Showing posts with label Movies 'n' music. Show all posts
Showing posts with label Movies 'n' music. Show all posts

Monday, February 29, 2016

ஒரு ராஜா பாடலைப் பற்றிய நீண்ண்ண்ண்ண்ட பதிவு

1000 படங்கள். படத்துக்கு 4 பாட்டுகள் என்றால் கூட (வெகு சில படங்களில் மட்டும் பாடல்கள் கிடையாது) 4000 பாட்டுக்கள். இதில் நம் பெற்றொருக்கு பிடித்தது, நண்பர்களுக்குப் பிடித்தது, டிவி - ரேடியோவில் போட்டுத் தேய்ப்பது என நாம் அறிந்திருக்கும் (அதாவது 90களின் ஆரம்பத்திலும் அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் கேட்டவரை) ராஜா பாடல்கள்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

நான் பாடல்களைத் தேடித் தேடிச் சென்று கேட்பவன். எந்த மொழி பேதமும் கிடையாது. பாடல் நன்றாக இருந்தால் போதும். அதிலும் ராஜா பாடல் என்றால் கூடுதல் சாஃப்ட் கார்னரோடு, அய்யோ பாடல் நமக்கு பிடிக்க வேண்டுமே என்ற நினைப்போடும் கேட்பேன். அப்படி நான் அவ்வபோது புதிதாக தெரிந்து கொள்ளும், டிஸ்கவரி என்று சொல்லுவார்களே, அப்படி டிஸ்கவர் செய்யும் ராஜா பாடல்களில் சில, பல நாட்கள்  - இரவுகள் என் தலைக்கு மேல் ஹெட்ஃபோனிலும், தலைக்குள் என்ஃபோனிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



இதுவே ராஜாவின் பாடல் எனக்குள் நிகழ்த்தும் மேஜிக். மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்கும், அதில் மூழ்கி முத்தெடுப்பீர்கள், மூர்ச்சையாகி வெளியே வருவீர்கள் போன்ற சப்பைக்கட்டுகள் எதுவும் கிடையாது. முதல் முறை கேட்கும்போது பிடித்துவிடும். அங்கிருந்து சில நாட்கள் பித்து. அவ்வளவு தான் இந்தப் ப்ராசஸ்.

(அதே போல பல முறை கேட்டு பிடிக்காத பாடல்கள்களும் இருக்கினறன. அதற்காகவெல்லாம் ராஜாவை விட்டுக் கொடுத்து பேச முடியாது)
புதிதாக ஒரு பாடலைக் கேட்கும்போது, வழக்கம் போல, "எப்படிய்யா இந்த மனுஷன் அப்பவே இதெல்லாம் பண்ணிருக்காரு?"என வரும் கேள்வி, "இந்தப் பாட்டை எப்படி இவ்வளவு நாள் கேட்காம இருந்தேன்?" என வரும் வருத்தம், இப்படி இன்று (காலை) வரை இளையாராஜா என்ற இசைக்கலைஞன் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இன்று, இளையராஜா 1000 நிகழ்ச்சி எவ்வளவு மொக்கையாக இருந்தது என்ற பதிவுகளை ஒரு பக்கம் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஆபிஸ் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போதே, மறுபக்கம் ராஜா எஃப்.எம்மில் (யாரோட யோசனையோ, நல்லா இருக்கட்டும்) எப்போதும் போல அடுத்தடுத்து பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.



முதலில் 'என் தேகம் அமுதம்' ('ஒரு ஓடை நதியாகிறது'' என கூகுளார் சொன்னார்) என்ற பாடல். ஜானகியின் குரலில் மற்றுமொரு பலான பாடல் என்பது கேட்கும்போதே புரிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏனோ வரவில்லை.

அடுத்த சில பாடல்கள் கழித்து, 'மழை வருவது மயிலுக்கு தெரியும்' என்ற பாடல். ராஜாவின் ரொமாண்டிக் சாங் போல ஆரம்பித்தாலும், புதிதான ஒரு தாளத்துக்கு பாடல் மாறியது ('தம்தன தாளம் வரும்' பாடல் தாளத்தைப் போல). ராஜா பாட்டில் எதிர்பாராத இடத்தில் மிருதங்க ஓலி ஆரம்பிக்கும்போது அது தரும் கிக்கே தனி. ஜானகி குரலில் பாடல் ஆரம்பிக்க, கூடவே அந்த தாளமும். பாடலில் சுவாரசியம் கூடியது. 5 நிமிடங்கள் தானே , வேலையைச் சற்று தள்ளி வைப்போம் என சரணத்துக்கு தயாரானேன்.

ஸோலோ வயலின், ஸ்ட்ரிங்க்ஸ், வீணை என ராஜா வழக்கம் போல இண்டர்லுயூடில் விளையாடியிருந்தார். தொடர்ந்து ராஜா பாடல்களைக் கேட்டுப் பழகியவர்களால் கண்டிப்பாக அவரது ஒரு பாடலின் ஓட்டம் எப்படியிருக்கும் என்பதை யூகிக்க முடியும். குறைந்தது மனதுக்குள்ளாவது ஓட்டிப் பார்த்துவிட முடியும். இது அவரது மைனஸோ, குறையோ அல்ல. இது ரசிக்கும்படியான ஒரு ராஜா ஜானரின் க்ளீஷே. (உடனே எஸ்.ஏ.ராஜ்குமார் க்ளீஷே என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு கபீம்குபாம் காத்திருக்கிறது)

ஆனால் இந்தப் பாடலின் சரணம் ஆரம்பிக்கும்போது அது எப்படி போகும் என்பதை யூகிக்க முடியவில்லை. முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ஸ்ட்ரிங்க்ஸ் அடுத்த வரிகளுக்கு லீட் கொடுக்க, அடுத்த 24 நொடிகள், விடாமல் நதி நீர் ஓடுவதைப் போல சீராக மேலே ஏறி இறங்கி வளைந்து நெளிந்து அழகாக மீண்டும் பல்லவியில் முடிந்தது.

ஆச்சரியத்திலும் வரும் வழக்கமான அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டு அந்த சரணத்தை ரீவைண்ட் (வழக்கொழிந்து போன வார்த்தையோ?) செய்து மீண்டும் கேட்டேன். எப்படியும் அடுத்த சரணமும் இதே மெட்டுதான். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய முதல் சரணத்தை இரண்டாம் முறையும் கேட்க வேண்டும் என்ற ஆசை. 'i just wanted to relive that moment' என்பதைப் போல.

அதே பிரவாகம், அதே ஆச்சரியம், அதே கெட்ட வார்த்தை, பல்லவி வந்தது. அடுத்த இண்டர்லுயூட் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்னப் படம், என்ன பாடல், யார் நடித்தது எனத் தேட, ஈஸ்ட்மென் கலரில் கே.ஆர். விஜயா ஓடி வருவது போல ப்ரிவியூ வந்தது. ''மம்மி பிராமிஸ்ஸாக இந்தப் பாடலை பார்க்கும் ஆசை வந்து விடக்கூடாது'' என நினைத்து அந்த பக்கத்தை மூடிவிட்டு மீண்டும் பாடலுக்கு வந்தேன். இரண்டாவது சரணம் ஆரம்பித்தது.
ரெண்டு பத்திக்கு முன்னால் சொன்னதில் 'டிட்டோ'.

முதலில் சொன்னதைப் போல, ''எப்படி இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டது?, பாடப்பட்டது, அதுவும் ஒரே டேக்கில் எப்படி அந்த சரணத்தை முடித்திருக்க முடியும்??, என்ன ராகமாக இருக்கும்???, இவ்வளவு நாள் நம் கண்ணில் (காதில்) எப்படிப் படாமல் போனது????, சே அம்மா அப்பா கூட சொல்லவே இல்லையே'' என கலந்து கட்டிய எண்ணங்கள், கேள்விகள்.

பாட்டின்  'ரிஷி மூலம்' தெரிந்தது. டவுன்லோட் செய்தேன். வேலையை முடித்து விட்டு முதல் வேலையாகப் பாடலை மீண்டும் கேட்டேன். சக ராஜா ரசிகன் நண்பனுக்கும் அனுப்பினேன். ''கண்டிப்பாக அவனும் கேட்டிருக்க மாட்டான். கேட்டிருக்கக் கூடாது. பாடலை அவனுக்கு அறிமுகம் செய்த பெருமை என்னயே சேர வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இந்தப் பாட்டை பிரபலப்படுத்தலாம். ஒரு வேளை நாம் தான் லேட்டோ? இந்தப் பாடல் ஏற்கனவே பிரபலமோ?'' என்றெல்லாம் தேவையில்லாத பல சிந்தனைகள்.

