Showing posts with label kaki's talkies. Show all posts
Showing posts with label kaki's talkies. Show all posts

Saturday, August 16, 2014

மற்றும் பல - 16/08/2014


Writers Block, சோம்பேறித்தனம், மெத்தனம் இதில் எது என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தோன்றவில்லை, அதனால் எழுதவில்லை. இதுவே காரணம்.
ஏன் தோன்றவில்லை?
ஒரு வேளை நான் மந்தமாகிவிட்டேனோ என்னவோ. என் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது ஏதோ வாழ்ந்து கெட்ட குடும்பம் போல தோன்றுகிறது. முன்பெல்லாம் அவ்வபோது ஏதோ ஒன்றை எழுதி வந்துள்ளேன். ஆரம்பித்த வருடத்தில் 59, அடுத்த வருடம் 58, அடுத்து 36 என பதிவுகளின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 2+ வருடங்களாக நான் எழுதிய பதிவுகள் மொத்தமே 10 தான். எழுதும் ஆர்வம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது இங்கே எதிரொலிப்பது இல்லை. இனிமேல் நமக்கு முன்பு போல் எழுதவே வராதோ என்று கூட பயம் வருகிறது. மேலும் மேலும் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வழக்கம் போல எழுதாமல் விடவேண்டாம் என்பதால், இதோ. எங்காவது உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

-----------------------------------------------------------------------


பல நாட்கள் கழித்து ஒரு முழுமையான மாஸ் பட அனுபவத்தை வேலையில்ல பட்டதாரி தந்தது. என் நினைவுக்கு எட்டிய வரை, கடைசியாக தூள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த உணர்வு இருந்தது. தேவியில், மொத்த அரங்கமே கொண்டாடிய படம் அது. அந்த அனுபவத்திற்காகவே அங்கு மேலும் இரண்டு முறை பார்த்தேன். அப்படித்தான் இருந்தது வே. ப. படத்தின் பாடல்கள் வந்த நாள் முதல் ஒட்டிக்கொண்டு விட்டது. படமும் அப்படியே. இன்று திரைப்படம் என் போன்ற ரசிகர்களினால் 50 கோடியை தாண்டியுள்ளது. harmless entertainment. ஜெயிப்பதில் மகிழ்ச்சியே. முக்கியமான ஒரு சம்பவம். படத்தில் ஒரு கெட்ட வார்த்தை வரும்போது, புரிந்து கொண்டு, நானும், தியேட்டரில் மிகச் சிலருமே கைதட்டிய போது, இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகிவிடும் என்று தோன்றியது. 


-----------------------------------------------------------------------


எப்படி வே.ப பார்க்கும்போது தூள் நினைவிற்கு வந்ததோ, அதே போல ஜிகர்தண்டா பார்க்கும்போது சூது கவ்வும் நினைவிற்கு வந்தது. இரண்டு படங்களுமே முற்றிலும் புதுமையான ஒரு அனுபவத்தைத் அரங்கில் இருப்பவர்களுக்கு தந்தன. தமிழ் திரைக்கு புதிய விஷயங்களைத் தந்தன. டேர்டி கார்னிவல் படத்தின் காப்பி என வதந்தி உலவியதால், முதலிலேயே அந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஆனால் ஜிகர்தண்டா பார்க்குபோது அப்படி எந்த ஒரு அம்சமும் ஒத்துப் போகவில்லை. படம் தந்த பிரம்மிப்பில் பல விஷயங்களை சரியாக கவனிக்கவில்லை. மீண்டும் அரங்கில் பார்க்க வேண்டும். 


-----------------------------------------------------------------------


கடந்த சில மாதங்களில் வெளியான எந்தப் பாடல்களும் சகிக்கவில்லையே. என்ன காரணம்? 


-----------------------------------------------------------------------


 அஞ்சான் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் கிடைத்தலும் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். ட்ரெய்லர் தந்த பயம் அப்படி. இன்று படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பிறகு, "கடவுள் இருக்கான் குமாரு" என்று தோன்றியது. ஏன் இந்தப் படம் ஓடக் கூடாது என நினைத்தேன் என்று தெரியவில்லை. படத்தின் விளம்பரங்களிலிருந்தே ஒரு விதமான திமிர் தெரிந்தது. அதீதமான நம்பிக்கை அல்ல. திமிர் மட்டுமே. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இனி நமது கோலிவுட் மகான்கள் இந்த கமெர்ஷியல் கடுப்புகளைக் கட்டி அழ மாட்டார்கள் என ரசிகர்கள் சிலர் நினைக்கின்றனர். இந்த ஊரில் தான் குருவி, வில்லு, சுறா, ஜில்லா, பட்டத்து யானை, அலெக்ஸ் பாண்டியன், ஏகன், பழனி போன்ற படங்களை எடுத்து, ஊமைக் குத்தாக வாங்கி, வைத்தியம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களா அஞ்சானிலிருந்து தெரிந்து கொள்வார்கள்? ஆயிரம் ஜிகர்தண்டா வந்தாலும் சிலர், அப்படித்தான். 


-----------------------------------------------------------------------


ராஜாவின் நல்ல பாடல்களைப் பகிர்ந்து பல காலம் ஆகிறது. இந்தப் பாடல் தெலுங்கில் 'மரண மிருதங்கம்' என்ற திரைப்படத்திலிருந்து. பாடலில் ஏதோ ஒரு mystery இருப்பது போல தோன்றுகிறது. அதுவே பாடலை (எனக்கு) சுவாரசியமாக்குகிறது. பொதுவாக தெலுங்கு பாடல்களை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்து விட்டு பாடல் பிடிக்காம போய்விட்டால்? இதையும் அப்படியே. பி. சுசீலா, எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல், இதோ... 






Monday, May 2, 2011

SOURCE CODE - ப.வி

கொஞ்சம் குழப்பமான, யோசிக்க வைக்கற படங்கள்னா எனக்கு ஆர்வம் ஜாஸ்தியாகிடும். இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும்போதே, படத்தை பார்க்கணும்னு  முடிவு பண்ணிட்டேன். எதிர்பார்த்த அளவு சூப்பரா இல்லைனாலும், கொடுத்த காசுக்கு மோசமில்லாம இருந்துச்சு.

ஹீரோ ஸ்டீவன்ஸ் ஒரு ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, அவருக்கு முன்னாடி ஒரு மிடில் ஏஜ் பிகர் உட்கார்ந்துகிட்டு “தாங்கஸ் ஷான், உன் அட்வைஸ நான் எடுத்துகிட்டேன்”னு சொல்றா, ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. குழப்பத்துல, அந்த ட்ரைன் சூழல்ல நடக்கற சில விஷயங்கள நோட்டம் விட்டுட்டே பாத்ரூம் போறாரு. கண்ணாடில வேற உருவம் தெரியுது. மறுபடியும் மண்டை காஞ்சு போய் வெளிய வராரு, அந்த பிகர் நிக்குது, பக்கத்து ட்ராக்ல இன்னொரு ட்ரைன் போகுது, பாம் வெடிச்சு, ரெண்டு ட்ரைனும் காலி. இப்போ மறுபடியும் ஹீரோ ஸ்டீவன்ஸ் அதே ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, எல்லா விஷயமும் மறுபடி நடக்குது. இதெல்லாம் என்னா மேட்டர்னு குழப்பத்தோட ஹீரோ கண்டுபிடிக்கறதை, சைன்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து பதில் சொல்லிருக்காங்க.

படம், கிராபிக்ஸ், எடிட்டிங், காமெரானு டெக்னிக்கலாவும் சூப்பர், நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நம்ம ரஸல் பீட்டர்ஸும் ஒரு சின்ன ரோல் பண்ணிருக்காரு. ஹீரோயின் கொஞ்சம் முத்தின கேஸ்தான், இருந்தாலும் இந்த படத்துக்கு பரவாயில்லை. ஹீரோ ஜேக், ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு விஷயம் தெரியவந்து தெளிவாகறதை, நல்லா வேறுபடுத்தி நடிச்சிருக்காரு. இந்த மாதிரி ஜானர் படங்கள் விரும்பறவங்க, கண்டிப்பா பார்க்கலாம். இன்ஸெப்ஷன் அளவு இல்லைனாலும், நல்லாதான் இருக்கு. படம் புரியாதவங்க பின்னூட்டத்துல கேளுங்க, விளக்கறேன் :)

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Friday, December 31, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2010

போன வருஷங்கள்ல நான் எழுதின எண்ணிப்பார்த்தேன் பதிவுகளுக்கு மக்கள் கொடுத்த  அமோக (!!!!) வரவேற்ப்பை முன்னிட்டு. இந்த வருஷக் கடைசியிலும் வழக்கம் போல, 2010ல் எனக்கு பிடிச்ச, படங்கள் + பாடல்கள் பற்றிய ஒரு பதிவு... இந்தப் படங்கள் பிடிக்க பெரிய காரணங்கள் என்ன இருந்திடப் போகுது. அதனால, ரொம்ப நீட்டி முழக்காம, பெயர்களையும், சில படங்களுக்கு நான் எழுதின விமர்சனங்களோட லிங்கையும் கொடுத்திருக்கேன்.

