Showing posts with label தூக்க கலக்கம். Show all posts
Showing posts with label தூக்க கலக்கம். Show all posts

Monday, February 29, 2016

ஒரு ராஜா பாடலைப் பற்றிய நீண்ண்ண்ண்ண்ட பதிவு

1000 படங்கள். படத்துக்கு 4 பாட்டுகள் என்றால் கூட (வெகு சில படங்களில் மட்டும் பாடல்கள் கிடையாது) 4000 பாட்டுக்கள். இதில் நம் பெற்றொருக்கு பிடித்தது, நண்பர்களுக்குப் பிடித்தது, டிவி - ரேடியோவில் போட்டுத் தேய்ப்பது என நாம் அறிந்திருக்கும் (அதாவது 90களின் ஆரம்பத்திலும் அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் கேட்டவரை) ராஜா பாடல்கள்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

நான் பாடல்களைத் தேடித் தேடிச் சென்று கேட்பவன். எந்த மொழி பேதமும் கிடையாது. பாடல் நன்றாக இருந்தால் போதும். அதிலும் ராஜா பாடல் என்றால் கூடுதல் சாஃப்ட் கார்னரோடு, அய்யோ பாடல் நமக்கு பிடிக்க வேண்டுமே என்ற நினைப்போடும் கேட்பேன். அப்படி நான் அவ்வபோது புதிதாக தெரிந்து கொள்ளும், டிஸ்கவரி என்று சொல்லுவார்களே, அப்படி டிஸ்கவர் செய்யும் ராஜா பாடல்களில் சில, பல நாட்கள்  - இரவுகள் என் தலைக்கு மேல் ஹெட்ஃபோனிலும், தலைக்குள் என்ஃபோனிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



இதுவே ராஜாவின் பாடல் எனக்குள் நிகழ்த்தும் மேஜிக். மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்கும், அதில் மூழ்கி முத்தெடுப்பீர்கள், மூர்ச்சையாகி வெளியே வருவீர்கள் போன்ற சப்பைக்கட்டுகள் எதுவும் கிடையாது. முதல் முறை கேட்கும்போது பிடித்துவிடும். அங்கிருந்து சில நாட்கள் பித்து. அவ்வளவு தான் இந்தப் ப்ராசஸ்.

(அதே போல பல முறை கேட்டு பிடிக்காத பாடல்கள்களும் இருக்கினறன. அதற்காகவெல்லாம் ராஜாவை விட்டுக் கொடுத்து பேச முடியாது)
புதிதாக ஒரு பாடலைக் கேட்கும்போது, வழக்கம் போல, "எப்படிய்யா இந்த மனுஷன் அப்பவே இதெல்லாம் பண்ணிருக்காரு?"என வரும் கேள்வி, "இந்தப் பாட்டை எப்படி இவ்வளவு நாள் கேட்காம இருந்தேன்?" என வரும் வருத்தம், இப்படி இன்று (காலை) வரை இளையாராஜா என்ற இசைக்கலைஞன் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இன்று, இளையராஜா 1000 நிகழ்ச்சி எவ்வளவு மொக்கையாக இருந்தது என்ற பதிவுகளை ஒரு பக்கம் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஆபிஸ் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போதே, மறுபக்கம் ராஜா எஃப்.எம்மில் (யாரோட யோசனையோ, நல்லா இருக்கட்டும்) எப்போதும் போல அடுத்தடுத்து பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.



முதலில் 'என் தேகம் அமுதம்' ('ஒரு ஓடை நதியாகிறது'' என கூகுளார் சொன்னார்) என்ற பாடல். ஜானகியின் குரலில் மற்றுமொரு பலான பாடல் என்பது கேட்கும்போதே புரிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏனோ வரவில்லை.

அடுத்த சில பாடல்கள் கழித்து, 'மழை வருவது மயிலுக்கு தெரியும்' என்ற பாடல். ராஜாவின் ரொமாண்டிக் சாங் போல ஆரம்பித்தாலும், புதிதான ஒரு தாளத்துக்கு பாடல் மாறியது ('தம்தன தாளம் வரும்' பாடல் தாளத்தைப் போல). ராஜா பாட்டில் எதிர்பாராத இடத்தில் மிருதங்க ஓலி ஆரம்பிக்கும்போது அது தரும் கிக்கே தனி. ஜானகி குரலில் பாடல் ஆரம்பிக்க, கூடவே அந்த தாளமும். பாடலில் சுவாரசியம் கூடியது. 5 நிமிடங்கள் தானே , வேலையைச் சற்று தள்ளி வைப்போம் என சரணத்துக்கு தயாரானேன்.

ஸோலோ வயலின், ஸ்ட்ரிங்க்ஸ், வீணை என ராஜா வழக்கம் போல இண்டர்லுயூடில் விளையாடியிருந்தார். தொடர்ந்து ராஜா பாடல்களைக் கேட்டுப் பழகியவர்களால் கண்டிப்பாக அவரது ஒரு பாடலின் ஓட்டம் எப்படியிருக்கும் என்பதை யூகிக்க முடியும். குறைந்தது மனதுக்குள்ளாவது ஓட்டிப் பார்த்துவிட முடியும். இது அவரது மைனஸோ, குறையோ அல்ல. இது ரசிக்கும்படியான ஒரு ராஜா ஜானரின் க்ளீஷே. (உடனே எஸ்.ஏ.ராஜ்குமார் க்ளீஷே என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு கபீம்குபாம் காத்திருக்கிறது)

ஆனால் இந்தப் பாடலின் சரணம் ஆரம்பிக்கும்போது அது எப்படி போகும் என்பதை யூகிக்க முடியவில்லை. முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ஸ்ட்ரிங்க்ஸ் அடுத்த வரிகளுக்கு லீட் கொடுக்க, அடுத்த 24 நொடிகள், விடாமல் நதி நீர் ஓடுவதைப் போல சீராக மேலே ஏறி இறங்கி வளைந்து நெளிந்து அழகாக மீண்டும் பல்லவியில் முடிந்தது.

ஆச்சரியத்திலும் வரும் வழக்கமான அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டு அந்த சரணத்தை ரீவைண்ட் (வழக்கொழிந்து போன வார்த்தையோ?) செய்து மீண்டும் கேட்டேன். எப்படியும் அடுத்த சரணமும் இதே மெட்டுதான். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய முதல் சரணத்தை இரண்டாம் முறையும் கேட்க வேண்டும் என்ற ஆசை. 'i just wanted to relive that moment' என்பதைப் போல.

அதே பிரவாகம், அதே ஆச்சரியம், அதே கெட்ட வார்த்தை, பல்லவி வந்தது. அடுத்த இண்டர்லுயூட் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்னப் படம், என்ன பாடல், யார் நடித்தது எனத் தேட, ஈஸ்ட்மென் கலரில் கே.ஆர். விஜயா ஓடி வருவது போல ப்ரிவியூ வந்தது. ''மம்மி பிராமிஸ்ஸாக இந்தப் பாடலை பார்க்கும் ஆசை வந்து விடக்கூடாது'' என நினைத்து அந்த பக்கத்தை மூடிவிட்டு மீண்டும் பாடலுக்கு வந்தேன். இரண்டாவது சரணம் ஆரம்பித்தது.
ரெண்டு பத்திக்கு முன்னால் சொன்னதில் 'டிட்டோ'.

முதலில் சொன்னதைப் போல, ''எப்படி இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டது?, பாடப்பட்டது, அதுவும் ஒரே டேக்கில் எப்படி அந்த சரணத்தை முடித்திருக்க முடியும்??, என்ன ராகமாக இருக்கும்???, இவ்வளவு நாள் நம் கண்ணில் (காதில்) எப்படிப் படாமல் போனது????, சே அம்மா அப்பா கூட சொல்லவே இல்லையே'' என கலந்து கட்டிய எண்ணங்கள், கேள்விகள்.

பாட்டின்  'ரிஷி மூலம்' தெரிந்தது. டவுன்லோட் செய்தேன். வேலையை முடித்து விட்டு முதல் வேலையாகப் பாடலை மீண்டும் கேட்டேன். சக ராஜா ரசிகன் நண்பனுக்கும் அனுப்பினேன். ''கண்டிப்பாக அவனும் கேட்டிருக்க மாட்டான். கேட்டிருக்கக் கூடாது. பாடலை அவனுக்கு அறிமுகம் செய்த பெருமை என்னயே சேர வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இந்தப் பாட்டை பிரபலப்படுத்தலாம். ஒரு வேளை நாம் தான் லேட்டோ? இந்தப் பாடல் ஏற்கனவே பிரபலமோ?'' என்றெல்லாம் தேவையில்லாத பல சிந்தனைகள்.

இன்றைய நாளின் வேலைகள் அனைத்தும் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், (வரும் வழியில் என் மொபைலிலும்) ஹெல்மெட்டை அப்படியே வைத்துவிட்டு அம்மா அப்பாவிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேச, நான் நினைத்தது போல அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ''இப்பதான் நீ கேக்கறியா?" என்ற அம்மாவின் கலாய்ப்போடு என் அறைக்கு வந்து, நண்பனுடன் சிறிது நேரம் பாடலைப் பற்றி சாட்டில் சிலாகித்து விட்ட போதும் அடங்கவில்லை.



அந்த நேரம் பார்த்து ஒருவர், ராஜா காப்பியடித்த பாடல்கள் என்ற யுடியூப் லிங்கை பகிர்ந்திருந்தார். அது இன்னும் எரிச்சல் ஏற்ற இதோ இந்த நீண்ட நெடிய பதிவு.

இதற்கு மேல் என்ன சொல்ல? 'நண்டு' படத்தின் இந்திப் பாடல், 'ஆராதனையில்' வரும் ''இளம் பனி துளி'', ''ஒரு குங்கும செங்கமலம்'', 'எச்சில் இரவுகளின்' ''பூ மேலே வீசும் பூங்காத்தே'' இப்படி நான் காலம் கடந்து தெரிந்து, என்னை ஆச்சரியப்படுத்திய பல ராஜா பாடல்கள் வரிசையில் ''மழை வருவது மயிலுக்கு தெரியும்'' பாடலும் சேர்ந்தது.

வரிகளை கவனிக்கும் போது இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமாக இருந்தது. தன் மகனை காணப் போகும் ஒரு தாயின் எண்ணம் எப்படி இருக்கும், அவள் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருப்பாள், எப்படி பதைபதைத்திருப்பாள் என்பதெயெல்லாம் பாடலைப் பார்க்காமல் கேட்டதிலேயே புரிந்தது.

வழக்கமாக நாயகன் நாயகி டூயட், இல்லையேல் பேத்தாஸ் என போர் அடித்துக் கொண்டிருந்தவருக்கு புதிதாக கிடைத்த சிச்சுவேஷன், சோளப் பொறியாக இருந்தாலும், இருந்த பசிக்கு இதுவே போதும் என ஒரு கை பார்த்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் தாங்க் யூ ராஜா!!

அந்தப் பாடல்:



பி.கு - காப்பியடிப்பது எந்த வகையிலும் சரியான செயல் அல்ல. அதை நான் இங்கு நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாத் துறையில் ஒரு கிரியேட்டர் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து, தெரிந்து, உணர்ந்து கொண்டிருக்கிறேன். டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது, இருக்கும் சப்ளையில் ஒன்றிரண்டில் குறைகள் இருக்கலாம். அதிலும் ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு ஒன்பதனாயிரம் பாடல்களைப் போடுவது என்பது சாத்தியம் அல்ல. க்ரியேட்டிவிட்டிக்கு நேரம் தேவை. அப்படி நேரமில்லாத நிலையிலும், நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டும், சில வெளிநாட்டுப் பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே என் யூகம். (கதை வேணும், ஆனா படம் 3 மாசத்துல ஆரம்பிக்கனும், உங்க அவசரத்துக்கு புதுசா கதை வராது, அப்போ இருக்கவே இருக்கு ஒலகப் பட டிவிடி).

ஆனால் சிம்பனி பாடல்கள் தனது இன்ஸ்பிரேஷன் என்பதை ராஜா எங்கும் மறுத்ததாக தெரியவில்லை. அதே போல, எஸ்.டி பர்மன் பாடல் ஒன்று எப்படி படிப்படியாக இஞ்சி இடுப்பழகி ஆனது என கமல்ஹாசன் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பரவலாக பல பாடல்கள் தழுவப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ராஜாவிடம் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது என்பதை ஒழுங்காக இசை தெரிந்த எவரும் ஒப்புக் கொள்வார்கள்.  என்பது திண்ணமோ திண்ணம். 

Wednesday, May 14, 2014

நான் எவ்வளவு பெரிய முட்டாள்???

