Monday, November 30, 2009

மேல் படிப்பு

மு.கு. நகைச்சுவை உணர்வு இல்லாத பொண்ணுங்க, தயவு செஞ்சு கெளம்புங்க, காத்து வரட்டும்...
  
நீங்க நினைக்கற மேல் படிப்பு இல்லைங்க இது. நான் சொல்லப் போறது Male, அதாவது பசங்க படிக்கற படிப்பு பத்தி. 'அதென்ன படிப்புல male படிப்பு female படிப்பு. எல்லாம் ஒண்ணுதான. இதுல என்ன பெரிய ஆராய்ச்சி பதிவு வேண்டி கெடக்கு', இதான உங்க டவுட்டு. கண்டிப்பா வித்தியாசம் இருக்குங்க. எல்.கே.ஜில ஆரம்பிச்சு, இப்போ post graduation வரைக்கும் நான் இந்த வித்தியாசத்தை பாத்துகிட்டு இருக்கேங்க. எஸ்.ஜே சூர்யா சொல்றாப்போல, சில சமயங்கள்ல, பொண்ணுங்க படிக்கறத பார்த்தா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கும். பசங்களுக்கு, Pass - Fail, இப்படி ரெண்டு  மேட்டர் தான் முக்கியம். ஆனா பொண்ணுங்களுக்கு???????????  வாங்க அலசுவோம்.

எப்பவும், படிச்சிகிட்டே இருந்து, எப்பாவாச்சும் சும்மா இருப்பாங்கல்ல, அப்போ, மத்த விஷயங்களை யோசிக்கறவங்க பொண்ணுங்க. ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க,  இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க.

இந்த பசங்க பொண்ணுங்க வித்தியாசம், பரீட்சை சமயங்கள்ல பாத்தீங்கன்னா அப்பட்டமா தெரியும். எனக்கு தெரிஞ்சு, முக்கால் வாசி பசங்க (என்னையும் சேர்த்து), பரீட்சைக்கு முன்னாடி நாள்தான் படிக்க ஆரம்பிக்கறதே. அதுவும் மனப்பாடம் பண்றதெல்லாம் இல்லை. சும்மா, அப்டீ திருப்பி பாக்கறது. அப்படி பார்க்கும்போதுதான், நம்மகிட்ட சில நோட்ஸ் இல்லைன்னே தெரியவரும். சரி, நம்ம தோஸ்து எவனாவது வெச்சிருப்பானான்னு மெசெஜோ, காலோ பண்ணா, அவன் "மச்சான், படிக்க ஆரம்பிச்சுட்டியா?? கேடி நாய்டா நீ. எதுவும் படிக்கலை படிக்கலை சொல்லியே நிறைய மார்க் வாங்கிருவ. ஒ*!@ உன்னை நம்பவே கூடாதுடா". இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நாயும் அங்க புக்க வெச்சிகிட்டு முக்கிட்ருப்பான்.                                          

எதுக்கு phone பண்ணமோ, அதில்லாம, வெட்டியா வேற ஏதாவது பேசிட்டு வெச்சிருவோம். சரி, பரவாயில்லைன்னு, வெக்கத்தை விட்டு பொண்ணுங்க யாருக்காவது phone பண்ணுவோம். அவங்க விடுவாங்க பாருங்க ரீலு. "ஹே, நான் சத்தியமா படிக்கலபா. Group study பண்ணலாம்னு நினைச்சோம், ஆனா முடியலை. காலைல அம்மாகூட வெளியில போயிட்டேன். அப்பறம் வீட்ல ஒரே வேலை (சாஞ்சிகிட்டு TV பாக்கறது ஒரு வேலையா) கொஞ்ச நேரம் முன்னாடிதான் புக்கை கையில எடுத்தேன், கரெக்டா நீ கால் பண்ற". அடுத்த முக்கியமான விஷயம், அந்த பொண்ணு எப்பவோ இதெல்லாம் படிச்சிருக்கும். சும்மா ஒரு தடவை பார்த்தாலே அதுக்கு எல்லாம் ஞாபகத்துல வந்துரும்.