இன்றைய நாளின் வேலைகள் அனைத்தும் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், (வரும் வழியில் என் மொபைலிலும்) ஹெல்மெட்டை அப்படியே வைத்துவிட்டு அம்மா அப்பாவிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேச, நான் நினைத்தது போல அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ''இப்பதான் நீ கேக்கறியா?" என்ற அம்மாவின் கலாய்ப்போடு என் அறைக்கு வந்து, நண்பனுடன் சிறிது நேரம் பாடலைப் பற்றி சாட்டில் சிலாகித்து விட்ட போதும் அடங்கவில்லை.



அந்த நேரம் பார்த்து ஒருவர், ராஜா காப்பியடித்த பாடல்கள் என்ற யுடியூப் லிங்கை பகிர்ந்திருந்தார். அது இன்னும் எரிச்சல் ஏற்ற இதோ இந்த நீண்ட நெடிய பதிவு.

இதற்கு மேல் என்ன சொல்ல? 'நண்டு' படத்தின் இந்திப் பாடல், 'ஆராதனையில்' வரும் ''இளம் பனி துளி'', ''ஒரு குங்கும செங்கமலம்'', 'எச்சில் இரவுகளின்' ''பூ மேலே வீசும் பூங்காத்தே'' இப்படி நான் காலம் கடந்து தெரிந்து, என்னை ஆச்சரியப்படுத்திய பல ராஜா பாடல்கள் வரிசையில் ''மழை வருவது மயிலுக்கு தெரியும்'' பாடலும் சேர்ந்தது.

வரிகளை கவனிக்கும் போது இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமாக இருந்தது. தன் மகனை காணப் போகும் ஒரு தாயின் எண்ணம் எப்படி இருக்கும், அவள் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருப்பாள், எப்படி பதைபதைத்திருப்பாள் என்பதெயெல்லாம் பாடலைப் பார்க்காமல் கேட்டதிலேயே புரிந்தது.

வழக்கமாக நாயகன் நாயகி டூயட், இல்லையேல் பேத்தாஸ் என போர் அடித்துக் கொண்டிருந்தவருக்கு புதிதாக கிடைத்த சிச்சுவேஷன், சோளப் பொறியாக இருந்தாலும், இருந்த பசிக்கு இதுவே போதும் என ஒரு கை பார்த்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் தாங்க் யூ ராஜா!!

அந்தப் பாடல்:



பி.கு - காப்பியடிப்பது எந்த வகையிலும் சரியான செயல் அல்ல. அதை நான் இங்கு நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாத் துறையில் ஒரு கிரியேட்டர் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து, தெரிந்து, உணர்ந்து கொண்டிருக்கிறேன். டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது, இருக்கும் சப்ளையில் ஒன்றிரண்டில் குறைகள் இருக்கலாம். அதிலும் ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு ஒன்பதனாயிரம் பாடல்களைப் போடுவது என்பது சாத்தியம் அல்ல. க்ரியேட்டிவிட்டிக்கு நேரம் தேவை. அப்படி நேரமில்லாத நிலையிலும், நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டும், சில வெளிநாட்டுப் பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே என் யூகம். (கதை வேணும், ஆனா படம் 3 மாசத்துல ஆரம்பிக்கனும், உங்க அவசரத்துக்கு புதுசா கதை வராது, அப்போ இருக்கவே இருக்கு ஒலகப் பட டிவிடி).

ஆனால் சிம்பனி பாடல்கள் தனது இன்ஸ்பிரேஷன் என்பதை ராஜா எங்கும் மறுத்ததாக தெரியவில்லை. அதே போல, எஸ்.டி பர்மன் பாடல் ஒன்று எப்படி படிப்படியாக இஞ்சி இடுப்பழகி ஆனது என கமல்ஹாசன் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பரவலாக பல பாடல்கள் தழுவப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ராஜாவிடம் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது என்பதை ஒழுங்காக இசை தெரிந்த எவரும் ஒப்புக் கொள்வார்கள்.  என்பது திண்ணமோ திண்ணம். 

Saturday, August 16, 2014

மற்றும் பல - 16/08/2014


Writers Block, சோம்பேறித்தனம், மெத்தனம் இதில் எது என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தோன்றவில்லை, அதனால் எழுதவில்லை. இதுவே காரணம்.
ஏன் தோன்றவில்லை?
ஒரு வேளை நான் மந்தமாகிவிட்டேனோ என்னவோ. என் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது ஏதோ வாழ்ந்து கெட்ட குடும்பம் போல தோன்றுகிறது. முன்பெல்லாம் அவ்வபோது ஏதோ ஒன்றை எழுதி வந்துள்ளேன். ஆரம்பித்த வருடத்தில் 59, அடுத்த வருடம் 58, அடுத்து 36 என பதிவுகளின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 2+ வருடங்களாக நான் எழுதிய பதிவுகள் மொத்தமே 10 தான். எழுதும் ஆர்வம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது இங்கே எதிரொலிப்பது இல்லை. இனிமேல் நமக்கு முன்பு போல் எழுதவே வராதோ என்று கூட பயம் வருகிறது. மேலும் மேலும் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வழக்கம் போல எழுதாமல் விடவேண்டாம் என்பதால், இதோ. எங்காவது உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

-----------------------------------------------------------------------


பல நாட்கள் கழித்து ஒரு முழுமையான மாஸ் பட அனுபவத்தை வேலையில்ல பட்டதாரி தந்தது. என் நினைவுக்கு எட்டிய வரை, கடைசியாக தூள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த உணர்வு இருந்தது. தேவியில், மொத்த அரங்கமே கொண்டாடிய படம் அது. அந்த அனுபவத்திற்காகவே அங்கு மேலும் இரண்டு முறை பார்த்தேன். அப்படித்தான் இருந்தது வே. ப. படத்தின் பாடல்கள் வந்த நாள் முதல் ஒட்டிக்கொண்டு விட்டது. படமும் அப்படியே. இன்று திரைப்படம் என் போன்ற ரசிகர்களினால் 50 கோடியை தாண்டியுள்ளது. harmless entertainment. ஜெயிப்பதில் மகிழ்ச்சியே. முக்கியமான ஒரு சம்பவம். படத்தில் ஒரு கெட்ட வார்த்தை வரும்போது, புரிந்து கொண்டு, நானும், தியேட்டரில் மிகச் சிலருமே கைதட்டிய போது, இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகிவிடும் என்று தோன்றியது. 


-----------------------------------------------------------------------


எப்படி வே.ப பார்க்கும்போது தூள் நினைவிற்கு வந்ததோ, அதே போல ஜிகர்தண்டா பார்க்கும்போது சூது கவ்வும் நினைவிற்கு வந்தது. இரண்டு படங்களுமே முற்றிலும் புதுமையான ஒரு அனுபவத்தைத் அரங்கில் இருப்பவர்களுக்கு தந்தன. தமிழ் திரைக்கு புதிய விஷயங்களைத் தந்தன. டேர்டி கார்னிவல் படத்தின் காப்பி என வதந்தி உலவியதால், முதலிலேயே அந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஆனால் ஜிகர்தண்டா பார்க்குபோது அப்படி எந்த ஒரு அம்சமும் ஒத்துப் போகவில்லை. படம் தந்த பிரம்மிப்பில் பல விஷயங்களை சரியாக கவனிக்கவில்லை. மீண்டும் அரங்கில் பார்க்க வேண்டும். 


-----------------------------------------------------------------------


கடந்த சில மாதங்களில் வெளியான எந்தப் பாடல்களும் சகிக்கவில்லையே. என்ன காரணம்? 


-----------------------------------------------------------------------


 அஞ்சான் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் கிடைத்தலும் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். ட்ரெய்லர் தந்த பயம் அப்படி. இன்று படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பிறகு, "கடவுள் இருக்கான் குமாரு" என்று தோன்றியது. ஏன் இந்தப் படம் ஓடக் கூடாது என நினைத்தேன் என்று தெரியவில்லை. படத்தின் விளம்பரங்களிலிருந்தே ஒரு விதமான திமிர் தெரிந்தது. அதீதமான நம்பிக்கை அல்ல. திமிர் மட்டுமே. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இனி நமது கோலிவுட் மகான்கள் இந்த கமெர்ஷியல் கடுப்புகளைக் கட்டி அழ மாட்டார்கள் என ரசிகர்கள் சிலர் நினைக்கின்றனர். இந்த ஊரில் தான் குருவி, வில்லு, சுறா, ஜில்லா, பட்டத்து யானை, அலெக்ஸ் பாண்டியன், ஏகன், பழனி போன்ற படங்களை எடுத்து, ஊமைக் குத்தாக வாங்கி, வைத்தியம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களா அஞ்சானிலிருந்து தெரிந்து கொள்வார்கள்? ஆயிரம் ஜிகர்தண்டா வந்தாலும் சிலர், அப்படித்தான். 