நிறைய யோசிப்பவர்கள் நிறைய கோட்டை விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஊரே, "ஆஹா, என்ன அறிவாளிப்பா நீ.. உன்ன மாதிரி ஒரு புள்ள கெடைக்குமா" என்று போற்றப்படும் ஆட்கள் எல்லாம் கண்டிப்பாக சில்லித்தனமான முறையில் தங்களது முட்டாள்தனத்தை காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவமும், ஒரு கதையும் கைவசம் உள்ளது. முதலில் கதை

பிரபலமான விஞ்ஞானி ஒருவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் அடிக்கடி இரண்டு பூனைகள் வந்து செல்வதைக் கண்டார். பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் சில தொல்லைகளை பொருத்துக் கொள்ள முடியாதோ என்னவோ. பெரியது ஒன்று, சிறியது ஒன்று என அந்தப் பூனைகள் போடும் அட்டாகசங்கள் தாள முடியவில்லை. முக்கியமாக அவை கூடத்திற்குள் வர முயற்சிக்கும்போது ஏற்படுத்தும் சேதாரங்களே அதிகம். அவற்றை விரட்ட முடியவில்லை என்பதால், உள்ளே வருவதில் தானே பிரச்சனை, அதற்கு ஒரு வழி செய்யலாம் என முடிவு செய்து, தனது கூடத்தின் கதவில் ஓட்டை போட முடிவு செய்தார்.

பெரிய பூனைக்கு பெரிய ஓட்டையும், சிறிய பூனைக்கு சிறிய ஓட்டையும் !!!!!

படித்ததும் புரிந்தவர்கள், சிறிது யோசித்து "அட" என நினைத்து புரிந்தவர்கள், இன்னமும் புரியாதவர்கள் எல்லாரும் அடுத்து சம்பவத்தைப் படிக்கலாம்.

ஒவ்வொரும் மாதமும் என் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு தருவது வழக்கம். அந்த மாதம் சம்பளம் வந்த பிறகும் ஏதோ காரணங்களால் ஏடிஎம் சென்று எடுத்து வர முடியவில்லை. என் அண்ணன் மகளுக்கு நெட் பாங்கிங் முறையில் தான் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பதால் எனது அக்கவுண்டிலிருந்து கட்டிவிட்டேன். பதிலாக என் அண்ணன், காசை என் கையில் கொடுத்து விட்டான். இந்தப் பணமும், வீட்டிற்கு தரும் பங்கும் ஏறக்குறைய ஒரே அளவுதான். சரி, கத்தையாகப் பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் அதை எனது அக்கவுண்டில் டெபாஸிட் செய்துவிட்டு, வீட்டிற்கு தேவையான காசை எடுக்கலாம் என முடிவு செய்தேன். பேங்க் புறப்படும் வரை யாரும் எனது முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டவில்லை. 

பேங்கிற்கு சென்று, வரிசையில் நின்று, அக்கவுண்டில் பணத்தை செலுத்திவிட்டு, கீழே வந்து ஏடிஎம் மில் வீட்டிற்காக காசு எடுக்கலாம் என நினைக்கும்போது தான் உறைத்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று !!!

இன்னமும் உறைக்காதவர்கள் எனக்குப் போட்டியாக வரலாம், புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்..  எனக்கும் அந்த விஞ்ஞானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வளவே.. 

Saturday, July 27, 2013

EA - சில அலட்சியங்கள்....


ஃபேஸ்புக்கில், நண்பர் கேபிளாரும், சுரேகா அவர்களும் ஆரம்பித்த குழுமம், கேட்டால் கிடைக்கும். வாடிக்கையாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வை, வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள். இன்று, அந்த குழுமத்தில் இருக்கும் பலர், அவர்கள் கேட்டுப் பெற்ற அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். சில பதிவுகளைப் பார்த்து, நானும் பல புதிய தகவல்களை மண்டையில் ஏற்றியிருக்கிறேன். இன்று, எனக்கு நேர்ந்த அனுபவத்தினால், சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அவற்றை அங்கே பதிவிட்டு, இங்கே காபி பேஸ்டுகிறேன். இதைப் படிக்கும் அன்பர்கள், இப்பதிவை முடிந்த வரை, மற்றவரிடத்தில் பகிருங்கள். நன்றி.  
//இங்கு பலர், எக்ஸ்பிரஸ் அவென்யூவில், அவர்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அங்கு கேட்டு கிடைத்த சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளனர். இதோ, இன்று என் முறை.

புதிதாக ஆடை வாங்க, பல நாட்களாக திட்டமிட்டு, முடியாமல், வேறு வழியில்லாமல், நேரமின்மையால், பக்கத்தில் இருக்கும் EAவிற்கு செல்லலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். நண்பருக்கு, பசித்ததால், முதலில், அங்கு பேஸ்மன்ட் 1ல் இருக்கும் பிட் ஸ்டாப் எனும் கடைக்குச் சென்றோம்.


1. நண்பர் சாப்பிட்டார். நான் தண்ணீர் கேட்கப் போக, வழக்கம் போல, தண்ணீர் கொடுப்பதில்லை என்றும், பாட்டில் தான் வாங்க வேண்டும் என்றும், கிளிப்பிள்ளை போலக் கூறினார் கல்லாவில் இருந்த அப்பாவி இளைஞர். “வர கஸ்டமருக்கு ஃப்ரீயா தண்ணி தர வேண்டியது உங்க கடமை, உங்க மேனஜருக்கு சொல்லுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றோம். கண்டிப்பாக வேறொரு சந்தர்பத்தில், கேட்டு வாங்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன் (என் பிரச்சனை, நேரமின்மை). அடுத்து, இரண்டாவது தளத்தில் இருக்கும் மேக்ஸ் என்ற கடைக்குச் சென்றோம்.

2. 2000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கிவிட்டு, வெளியே வரும்போது, அங்கிருந்த ஃப்ளெக்ஸில், 1400 ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு 200 மதிப்புள்ள வவுச்சர் தரப்படும் என்ற விளம்பரம் இருந்தது. மீண்டும் நான் உள்ளே சென்று, கவுண்டரில் இருந்தவரிடம் “வவுச்சர் இருக்குன்னு போட்டிருக்கீங்க, எதுவும் தரலியே”

“அது maxx ப்ராடக்ட்ல மட்டும்தான் சார்”

“ஆமாம், பாருங்க, நான் வாங்கினது எல்லாம் உங்க பிராண்ட் தான்” என எடுத்த ஆடைகளை எடுத்து காமிக்க. எனக்கு பில் போட்ட நபரைக் கூப்பிட்டு, “சரியா பார்க்க மாட்டியா, எடுத்து குடு” என சொல்ல, அவர் வவுச்சர் எடுக்க சென்றார்.
நான் விடாமல் அவரிடம் “ஏன் சார், கஸ்டமருக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைதான, அவங்க வந்து கேட்கற அளவுக்கு வெச்சீப்பீங்களா”

”நாங்க செக் பண்றோம் சார், இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சு, சாரி” என சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். கேட்டு கிடைத்த வவுச்சருடன் திரும்பினோம்..
 
 3. அடுத்து, பார்க்கிங்க் கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்த நபர்

“70rs சார்” என்றார்.

நான் “எவ்வளவு நேரம் ஆகிருக்கு” என கேட்க

“3rd hourல வெளிய வந்துருக்கீங்க” என பதில் வந்தது

"அதுக்கு 50rs தான? weekendலதான 70” என கேட்டேன்.

“ஆமா சார், 50 ரூபாதான்” என சொல்லிவிட்டு, கொடுத்த 100 ரூபாய்க்கு, 50 ரூபாய் மிச்சம் தந்தார். வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

1. இதில் எவ்வளவு வாடிக்கையாளர்கள், தண்ணீர் கொடுக்க வேண்டியது உணவகத்தின் பொறுப்பு என்பதைத் தெரியாமல் இருப்பார்கள்? இருக்கிறார்கள்? இன்றும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

2. என்னைப் போல, பார்த்து கேட்காமல் போனவர்களால், மேக்ஸ் நிறுவனத்திற்கு, எவ்வளவு 200 ரூபாய் வவுச்சர்கள் லாபத்தில் சேர்ந்திருக்கும்?

3. எப்படியும் மால்களில் பார்க்கிங்க் கட்டணம் அதிகம் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் எவ்வளவோ நண்பர்கள், சரியாகப் பார்க்காமல், 70 ரூபாயை கொடுத்து விட்டு வந்திருக்கலாமே?

கேட்டால் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எப்படி கேட்பது, எதையெல்லாம் கேட்பது என்பது பற்றிய விழிப்புணர்வு, பெரும்பாலனவர்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த குழுமத்தில் இருக்கும் சக உறுப்பினர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என, ஒரு குறுகிய வட்டத்திலேயே விழிப்புணர்வு இருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை வாடிக்கையாளர் விழிப்புணர்வு பற்றிய தகவல்களை, இன்னும் பல்லாயிரம் பேருக்குத் தெரிவிக்க, வேறேதேனும் வழியுள்ளதா? ஃபேஸ்புக் பயன்படுத்தாத பெரும்பான்மையினருக்கு இதைக் கொண்டு செல்வது எப்படி? இதைப் பற்றி ஏற்கனவே யாராவது இங்கு பேசியிருக்கிறார்களா ? அதற்கான தீர்வு ஏதேனும் கிடைத்ததா?
//

Monday, December 13, 2010

PLAYLIST - November

ரொம்ப நாளைக்கு பொறவு, மறுபடியும் களத்துல நம்ம வழக்கமான ப்ளேலிஸ்டோட குதிக்கறேன்...

இந்த டாப் டென்ல எல்லாம் சொல்றா மாதிரி, எதாவது சொல்லி ஆரம்பிக்க்லாம்னு பாக்கறேன். ஒண்ணும் மாட்ட மாட்டேங்குது. :(.. சரி சரி... ரொம்ப வருத்தப்படாம, ப்ளேலிஸ்டை பார்ப்போம்....
-->இங்க<-- கொடுத்துருக்கற பாடல்கள்ல, வ படத்தோட உன்னைக் கண் தேடுதே, உத்தமபுத்திரனின் (காபியான) உஸ்ஸுமுலரஸே, மகிழ்ச்சியில் ஊத்துத் தண்ணி ஆகிய பாடல்கள் இப்பவும் இடம் பிடிக்குது.. புதுசா லிஸ்டுக்கு வர பாடல்கள்,

விண்ணைத்தாண்டி வருவாயா - இந்த படத்தோட collectors edition பாடல்கள் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இதுல, எக்ஸ்ட்ரா ரெண்டு பாட்டு இருக்கு. Jessie's Landனு ஒரு பாடல். ரொம்ப சுமாரா இருக்கு. ஆனா மற்றொரு பாடலான, ஆரோமலே sad, முதல்ல இருக்கற ஆரோமலேவ விட நல்லா இருக்கு. ஷ்ரேயா கோஷல் வழக்கம் போல நல்லா பாடிருக்காங்க. படத்துல்லையும் இது, அங்க அங்க பிண்ணனில வரும். Great Rendition. 
  
ஆடுகளம் - வழக்கம் போல, எல்லாருக்கும் பிடித்த யாத்தே யாத்தே என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை, ஆனா அய்யயோ பாடல் மட்டுமே இந்த படத்துக்கு போதும். இந்த மாதிரி எஸ்.பி.பி பாடி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. மனுசன் இந்த வயசுலையும் இன்னாமா பாடுறாரு. பாட்டு மொத்தமும் ஒரு மாதிரி சிரிச்சிகிட்டே பாடி,  பின்னி பெடலெடுக்கறாரு. ஜி.வி இப்படி ஒரு நல்ல பாட்டு கொடுப்பாருன்னு எதிர்பார்க்கலை. பாட்டோட beat இஞ்சி இடுப்பழகி பாடலை ஞாபகப்படுத்தினாலும், கண்டிப்பா இந்த வருஷத்துல ஒரு ஹிட் பாடல்.

மன்மதன் அம்பு - தேவிஸ்ரீபிராசத்தின் வழக்கமான இசை. போர். தகிடுதத்தோம் பாடல் கொஞ்சம் பரவாயில்லை.

இளைஞன் - படத்தோட ஹீரோவா இருந்து, பாடல்களும் எழுதிருக்கற பா.விஜய் (பேரை சேர்த்துபடிக்காதீங்க) சொன்னாரு, அவருக்கு பிடிச்சது இமைத்தூதனே அப்படின்னு ஒரு பாட்டாம். வித்யாசாகர், நிஜமாவே வித்தியாச சாகரா மாறி, மேற்கத்திய இசைல ஒரு தமிழ் மெலடி கொடுத்திருக்காரு. சின்மயி பாடிருக்காங்க. choir  எல்லாம் வெச்சு, ரொம்ப grand ah இருக்கு பாட்டு. அதே சமயத்துல இரைச்சலா இல்லாம, ரொம்ப இனிமையான பாட்டு. படத்துல மத்த பாடல்களும் இதே ஸ்டைல்ல, நல்லா இருந்தாலும், இது என்னோட pick.

