Friday, June 26, 2009

MASS - இல்லா - mani

வழக்கம் போல, இந்த வாரமும் ஏதாவது படம் பார்க்கணுமே, So, வழக்கம் போல ரமேஷ் அண்ணாவ இட்டுகுனு, அண்ணா theatre பக்கம் போனேன். அங்க, முத்திரை படம் ரிலீஸ். படம் கொஞ்சம் சுமாரா இருப்பதாகவே கேள்விப்பட்டதனாலதான் போனேன். ஆனா டிக்கெட் கிடைக்கல. நாமதான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா யார் பேச்சையுமே கேட்கமாட்டோமே, படம் பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, பார்த்தே தீரணும். அண்ணா கிட்ட, "வேற வழியில்லை, மாசிலாமணி பார்ப்போமா"னு கேட்டேன். அவரும் "எதுவா இருந்தாலும் ஓகே" அப்படின்னாரு. அங்கேர்ந்து ஆல்பர்ட் theatre. டிக்கெட் வாங்கிட்டு (85ஓவா) உள்ள போனோம்.

வழக்கம் போல, படம் செம்ம மொக்கை. அதாவது நீங்க எவ்வளவு மொக்கைனு நினைக்கறீங்களோ, அத விட மொக்கை. வழக்கம் போல, நானும் அண்ணாவும் அடுத்தடுத்து வர காட்சிகள யூகிச்சிட்டே வரோம், அதே மாதிரி வந்துகினே இருக்கு. நாங்களும் எவ்வளவு தான் யூகிக்கறது. ஒரு கட்டத்துல, நாங்க சொல்றது எல்லாமே வந்ததால, போர் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. ஹீரோ முகத்த தியேட்டர்ல அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க முடியல. ஹீரோயினயாவது கொஞ்சம் கமர்ஷியலா காமிச்சிருக்கலாம், அவங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க. அதனால, அதுவும் தேறலை. அவங்க டான்ஸராமா, சங்கமம் விந்தியா கிட்ட கத்துகிட்டாங்கன்னு நினைக்கறேன். இடைவேளைக்கு அப்பறம், நாங்களாகவே சில சீனுக்கு கை தட்டி, சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, "சூப்பரப்பு" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். காமெடி track இருந்ததா வெளிய பேசிக்கறாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியல.

கிளைமாக்ஸ்ல, ஹீரோ சண்டை போடுறப்போ, எனக்கு பசங்க படம் டயலாக் ஞாபகத்துல வர, நானே சத்தமா "அய்யய்யோ, மாசி கைய முறிக்கிட்டானே, அவனுக்கு கோவம் வந்துருச்சே, இப்ப பல்லக் கடிப்பான் பாரு"னு சத்தமா கமெண்ட் விட்டேன். அந்த ஹீரோவும் அதே மாதிரி செய்யறாரு. ஷப்பா, முடியல. 2.5 மணி நேரம், மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கி வீட்டுக்கு வந்தோம். படம் நல்லா இல்லைன்னு அவங்களுக்கே தெரியும் போல. அதனாலேயே படத்துல அவங்களே "சூப்பரூ"அப்படின்னு ஒரு பாட்டு பாடிக்கறாங்க. சன் டிவிக்கு மட்டும் மற்றொமொரு வெற்றிப் படம். எங்களுக்கு வழக்கம் போல, ஒரு நாள் தூக்கம் + 100 ரூவா காலி. எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் பார்க்கராணுங்கடா, இவனுங்க ரொம்ப நல்லவங்கனு நீங்க சொல்றது எனக்கு காதுல விழுது. என்ன செய்ய.

மீண்டும், மீண்டு வந்து, அடுத்து ஒரு படத்த பார்த்து, பதிவறேன். வர்ட்டா....


அய்யயோ, ஸாரி, ஸ்டில் மாறிடிச்சு. விடுங்க, எல்லாம் ஒண்ணுதான்.

Saturday, June 20, 2009

Tag எடுக்கலியோ Tagu...