-----------------------------------------------------------------------


ராஜாவின் நல்ல பாடல்களைப் பகிர்ந்து பல காலம் ஆகிறது. இந்தப் பாடல் தெலுங்கில் 'மரண மிருதங்கம்' என்ற திரைப்படத்திலிருந்து. பாடலில் ஏதோ ஒரு mystery இருப்பது போல தோன்றுகிறது. அதுவே பாடலை (எனக்கு) சுவாரசியமாக்குகிறது. பொதுவாக தெலுங்கு பாடல்களை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்து விட்டு பாடல் பிடிக்காம போய்விட்டால்? இதையும் அப்படியே. பி. சுசீலா, எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல், இதோ... 






Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா?? 

Tuesday, April 3, 2012

3

கொலைவெறி இவ்வளவு பெரிய ஹிட்டானவுடனே எல்லாருக்குமே படம் சுமாராதான் இருக்கும்னு ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்துடுச்சு. இருந்தாலும் படத்துக்கு ஒரு ஒப்பனிங் வந்துதுக்கு காரணம்னு நான் நினைக்கரது, கொலைவெறியத் தாண்டி, மத்த பாடல்களும் நல்லா இருந்து ஹிட்டானதுனால, தனுஷோட நடிப்பு எப்படி இருக்கும்னு  பார்க்க , முக்கியமா ஐஸ்வர்யா தனுஷ் என்ன பண்ணிருக்காங்கன்னு பார்க்க. இதையெல்லாம் எதிர்பார்த்து வந்த மக்கள், முக்கியமான கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டாங்கன்னே சொல்லணும். செல்வராகவன் எழுதிகொடுத்த கதைய, தனுஷ் டைரக்ட் பண்ணி, ஐஸ்வர்யா பேர் மட்டும் போட்டுகிட்டாங்களோன்னு பலபேருக்கு சந்தேகம் வருது.

எனக்குத் தெரிஞ்ச படத்தோட ப்ளஸ், தனுஷோட அனாயாசமான நடிப்பு. பழக்கப்பட்ட கேரக்டர்ல நடிக்க வெச்சதால, பின்னிட்டாருன்னு நினைக்கறேன். அடுத்து இசை + பின்னணி இசை. பின்பாதில பல இடங்கள்ள ரெண்டு மூணு பீஸை திரும்ப திரும்ப வாசிச்சாலும், போர் அடிக்காம செட் ஆகிருக்கு. அனிருத் அடுத்த படத்துல என்ன பண்ணுவாருன்னு எதிர்பார்க்கறேன். முதல் பாதி ஸ்கூல் காட்சிகள். அதுல வர சிவ கார்திகேயனோட பன்ச், ரெண்டாவது பாதில நண்பனா வர சுந்தரோட பாத்திரம்.  தனுஷ், ஸ்ருதி ரொமான்ஸ். இப்படி சில விஷயங்கள சொல்லலாம்.

மைனஸ், மெதுவா நகர்ற திரைக்கதை, சுவாரசியமில்லாத ரெண்டாவது பாதி, பைபோலர் டிஸ்ஆர்டர்னு சொல்லிட்ட அப்பறமா, அதை வெச்சே கடைசி முக்கால் மணி நேரத்தை ஓட்றது,  ஈசியா சொல்லி புரியவேச்சிருக்கலாமேனு எல்லாருமே கேள்வி கேட்கற லாஜிக் ஓட்டை. அவருக்கு எதனால, எங்க அந்த பிரச்சனை ஆரம்பிச்சுது, அந்த சாமியார், குழந்தை உருவங்கள் யாருன்னு நிறைய கேள்விகளுக்கு விடை இல்ல. பெரிய மனசு பண்ணி, முதல் படத்துக்கு பரவால்லைன்னு சொல்ற பக்குவம் எனக்கில்ல. எல்லாரையும் அழகா ஆழ வெச்சிருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் பண்ணி அழ வெச்சிட்டாங்க ஐஸ்வர்யா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பி.கு - ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தைவிட இதுல நல்லாவே நடிச்சிருக்காங்க and தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடச்சிருமோ. அந்த கிளைமாக்ஸ் நடிப்பு, சான்ஸே இல்ல.

பி.கு 2 - படம் பார்த்த அப்பறம், கண்ணழகா பாட்டு இன்னும் நல்லா இருக்கு

பி.கு 3 - சங்கம் தியேட்டருக்கு எதிரா கேஸ் போடலாம்னு இருக்கேன். டயலாக் ஒரு எழவும் சரியா காதுல விழல. சில காட்சிகள் கட் வேற பண்ணிட்டாங்க. தேவில பார்த்த அப்பறம்தான் விமர்சனமா போஸ்டனும்னு இப்போ போஸ்ட் பண்றேன். தேவி தியேட்டர் சவுண்டை அடிச்சிக்க முடியாது. சங்கம் தியேட்டர் ஆளுங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். 

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - ப.வி


கமல்ஹாசனோட நிறைய படங்கள்ல, அவருக்கு மட்டும் நல்ல பேரு கிடைக்கும். “படம் மொக்கை, ஆனா கமல் பின்னிட்டாரு”னு சொல்லுவாங்க. சூர்யாவும் அப்படிப்பட்ட ஹீரோவாகிட்டாருன்னு நினைக்கறேன். ஆனா, அவரும் கவர்ச்சி நடிகை மாதிரி அடிக்கடி உடம்பை காமிக்கறதை குறைச்சிகிட்டா நல்லா இருக்கும். சூர்யா மாதிரியே படத்துல தென்படற ஒரு ப்ளஸ், வில்லன் ஜானி. மிரட்டிருக்காரு. ஷ்ருதி ஹாசன், முதல் படத்துக்கு பரவாயில்லை. ஆனா மேக்கப் ஜாஸ்தி + தமிழ் கொலை. ரொம்ப சுமாரான மியூசிக், பிண்ணனி இசை, பழக்கப்பட்ட எடிட்டிங்னு கொஞ்சம் tiring.

தமிழன் தமிழன்னு சொல்லியே படத்தை ஓட வெச்சிடலாம்னு நினைச்சாரு போல நம்ம முருகதாஸ். சண்டை காட்சிகள் மகா நீளம். நோக்கு வர்மம்னு சொல்லி சொல்லி, ஒரு கட்டத்துக்கு மேல, யாரு நோக்கு வர்மம்ல திடீர்னு வில்லனா மாறி அடிக்க ஆரம்பிப்பாங்களோன்னு த்ரில்லிங்கா இருக்கு. அழுத்தமில்லாத திரைக்கதைல ஒன்றவே முடியலை. தமிழரோட முயற்சிய குறை சொல்றாங்க, உழைப்ப மதிக்கத் தெரியலை, அது இதுனு பேச்சுக்களும் வரும். அதுக்காக பயந்துகிட்டு படம் சூப்பர்னு சொல்லிடாதீங்க. தமிழர்களை பெருமை படுத்துற எண்ணத்துல இந்தப் படத்தை முருகதாஸ் எடுத்திருக்கலாம். ஆனா சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுவாரசியமா, அழுத்தமா சொல்லிருக்கலாம். முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனா Strictly average - இதை தவிர இந்தப் படத்தை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை.

பி.கு - தெலுங்குல என்னானு டயலாக் பேசுவாங்க?? ஆந்திராலேர்ந்துதான் ஆவக்காய் போச்சுன்னா??

Saturday, September 17, 2011

வந்தான் வென்றான் - ப.வி

மங்காத்தா படம் எதனால ஓடுதுன்னே தெரியலைன்னு சொல்றவங்க, தயவு செஞ்சு வந்தான் வென்றான் படத்தைப் பாருங்க, தெரியும். என்னடா முதல் நாளே படம் ஃபுல் ஆகலியேன்னு நினைச்சேன். செய்தி முன்னாடியே பரவி, எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க போல. உள்ள நுழையும்போதே சில யூத் வார்னிங் பண்ணாங்க. ஆனா என் கிரகம். போய் மாட்டிகிட்டேன். படம் முடிய 30நிமிஷம் இருக்கும்போதே, நிறைய பேர் கிளம்பிட்டாங்க. அவ்வளவு மொக்கை. இல்லை இல்லை, மொக்கைங்கற வார்த்தை கரெக்டா விஷயத்தை கன்வே பண்ணலை. வேற வார்த்தை இருந்தா சொல்லுங்க.