எங்கேயும் காதல் - நாங்கை - வரிகள் ஒரு எழவும் புரியலைன்னாலும், நம்க்கு இயல்புலையே துள்ளலிசை பாடல்கள் மேல ஒரு ஈர்ப்பு இருக்கர்தால, அப்படியே ஒட்டிகிச்சு. அதுவும் மைக்கல் ஜாக்ஸனோட பாடலின் beat loopஐ அப்படியே உருவி, ஹாரிஸ், வேற டியூன் போட்டு கொடுத்திருக்காரு. ஆனாலும் நல்ல ஜாலியா இருக்கு. சரணம் முடியர இடத்துல வர குத்து ஸடைல், நல்ல ஐடியா..
நெஞ்சில் நெஞ்சில் -  ரொம்ப நாளக்கப்பறம் சூப்பர் சாருகேசி ராக சினிமா பாட்டு. ஒரு semi-classical பாட்டுன்னே சொல்லலாம். அதுவும், பல்லவி நடுவுல மிருதங்கம் சேருதே, செம்ம இடம். பாட்டு முழுக்கவே நல்ல கட்டமைப்பு.
படங்களோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்...

p.s. 1. சமீபத்துல கூட, மதராசபட்டினம் படத்துல, ஜி.வி ஒரு சாருகேசி ட்ரை பண்ணிருந்தாரு (ஆருயிரே), அதுவும் ரஹ்மானை காப்பியடிச்சு (ஏதோ ஏதோ ஒன்று). சல்பெடுக்கலை (ரெண்டும்)...

p.s.2. சாருகேசி ராகத்துல, உங்களுக்கும் தெரிஞ்ச, எனக்கும் பிடித்த சில பாடல்கள்

வாத்தியார் வீட்டு பிள்ளை - மணமாலையும் மஞ்சளும்
உதயா - உதயா உதயா
ஹரிதாஸ் - மன்மத லீலையை வென்றார்
ஸ்ரீ ராகவேந்திரா - ஆடல் கலையே
திருட்டு பயலே - தையத்தா
சிங்காரவேலன் - தூது செல்வதாரடி..
ரைட்டு, இப்போத்தைக்கு அப்பீட்டு.... டாடா...
விருதகிரி வாழ்க...

Wednesday, November 17, 2010

PLAYLIST - September, October

வழக்கம் போல, போன ப்ளேலிஸ்ட் மாதிரியே, இந்த லிஸ்ட்டும் லேட்டாகிடுச்சு. தப்பா நெனச்சிக்காமா, பதிவ படிச்சிட்டு, பாட்டை கேட்டுட்டு, கமெண்ட்டும் போட்ருங்க.

போன முறை, எந்திரன், புலி, மகிழ்ச்சி, பாஸ் மற்றும் வ படத்தோட பாடல்கள் இடம் பெற்ற ப்ளேலிஸ்ட்ல, இப்போ அதுலேர்ந்து சில பாடல்கள்தான் இந்த முறை.

ஊத்து தண்ணி + உச்சு கொட்ட - மகிழ்ச்சி. முதல் பாட்டை விட, ரெண்டாவது மெலடி பாடல் நல்லா இருக்கறா மாதிரி இருந்தாலும், ரெண்டுமே எனக்கு புடிச்சிருக்கு.

படத்துல, சார்ப்பு சார்ர்ப்பு ஜி பாடலை தப்பான இடத்துல வெச்சதோட மட்டுமில்லாம, picturisation சொதப்பிட்டாங்க. பாட்டு கேட்கற மூடே போயிருச்சு. அதானால, அந்த படத்துலேர்ந்து தப்பிச்ச ஒரே பாடல், உன்னை கண் தேடுதே. (சவுதி பாஷா பாடல்ல வர நடனம் கொஞ்சம் கிளுகிளுப்பா இருந்தாலும், நம்ம லிஸ்டுக்கு தேவையான மசாலா இல்ல)

பாஸ் படத்தின் "யாரிந்த பெண்" பாடல அடிக்கடி ரேடியோல கேட்கறேன். ஒரு சேனல் மாத்தி அடுத்த சேனலுக்கு போனாலும் அதே பாடல். நிஜமாவே அடிக்கு அடி. எனக்கு அவ்வளவா புடிக்கலை. தத்தித்தாவும் பாடல், போன லிஸ்ட்டுல இருந்தாலும், இந்த மாசம் வரைக்கும் தாக்கு புடிக்கல.                       

மந்திரப் புன்னகை
படப் பாடல்களை முழுசாவே கேட்க நேரம் வரலை. எதாவது ஒண்ணு வந்து distract பண்ணுது. இருந்தாலும், கிடைச்ச நேரத்துல கேட்ட "தண்ணி போட வாப்பா" சுமாரா இருந்துச்சு. ஒரு மாதிரி மெதுவான குத்து பாடல்னு சொல்லலாம். பாடகர் கார்த்திக்கோட குரல், ரொம்ப ஒழுங்கா இருக்கறதால, இந்த மாதிரி சில பாடல்களுக்கு, அவர் குரல் செட் ஆகலை. என்ன நான் சொல்றது.

உத்தம புத்திரன் படத்துல வர "உஸ்ஸுமுலரசே" கேட்க நல்லா ஜாலியா இருக்கு. வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்டைல்ல, அவரோட குரல்ல, திணிக்கப்பட்ட, விசித்திரமான உளறல் வார்த்தைகளோட, நல்ல குத்து பாட்டு. என்னடா இவர் திடீர்னு ஒரு நல்ல மாஸ் பாட்டு குடுத்துருக்காறேன்னு பாத்தா, பய புள்ள, hangover படத்துல வர ஒரு பாட்ட சுட்டு, புரட்டி போட்டு குடுத்திருக்கு. (கொஞ்சம் சிங்கம் படத்தோட "காதல் வந்தாலே பாடலோட rap மாதிரியும் இருக்கு) மூணு பாட்டோட சாம்பில்களும், கீழ.

உஸ்ஸுமுலரசே


You Spin My Head



சிங்கம்


சிக்கு புக்கு பட பாடல்கள் எதுவும் கேட்க சகிக்கலை. ஒரு வேளை படம் வந்த அப்பறம், பாடல்கள் புடிக்கலாம்.

சமீபத்துல வந்த எங்கேயும் காதல், ஆடுகளம் +  விண்ணைத்தாண்டி வருவாயா கலெக்டர்ஸ் எடிஷன் பாடல்கள், நவம்பர் மாச ப்ளேலிஸ்ட்ல வரும்.

பொறுமையோடு இருக்கும் உள்ளங்களுக்கு என் நன்றி.
படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்

Tuesday, September 7, 2010

PLAYLIST - July, August

போன ப்ளேலிஸ்ட் --> இங்க

எவ்வளவு கேட்டாலும், நான் மகான் அல்ல பாட்டும், எந்திரன் பாட்டும் ஒட்டலை. முயற்சிய கை விட்டுட்டேன்.

புதுசா வந்த பாடல்கள்ல நம்மளோட சமீபத்திய எண்ட்ரீஸ்...


எந்திரன் - கிளிமஞ்சாரோ

புலி (தெலுங்கு) - மூணு பாட்டு - பவர் ஸ்டார், அம்மா தல்லே, தோச்சே


வித்யாசாகரோட மகிழ்ச்சின்னு  ஒரு படம் வந்துருக்கு. ரெண்டு பாட்டு சூப்பர் - ஊத்து தண்ணி பாடல், பசும்பொன் தாமர பூவுக்கும் பாடலை நியாபகப்படுத்தினாலும், அருமையா இருக்கு. உச்சு கொட்ட பாடலும், நல்ல மெலடி. ரொம்ப நாள் கழிச்சு, வித்யாசாகர் நல்லா பியூசிக் போட்ருக்காரு.

பாஸ் என்கிற பாஸ்கரன் - தத்தி தாவும் - ஹிந்தி கஜினியின் பெஹகா பாடல் வந்தாலும் வந்துச்சு, அது மாதிரியே நிறைய பாட்டை கேட்டுட்டேன். இதுவும் அது மாதிரி ஒரு பாடல். கார்த்திக்கின் குரல், ஆரம்பத்துல யுவன் குரல் மாதிரி இருக்கு.

கடைசியா, வா குவாட்டர் கட்டிங் படத்தோட ரெண்டு பாட்டு - சார்ப்பு சார்பு ஜி + உன்னை கண் தேடுதே. ரெண்டு பாட்டுக்குமே ரொம்ப ஜாலியான டியூனும், காமெடியான லிரிக்சும் அமைஞ்சிருக்கு. உன்னை கண் தேடுதே பாடல்ல ஜீவியின் புத்திசாலித்தனமும் தெரியுது.

படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்..

Saturday, September 4, 2010

Inception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா????

போன மாசம் மொத்தமுமே இன்செப்ஷன் படத்தை வெச்சி பதிவு ஒப்பேத்தியாச்சு. இதுக்கு மேல மாவ அரைக்க முடியாது. அதனால, போன பதிவுல சொன்னா மாதிரி, நண்பர் பத்மநாபன் கேட்டதற்காக, கதையை, முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்ல முயற்சி பண்றேன். இது என்னோட புரிதலுக்கு ஏற்ப, என்னோட பார்வைல கதை. அதனால, "சொல்லப் படுகிறது, இருக்கலாம்" மாதிரியான வார்த்தைகள் இருக்காது.. நான் நம்பறத, உங்களுக்கு சொல்றேன்..

கதை

மு.கு - extraction - ஒருத்தரோட சப் கன்ஷியஸ்லேர்ந்து ஒரு நினைவை, ரகசியத்தை திருடுவது.
inception - ஒருத்தரோட சப் கான்ஷியஸ்ல ஒரு நினைவை விதைப்பது...

படம் ஆரம்பிப்பது லிம்போல. கடற்கரைல ஒரு ஆள் 
ஒதுங்கராறு. அது நம்ம ஹீரோ காப் (டிகாப்ரியோ), அங்க தன்னோட குழந்தைகள் மணல்ல விளையாடறத பாக்கறாரு. (இந்த காட்சிய, படம் முழுக்க,  அவர் பல முறை பாக்கறாரு) நாலு பேர் தூக்கி கொண்டு போய், தொண்டு கிழமான ஒரு சைனாகாரர் (சைடோ) முன்னாடி அவரை ஒக்கார வெக்கறாங்க. காப் கிட்டேர்ந்து ஒரு சின்ன பம்பரம் மாதிரி உள்ள பொருளை பாத்து, இதே மாதிரி ஒண்ணு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டயும் இருந்துதுனு அந்த கிழவர் சொல்றாரு. 

CUT TO

அடுத்த காட்சி, காப், இளமையான சைடோ, ஆர்தர் மூணு பேரும் ஒரு எடத்துல பேசிகிட்டு இருக்காங்க. காப், சைட்டோகிட்ட, அவரோட சப் கான்ஷியாஸின்  பாதுகாப்பு அவசியம்னும், அதுக்கு தன்னால உதவ முடியும்னு சொல்றாரு. யோசனை பண்ணி சொல்றேன்னு சைட்டோ அந்த எடத்த விட்டு கிளம்பறாரு..

அது சைட்டோவோட கனவுன்னும், அங்க காப், ஏதோ ரகசியத்த திருட முயற்சி பண்றாருன்னும் 
அப்பறம் நமக்கு தெரிய வருது . அங்கேயே, மால் அப்படிங்கற ஒரு பெண்ணையும் சந்திக்கறார். அவங்க காட்டி கொடுக்கறதுனால, கனவுக்குள்ள கனவுன்னு, ரெண்டு லேயர்ல திட்டம் போட்டும், காபோட முயற்சி வீணாகுது. (இங்க இன்னொரு முக்கியமான விஷயம், மால், ஆர்தரோட கால்ல ஷூட் பண்றதுக்கு முன்னாடி, கனவுல ஒருத்தர கொலை பண்றதுனால நிஜத்துல அவங்க கண்ணு முழிச்சிருவாங்க. ஆனா, காயப்படுத்தினா, அந்த வலி ரொம்ப பயங்கரமானதா இருக்கும்னு சொல்லிட்டு சுடறாங்க)

அந்த முயற்சி தோல்வி அடையறதுனால, காபுக்கு வேலை கொடுத்தவங்க அவரை கொலை செய்யலாம்னு பயந்து, காப், தலைமறைவாக யோசிக்கறாரு. (காப், ஏதோ ஒரு குற்றத்துக்காக, தன்னோட ரெண்டு குழந்தைகள பிரிஞ்சு, அமெரிக்காவுலேர்ந்து தலை மறைவா இருக்கார்னு 
அப்போ நமக்கு தெரிய வருது). 