நம்ம வாணி மேடம் ஒரு tag அனுப்பிருக்காங்க. Full பீட்டர். நமக்கும் லைட்டா பீட்டர் விட தெரியும்னு இத மாதிரி சமயங்கள்ல தான் comicalaa காமிக்க முடியும். எனவே, இதோ அந்த பெ.................................ரி........................ய்....................ய.................tag.
(சில கேள்விகளுக்கு மட்டும், என்னோட ஆதங்கம்/mindvoice/comments include பண்ணிருக்கேன். கண்டுக்காதீங்க)

Q: When you looked at yourself in the mirror today, what was the first thing you thought?
A:must have a shave asap
(மத்தபடி எப்பவும் பீல் பண்றா மாதிரி, இதெல்லாம் ஒரு மூஞ்சு and so on self sympathy dialogues)

Q: How much cash do you have in your wallet right now?
A:122rs

Q: What’s a word that rhymes with DOOR?
A: more

Q: What is your favorite ring tone on your phone?
A: sax prelude in "Vaan Nilaa" song from Kadhal virus

Q: Who is the 4th person on your missed call list on your cell phone?
A: My அம்மா (!!!!)

Q: What are you wearing right now?
A: trousers and vest

Q: Do you label yourself?
A: NO

Q: Name the brand of the shoes you’re currently own?
A:No shoes

Q: Bright or Dark Room?
A:Me sitting brightly in Dark room

Q: What do you think about the person who took this survey before you?

A:Good blogger. Nice narration. the wordpress template sucks though.

Q: What does your watch look like?
A:no watch (என் கை sizekku watch போட்டா, watchla கை போட்டா மாதிரி இருக்கும்)

Q: What were you doing at midnight last night?
A: Playing SIMS3

Q: What did your last text message you received on your cell say?
A: YA

Q: What’s a word that you say a lot?
A: dunno- dont tak this dunno as the word i say a lot. i really dunno.

Q: Who told you he/she loved you last? (Please exclude spouse , family, children)
A: NONE so far (ஆமாம், இது வேற)

Q: Last furry thing you touched?
A: my hair?? (come under furry???)

Q: Favorite age you have been so far?
A:from 5-18

Q: What was the last thing you said to someone?
A:match பாக்கல??? (to my அண்ணா)

Q: The last song you listened to?
A: "உன் மேல ஆசதான்" frm ஆயிரத்தில் ஒருவன்

Q: Where did you live in 1987?
A: hospital and home, cause born on last month of the year. so have to tak hospital in to acc.

Q: Are you jealous of anyone?
A: LOT

Q: Is anyone jealous of you?
A: சத்தியமா இல்லை

Q: Name three things that you have on you at all times?
A:Mobile, mobile cover, bike key

Q: What’s your favorite town/city?
A: Madras

Q: When was the last time you wrote a letter to someone on paper and mailed it?
A: I think some 6years back, reply to a akka met in a camp.

Q: Can you change the oil on a car?
A: car???

Q: Your first love/big crush: what is the last thing you heard about him/her?
A: let me know her name first...

Q: Does anything hurt on your body right now?
A: none but sore throat and cold disturbs...

Q: What is your current desktop picture?
A: Aqueduct in Segovia, Spain (wiki wallpaper)

Q: Have you been burnt by love?
A: ஏன் இப்படி வயத்தெரிச்சல கெளப்பறீங்க.
No Love, No failure....

Now iam passing this to Swathi, My Kid Brother and Poorna...
Thanks to Vani for Passing the tag :)

Monday, June 15, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -1

நம்ம சிகாமணிக்கு, தமிழ் சினிமான்னாலே aversion. நல்ல கதையம்சம் இருக்குற படம் வருதேன்னு சொன்னா கூட, "என்ன நூத்துல ஒரு படம். அதாவது, நூறு shit வந்தா, ஒரு Hit" அவ்வளவுதான்னு சொல்லுவான். அதுவும் நம்மூரு படத்துல வர காதல் காட்சிகள்னா, அவன் வாய்லேர்ந்து கலர் கலரா கெட்ட வார்த்தைகள் வரும். "*#@!த பாட்டா எழுதறானுங்க, எழுதுற lyrics எல்லாம் !@#று மாதிரி இருக்கு. மேட்டர் படத்துல எல்லாத்தையும் காமிக்கரானுங்க, ஆனா இவனுங்க எழுதுறது அத விட வக்கிரமா யோசிக்க வைக்கும்"னு பொங்கி எழுந்துருவான்.