எந்த விஷயத்தைப் பார்த்து இந்த படத்தை ஜீவா ஒத்துகிட்டாருனு தெரியலை. அவருக்கு பெருசா ஒண்ணும் ஸ்கோப் இல்லை. டம்மி. சந்தானமும் இந்த முறை சல்பெடுக்கலை. (அந்த குரல் மாத்தி பேசற காமெடி மட்டும் பரவாயில்லை). டாப்ஸி, டோண்ட் ஸீ. நந்தா படம் முழுக்க ஒரே ரியாக்‌ஷன். வேதநாயகம்னா, ஸாரி ஸாரி, ரமணாணா, பயம். எனக்கு வயத்த வலி, இந்த ரெண்டு டயலாகையும் ஒரே மாடுலேஷன்ல சொல்றாரு. தமனோட இசையும், படத்துல பெரிய நசைதான். ஆக மொத்ததில், இதற்கு மேல் எப்படி கழுவி ஊற்றுவது என்று தெரியவில்லை. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே. ஜீவாவின் கோ படத்தை மறந்து, அதற்கு முன் நடித்த, சிங்கம் புலி, கச்சேரி ஆரம்பம், தெனவட்டு ஆகிய படங்களை, நினைவு கூறுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம்தான், இந்த படத்துக்காக, சொட்ட சொட்ட மழைல நனைஞ்சிகிட்டு போனேன். என்னை மாதிரியே நிறைய பேர் ஈரமான மனசோட வந்திருந்தாங்க. படம் முடிஞ்ச அப்பறம்தான் தெரிஞ்சுது, எங்களை பலி கொடுக்க, ஆண்டவனே குளிப்பாட்டிருக்கான்னு. முடியலடா முருகா....

Saturday, July 9, 2011

வேங்கை - ப.வி

வழக்கமான ஹரியின் படம். இதைச் சொல்லி சொல்லியே போர் அடிக்குது. ஏய், நான் இப்படித்தான், என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு, எல்லாருக்கும் சவால் விட்டிருக்காரு ஹரி. ஆரண்ய காண்டம் பார்த்த கண்ணோட, மூளையோட, மனசோட இந்த படத்தை பாத்தீங்கன்னா,  சத்தியமா பிடிக்காது. நான் எதையும் எதிர்பார்க்கல, ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தேன். ரெண்டரை மணி நேரம், எனக்கும் என் நண்பனுக்கும் நல்லா பொழுது போச்சு.

தனுஷ், தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபை பண்ண முயற்சி பண்றாரு. மத்தபடி, எல்லா ஹரி படத்துலையும் வர கதாபாத்திரங்கள், அங்க இங்க கொஞ்சம் இடம் மாறி இருக்கு. அவ்வளவே. பிரகாஷ்ராஜ் இந்த படத்துக்காக தனியா நடிச்சாரா இல்லை, சிங்கம் படம் எடுக்கும்போதே சேர்த்து ஷூட் பண்ணிட்டாங்களான்னு தெரியலை. தமன்னா இல்லாம, வேற யாராவது நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும். தமன்னா நண்பியும், தனுஷோட தங்கையும், நல்லா இருக்காங்க.. ஹி ஹி... இசை ஓகே.

மறுபடியும் சொல்றேன், இவர் இப்படிதான்னு தெரிஞ்சுகிட்டே எதையும் எதிர்பார்க்காம படம் பாருங்க, நிச்சயம் நல்ல டைம் பாஸ். நாம சுறாவையே தாங்கின இதயங்களாச்சே. வேங்கையெல்லாம் வெங்காயம் சாப்பிடறா மாதிரி :) எப்படி நம்ம ஹரி ஸ்டைல் பன்ச். அப்பறம் சந்திப்போமா. ஆனா இப்படியே போனா, அடுத்த ஹரி படத்தோட விமர்சனம் ரெண்டு வார்த்தைதான் இருக்கும். “ஹரி படம்”

யோவ், இது சாமி படத்துல யூஸ் பண்ணதாம், புதுசா ஒண்ணு வாங்குங்கயா..

Sunday, June 19, 2011

அவன் இவன் - ப.வி

”அவனப் பத்தி நான் பாடப்போறேன்,
இவனப் பத்தி நான் பாடப்போறேன்.
அவனும் சரியில்லை, இவனும்தான் சரியில்லை,
 யாரப்பத்தி நான் பாடப்போறேன்”

படம் பாத்துட்டு, பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் போட்ட பாட்டு தான் இது. இதை விட இரத்தின சுருக்கமா இந்த படத்தைப் பத்தி சொல்லமுடியாது. உயிரக்கொடுத்து நடிச்சிருக்குற விஷாலும், ஜி.எம். குமாரும், வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த உழைப்பை தந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சு, இந்தப் படத்துக்காக மட்டும்தான், பாலா, தியேட்டர்ல நிறைய திட்டு வாங்கிருக்காரு. வழக்கமான ஒரு ”பாலா கிளைமாக்ஸ” யோசிச்சிட்டு, அதை சுத்தி ஒரு படம் பண்ணிருக்காரு. ஒண்ணே முக்கால் மணி நேரம், படத்துல என்ன நடக்குதுன்னே புரியலை. யுவனின் இசையும் பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லை.

இன்னும் பாலா தந்த அதிர்ச்சி என்னை விட்டு போகலை. விடுங்க, இதுக்கு மேல டைப் பண்ணா, மரியாதை குறைவா எதாவது சொல்லிடுவேன். விஷால், குமாரைத் தாண்டி படத்துல கவனிக்க வைக்கற ரெண்டு பேர், அந்த குண்டு பையனும், அம்பிகாவும். மத்தபடி, பாலாவை நம்பின விஷால், ஜி.எம்.குமார் + என்னை மாதிரி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு,  பாலா, பெரிய நம்பிக்கைத் திரோகம் பண்ணிட்டாருனு தோணுது. போங்கய்யா, போய் புள்ளைகுட்டிங்களை படிக்க வைங்க, வந்துட்டாங்க, அவன் இவன்னு. !@#$%^*

Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம் - ப.வி

சிம்பிளா சொல்லி முடிக்கறேன். படம் சூப்பர். அங்கங்க வர கொஞ்சம் செயற்கைத்தனமான ரியாக்‌ஷன்ஸும், சூழலும் மட்டுமே எனக்கு பட்ட குறை. மத்தபடி படம் அருமை. அதுவும் யுவன், பிண்ணணில பின்னிருக்காரு. நடிப்பு டிபார்ட்மெண்ட்ல எல்லாருமே அசத்தல், முக்கியமா அந்த பையன் + அவன் அப்பா. வசனங்களும் பக்காவா செட் ஆகிருக்கு. அங்கங்க உலகப்படம் பாக்கறா மாதிரி கூட இருந்துச்சு. பெண்களுக்கு புடிக்காதுன்னு சிலர் சொல்லிட்டு வராங்க. அப்படி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மென்மையான ஆளுங்களுக்கு பிடிக்காதுனு சொல்லலாம். so, மத்தவங்க எல்லாம், கண்டிப்பா படத்தை பாருங்க. Hats off to Kumararaja...  கண்டிப்பா பெரியவங்களுக்கு மட்டும். ஏன்னா இது ஆரண்ய Condom..

Sunday, May 8, 2011

எங்கேயும் காதல் - ப.வி

சனிக்கிழமை நைட் படத்துக்கு புக் பண்ணிருந்தேன். அதனால, வெள்ளிக்கிழமைலேர்ந்தே படத்துக்கு பாதகமான விமர்சனம் வர ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டுதான் படத்துக்கு போனேன். சும்மா சொல்லகூடாது, செதுக்கு செதுக்கனு செதுக்கிருக்காரு டைரக்டர் பிரபுதேவா. கதையும் காணோம், திரைக்கதையும் காணோம். படத்துல வர சுமன் மாதிரி, டிடெக்டிவ் வெச்சு தேடினாலும், திரைக்கதைங்கற அம்சம் கிடைக்காது. ரெண்டு மணி நேர மியூசிக் வீடியோல, பாட்டுக்கு நடுவுல சீன் வெச்சா மாதிரி படா டமாஷு.