சில பொண்ணுங்க, ஹாரி பாட்டர் hermione மாதிரி, புத்தகத்துல இருக்கறத வார்த்தைக்கு வார்த்தை மனபாடம் செஞ்சு ஒப்பிபாங்க. நான் பல முறை இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்து, அடங்கொக்கா மக்கான்னு ஷாக் ஆகிருக்கேன். சில நல்ல பொண்ணுங்க, எக்ஸாம் ஹால்ல நமக்கு சொல்லியும் தரதுண்டு. அவங்கெல்லாம் வாழ்க. சிலதுங்க, அப்படியே எழுதற ஷீட் மேல படுத்துகிட்டு எழுதுங்க. உள்ள இறங்கி தூர் வாருதோன்னு சந்தேகம் கூட நமக்கு வரு. என்ன சிக்னல் குடுத்தாலும் திரும்பாம இருந்து பல்பு குடுத்துருவாங்க. இடி இடிச்சா கூட "யாரோ கடுகு தாளிக்கரான்களோ" reaction தான் கிடைக்கும்.

வெளியில வந்து, ஏன் திரும்பியே பார்க்கலைன்னு கேட்டா, "நீ கூப்டியா???" அப்படின்னு கேப்பாங்க. இதெல்லாம் இருக்கட்டும். அந்த எக்ஸாம் பேப்பர் குடுக்கும்போது வரும் பாருங்க reactions. வாய்ப்பே இல்ல. எவ்வளவு மார்க் போட்டாலும், குடுத்த ஆள் கிட்ட போய், "சார், இதுல மார்க் கம்மி, இதுல total கம்மி, இங்க நான் நல்லாதான எழுதியிருக்கேன் ஏன் இப்படி மார்க் போட்டுருக்கீங்க??" அப்டி இப்டி ஏதாவது நொட்டு சொல்லி, வாத்தியாருக்கே அவர் படிச்ச படிப்பு மேல சந்தேகம் வர அளவுக்கு நச்சரிச்சு, குறைந்தபட்சம் அரை மார்க்காவது கூடுதலா வாங்கிட்டு, வெற்றி களிப்புல ஒரு இளிப்பு வேற இருக்கும் பாருங்க......

பசங்க பாவமா, என்ன மார்க், என்ன கேள்வி, என்ன பதில்னு புரியாம இருப்பானுங்க. முடிஞ்ச வரைக்கும், கரெக்ஷன் பண்ண பேப்பர்ல சந்தேகம் எதுவும் கேக்காம கமுக்கமா இருப்பாங்க. ஏன்னா நம்மாளுக்குதான் கேள்வியே ஒழுங்கா தெரியாதே. எங்க ஏதாவது  ஏடாகூடமா கேட்டு இருக்குற மார்க்கும் போய்டுமோன்னு ஒரு கிலி இருக்கும். குடுத்து முடிச்சிட்டு போன அப்புறம், பொண்ணுங்க மத்தியில, அத பத்தி ஒரு மணி நேரம் விவாதம் வேற நடக்கும். "அந்த சாருக்கு என்னை பிடிக்கலை, அதான் மார்க் கம்மி. அன்னிக்கு நான் அந்த மேடமுக்கு குட் மார்னிங் சொல்லல, அந்த காண்டுல சரியா கரெக்ஷன் பண்ணலை"னு புதுப் புது காரணமா, கும்பலா, கண்டுபுடிச்சிகிட்டிருப்பாங்க.

பொறவு யார் highest மார்க் அப்படின்னு calculation வேற நடக்கும். "நீ என்னைவிட ஜஸ்ட் மூன்றை மார்க் ஜாஸ்தி. பரவாயில்லை, நான் fail ஆயிருவேன்னு நினைச்சேன்"னு மனசாட்சியே இல்லாம பேசுவாங்க. ஒருத்தி 98, இன்னொருத்தி 95 வாங்கிருப்பா. எந்த பொண்ணுங்களையும் அசிங்கப் படுத்த நான் இந்த பதிவை போடலைங்க. எல்லாம் ஒரு பொறாமைலதான். என்னுடைய இஸ்கூல் படிப்புலேர்ந்து, இப்போ PG வரைக்கும் இதே கதை தாங்க. என்ன, இப்போ சில பொண்ணுங்க பீட்டர்ல feel பண்றாங்க. பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. பொண்ணுங்க இப்படிதான் எப்பவுமேவா, இல்லை எப்பவுமே இப்படிதானான்னு எனக்கு ஒரே குழப்பம்.