பிடித்த படங்கள்
  • ஆயிரத்தில் ஒருவன்
    நிறைய பேர் வறுத்தெடுத்தாலும், இந்தப் படம் நல்ல அனுபவம். ரசிகர்கள்னு பொதுவா சொல்ல முடியல, ஆனா படத்துக்கான மனநிலைய எனக்கு சரியா செட் பண்ணிச்சு... விமர்சனம் --> இங்க முதல் பத்தியில.
  • கோவா
    மறுபடியும், ஊர் ஆயிரம் சொன்னாலும், எனக்கும், என் நண்பர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம். செம்ம கலாட்டா... விமர்சனம் --> இங்க
  • விண்ணைதாண்டி வருவாயா
    மூணு தடவை தியேட்டர்லையே பாத்தேன். இதுக்கு மேல எதாவது சொல்லணுமா?? சிம்பு பேர், கார்த்திக்னு இருந்தது முக்கியமான காரணம்...
  • சிங்கம்
    இந்த வருஷத்தோட சிறந்த மாஸ்னு சொல்லலாம். எந்திரனைவிட செம்ம மாஸ்.
  • பாஸ் என்கிற பாஸ்கரன்
    நோ நான்சென்ஸ் படம்னு சொல்லலாம். ரொம்ப light-hearted, feel good படம். விமர்சனம் -->இங்க ஆறாவது பத்தியில ரெண்டே லைன்..
  • எந்திரன்
    தலைவரோட மேஹ்........ ப்ளாக் ஷீப் சீனுக்காகவே ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன். இன்னொருமுறை பார்க்கலாமான்னு யோசிக்கறேன். ஷங்கர் என்கிற ஒற்றை ஆளோட சாதனை. மேக்கிங் பார்த்த அப்பறம், இன்னமும் பிடிச்சுது... விமர்சனம் --> இங்க
உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
  • இன்ஸெப்ஷன்
    (இதை பத்தி நான் எழுத்திய சில உரைநடை விளக்கப் பதிவுகள்
    இங்க --> ஒண்ணு - இன்னொன்னு - இன்ன்ன்னொன்னு - கடைசியா ஒண்ணு)
  • ஹாரி பாட்டர் 7
    நான் பாட்டர் fan. அதை விட எம்மா வாட்ஸன் fan. இதுக்கு மேலையுமா காரணங்கள் தேவை??
  • UnStoppable
    படம் நல்லா விறு விறுனு இருக்குனு சொல்லுவாங்களே. அப்படி இருந்துச்சு...
  • டாய் ஸ்டோரி 3 - விமர்சனம் --> இங்க
  • ஷட்டர் ஐலாண்ட்
  • கராதே கிட்
  • How to Train your Dragon
  • Kick - Ass
  • Easy A .. விமர்சனம் --> இங்க  ரெண்டாவது பத்தி
  • The Social Network.. விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தி
மொக்கை கொடுத்த/வாங்கிய படங்கள்
  • தமிழ் படம் - விமர்சனம் ---> இங்க மூணாவது பத்தியில.
  • கச்சேரி ஆரம்பம் - விமர்சனம் --> இங்க
  • பையா - விமர்சனம் --> இங்க
  • ராவணன் - விமர்சனம் --> இங்க
  • இனிது இனிது
    ஒரிஜினல்ல இருந்த எளிமை, இதுல இல்லாதது பெரிய குறை. பெருசா ஒன்றமுடியலை.
  • நந்தலாலா
    மிஷ்கினின் திமிருக்கும், கர்வத்துக்கும் கிடைச்ச சரியான் அடி. ரொம்ப ஸ்லோ.
    நான் பெரிய அறிவாளி இல்லை. அதனால் கூட இந்தப் படம் பிடிக்காம இருந்திருக்கலாம்...
  • ரத்த சரித்திரம்
    ரத்தம் மட்டும்தான் இருந்தது.. சரித்தரம் ஒண்ணுத்தையும் காணோம்.
  • ஈசன் - விமர்சனம் --> இங்க  முதல் பத்தியில
  • Owl - Guardian - விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தியில
  • அவதார்
    மொக்கை வியட்னாம் காலனி கதைய, ரீ மாடல் பண்ணி கொடுத்து ஊரை ஏமாத்திட்டாங்க். டெக்னிகலா நிஜமாவே மிரட்டலான படம். ஆனா கதை திரைக்கதையெல்லாம் அப்படியே ஒரு மொக்கை தமிழ் படம் மாதிரி இருந்த்து எனக்கு பெரிய disappointment.
  • மன்மதன் அம்பு - விமர்சனம் ----> இங்க கடைசி பத்தியில
ரசித்த பாடல்கள்
கொஞ்சம் பெரிய லிஸ்டு. ஓவரா வர்ணிக்காம பெயர்களை மட்டும் எழுதறேன்...
  • ஆரோமலே (கலெக்டர்ஸ் எடிஷன்ல இருக்கற ஸ்ரேயா கோஷல் வெர்ஷனும் சேர்த்து) - விண்ணைத்தாண்டி வருவாயா
  •  ஹே துஷ்யந்தா - அசல்
  • இது வரை -கோவா
  •  என் காதல் சொல்ல - பையா
  • தாக்குதே - பாணா காத்தாடி
  • அடடா மழைடா - பையா
  • அம்மா தல்லே - புலி (தெலுங்கு)
  • பெஹெனே தே - ராவண் (இந்தி)
  • கிளிமஞ்சாரோ - எந்திரன்
  • ஊத்து தண்ணி - மகிழ்ச்சி
  • உன்னை கண் தேடுதே - வ கு.க
  • அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
  • இமைத்தூதனே - இளைஞன்
  • நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
  • Love the Way you Lie - Eminem ft Rihaana - Recovery
விட்டுப்போனவை
  • என் நெஞ்சில் - பாணா காத்தாடி
  • ஏழேழு தலைமுறைக்கும் - கோவா
  • சிரிக்கிறேன் - பலே பாண்டியா
  • Dhochey, பவர் ஸ்டார் - புலி (தெலுங்கு)
  • அரிமா அரிமா - எந்திரன் - அருமையான picturization.
  • உச்சுக் கொட்ட - மகிழ்ச்சி
  • உஸ்ஸுமலரசே - உத்தம்புத்திரன்
  • காதல் வந்தாலே - சிங்கம்
  • தகிடுதத்தோம் - மன்மதன் அம்பு
  • தோழா வானம் - இளைஞன்
  • நாங்கை - எங்கேயும் காதல்
பொதுவா நான் சிறந்த படம், பாட்டுனு அவார்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, இந்த வருஷம் கொடுக்கலாமோன்னு தோணுது... அதனால,
என்னை பொறுத்த வரைக்கும், இந்த வருஷத்தோட
சிறந்த பாடல் கோவா படத்துல வர இது வரை,
சிறந்த படம் - விண்ணைத்தாண்டி வருவாயா...
சிறந்த இசையமைப்பாளர் - யுவன்








எல்லாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Friday, July 2, 2010

டாய் ஸ்டோரி 3 (பத்தி விமர்சனம்)

மு.கு. படத்தோட கதையை பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். சரின்னா தொடர்ந்து படிங்க...

பிக்ஸாரின் ஒவ்வொரு படம் வரும்போதும் கேட்கற வழக்கமான கேள்விதான் இந்தப் படம் முடிஞ்ச அப்பறமும் கேட்கத் தோணுது.

"இத விட அருமையான படம் எப்படி கொடுக்க முடியும்???"

இன்னொரு முறை, அனிமேஷன் படங்கள் எடுக்கறதுல, அவங்களுக்கு நிகர் அவங்களேதான்னு நிரூபிச்சுருக்காங்க. கதைக்களம், கதையோட ஓட்டம்னு  எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நம்மால யூகிக்க முடியாத மாதிரி இருக்கு. ஒரு வினாடி கூட வீணடிக்காம, மக்களோட மூளைக்கும், மனசுக்கும், ஒரே சமயத்துல வேலை கொடுத்து பிரமாதமா, ரொம்பத் தெளிவா திரைக்கதை அமைச்சிருக்காங்க. ரொம்ப நுணுக்கமான விஷயங்கள்லேர்ந்து, பிரம்மாண்டமான விஷயங்கள் வரைக்கும், செதுக்கிருக்காங்க. அந்த உழைப்பு, படத்தோட ஒவ்வொரு இடத்துலையும் தெரியுது. ஒரே ஒரு பிரச்னை என்னன்னா, இந்த படத்துக்கு 3d பெரிய வித்தியாசத்தை கொடுத்திடலை. ஏதொ சம்பிரதாயத்துக்கு 3dனு ரிலீஸ் பண்ணிருப்பாங்க போல. ஆனா இதை விடுங்க. இந்த மாதிரி படங்கள் வர்றதே ரொம்ப கஷ்டம். மொழி புரியலைனாலும் கண்டிப்பா பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.   

Tuesday, June 22, 2010

ராவணன் பற்றி, ரெண்டே பத்தி...

வழக்கம் போல, பதிவுலகத்திற்கு இந்த வாரம் நல்ல தீனி. அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தா, மகா சொதப்பல். கதை கருமம் எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். அதனால நேரா விஷயத்துக்கு வரேன். இந்த characterization characterization அப்படின்னு ஒண்ணு சொல்லுவாங்க. அதுல தான் பெரிய சிக்கலே. மக்களால, யாரு பக்கம் நியாயம் இருக்குன்னு முடிவுக்கே வர முடியல. விக்ரமுக்கு, ஐஸ பார்த்தவுடனே லவ்வு வந்துருதா?? ஏன்னா, முதல்லையே உசுரே போகுதே பாட்டு வரும். ஒரு எழவும் வெளங்கல. போலீஸ் எதனால விக்ரம அவ்வளவு தீவிரமா தேடறாங்கன்னு காரணமும் சரியா விளங்கல. (அந்த ரெண்டு லைன் வாய்ஸ் ஓவர் போதும், மக்களே புரிஞ்சிக்கணும்னு டைரக்டர் நினைச்சிருப்பாரோ). விக்ரம், மணிரத்னம் படத்துல நடிக்கரோம்னு பிரம்மிப்புலையே நடிச்சிருப்பாருன்னு நினைக்கறேன்.

படத்துல யார் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. ஆனா, மோசமான திரைக்கதை + குழப்பமான characterization படத்தை காலி பண்ணிடுச்சு. வழக்கம் போல, இந்த மணிரத்னம் படமும், டெக்னிகலா சூப்பர். இருந்தும், பல காட்சிகள்ல, ஐஸ்'வரியா'ராய கொஞ்சம் 'கமர்ஷியலா' காமிச்சிருக்க வேண்டாம். ஏதொ, அத நம்பியே படம் எடுத்தா மாதிரி இருக்கு. ஹிட்டான பாட்டேல்லாம் பாதி பாதி வெட்டி, காலி பண்ணிட்டாங்க. கோடு போட்டா + கெடா கெடா பாடல்கள் மட்டும் ஓகே. ரீ ரிக்கார்டிங்கும் அவ்வளவு சிறப்பா இல்லை. சில பல அறிவு ஜீவிகள், மணிரத்னம் சொல்லாத விஷயங்கள கூட புரிஞ்சுகிட்டு, படம் ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க. ஆனா, என்னை மாதிரி பாமர மக்களுக்கு, பெரிய let down. பத்துத் தலைல ஒண்ணு கூட நல்லா இல்லை. விக்ரம் சொல்றா மாதிரி, படம், டன் டன் டன் டண்டணக்கா டன் டன் டன்....    

ஐயையோ, இந்த சீன படத்துல எடுக்கவே இல்லையே...     

Wednesday, April 7, 2010

ஒரு பத்தி விமர்சனம் - பையா

வர தமிழ் படங்கள் நிறைய, விமர்சனம் பண்ற அளவுக்கு கூட தேற மாட்டேங்குது. அதானால ஒண்ணு முடிவு பண்ணிருக்கேன். மொக்கை படத்துக்கு, ஒரு பத்தி விமர்சனம். சுமாரான படங்களுக்கு (முடிஞ்சா) ரெண்டு பத்தி, நல்ல - சூப்பர் படங்களுக்கு ரெண்டு பத்தி மேல, விமர்சனம் எழுதலாம்னு எண்ணம். மொக்கை படத்துக்கு ஒரு பத்தி விமர்சனமே ஓவர்தான். இருந்தாலும், மக்களைக் காப்பாற்ற, ஒரு சேவையா (?!?!?!?!) அதை செய்யறேன்.. 

