Showing posts with label Mine. Show all posts
Showing posts with label Mine. Show all posts

Wednesday, July 18, 2012

மீள் பதிவும், நோலனும்

கடைசியாக நான் பதிவெழுதி 3 மாதம் 15 நாட்கள் ஆகிறது. உருப்படியாக எதுவும் எழுதவில்லையென்றாலும், எழுதும் பழக்கம் விட்டுப்போகக் கூடாது என்பதே நான் பதிவெழுத ஆரம்பித்தக் காரணம். "Writer's Block" இதை தமிழ்பெயர்ப்பது எப்படி எனத் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்றரை மாத இடைவேளைக்கு காரணம் அதுவே. இந்தப் பதிவிலும் உருப்படியாக எழுத ஒன்றுமில்லை. ஆனால், எழுதத் தூண்டியது, கிறிஸ்டோஃபர் நோலன் என்ற அதி அற்புதமான இயக்குனர். 

டார்க் நைட் ரைஸஸ் படத்தின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, நோலனின் கடைசி படமான இன்செப்ஷனைப் பற்றி நான் எழுதிய பதிவுகளும், அதற்கு கிடைத்த வரவேற்பும் நினைவிற்கு வந்தது. அவ்வளவு உற்சாகத்துடன் பதிவு எழுதிய கார்த்திக் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன், கிடைத்ததால் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

830px-Thefirerises.jpg (595×363)

பல வலைதளங்களில், பதிவுகளில், கிறிஸ்டோஃபர் நோலன் என்கிற 
இயக்குனரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். கூகுளில் கிறிஸ்டோஃபர் நோலன் என்று தமிழில் தேடினாலே, எக்கச்சக்க தள இணைப்புகள் உங்களுக்கு கிடக்கும். அவரது மெமண்டோவைப் முழுதாகப் பார்க்கும் தைரியம், இன்னும் எனக்கு வரவில்லை. கவனிக்கவும், பொறுமை என்று சொல்லவில்லை, தைரியம்தான் வரவில்லை. “என்னடா நமக்கு புரியாம ஒரு படமா, ஒரு வேளை இந்த படம் நமக்கு புரியாமலே போய்டுமோ” என்ற பயமே. எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் பார்த்துவிடும் நம்பிக்கை வரும் என நினைக்கிறேன். இவரது படங்களில், வசனங்களுக்கும், காட்சியமைப்புகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் சரியான விகிதத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்பதால், வரப்போகும் புதிய பேட்மன் படத்தை சத்தியமாக சப்டைட்டில்ஸ் இல்லாமல் பார்த்தால் புரியாது. தமிழில் பார்க்கலாமென்றால், வெளியாகும் திரையரங்குகளின் தரம், சத்யம் திரையரங்க கழிவறைகளின் தரத்திற்கு கூட ஈடாகாது. எது எப்படியோ, புரியாவிட்டாலும், இரண்டு வாரங்களில் அந்தப் படத்தை சத்தியத்தில் பார்ப்பது என தீர்மானித்தாகிவிட்டது. 

என்னை மீண்டும் பதிவெழுதத் தூண்டிய கிறிஸ்டோஃபர் நோலனிற்கு நன்றி. 
டார்க் நைட் ரைஸஸ் வெளியாகப்போகும் இந்த வேளையில், இன்செப்ஷனைப் பற்றிய என் பழைய பதிவுகளுக்கு ஒரு சின்ன விளம்பரம் :)



Tuesday, January 24, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 4

போன வருஷம் நான் பார்த்து ரசிச்ச படங்கள், பாடல்களோட லிஸ்ட் இது.
எதுவும் மிஸ் பண்ணலை. உங்க ரசனையோட ஒத்து போகலன்னா ரொம்ப அலட்டிக்காதீங்க. என்னடா இதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானேன்னு கமெண்ட் பண்ண வேணாம்.

படங்கள்
சரியா எண்ணி பார்த்தா, போன வருஷம்தான் நான் நிறைய படங்கள் பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். ரசனையும் கொஞ்சம் liberalஆ மாறிருக்குன்னு தோணுது. லிஸ்ட் போட்டா அது பெருசா மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி போகுது. கொஞ்சம் கூட்டி குறைச்சு, இங்க ஃபைனல் லிஸ்டை கொடுக்கறேன்.

ஜாலியா ரசிச்ச படங்கள் - தமிழ்

  • ஆடுகளம்
  • காவலன்
  • யுத்தம் செய்
  • பயணம்
  • கோ
  • பயணம்
  • அழகர்சாமியின் குதிரை
  • எங்கேயும் எப்போதும்
  • ஆரண்ய காண்டம்
  • வேங்கை
  • தெய்வத் திருமகள்
  • மங்காத்தா
  • முரண்
  • வேலாயுதம்
  • மயக்கம் என்ன
  • ஒஸ்தி
  • போராளி

இதுல சூப்பர்
ஆடுகளம், காவலன், யுத்தம் செய், கோ, அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆரண்ய காண்டம், முரண்