ஜெயம் ரவி, டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காரு. நல்லா டான்ஸ் ஆடறாரு. ஹன்ஸிகா ஒரு தினுசா இருக்காங்க. கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் வருது. ஆனா சாதரணமா நடிக்க வரலை. சுமன் ஒகே. ராஜூ சுந்தரம் கடுப்பேத்தறாரு. படத்துல ப்ளஸ், படம் ரெண்டே மணி நேரம், அமர்க்களமான கேமரா, லொகேஷன், நாங்கை பாட்டு படமாக்கப்பட்ட விதம். வெள்ளைக்காரங்க தமிழ்ல் லிப் மூவ்மெண்ட் கொடுக்கும்போது, புல்லரிக்குது. ஹன்ஸிகாவுக்கே நிறைய இடங்கள்ல sync ஆகலை. என்னடா கடைசியா பார்த்த ரெண்டு படமும் மொக்கையா இல்லையேனு, நானும் ரமேஷ் அண்ணாவும், எங்களுக்கே கண்ணு வெச்சுகிட்டதுனாலதான், இந்தப் படம் இப்படினு நினைக்கறேன். எங்கேயும் காதல், வெங்காயம் மாதிரி. உரிக்க உரிக்க ஒண்ணும் இல்லை.
நன்றி ரமேஷ் அண்ணா...

Monday, May 2, 2011

SOURCE CODE - ப.வி

கொஞ்சம் குழப்பமான, யோசிக்க வைக்கற படங்கள்னா எனக்கு ஆர்வம் ஜாஸ்தியாகிடும். இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும்போதே, படத்தை பார்க்கணும்னு  முடிவு பண்ணிட்டேன். எதிர்பார்த்த அளவு சூப்பரா இல்லைனாலும், கொடுத்த காசுக்கு மோசமில்லாம இருந்துச்சு.

ஹீரோ ஸ்டீவன்ஸ் ஒரு ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, அவருக்கு முன்னாடி ஒரு மிடில் ஏஜ் பிகர் உட்கார்ந்துகிட்டு “தாங்கஸ் ஷான், உன் அட்வைஸ நான் எடுத்துகிட்டேன்”னு சொல்றா, ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. குழப்பத்துல, அந்த ட்ரைன் சூழல்ல நடக்கற சில விஷயங்கள நோட்டம் விட்டுட்டே பாத்ரூம் போறாரு. கண்ணாடில வேற உருவம் தெரியுது. மறுபடியும் மண்டை காஞ்சு போய் வெளிய வராரு, அந்த பிகர் நிக்குது, பக்கத்து ட்ராக்ல இன்னொரு ட்ரைன் போகுது, பாம் வெடிச்சு, ரெண்டு ட்ரைனும் காலி. இப்போ மறுபடியும் ஹீரோ ஸ்டீவன்ஸ் அதே ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, எல்லா விஷயமும் மறுபடி நடக்குது. இதெல்லாம் என்னா மேட்டர்னு குழப்பத்தோட ஹீரோ கண்டுபிடிக்கறதை, சைன்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து பதில் சொல்லிருக்காங்க.

படம், கிராபிக்ஸ், எடிட்டிங், காமெரானு டெக்னிக்கலாவும் சூப்பர், நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நம்ம ரஸல் பீட்டர்ஸும் ஒரு சின்ன ரோல் பண்ணிருக்காரு. ஹீரோயின் கொஞ்சம் முத்தின கேஸ்தான், இருந்தாலும் இந்த படத்துக்கு பரவாயில்லை. ஹீரோ ஜேக், ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு விஷயம் தெரியவந்து தெளிவாகறதை, நல்லா வேறுபடுத்தி நடிச்சிருக்காரு. இந்த மாதிரி ஜானர் படங்கள் விரும்பறவங்க, கண்டிப்பா பார்க்கலாம். இன்ஸெப்ஷன் அளவு இல்லைனாலும், நல்லாதான் இருக்கு. படம் புரியாதவங்க பின்னூட்டத்துல கேளுங்க, விளக்கறேன் :)

Sunday, May 1, 2011

வானம் - ப.வி

படத்தோட டைட்டிலை படிக்கும்போதே, நிறைய பேர் ’வேணாம்’னுதான் படிக்கறாங்க. அவ்வளவு மோசமான படமில்லை. ஆனா சூப்பர் படமும் இல்லை. ஒரே நேரத்துல நாலு பேரலல் கதைகளை சொல்றது தமிழ் சினிமாவுக்கு புதுசுதான், ஆனாலும் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்து சுவாரசியமா சொல்லிருக்கலாம். இடைவேளை வரை, என்ன சொல்லவராங்கன்னே பிடிபடலை. அனுஷ்காவோட கதைய, தெலுங்குலேர்ந்து அப்படியே டப்பிருக்காங்க, கொஞ்சம் கூட ஒட்டலை. நல்லா இருந்த பாடல்களோட காட்சிகளும், சொதப்பல் ரகம்தான். சில பாடல்கள் தேவையே இல்லை.

படத்துல ஹைலைட், வழக்கம்போல சந்தானம் காமெடி, முக்கியமா சில இடங்கள்ல சிம்புவோட நடிப்பு, சரண்யா + அந்த தாத்தா நடிப்பு. ஒரு மத-நல்லிணக்க மெசேஜ சுத்தி கதையா, இல்லை, நாலு கதைக்கும் ஒரே கிளைமாக்ஸா இப்படி ஒரு மெசேஜ் சொல்லி முடிக்க வந்தாங்களான்னு, பத்து கெட்டெப் தசாவதாரம் மாதிரி ஒண்ணும் புரியலை. மெசேஜும், சுதந்திர தினத்துக்கு போடற ஸ்கூல் டிராமா மாதிரி இருந்துச்சு. ரொம்ப மேலோட்டமான, அரைவேக்காட்டுத்தனமான மெசேஜ். யாருமே பார்க்ககூடாத, மொக்கை படமில்லை. பட், இன்னும் கூட நல்லா இருந்திருக்கலாம். முடிஞ்சா பாருங்க.

பி.கு - போன பதிவுல, தேவி தியேட்டர்ல சவுண்டு நல்லா இல்லைனு எழுதிருந்தேன். ஆனா, வானம் படம் பாரடைஸ்ல பார்த்தேன். சவுண்டு வழக்கம் போல சூப்பர். கோ படத்துல தான் ஏதோ பிரச்சனையோ??

Monday, April 25, 2011

கோ - ப.வி

சாதரணமா கேட்கும்போது நம்ப முடியாத கதையா இருக்கறத, நம்பறா மாதிரி, கொஞ்சம் மசாலா தூவி எடுத்திருக்காங்க. ரொம்ப தோண்டினா, முதல் பாதி கொஞ்சம் நீளம், தேவையில்லாத வெண்பனி, அமளி துமளி பாடல்கள் மாதிரி சில குறைகள் தெரியலாம். ஆனா, ரெண்டே முக்கால் மணி நேரமுமே நல்ல எண்டெர்டெயின்மெண்ட். ஜீவா, அஜ்மல், (கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ்,) அந்த எடிட்டர், பியா, சிறகுகள் அணி, இப்படி எல்லாருமே கச்சிதமா நடிச்சிருக்காங்க. ஹீரோயின் கார்த்திகாவை தவிர. பாவம் நடிக்கவும் வரலை, அவ்வளவு சூப்பராவும் இல்லை. ஓவர் மேக்கப். அயன் மாதிரியே, இதுலையும், விட்டு போன குட்டி குட்டி டீடெய்ல்ஸை, ஃப்ளாஷ்பாக்ல சொல்றது, டெக்னாலஜிய யூஸ் பண்றதுனு சில விஷயங்கள் இருக்கு. நல்ல திருப்பங்களோட, வசனங்களோட சுறுசுறுப்பான படம். கண்டிப்பா பாருங்க. மிஸ் பண்ணாதீங்க.

எப்பவும் தேவி தியேட்டர்ல சவுண்டு சும்மா பட்டைய கிளப்பும். ஆனா, கோ பார்க்கும்போது ரொம்ப மோசமா இருந்துச்சு. முக்கியமா பாட்டும், பிண்ணனியும் ஒழுங்கா sync ஆகாம, செம்ம கடுப்பு. யார் கண் பட்டுதோ. வேற தியேட்டர்ல பாருங்க.

