான் பாரு"னு சத்தமா கமெண்ட் விட்டேன். அந்த ஹீரோவும் அதே மாதிரி செய்யறாரு. ஷப்பா, முடியல. 2.5 மணி நேரம், மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கி வீட்டுக்கு வந்தோம். படம் நல்லா இல்லைன்னு அவங்களுக்கே தெரியும் போல. அதனாலேயே படத்துல அவங்களே "சூப்பரூ"அப்படின்னு ஒரு பாட்டு பாடிக்கறாங்க. சன் டிவிக்கு மட்டும் மற்றொமொரு வெற்றிப் படம். எங்களுக்கு வழக்கம் போல, ஒரு நாள் தூக்கம் + 100 ரூவா காலி. எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் பார்க்கராணுங்கடா, இவனுங்க ரொம்ப நல்லவங்கனு நீங்க சொல்றது எனக்கு காதுல விழுது. என்ன செய்ய.

மீண்டும், மீண்டு வந்து, அடுத்து ஒரு படத்த பார்த்து, பதிவறேன். வர்ட்டா....


அய்யயோ, ஸாரி, ஸ்டில் மாறிடிச்சு. விடுங்க, எல்லாம் ஒண்ணுதான்.

Friday, May 15, 2009

மற்றும் பல....

தினமும் ஒரு சிக்ஸர்
விளம்பர உலகத்திலேயே இதுபோல எதுவும் நடந்தது கிடையாதுன்னு நினைக்கிறேன். Almost, தினமும் ஒரு concept, தினமும் ஒரு AD, தினமும் அது நல்லா இருக்கு, அடுத்து என்னான்னு எதிர்பார்ப்பை கிளப்பிவிடுது. நான் சொல்றது, இப்ப IPL போட்டிகள் நடுவுல ஒளிபரப்பாகும் Vodafone ADs பற்றி. என்னை வேறெந்த விளம்பரமும் இவ்வளவு ஆச்சரியப்படுத்தியதில்லை. அது உண்மையா, கிராபிக்ஸா அப்படீன்னே நிறைய பேருக்கு சந்தேகம். இந்த விளபரம் கிராபிக்ஸ் இல்லையாமா. உண்மையான மனிதர்களுக்கு, அந்த கேரக்டர் ஏற்றாப் போல உடைகள் போட்டு எடுத்துருக்காங்க. அதைப் பார்க்கும்போது ஒருத்தருக்கு, அனிமேஷன்னே தோணும்.

பிரகாஷ்
வர்மா என்கிறவர்தான் இந்த விளம்பரங்கள இயக்கிருக்கார். இந்த கதா/விளம்பரப் பாத்திரங்கள உருவாக்க ரொம்ப பாடுபட்டிருக்கார். மொத்தம் மூணு வாரம் முன் ஏற்பாடுகள் மட்டுமே பண்ணிருக்கார். இன்னும் பல trivia இருக்கு. இந்நேரத்துக்கு அதெல்லாம் உங்களுக்கு forward mailla வந்திருக்கணும். அப்படி ஒரு வேளை உங்களுக்கு வரலைன்னா, கமெண்ட்ல உங்க மெயில் id mention பண்ணி, சொல்லுங்க. நான் அனுப்பறேன்..
-------------------------------------------------------------------------------------------------
Sadist
போன பதிவுல, என் டைரியை பற்றி நான் எழுதினதுக்கு (அதுவும் தூய தமிழில்), ரொம்ப நாளைக்கு அப்பறம், நிஜமாகவே நல்ல feedbacks வந்தன. என் நண்பர் ஒருவர், ஒரு படி மேலே போய், "உன் டைரிய படிக்க கொடு"னு கேட்டார். தரமாட்டேன்னு சொன்னதுக்கு, "நீ ஒரு sadist, எதிர்ப்பார்ர்பை கிளப்பி விட்டு, இப்ப வெறுப்பேத்தர"னு சொல்லிட்டார்.

