Showing posts with label Incredible ilayaraja. Show all posts
Showing posts with label Incredible ilayaraja. Show all posts

Monday, February 29, 2016

ஒரு ராஜா பாடலைப் பற்றிய நீண்ண்ண்ண்ண்ட பதிவு

1000 படங்கள். படத்துக்கு 4 பாட்டுகள் என்றால் கூட (வெகு சில படங்களில் மட்டும் பாடல்கள் கிடையாது) 4000 பாட்டுக்கள். இதில் நம் பெற்றொருக்கு பிடித்தது, நண்பர்களுக்குப் பிடித்தது, டிவி - ரேடியோவில் போட்டுத் தேய்ப்பது என நாம் அறிந்திருக்கும் (அதாவது 90களின் ஆரம்பத்திலும் அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் கேட்டவரை) ராஜா பாடல்கள்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

நான் பாடல்களைத் தேடித் தேடிச் சென்று கேட்பவன். எந்த மொழி பேதமும் கிடையாது. பாடல் நன்றாக இருந்தால் போதும். அதிலும் ராஜா பாடல் என்றால் கூடுதல் சாஃப்ட் கார்னரோடு, அய்யோ பாடல் நமக்கு பிடிக்க வேண்டுமே என்ற நினைப்போடும் கேட்பேன். அப்படி நான் அவ்வபோது புதிதாக தெரிந்து கொள்ளும், டிஸ்கவரி என்று சொல்லுவார்களே, அப்படி டிஸ்கவர் செய்யும் ராஜா பாடல்களில் சில, பல நாட்கள்  - இரவுகள் என் தலைக்கு மேல் ஹெட்ஃபோனிலும், தலைக்குள் என்ஃபோனிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



இதுவே ராஜாவின் பாடல் எனக்குள் நிகழ்த்தும் மேஜிக். மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்கும், அதில் மூழ்கி முத்தெடுப்பீர்கள், மூர்ச்சையாகி வெளியே வருவீர்கள் போன்ற சப்பைக்கட்டுகள் எதுவும் கிடையாது. முதல் முறை கேட்கும்போது பிடித்துவிடும். அங்கிருந்து சில நாட்கள் பித்து. அவ்வளவு தான் இந்தப் ப்ராசஸ்.

(அதே போல பல முறை கேட்டு பிடிக்காத பாடல்கள்களும் இருக்கினறன. அதற்காகவெல்லாம் ராஜாவை விட்டுக் கொடுத்து பேச முடியாது)
புதிதாக ஒரு பாடலைக் கேட்கும்போது, வழக்கம் போல, "எப்படிய்யா இந்த மனுஷன் அப்பவே இதெல்லாம் பண்ணிருக்காரு?"என வரும் கேள்வி, "இந்தப் பாட்டை எப்படி இவ்வளவு நாள் கேட்காம இருந்தேன்?" என வரும் வருத்தம், இப்படி இன்று (காலை) வரை இளையாராஜா என்ற இசைக்கலைஞன் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இன்று, இளையராஜா 1000 நிகழ்ச்சி எவ்வளவு மொக்கையாக இருந்தது என்ற பதிவுகளை ஒரு பக்கம் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஆபிஸ் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போதே, மறுபக்கம் ராஜா எஃப்.எம்மில் (யாரோட யோசனையோ, நல்லா இருக்கட்டும்) எப்போதும் போல அடுத்தடுத்து பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.



முதலில் 'என் தேகம் அமுதம்' ('ஒரு ஓடை நதியாகிறது'' என கூகுளார் சொன்னார்) என்ற பாடல். ஜானகியின் குரலில் மற்றுமொரு பலான பாடல் என்பது கேட்கும்போதே புரிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏனோ வரவில்லை.

அடுத்த சில பாடல்கள் கழித்து, 'மழை வருவது மயிலுக்கு தெரியும்' என்ற பாடல். ராஜாவின் ரொமாண்டிக் சாங் போல ஆரம்பித்தாலும், புதிதான ஒரு தாளத்துக்கு பாடல் மாறியது ('தம்தன தாளம் வரும்' பாடல் தாளத்தைப் போல). ராஜா பாட்டில் எதிர்பாராத இடத்தில் மிருதங்க ஓலி ஆரம்பிக்கும்போது அது தரும் கிக்கே தனி. ஜானகி குரலில் பாடல் ஆரம்பிக்க, கூடவே அந்த தாளமும். பாடலில் சுவாரசியம் கூடியது. 5 நிமிடங்கள் தானே , வேலையைச் சற்று தள்ளி வைப்போம் என சரணத்துக்கு தயாரானேன்.