பையானு ஒரு படம். நண்பர்களோட அன்புத்தொல்லைல போய் பார்த்தேன். படமும், கொஞ்சம் அன்பு, கொஞ்சம் தொல்லைன்னு இருந்துச்சு. கொஞ்சம் கில்லி, கொஞ்சம் ரன், கொஞ்சம் சண்டைகோழினு கலந்து கட்டி ஒரு படம். இந்த படம் ஓடிச்சுன்னா, அதுக்கு பெரிய காரணம், யுவன் ஷங்கர் ராஜா. குறிப்பிட்டு சொல்லனும்னா, காமெரா, எடிட்டிங் நல்லா இருக்கு. கார்த்தி இன்னும் ஹாங்ஓவர்ல இருக்கார். சீக்கரமா வெளிய வாங்க சார். தமன்னா, இந்த படத்துலயும் நடிக்க முயற்சி பண்றாங்க. பாவம். வேற யாருக்கும் படத்துல அவ்வளவு பெரிய வேலை இல்லை. இண்டர்நேஷனல் மாடல், மிலிந்த் சோமனோட நிலைமை, அந்தோ பரிதாபம்.

படத்துல ரொம்ப வித்தியாசமா, ஒரே ஒரு விஷயம் பண்ணிருக்காங்க. எப்பவும் நம்ம ஹீரோக்கள் தான் மச்சம் வெச்சிகிட்டு, வில்லன்கள் கிட்டேர்ந்து தப்பிபாங்க. இந்த படத்தோட ஒரு காட்சில, ஒரு கார் மச்சம் வெச்சிகிட்டு, வில்லன்களுக்கு பெப்பே காட்டுது. அவ்வளவே. இதற்கு மேல் எழுத மனம் வரவில்லை. படம் போர் அடிக்கலை. அதே சமயம், புதுசா ஒரு மண்ணும் இல்லை. நெறைய காசு இருந்தா சத்யம்ல பாருங்க. இல்லைனா ஏதாவது சின்ன, மொக்கை தியேட்டர்ல பாருங்க.

p.s. மதராசபட்டினம் ட்ரைலர் நல்லா இருக்கு. பாத்தீங்களா??? 

அம்மணி ரியாக்சன பாருங்க...குளிச்சீங்களா பாஸ்?? 

Monday, March 29, 2010

கச்சேரி ஆரம்பம் - போலிகள் ஜாக்கிரதை...

நீங்க இன்னுமா திருந்தலைன்னு மக்களை கேள்வி கேட்க வெக்கற, புரட்சிகரமான படம் தான் இந்த கச்சேரி ஆரம்பம். இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னால நடந்த ஒரு விஷயத்தோட, சின்ன flashback...

இடம்: ஆர். பி. சௌத்ரி ஆபிஸ்..
இருப்பவர்கள்: இயக்குனர் திரைவாணன், சௌத்ரி, ஜீவா..
சௌ: இப்போ என்ன செய்ய. நாம எடுத்த படமும், இப்போ வந்துருக்குற படமும் ஒரே மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பா ஹிட். இத பாத்தவங்க, நம்ம படத்தை மதிப்பாங்களா.. ஒழுங்கா விக்ரமன வெச்சு, காரைக்குடில ஒரே ஒரு வீட்ல ஒரு full படத்தை, ல ல லா ரீரிக்கார்டிங் போட்டு,  ஹிட் பண்ணிருப்பேன்..ச்சே.. என் காசெல்லாம் இப்படியா போகணும்...

ஜி: அப்பா, சும்மா பொலம்பாத. நானும் எப்போ மாஸ் ஹீரோவா ஆகறது. இந்த டைரக்டர் விஜய்க்கு சொல்லிருந்த கதைய, கையையும் காலயும் புடிச்சு, நான் கேட்டு, ஓகே பண்ணி படத்தை எடுத்தா, இப்போ இப்படி ஆகிடுச்சு. மாத்து வழி யோசிப்பியா, இப்படி பேசுறியே..

தி: சார், நம்ம கால்குலேஷன் ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் பண்ணிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது... அதாவது துப்பாக்கில இருக்குற தோட்டா....
சௌ: டேய், நீ ஒண்ணும் பேசாத. நான் ஒரு ஐடியா சொல்றேன். அத மட்டும் செய். இந்த "தமிழ் படத்துல" எல்லா தமிழ் படத்தையும் கலாய்க்கரா மாதிரி, நம்ம படத்துலயும் கலாய்ப்போம்.

ஜி: ஐயோ அப்பா, fullaa ரீ ஷூட் பண்ணப் போறோமா??

சௌ: அது வேறயா.. சத்தியமா இந்த டைரக்டர நம்பி ரீ ஷூட் எல்லாம் பண்ண முடியாது.  10 ஷாட்ல, எப்படியாவது இந்த படத்தை, தமிழ் படம் மாதிரி spoof படமா மாத்துங்க. மவனே நீ அதை மட்டும், மறுபடியும் சொதப்பி வை, என் கம்பெனியோட எல்லா படத்தையும் மூணு தடவ, கட்டி போட்டு, பாக்க வெப்பேன்.

தி: அயயோ.. நீங்க எனக்கு ஒரு வாரம் time குடுங்க. படத்தையே மாத்தி காமிக்கறேன். இந்த மாதிரி கொடுமையான தண்டனை எல்லாம் வேண்டாம்.

ஜி: ஏதொ, எனக்கு நல்ல பேர் வந்தா சரி..

இப்படி தான் ஏதாவது நடந்திருக்கும். என்ன சொல்ல வந்தாங்கன்னு அவங்களுக்கும் புரியல, எனக்கும் புரியலை. தர மொக்கையா ஒரு படம்.ரெண்டு மூணு காட்சிகள் மட்டும் spoof படம் மாதிரி எடுத்துட்டு, மக்கள் ஏத்துப்பாங்கன்னு  நெனச்சு காமெடி பண்ணிருக்காங்க. பொறுமை போயே போச்சு. எப்போடா படம் முடியும்னு ஆகி, பக்கத்துல இருந்த ரமேஷ் அண்ணா கிட்ட "அண்ணா, என்ன அடிங்க ணா.. என்ன அடிங்க" னு புலம்பிகிட்டு இருந்தேன்..

நல்லா இருந்தா ஜீவாவும் இப்படி மொக்க ஆகிட்டார். j.d.சக்கரவர்த்தி இந்த படத்துல என்னத்தை கண்டாருனு தெர்ல. அப்படியே இம்ப்ரெஸ் ஆகி வில்லனா நடிக்க சம்மதிச்சாரம். முருகா.. வடிவேல் காமெடியும் ஒண்ணும் சிறப்பா இல்லை. மொத்தத்துல, இது ஒரு கேவலமான...... அட ச்சய், இந்த வார்த்தையே எனக்கு க்ளிஷேவா இருக்கு... தமிழ் படம் மாதிரி spoof னு சொன்னா ஏமாந்துராதீங்க. உஷாரய்யா உஷாரு.

p.s.தேவிபாலா திரையரங்கு.. சீட்டெல்லாம் மொக்கை. அந்த சின்ன தியேட்டர்க்கு 85, 95 ரூவா டிக்கெட்டெல்லாம் ஓவர். அதுவும் நடு நடுவுல, ஸ்க்ரீன் dim ஆகி dim ஆகி bright ஆச்சு. ஏசி ஒண்ணும் அவ்வளவா உரைக்கல. கவனிப்பார்களா???

அடுத்து நீங்களா?? தலைய சிலிப்பிடாதீங்க. வெட்டிருவாங்க..

Friday, February 19, 2010

மற்றும் பல... (cinema special)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் முதல் நாளே பாத்தாலும், அதற்கான விமர்சனம் எழுதனுன்னு எனக்கு தோணவே இல்லை. வழக்கம் போல நம்ம பதிவுலகத்துல, படத்தை பல பேர் கிழிச்சி தொங்க போட்டாலும், சில பேர் வாயார வாழ்த்தினாங்க. எல்லாருமே பொதுவா சொன்ன ஒரு விஷயம், இப்படி வித்தியாசமா சிந்திச்சு ஒரு படத்தை எடுத்த செல்வராகவனை பாராட்டியே ஆகணும்னு. எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்துது. படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே நம்மை படத்துக்குள்ள, டைரக்டர் எடுத்துட்டுப் போய்ட்டார். மொக்க சவுண்ட் இருக்குற சங்கம் தியேட்டர்லையே இப்படினா, சத்யம் தியேட்டர்ல இன்னும் நல்லா இருந்திருக்கும். முதல் பாதி வேகம், ரெண்டாவது பாதி சொதப்பல்னு நான் எந்த குறையும் சொல்லப் போறதில்லை. சில குறைகள் இருந்தாலும், எனக்குப் படம் மொத்தமுமே பிடிச்சிருந்துது.
------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து, மறுபடியும், நான் ரொம்பவே ரசிச்ச, கோவா பத்தி பேச வேண்டியிருக்கு. படம் பார்த்து முடிச்ச உடனே சொன்னேன், வயசான ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்காதுன்னு.  அதேமாதிரி, பல பதிவர்களுக்கு இந்த படம் பிடிக்கல. என்ன குறைய கண்டாங்கன்னு தெரியலை. படத்தை கண்டபடி கண்டம் பண்ணாங்க. வெங்கட் பிரபு, சவுந்தர்யா காசுல கூத்தடிச்சிருக்காரு, ரெண்டாவது பாதி சரியில்லை, blah blah blah. படம் பார்க்கும்போது எந்த குறையும் தெரியலை. எனக்கு மட்டும்தான் இப்படியான்னு பார்த்தா, என் நண்பர்கள் எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்துது. முக்கியமா சில பொண்ணுங்களுக்கு, சம்பத் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துது. ஒரு வேளை எங்களுக்கு படம் பார்க்க தெரியலியோ???
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் படம்னு ஒரு படம் வந்துருக்கு இல்லையா. எல்லாருமே சிலாகிச்சு, தலைல தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. நானும் ரொம்பவே எதிர்பார்த்தேன். நேத்து அந்த படத்தை பார்த்தேன். Surprisingly, என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை. முதல் பாதி நல்லா இருந்துச்சு. இரண்டாவது பாதி ரொம்ப இழுவை. அதுவும் கிளைமாக்ஸ்ல, ஒவ்வொரு தடையா தாண்டி போறது, ரொம்ப மொக்கை. கண்டிப்பா படம் மோசம் இல்லை. நிஜமாவே பாராட்டப் படவேண்டிய முயற்சி தான். எல்லாருக்கும் செம்ம தில்லுதான். ஆனா, என்னால புரண்டு புரண்டு சிரிக்க முடியலை. சில காட்சிகள் எல்லாம், கண்டிப்பா இந்த படத்தை கலாய்ச்சே ஆகணும்னு திணிச்சா மாதிரி இருக்கு. இதோட பார்ட்-2 வந்தா எப்படி இருக்குன்னு பார்க்கணும். (வரவிடுவாங்களா, நான் எடுக்கறேன்...:)
------------------------------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலேஜ் டூர் விஷயமா டெல்லி போறேன். வர ஒரு பத்து நாள் ஆகும். ஏதாவது சுவாரசியமா நடந்தா, வந்து பதிவரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்... டாட்டா..... :)

  
ஒரு வேளை நகசுத்தியோ????