நான் எழுதியதன் நோக்கம், என் நடையை நானே ஒரு வகையில சோதிச்சிக்கிட்டேன். உருப்படியா எதுவும் எழுதி ரொம்ப நாள் ஆகுதே, So, நம்மளால ஒழுங்கான நடைல எழுத முடியுதான்னு பார்க்கவே எழுதினேன், அதுவுமில்லாம, எழுதிய டைரிய படிச்சுப் பார்க்கும்போது, ஒரு மாதிரி திருப்தியாவே இருக்கு. என்னோட டைரிய படிக்கனும்னு கேட்ட அன்பர்கள் எல்லாருக்கும் , SORRY.
-------------------------------------------------------------------------------------------------
எண்ணங்கள்
தேவையில்லாத சிந்தனைகள் நிறைய தோணுது. நிறைய மனிதர்களோட பழகும் போது, அவங்களோட நடவடிக்கைகள கவனிக்க தோணிது. "நான் ஏன் அதெல்லாம் கவனிக்கறேன்" அப்படீங்கற எண்ணமும் parallela ஓடிகிட்டு இருக்கு. ஆனா இதுதான் மனித இயல்பு அப்படீன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கறேன். இவ்வளவு வித்தியாசமான attitudes இருக்குற ஆட்களோட பழகும் வாய்ப்பு, ஒரே சமயத்துல கிடைக்கும்போது, அதை ஒரு learning experiencea தான் நான் எடுத்துக்கறேன். எல்லாருமே, தினமும், அவங்களோட செயல்களால என்னை ஆச்சரியப் படுத்தறாங்க. அது, சில சமயங்கள்ல பாஸிடிவாகவும், பல சமயங்கள்ல நெகடிவ்வாகவும் இருக்கு.

நாம எவ்வளவு importance கொடுத்தாலும், நம்மை மதிக்காத, எந்த பிரச்சனையும் இல்லைனாலும், "சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை, நான் தீர்த்து வைக்கறேன்"னு சொல்ற, ஓவரா பொது நலத்துல அக்கறைன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்துற, நட்புக்கும் காதலுக்கும் சரியானா வரைமுறை பிரிக்கத் தெரியாத, இப்படி பலதரப்பட்ட ஆட்கள, ஒரு குறுகிய கால கட்டத்துல சந்திச்சிருக்கேன். இந்தப் பதிவ படிச்சிட்டு, "யாரைப் பற்றி சொல்ற??"னு யாரும் என்னை கேட்க வேண்டாம். உங்களுக்கு உண்மையான பதில் கிடைக்காது. நீங்களாகவே யாரையும் கற்பனை பண்ணிக்கவும் வேண்டாம். அது தவறாகவே இருக்கும்.

Wednesday, April 29, 2009

டைரியின் கைதி...

இந்த வருடம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக ஆகிறது. என் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவில், நிறைய நல்ல விஷயங்கள். So, இதை மறக்காமல், டைரியில் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. நம்மில் நிறைய பேருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். எனக்கில்லை. ஏற்கனவே இரு முறை முயற்சி செய்து, தோல்வியுற்றேன். இப்பொழுது எழுத உட்காரும்போது, ஆரம்பத்தில் சிறிது கடினமாகவே இருந்தாலும், போகப் போக வேகம் பிடித்து, இந்த நான்கு மாதங்களில் நடந்ததை, சிரமத்துடன் நினைவுகூர்ந்து, ஒரு வழியாக 47 பக்கங்களில் எழுதிவிட்டேன்.

5 நாட்களில், தினம், இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உட்கார்ந்து, எழுதினேன். யார் எழுதும் டைரியையும், ஏதாவது ஒரு காலத்தில், வேறொருவர் படிப்பார் என்பது திண்ணம். என்னுடையதும் அப்படியே. ஆனால், முடிந்த வரை, எனக்கென இருக்கும் ஞாபகங்களை, எண்ணங்களை, (i.e. exclusive thoughts and memories of mine) யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. So, நான் மொத்தமாக எதையும் எழுதப் போவதில்லை. இங்கே, என் டைரியின் முதல் பக்கத்தை மட்டும் கொடுக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று (உண்மையை மட்டும்) சொல்லுங்கள். முக்கியமான விஷயம், இதற்கு மேல் என் டைரியிலிருந்து வேறெந்த பக்கங்களும், ப்ளோகில் வராது...