ஸோலோ வயலின், ஸ்ட்ரிங்க்ஸ், வீணை என ராஜா வழக்கம் போல இண்டர்லுயூடில் விளையாடியிருந்தார். தொடர்ந்து ராஜா பாடல்களைக் கேட்டுப் பழகியவர்களால் கண்டிப்பாக அவரது ஒரு பாடலின் ஓட்டம் எப்படியிருக்கும் என்பதை யூகிக்க முடியும். குறைந்தது மனதுக்குள்ளாவது ஓட்டிப் பார்த்துவிட முடியும். இது அவரது மைனஸோ, குறையோ அல்ல. இது ரசிக்கும்படியான ஒரு ராஜா ஜானரின் க்ளீஷே. (உடனே எஸ்.ஏ.ராஜ்குமார் க்ளீஷே என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு கபீம்குபாம் காத்திருக்கிறது)

ஆனால் இந்தப் பாடலின் சரணம் ஆரம்பிக்கும்போது அது எப்படி போகும் என்பதை யூகிக்க முடியவில்லை. முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ஸ்ட்ரிங்க்ஸ் அடுத்த வரிகளுக்கு லீட் கொடுக்க, அடுத்த 24 நொடிகள், விடாமல் நதி நீர் ஓடுவதைப் போல சீராக மேலே ஏறி இறங்கி வளைந்து நெளிந்து அழகாக மீண்டும் பல்லவியில் முடிந்தது.

ஆச்சரியத்திலும் வரும் வழக்கமான அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டு அந்த சரணத்தை ரீவைண்ட் (வழக்கொழிந்து போன வார்த்தையோ?) செய்து மீண்டும் கேட்டேன். எப்படியும் அடுத்த சரணமும் இதே மெட்டுதான். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய முதல் சரணத்தை இரண்டாம் முறையும் கேட்க வேண்டும் என்ற ஆசை. 'i just wanted to relive that moment' என்பதைப் போல.

அதே பிரவாகம், அதே ஆச்சரியம், அதே கெட்ட வார்த்தை, பல்லவி வந்தது. அடுத்த இண்டர்லுயூட் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்னப் படம், என்ன பாடல், யார் நடித்தது எனத் தேட, ஈஸ்ட்மென் கலரில் கே.ஆர். விஜயா ஓடி வருவது போல ப்ரிவியூ வந்தது. ''மம்மி பிராமிஸ்ஸாக இந்தப் பாடலை பார்க்கும் ஆசை வந்து விடக்கூடாது'' என நினைத்து அந்த பக்கத்தை மூடிவிட்டு மீண்டும் பாடலுக்கு வந்தேன். இரண்டாவது சரணம் ஆரம்பித்தது.
ரெண்டு பத்திக்கு முன்னால் சொன்னதில் 'டிட்டோ'.

முதலில் சொன்னதைப் போல, ''எப்படி இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டது?, பாடப்பட்டது, அதுவும் ஒரே டேக்கில் எப்படி அந்த சரணத்தை முடித்திருக்க முடியும்??, என்ன ராகமாக இருக்கும்???, இவ்வளவு நாள் நம் கண்ணில் (காதில்) எப்படிப் படாமல் போனது????, சே அம்மா அப்பா கூட சொல்லவே இல்லையே'' என கலந்து கட்டிய எண்ணங்கள், கேள்விகள்.

பாட்டின்  'ரிஷி மூலம்' தெரிந்தது. டவுன்லோட் செய்தேன். வேலையை முடித்து விட்டு முதல் வேலையாகப் பாடலை மீண்டும் கேட்டேன். சக ராஜா ரசிகன் நண்பனுக்கும் அனுப்பினேன். ''கண்டிப்பாக அவனும் கேட்டிருக்க மாட்டான். கேட்டிருக்கக் கூடாது. பாடலை அவனுக்கு அறிமுகம் செய்த பெருமை என்னயே சேர வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இந்தப் பாட்டை பிரபலப்படுத்தலாம். ஒரு வேளை நாம் தான் லேட்டோ? இந்தப் பாடல் ஏற்கனவே பிரபலமோ?'' என்றெல்லாம் தேவையில்லாத பல சிந்தனைகள்.

இன்றைய நாளின் வேலைகள் அனைத்தும் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், (வரும் வழியில் என் மொபைலிலும்) ஹெல்மெட்டை அப்படியே வைத்துவிட்டு அம்மா அப்பாவிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேச, நான் நினைத்தது போல அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ''இப்பதான் நீ கேக்கறியா?" என்ற அம்மாவின் கலாய்ப்போடு என் அறைக்கு வந்து, நண்பனுடன் சிறிது நேரம் பாடலைப் பற்றி சாட்டில் சிலாகித்து விட்ட போதும் அடங்கவில்லை.



அந்த நேரம் பார்த்து ஒருவர், ராஜா காப்பியடித்த பாடல்கள் என்ற யுடியூப் லிங்கை பகிர்ந்திருந்தார். அது இன்னும் எரிச்சல் ஏற்ற இதோ இந்த நீண்ட நெடிய பதிவு.