Saturday, January 30, 2010

GO-வா??? Comeமா??

யப்பாடா, ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட ஒரு மேட்டரும், ரொம்ப நாள் கழிச்சு, நல்லா பொழுதை கழிக்க ஒரு படமும் கிடைச்சது. படம் அட்டகாசமா இல்லைனாலும், அமர்க்களமா கீது. வேற யார் சொன்னாலும் கேட்காதீங்க. முக்கயமா, காசு வாங்கிட்டு review எழுதற, sify மற்றும் rediff மாதிரி வெப்சைட்ஸ நம்பாதீங்க. ஏன், கேபிளாரே படம் நல்லா இல்லைன்னு சொன்னாலும் ஏத்துக்காதீங்க. உங்களுக்கு சென்னை 28, சரோஜா புடிச்சிருந்தா, இந்த படம் 198% பிடிக்கும். அந்த மீதி இரண்டு சதவீதம் எங்க போச்சுன்னு போகப் போக சொல்றேன்.

எல்லாரும் நினைச்ச, வெங்கட்பிரபு சொன்ன கதைதான். மூணு பொரம்போக்கு பசங்க, பாரின் பிகர உஷார் பண்ணி, பாரின்ல செட்டில் ஆகலாம்னு கனவோட கோவா போய், அங்க பண்ற விஷயங்கள்தான் கதை. இந்தப் படம், கதைன்னு சொல்றதை விட, சம்பவங்களோட தொகுப்புன்னு சொல்றது பொருத்தமா இருக்கும். படத்தை மூணு பகுதிகளா பிரிக்கலாம்..

1. மூணு பசங்க, அவங்க வாழ்க்கை, அவங்க கோவா போறது
2. கோவால அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி பொண்ணுங்கள கரெக்ட் பண்றது (கூடவே அந்த சம்பத்-அரவிந்த்-பிரேம்ஜி காதலும்)
3. கடைசியா, சினேஹா எபிசொட். அவங்ககிட்டேர்ந்து திருடறது.

படத்துல பல பிளஸ்களும், சில மைனஸ்களும் இருக்கு. ஆனா, படம் முடிஞ்சு வெங்கட்பிரபு பெயர் வரும்போது, ரசிகர்களோட கைத்தட்டல், அவங்க அந்த மைனஸ்கள ஒரு பொருட்டா எடுத்துக்கலைன்னு காமிக்குது. முதல் இருபது நிமிஷமும், தமிழ் படத்துக்கு வந்துட்டமோன்னு  சந்தேகப் படவைக்குது. தமிழ் சினிமால வர, கிராமத்து அத்தியாயங்களை அநியாயத்துக்கு கலாச்சிருக்காங்க. அப்பறம் வர எல்லாம் நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நகைச்சுவையான முறைல, புதுமையா ப்ரெசென்ட் பண்ணிருக்காங்க. படத்துல அங்கங்க வர சின்னச் சின்ன கிராபிக்ஸ் சூப்பர்.

நடிப்புன்னு பார்த்தா, மூணு ஹீரோவுக்குமே சரிசமமா முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், ஒண்ணு ரெண்டு இடங்கள்ல, பிரேம்ஜி ஸ்கோர் பண்றாரு. அந்த புலி உறுமுது பைட் வரும்போது, தியேட்டரே சிரிப்புல உறுமுது. ஜெய்யோட ஓட்டை இங்க்லீஷ், வைபவ்வோட சின்ன வீடு ரீ ரிக்கார்டிங் ரியாக்ஷன்ஸ், எல்லாமே காமெடி. அது ஏன் வைபவுக்கு மட்டும், படத்தோட கடைசி frame வரை ஜோடி சேர்க்க தயங்குராங்கன்னு தெரியலை. இந்த படத்துல வர பல புதுமையான விஷயங்கள்ல, நான் குறிப்பா நோட் பண்ணினது, ஒரு குண்டான ஆள் ஒருத்தர்.

 அவர் குண்டா இருக்கறது புதுமை இல்ல. அவரே, படம் முழுக்க, எக்கச்சக்கமான ரோல்கள் பண்ணிருக்கார். எல்லாமே அருமை. இந்த விஷயத்தை ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்துல பார்த்தா மாதிரி நியாபகம். ஆனா சரியா நினைவுல இல்லை. சம்பத்தும் அரவிந்த் ஆகாஷும், நாம நினைச்சா மாதிரி "அவிங்க" தான். ஆனா, ஒரு ஆபாசம் இல்லாம, விரசம் இல்லாம, கொச்சைப் படுத்தாம, நகைச்சுவையா அவங்க உறவை சித்தரிச்ச்சதுக்கு, ஒரு சபாஷ். முக்கியமா சம்பத்தின் நடிப்பு, டாப் கிளாஸ். படத்துல வர மத்த நடிகர்களும், அவங்களோட பங்குகளை மிகச்சரியா செஞ்சிருக்காங்க.

பிரசன்னா, சிம்பு, நயன்தாரா மற்றும் வெங்கட்பிரபுவோட கவுரவ தோற்றங்களும் திணிப்பா தெரியாமா, படத்தோட ஒத்துப் போயிருக்கு. மியூசிக், காமெரா, எடிட்டிங். ஆர்ட் எல்லாமே நல்லா பொருந்தியிருக்கு.படத்துல பல டிவிஸ்ட் இருக்கு. ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற பல விஷயங்கள செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்க. எதிர்பார்ப்பு மொக்கையானுலும், கண்டிப்பா நம்மால ரசிக்க முடியும். அடுத்து, முதல்ல விட்டுப்போன அந்த ரெண்டு பெர்சென்ட் எங்க போச்சுன்னா, தேவையில்லாத இரண்டு பாடல்கள் (இடை வழி, அடிடா நையாண்டிய), ரெண்டு மூணு தடவைக்கு மேல அலுத்துப்போகும் பிரேம்ஜி - கண்கள் இரண்டால் காமெடி.

ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற சில விஷயங்கள் செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்கனு சொன்னேன் இல்லையா, அதையே சில பேர் மொக்கைனு எடுத்து, படத்தை வெறுக்கலாம். எது எப்படியோ, எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்துது. இன்னொரு முறையும் பார்க்க போறேன். ரொம்ப என்ஜாய் பண்ணேன். கண்டிப்பா நண்பர்களோட பாருங்க, நீங்களும் நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. So, படம் கண்டிப்பா கோ-வா தான். அதாங்க, எல்லாரும் போயிட்டு வரலாம். ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி.

p.s.சென்சார் மேல மறுபடியும் எனக்கு சந்தேகம் வருது. என்ன ஹேருக்காக இந்த படத்துக்கு A குடுத்தாங்கன்னு இன்னும் புரியலை. அந்த gay தீம் மட்டும் தான் காரணம்னா, நான் ஒண்ணு கேட்க விரும்பறேன். Shriya, Almost அவுத்துப்போட்டு ஆடுன கந்தசாமி படத்துக்கு எதனால U குடுத்தீங்க?? ஒருவேளை homo-sexual தீம் மட்டும்தான் பிரச்னை போல. Straighta இருந்தா U குடுப்பாங்களோ????

p.s.2 - இல்லை. சினேகா பிகினில வரலை..

பெத்த கல்லு, சின்ன லாபமு, சின்ன பிலிமு பெத்த லாபமு...

Saturday, January 9, 2010

2 புத்தகங்கள், 2 திரைப்படங்கள், 21 பாடல்கள்...

புது வருஷத்துக்கு முன்னாடியும் பின்னாடியும், பார்த்த, கேட்ட, படித்த சில விஷயங்களைப் பற்றி சொல்ல விரும்பறேன். முதல்ல அந்த இரண்டு புத்தகங்கள்..

முதலில் படித்தது, சேட்டன் பகத் எழுதின "2 STATES". ஒரு மசாலா காதல் கதை. முக்கால்வாசி, நகைச்சுவை கலந்து எழுதியிருக்கார். ஒரு ஹிந்தி/தெலுங்கு படம் பார்த்தாமாதிரி இருக்கு. தமிழர்கள ரொம்பவே நாசூக்கா கிண்டல் பண்ணிருக்கார். அதுக்கு சமமா, பஞ்சாபி அம்மாக்களையும். நடுவுல ரெண்டு தூய "சென்"தமிழ் கெட்ட வார்த்தைகள் வேற வருது (ஆனா தப்பா ஸ்பெல் பண்ணிருக்கார்;) எளிமையான மொழி நடைல, எனக்கே புரியறா மாதிரி எழுதியிருக்கறது, சிறப்பு. ஒரு முறைக்கு மேல படிக்கமுடியல. கதைல எனக்கு கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது, அந்த ஒரு லைன் தான். காதலித்த ரெண்டாவது வாரத்துல வருது இந்த dialogue. "one thing led to another and within two weeks we had sex". அடப்பாவி மக்கா. ஏதொ சமோசா சாப்டா மாதிரி அசால்டா சொல்றானேன்னு இருந்துச்சு. நான் இன்னும் அவ்வளவு பக்குவப்படலை. (நான் கொஞ்சம் கன்ஸர்வேடிவாக்கும்).

இரண்டாவது புத்தகம், பத்ரி சேஷாத்ரியின் அருமையான மொழிபெயர்ப்புல வந்திருக்குற ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம். எனக்கென்னமோ, சுஜாதா தமிழாக்கம் செஞ்சது மாதிரி இருந்தது. தேவையில்லாத வார்த்தைகள போடாம, போர் அடிக்காம இருக்கு. ஆனா, சில இடங்கள்ல, வாண்டுமாமா காமிக்ஸ் படிக்கறா மாதிரி, சின்னபிள்ளைத்தனமா இருந்தது. ரொம்ப நாளா ஷெர்லாக் ஹோம்ஸ் படிக்கணும்னு காத்துகிட்டிருந்த என்ன மாதிரி ஆளுங்க மிஸ் பண்ண கூடாத புத்தகம். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. முடிஞ்சா படிங்க.