-------------------------------------------------------------------------------------------------
23 ஏப்ரல், 00:18am
"இது, கடந்த நான்கு மாதங்களாக (ஜனவரி 09 - ஏப்ரல் 09), என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றிய, என் நினைவில் நின்ற, நான் இனி மறக்க முடியாத, மறக்கக் கூடாத, மறக்க விரும்பாத சம்பவங்களைப் பற்றியவை. இவ்வளவு நாள், டைரி எழுதும் பழக்கம் எனக்கில்லை. இரண்டு முறை முயற்சித்து, சோம்பேறித்தனத்தினாலும், பயத்தினாலும், தொடர்ந்து எழுத முடியாமல் போனது. கடந்த ஒரு வாரமாகவே, டைரி எழுதும்படி என் instinct சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனாலேயே, இந்த அகால வேளையில், நிறைய யோசித்ததின் விளைவாகவும், பழைய நினைவுகளின் தொல்லைகளாலும், எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை
, இதை நானல்லாது, வேறு யாரேனும் படித்துக் கொண்டிருப்பீர்களேயானால், தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். மற்றவர்களது டைரியை படிக்கும் ஆர்வம் எத்தகையது என்பதை நானும் அறிவேன். நான் இங்கே கேட்டுக் கொண்டாலும், அலட்சியம் செய்துவிட்டுப் படிக்கத் தொடர்வீர்கள் எனவும் தெரியும். அப்படிப் பட்டவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இனி வரும் பக்கங்களை படித்து விட்டு, என் மேல் உங்களுக்கிருந்த அபிப்பிராயம், நல்லதோ கெட்டதோ, மாறினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இதை டைரியை நீங்கள் படித்துவிட்டது எனக்கு தெரிந்தாலும், உங்களிடம் எப்போதும் பழகுவது போலவே பழகுவேன். முடிந்தவரை, படித்ததை, வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

-------------------------------------------------------------------------------------------------

இதற்குப் பிறகே, விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்து நடை, ப்ளோகின் உதவியால், சிறிது முன்னேறி இருப்பதாக, எழுதி முடித்ததைப், படித்துப் பார்த்ததில் தெரிந்தது. அதை நானே சொல்லிக் கொள்ளக் கூடாதல்லவா, அதனாலேயே, ஒரு சோறு பதமாக, முதல் பக்கம் இங்கே. நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நன்றி...

Sunday, April 12, 2009

ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்...

வேற என்ன வார்த்தையெல்லாம் இருக்கோ, எல்லாத்தையும் சேர்த்துக்கோங்க.
நிஜமாவே, வார்த்தையால விவரிக்க முடியாத தருணம்னு என் வாழ்க்கைல இதுவரை, எதுவமே இருந்ததில்லை. இப்ப இருக்கு....

ஜெயா டிவி நிகழ்ச்சியில, நாங்க championship வாங்கிட்டோம்.

இவ்வளவு நாள் உழைத்த, உழைப்போட பலனை அனுபவிக்கும்போது......................... .................................................. என்ன சொல்றதுன்னே தெரியல போங்க.... :)

மனசுக்குள்ள இன்னும் வெடிச்சிகிட்டே இருக்கேன்...

Friday, April 10, 2009

மற்றும் பல...

வழக்கம் போல, காலேஜ் அலுவல்கள். நல்லா மாட்டிக்கிட்டேன். இந்த மாச கடைசில செமஸ்டர் எக்ஸாம் வருது. அதுக்கும் கொஞ்சமாவது படிக்கணும். அதனால, blog பக்கம், ஏன், வீட்டுப் பக்கமே வர முடியல. வழக்கம் போல என்னை மன்னிச்சு, கொஞ்சம் பொறுமையா இருந்து, படிச்சிட்டு போங்க.

----------------------------------------------------------------------------------------------------

முடிஞ்சா, வாரா வாரம் ஞாயிற்று கிழமை, ஜெயா டிவி பாருங்க. மதியம் 12-1.

----------------------------------------------------------------------------------------------------

குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும், படத்துல, ரெண்டு பாட்டு நல்லாயிருக்கு. "சின்னஞ்சிறுசு" and "நான் தருமண்டா". கேட்டுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க

Monday, March 30, 2009

ஒரு வழியா...