இதற்கு மேல் என்ன சொல்ல? 'நண்டு' படத்தின் இந்திப் பாடல், 'ஆராதனையில்' வரும் ''இளம் பனி துளி'', ''ஒரு குங்கும செங்கமலம்'', 'எச்சில் இரவுகளின்' ''பூ மேலே வீசும் பூங்காத்தே'' இப்படி நான் காலம் கடந்து தெரிந்து, என்னை ஆச்சரியப்படுத்திய பல ராஜா பாடல்கள் வரிசையில் ''மழை வருவது மயிலுக்கு தெரியும்'' பாடலும் சேர்ந்தது.

வரிகளை கவனிக்கும் போது இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமாக இருந்தது. தன் மகனை காணப் போகும் ஒரு தாயின் எண்ணம் எப்படி இருக்கும், அவள் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருப்பாள், எப்படி பதைபதைத்திருப்பாள் என்பதெயெல்லாம் பாடலைப் பார்க்காமல் கேட்டதிலேயே புரிந்தது.

வழக்கமாக நாயகன் நாயகி டூயட், இல்லையேல் பேத்தாஸ் என போர் அடித்துக் கொண்டிருந்தவருக்கு புதிதாக கிடைத்த சிச்சுவேஷன், சோளப் பொறியாக இருந்தாலும், இருந்த பசிக்கு இதுவே போதும் என ஒரு கை பார்த்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் தாங்க் யூ ராஜா!!

அந்தப் பாடல்:



பி.கு - காப்பியடிப்பது எந்த வகையிலும் சரியான செயல் அல்ல. அதை நான் இங்கு நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாத் துறையில் ஒரு கிரியேட்டர் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து, தெரிந்து, உணர்ந்து கொண்டிருக்கிறேன். டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது, இருக்கும் சப்ளையில் ஒன்றிரண்டில் குறைகள் இருக்கலாம். அதிலும் ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு ஒன்பதனாயிரம் பாடல்களைப் போடுவது என்பது சாத்தியம் அல்ல. க்ரியேட்டிவிட்டிக்கு நேரம் தேவை. அப்படி நேரமில்லாத நிலையிலும், நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டும், சில வெளிநாட்டுப் பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே என் யூகம். (கதை வேணும், ஆனா படம் 3 மாசத்துல ஆரம்பிக்கனும், உங்க அவசரத்துக்கு புதுசா கதை வராது, அப்போ இருக்கவே இருக்கு ஒலகப் பட டிவிடி).

ஆனால் சிம்பனி பாடல்கள் தனது இன்ஸ்பிரேஷன் என்பதை ராஜா எங்கும் மறுத்ததாக தெரியவில்லை. அதே போல, எஸ்.டி பர்மன் பாடல் ஒன்று எப்படி படிப்படியாக இஞ்சி இடுப்பழகி ஆனது என கமல்ஹாசன் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பரவலாக பல பாடல்கள் தழுவப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ராஜாவிடம் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது என்பதை ஒழுங்காக இசை தெரிந்த எவரும் ஒப்புக் கொள்வார்கள்.  என்பது திண்ணமோ திண்ணம். 

Saturday, August 16, 2014

மற்றும் பல - 16/08/2014


Writers Block, சோம்பேறித்தனம், மெத்தனம் இதில் எது என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தோன்றவில்லை, அதனால் எழுதவில்லை. இதுவே காரணம்.
ஏன் தோன்றவில்லை?
ஒரு வேளை நான் மந்தமாகிவிட்டேனோ என்னவோ. என் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது ஏதோ வாழ்ந்து கெட்ட குடும்பம் போல தோன்றுகிறது. முன்பெல்லாம் அவ்வபோது ஏதோ ஒன்றை எழுதி வந்துள்ளேன். ஆரம்பித்த வருடத்தில் 59, அடுத்த வருடம் 58, அடுத்து 36 என பதிவுகளின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 2+ வருடங்களாக நான் எழுதிய பதிவுகள் மொத்தமே 10 தான். எழுதும் ஆர்வம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது இங்கே எதிரொலிப்பது இல்லை. இனிமேல் நமக்கு முன்பு போல் எழுதவே வராதோ என்று கூட பயம் வருகிறது. மேலும் மேலும் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வழக்கம் போல எழுதாமல் விடவேண்டாம் என்பதால், இதோ. எங்காவது உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

-----------------------------------------------------------------------


பல நாட்கள் கழித்து ஒரு முழுமையான மாஸ் பட அனுபவத்தை வேலையில்ல பட்டதாரி தந்தது. என் நினைவுக்கு எட்டிய வரை, கடைசியாக தூள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த உணர்வு இருந்தது. தேவியில், மொத்த அரங்கமே கொண்டாடிய படம் அது. அந்த அனுபவத்திற்காகவே அங்கு மேலும் இரண்டு முறை பார்த்தேன். அப்படித்தான் இருந்தது வே. ப. படத்தின் பாடல்கள் வந்த நாள் முதல் ஒட்டிக்கொண்டு விட்டது. படமும் அப்படியே. இன்று திரைப்படம் என் போன்ற ரசிகர்களினால் 50 கோடியை தாண்டியுள்ளது. harmless entertainment. ஜெயிப்பதில் மகிழ்ச்சியே. முக்கியமான ஒரு சம்பவம். படத்தில் ஒரு கெட்ட வார்த்தை வரும்போது, புரிந்து கொண்டு, நானும், தியேட்டரில் மிகச் சிலருமே கைதட்டிய போது, இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகிவிடும் என்று தோன்றியது. 