காப் தலைமறைவாகறதுக்கு முன்னாட், சைட்டோ அவரை சந்திச்சு, இன்செப்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. அப்படி வெற்றிகரமா பண்ணிட்டா, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காப, அமெரிக்கவுல இருக்கற அவரோட குழந்தைகளோட சேர்த்து வேக்கறேன்னு வாக்கு கொடுக்கறாரு. ஆர்தர், இன்செப்ஷன் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொன்னாலும், காப், தன்னால பண்ண முடியும்னு ஒத்துக்கராறு.

காப், இன்செப்ஷன் செய்ய ஒரு அணியை திரட்டராறு. இதுல, அரியாட்னே - கனவுகளை வடிவமைக்கரவங்க (architect), இயாம்ஸ் - சித்தரிப்பாளன்னு  சொல்லலாமா?? பாவனை பண்றவர்னு சொல்லலாமா???(forger),  ஆர்தர் - ஆராய்ச்சியாளர் (point man) நம்ம காப் - களவாடப்போறவர்.. (extractor) (களவானின்னு சொல்லலாமா??), அப்பறம் யூசுப் - இவர்தான் மயக்க மருந்துக்கு பொறுப்பு (chemist) கூடவே சைட்டோ, இவங்க செய்யறத கண்காணிக்க வரார்.


திட்டம் போடும்போது, அப்படியே புது ஆளான அரியாட்னேவுக்கும் பயிற்சி கொடுக்கறாங்க. அப்படி ஒரு பயிற்சியப்போ, அரியாட்னே மால் பத்தின விஷயத்தை தெரிஞ்சிக்கறாங்க.  மால், காபோட இறந்து போன மனைவி. ஏதோ ஒரு பிரச்சனைனால, காபோட எல்லா கனவுகள்ளையும் மால் வந்து சதி பண்ணிடறாங்க. இதனாலேயே, காப் கனவுகள வடிவமைக்கரத நிறுத்திக்கராறு. ஏன்னா, அவருக்கு தெரிஞ்சா, அவரோட நினைவுகள்ல இருக்கற மாலுக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். அவங்க அங்க வந்து திட்டத்தை கெடுத்துடுவாங்க. 

இதனால கனவோட வடிவமைப்ப பத்தி தெரிஞ்சிக்கறதயும் நிறுத்திக்கராறு. இதைப் பத்தி, அணில இருக்கற மத்தவங்களுக்கும் அரியாட்னே சொல்ல சொல்றாங்க , ஆனா காப் இது அவ்வளவு சீரியஸ் பிரச்னை இல்லை. அதனால அவங்களுக்கு தெரிய வேணாம்னு மழுப்பிடராறு.

இந்த பயிற்சியில டாட்டம்னு ஒரு விஷயத்தைப் பத்தியும் சொல்றாங்க. எல்லார் கிட்டயும் ஒரு டாட்டம் இருக்கும். அதை வெச்சி, அவங்கவங்க, தான் கனவுல இருக்'கோமா', நிஜத்துல இருக்கோமான்னு கண்டுபுடிச்சிப்பாங்க. அப்படியொரு டாட்டம்தான், முதல் காட்சில காப் கைல இருக்கற பம்பரம். அது காபோட டாட்டம். அதை சுத்தி பார்த்து, விழுந்தா நிஜம்னும், சுத்திகிட்டே இருந்தா கனவுன்னும் காப் தெரிஞ்சிப்பாறு. 
இதை படத்துல பல முறை அவர் செஞ்சி பாக்கறாரு. 

அடுத்து கிக். ஒரு கனவுலேர்ந்து முழிக்க, நிஜத்துல கிக்குனு ஒரு விஷயத்தை பயன்படுத்தறாங்க. ஒரு இடத்துலேர்ந்து, எந்த பிடிமானமும் இல்லாம கீழ விழறது (freefall) தான் கிக். உதாரணத்துக்கு நாற்காலிலேர்ந்து பின்னாடி சாஞ்சு விழறது. அப்படி கனவுலகத்துல விழுந்தா, நிஜத்துல முழிக்கலாம்.

இவங்க இன்செப்ஷன் செய்ய வேண்டியது பிஷர்னு ஒரு இளம் தொழிலதிபரோட தலைக்குள்ள. செத்துப்போகப்போற தன்னோட அப்பாவின் மூலமா வர தொழில் சாம்ராஜ்யத்தை அவரே உடைக்கரா மாதிரி யோசனைய விதைக்கனும். அதுக்கு இன்செப்ஷன் பண்ணனும். இந்த வேலைக்காக பிஷர பத்தின எல்லா தகவலையும் சேகரிக்கறாங்க. இறந்த அப்பாவ பார்க்க, பிஷர் விமானத்துல போகும்போது, இன்செப்ஷன் பண்ணலாம்னு முடிவெடுக்கறாங்க.  


இங்க இன்னொரு முக்கியமான விஷயம். இன்செப்ஷன் செய்ய மூணு லேயர்னு முடிவு பண்ணி திட்டம் போடறாங்க. அடுத்தது, நிஜ உலகத்துல பத்து மணி நேரம்னா, கனவுல ஒரு வாரம், கனவோட ரெண்டாவது லேயர்ல ஆறு மாசம் அப்பறம் மூணாவது லேயர்ல பத்து வருஷம்னு கணக்கு மாறும். 

இதுல, லிம்போனு, நம்மூரு அரசியல்வாதி மாதிரி இன்னொரு சார்பற்ற லேயர் இருக்கு. இந்த லேயர் யாருக்கும் சொந்தமில்லை. இங்க இருக்கும்போது, நிஜமா கனவான்னு எந்த சந்தேகமும் வராது. ஆயுசுக்கும் அங்கேயே கெடக்க வேண்டியதுதான். நிஜவுலகத்துல முழிக்கவும் மாட்டாங்க. கோமா மாதிரி ஆகிடும்.

ஒரு சக்தி வாய்ந்த மயக்க மருந்து கொடுத்து பிஷர தூக்கத்துல ஆழ்த்தி, பிஷரோட ஆழ்மனசுல போக இன்செப்ஷன ஆரம்பிக்கறாங்க. 


முதல் லேயர், யூசுப்போட கனவு.

இயாம்ஸும்  சைட்டோவும், ஆர்தரோட சேர்ந்து பிஷர ஒரு வேன்ல கடத்தி கொண்டு போறாங்க. 
போற வழியில பல பேர் இவங்கள தாக்கறாங்க. காப், அதெல்லாம் பிஷரோட மனசுல அவரே ஏற்படுத்தி வெச்சிருக்கற தற்காப்பு. இந்த மாதிரி இன்செப்ஷன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு யார்கிட்டையோ பயிற்சி எடுத்துட்டுகிட்டு இருக்காருன்னு விளக்காராறு.

நடு ரோட்ல திடீர்னு ஒரு ரயில் வேற வருது. அது எப்படின்னு யாருக்கும் புரியல. எப்படியோ கஷ்டப்பட்டு, பின்னி மில் மாதிரி ஒரு எடத்துக்கு வராங்க. ஆனா சைட்டோ உடம்புல ஒரு குண்டு பாஞ்சிருக்கு. இதுக்கு மேல இவரால மேற்கொண்டு தொடர முடியாது. அதனால அவரை சுட்டு, நிஜ உலகத்துல முழிக்க வெச்சிடலாம்னு ஆர்தர் சைட்டோவ சுட முயற்ச்சி பண்றாரு. 

ஆனா, இவ்வளவு பவர்புல்லான மயக்க மருந்தோட வீரியம் குறையறதுக்கு முன்னாடியே, கனவுல இறந்து போனா, அவங்க லிம்போவுக்குதான் போவாங்க, முழிக்க மாட்டாங்கன்னு, காப் ஆர்தரை தடுக்கராறு. அரியாட்னே, ரயில் பத்தி காப் கிட்ட கேட்கும்போது, அது மால்னால தான் வந்துச்சுன்னு ஒத்துக்கராறு. அதை பத்தின முழு கதைய சொல்றாரு.

FLASHBACK

காப் மால் ரெண்டு பேருமே இந்த மாதிரி கனவுல திருடர வேலைல ஈடுபடறவங்க. ஒரு முறை இதை வெச்சி பரிசோதிச்சு பார்க்கும்போது, எக்கு தப்பா ரெண்டு பேரும் லிம்போவுக்கு போயிடறாங்க. காப், லிம்போ உண்மையில்ல, கனவுன்னு மால் கிட்ட சொல்லியும் அவங்க அங்கேர்ந்து வர மறுக்கறாங்க. அம்பது வருஷம் லிம்போவுலையே சந்தோஷமா இருக்காங்க.


கடைசியா எப்படியோ காப், மால்-ஐ நிஜ உலகத்துக்கு வர சம்மதிக்கவெக்கராறு. ஒரு ரயில் தண்டவாளத்துல ரெண்டு பேரும் தலையவெச்சி, இறந்து போய், நிஜவுலகத்துக்கு திரும்ப வராங்க. ஆனா அந்த லிம்போவோட தாக்கம் அதிகமா இருக்கறதுனால, நிஜ உலகத்துக்கு வந்த அப்பறமும், மால், அதுதான் கனவுன்னும், அங்க இறந்துபோனா நிஜவுலகத்துக்கு போகலாம்னும் நினைக்க ஆரம்பிக்கறாங்க. 

இதனால, அவங்களோட கல்யாண நாள் அன்னிக்கி, அவங்க எப்பவும் கொண்டாடுற ஹோட்டல் ரூம்லேர்ந்து மால் கீழ விழுந்து, தான் நிஜ உலகத்துக்கு போகனும்னு தற்கொலை பண்ணிக்கறாங்க. அதுக்கு முன்னாடியே, தன்னோட லாயர் கிட்ட, காப் தன்னை கொல்ல முயற்சி பன்றார்னும் சொல்லிடறாங்க. அப்போதான், தன் கூடவே காப் வருவார்னு அப்படி பண்றாங்க. இதனால, அவங்க இறந்த அப்பறம், கொலை பழி காப் மேல விழ, காப் அந்த நாட்டை விட்டு ஓடறாரு. 

Back to கனவு

இங்க முதல் லேயர்ல, இயாம்ஸ், பிஷரோட காட்பாதர் பிரவுனிங் மாதிரி வேஷம் போட்டு, தன்னை யாரோ டார்ச்சர் பண்றா மாதிரி கத்தறாரு. ஆர்தரும் காபும், பிஷர்கிட்ட ஒரு கஜானாவை திறக்கத் தேவையான நம்பர் கேட்ட்கறாங்க.
ஆனா அவருக்கு ஒண்ணும் தெரியலை. பக்கத்துல பிரவுநிங்கோட கத்தல் வேற.. பிஷர், பிரவுனிங்கோட பேசி பார்க்கறேன்னு சொல்றாரு. 

பிரவுனிங்கும் (இயாம்ஸ்) பிஷரும் பேசும்போது, பிஷர் அப்பா எழுதுன ரெண்டாவது உயில் பத்தி பிரவுனிங் சொல்றாரு. அது வெளிய வந்தா, மொத்த சாம்ராஜ்யமும் ஒண்ணுமில்லாம ஆகிடும், பிஷர் தேவைப்பட்டா அதை பயன்படுத்திக்கலாம். பிஷர், தான் எதுக்கு மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கணும்னு கேட்கும்போது, "ஒரு வேளை உன் அப்பா, நீ உன்னோட சொந்த முயற்சில பெரிய ஆளா வரணும்னு நினைச்சிருக்கலாம்"னு பிரவுனிங் சொல்றாரு.

இதே நேரத்துல, பிஷரோட (கனவுலக) பாடிகார்ட்ஸ் அந்த இடத்தை நெருங்கறாங்க. அந்த இடத்தை காலி பண்றதுக்கு முன்னாடி, பிஷர் கிட்ட மறுபடியும் 
காபும் ஆர்தரும் கஜானா நம்பர கேட்கறாங்க . ஆனா பிஷர் தெரியாதுன்னு சொல்ல, ஏதொ ஒரு நம்பர சொல்லுனு அவங்க மிரட்ட, பிஷர், வாய்க்கு வந்த நம்பர சொல்றாரு. அங்கேர்ந்து ஒரு வேன்ல எல்லாரும் போறாங்க. அதுலையே மயக்க மருந்து கொடுத்து, அடுத்த லேயர் கனவுக்குப் போறாங்க. வண்டிய யூசுப் ஓட்டறாரு. 