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Monday, February 21, 2011

PLAYLIST - JANUARY '11

ஆடுகளத்தோட அய்யயோ, எங்கேயும் காதலின் நெஞ்சில் நெஞ்சில் + நாங்கை ஆகிய பாடல்கள் இன்னமும் லிஸ்ட்ல இருக்கு. புதுசா உள்ள வர பாடல்கள்

கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
மெதுவான ஷாட்ஸ், கீழயே பார்க்கற ஹீரோ, இதோட, மிஷ்கின் படத்தை அடையாளப்படுத்தும் இன்னொரு விஷயம் இந்த மஞ்சப் புடவை பாடல். கார்திகேயன்னு ஒருத்தர் நல்லா பாடிருக்காரு. நல்ல catchy டியூன். முதல் முறை கேட்டவுடனேயே பிடிச்சிருந்துது. அமீர் ஆட்டமும் சூப்பர். ஆனா, படத்தோட பார்க்கும்போது தேவையில்லைனுதான் தோணிச்சு.

என்னமோ ஏதோ, அக நக - கோ
என்னமோ ஏதோ, ட்ரெய்லர்ல கேட்டவுடனேயே அடுத்த ஹிட்டு ரெடின்னு முடிவு பண்ணிட்டேன். ஹாரிஸ் பிராண்ட் பாட்டு. அக நக பாடலும் அப்படிதான். அதுவும், நடுவுல ஒரு தெலுங்கு வரிகள் வர இடம் ரொம்ப அழகா இருக்கு. என்னதான் பாடல்கள் நல்லா இருந்தாலும், ஹாரிஸ் கொஞ்சம் அரச்ச மாவையே அரைக்கராறு. கவனிச்சிகிட்டா நல்லா இருக்கும்.

ராக்கெட் ராஜா - சிறுத்தை
ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு நல்ல ஹீரோ என்ட்ரி சாங். வழக்கம் போல, வித்யாசாகர் பேரு வெளிய வராமலே பாடல் ஹிட் ஆகிடுச்சு. போன ஜென்மத்துல என்ன பண்ணாரோ பாவம், எக்கச்சக்க ஹிட் பாடல்கள் கொடுத்தும் புகழடைய முடியல. கவலைபடாதீங்க சார், நாங்க இருக்கோம். 

யுவன் இசைல, பேசு, பதினாறு ஆகிய படங்கள் வந்தாலும், பாடல்கள் பெருசா எடுபடலை. போனா போகட்டும்னு இசையமைச்சா மாதிரி இருக்கு. அதே மாதிரி, ராஜாவின் அய்யன்னு ஒரு படம், அதுலயும் பாடல்கள் ரொம்ப சுமார்தான். ராஜாவோட பழைய பாடல்களோட ஒப்பிட்டு பார்க்கும்போதே, அய்யன் பாடல்கள் கொஞ்சம் பழசா இருக்கு. மணிரத்னம், பாலுமகேந்திரா மாதிரியான டைரக்டர்ஸ் மறுபடியும் எப்போதான் ராஜாவோட சேருவாங்களோன்னு இருக்கு.

இந்த மாசத்துலேர்ந்து, ஒவ்வொரு ப்ளேலிஸ்ட்லயும் எனக்கு பிடிச்ச பழைய பாடல்களை, ஒண்ணு ஒண்ணா உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். அது வேற மொழிப் பாடலா கூட இருக்கலாம். இந்த மாத பிளாஷ்பேக் பாடல், சுபாஷ் படத்துல வர ஹே ஸலோமா ஸலோ..


படம் ப்ளாப்னு தான் நினைக்கறேன். இருந்தாலும், இந்தப் பாடல், சில்க் ஸ்மிதாவோட கடைசி பாடல்னு விளம்பரப்படுத்தப்பட்டு கொஞ்சம் கவனிக்கப்பட்டுது. உங்கள்ள எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கும்னு தெரியலை. வித்யாசாகர் - அர்ஜுன் காம்பினேஷன்ல நிறைய நல்ல பாடல்கள் இருக்கு. அதுல இதுவும் ஒண்ணு. வில்லன் கும்பல் நடுவுல, ஹீரோ மாறுவேஷம் போட்ட, அங்க வர ஒரு ஐட்டமோட பாடரா மாதிரி ரொம்ப புதுமையான சிச்சுவேஷன். மறைந்த பாடகி சுவர்ணலதாவோட, வித்யாசாகரே பாடியிருக்காரு. குரல் சில இடங்கள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி இருக்கும். மொத்த பாடல்லையே ஒரு charm இருக்கும்.கேட்டுப் பாருங்க. 

Friday, December 31, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2010

போன வருஷங்கள்ல நான் எழுதின எண்ணிப்பார்த்தேன் பதிவுகளுக்கு மக்கள் கொடுத்த  அமோக (!!!!) வரவேற்ப்பை முன்னிட்டு. இந்த வருஷக் கடைசியிலும் வழக்கம் போல, 2010ல் எனக்கு பிடிச்ச, படங்கள் + பாடல்கள் பற்றிய ஒரு பதிவு... இந்தப் படங்கள் பிடிக்க பெரிய காரணங்கள் என்ன இருந்திடப் போகுது. அதனால, ரொம்ப நீட்டி முழக்காம, பெயர்களையும், சில படங்களுக்கு நான் எழுதின விமர்சனங்களோட லிங்கையும் கொடுத்திருக்கேன்.