-----------------------------------------------------------------------


எப்படி வே.ப பார்க்கும்போது தூள் நினைவிற்கு வந்ததோ, அதே போல ஜிகர்தண்டா பார்க்கும்போது சூது கவ்வும் நினைவிற்கு வந்தது. இரண்டு படங்களுமே முற்றிலும் புதுமையான ஒரு அனுபவத்தைத் அரங்கில் இருப்பவர்களுக்கு தந்தன. தமிழ் திரைக்கு புதிய விஷயங்களைத் தந்தன. டேர்டி கார்னிவல் படத்தின் காப்பி என வதந்தி உலவியதால், முதலிலேயே அந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஆனால் ஜிகர்தண்டா பார்க்குபோது அப்படி எந்த ஒரு அம்சமும் ஒத்துப் போகவில்லை. படம் தந்த பிரம்மிப்பில் பல விஷயங்களை சரியாக கவனிக்கவில்லை. மீண்டும் அரங்கில் பார்க்க வேண்டும். 


-----------------------------------------------------------------------


கடந்த சில மாதங்களில் வெளியான எந்தப் பாடல்களும் சகிக்கவில்லையே. என்ன காரணம்? 


-----------------------------------------------------------------------


 அஞ்சான் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் கிடைத்தலும் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். ட்ரெய்லர் தந்த பயம் அப்படி. இன்று படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பிறகு, "கடவுள் இருக்கான் குமாரு" என்று தோன்றியது. ஏன் இந்தப் படம் ஓடக் கூடாது என நினைத்தேன் என்று தெரியவில்லை. படத்தின் விளம்பரங்களிலிருந்தே ஒரு விதமான திமிர் தெரிந்தது. அதீதமான நம்பிக்கை அல்ல. திமிர் மட்டுமே. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இனி நமது கோலிவுட் மகான்கள் இந்த கமெர்ஷியல் கடுப்புகளைக் கட்டி அழ மாட்டார்கள் என ரசிகர்கள் சிலர் நினைக்கின்றனர். இந்த ஊரில் தான் குருவி, வில்லு, சுறா, ஜில்லா, பட்டத்து யானை, அலெக்ஸ் பாண்டியன், ஏகன், பழனி போன்ற படங்களை எடுத்து, ஊமைக் குத்தாக வாங்கி, வைத்தியம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களா அஞ்சானிலிருந்து தெரிந்து கொள்வார்கள்? ஆயிரம் ஜிகர்தண்டா வந்தாலும் சிலர், அப்படித்தான். 


-----------------------------------------------------------------------


ராஜாவின் நல்ல பாடல்களைப் பகிர்ந்து பல காலம் ஆகிறது. இந்தப் பாடல் தெலுங்கில் 'மரண மிருதங்கம்' என்ற திரைப்படத்திலிருந்து. பாடலில் ஏதோ ஒரு mystery இருப்பது போல தோன்றுகிறது. அதுவே பாடலை (எனக்கு) சுவாரசியமாக்குகிறது. பொதுவாக தெலுங்கு பாடல்களை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்து விட்டு பாடல் பிடிக்காம போய்விட்டால்? இதையும் அப்படியே. பி. சுசீலா, எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல், இதோ... 






Wednesday, November 25, 2009

மற்றும் பல...

வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சில updates பதிவுகளுக்கு தான் இப்போ மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி, அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும், அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??    
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
 நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->லிங்க்  
 --------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->இங்க
------------------------------------------------------------------------------------------------------------- 
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...       
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

Tuesday, May 12, 2009

நான் கெடுத்த பாட்டு நம்பர் 2

-->இங்க<-- சொன்னது போலவே, மறுபடியும் feel பண்ணி மிக்ஸ் பண்ண பாடல் இது. கலக்கப்பட்ட ரெண்டு பாடல்கள் 1. உன் சமையல் அறையில் + 2. kaise kahen (from hindi film Shiva). மிக்ஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. இப்ப போஸ்ட் எதுவும் போட யோசனை வரலை, அதான் என் ப்ளோகை படிக்க வர அந்த 4 கோடி ஆட்களை ஏமாத்த வேண்டாம்னு, ஒரு filler. கேட்டுட்டு எப்படி கீதுன்னு கமெண்டுங்க.