ரெண்டாவது லேயர் ஆர்தரோட கனவு . 
(முதல் லேயர்ல கிக், வேனோட, எல்லாரும் ஒரு பாலத்துலேர்ந்து, தண்ணியில விழறது)

ரெண்டாவது லேயர்ல, ஒரு ஹோட்டல்ல, காப், பிஷர் கிட்ட வந்து, தான் அவரோட பாதுகாப்பு அதிகாரி சார்லஸ்னு அறிமுகப்படுத்திக்கராறு. அவர் இருக்கறது கனவுன்னும் நம்பவைக்கராறு. பிரவுன்ங்கை நம்பாதீங்க, அவர் கொஞ்சம் சரியில்லைனு ஒரு விஷயத்தையும் சொல்லி வைக்கறாரு. கொஞ்சம் கொஞ்சமா பிஷரோட மனசே பிரவுனிங்க கெட்டவரா சித்தரிக்குது. காப் இன்னும் பல விஷயங்கள் பேசலாம்னு பிஷரை ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போறாரு. அங்க இருக்கற பிரவுனிங் (forger) , தான் தப்பு பண்ணதா பிஷர் கிட்ட ஒத்துகிட்டு, இவ்வளவு வருஷமா உழைச்ச குடும்பம், ரெண்டாவது உயில்னால உடையறதை விரும்பாம அப்படி செஞ்சதா சொல்றாரு.. 


இந்த நேரத்துல, காப், பிரவுனிங் மனசுல இருக்கற ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டுதான் ஆகணும்னு பிஷர சம்மதிக்க வெச்சி, அவரோட கனவுக்குள்ள போறாங்க. ரெண்டாவது லெவல்ல காவல் ஆர்தர். இதே நேரத்துல, பிஷரோட தற்காப்புகள், ஆர்த்தர தாக்க வர, அவர் அவங்கள அடிச்சி வீழ்திட்டு, இவங்க இருக்கற ரூமுக்கு வரும்போது, முதல் லெவல்ல கிக் ஆரம்பிக்குது. 

வேன் மேலேர்ந்து கீழ விழர்தால, ரெண்டாவது லெவெல்ல புவியீர்ப்பு விசை இல்லாம போகுது. இப்படி இருந்தா கிக்  கொடுக்கறது கஷ்டம்னு உணர்ற ஆர்தர், இருக்கற எல்லாரையும் எடுத்து கொண்டு போய், லிப்டோட கட்ராறு.

மூணாவது லேயர் (பிஷரின் கனவு), 


ஒரு பனி மலைல எல்லாரும் இருக்காங்க. அங்க ஒரு கட்டிடத்த நிறைய பேர் பாதுகாக்கறாங்க. காப், பிஷர்கிட்ட, அதுதான் பிரவுனிங் ரகசியத்தை வெச்சிருக்கற இடம்னு சொல்லி. அங்க போக சொல்றாரு. எல்லாரும் பிரிஞ்சு, அங்க இருக்கறவங்க கிட்ட சண்டை போட்டு, எப்படியோ பிஷர் அந்த கட்டிடத்தோட முக்கியமான பகுதிய அடைய உதவி பண்றாங்க. 

இதுக்கு நடுவுல, ஒரு குறுக்கு வழிய அரியாட்னே சைட்டோகிட்ட சொல்லும்போது, காபும் அதை கேட்டுடறாரு. இதனால, பிஷர் அந்த ரகசிய அறையை திறக்கதுக்கு முன்னாலேயே மால் அங்க வராங்க. தூரத்துலேர்ந்து இதை பாத்திக்கிட்டு இருக்கற அரியாட்னே, கூட இருக்கற காபை, சுட சொல்றாங்க. தன்னோட மனைவிய சுட தயங்கற அந்த நேரத்துல, மால் பிஷர சுட்டுடறாங்க. அப்பறம் காப் மாலை சுட்ராறு.

எல்லாரு பிஷர் விழுந்துருக்கற எடத்துக்கு வராங்க. சைட்டோவும் இறந்து போகராறு. பிஷர் இன்னும் இறந்து போகலைன்னும், அவர் காபோட லிம்போவுலதான் இருக்கனும்னும் அரியாட்னே சொல்றாங்க. ஏன்னா, காப் தன்னை தேடி வர, மால், அங்க தான் பிஷர வெச்சிருப்பாங்கன்னு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம், மால் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.


இயாம்சை, பிஷருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டு, அரியாட்னேவும் காபும், அம்பது வருஷம் காப் - மால் வாழ்ந்த காபோட லிம்போவுக்கு போறாங்க. அங்க ஒரு வீட்ல மால் இருக்காங்க. அவங்க, காப், வயசாற வரைக்கும் பிரிய மாட்டோம்னு கொடுத்த தன்னோட வாக்குறுதிய காப்பத்தலைன்னு குத்தம் சொல்றாங்க. காப் குழப்பத்துல இருக்கார்னும், லிம்போதான் நிஜம்னும் சொல்றாங்க. இங்க காப் இன்னொரு பிளாஷ்பாக் சொல்றாரு.

முன்னாடி லிம்போவுல இருக்கும்போது, மால், அவங்களோட டாட்டம், அதாவது இப்போ காப் பயன்படுத்தற பம்பரத்தை, எடுத்து ஒழிச்சு வெச்சிடறாங்க. காப் இதை கண்டுபுடிச்சு, மால் இருக்கறது நிஜ உலகம் இல்லைன்னு 
மாலுக்கே ஒரு இன்செப்ஷனை செய்யறாரு. இதனால்தன், மால் காப் சொல்றதை கேட்டு, ரயிலுக்கடியில தலை வெக்கறாங்க. ஆனா நிஜத்துல வந்த அப்பறமும், இது கனவுன்னு காப் விதைச்ச எண்ணம் அவங்களவிட்டு போகாததுனால,  அவங்க தற்கொலை பண்ணிக்கறாங்க. இதனால்தான், இன்செப்ஷன் சாத்தியம்னும் காபுக்கு தெரிய வருது. 

மறுபடியும், இங்க லிம்போவுல, பிஷர கண்டு புடிக்கறாங்க. காப், தான் சைட்டோவ கண்டுபுடிக்கனும்னு சொல்றாரு. இதனால, அரியாட்னே, பிஷர கீழ தள்ளிவிட்டு, தானும் கீழ விழறாங்க. மூணாவது லேயர்ல இயாம்ஸ் கொடுக்கற ஷாக்கோடா, இந்த கிக்கு வேலை செஞ்சி, மூணாவது லேயர்க்கு போறாங்க. பிஷர் உயிரோட வராரு. அந்த ரகசிய அறைல இருக்கற விஷயத்தையும் தெரிஞ்சிக்கராறு.


இதே நேரத்துல, அந்த கட்டிடம் தகர்க்கப்பட்டு, எல்லாரும் அஸ்திவாரத்துக்குள்ள விழறாங்க, அதே நேரத்துல ரெண்டாவது லேயர்ல இருக்கற லிப்டுல ஏதொ செஞ்சி, ஆர்தர் அதை ப்ரீஃபால் ஆக்கராறு , அப்படியே முதல் லேயர்ல கரெக்டா வேன் தண்ணில விழுது. எல்லா கிக்கும் சரியா வேலை செய்ய, எல்லாரும் கரெக்டா கண்ணு முழிக்கறாங்க. இன்செப்ஷன் வெற்றிகரமா முடியுது.

மறுபடியும் முதல் காட்சி வருது. காப், லிம்போவுல பார்க்கற அந்த கிழட்டு சைனா காரரு நம்ம சைட்டோதான். காப் அவர் கிட்ட பேசி, ரெண்டு பேரும் சுட்டுகிட்டு, நிஜத்துக்கு வராங்க. வாக்கு கொடுத்தா மாதிரி, சைட்டோ, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காபை அமெரிக்காவுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாம நுழைய வெக்கறாரு. 


காப் தன்னோட வீட்டுக்கு வந்து, எப்பவும் குழந்தைகள் விளையாடுற அந்த காட்சிய பாக்கறாரு. இது கனவா நிஜமான்னு தெரிஞ்சக்க, டாட்டம எடுத்து சுத்தராறு,  ஆனா இந்த முறை, குழந்தைகள் முகத்தை காமிக்கறாங்க. அப்பாகிட்ட ஓடி வராங்க. காபும், சுத்தி விட்ட பம்பரத்தை மறந்து, அவங்க கிட்ட ஓட, கேமரா சுத்திகிட்டு இருக்கற பம்பரத்த காமிக்குது. அது இன்னும் சுத்திகிட்டே இருந்து, விழறா மாதிரி நிலை தடுமாற, படம் முடியுது.



ங்கொக்கா மக்கா... ஒரு வழியா சொல்லிட்டேண்டா சாமி... 
ரொம்ப சொதப்பலைன்னு நினைக்கறேன். 
மறுபடியும் எல்லாருக்கும் நண்ணி...


வெற்றி வெற்றி வெற்றி.. சொல்லி முடிச்சிட்டேன்...

Thursday, August 12, 2010

Inception பதில்கள்

என்னடா சின்னப் பையனாச்சேன்னு யாரும் கேள்வி கேட்காம விட்டுருவாங்களோன்னு நினைச்சேன். இருந்தாலும், என்னையும் மதிச்சு சில கேள்விகள் கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இப்போ பதில்களுக்கு போவோம்.

திரு பத்மநாபனின் கேள்வி
  • please explain the story na?
முதல்லையே போட்டாரு பாருங்க ஒரு போடு. கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடிச் சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு வந்துடறேன்.

திரு ரமியின் கேள்விகள்

  • Is the movie is begin in dream or real?
 அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending.
  • Actually what is the climax in this movie?
பாசிடிவா சொல்லனும்னா, அவங்க வெற்றிகரமா வேலைய முடிச்சிட்டு, நாயகன் காப் தன்னோட குழந்தைங்களோட இணையராருனு வெச்சிக்கலாம். இல்லை, நெகடிவா போனா, காப் வேலையை சரியா முடிக்காம, லிம்போல மாட்டிகிட்டாருனு வெச்சிக்கலாம். இல்ல, ஒரு தரப்பினர் சொல்றா மாதிரி, படம் முழுக்கவே, காபோட கனவா இருக்கலாம். இதுக்கு பதில் இல்லைனு சொல்றதுதான் உண்மையான பதிலா இருக்கும். 
  • Different between extraction and inception?
ரொம்ப சிம்பிள். Extraction - சப் கான்ஷியஸ்ல / மண்டைல இருக்கற ஒரு விஷயத்தை திருடறது. Inception - அப்படியே உல்டா. அவங்க சப் கான்ஷியஸ்ல, அவங்களுக்கே தோணுவது மாதிரி ஒரு எண்ணத்த விதைப்பது. இதுல, Inception தான் ரொம்பக் கடினமான வேலை, ஏன்னா, விதைக்கற எண்ணம் அந்நியமா இல்லாம, அவங்களே யோசிச்சா மாதிரி இருக்கணும். 
  • Is there any explanation in movie that these are all possible or not?
இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன். இதெல்லாம் சாத்தியமா இல்லையான்னு இந்தப் படத்துல எங்கயும் ஆதாரத்தோட காமிக்கல.

திரு ஜெய்யின் கேள்விகள்
  • அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?

    அது லிம்போதான்..
  • அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா? 
                  அது லிம்போதான்னு நான் சொல்றதுக்கான காரணங்கள். லிம்போ யாரோட கனவும் கிடையாது. அது ஒரு பொரம்போக்கு நிலம் மாதிரி. அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். தெரிஞ்ச இடத்துக்கு நாம ஈசியா மத்தவங்கள கூட்டிட்டு போறதில்லியா, அது மாதிரி. ஹீரோவும் அரியாட்னேயும், ஹீரோவோட கனவுல இருக்கற லிம்போவுக்கு போறாங்க. ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. ஏன்னா, அவங்களோட முதல் + கடைசி விருப்பம் காபோட எப்பவும் ஒண்ணா இருக்கனும்ங்கறது மட்டுமே. அரியாட்னேயும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்பி வரதுதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே. லிம்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிகிட்டு வராத பாக்கற அர்யாட்னே, மேல உள்ள லெவல்ல கிக் ஆரம்பமானதா உணர்ந்து, ஃபிஷர கீழ தள்ளி விட்டுட்டு, தானும் குதிக்கறாங்க.
  • ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
அது லிம்போதான். காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க. ஃபிஷரின் வலியின்மைக்கான காரணங்கள், என்னோட யூகத்தின் அடிப்படைல சொல்லனும்னா,  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டு திரும்ப வந்ததுனால இருக்கலாம். ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம்.
  • ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு? 
செத்துப்போனவுடனே  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டாரு. உடனே, மாலும் சுடப்படறாங்க. முன்னாடியே சொன்னா மாதிரி, லிம்போவுக்கு போயிட்டு வந்தவங்களால, மறுபடியும் அதுக்குள்ள சுலபமா போக முடியும். போன பதில்ல சொன்னா மாதிரி, காபுக்காக ஃபிஷர பணயக்கைதி மாதிரி ஒழிச்சு வெக்கறாங்க மால். இதுல முக்கியமான விஷயம், இது எல்லாமே, காபையும் அறியாம, அவரோட குற்றஉணர்வின் பிரதிபலிப்பான மால் செய்யறாங்க. உண்மையான மால் எப்பவோ இறந்து போய்ட்டாங்க.
  • முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)
இது சொல்ல வந்த காண்டக்ஸ்ட்ல நீங்க எடுத்துக்கலைன்னு நினைக்கறேன். அவங்க லிம்போலதான் இருக்காங்க. நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். ஆங்கிலத்துல வர டயலாக் இதுதான், "Don't lose yourself!! Find Saito and bring him back!"  . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க.
  • ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?
ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு.

  • முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?
கண்டிப்பா ஓபன் எண்டு தான். ரெண்டு வாட்டி டோட்டம் விழுந்ததற்கான காரணம் ரொம்ப சிம்பிள்னுதான் நான் நினைக்கறேன். அதோட சரியான வடிவமைப்பும், எடையும், எப்படி வேலை செய்யும்னும்  காபுக்கு நல்லாவே தெரியும். அது ஏன் அவர் கனவுல ஒழுங்க வேலை செய்யக்கூடாது. முக்கியமா, டோட்டம், நாம மத்தவங்க கனவுல இருக்கோமா இல்லையாங்கறத சொல்லுமே தவற, நம்மலோடதுல இல்லை.
  • க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), 
முன்னாடியே sollitten. ஓபன் எண்டு.
  • ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.
அப்படியும் ஷட்டர் ஐலாண்ட் மாதிரி யோசிக்கலாம். ஒப்பன் எண்டு தான்
  • ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?
சில நேரங்கள்ல, டைரக்டர் சொல்ல வராத விஷயங்களைக் கூட நாமே புரிஞ்சிப்போம். அப்படியே தான் நீங்க கேட்கறதும் இருக்கு, அதனால, அதே மாதிரியே பதிலும் சொல்றேன்.  ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். நிஜத்துல அதுவரை அவர் போடாததுக்கு காரணம், தன்னோட மனைவியோட நியாபகங்களும், அது தர குற்ற உணர்வும் தான். கிளைமாக்ஸ்தான் படத்தோட முதல் காட்சி. அப்படி அது வேற காட்சியா இருந்தா, படம் முழுக்கவே ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துக்கலாம். ஷட்டர் ஐலாண்ட் தியரிய அடிப்படையா வெச்சு, ஹீரோ தன்னோட குற்ற உணர்வ போக்க, இதையே திரும்ப திரும்ப செய்யறாருன்னு வெச்சிக்கலாம்.

திரு சர்வேசன் கேட்ட கேள்வி
  • பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?
நீங்க முதல்ல வர பனிச்சரிவ  சொல்றீங்கன்னு நினைக்கறேன். அது, அவங்க முதல் லெவல்ல வர van நிலை தடுமாறி ஒரு ரோலிங் அடிச்சிட்டு நிக்கர்துனால ஏற்படுவது. அது நல்ல வேளையா கிக்கா மாறாம, எல்லாரும் அதை மிஸ் பண்ணிடறாங்க. அந்த  அதிர்வு, பனிச் சரிவோட போய்டுது.இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக. (தில்லாலங்கடி கிக்கு இல்லை)

இன்னும் கேள்விகள் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க, அதுக்கு பார்ட் 2 பதிவு போட்டுடலாம். திரு பத்மநாபன் கேட்டா மாதிரி, வேற ஒரு பதிவுல, முழுக்கதையும் சொல்றேன். ஒரு வேளை நான் சொன்னதும், என்னோட புரிதலும் தப்பா இருந்தா திருத்துங்க. கேள்வி கேட்ட அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.. :)



இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??


Thursday, August 5, 2010

எந்திர-ப்-புலி

சீனியாரிட்டி படி, புலி படத்தோட பாடல்கள் பற்றி பேசுவோம்/சறேன்

புலி, தெலுங்கு படம். சிரஞ்சீவி தம்பி, பவன் கல்யான் ஹீரோவா நடிக்கறார். நம்ம BF எஸ்.ஜே. சூர்யா (best friend)  டைரக்டர். இவங்க காம்பினேஷன்ல முதல்ல வந்த, தமிழ் குஷி ரீமேக், ஆந்திரப் பிரதேசத்துல மிகப் பெரிய ஹிட்டு. அதனால, இந்தப் படத்துக்கு நியாயமான எதிர்பார்ப்பு இருக்கு. மியூசிக் வேற நம்ம ஆஸ்கர்மான். So, அதுக்கும் எதிர்பார்ப்பு. படத்துல மொத்தம் ஆறு பாடல்கள். ரகுமானின் தாக்கத்தோட, சூர்யாவோட தாக்கம் அதிகமா இருக்கு. ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த பாடல்கள். எல்லா பாடலைப் பற்றியும் ஓரிரு வரி/வார்த்தைகள்..


பவர் ஸ்டார் - அநேகமாக ஒபெனிங் சாங். நல்ல ரிதம். ஹோசன்னா விஜய் பிரகாஷ் பாடிருக்கார். கூடவே தன்வி, தெலுங்கையும் கடிச்சு துப்பிருக்காங்க. தெலுங்கு சுமாரா தெரிஞ்ச எனக்கே தெரியுது, லிரிக்ஸ் கொஞ்சம் காமெடியா இருக்குனு. மத்தபடி, பாடல் சூப்பர் ஹிட் ஆக நிறைய அறிகுறிகள் இருக்கு.

அம்மா தல்லே - ஆங்கிலத்துல டங் டிவிஸ்டர்ஸ்னு சொல்லுவாங்க, அதுமாதிரி, வார்த்தைகளை வேகமா அடுக்கிட்டே போறாங்க. அழகா பாடவும் செஞ்சிருக்காங்க, பாடகி சுஜாதாவோட பெண் ஸ்வேதா. கூட நம்ம நரேஷ் ஐயர். இந்தப் பாடலைப் பற்றி ஒரு சின்ன எக்ஸ்ட்ரா பிட்டு. நியூ படத்துல உபயோகப்படுத்த முடியாமப் போன மார்கண்டேயா பாடலோட வாடை, இந்தப் பாடல்ல, பலம்மா இருக்கு.

மாரலண்டே
- ரஹ்மானே பாடிருக்கார். அவரோட ரசிகர்கள் சொல்றா மாதிரி, திரும்ப திரும்ப கேட்டாலும், முதல் ரெண்டு பாடல்கள் இம்ப்ரெஸ் பண்ண அளவுக்கு, இது ஈர்க்கலை. ரஹ்மானோட கே.எம் மியூசிக் கன்செர்வேடரி மாணவர்களோட சேர்ந்து இந்தப் பாடலை பண்ணிருக்கார். நாட்டுக்கு நல்லது பண்ண, அட்வைஸ் பண்றா மாதிரி வருது பாடல். வெயிட்டான orchestration.

மஹ மாயே
- அடுத்த டூயட். நம்ம குச்சி சுச்சி பாடிருக்காங்க. ஜாவேத் அலியோட இணைஞ்சு. கேட்க கேட்க பிடிக்கக் கூடிய பாடல். ரஹ்மானோட பெஸ்ட் இல்லை. இருந்தாலும் ரசிக்கலாம். திரைல நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

தோச்சே
- கேட்டவுடனே ஐட்டம் நம்பர்னு உரைக்கும் பாட்டு. காஷ் n க்ரிஸ்ஸினு இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்திருக்கார். இதான் அவங்களுக்கு முதல் திரைப்படப் பாடல்னு நினைக்கறேன். இவங்க ரெண்டு பேர் பாடறது நல்லா இருந்தாலும், ஸ்ரேயா கோஷல் பாடும்போதுதான் அந்தப் பாட்டுக்கே ஒரு அழகு சேருது. இந்தப் பாடல்லயும் நல்ல ரிதம். நல்ல டியூன்.

நம்மகம் - கடவுள் கிட்ட நம்பிக்கை வேண்டி ஒரு பாடல். காற்றில் வரும் கீதமே ஸ்டைல்ல, சித்ரா, மதுஸ்ரீ மற்றும் ஹரிணி சேர்ந்து பாடியிருக்காங்க. ரொம்ப அழகான மெலடி. நைட்டு இந்தப் பாடலை கேட்டீங்கன்னா, தூக்கம் நிச்சயம். ரொம்ப மினிமம் ஆர்கெஸ்ட்ரா. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒத்து வராத, நல்ல, (உண்மையான) பக்திப் பாடல்.

மொத்தத்துல புலி, ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த ஒரு மசாலா ஆல்பம். எல்லா தரப்பினருக்கும், எதாவது இருக்கு. மாஸான  சிவாஜிக்கு பிறகு, அடுத்த மாஸ் படம். ரஹ்மானிடமிருந்து (எனக்கு) ஒரு இன்ப அதிர்ச்சி. மிஸ் பண்ணிறாதீங்க. --> இங்க க்ளிக்கினா<-- எல்லாப் பாடல்களையும் கேட்க லிங்கிருக்கேன்.
 
அடுத்து நம்ம ஊர் பரபரப்பான எந்திரன் பாடல்களுக்கு போவோம்

அதிசயமா, புலி படப் பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு, எந்திரன் படப் பாடல்கள் ஈர்க்கலை. உடனே "Rahman Songs requires repeated listening, it should grown on you, you are anti-rahman, uncle-ரஹ்மான்", அது இதுனு கமெண்ட் போடத் துடிக்காதீங்க. எனக்கு முதல் தடவை கேட்கும்போது புடிக்கலன்னா, எவ்வளவு தடவை முயற்சி பண்ணி முக்கினாலும் புடிக்காது. உதாரணத்திற்கு, எனக்கு இன்னைக்குவரை, சக்கரக்கட்டி படப் பாடல்களும், ஹிந்தி கஜினி படப் பாடல்களும் புடிக்கலை. எந்திரன் ரொம்ப மோசமான ஆல்பம் கிடையாது. ஆனா, ரஹ்மானோட பெஸ்ட்டும் கிடையாது. இன்டர்நேஷனல் ரசிகர்களை மனசுல வெச்சே இசையமச்சா மாதிரி இருக்கு. டெக்னோ மியூசிக்கோட ஓவர்டோஸ்னு சொல்லலாம். பாடல்களைப் பற்றி ஓரிருவரி, 

அரிமா அரிமா - வீரபாண்டி கோட்டையிலே பாடலைப் போல, ரிச் orchestration. ஆனால், ஹரிஹரன் பாடுவது இரைச்சலாதான் இருக்கு. ஹீரோவின் புகழ் பாடி ஆரம்பிக்கும், இன்னொரு எம்.ஜி.ஆர் ஸ்டைல் டூயட் (oxymoron??)

பூம் பூம் / சிட்டி டான்ஸ் - டான்ஸ் ப்ளோர்களுக்கு ஏத்த பாட்டு. சிட்டி டான்சைப் பாடல்னு சொல்றதை விட, ஒரு கூடை சன்லைட் மாதிரி, சப்தங்களோட கோர்வைனு சொல்லலாம்.

இரும்பிலே ஒரு - முன்னாடி சொன்ன காஷ் N க்ரிஸ்ஸியோட சேர்ந்து ரஹ்மான் பாடிருக்கார். அதிரடிக்காரன் ஸ்டைல் பாடலாக இருக்காலாம். காஷ் பாடற இடங்கள் எல்லாம், aqua பார்பி கேர்ள் பாடலை நியாபகப்படுத்துது. ஏனோ....

காதல் அணுக்கள் - இந்த ஆல்பத்தோட, முதல் முணுமுணுக்கக்கூடிய பாடல். ஹோசனா பாடலுக்கு அப்பறமா, விஜய் பிரகாஷின் அடுத்த ஹிட் என்பது ஏறக்குறைய உறுதி. என்னைப் பொறுத்த வரை, ரொம்பச் சாதரணமான பாடல். அதனாலதான் ஹிட் ஆகுமோ என்னவோ.

கிளிமான்ஜாரோ
- எனக்குப் பிடித்த ஒரே பாடல். சின்மயி வித்தியாசமான முறைல, கொஞ்சம் கீச்சுனு பாடிருக்காங்க. குலுவாலிலே பாடல் மாதிரி, ரொம்ப வித்தியாசமான பாடல். catchy. கண்டிப்பா ஹிட்டு.

புதிய மனிதா
- சம்பிரதாயமான ஹீரோ ஒப்பனிங் சாங் இல்லை இது. பாடல் ஆரம்பிச்சு, பில்ட் அப் எல்லாம் வந்து, எஸ் பி பி பாட ஆரம்பிக்க ஒண்ணரை நிமிஷம் ஆகுது. வழக்கம் போல தன்னோட சவுண்ட் இஞ்சினியரிங் வித்தையை காமிச்சிருக்கார் ரஹ்மான். டிப்பு குமாரு மாதிரி ஆகிடக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க . அவ்வளவு மோசம் இல்லை, இருந்தாலும் not "that" impressive.