அடுத்து பார்த்த இரண்டு படங்களும், அனிமேஷன் படங்கள். kung-fu panda & Bolt. அதென்னமோ, பிக்ஸார் படங்கள ரசிக்கற அளவுக்கு, வேற எந்த அனிமேஷன் படங்களையும் ரசிக்க முடியலை. இந்த bias முன்னாடியே இருந்தாலும், அத ஒதுக்கி வெச்சிட்டு, எப்படியாவது இந்த படங்களை பிடிக்க வெச்சிக்கணும்னு நெனச்சேன். ஆனா என்ன செய்ய, நான் அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. Bolt படம், truman show படத்தோட animated வெர்ஷன்னு சொல்லலாம். kung-fu panda கிளைமாக்ஸ் மட்டும் புடிச்சிருந்தது. இரண்டு படங்கள்லயும் vfx நல்லா இருந்தாலும், திரைக்கதைல கொஞ்சம் தொய்வு. ரொம்ப மோசம் இல்லை. ரொம்ப சூப்பரும் இல்லை.

புதுசா ரிலீசாகியிருக்குற புதுப்படப் பாடல்கள் எல்லாமே நல்லா இருக்குறா மாதிரி இருக்கு. முதல்ல வந்தது, தமிழ் பட பாடல்கள். ஒரு சாதாரண விஜய் படத்தோட பாடல்கள் எப்படியிருக்குமோ அப்படியிருக்கு. சின்சியரா பண்ணியிருக்காங்க. பாடல் வரிகள் இன்னும் தமாசு. கண்டிப்பா கேளுங்க. எனக்கு பிடித்த பாடல்கள், பச்சை மஞ்ச, குத்து விளக்கு, ஓ மஹாசீயா...

அடுத்து வந்த அசல் பாடல்கள், அஜித் ரசிகர்கள திருப்தி படுத்தல. (என் அண்ணனுக்கு பிடிக்கலை) காலேஜ் விட்டு, வீட்டுக்கு வந்ததுமே என் அண்ணன் புலம்பினத கேட்டேன்.
என்னதான் முயற்சி பண்ணாலும், ஒரு prejudiced opinion வந்து உட்காந்துருச்சு. ஆனா, அவ்வளவு மோசம் இல்லை பாடல்கள். நல்லாதான் கீது. தன்னோட வழக்கமான பாணிய விட்டுக்கொடுக்காம, அதே சமயம், புதுசாவும் முயற்ச்சி பண்ணிருக்கார் பரத்வாஜ். ஆனா, அவர் பாடின பாடல் மட்டும் எனக்கு பிடிக்கலை. அவர் குரல் எனக்கு புடிக்காததும் ஒரு காரணமா இருக்கலாம். ஒரு வேளை, படம் வந்த அப்பறம் பாடல்கள் ஹிட் ஆகலாம். வரலாறவிட மோசமான பாடல்கள் இதுல இல்லைன்னு நினைக்கறேன். எனக்கு பிடித்த பாடல்கள், ஹே துஷ்யந்தா, குதிரைக்கு தெரியும் (கவிப்பேரரசின் பலான வரிகளில்) & டொட்டடொய்ங் (கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்)...                  

கோவா..................... என்ன சொல்றதுனே தெரியலை. எல்லாரும் ரசிக்கிற மாதிரி கண்டிப்பா ஒரு பாட்டாவது இருக்கு இந்த படத்துல. எனக்கு almost எல்லா பாடல்களுமே பிடிச்சிருக்கு. ஏழேழு தலைமுறை பாடலுக்கு இசை, ராஜாவா, யுவனான்னு சொல்ல முடியாத அளவு இருக்கு. இது வரை பாடல், முத்திரை படப் பாடல நினைவு படுத்தினாலும், கேட்க அழகாயிருக்கு. இடை வழி பாடல், வித்தியாசமான, ரசிக்ககூடிய முயற்சி. பென்னி தயாள் மட்டும் கொஞ்சம் ஓவரா பாடுறார். விவகாரமான வரிகள் இருக்குற வாலிபா வா வா பாடலோட இரண்டாவது சரணத்துல வர்ற அந்த ரீதி கௌளை fusion அட்டகாசம் (பார்ரா). அடிரா நையாண்டிய, கண்டிப்பா பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கக்கூடிய இசை. அதிசயமா, தீம் சாங் என்னை அவ்வளவா ஈர்க்கலை. மொத்தத்துல, வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில, மற்றுமொரு வெற்றிகரமான இசை.

p.s. இந்த மூணு படத்துலயும் மொத்தமா 21 பாடல்கள் இருக்கு.
p.s.2 அவதார் 3d படத்துக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கலை :(
p.s.3 மறுபடியும் முதல்லேர்ந்து படிங்க...

 வேட்டைகாரன்னு இதே மாதிரி ஒரு படம் வந்துருக்கு...

Tuesday, December 22, 2009

எல்லாம் முடிஞ்சுபோச்ச்ச்.....

ஒவ்வொரு மொக்கை படம் தியேட்டர்ல முடியும்போதும், இப்படிதான் நான் சொல்லிகிட்டிருப்பேன். பதிவுலகத்துல வேட்டைக்காரன் இப்படி ஒரு phenomenon ஆகும்னு நினைச்சே பார்க்கலை. tamilsh.கம, வேட்டைக்காரன் பற்றிய பதிவுகளை சேர்க்க, தனியா ஒரு லிங்கே உருவாக்கியிருக்காங்க. பெருசா என்னால விமர்சனம் எதுவும் எழுத முடியாது, ஏன்னா ஏற்கனவே படத்தை pre-mortem, post-mortem எல்லாம் செஞ்சு தொங்கபோட்டுட்டாங்க. ஒரே ஒரு விஷயம் சொல்லனும்னா, இந்த விமர்சனப் பதிவுகள்ள எவ்வளவு மொக்கைனு போட்டுருக்காங்களோ, அதைவிட படம் மொக்கை.              
விஜய் ரசிகர்களே தியேட்டர்ல கமென்ட் அடிச்சு கலாய்க்கறாங்க. Assembled கம்ப்யூட்டர் பார்த்துருப்பீங்க. இது ஒரு assembled படம். அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்னு இஷ்டத்துக்கு உருவி ஒரு படம். காறிதுப்பக் கூட நாக்குல எச்சில் இல்லை. அவரும் அவர் பையனும் ஆடும்போது, சிம்புவும் டி.ஆரும் நியாபகத்துல வராங்க. பாடல்கள் கேட்க மட்டுமே நல்லா இருக்கு. நடன அமைப்பு ரொம்பவே amateur. அனுஷ்காவுக்காகவும் படத்தை பார்க்க முடியாது. அவங்களுக்கு முதல் தமிழ் படம்னு தனியா தெரியுது. அவங்க தெலுங்கு படங்கள்ல இருக்குறா மாதிரி இல்லாம ரொம்ப செயற்க்கைத்தனமா இருக்கு அவங்க நடிப்பும் ஆட்டமும். விஜயவிட நாலு இன்ச் உயரம் வேற.   

இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் cliche ஆகிடும். இத்தோட நிறுத்திக்கறேன். வழக்கம் போல சன் டிவி அவங்களோட propaganda ஆரம்பிச்சிட்டாங்க. மெகா ஹிட்டாம். வசூல் சாதனையாம். கோபாலபுரத்துல மட்டும் நல்லா ஓடுது போல. இங்க சென்னைல நேத்து வரைல, சத்யம் தவிர எல்லா அரங்குலையும், எல்லா ஷோவுக்கும், இந்த வாரம் முழுக்க டிக்கெட் இருக்கு. எப்படி சன் டிவில எந்த படம் போட்டாலும் பார்ப்பமோ, அது மாதிரி தான் சத்யம் தியேட்டரும். நான் பார்த்த தியேட்டர்ல பால்கனில இருக்குற 100 சீட்டும் full. கீழ இருந்த 500+ சீட்டுகள் காலி. அதை போட்டோ எடுக்க விடலை.    

சில படங்களை விமர்சனத்துல கொஞ்சம் ஓவராவே கலாய்ப்பாங்க. அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீங்க. போஸ்டர் கூட பாத்துறாதீங்கன்னெல்லாம் சொல்லுவாங்க. இந்த பட விமர்சனத்துக்கு அதை விட மோசமா ஏதாவது சொல்லனும்னு பார்த்தா, சரியா எதுவும் மாட்டலை. மக்களை இவ்வளவு தூரம் முட்டளா பார்க்குற படங்கள் வர்றது இதுவே கடைசியா இருக்கணும். ஆனா, இந்த படத்தை ஹிட்டாக்க இன்னொரு நல்லா விஷயம் பண்ணிருக்கலாம். ஒரு சில காட்சிகளை மாத்திட்டு, ஒரு குழந்தைங்க படமா இதை மார்கெடிங் பண்ணிருந்தா, படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகிருக்கும். என்ன நான் சொல்றது??? 

விஜய்: புலி உறுமுது புலி உறுமுது....
மக்கள்: கொட்டை எடுத்ததா எடுக்காததா???
...
p.s.ஆயிரத்தில் ஒருவன் டிரைலர் போட்டாங்க. எடுத்தவுடனேயே, ரீமா சென்னும் ஆண்ட்ரியாவும் பச்சை மஞ்சள்னு கலர் கலரா திட்டிக்கறாங்க. கட் பண்ணா A SELVARAGHAVAN FILMனு வருது. டைரக்டர் டச்???

Sunday, November 15, 2009

உலகம் சூப்பரா அழியுதுடோய்.....

அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழகா உலகத்தை அழிக்கறாங்க பாருங்க. கண்கொள்ளா காட்சி. அட அட அட.சொல்ல வார்த்தையே இல்லை. கிராபிக்ஸ்ல விளையாடியிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. வருமான்னும் தெரியலை. என்ன, இந்த டைரக்டரோட The Day After Tomorrow பார்க்கும்போதும் நான் இப்படிதான் நினைச்சேன். Raising the bar அப்படின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, அந்த படத்தை விட, இந்த படம் ஒரு விஷுவல் விருந்து. 2012 படத்துலதான் இந்த கூத்தெல்லாம்.

கதைனு பார்த்தா..... இந்த மாதிரி படத்துக்கு கதை ரொம்ப அவசியமா?? இங்க கதைன்னு பார்த்தோம்னா, இத மாதிரி படத்துக்கு இருக்குற ஒரு default கதைக்களம்தான். உலகம் அழியுது. ஒருத்தர் அத தொலைநோக்கராறு. அதுக்கான ஏற்பாட, அரசாங்க உதவியோட செய்யறாரு. நினைச்சத விட சீக்கிரமாவே அந்த அழிவு வர, பல மக்கள் மண்டையப் போட, சில மக்கள் தப்பிக்கறாங்க. இதுக்கு நடுவுல, நம்ம ஹீரோ, அவரோட மனைவி மக்களோட எப்படி தப்பிக்கராருன்னு, லைட்டா ஊறுகா மாதிரி செண்டிமென்ட தொட்டுகிட்டு, காமிக்கறாங்க.