Dil - Shiva Mix | Upload Music

Friday, January 16, 2009

நான் கெடுத்த பாட்டு

முதல் ரீமிக்ஸ் பாடல் பத்தி --> இங்க <-- சொல்லிருந்தேன். நான் பண்ண முதல் ரீமிக்ஸ் பாடல் பத்தி இப்ப சொல்லப்போறேன். நிறைய பாடல்கள் கேட்கும்போது, "இத மாதிரியே ஒரு பாட்டு இருக்கே"னு தோணும். அப்படி எனக்கு பலப் பாடல்கள் தோணிருக்கு. அதுல ஒண்ணு தான் இது. யுவன் ஷங்கர் ராஜா, தன் அப்பாவோட பல பாடல்கள உல்டா பண்ணி, கம்போஸ் பண்ணிருக்கார். குறிப்பிட்டு சொல்லனும்னா, பாலா படத்துல வர "தீண்டி தீண்டி" (உபயம்: itwofs.com) பாடல்.

நான் ரீமிக்ஸ் செஞ்ச பாடல், புதுக்கோட்டை சரவணன் படத்துல வர "நாட்டு சரக்கு" and கரகாட்டகாரன் படத்துல வர "ஊரு விட்டு". ரெண்டு பாட்டுமே எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள். நான் செஞ்சது ரீமிக்ஸ் கணக்குல வராது. இருந்தாலும் இரண்டு பாடல்களையும் கலந்து கட்டி மிக்ஸ் பண்ணதால, நானே இத ரீமிக்ஸ்னு சொல்லிக்கறேன் ;) இத செஞ்சது ஒரு 3-4 வருடங்களுக்கு முன்னாடி. use பண்ண software, soundforge. cooltoad.comல upload பண்ணி, யாராவது அவங்களோட ரீமிக்ஸ் இதுனு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயந்து, delete பண்ணிட்டேன். அந்த ரெண்டு பாடலையும் நீங்க கேட்டிருப்பீங்க, இங்க ரீமிக்ஸ் இருக்கு. இந்த amateur ரீமிக்ஸ கேட்டுட்டு எப்ப்டி இருக்குன்னு சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச மிக்ஸ் இது :)



Ooru - Sarakku | Music Codes

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமிருந்து

இந்த வருஷத்த "ரொம்ப எதிர்பார்த்தா ஏமாந்து போய்டுவீங்க" வருஷம்னு கொண்டாடலாம் OR "தமிழ் சினிமா ரசிகர்கள் பல்பு வாங்கின வருடம்"னு கொண்டாடலாம். பீமா, குருவி, குசேலன், ஏகன் வரிசைல அடுத்து வாரணம் ஆயிரம். நேத்து (nov 14) இந்த படத்த, கமலா தியேட்டர்ல என் அண்ணாத்த + his friends கூட பாத்தேன்.. தியேட்டர்ல sound effect நல்ல இருந்துச்சு. A/C off பண்ணிட்டு fan போட்டது நல்லா technique.

கதைனு பெருசா ஒன்னும் இல்ல. ராணுவத்துல வேலை செய்யற (ஒரு rescue operationku helicopeterla பயணம் பண்ணிக்கிட்டு இருக்குற) ஜூனியர் சூர்யாவுக்கு அவர் அப்பா (சீனியர்) சூர்யா இறந்துட்டார்னு தகவல் வருது. கண்ணீரோட தன் அப்பாவ பற்றிய நினைவுகள அசை போடுறார் ஜூனியர் சூர்யா. இந்த படத்த நிஜமாவே முழு நீ............ள...... படம்னு சொல்லலாம். மொத்தம் மூணு மணி நேரம்.

கதைய பத்தி சொல்றத விட்டுட்டு, மத்த விஷயங்கள சொல்றேன். மொத்த படமும் சூர்யா தான். சூப்பரா நடிச்சிருக்காரு. குறிப்பிட்டு சொல்லனும்னா, அப்பாவா வர எல்லா காட்சிகளும் and மகனா வரும்போது, போன்ல அழுதுகிட்டே தன் காதலிய பற்றி சொல்லும்போது + drugs addict ஆனா அப்பறம் தன் அப்பா அம்மாகிட்ட கெஞ்சும்போது and trainla first time சமீராரெட்டிய பாக்கும்போது.

அடுத்து யாரு நல்லா நடிச்சிருக்காங்கன்னு பார்த்தா, சிம்ரன். வயசு உணர்ந்து [;)] நடிச்சிருக்காங்க. Exacta சொல்லனும்னா முதிர்ந்த நடிப்பு. யாருமே over the topனு சொல்றா மாதிரி இல்ல. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க. படத்துக்கு தேவையில்லாத விஷயம்னு பார்த்தா நிறைய இருக்கு.. First half நல்லா இருக்கு. But second half எங்கெங்கயோ போகுது.