எனவே மக்களே, சமீபத்துல வந்த, ரெண்டு ரஹ்மான் படப் பாடல்கள்ல, என் ஓட்டு, புலி பாடல்களுக்கே. ஒரு வேளை, எந்திரன் பாடல்களோட காட்சியமைப்பு, எல்லா ஷங்கர் படப் பாடல்கள் மாதிரி, ஈர்க்கலாம். ஆனா, தனிச்சு நிற்கும்போது, வழக்கம் போல நிறைய
அடி வாங்குது. ஆனா, எப்பவுமே ஷங்கர் படத்தோட பாடல்கள் சுமாரா இருந்தாதான், அவரால, விஷுவலா நல்லா காட்சியமைக்க முடியுது.  (ஒரு சிலப் பாடல்களைத் தவிர)


Friday, July 23, 2010

ப்ளேலிஸ்ட் - மே, ஜூன்

போன ப்ளேலிஸ்ட் --> இங்க

இந்த ஒண்ணரை மாசத்துல நெறைய படங்களும், பாடல்களும் வந்தாலும், வழக்கம் போல ஒண்ணு ரெண்டு தான் ப்ளேலிஸ்டுக்கு தேறிச்சு. இன்னும் புது லிஸ்ட்ல இருக்கற போன லிஸ்ட்டு பாடல்கள் என்னென்னா,
என் காதல் சொல்ல - பையா,
என் நெஞ்சில் - பாணா,
ஆரோமலே - வி,தா.வி,
பெஹேனே தே (உசுரே போகுதே) - ராவண்(ணன்)

இந்த லிஸ்ட்டுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம்.
நம்ம சின்ன தல யுவன், குறைஞ்ச இடைவேளைல, அடுத்தடுத்து படமா மியூசிக் போட்டு தள்ளுறாரு. இது கண்டிப்பா அவரோட பாடல்கள்ல இருக்கற தரத்தை பாதிக்குது. சமீபத்துல, அடுத்தடுத்து வந்த தில்லாலங்கடி, நான் மகான் அல்ல படப் பாடல்கள், அவ்வளவா ஒண்ணும் மெய் சிலிர்க்க வெக்கலன்னாலும், பெருசா ஒண்ணும் கேட்கவும் வெக்கலை. சீக்கரம் திருந்தினா சரி... இப்போ பாடல்கள்,

மு.கு - எல்லா பாடல்களும் லிங்க் குடுத்துருக்கேன். க்ளிக்கிட்டு, ராகா.காம்ல வர அட்வேர்டைஸ்மென்ட கொஞ்சம் பொறுத்துகிட்டு, பாடலை பொறுமையா கேளுங்க..

தாக்குதே - பாணா
போன லிஸ்ட் போடும் போதே, நம்ம வாணி மேடம், இந்தப் பாடலைப் பற்றி பின்னூட்டத்துல குறிப்பிட்டிருந்தாங்க. நல்ல catchy ரிதம் இருக்கற, யுவன் ஷங்கர் மட்டுமே பாடக்கூடிய பாடல். அவரோட குரல்ல ஒரு வலியும், சின்ன புள்ளைத்தனமும் இருக்கு. 

ஆனந்தபுரத்து வீடு படப் பாடல்கள் எல்லாமே, எனக்குப் புடிச்ச வசந்தா ராகத்துல அமைஞ்சிருக்கு. ரொம்ப சூப்பரா இல்லைனாலும், ஒரு புது முயற்சி. பாடல்களும் கேட்கும்படியவே வித்தியாசமா இருக்கு. முயற்சி பண்ணிப்  பாருங்களேன்.

மதராச பட்டினம் - பூக்கள் பூக்கும் தருணம், ஆருயிரே, வாம்மா துரையம்மா
இந்த படத்துக்கு, பாடல்கள் பெரிய வேகத்தடையா இருந்தாலும், தனிச்சு நிக்கும்போது நல்லாவே இருக்கு. இதுல, பூக்கள் பூக்கும் தருணம் பாடலோட முதல் "தான தோம் த ந ந " எங்கயோ கேட்டா மாதிரியே இருக்கு. ஆருயிரே பாடல், "எனக்கு 20..." படத்துல வர 'ஏதொ ஏதொ ஒன்று' பாடலை நியாபகப்படுத்துது. வாம்மா துரையம்மா, நல்ல லிரிக்ஸ். அதுவும், தமிழோட பெருமையா உதித் நாராயணன் பாடி கேட்கும்போது, டாபர் ஹனி வந்து பாயுது.

பலே பாண்டியா - இந்த படத்துக்கு மியூசிக், வித்தியாசமான குரல்ல இவ்வளவு நாளா பாடிகிட்டு இருந்த 'தேவன்'. இதுல "சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்"னு ஒரு பாடல். முடிவு கொஞ்சம் சொதப்பல், இருந்தாலும், அந்த சொதப்பல் வரை நல்லா இருக்கு.



வழக்கம் போல, இந்தப் பாடலும் எனக்கு, நம்ம ராஜா சாரோட சில பாடல்கள நியாபகப்படுத்த, ஆரம்பிச்சேன் என் ஆராய்ச்சிய. இந்தப் பாடல் அமைஞ்ச ராகத்தோட பேரு "ஜோக்" (joke இல்ல JOG). இதுல நம்ம ராஜா போட்ட சில பாடல்கள், "காலம் காலமாக வாழும்" - புன்னகை மன்னன் மற்றும் "பேய்களை நம்பாதே" - மகாநதி ஆகியன.

நீங்களும் கேட்டு பலனடைங்கோ. வர்டா...
பி.கு. - ரகுமானோட புலி படப் பாடல்களைப் பற்றி, அடுத்த  பதிவுல எழுதறேன்..

Thursday, May 6, 2010

PLAYLIST

மு.கு - இவ்வளவு நாளா பதிவு போடாததுக்கு, உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு, என்னை மன்னிச்சு விட்டுருங்க...

கடைசியா போட்ட playlist , ஜனவரி மாசத்தோடது. அதுக்கு அப்பறம், என் சிஸ்டம்லயும் நான் எதுவும் playlist உருவாக்கல. ஏன்னா, என் ப்ராஜக்ட் வேலைல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். இப்போ வெற்றிகரமா முடிச்சிட்டேன், அதனால நாம் நம் கலைச் சேவையை தொடருவோம்னு வந்துட்டேன். இந்த மூணு மாசத்துல, அப்டி இப்டி, ஒரு 15 படங்களோட பாடல்கள் வந்துருக்கு. அதுல நான் ஒழுங்கா கேட்டது, நாலஞ்சு படப் பாடல்கள் மட்டுமே. அதனால, இந்த லிஸ்ட்ல, உங்க கணிப்பு ஏதாவது விட்டு போயிருந்தா, அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது. இந்த எந்த மாசத்து லிஸ்டுன்னு கேட்காதீங்க. மூணு மாசத்துக்கும் சேர்த்துதான்.

போன லிஸ்ட்லேர்ந்து இன்னும் இருக்குற பாடல்கள்னு பார்த்தீங்கன்னா / கேட்டீங்கன்னா

அசல் - ஹே துஷ்யந்தா,
கோவா - ஏழேழு தலைமுறைக்கும்,
(பாட்டுக்காக மட்டுமே ஓடற) பையா - என் காதல் சொல்ல...

இப்போ புது லிஸ்டுக்கு வந்தீங்கன்னா,

பானா காத்தாடி அப்படின்னு ஒரு படம் (அட அட அட.... வரி விலக்கு குடுக்க வேண்டிய டைட்டில்) நம்ம சின்ன தல யுவன் தான் இசை. அதுல "என் நெஞ்சில்" னு ஒரு பாடல். சாதனா சர்கம் சூப்பரா பாடிருக்காங்க.
(கர்நாடக சங்கீதத்தை பற்றி, கவலை இல்லாதவங்க, அடுத்த பத்திக்கு தாவிடுங்க)
 எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கேன்னு, நம்ம இசை அறிவ கொஞ்ச நோண்டி, கூகிள் உதவியோட, ஒரு மேட்டர கண்டுபுடிச்சேன். இந்த பாடலோட ராகத்தின் பேரு, கௌரி மனோஹரி. இந்த ராகத்துல, இதுக்கு முன்னாடியே, நம்ம யுவன், ராம் படத்துல, ஆராரிராரோ, அப்படின்னு ஒரு பாடல போட்டிருக்கார். நம்ம பெரிய தலை ராஜா சார், இந்த ராகத்துல விளையாடிருக்கார். அது சில பாடல்கள், கிளி பேச்சு கேட்கவா படத்துல வர, அன்பே வா அருகிலே, தூறல் நின்னு போச்சு படத்துல வர, பூபாளம் இசைக்கும், நிழல்கள் படத்துல வர தூரத்தில் நான் கண்ட உன் முகம் (படத்துல இந்த பாடல் கிடையாது). இப்படி பலப் பல சிசுவேஷன்களுக்கு இந்த பாடலை போட்டிருக்கார், ராஜா. குத்து பாட்டு  ஸ்டைல்ல கூட ஒரு பாட்டு போட்டிருக்கார் - வாத்தியார் வீட்டு பிள்ளை படத்துல வர, வாழ்க்கையிலே கஷ்டம் வந்து...

ஆரோமலே - வி.தா.வ..

சுறா  - நான் நடந்தால் அதிரடி. இந்த பாட்டோட ஒரிஜினல் வெர்ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான் இதுவும். வழக்கம் போல மொக்கை லிரிக்ஸ்.

முன்னாடியே வந்த கச்சேரி ஆரம்பம் படத்துல, peppy ஸாங்க்ஸ் ரெண்டு இருக்கு. கச்சேரி கச்சேரி + வாடா வாடா.. பெருசா அலசர்துக்கு ஒண்ணும் இல்லைனாலும், இந்த ரெண்டு பாட்டு எனக்கு புடிச்சிருக்கு.

கடைசியா, ராவண் or ராவணன்.ரொம்ப நாள் கழிச்சு, ரஹ்மான், தன்னோட பாணியில ஒரு படம் பண்ணிருக்கார். எப்பவும் ரஹ்மான் பாடல்கள், முதல் தடவை கேட்கும்போது புடிக்காதுன்னு சொல்லுவாங்க. ஆனா, இந்த படத்துல வர, ராஞ்சா ராஞ்சா பாடல், முதல் தடவை கேட்டவுடனே எனக்கு புடிச்சுப் போச்சு. பெஹனே தே பாடலோட ரெண்டாவது interlude கொஞ்சம் இழுவை, but ஓவரால் பாட்டு ஓகே. மத்த பாடல்கள் ஒண்ணும் பெருசா ஈர்க்கலை. இதோட தமிழ் வெர்ஷன்ல, வரிகள் எல்லாம் செம்ம காமெடி. டி ராஜேந்தர் assistants எழுதினா மாதிரி இருக்கு. காட்டு சிறுக்கி, உசுரே போகுதேன்னு செம்ம காமெடி பண்ணிருக்காங்க. எனக்கு "எங்கடா உங்க MLA", "கழட்டுடா அமைச்சர் வேட்டிய"னு தெலுங்கு டப்பிங் பட டைட்டில் எல்லாம் ஞாபகத்துல வந்துச்சு. வசனமும் இதே மாதிரி ஜுனூன் தமிழ்ல translate பண்ணிருந்தாங்கன்னா, படம், சுறாவுக்கு பெரிய போட்டி ஆகிடும். கிளம்பட்டா நான் இப்போ... சந்திக்கலாம் அப்பறமா நாம் எல்லாரும்...


நான் பாடின பாட்டை கேட்டாலே இப்படிதான்...

Monday, March 29, 2010

கச்சேரி ஆரம்பம் - போலிகள் ஜாக்கிரதை...

நீங்க இன்னுமா திருந்தலைன்னு மக்களை கேள்வி கேட்க வெக்கற, புரட்சிகரமான படம் தான் இந்த கச்சேரி ஆரம்பம். இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னால நடந்த ஒரு விஷயத்தோட, சின்ன flashback...

இடம்: ஆர். பி. சௌத்ரி ஆபிஸ்..
இருப்பவர்கள்: இயக்குனர் திரைவாணன், சௌத்ரி, ஜீவா..
சௌ: இப்போ என்ன செய்ய. நாம எடுத்த படமும், இப்போ வந்துருக்குற படமும் ஒரே மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பா ஹிட். இத பாத்தவங்க, நம்ம படத்தை மதிப்பாங்களா.. ஒழுங்கா விக்ரமன வெச்சு, காரைக்குடில ஒரே ஒரு வீட்ல ஒரு full படத்தை, ல ல லா ரீரிக்கார்டிங் போட்டு,  ஹிட் பண்ணிருப்பேன்..ச்சே.. என் காசெல்லாம் இப்படியா போகணும்...

ஜி: அப்பா, சும்மா பொலம்பாத. நானும் எப்போ மாஸ் ஹீரோவா ஆகறது. இந்த டைரக்டர் விஜய்க்கு சொல்லிருந்த கதைய, கையையும் காலயும் புடிச்சு, நான் கேட்டு, ஓகே பண்ணி படத்தை எடுத்தா, இப்போ இப்படி ஆகிடுச்சு. மாத்து வழி யோசிப்பியா, இப்படி பேசுறியே..