வேணும்னா நான் சொன்னதை டெஸ்ட்டு பண்ணி பாக்கலாம். இந்த பதிவை நீங்க படிச்சிட்டு, பொறவு வேற ஒரு பொண்ணை படிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு படிச்சிட்டு, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க அப்படி கிடையாது, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்" அப்படின்னு சொல்லிச்சுன்னா, அதுவே என் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. நான் கடைசில "HENCE PROVED" அப்படின்னு சேத்துக்கறேன். :))))




வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??

Wednesday, November 25, 2009

மற்றும் பல...

வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சில updates பதிவுகளுக்கு தான் இப்போ மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி, அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும், அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??    
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
 நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->லிங்க்  
 --------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->இங்க
------------------------------------------------------------------------------------------------------------- 
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...       
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

Sunday, November 15, 2009

உலகம் சூப்பரா அழியுதுடோய்.....

அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழகா உலகத்தை அழிக்கறாங்க பாருங்க. கண்கொள்ளா காட்சி. அட அட அட.சொல்ல வார்த்தையே இல்லை. கிராபிக்ஸ்ல விளையாடியிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. வருமான்னும் தெரியலை. என்ன, இந்த டைரக்டரோட The Day After Tomorrow பார்க்கும்போதும் நான் இப்படிதான் நினைச்சேன். Raising the bar அப்படின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, அந்த படத்தை விட, இந்த படம் ஒரு விஷுவல் விருந்து. 2012 படத்துலதான் இந்த கூத்தெல்லாம்.

கதைனு பார்த்தா..... இந்த மாதிரி படத்துக்கு கதை ரொம்ப அவசியமா?? இங்க கதைன்னு பார்த்தோம்னா, இத மாதிரி படத்துக்கு இருக்குற ஒரு default கதைக்களம்தான். உலகம் அழியுது. ஒருத்தர் அத தொலைநோக்கராறு. அதுக்கான ஏற்பாட, அரசாங்க உதவியோட செய்யறாரு. நினைச்சத விட சீக்கிரமாவே அந்த அழிவு வர, பல மக்கள் மண்டையப் போட, சில மக்கள் தப்பிக்கறாங்க. இதுக்கு நடுவுல, நம்ம ஹீரோ, அவரோட மனைவி மக்களோட எப்படி தப்பிக்கராருன்னு, லைட்டா ஊறுகா மாதிரி செண்டிமென்ட தொட்டுகிட்டு, காமிக்கறாங்க.

முழுக்க முழுக்க VFX ஆதிக்கம்தான். படம் பார்க்கும்போது வேற ஒண்ணும் யோசிக்கவே தோணாது. கலிபோர்னியா அழியும்போது, வெள்ளை மாளிகை நொறுங்கும்போது, yellow stone எரிமலை உருவாகும்போது, ஹிமயமலைல கடலலை வரும்போது இப்படி பல காட்சிகள் இன்னும் கண்ணுலேயே நிக்குது. தமிழ் சினிமா மாதிரி, இந்த படத்துலயும், ஹீரோவுக்கு எதுவுமே ஆகாம, கடைசி வரை, அவர் பல மயிறிழைகள்ல தப்பிக்கராறு. அதுலயும் ஒரு சீன், விஜய் படம் பாக்கறா மாதிரியே இருந்துச்சு. ஒரு சில டச்சிங்கான சீன்கள் இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு எதுவும் இல்ல.   