படத்துல வர ரெண்டு resue operation, ரொம்ப நீளமா இருக்கு. கடைசில அப்பா கேரக்டர் இறந்த அப்பறம் டக்குனு படத்த முடிப்பாங்கனு பார்த்தா, அதுக்கு அப்பறமும் ஒரு பெரிய action sequence. தியேட்டர்ல பல பேர் பொறுமையே இல்லாம கமெண்ட்ஸ் அடிச்சிகிட்டே இருந்தாங்க.படத்துல நிறைகள்னு பார்க்கும்போது ஒளிப்பதிவு, Realistic சண்டை காட்சிகள் and superb songs. எல்லா பாட்டுமே semma choreo + picturisation. Especially ஏத்தி ஏத்தி and அஞ்சல songs. அனல் மேலே பாட்டு மட்டும் நம்ம பொறுமைய சோதிக்குது.

Double action காட்சிகள் எல்லாமே, excellentaa shoot பண்ணிருக்காங்க. நல்லா இருக்கு. அந்த கால சென்னைய ரொம்பவே அக்கறை எடுத்து காட்டிருக்காங்க. படத்துக்கு இசை ஹாரிஸ் இளையராஜ்னு சொல்ற அளவுக்கு, படத்துல நிறைய pop-culture reference. இளையராஜாவா ரொம்ப பெருமைபடுத்திருக்காரு கௌதம். ஆனா இந்த படத்துக்கு இவ்ளோ நீளம் தேவையான்னு தெரியல. Post-interval, theatre முழுக்க எக்கச்சக்க கொட்டாவீஸ் அண்ட் நிறைய கமெண்ட்ஸ்.

பாட்டு மட்டும் இல்லனா ரொம்பவே போர் அடிச்சிருக்கும். படம் ரிலீஸ் முன்னாடியே டைரக்டர், இந்த படம் தவமாய் தவமிருந்து மாதிரி இருக்கும். சேரன் எனக்கு ரொம்ப புடிச்ச டைரக்டர்னு எல்லாம் alibi create பண்ணிகிட்டாறு. அதுக்காக அதே type of narration வெச்சு பண்ணிருக்க வேண்டாம். த.தவமிருந்து மட்டுமில்ல, ஆட்டோகிராப், 7gனு பல படங்களோட பாதிப்பு தெரியுது.

படம் முடிஞ்ச அப்பறம், படத்த, கௌதம், அவரோட அப்பாவுக்கு dedicate பண்றாரு. அது ஏன் மத்தவங்க காசுல எடுத்த படத்த, தன்னோட அப்பாவுக்கு dedicate பண்றாருனு தெரியல. கடைசில போனா போகுதுன்னு படத்தோட தலைப்புக்கான அர்த்தத்த, வாரணம் ஆயிரம்னு தொடங்குற திருப்பாவை பாசுரத்த வெச்சு சொல்லிகிறாங்க.

Overall, இசைக்காகவும், சூர்யாவோட உழைப்புக்காகவும், நடிப்புக்காகவும் படத்த பார்க்கலாம். மத்தபடி எல்லாம் average. கடவுள்தான் படத்த காப்பாத்தனும்...


http://im.sify.com/sifycmsimg/nov2007/Entertainment/Movies/Tamil/14568385_vaaranam7a.jpg
இனிமே நீங்கதான் mujik போடுவீங்களா???

Friday, November 7, 2008

காதல் கசக்குதய்யா - Part 2

முதல் பாகம் படிக்காதவங்க --> இங்க போய் <-- படிச்சிட்டு அப்பறம் தொடருங்க...

என் முறை வந்ததும் பாடறத்துக்கு மேடை ஏறினேன். கூட வாசிக்க ஒரு drumpad + keyboard இருந்துச்சு.. அவங்க குத்து மதிப்பா வாசிக்கறதா சொன்னாங்க. நான் வழக்கம் போல பெருசா பீல் பண்ணாம " காதல் கசக்குதய்யானு" ஆரம்பிச்சேன். அவ்வளவுதான். எல்லாரும் கத்த ஆரம்பிச்சாங்க. கத்தல்னு சொல்றத விட, ஆரவாரம்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும். அவ்ளோ ஆரவாரத்துக்கு மத்தியில, கண்ண மூடிகிட்டு நெஜமாவே ரொம்ப ரசிச்சு பாடினேன்.

பாடி முடிச்சு மேடை இறங்கி வரும்வரை ஆரவாரமும் கைதட்டலும் நிக்கல. கீழ இறங்கி வந்ததும், தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லாம் பாராட்ட ஆரம்பிச்சுடாங்க. இதுவரைக்கும் நான் பாடின எல்லா சமயங்கள்ளையும், பாடி முடிச்சவுடனே எல்லாரும் பாராட்றது சகஜம் (என்ன தன்னடக்கம்!!!). அந்த மாதிரி பலபேர் பாராட்டுனாலும், நெறைய தடவ எனக்கு பரிசு கிடைச்சதில்ல. இதுவும் அது மாதிரி ஒரு பாராட்டுதான்னு நெனச்சேன். ஆனா, எனக்கு கெடச்சது முதல் பரிசு. நம்பவே முடியாத ஒரு தருணம் அது.