முழுக்க முழுக்க VFX ஆதிக்கம்தான். படம் பார்க்கும்போது வேற ஒண்ணும் யோசிக்கவே தோணாது. கலிபோர்னியா அழியும்போது, வெள்ளை மாளிகை நொறுங்கும்போது, yellow stone எரிமலை உருவாகும்போது, ஹிமயமலைல கடலலை வரும்போது இப்படி பல காட்சிகள் இன்னும் கண்ணுலேயே நிக்குது. தமிழ் சினிமா மாதிரி, இந்த படத்துலயும், ஹீரோவுக்கு எதுவுமே ஆகாம, கடைசி வரை, அவர் பல மயிறிழைகள்ல தப்பிக்கராறு. அதுலயும் ஒரு சீன், விஜய் படம் பாக்கறா மாதிரியே இருந்துச்சு. ஒரு சில டச்சிங்கான சீன்கள் இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு எதுவும் இல்ல.   

படத்துல முதல்ல ஒரு இந்தியர்தான் ஆபத்தை கண்டுபுடிச்சு சொல்றாரு. தப்பிக்கறதுக்கு கட்டற பெரிய நோவா ஆர்க் கப்பலுக்கு போக, அவருக்கு பிளைட் அனுப்பறாரு அவர் நண்பர், ஆனா அது அவரை பிக் அப் பண்ணாம, கடைசியில தன குடும்பத்தோட அவர் இறந்துபோராறு. எல்லா விஷயமும் இந்தியாவிலிருந்து போய், அது நமக்கே ரிவர்ஸ்ல ஆப்பா மாறுதுன்னு ரொம்ப அழகா காமிச்சிருக்கார் இயக்குனர். (அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன். எப்படி நம்ம நுண்ணரசியல் கண்டுபிடிப்பு??)

என்னதான் இருந்தாலும், இது போல ஒரு படத்தை எடுத்ததுக்காக, டைரக்டர் Roland Emmerich மற்றும் கொலம்பியா பிக்ச்சர்சுக்கும், முக்கியமா கிராபிக்ஸ் பண்ண Uncharted Territory, Digital Domain, Double Negative, Scanline, Sony Pictures Imageworks ஆகிய நிறுவனங்களுக்கு மூன்றாவது வட்டம் சார்பாகவும், என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். படத்தை கண்டிப்பா ஒரு பெர்ய ஸ்க்ரீன்ல, நல்ல சவுண்டோட பாருங்க. என்னுடைய ஆதரவு தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளுக்கு. அடுத்ததா நான் எதிர்பார்க்கும் படம், ஜேம்ஸ் கேமரூனோட "அவ்தார்". Lets Wait......


விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??

Thursday, November 5, 2009

Eagle Eye

ஸ்பீல்பெர்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தோட படம் தான் இந்த ஈகிள் ஐ. படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷம் ஆனாலும், இப்பதான் பார்க்க முடிஞ்சுது. நான் எந்த இங்கிலீஷ் படம் பார்த்தாலும், மொக்கையோ, நல்ல படமோ, எதுவா இருந்தாலும், விகிபீடியால அந்தப் படத்தை பத்தி பாத்துட்டு, rottentomatoesla அதோட சில ரிவ்யூவ படிச்சிட்டு, அப்பறம் தான் பார்ப்பேன். இந்தப் படமும் அப்படிதான் பார்த்தேன். எதிர்பார்த்த ஹிட் ஆகலைனாலும், ஏதொ சுமாரான வெற்றி பெற்றிருக்கும் படம் இது.

படத்தோட ஹீரோ வழக்கம் போல ஒரு உதவாக்கரை. சரியா படிக்காம, சாதாரண வேலைல, நண்பர்களோட சீட்டு ஆடிட்டு, வாடகைக்கு காசு இல்லாம, அப்பா அம்மாவ பிரிஞ்சு இருக்குற ஒரு ஆள். இரட்டை பிறவியான இவரோட அண்ணா, ஆர்மியில, வேலைல இறந்து போக, அதுக்கு அடுத்த நாள் இவரோட பிச்சைகார அக்கவுண்ட்ல பல்லாயிரம் டாலர்கள் இருக்கு. யார், என்ன, எப்போ, எப்படின்னு ஒண்ணும் புரியாம, காச எடுத்துகிட்டு, வீட்டுக்கு வர. உள்ள வெடி மருந்துகள், துப்பாகிகள்னு ஏகப்பட்ட விவகாரமான சமாசாரம் குவிஞ்சு கெடக்க, ஹீரோவுக்கு ஒரு போன் வருது.

அதுல ஒரு பெண் குரல், இன்னும் 30 secsல FBI உன்னை அரஸ்ட் பண்ண வரப்போவுது, தப்பிச்சிருன்னு சொல்ல, ஹீரோ குழப்பமா என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்க, FBI வந்து அவரை அதிரடியா அரெஸ்ட் பண்ணுது. அங்கிருந்தும் தப்பிக்க, இந்த பெண் போன் குரலே வழி சொல்ல, ஹீரோ அங்கிருந்து தப்பிக்க.கூடவே, இன்னொரு காரெக்டரும் இருக்காங்க. அவங்கதான் ஹீரோயினி. இவங்களோட மகனை கடத்தி வெச்சிகிட்டு, அதே பெண் குரல், போன் மூலமா மட்டும் இவங்களை ஆட்டிப் படைக்குது. ஹீரோயினியும் ஹீரோவும், ஓடுறாங்க ஓடுறாங்க ஓடுறாங்க, அமெரிக்காவோட ஓரத்துக்கே ஓடுறாங்க. 

அந்தப் பெண் குரல் யாரு. இவங்க ரெண்டுபேரையும் ஏன் அந்த குரல் இப்படி கலாய்க்குது. அதுக்கு அப்படி என்ன காரியம்தான் ஆகணும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நீங்க படத்தை பார்த்து விடை தெரிஞ்சுக்கோங்க. படம் ஆரம்பிச்சு, படம் முடியும் ஒரு 20 நிமிடங்கள் முன்னாடி வரைக்கும் அப்படியொரு வேகம். ஹீரோ ஹீரோயினோட நாமளும் அவ்வளவு வேகமா போறோம். அருமையான திரைக்கதை. கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் காமெடியா இருக்கு. அதை தவிர எனக்கு படத்துல வேற எந்த குறையும் தெரியல. ஹாலிவுட் படங்கள்ல ஒரு நல்லா விஷயமா நான் நினைக்கறது என்னன்னா, ஓடாத flop படத்துலயும், திரைக்கதை நல்லாவே இருக்கும். நம்ம ஆளுங்க அந்த வித்தையை எப்படியாவது கத்துகிட்டா நல்லா இருக்கும்.

எனவே மக்களே, நான் பார்த்த சமீபத்திய திரைப்படங்கள்ல, ஈகிள் ஐ ஒரு அருமையான, ஹாலிவுட், கமர்ஷியல், மசாலா படம். மிஸ் பண்ணிறாதீங்க. என்னடா, படத்தோட ஹீரோ, டைரக்டார் பத்தி வேற எதுவும் சொல்லலியேன்னு நினைக்கற ஆளுங்க -->ங்க<-- போய் படிச்சிக்கோங்க. Torrent சுலபமா கிடைக்குது. வர்டா....


 இந்த நேரத்துல யாருப்பா மிஸ்டு கால் குடுக்கறது...
 

p.s. யூ ட்யூப்ல படத்தோட alternate கிளைமாக்ஸ் கீது. முடிஞ்சா அதையும் பாருங்க. கொஞ்சம் சுமார்தான்.

Sunday, October 18, 2009

குருவிக்கு மேல, அயனுக்குக் கீழ

 நீங்க நினைக்கறது கரிக்டு. ஆதவன் படத்தை பத்தின கமெண்ட் தான் தலைப்பு. படம் ஆவரேஜ் தான். சூர்யா ரசிகர்களை ஏமாத்தும். கே எஸ் ரவிக்குமார் ரசிகர்கள், சாமி சத்தியமா ஏமாறமாட்டாங்க. சூர்யாவுக்கு இது முதல் முழு நீள மசாலா படம்னு நினைக்கறேன். படத்துல ரெண்டு ஹைலைட். சூர்யா & வடிவேலு. இவங்க இரண்டு பேர் மட்டுமே படத்தை காப்பாத்தறாங்க. அதுவும் முதல் பாதி அட்டகாசமா இருக்கு. சண்டைக் காட்சிகள் + ஒளிப்பதிவும் டக்கர். இதெல்லாம் படத்துல இருக்குற ப்ளஸ்.

இரண்டாவது பாதிதான் கொஞ்சம் வலுவிழக்குது. நாம நினைக்கறா மாதிரியே கதையும் போகுது. மோசமான கிராபிக்ஸ். அதுவும் அந்த பத்து வயசு சூர்யா பெருசா ஒண்ணும் ஆச்சரியப்படுத்தலை. குறைஞ்சது மூணு பாடல்களை தவிர்த்திருக்கலாம். பாடல்கள் placementம் சரியில்லை.கிளைமாக்ஸ்ல சண்டை நல்லா இருக்கு, ஆனா அந்த ராக்கெட் மேட்டர் காமெடி. திரைக்கதையின் வேகமும், இரண்டாம் பாதில அடி வாங்குது. நயன்தாராவ பத்த தப்பா சொல்லக் கூட எதுவும் இல்லை. இதெல்லாம் மைனஸ்.

இந்த டைரக்டரிடமிருந்து நான் கலைப் படைப்பு எதையும் எதிர்பார்க்கலை. போனமா, ஒரு ரெண்டரை மணி நேரம் பொழுது போச்சா. அவ்வளவே. அதனால எனக்கு பெரிய ஏமாற்றம் ஒண்ணும் இல்லை. எதுவும் எதிர்பார்க்காம போனீங்கன்னா கண்டிப்பா மொக்கை வாங்க மாட்டீங்க. சூர்யாவுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை. இந்தப் படம் ஓகே. b&c சென்டர்கள்ல  ஓடும்னு நம்பறேன். ஆனா, இதே மாதிரி ரெண்டு படம் கொடுத்தார்னா, விஜய்க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும். சாக்கிரதை. சொல்லிப்புட்டேன். மத்தபடி, இது மற்றுமொரு 50நாள் வெற்றி படம். போட்ட காசுக்கு மேலேயே எடுப்பாங்க.