ஒரு நாள், வழக்கம் போல இத மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தவன நிறுத்தி "நீ எவ்வளவு சொன்னாலும், இத மாதிரி சின்னபுள்ளத்தனமான படம் எடுக்கவும் கொஞ்சம் அறிவு வேணும். எங்க, உன்னால முடியுமா?? நீ விமர்சனம் மட்டும்தான் பண்ண லாயக்கு"னு சொன்னேன். "ஆமாம், பெரிய அறிவு. மண்டைல மசாலான்னு சொன்னத உன் directors எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு, ஒரே மொக்க மசாலா படமா தள்ளிகிட்டு இருக்காங்க. நான் அவங்கள விட மோசமா யோசிச்சு ஒரு கதை சொல்லட்டா??"னு கேட்க, நான் சரின்னு சொன்னேன் ... அவன் ஆரம்பிச்சான்...

"அதாவது, இது ஒரு மசாலா படத்துக்கான கதை. படத்தோட ஹீரோ பேரு சைதாபேட்டை, படத்தோட பேரும் சைதாபேட்டை. நம்ம, ஹீரோ, கலைஞர் ஆர்ச் பக்கத்துல டீ கடை வெச்சிருக்காரு.மொத சீனே மோதலோட ஆரம்பிக்குது ரொம்ப நாளா கடன் சொல்லி டீ குடிக்கிற, அந்த பேட்டை தாதா ஆளுங்கள அடிச்சு வெரட்டுராறு. கேள்வி கேட்க வந்த தாதாவையும் பின்னி பெடலேடுக்குராறு. அடிச்சு முடிசித்ட், "டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"னு மொக்கையா பன்ச் dialogue விட்டு,

//சைதாபேட்டை சைதாபேட்டை சைதாபேட்டை,
ஒரு ஆத்து ஆத்துனா, நீ கண்ணம்மாபேட்டை//னு intro சாங் பாடுரார்.

ஒரு நாள் அந்த பக்கமா வர நம்ம ஹீரோயின், ஹீரோ டீ ஆத்துற ஸ்டைல பார்த்து மயங்கி, ஊட்டில போய், "டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க. இவங்க கருமம் புடிச்ச லவ்வு, கன்னாபின்னான்னு develop ஆவுது. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ, அந்த ஏரியா counsilor மாதிரி, ஏரியா பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைக்கறார். அதே சமயத்துல, லவ்வே புடிக்காத ஹீரோயினோட அண்ணன், ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். இதுல பெரிய ஹீரோ யாரவது நடிச்சாக்கா, அவங்களுக்கு ஏத்த மாதிரி,
"மழைல மனுஷன்தான் நனைவான், புயல் நனையாது"னு பன்ச் டயலாக் எதையாவதோ சேர்த்துக்கலாம். எப்பூடி????"

சொல்லி முடிச்ச சிகாமாணிய ஏற இறங்க பாத்துட்டு, "நீ தமிழ் சினிமாவால இவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன்னு தெரியாம போச்சுடா. இந்த ஒரு கதை தான் யோசிச்சியா, இல்லை இன்னும் இருக்கா??"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஆமாம் இதுக்கெல்லாம் உட்கார்ந்து யோசிக்கறாங்க, இன்னொரு கதை சொல்றேன் கேட்கறியா"னு ஆரம்பிச்சான். அந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான கதைய எப்படிதான் யோசிச்சானோன்னு இருக்கு........

......will continue

Monday, June 1, 2009

Each Action...

நானும் ரமேஷ் அண்ணாவும் படம் போகலாம்னு பிளான் போட்டவுடனே எனக்கு தோணிய படம், newtonin மூன்றாம் விதி. ஏன்னா, படத்துக்கான review பல இடங்கள்ல நல்லாவே எழுதியிருந்தாங்க and எங்க வீட்ல இருக்கறவங்களும் பார்த்துட்டு, நல்ல இருக்குன்னே சொன்னாங்க. ஆனா, ரமேஷ் அண்ணாவுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. "s.j.சூர்யா மூஞ்ச அவ்வளவு பெரிய screenla பார்க்க முடியாதுடா, நீ angels and demons book பண்ணு, பார்க்கலாம்"னு சொன்னாரு. ஆனா, நான் என்னமோ படத்தோட producer மாதிரி, "அண்ணா, இல்லை, படம் சூப்பரா இருக்காம், s.j.சூர்யா ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்கானாம், அதுவும் அந்த வில்லன் ரோல் பண்ணவன் செம்மையா நடிச்சிருக்கானாம், நல்லாதான் இருக்கும், வாங்க போலாம்"னு சொன்னேன்.