போட்டில participate பண்ணவே முடியாதுங்கற நிலைம போய், முதல் பரிசுனா எப்படி நம்ப முடியும். வாய்நெறைய, நம்பமுடியாத சிரிப்போட போய், prize வாங்கினேன். நான் பாடினத விட, பாடினதுக்கும், அந்த பாட்டிற்கும் கெடச்ச கைதட்டலும் ஆரவாரமும்தான் எனக்கு பரிசு வாங்கி கொடுத்துச்சு. அப்பதான் புரிஞ்சிகிட்டேன், போட்டிகள்ள, judgea விட, பாட்டு கேக்கற ரசிகர்களோட response தான் முக்கியம்னு. அடுத்த ரெண்டு வருஷம், என் காலேஜ்ல நடந்த ரெண்டு பாட்டு போட்டிலயும் (வருசத்துக்கு ஒண்ணுதான் நடக்கும்) நான்தான் first prize வாங்கினேன்.

Second year "பனிவிழும் மலர்வனம்" and third year, போக்கிரி படத்துல வர "வசந்த முல்லை" பாடல்களும் பாடினேன். அந்த ரெண்டு வருஷமும் judgea வந்தது, எனக்கு முதல் வருஷம் studenta இருந்து ஹெல்ப் பண்ண என்னோட சீனியர்s, கௌதம் பரத்வாஜ் and ஹரிணி. இந்த hat-trick அடிச்சதுல, என்ன விட, என் அம்மாவுக்கும் நண்பர்களுக்கும்தான் ரொம்ப பெருமை. இந்த வெற்றிகள்ள என் seniors பங்கும் இருக்கு. அவங்க நான் எப்ப பாடுனாலும் நல்லா உற்சாகப்படுத்துவாங்க.

இப்ப recenta, என்னோட PG first yearla, போன வாரம் எங்க காலேஜ்ல (அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த பாட்டு போட்டியிலையும், முதல் முறையா (அதாவது இந்த காலேஜ்ல முதல் முறையா), காதல் கசக்குதய்யா பாடல் பாடி first prize வாங்கினேன். பரிசு வாங்கினதும், அந்த மேடைலையே, இளையராஜா sirku ஒரு தாங்க்ஸ் சொன்னேன். என் seniorsoda விருப்பத்திற்கு இணங்க, காதல் கசக்குதய்யா பாடல நான் பல மேடைகள்ல சும்மா போய் பாடிருக்கேன். என் நண்பன் ரகுவும் அந்த பாடல பாடும்போது ரொம்ப ரசிப்பான்.

So, இதுதான் காதல் கசக்குதய்யா பாடல் என் வாழ்க்கைல ஒரு அங்கமா மாறின கதை. இத்தருணத்திலே, என்னை சிறு வயதிலிருந்து, பாட உற்சாகப்படுத்திவரும் என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும், என் seniorskum முக்கியமாக இளையராஜாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கீழ அந்த play buttona கிளிக்கினா அந்த பாடல் கேட்கலாம்... கவலை படவேண்டாம், இது நான் பாடினது இல்ல, original version of the song...
காதல் கசக்குதய்யா முற்றும்..

Saturday, November 1, 2008

காதல் கசக்குதய்யா - Part 1

பி.கு.feelingsa நான் எதுவும் சொல்ல வரல. இது காதல் கசக்குதய்யானு ஆரம்பிக்கற ஒரு பாட்டு பற்றி சொல்ற பதிவு..

என்னோட இரண்டாம் கிளாஸ் படிக்கும்போதுதான் முதல் தடவை ஒரு பாட்டுப் போட்டியில கலந்துகிட்டேன். என்னோட முதல் பாடல் "காதல் ரோஜாவே" from "ரோஜா", அதுல எனக்கு first prize. அதுக்கப்பறம் நெறைய போட்டிகள்ள கலந்துகிட்டு நெறைய மொக்கைகளும், சில பரிசுகளும் வாங்கிருக்கேன். காலேஜ் போன அப்பறம் கூட, பாட்டு போட்டி பழக்கத்த விடாம வெச்சிருந்தேன். முதல் வருஷம் நான் கலந்துகிட்ட ஒரு போட்டியாலதான் எனக்கு ஒரு ஞானோதயம் கெடச்சுது..