இப்படியெல்லாம் busy ஆவேன்னு கனவுல கூட நினைச்சதில்லை. ப்ளோக் பக்கம் வர முடியாம போக முக்கிய காரணம், எங்க காலேஜ் சார்பா, ஜெயா டிவில ஒரு நிகழ்ச்சியில participate பண்றோம். அதுக்கான practice + shooting. வெற்றிகரமா, முதல் மூணு rounds win பண்ணிட்டோம். மீதி இருப்பது, quarter, semi and final மட்டுமே. வெற்றி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. நிகழ்ச்சிய, ஞாயிறு மதியம் 12-1 பார்க்கலாம்.

இது மட்டும் இல்லாம, சில பல assignments வேற. அதற்காகவும் இராப்பகலா வேலை. எனக்கு time management வேற அவ்வளவா வராது. So, கொஞ்சம் சொதப்பவும் செய்யறேன். இருந்தாலும், இன்னும், பெருசா ஒண்ணும் பாதிப்பு வரலை. என்ன, சரியா தூங்க முடியறதில்லை. மத்தபடி எல்லாம் ஓகே. எல்லாம் okனு சொல்லும்போதுதான் இன்னொரு மேட்டர் ஞாபகம் வருது. நேத்து, "யாவரும் நலம்" படம் பார்த்தேன். இவ்வளவு நாளா, stereo typela இருந்த horror genre, இந்தப் படம் மூலமா, வேற வடிவம் எடுத்திருக்கு.

நிஜமாவே, நல்லா இருந்துச்சு. பாட்டு மட்டும் செம்ம மொக்கை. ஆரம்பத்துல கொஞ்சம் நாடகத்தனமா இருந்தாலும், போகப் போக interesting. அதுவும், கிளைமாக்ஸ் சூப்பர். P.C. ஸ்ரீராம், நல்லா பண்ணிருக்கார். (DI உதவியோட). இந்தப் படத்தை, ஹாலிவுட்ல ரீமேக் பண்றதா செய்தி. நல்ல விஷயம். ஒரு வழியா, கொஞ்சம் ஒரிஜினலா ஒரு படம் பண்ணிருக்காங்க. படத்துல, ஓரிரு continuity mistakes இருக்கு, கவனிச்சேளா???

heroine, make-up இல்லாம வந்தா, இன்னும் பயங்கரமா இருக்கும்

Monday, March 16, 2009

மற்றும் பல...

காலேஜ்ல பயங்கராம வேலை குடுத்துகினே இருக்காங்க. இதுக்கு நடுவுல, music events வேற வருது. என்ன பண்றதுன்னு தெரியல. எனக்கு time management சரியா வராது, இருந்தாலும், இவ்வளவு வேலைய ஒரே நேரத்துல manage பண்றது பொதுவா எல்லாருக்குமே கஷ்டம்னு நினைக்கறேன். So, blog பக்கம் வர முடியலன்னா (both urs and mine) தப்பா நினைக்காதீங்க.

--------------------------------------------------------------------------------------------------

அடுத்த முக்கியமான விஷயம், கார்த்திக் தம்பி ஒரு tag குடுத்துருக்காரு. மேல சொன்ன விஷயத்துனால, எனக்கு time அவ்வளவா இல்லை. எனக்கு யோசிச்சு bloga கொஞ்சம் time வேணும். இதுக்கு முன்னாடி நீங்க குடுத்த theatre tag still pending. அதுக்கும் ஒரு தடவை sorry. கூடிய விரைவுல, அடுத்தடுத்து ரெண்டையும் ப்ளோகறேன்.

--------------------------------------------------------------------------------------------------

காலேஜ்ல என்னை சுற்றி சில கிசுகிசுக்கள் வருது. என் பெர்சனாலிடிக்கு இது கொஞ்சம் ஓவர். அதனால, எல்லாத்தையும் இதோட நிறுத்திருங்க. எனக்கு அவ்வளவு scope இல்லை. ஒரு எதிர்கால சினிமா ஆளுக்கு, இதெல்லாம் சகஜமாக இருந்தாலும், இத மாதிரி, ஒரு பெண்ணை சேர்த்து வெச்சு பேசுவதை நான் விரும்பலை. (மத்தவங்களுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ;). Default celebrity reply will be: "இந்த கிசுகிசுக்கள் எல்லாத்தையும் பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது. எங்களுக்குள்ள இருப்பது, வெறும் நட்பு மட்டும்தான். மத்தபடி ஒண்ணும் இல்லை" :)

--------------------------------------------------------------------------------------------------