  உதய்: அந்த ஆடு அந்த அருவா, இந்த மனுஷன் இந்த மாலை. ரெண்டும் ஒரே மாதிரி இல்லை??
 KSR: இல்லை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Update: தியேட்டர் அந்தர் quality. சவுண்டும் லுக்கும் ஸூபர். சத்யமா விட சவுண்ட் நல்லா கீது. ஒவ்வொரு சீட்டுக்கும் அழகா space விட்டுருக்காங்க. டிஜிட்டல் ப்ரோஜக்ஷன் பண்ணா, அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. அதுவும், முதல்ல போட்ட 2012 படத்தோட trailer, கெத்து. கண்டிப்பா அந்த படத்தை, தேவில மட்டுமே பாருங்க. இருக்குற ஒரே பிரச்சனை, பார்க்கிங். மேட்னீ ஷோ முடிஞ்சு, பார்க்கிங் பிரச்சனைகள்னால, 6.30 மணி ஈவினிங் ஷோ 7.15ku தான் ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு குழப்பம். சாந்தி தியேட்டர் வரை வாகனங்கள், உள்ள நுழைய, வரிசை கட்டி நின்னுச்சு. இந்த ஒரு மேட்டர கரக்ட் பண்ணாக்கா, தேவிய அடிச்சிக்க ஆள் இல்ல. (நன்றி கனகு அண்ணன் for reminder)


பார்க்கிங்க்னால ஏற்பட்டக் குழப்பக் கூட்டம்...

Friday, October 16, 2009

தேவி தரிசனம்

என் வாழ்க்கையில, தியேட்டர்களோட பங்கை நான் முன்னாடியே சொல்லிருந்தேன். ஒரு படம் நல்லா இருக்க, அந்த தியேட்டரும் நல்லா இருந்தாதான் ரசிக்க முடியும். இல்லை, குடுத்த காசு உ... ஊ..... தான். சென்னைல இப்ப, எனக்கு பிடிச்ச தியேட்டர்கள் ரெண்டு. ஒண்ணு சத்யம் தியேட்டர். அடுத்து ஹோம் தியேட்டர். வேற எந்த ஸ்க்ரீனும் எனக்கு புடிக்கலை. ஒண்ணு sound மொக்கையா இருக்கும், இல்ல சீட்டு மொக்கையா இருக்கும், இல்ல environment மொக்கையா இருக்கும். இதனாலேயே சில படங்கள் எனக்கு பிடிக்காம போயிருக்கு. நான் ஸ்கூல்ல இருந்த காலத்துல (ஒரு 4-5 வருஷங்கள் முன்னாடி) மவுண்ட் ரோட்ல இருக்கற தேவி தியேட்டர்தான் என்(ங்க) favourite.

அங்க படம் பார்க்கற அனுபவமே அலாதியானது. அவ்வை ஷண்முகி, வாலி, முத்து, சிட்டிசன், தூள், கில்லி, மன்மதன், காக்க காக்க இன்னும் எவ்வளவோ படங்களை நான் அங்க பாத்துருக்கேன். மேல நான் சொன்னதுல சில படங்கள்,மக்கள் மத்தியில படம் பார்க்கற அந்த அனுபவத்துக்காகவே ரெண்டு மூணு முறை பாத்துருக்கேன். தூள் படத்தோட கடைசி பாடல் வரும்போது, தியேட்டரே எழுந்து நின்னு ஆடினது இன்னும் கண்ணுலேயே இருக்கு. எம்மாம் பெரிய ஸ்க்ரீனு, இன்னா சவுண்டு. செம்ம ஸீனா இருக்கும். ப்ளாக் டிக்கெட் பிரச்சனைகள் இருந்தாலும், மற்றபடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இங்கதான் முதல் முறையா DTS, Dolby advertisements பார்த்தேன்.  

ஆனா, கடந்த 3-4 வருடங்களாகவே, தேவி தியேட்டர் சரியா பராமரிக்கப்படாம நாசமாகிட்டே வந்தது. ஓனர் பீல் பன்னிருப்பாரோ இல்லையோ, நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சேன். தேவியோட வீழ்ச்சியில, கொஞ்சம் கொஞ்சமா சத்யம் வளர ஆரம்பிச்சுது. இப்ப ஒரு அசைக்க முடியாத இடத்துல இருக்கு. சில படங்கள் சத்யம்ல பார்க்கும்போது கூட, "இதே படத்தை தேவில பார்த்தா எப்படி இருக்கும்"னு யோசிச்சிப் பாத்துருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு (கேடி படம் வந்த சமயம்னு நினைக்கறேன்), தேவி தியேட்டர் புதுப்பிக்கப் போறாங்கன்னு கேள்விப் பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

ஆனா வேலை ஒண்ணும் நடக்கறா மாதிரியே தெரியலை. அஞ்சாதே, தசாவதாரம், குருவி மாதிரி படங்கள் பார்க்கும்போதும் வேலை நடந்துகிட்டேடடடடடடடடடட தான் இருந்துச்சு. அங்க மறுபடியும், முன்ன மாதிரி படம் பார்க்க முடியாதுன்னே முடிவு பண்ண சமயத்துலதான். கந்தசாமி அங்க ரிலீஸ் பண்ணப் போறதா செய்தி வந்தது. அரங்கத்த நல்லா ஆக்கிட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஆனா கந்தசாமி அங்க ரிலீஸ் ஆகலை. மறுபடியும் பல்பு. ஆனா, இப்ப தீபாவளிக்கு திறக்கப் போறாங்கன்னு உறுத்திய செய்தி வந்துச்சு. ஒரு வழியா, தியேட்டர சோப்பரா ஆக்கிட்டாங்க.(வெளிய பார்க்கும்போது அப்படிதான் இருக்கு). ஆன்லைன் புக்கிங் வேற. முதல் நாளே டிக்கெட் எடுத்துட்டேன்.

மறுபடியும் அங்க போய் படம் பார்க்கறத நினைச்சா நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத மாதிரி எந்த கிறுக்கனாவது இருப்பானான்னு நீங்க நினைக்கறது என் காதுல விழுது. அப்படி நினைக்கறதுல தப்பே இல்லை. நான் அப்படி ஒரு சினிமா கிறுக்கன்தான். ஆனா, தியேட்டர் ஆளுங்க ரொம்ப யோசிச்சு, ஆர்வக்கோளாரா ஒரு வேளை செஞ்சிருக்காங்க. பத்து ரூவா டிக்கெட்டுக்கு ஆன்லைன் புக்கிங் வெச்சிருக்காங்க. இப்படி வெச்சா, அதை நம்பியே கவுண்டருக்கு வர ஏழைங்க கதி என்ன ஆகறது??? படம் பார்க்கனும்னு வெறியில இருக்குற என்னை மாதிரி ரசிகர்கள், ஆன்லைன்ல எந்த டிக்கெட் கெடைச்சாலும் பரவாயில்லைனு அதையும் புக் பண்ணிடுவாங்கல்ல..

இருக்கட்டும், facebookல கமெண்ட்ஸ் சொல்லிருக்கேன். இன்னும் சில பேரும் இதையே சொல்லிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். எப்படியோ, சென்னையோட ஒரு கலாசார அடையாளத்துக்கு (!?!?!?!) மறுபடியும் உயிர் வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. போயிட்டு வந்துட்டு, உள்ளார எப்படி இருக்குன்னு சொல்றேன்.


இங்க ஒரு பெரிய தட்டு வந்து, டப்பு டப்புன்னு ஒடையும். அதுக்கே 10 ரூவா போய்டும்....


எல்லாருக்கும் தீவாளி நல்வாழ்த்துக்கள்...

Monday, September 28, 2009

இப்படியும் ஒருவன் (mindvoice - நான் இல்ல)

எல்லா பதிவர்கள் மாதிரி, எனக்கும், உன்னைப்போல் ஒருவன் படத்தோட விமர்சனம் எழுதனும்னு ஆர்வமாதான் இருக்கு.(உனக்கு வேற ஏதாவது எழுதத்  தெரியுமா) ஆனா, என்ன எழுத?? ஒரு பக்கம் என்னடான்னா, ரொம்ப thinkittu படத்தை திட்டறாங்க. (முற்போக்குவாதிகளாமா) இன்னொரு பக்கம் "நாங்க சாதாரண, பத்து ரூவா டிக்கெட் ரசிகர்கள், ரொம்ப யோசிக்காம படங்களை பார்த்தல் போதும். தேவையில்லாம எங்களை சிந்திக்க வெச்சி கெடுக்காதீங்கன்னு கேட்கறவங்க ஒரு பக்கம் (ரொம்ப நல்லவன்களாமா).

இதுல வேடிக்கை என்னன்னா, இப்படி சொல்ற பதிவர்கள், இதுக்கு முன்னாடியே, பல பதிவுகள்ள, மொக்கையா, சாதாரண மக்களுக்கு கருத்து சொல்லிருக்காங்க. இந்தப் படம் பார்க்கும்போது மட்டும் ஏன் சாதாரண மக்களா மாறிட்டாங்கன்னு தெரியல (இது இப்ப தேவையா). எது எப்படியோ, என் கருத்தை சொல்லாம விட மாட்டேன். (அதான் தெரியுமே) படம் எனக்கு பிடித்தது. பாட்டு இல்லைனா, ஒரு படம் எவ்வளவு வேகமா இருக்கும்னு காமிக்க, இந்த படம் ஒரு உதாரணம். 

படத்தோட ஹீரோ மோகன்லாலின் (இன்னாது) நடிப்பு, வழக்கம் போல சோப்பர். கமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிருக்கார் (வேற வழி). பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். டைப் அடிக்கும்போது எனக்கே dejavu மாதிரி இருக்கு (இங்கயுமா). அதனால இதுக்கு மேல படத்தப் பற்றி நான் சொல்ல விரும்பலை. வேற எங்கயாச்சும் review பார்த்துக்கோங்க. மொத்தத்துல, கமல் போட்ட திட்டம் (இவன் karamchandlala - HINDU )  அவருக்கே back -fire ஆயிடுச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சிந்திச்சாலே இதான் பிரச்சனை. 
___________________________________________________________________________
இதுக்கு முன்னால, நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. சன் டிவி ஸ்டைல்ல சொல்லனும்னா, "நினைத்தால் மட்டும் இனிக்கும்" பாத்துறாதீங்க. (லேட் வார்னிங்)
___________________________________________________________________________
விஜயின் வேட்டைக்காரன் (!?!?!?!) பாடல்கள் வழக்கம் போல செம்ம massala. எனக்கு மூணு பாட்டு (அனுஷ்கா!!!) புட்சிகிது. ஆனா சார் எதுக்கு அட்வைஸ் பண்றாருன்னு தெரியல(எதோ எதோ கவசாகி). புலி வருது புலி வருதுனு பாடல்,(கொ.... எடுத்ததா எடுக்காததா???) இதுக்கு நம்ம தளபதி குதிரைல வராராமா. எனக்கு வில்லு flashback + போக்கிரி போலீஸ் சீன் ஞாபகம் வந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதோ ஆடி மாசம் அம்மன் பாட்டு கேட்ட effect. இதனால படம் ஓடுமான்னு கேட்டீங்கன்னா..................... "மதுர" அப்படீன்னு ஒரு படம் வந்துச்சுல்ல??(மச்சான் பேரு மதுர) அத ஞாபகத்துல வைங்க.
___________________________________________________________________________
 ஜெயா டிவில, நாங்க வர finals episode, இந்த வாரம், சனிக்கிழமை காலை, telecast ஆச்சு (மறைந்திருந்து பார்க்கும் + காதல் கசக்குதய்யா). மிஸ் பண்ணவங்க, வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு பாருங்க. இல்லை பொறுத்திருந்து youtubela பாருங்க. 