காலேஜ்ல என்னோட சீனியர்s, airtel super singer புகழ், கௌதம் பரத்வாஜ் and காதல் படத்துல வர்ற "தொட்டு தொட்டு என்னை" பாடல் பாடுன ஹரிணி. அதுவரைக்கும் பல பரிசுகள் வாங்கினவங்க, அவங்களோட final yearla, organising teamla வந்துட்டாங்க. So, அவங்க மேற்பார்வைல நடந்த ஒரு போட்டிக்கு நான் போனேன், நான் நல்லா(!!!) பாடுறத பாத்துட்டு(கேட்டுட்டு), கௌதம் என்னபத்தி கேட்டாரு. விசாரிச்சதுல அவருக்கு என் அண்ணன நல்லா தெரியும்னு தெரிஞ்சுது. (என் அண்ணனும் அதே கல்லூரிதான்)

கௌதம் பரிச்சயம் கெடச்சதுனால, பல போட்டிகள் பற்றி தெரிய ஆரம்பிச்சுது (including ஆஹா பாடலாம் in DD). ஆனா காலேஜ் annual day song competition பற்றி எனக்கு சொல்ல மறந்துட்டாரு. competition finals எங்க காலேஜின் பெரிய ஹால்ல நடக்கும். So அத shoot பண்ண சொல்லி எங்க சார் சொல்லும்போதுதான் எனக்கு அந்த போட்டிய பத்தி தெரியவந்துச்சு. போற வழில கௌதம் வர, நான் அவர பாத்து, ஏன் சொல்லலனு கேட்டேன். அவர் நெஜமாகவே மறந்து போயிருந்தாரு, organiser வேற.

So அத ஒரு பெரிய mattera எடுத்துக்காம (பெருந்தன்மையோட) "சரி அடுத்த முறை கலந்துக்கறேன்"னு சொல்லிட்டேன். நானும் என் cameraman friend பிரேமும், கொஞ்ச நேரம் அங்க கேமாராவும் கைகளுமா அலைஞ்ச அப்பறம், திடீர்னு கௌதம் என்கிட்டே வந்து, "நாங்க பத்து participants செலக்ட் பண்ணிருந்தோம், அதுல ஒரு பையன் வரல, அதுக்கு பதிலா நீ பாடுறியா"னு கேட்டாரு, நானும் இதுல என்ன இருக்குன்னு நெனச்சிகிட்டு சரின்னு சொன்னேன்.

பிரேம், "என்ன பாட்டு பாடப்போறே"னு கேட்டான். அந்த காலகட்டத்துல, என்னோட இன்னொரு friend ரகுநாத், ஆண் பாவம் படத்துல வர்ற "காதல் கசக்குதய்யா" பாடல டவுன்லோட் பண்ண சொல்லி கேட்டுகிட்டிருந்தான். நானும் டவுன்லோட் பண்ணேன், அத எங்க ஆடியோ லேப்ல போட்டு கேட்டுகிட்டே இருப்போம். So, அந்த பாடல் பாடலாம்னு முடிவு பண்ணேன். Judge யாருனா, டைலாமோ பாடல பாடுனா திருமதி.சங்கீதா ராஜேஸ்வரன். கடைசியா என்னோட முறை வந்துச்சு. பாடறத்துக்கு மேடை ஏறினேன்......

தொடரும்....

http://www.city.sendai.jp/kikaku/kokusai/english/images/simc.jpg
இவ்ளோ பிரம்மாண்டமா இல்லனாலும், ஏதோ இருந்துச்சு

Thursday, August 28, 2008

FIRST REMIX SONG

I shared my views about remix songs, sme 2 months before... here s the first ever remix song (as far as i know).... tuned by raja in the telugu film "Detective Naradha"(1993), the song is a remix from the film "Gundamma Katha" released in the year 1962 (I think they made it in tamil too). Its not a complete remix, raja adds his own touches to the song and makes it good (again). im posting both the songs here, hear it and let me know wats ur views about it...
remix sung by SPB and Chitra, dunno abt the original....and i cant help if u dunno telugu

p.s. i strongly believe that this one is the first remix song, atleast in south...

p.s.(2) if ur using any download managers like internet download manager, disable the browser integration in its preferences and then hear the songs

the original


Get this widget | Track details | eSnips Social DNA


the remix


D_N.mp3

Thursday, July 24, 2008

Incredible ilayaraja

As you already knw, im a music buff and a big fan of ilayaraja... i've heard hundreds and hundreds of raja's songs in different languages, but as i was born in "post raja-pre rahman" period, i've missed out some of raja's best songs... wen bala anna told me to get this song, i thought it'l be an average one, but wen i heard it, its an (another) amazing composition..

The song is frm the film "Aaradhanai"..Namma kasimedu aadhi, adhan suman, avar dhan padathoda hero...i dunno whether the film was a hit but this song is another gem frm ilayaraja... lik other music fans/bloggers i dunno much to describe a song...but im sure u'l lik it... Sung by not so famous female lead, Radhika...listen to the base guitar thru out the song... thanks to bala anna for introducing me to this song...3 cheers (to raja, radhika and bala anna)....and this topic will be a series of different songs of ilayaraja in different languages...

p.s.i recommend not to see the video of the song after listening to it...totally spoils the song... immediately closed the window wen i saw gundu kalyanam in the first frame of the song's vdo...


Aaradhanai-Ilampan...
the streaming depends on ur bandwith
thanks to blogeswari for giving me this player idea