பிடித்த படங்கள்
  • ஆயிரத்தில் ஒருவன்
    நிறைய பேர் வறுத்தெடுத்தாலும், இந்தப் படம் நல்ல அனுபவம். ரசிகர்கள்னு பொதுவா சொல்ல முடியல, ஆனா படத்துக்கான மனநிலைய எனக்கு சரியா செட் பண்ணிச்சு... விமர்சனம் --> இங்க முதல் பத்தியில.
  • கோவா
    மறுபடியும், ஊர் ஆயிரம் சொன்னாலும், எனக்கும், என் நண்பர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம். செம்ம கலாட்டா... விமர்சனம் --> இங்க
  • விண்ணைதாண்டி வருவாயா
    மூணு தடவை தியேட்டர்லையே பாத்தேன். இதுக்கு மேல எதாவது சொல்லணுமா?? சிம்பு பேர், கார்த்திக்னு இருந்தது முக்கியமான காரணம்...
  • சிங்கம்
    இந்த வருஷத்தோட சிறந்த மாஸ்னு சொல்லலாம். எந்திரனைவிட செம்ம மாஸ்.
  • பாஸ் என்கிற பாஸ்கரன்
    நோ நான்சென்ஸ் படம்னு சொல்லலாம். ரொம்ப light-hearted, feel good படம். விமர்சனம் -->இங்க ஆறாவது பத்தியில ரெண்டே லைன்..
  • எந்திரன்
    தலைவரோட மேஹ்........ ப்ளாக் ஷீப் சீனுக்காகவே ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன். இன்னொருமுறை பார்க்கலாமான்னு யோசிக்கறேன். ஷங்கர் என்கிற ஒற்றை ஆளோட சாதனை. மேக்கிங் பார்த்த அப்பறம், இன்னமும் பிடிச்சுது... விமர்சனம் --> இங்க
உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
  • இன்ஸெப்ஷன்
    (இதை பத்தி நான் எழுத்திய சில உரைநடை விளக்கப் பதிவுகள்
    இங்க --> ஒண்ணு - இன்னொன்னு - இன்ன்ன்னொன்னு - கடைசியா ஒண்ணு)
  • ஹாரி பாட்டர் 7
    நான் பாட்டர் fan. அதை விட எம்மா வாட்ஸன் fan. இதுக்கு மேலையுமா காரணங்கள் தேவை??
  • UnStoppable
    படம் நல்லா விறு விறுனு இருக்குனு சொல்லுவாங்களே. அப்படி இருந்துச்சு...
  • டாய் ஸ்டோரி 3 - விமர்சனம் --> இங்க
  • ஷட்டர் ஐலாண்ட்
  • கராதே கிட்
  • How to Train your Dragon
  • Kick - Ass
  • Easy A .. விமர்சனம் --> இங்க  ரெண்டாவது பத்தி
  • The Social Network.. விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தி
மொக்கை கொடுத்த/வாங்கிய படங்கள்
  • தமிழ் படம் - விமர்சனம் ---> இங்க மூணாவது பத்தியில.
  • கச்சேரி ஆரம்பம் - விமர்சனம் --> இங்க
  • பையா - விமர்சனம் --> இங்க
  • ராவணன் - விமர்சனம் --> இங்க
  • இனிது இனிது
    ஒரிஜினல்ல இருந்த எளிமை, இதுல இல்லாதது பெரிய குறை. பெருசா ஒன்றமுடியலை.
  • நந்தலாலா
    மிஷ்கினின் திமிருக்கும், கர்வத்துக்கும் கிடைச்ச சரியான் அடி. ரொம்ப ஸ்லோ.
    நான் பெரிய அறிவாளி இல்லை. அதனால் கூட இந்தப் படம் பிடிக்காம இருந்திருக்கலாம்...
  • ரத்த சரித்திரம்
    ரத்தம் மட்டும்தான் இருந்தது.. சரித்தரம் ஒண்ணுத்தையும் காணோம்.
  • ஈசன் - விமர்சனம் --> இங்க  முதல் பத்தியில
  • Owl - Guardian - விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தியில
  • அவதார்
    மொக்கை வியட்னாம் காலனி கதைய, ரீ மாடல் பண்ணி கொடுத்து ஊரை ஏமாத்திட்டாங்க். டெக்னிகலா நிஜமாவே மிரட்டலான படம். ஆனா கதை திரைக்கதையெல்லாம் அப்படியே ஒரு மொக்கை தமிழ் படம் மாதிரி இருந்த்து எனக்கு பெரிய disappointment.
  • மன்மதன் அம்பு - விமர்சனம் ----> இங்க கடைசி பத்தியில
ரசித்த பாடல்கள்
கொஞ்சம் பெரிய லிஸ்டு. ஓவரா வர்ணிக்காம பெயர்களை மட்டும் எழுதறேன்...
  • ஆரோமலே (கலெக்டர்ஸ் எடிஷன்ல இருக்கற ஸ்ரேயா கோஷல் வெர்ஷனும் சேர்த்து) - விண்ணைத்தாண்டி வருவாயா
  •  ஹே துஷ்யந்தா - அசல்
  • இது வரை -கோவா
  •  என் காதல் சொல்ல - பையா
  • தாக்குதே - பாணா காத்தாடி
  • அடடா மழைடா - பையா
  • அம்மா தல்லே - புலி (தெலுங்கு)
  • பெஹெனே தே - ராவண் (இந்தி)
  • கிளிமஞ்சாரோ - எந்திரன்
  • ஊத்து தண்ணி - மகிழ்ச்சி
  • உன்னை கண் தேடுதே - வ கு.க
  • அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
  • இமைத்தூதனே - இளைஞன்
  • நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
  • Love the Way you Lie - Eminem ft Rihaana - Recovery
விட்டுப்போனவை
  • என் நெஞ்சில் - பாணா காத்தாடி
  • ஏழேழு தலைமுறைக்கும் - கோவா
  • சிரிக்கிறேன் - பலே பாண்டியா
  • Dhochey, பவர் ஸ்டார் - புலி (தெலுங்கு)
  • அரிமா அரிமா - எந்திரன் - அருமையான picturization.
  • உச்சுக் கொட்ட - மகிழ்ச்சி
  • உஸ்ஸுமலரசே - உத்தம்புத்திரன்
  • காதல் வந்தாலே - சிங்கம்
  • தகிடுதத்தோம் - மன்மதன் அம்பு
  • தோழா வானம் - இளைஞன்
  • நாங்கை - எங்கேயும் காதல்
பொதுவா நான் சிறந்த படம், பாட்டுனு அவார்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, இந்த வருஷம் கொடுக்கலாமோன்னு தோணுது... அதனால,
என்னை பொறுத்த வரைக்கும், இந்த வருஷத்தோட
சிறந்த பாடல் கோவா படத்துல வர இது வரை,
சிறந்த படம் - விண்ணைத்தாண்டி வருவாயா...
சிறந்த இசையமைப்பாளர் - யுவன்








எல்லாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Monday, December 13, 2010

PLAYLIST - November

ரொம்ப நாளைக்கு பொறவு, மறுபடியும் களத்துல நம்ம வழக்கமான ப்ளேலிஸ்டோட குதிக்கறேன்...

இந்த டாப் டென்ல எல்லாம் சொல்றா மாதிரி, எதாவது சொல்லி ஆரம்பிக்க்லாம்னு பாக்கறேன். ஒண்ணும் மாட்ட மாட்டேங்குது. :(.. சரி சரி... ரொம்ப வருத்தப்படாம, ப்ளேலிஸ்டை பார்ப்போம்....
-->இங்க<-- கொடுத்துருக்கற பாடல்கள்ல, வ படத்தோட உன்னைக் கண் தேடுதே, உத்தமபுத்திரனின் (காபியான) உஸ்ஸுமுலரஸே, மகிழ்ச்சியில் ஊத்துத் தண்ணி ஆகிய பாடல்கள் இப்பவும் இடம் பிடிக்குது.. புதுசா லிஸ்டுக்கு வர பாடல்கள்,

விண்ணைத்தாண்டி வருவாயா - இந்த படத்தோட collectors edition பாடல்கள் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இதுல, எக்ஸ்ட்ரா ரெண்டு பாட்டு இருக்கு. Jessie's Landனு ஒரு பாடல். ரொம்ப சுமாரா இருக்கு. ஆனா மற்றொரு பாடலான, ஆரோமலே sad, முதல்ல இருக்கற ஆரோமலேவ விட நல்லா இருக்கு. ஷ்ரேயா கோஷல் வழக்கம் போல நல்லா பாடிருக்காங்க. படத்துல்லையும் இது, அங்க அங்க பிண்ணனில வரும். Great Rendition. 
  
ஆடுகளம் - வழக்கம் போல, எல்லாருக்கும் பிடித்த யாத்தே யாத்தே என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை, ஆனா அய்யயோ பாடல் மட்டுமே இந்த படத்துக்கு போதும். இந்த மாதிரி எஸ்.பி.பி பாடி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. மனுசன் இந்த வயசுலையும் இன்னாமா பாடுறாரு. பாட்டு மொத்தமும் ஒரு மாதிரி சிரிச்சிகிட்டே பாடி,  பின்னி பெடலெடுக்கறாரு. ஜி.வி இப்படி ஒரு நல்ல பாட்டு கொடுப்பாருன்னு எதிர்பார்க்கலை. பாட்டோட beat இஞ்சி இடுப்பழகி பாடலை ஞாபகப்படுத்தினாலும், கண்டிப்பா இந்த வருஷத்துல ஒரு ஹிட் பாடல்.

மன்மதன் அம்பு - தேவிஸ்ரீபிராசத்தின் வழக்கமான இசை. போர். தகிடுதத்தோம் பாடல் கொஞ்சம் பரவாயில்லை.

இளைஞன் - படத்தோட ஹீரோவா இருந்து, பாடல்களும் எழுதிருக்கற பா.விஜய் (பேரை சேர்த்துபடிக்காதீங்க) சொன்னாரு, அவருக்கு பிடிச்சது இமைத்தூதனே அப்படின்னு ஒரு பாட்டாம். வித்யாசாகர், நிஜமாவே வித்தியாச சாகரா மாறி, மேற்கத்திய இசைல ஒரு தமிழ் மெலடி கொடுத்திருக்காரு. சின்மயி பாடிருக்காங்க. choir  எல்லாம் வெச்சு, ரொம்ப grand ah இருக்கு பாட்டு. அதே சமயத்துல இரைச்சலா இல்லாம, ரொம்ப இனிமையான பாட்டு. படத்துல மத்த பாடல்களும் இதே ஸ்டைல்ல, நல்லா இருந்தாலும், இது என்னோட pick.

எங்கேயும் காதல் - நாங்கை - வரிகள் ஒரு எழவும் புரியலைன்னாலும், நம்க்கு இயல்புலையே துள்ளலிசை பாடல்கள் மேல ஒரு ஈர்ப்பு இருக்கர்தால, அப்படியே ஒட்டிகிச்சு. அதுவும் மைக்கல் ஜாக்ஸனோட பாடலின் beat loopஐ அப்படியே உருவி, ஹாரிஸ், வேற டியூன் போட்டு கொடுத்திருக்காரு. ஆனாலும் நல்ல ஜாலியா இருக்கு. சரணம் முடியர இடத்துல வர குத்து ஸடைல், நல்ல ஐடியா..
நெஞ்சில் நெஞ்சில் -  ரொம்ப நாளக்கப்பறம் சூப்பர் சாருகேசி ராக சினிமா பாட்டு. ஒரு semi-classical பாட்டுன்னே சொல்லலாம். அதுவும், பல்லவி நடுவுல மிருதங்கம் சேருதே, செம்ம இடம். பாட்டு முழுக்கவே நல்ல கட்டமைப்பு.
படங்களோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்...

p.s. 1. சமீபத்துல கூட, மதராசபட்டினம் படத்துல, ஜி.வி ஒரு சாருகேசி ட்ரை பண்ணிருந்தாரு (ஆருயிரே), அதுவும் ரஹ்மானை காப்பியடிச்சு (ஏதோ ஏதோ ஒன்று). சல்பெடுக்கலை (ரெண்டும்)...

p.s.2. சாருகேசி ராகத்துல, உங்களுக்கும் தெரிஞ்ச, எனக்கும் பிடித்த சில பாடல்கள்

வாத்தியார் வீட்டு பிள்ளை - மணமாலையும் மஞ்சளும்
உதயா - உதயா உதயா
ஹரிதாஸ் - மன்மத லீலையை வென்றார்
ஸ்ரீ ராகவேந்திரா - ஆடல் கலையே
திருட்டு பயலே - தையத்தா
சிங்காரவேலன் - தூது செல்வதாரடி..
ரைட்டு, இப்போத்தைக்கு அப்பீட்டு.... டாடா...
விருதகிரி வாழ்க...