 விஜய் மாதிரி நாம எப்போ வித்தியாசமா நடிக்கப்போகிறோம்????

Wednesday, September 9, 2009

சென்சார் என்ற கேலிக்கூத்து

நண்பர்களே, திரைப்படங்களுக்கு சென்சார் போர்ட் என்கிற விஷயம் எதுக்கு இருக்கு (தமிழ்ல தணிக்கைனு சொல்றாங்க) எதை தணிக்கை பண்றாங்க? ஏதாவது விவகாரமான கசமுசா காட்சிகளோ, வெறி ஏத்தற (அந்த 'வெறி' அல்ல) ரத்தக் களரியான காட்சிகளோ, பொதுவுல, நாட்டுக்கு விரோதமான விஷயங்களோ இருந்தா, அதை சென்சார் செய்யவே இந்த போர்ட்.

ஆனா இவங்க பண்ற தணிக்கைல எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்தது கிடையாது. சினிமாவப் பற்றி படிப்பதற்கு முன்னாடியே இப்படின்னா, கொஞ்சம் சுமாரா விஷயம் தெரிஞ்ச அப்பறம், சுத்தமா நம்பிக்கை போய், அவங்க ஒரு காமெடி பீஸாவே தெரியறாங்க. முதல்ல எனக்கு வந்த சந்தேகம், எதுக்கு ஒரு படத்துக்கு A certificate குடுக்கறாங்கன்னு. காரணம் என்னனா, நான் மேலே சொன்னா மாதிரி, பலான பலான காட்சிகளோ, கத்திக் குத்துக்களோ இருந்தா அப்படி குடுப்பாங்க. ஆனா அதையும் நாய் வாய்ல பன்னு மாதிரி முழுசா இல்லாமா, குதறி வெச்சி, அப்பறம் குடுப்பாங்க. அதான் Adults ஒன்லின்னு குடுத்துட்டாங்கல்ல, அப்புறமும் எதுக்கு கட்டிங்க்னு பார்த்தா, அதுக்கான காரணம் வெளங்கலை.

இந்த சென்சார் பிரச்சனை பெரும் பிரச்சனை ஆகி, சண்டை போட்டு பல்பு வாங்கின ஆட்கள்ல சில பேர் நம்ம கமல், எஸ்.ஜே.சூர்யா, வேலுபிரபாகரன். இப்ப சமீப காலங்கள்ல, அதாவது 2-3 வருடங்களா வர படங்களுக்கு குடுக்குற rating எல்லாமே செம்ம காமெடியா கீது. உதாரணத்திற்கு சில படங்கள எடுத்துப்போம்,

குசேலன் படத்துல, எப்படி நட்பை விலாவரியா, விலா நோக சொன்னாங்கன்னு பாத்தீங்க. ஆனா அதோட இல்லாம,  நம்ம தலைவி நயன்தாரா எப்படி நடிச்சி காமிச்சிருப்பாங்கன்னு நீங்க எல்லாரும் நல்லா பாத்துருப்பீங்க, ஆனா அந்த படத்துக்கு, A குடுக்கவேணாமய்யா  அட்லீஸ்ட் ஒரு UA ....ம்ஹூம்.... இல்லையே . U குடுத்தாங்க..

அடுத்து, யாரடி நீ மோகினி அப்படின்னு ஒரு கலைப் படைப்பு. அதுல ரகசியா, கொடுமையான ஆட்டம் ஒண்ணு போட்டிருப்பாங்க. அதோட இல்லாம, படத்துல "இயற்கையா" சில விஷயங்களைப் பத்தி வசனங்கள் வேற, காமெடியா, வரும். இந்தப் படத்துக்கும் U.......

அடுத்து, சமீபத்துல வந்த நாடோடிகள். நிஜமாவே நல்லா படமா இருந்தாலும், படத்துல வன்முறை காட்சிகள் எந்த அளவு இருந்ததுன்னு பார்த்தவங்களுக்கு தெரியும். இந்த படத்துக்கும் U அளிக்கப்பட்டது...

இவ்வளவு ஏன், ரெண்டு வாரம் முன்ன வந்து, இப்ப நாறிக்கிட்டு இருக்குற கந்தசாமில, நம்ம ஸ்ரேயா அம்மணி எப்படி கலை சேவை செஞ்சாங்கன்னு பாத்திருப்பீங்க. அட்லீஸ்ட் யாரவது சொல்லிருப்பாங்க. அதைவிட, அந்தப் படத்துல, கடைசில, மீனாகுமாரி பாட்டு, உச்சக்கட்டம். டிரஸ் இருக்கா, இல்லையான்னே சந்தேகம் வர அளவுக்கு இருக்கும் பாடல் அது.

So, இப்படியாக சொல்லிகிட்டே போகலாம். நீங்களும் நோகாம படிச்சுகிட்டே இருப்பீங்க. எனக்கு ரொம்ப பிடித்த rating சிஸ்டம், ஹாலிவுட்ல இருக்கறது. அங்க ரொம்ப அழகா பிரிச்சிருக்காங்க. அதப் பற்றி மேல படிக்கனும்னா -> இங்க <- போங்க. அங்க நம்ம ஸ்பீல்பெர்க் அண்ணாச்சி, தன்னோட முயற்சியில, ஒரு புது rating முறையவே கொண்டு வந்திருக்கார். நாம ஊர்ல யாரும் மூச்சு கூட விட முடியாது. ஒரு வேளை  இதுலையும், அரசியல், ஊழல் எல்லாம் இருக்குமோ?? எனக்கென்னமோ சத்தியமா இருக்கும்னுதான் தோணுது.

திரைப் படங்களுக்கு சென்சார் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் முற்போக்குவாதி இல்லை. Atleast, கொஞ்சம் கேனத்தனமா இல்லாம, ஒழுங்க இருந்தா சரி.என்ன சொல்றீங்க???


 சின்னத்திரைக்கு சென்சார் தேவைன்னு நினைக்கறீங்க???

Monday, August 24, 2009

The கிரேட் கந்தசாமி challenge ...

நீங்க கந்தசாமி படம் பார்த்து நொந்த ஆளா?? குறைந்தது, அந்த படத்த பற்றி கேள்விப்பட்ட ஆளா?? அப்ப இந்த challenge உங்களுக்குதான். கீழ, என்னுடைய ரசனையின் அடிப்படையில், ஒரு match the following இருக்கு. அதுக்கு கீழ, ஒவ்வொரு வார்த்தைக்கும் equivalent வார்த்தையும் இருக்கு. உங்களால கரிக்டா match பண்ண முடியுதான்னு பார்க்கலாம். பின்னூட்டத்துல உங்க பதிலைப் போடுங்க.

for ex - கந்தசாமி -

1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
2. சுசி கணேசனின் கலைப் படைப்பு
3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்

இதுக்கு சரியான தேர்வு 1
got it??? இப்ப விளையாடுவோமா ??
கவலைப் படாதீங்க, ரொம்ப ஈசியாதான் இருக்கும்.

படம் நல்லா வரணும்னு சீட்டெழுதி போட்டிருக்கலாமோ???

The கிரேட் கந்தசாமி challenge ...

கந்தசாமி - 1
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -

பதில்கள்
  1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
  2. கணேசனின் கலைப் படைப்பு
  3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
  4. மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடித்து மொக்கை வாங்குபவர்
  5. தனி ஆளாக படத்தை காப்பாற்றுபவர்
  6. தான் பார்த்த/நடித்த பழைய படங்களை மறப்பவர்
  7. ராவணன் கைவிட்டால், காப்பற்ற இருக்கும் ஒரே ஆள்
  8. கந்தசாமி பார்த்துவிட்டு யோசிப்பவர்
  9. எந்த ஒரு மொக்கை படத்தையும் சுமாராக ஆக்கும் இடம்
  10. கேலிக்கூத்து
  11. குடுத்த பணத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்வது
  12. ஸ்ரேயா ஆடியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
  13. கொக்கரக்கோ கோழி
  14. தேவையில்லாமல் வந்து போவது
  15. மன ஆறுதலை தரும் ஒரே விஷயம்
  16. city of god படத்தை நிறைய முறை பார்த்தவர்
  17. இப்பொழுதுதான் தொழிலை கற்றுக்கொள்பவர்
  18. கொஞ்சம் கமெர்சியலா பண்றோம்
  19. எல்லா காட்சிகளிலும் தண்ணி அடித்தது போல் பேசுபவர்
  20. படத்திற்கு உறுதுணையாக இருப்பது
  21. நம் மண்டையை பிளப்பது
  22. பட்ஜெட்டில் துண்டு
  23. எவ்வளவு மொக்கை வாங்கினாலும் ஸ்டெடியாக இருப்பவர்
  24. பதிவு போடவே படம் பார்க்கும் கேசு
  25. அடுத்தடுத்து ஆப்புகளை பெறுபவர்
  26. தூக்கக் கலக்கத்தில் பேசுபவர்
  27. சில காட்சிகளில் நினைவிற்கு வந்து upset ஆக்குபவர்
  28. கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்
  29. மஞ்ச மாக்கான்
  30. வெளிப்படையாக நடிப்பவர்
  31. பல்காக இருப்பவர்
  32. பிள்ளையின் மானத்தை வாங்குபவர்
  33. பல்ராம் நாயுடுவிற்கு போட்டி
  34. தேடினாலும் கிடைக்காது
  35. மனதில் ஹிட்ச்காக் என்று நினைத்து கொள்பவர்
  36. எப்பொழுதும் மர்மமான ரோலில் நடிப்பவர்
  37. என்ன கொடுமை சரவணன் இது
  38. சூப்பரப்பு
  39. உரிச்ச கோழி
  40. அப்படின்னா??
ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருப்ப்பது போல இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ, அத செலக்ட் பண்ணுங்க...

மச்சான் ஒருத்தன் சிக்கிருக்காண்டா, வரியா படம் எடுப்போம்?? நான் உளவுத்துறை போலீசா நடிக்கிறேன்..

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...