படத்துல முதல்ல ஒரு இந்தியர்தான் ஆபத்தை கண்டுபுடிச்சு சொல்றாரு. தப்பிக்கறதுக்கு கட்டற பெரிய நோவா ஆர்க் கப்பலுக்கு போக, அவருக்கு பிளைட் அனுப்பறாரு அவர் நண்பர், ஆனா அது அவரை பிக் அப் பண்ணாம, கடைசியில தன குடும்பத்தோட அவர் இறந்துபோராறு. எல்லா விஷயமும் இந்தியாவிலிருந்து போய், அது நமக்கே ரிவர்ஸ்ல ஆப்பா மாறுதுன்னு ரொம்ப அழகா காமிச்சிருக்கார் இயக்குனர். (அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன். எப்படி நம்ம நுண்ணரசியல் கண்டுபிடிப்பு??)

என்னதான் இருந்தாலும், இது போல ஒரு படத்தை எடுத்ததுக்காக, டைரக்டர் Roland Emmerich மற்றும் கொலம்பியா பிக்ச்சர்சுக்கும், முக்கியமா கிராபிக்ஸ் பண்ண Uncharted Territory, Digital Domain, Double Negative, Scanline, Sony Pictures Imageworks ஆகிய நிறுவனங்களுக்கு மூன்றாவது வட்டம் சார்பாகவும், என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். படத்தை கண்டிப்பா ஒரு பெர்ய ஸ்க்ரீன்ல, நல்ல சவுண்டோட பாருங்க. என்னுடைய ஆதரவு தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளுக்கு. அடுத்ததா நான் எதிர்பார்க்கும் படம், ஜேம்ஸ் கேமரூனோட "அவ்தார்". Lets Wait......


விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??

Thursday, November 12, 2009

PLAYLIST - OCTOBER

அக்டோபர் மாத playlistல பெரிய மாற்றங்கள் ஒண்ணும் இல்லை. சென்ற மாதம் வந்த பாடல்கள் பெருசா ஒண்ணும் என்னை ஈர்க்கல. புதுசா சேர்த்த மூணு பாடல்கள்ல, ஒண்ணு பேராண்மை படத்துல வர "ஏறத்தாழ ஏழு மணி பாடல்". ரொம்பவே அழகான மெலடி. வித்யாசாகர் இசைல, சாதனா சர்கம் சூப்பரா பாடியிருக்காங்க.
இங்க க்ளிக்கி கேட்கலாம் ..

அடுத்த பாடல், ஹிந்தி ப்ளூ படத்துல, ரஹ்மான் இசைல வந்த, Kylie Minogue + சோனு நிகம் பாடியிருக்கும் Chiggy Wiggy. இங்கிலீஷ் பாட்டு மாதிரி ஆரம்பிச்சு, அதையே பாங்க்ரா ஸ்டைல்ல மாத்தறது அழகா இருக்கு. -->இங்க கேளுங்க<--

யோகி படத்துல வரும் சீர்மேவும் கூவத்திலே ரொம்பவே வித்தியாசமான முயற்சி. யுவன் மறுபடியும் கலக்கியிருக்கார். இந்த படத்தின் தீம் மியூசிக்கும் நல்லாதான் இருக்கு. படத்தோட ட்ரைலர் பாத்தீங்களோ???

மற்றபடி, வரிசையிலிருந்து வெளியேறும் பாடல்கள், ஹசிலி பிசிலி & வானம் எல்லை...
சென்ற மாத லிஸ்ட் -->இங்க<--



siiiiiiiiiiiiiiiing in the rain...

Thursday, November 5, 2009

Eagle Eye

ஸ்பீல்பெர்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தோட படம் தான் இந்த ஈகிள் ஐ. படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷம் ஆனாலும், இப்பதான் பார்க்க முடிஞ்சுது. நான் எந்த இங்கிலீஷ் படம் பார்த்தாலும், மொக்கையோ, நல்ல படமோ, எதுவா இருந்தாலும், விகிபீடியால அந்தப் படத்தை பத்தி பாத்துட்டு, rottentomatoesla அதோட சில ரிவ்யூவ படிச்சிட்டு, அப்பறம் தான் பார்ப்பேன். இந்தப் படமும் அப்படிதான் பார்த்தேன். எதிர்பார்த்த ஹிட் ஆகலைனாலும், ஏதொ சுமாரான வெற்றி பெற்றிருக்கும் படம் இது.