Wednesday, November 17, 2010

PLAYLIST - September, October

வழக்கம் போல, போன ப்ளேலிஸ்ட் மாதிரியே, இந்த லிஸ்ட்டும் லேட்டாகிடுச்சு. தப்பா நெனச்சிக்காமா, பதிவ படிச்சிட்டு, பாட்டை கேட்டுட்டு, கமெண்ட்டும் போட்ருங்க.

போன முறை, எந்திரன், புலி, மகிழ்ச்சி, பாஸ் மற்றும் வ படத்தோட பாடல்கள் இடம் பெற்ற ப்ளேலிஸ்ட்ல, இப்போ அதுலேர்ந்து சில பாடல்கள்தான் இந்த முறை.

ஊத்து தண்ணி + உச்சு கொட்ட - மகிழ்ச்சி. முதல் பாட்டை விட, ரெண்டாவது மெலடி பாடல் நல்லா இருக்கறா மாதிரி இருந்தாலும், ரெண்டுமே எனக்கு புடிச்சிருக்கு.

படத்துல, சார்ப்பு சார்ர்ப்பு ஜி பாடலை தப்பான இடத்துல வெச்சதோட மட்டுமில்லாம, picturisation சொதப்பிட்டாங்க. பாட்டு கேட்கற மூடே போயிருச்சு. அதானால, அந்த படத்துலேர்ந்து தப்பிச்ச ஒரே பாடல், உன்னை கண் தேடுதே. (சவுதி பாஷா பாடல்ல வர நடனம் கொஞ்சம் கிளுகிளுப்பா இருந்தாலும், நம்ம லிஸ்டுக்கு தேவையான மசாலா இல்ல)

பாஸ் படத்தின் "யாரிந்த பெண்" பாடல அடிக்கடி ரேடியோல கேட்கறேன். ஒரு சேனல் மாத்தி அடுத்த சேனலுக்கு போனாலும் அதே பாடல். நிஜமாவே அடிக்கு அடி. எனக்கு அவ்வளவா புடிக்கலை. தத்தித்தாவும் பாடல், போன லிஸ்ட்டுல இருந்தாலும், இந்த மாசம் வரைக்கும் தாக்கு புடிக்கல.                       

மந்திரப் புன்னகை
படப் பாடல்களை முழுசாவே கேட்க நேரம் வரலை. எதாவது ஒண்ணு வந்து distract பண்ணுது. இருந்தாலும், கிடைச்ச நேரத்துல கேட்ட "தண்ணி போட வாப்பா" சுமாரா இருந்துச்சு. ஒரு மாதிரி மெதுவான குத்து பாடல்னு சொல்லலாம். பாடகர் கார்த்திக்கோட குரல், ரொம்ப ஒழுங்கா இருக்கறதால, இந்த மாதிரி சில பாடல்களுக்கு, அவர் குரல் செட் ஆகலை. என்ன நான் சொல்றது.

உத்தம புத்திரன் படத்துல வர "உஸ்ஸுமுலரசே" கேட்க நல்லா ஜாலியா இருக்கு. வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்டைல்ல, அவரோட குரல்ல, திணிக்கப்பட்ட, விசித்திரமான உளறல் வார்த்தைகளோட, நல்ல குத்து பாட்டு. என்னடா இவர் திடீர்னு ஒரு நல்ல மாஸ் பாட்டு குடுத்துருக்காறேன்னு பாத்தா, பய புள்ள, hangover படத்துல வர ஒரு பாட்ட சுட்டு, புரட்டி போட்டு குடுத்திருக்கு. (கொஞ்சம் சிங்கம் படத்தோட "காதல் வந்தாலே பாடலோட rap மாதிரியும் இருக்கு) மூணு பாட்டோட சாம்பில்களும், கீழ.

உஸ்ஸுமுலரசே


You Spin My Head



சிங்கம்


சிக்கு புக்கு பட பாடல்கள் எதுவும் கேட்க சகிக்கலை. ஒரு வேளை படம் வந்த அப்பறம், பாடல்கள் புடிக்கலாம்.

சமீபத்துல வந்த எங்கேயும் காதல், ஆடுகளம் +  விண்ணைத்தாண்டி வருவாயா கலெக்டர்ஸ் எடிஷன் பாடல்கள், நவம்பர் மாச ப்ளேலிஸ்ட்ல வரும்.

பொறுமையோடு இருக்கும் உள்ளங்களுக்கு என் நன்றி.
படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Saturday, October 9, 2010

தெய்வ குத்தம்

ஊரே எந்திரனப் பத்தி பரபரப்பா பேசிகிட்டிருக்கும்போது, நானும் எதாவது பதியலன்னா தெய்வ குத்தமாகிடும்னு நண்பர்கள் எல்லாம் கவலை படறாங்க. சரி எதாவது எழுதி வெப்போம்னு, இதோ, ஆரம்பிச்சிட்டேன். ஒரே பத்தில முடிச்சிடறேன். கவலை படாதீங்க.

படம் ஆஹா ஓஹோனு இல்லை. ஆனா நல்லாயிருக்கு. அதுவும் வில்லன் ரோபோ ரஜினிதான் படத்துக்கு பெரிய பலம் (அந்த கருப்பு ஆடு சீன், ரஜினி மட்டுமே செய்யக்கூடிய சீன்) . செலவழிச்ச காசு எல்லாம் ரோபோடிக்ஸ்கே போயிருக்கும்னு நினைக்கறேன். கிராபிக்ஸ் அப்படியே ஓலகத்தரம் எல்லாம் இல்லை. இருந்தாலும், அரிமா அரிமா பாடல்ல வர 100+ ரஜினி கிராபிக்ஸ் சூப்பர். முதல் பாதிய விட, ரெண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோ. கடைசி இருபது நிமிஷம் செம்ம ஜாலி. கிளைமாக்ஸ் சண்டை எல்லாம் குழந்தைகள கண்டிப்பா குஷிபடுத்தும். படம் மொத்தத்துலையுமே வசனங்கள் நல்லா இருந்தாலும், தன்னைத்தானே கழட்டிகும்போது, ரோபோ பேசற வசனமும் குறிப்பா நல்லா இருக்கு. இண்டர்வல் ப்ளாக்ல, ரஜினி கொடுக்கற ரியாக்ஷன் செம்ம. படத்துல நிறைய இடங்கள்ல ரஜினி நடிச்சிருக்கார். மத்தபடி, ஒலக அழகி நல்லா ஆடிருக்காங்க. அரிமா + காதல் அணுக்கள் பாடல்களைத் தவிர, மத்ததெல்லாம் வேஸ்ட். படம் கண்டிப்பா ஓலகத்தரம் இல்லை. போலிகளைக் கண்டு ஏமாறாதீங்க. என்னதான் குத்தம் சொன்னாலும், கொஞ்சம் ஒரிஜினலா யோசிச்சு, கிடைச்ச காசுல அதை திரைக்கு கொண்டு வந்துருக்கார் டைரக்டர் ஷங்கர். மத்த ஷங்கர் படங்கள கம்பேர் பண்ணும்போது, இந்தப் படத்துல அழுத்தம் கொஞ்சம் கம்மிதான். என்னதான் இருந்தாலும், தலைவர் படம். நல்ல முயற்சிக்காக, கண்டிப்பா ஒரு தடவை, தியேட்டர்ல மட்டுமே, குடும்பத்தோட, பாருங்க. நல்லா பொழுதுபோகும்.

p.s. - கருப்பு - எந்த ற/ர வரும்???

அங்க ஒரு துப்பாக்கி குண்டு போயிட்டிருக்கு. அதை சுடணும்....