பசங்க படத்த அவர் already பார்த்துவிட்டதால, வேற பெரிய சாய்ஸ் எதுவும் இல்லை. So, ok சொன்னாரு. நான் என் அக்கா பையன அனுப்பி, டிக்கெட் book பண்ண சொன்னேன். பக்கத்துல இருக்குற எல்லா முக்கியமான தியேட்டர்லயும் அந்த படத்தை எடுத்துட்டதால (!!!!), வேற வழியில்லாம, சாந்தி தியேட்டர்ல புக் பண்ண சொன்னேன். அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணி, "மாமா, டிக்கெட் புக் பண்ணிட்டேன், இங்க வேற யாருமே இல்லை. நான் மட்டும்தான் counterla டிக்கெட் ரிசர்வ் பண்றேன்"னு சொன்னான். இங்க ஒரு பல்பு வெடிச்சாலும், அத சமாளிச்சு, "ஓகே, தேங்க்ஸ், வந்து சேரு"னு சொல்லி phonea வெச்சேன்.

பத்து மணிக்கு தியேட்டர் உள்ள போறோம், யாருமே இல்லை. ஒரே ஒரு ஆள், வெளிய உட்கார்ந்துகிட்டு இருந்தார். உள்ள பொய் உட்கார்ந்த அப்பறம், இன்னும் ஒரு நாலு பேர் வந்தாங்க. நான், ரமேஷ் அண்ணாகிட்ட, "படம் ரொம்ப த்ரில்லிங்கா, பயம்ம்மா இருக்கும் போல"னு சொல்ல, அவரோ, "பாவம், s.j.சூர்யாவுக்கு இந்த நிலைமை வந்துருக்கக் கூடாது. வந்து பார்த்தா ரொம்ப பீல் பண்ணுவான்". ஒரு வழியா படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கெல்லாம், வேற படத்துக்கு டிக்கெட் கிடைக்காத சில ஆட்கள், இங்க வந்து சேர்ந்தாங்க. Reasonable crowd சேர்ந்தது.

படத்தைப் பற்றி சொல்லனும்னா, இன்னும் நல்லா மார்க்கெட்டிங் பண்ணி, கொஞ்சம் star value இருந்திருந்தா, நிஜமாவே ஒரு வெற்றிப் படமா இருந்திருக்கும். s.j.சூர்யா வழக்கம் போல இல்லாம, கொஞ்சம் நல்லாவே நடிச்சிருந்தார். அந்த heroine, ஐயோ ராமா, சகிக்கல. நடிப்புன்னு சொல்லி அவங்க குடுக்கற reactions, சீரியஸ்ஸான இடத்துலயும் சிரிப்புதான் வருது. வழக்கமான படங்கள் போல இல்லாம, வில்லனுக்கும் இதுல equal importance குடுத்து, நல்லாவே எடுத்துருக்காங்க. பாட்டு இல்லேன்னா, படம் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஆனாலும், கடைசில, நான் கொடுத்த வாக்கு பலிச்சு, ரமேஷ் அண்ணாவுக்கே படம் பிடிச்சிருந்தது. எனக்கும்தான்.

p.s. இன்னைக்கு சத்யம்ல பசங்க படமும் பார்த்துட்டேன். ரொம்ப ஜாலியான, அழகான படம். கொஞ்சம் "little rascals" படத்தோட ஞாபகம் வந்தாலும், ரொம்ப நல்லா இருந்துச்சு. எல்லாரும் அவசியம் பாருங்க. எல்லாரும் படத்த தேவையான அளவு அலசியதால், இங்க p.s.ல மட்டும்.

சே...ஒழுங்கா, ராஜாதி ராஜ படத்துல கமிட் ஆயிருந்தா,
நமக்கேத்த பிட்டு ஏதாவது தேறியிருக்கும்....