தி: சார், நம்ம கால்குலேஷன் ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் பண்ணிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது... அதாவது துப்பாக்கில இருக்குற தோட்டா....
சௌ: டேய், நீ ஒண்ணும் பேசாத. நான் ஒரு ஐடியா சொல்றேன். அத மட்டும் செய். இந்த "தமிழ் படத்துல" எல்லா தமிழ் படத்தையும் கலாய்க்கரா மாதிரி, நம்ம படத்துலயும் கலாய்ப்போம்.

ஜி: ஐயோ அப்பா, fullaa ரீ ஷூட் பண்ணப் போறோமா??

சௌ: அது வேறயா.. சத்தியமா இந்த டைரக்டர நம்பி ரீ ஷூட் எல்லாம் பண்ண முடியாது.  10 ஷாட்ல, எப்படியாவது இந்த படத்தை, தமிழ் படம் மாதிரி spoof படமா மாத்துங்க. மவனே நீ அதை மட்டும், மறுபடியும் சொதப்பி வை, என் கம்பெனியோட எல்லா படத்தையும் மூணு தடவ, கட்டி போட்டு, பாக்க வெப்பேன்.

தி: அயயோ.. நீங்க எனக்கு ஒரு வாரம் time குடுங்க. படத்தையே மாத்தி காமிக்கறேன். இந்த மாதிரி கொடுமையான தண்டனை எல்லாம் வேண்டாம்.

ஜி: ஏதொ, எனக்கு நல்ல பேர் வந்தா சரி..

இப்படி தான் ஏதாவது நடந்திருக்கும். என்ன சொல்ல வந்தாங்கன்னு அவங்களுக்கும் புரியல, எனக்கும் புரியலை. தர மொக்கையா ஒரு படம்.ரெண்டு மூணு காட்சிகள் மட்டும் spoof படம் மாதிரி எடுத்துட்டு, மக்கள் ஏத்துப்பாங்கன்னு  நெனச்சு காமெடி பண்ணிருக்காங்க. பொறுமை போயே போச்சு. எப்போடா படம் முடியும்னு ஆகி, பக்கத்துல இருந்த ரமேஷ் அண்ணா கிட்ட "அண்ணா, என்ன அடிங்க ணா.. என்ன அடிங்க" னு புலம்பிகிட்டு இருந்தேன்..

நல்லா இருந்தா ஜீவாவும் இப்படி மொக்க ஆகிட்டார். j.d.சக்கரவர்த்தி இந்த படத்துல என்னத்தை கண்டாருனு தெர்ல. அப்படியே இம்ப்ரெஸ் ஆகி வில்லனா நடிக்க சம்மதிச்சாரம். முருகா.. வடிவேல் காமெடியும் ஒண்ணும் சிறப்பா இல்லை. மொத்தத்துல, இது ஒரு கேவலமான...... அட ச்சய், இந்த வார்த்தையே எனக்கு க்ளிஷேவா இருக்கு... தமிழ் படம் மாதிரி spoof னு சொன்னா ஏமாந்துராதீங்க. உஷாரய்யா உஷாரு.

p.s.தேவிபாலா திரையரங்கு.. சீட்டெல்லாம் மொக்கை. அந்த சின்ன தியேட்டர்க்கு 85, 95 ரூவா டிக்கெட்டெல்லாம் ஓவர். அதுவும் நடு நடுவுல, ஸ்க்ரீன் dim ஆகி dim ஆகி bright ஆச்சு. ஏசி ஒண்ணும் அவ்வளவா உரைக்கல. கவனிப்பார்களா???

அடுத்து நீங்களா?? தலைய சிலிப்பிடாதீங்க. வெட்டிருவாங்க..

Saturday, June 20, 2009

Tag எடுக்கலியோ Tagu...

நம்ம வாணி மேடம் ஒரு tag அனுப்பிருக்காங்க. Full பீட்டர். நமக்கும் லைட்டா பீட்டர் விட தெரியும்னு இத மாதிரி சமயங்கள்ல தான் comicalaa காமிக்க முடியும். எனவே, இதோ அந்த பெ.................................ரி........................ய்....................ய.................tag.
(சில கேள்விகளுக்கு மட்டும், என்னோட ஆதங்கம்/mindvoice/comments include பண்ணிருக்கேன். கண்டுக்காதீங்க)

Q: When you looked at yourself in the mirror today, what was the first thing you thought?
A:must have a shave asap
(மத்தபடி எப்பவும் பீல் பண்றா மாதிரி, இதெல்லாம் ஒரு மூஞ்சு and so on self sympathy dialogues)

Q: How much cash do you have in your wallet right now?
A:122rs

Q: What’s a word that rhymes with DOOR?
A: more

Q: What is your favorite ring tone on your phone?
A: sax prelude in "Vaan Nilaa" song from Kadhal virus

Q: Who is the 4th person on your missed call list on your cell phone?
A: My அம்மா (!!!!)

Q: What are you wearing right now?
A: trousers and vest

Q: Do you label yourself?
A: NO

Q: Name the brand of the shoes you’re currently own?
A:No shoes

Q: Bright or Dark Room?
A:Me sitting brightly in Dark room

Q: What do you think about the person who took this survey before you?

A:Good blogger. Nice narration. the wordpress template sucks though.

Q: What does your watch look like?
A:no watch (என் கை sizekku watch போட்டா, watchla கை போட்டா மாதிரி இருக்கும்)

Q: What were you doing at midnight last night?
A: Playing SIMS3

Q: What did your last text message you received on your cell say?
A: YA

Q: What’s a word that you say a lot?
A: dunno- dont tak this dunno as the word i say a lot. i really dunno.

Q: Who told you he/she loved you last? (Please exclude spouse , family, children)
A: NONE so far (ஆமாம், இது வேற)

Q: Last furry thing you touched?
A: my hair?? (come under furry???)

Q: Favorite age you have been so far?
A:from 5-18

Q: What was the last thing you said to someone?
A:match பாக்கல??? (to my அண்ணா)

Q: The last song you listened to?
A: "உன் மேல ஆசதான்" frm ஆயிரத்தில் ஒருவன்

Q: Where did you live in 1987?
A: hospital and home, cause born on last month of the year. so have to tak hospital in to acc.

Q: Are you jealous of anyone?
A: LOT

Q: Is anyone jealous of you?
A: சத்தியமா இல்லை

Q: Name three things that you have on you at all times?
A:Mobile, mobile cover, bike key

Q: What’s your favorite town/city?
A: Madras

Q: When was the last time you wrote a letter to someone on paper and mailed it?
A: I think some 6years back, reply to a akka met in a camp.

Q: Can you change the oil on a car?
A: car???

Q: Your first love/big crush: what is the last thing you heard about him/her?
A: let me know her name first...

Q: Does anything hurt on your body right now?
A: none but sore throat and cold disturbs...

Q: What is your current desktop picture?
A: Aqueduct in Segovia, Spain (wiki wallpaper)

Q: Have you been burnt by love?
A: ஏன் இப்படி வயத்தெரிச்சல கெளப்பறீங்க.
No Love, No failure....

Now iam passing this to Swathi, My Kid Brother and Poorna...
Thanks to Vani for Passing the tag :)

Friday, April 10, 2009

மற்றும் பல...

வழக்கம் போல, காலேஜ் அலுவல்கள். நல்லா மாட்டிக்கிட்டேன். இந்த மாச கடைசில செமஸ்டர் எக்ஸாம் வருது. அதுக்கும் கொஞ்சமாவது படிக்கணும். அதனால, blog பக்கம், ஏன், வீட்டுப் பக்கமே வர முடியல. வழக்கம் போல என்னை மன்னிச்சு, கொஞ்சம் பொறுமையா இருந்து, படிச்சிட்டு போங்க.

----------------------------------------------------------------------------------------------------

முடிஞ்சா, வாரா வாரம் ஞாயிற்று கிழமை, ஜெயா டிவி பாருங்க. மதியம் 12-1.

----------------------------------------------------------------------------------------------------

குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும், படத்துல, ரெண்டு பாட்டு நல்லாயிருக்கு. "சின்னஞ்சிறுசு" and "நான் தருமண்டா". கேட்டுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க

Monday, March 16, 2009

மற்றும் பல...

காலேஜ்ல பயங்கராம வேலை குடுத்துகினே இருக்காங்க. இதுக்கு நடுவுல, music events வேற வருது. என்ன பண்றதுன்னு தெரியல. எனக்கு time management சரியா வராது, இருந்தாலும், இவ்வளவு வேலைய ஒரே நேரத்துல manage பண்றது பொதுவா எல்லாருக்குமே கஷ்டம்னு நினைக்கறேன். So, blog பக்கம் வர முடியலன்னா (both urs and mine) தப்பா நினைக்காதீங்க.

--------------------------------------------------------------------------------------------------

அடுத்த முக்கியமான விஷயம், கார்த்திக் தம்பி ஒரு tag குடுத்துருக்காரு. மேல சொன்ன விஷயத்துனால, எனக்கு time அவ்வளவா இல்லை. எனக்கு யோசிச்சு bloga கொஞ்சம் time வேணும். இதுக்கு முன்னாடி நீங்க குடுத்த theatre tag still pending. அதுக்கும் ஒரு தடவை sorry. கூடிய விரைவுல, அடுத்தடுத்து ரெண்டையும் ப்ளோகறேன்.

--------------------------------------------------------------------------------------------------

காலேஜ்ல என்னை சுற்றி சில கிசுகிசுக்கள் வருது. என் பெர்சனாலிடிக்கு இது கொஞ்சம் ஓவர். அதனால, எல்லாத்தையும் இதோட நிறுத்திருங்க. எனக்கு அவ்வளவு scope இல்லை. ஒரு எதிர்கால சினிமா ஆளுக்கு, இதெல்லாம் சகஜமாக இருந்தாலும், இத மாதிரி, ஒரு பெண்ணை சேர்த்து வெச்சு பேசுவதை நான் விரும்பலை. (மத்தவங்களுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ;). Default celebrity reply will be: "இந்த கிசுகிசுக்கள் எல்லாத்தையும் பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது. எங்களுக்குள்ள இருப்பது, வெறும் நட்பு மட்டும்தான். மத்தபடி ஒண்ணும் இல்லை" :)

--------------------------------------------------------------------------------------------------

Saturday, December 13, 2008

டிசம்பர் சீசனா....

டிசம்பர் மாதம், உலகம் முழுக்க follow பண்ற Gregorian காலெண்டர்ல கடைசி மாதம்.. asusual எல்லா டிவி சேனலும் countdown ஆரம்பிச்சிருவாங்க. சில ப்ளாக்ளையும் ஆரம்பிச்சிருவாங்க... இது என்னோட முதல் டிசம்பர் blog என்பதனால, நானும் அந்த ஆட்டைல குதிக்கலாம்னு பாக்கறேன்..... நான் ரொம்ப வெட்டிப் பையன் என்கிற காரணத்துனால, ஒவ்வொரு categoryla ஒவ்வொரு countdown சொல்லலாம்னு முடிவு பண்ணிருக்கேன்... அந்த அஞ்சு கோடி பேர்களும், alt+f4 அமுக்க ரெடியா இருங்க....

கஷ்டப்பட்டு படிக்கிற அந்த அஞ்சு பேரும், அஞ்சு கோடில இருக்காங்க, அதான்... :)

Friday, October 31, 2008

தூக்க கலக்கம்

இப்ப டைம் 1.20... நான் இப்ப உக்காந்துகிட்டு என்னோட record எழுதிகிட்டு இருக்கேன்.. நான் PG படிக்கறது உங்கள்ள எவ்வளவு பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது.. ya, PG படிச்சிகிட்டு, கஷ்டப்பட்டு, ராவும் பகலுமா உக்காந்து, எழுதறேன் ..எனக்கே கஷ்டமா இருக்கு, இந்த லெவல் வந்த அப்பறம், practicala ஏதாவது வேலை குடுப்பாங்கன்னு பார்த்தா, எழுத சொல்லிட்டாங்க.. அதுவும் ரொம்ப stricta...இப்படி எழுதிகிட்டே இருக்கும்போது தான், நானே ஒரு QUOTE யோசிச்சேன்... அத உங்க எல்லார்கிட்டயும் சொல்லதான், இந்த அகால வேளைல, blogging... அது என்னான்னா...

" Students mature every year,
but teachers remain the same... wherever they go..."

தமிழ்ல, அவ்ளோ நல்ல வராது, இருந்தாலும்......

"மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பக்குவமடைவார்கள்...
ஆசிரியர்கள், எங்கு சென்றாலும் மாறுவதில்லை..."

நல்லா கீதா?? இன்னிக்கு ஒளரினது போதும்னு நினைக்கறேன், டாட்டா....