படத்தோட ஹீரோ வழக்கம் போல ஒரு உதவாக்கரை. சரியா படிக்காம, சாதாரண வேலைல, நண்பர்களோட சீட்டு ஆடிட்டு, வாடகைக்கு காசு இல்லாம, அப்பா அம்மாவ பிரிஞ்சு இருக்குற ஒரு ஆள். இரட்டை பிறவியான இவரோட அண்ணா, ஆர்மியில, வேலைல இறந்து போக, அதுக்கு அடுத்த நாள் இவரோட பிச்சைகார அக்கவுண்ட்ல பல்லாயிரம் டாலர்கள் இருக்கு. யார், என்ன, எப்போ, எப்படின்னு ஒண்ணும் புரியாம, காச எடுத்துகிட்டு, வீட்டுக்கு வர. உள்ள வெடி மருந்துகள், துப்பாகிகள்னு ஏகப்பட்ட விவகாரமான சமாசாரம் குவிஞ்சு கெடக்க, ஹீரோவுக்கு ஒரு போன் வருது.

அதுல ஒரு பெண் குரல், இன்னும் 30 secsல FBI உன்னை அரஸ்ட் பண்ண வரப்போவுது, தப்பிச்சிருன்னு சொல்ல, ஹீரோ குழப்பமா என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்க, FBI வந்து அவரை அதிரடியா அரெஸ்ட் பண்ணுது. அங்கிருந்தும் தப்பிக்க, இந்த பெண் போன் குரலே வழி சொல்ல, ஹீரோ அங்கிருந்து தப்பிக்க.கூடவே, இன்னொரு காரெக்டரும் இருக்காங்க. அவங்கதான் ஹீரோயினி. இவங்களோட மகனை கடத்தி வெச்சிகிட்டு, அதே பெண் குரல், போன் மூலமா மட்டும் இவங்களை ஆட்டிப் படைக்குது. ஹீரோயினியும் ஹீரோவும், ஓடுறாங்க ஓடுறாங்க ஓடுறாங்க, அமெரிக்காவோட ஓரத்துக்கே ஓடுறாங்க. 

அந்தப் பெண் குரல் யாரு. இவங்க ரெண்டுபேரையும் ஏன் அந்த குரல் இப்படி கலாய்க்குது. அதுக்கு அப்படி என்ன காரியம்தான் ஆகணும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நீங்க படத்தை பார்த்து விடை தெரிஞ்சுக்கோங்க. படம் ஆரம்பிச்சு, படம் முடியும் ஒரு 20 நிமிடங்கள் முன்னாடி வரைக்கும் அப்படியொரு வேகம். ஹீரோ ஹீரோயினோட நாமளும் அவ்வளவு வேகமா போறோம். அருமையான திரைக்கதை. கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் காமெடியா இருக்கு. அதை தவிர எனக்கு படத்துல வேற எந்த குறையும் தெரியல. ஹாலிவுட் படங்கள்ல ஒரு நல்லா விஷயமா நான் நினைக்கறது என்னன்னா, ஓடாத flop படத்துலயும், திரைக்கதை நல்லாவே இருக்கும். நம்ம ஆளுங்க அந்த வித்தையை எப்படியாவது கத்துகிட்டா நல்லா இருக்கும்.

எனவே மக்களே, நான் பார்த்த சமீபத்திய திரைப்படங்கள்ல, ஈகிள் ஐ ஒரு அருமையான, ஹாலிவுட், கமர்ஷியல், மசாலா படம். மிஸ் பண்ணிறாதீங்க. என்னடா, படத்தோட ஹீரோ, டைரக்டார் பத்தி வேற எதுவும் சொல்லலியேன்னு நினைக்கற ஆளுங்க -->ங்க<-- போய் படிச்சிக்கோங்க. Torrent சுலபமா கிடைக்குது. வர்டா....


 இந்த நேரத்துல யாருப்பா மிஸ்டு கால் குடுக்கறது...
 

p.s. யூ ட்யூப்ல படத்தோட alternate கிளைமாக்ஸ் கீது. முடிஞ்சா அதையும் பாருங்க. கொஞ்சம் சுமார்தான்.