இதுல என்னோட PICK
ஆரண்ய காண்டம்

நான் மொக்கை வாங்கிய படங்கள்

  • சிறுத்தை (first half + சந்தானம் காமெடி மட்டுமே ரசிச்ச விஷயங்கள்), 
  • நடுநிசி நாயகள்
  • எங்கேயும் காதல்
  • அவன் இவன்
  • வந்தான் வென்றான்
  • வாகை சூட வா
  • 7ஆம் அறிவு (ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆவாது), 
  • ராஜ பாட்டை
  • வானம்
இந்த லிஸ்ட்ல, மங்காத்தவையும், தெய்வத் திருமகள் படத்தையும் சேர்க்கலாம். மங்காத்தா புத்திசாலித்தனமா இருக்கறா மாதிரி ஏமாத்தின ஒரு படம். முதல் முறை அஜீத்தும் பாட்டும் படத்தை காப்பாத்தினாலும், ரெண்டாவது தடவை தியேட்டர்ல உட்கார முடியலை. மொக்கையான மேட்டரை நல்லா மூடி மறைச்சு, ஹைப் பண்ணி மக்களை ஏமாத்திருக்காங்கன்னே தோணிச்சு. கோவா படத்துல தெரிஞ்ச சின்ன சின்ன ஸ்மார்டான விஷயங்கள் கூட இதுல இல்லை. தெய்வத் திருமகள், காபி அடிச்ச படம்னு கடைசி வரைக்கும் படத்தோட சம்பந்தபட்டவங்க ஒத்துக்கவே இல்லை. அதுவே எனக்கு செம்ம கடுப்பு. இதுதான் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா? விக்ரமும் நல்லா ஒப்பேத்தினாரு.

பார்க்க முடியாமல் போன படங்கள்
180, காஞ்சனா, வெப்பம், பட்டா பட்டி, மௌன குரு

இந்திய அளவுல ரசிச்ச படங்கள்
Telugu - Alaa Modalaindhi,
Hindi - Pyaar ka Punchnama, Delhi Belly, Dirty Picture

பார்க்க முடியாமல் போனது
Telugu - Dookudu, Sri Rama Rajyam, 100% love, Golconda High School,
Hindi - No one killed jessica, Stanley ka dabba, Shaitan, Buddha Hoga tera Baap, Aarakshan, That girl in yellow boots

மொக்கை
Ra - One - வலிக்காம அடிச்ச படம். அப்பறம் எல்லாம் ஊமை காயம்.

இதுல டெல்லி பெல்லி படத்துக்கும், தமிழ்ல வந்த ஓரம் போ படத்துக்கும் சில ஒற்றுமைகளை பார்க்க முடிஞ்சுது. ஹிந்தி அளவுக்கு இல்லைனாலும், தமிழ்ல வசனம் கொஞ்சம் வெளிப்படையா இருந்துச்சு. அதே மாதிரி, வைர கடத்தல் மேட்டரும்.

உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
சில படங்கள் பத்தி, சில வரிகள்.
  • Harry Poter Final Part - கண்ணீர் மல்க விடை கொடுக்கலாம்னு நினைச்சேன். தனியா படம் பார்த்ததுனால அழ முடியலை :P
  • Kungfu Panda 2 - முதல் பார்ட் அளவு இல்லைனாலும் enjoyable.
  • Hangover 2 - அதே டெய்லர், அதே வாடகை, ட்ரெஸ் கலர் மட்டும் வேற. நல்லா யோசிக்கறாங்க ரூம் போட்டு.
  • Ides Of March - எவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சரியான பொலிடிகல் த்ரில்லர் படம்
  • Source Code - கொஞ்சம் குழப்பறா மாதிரி எடுத்த படம். ஆனா அப்படி ஒண்ணும் இல்லை. 
  • Bridesmaids - பெண்கள் மட்டுமே முக்கிய பாத்திரங்கள்ள இருக்கற இந்த படத்தை எழுதினதும் ஒரு பெண்தான். அவங்களுக்குள்ள இருக்கற பாசம், நேசம், ஈகோ இப்படி நிறைய விஷயங்களை எந்த சப்பைகட்டும் இல்லாம சொல்லிருக்காங்க.
  • X Men First Class - இன்னா கிராபிக்ஸ். இன்னா ஸ்க்ரீன்ப்ளே.
  • Super 8 - momentum எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தறதுனு கண்டிப்பா அவங்க ஊருக்கு போய் ஒழுங்கா படிச்சிட்டு வரணும். சாதாரண சின்ன பசங்க கதைய, ஏலியன் இன்வேஷனோட முடிச்சு போட்டு, அட்டகாசமா present பண்ணிருந்தாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம ஸ்பீல்பெர்க் தயாரிப்பாச்சே.
  • Bad Teacher
  • Horrible Bosses
  • Crazy, Stupid Love
  • Rise Of Planet Of Apes - இந்த படத்துக்காவது Andu Serkisகு ஒரு ஆஸ்கர் கொடுத்தா நல்லா இருக்கும். சீஸர்னு மனித குரங்கா அவர் நடிச்சிருந்த விதம் எனக்கு தெரிஞ்சு வேற யாருமே பண்ண முடியாத ஒரு விஷயம். 
  • Johny English Reborn
  • MI 4 - Brad Bird மேல வெச்ச நம்பிக்கை வீண் போகலை. பின்னு பெடல் எடுத்திருந்தாரு
  • Tin Tin
  • Tangled

பார்க்க முடியாமல் போனது
Fast Five, Cars 2, Rio, Rango, Transformers, Attack the Block, Sherlock Holmes

இந்த படங்களோட என்னை யோசிக்க வெச்ச இன்னொரு முக்கியமான விஷயம் டிக்கேட் ரேட். ரேட் ஃபிக்ஸ் பண்ண சட்டம் இருக்குனு தெரியும். ஆனா நம்ம கேபிள் அண்ணாச்சி சொன்ன அப்பறம்தான் டிக்கேட்டோட ரேட் இவ்வளவுனு தெரிஞ்சுகிட்டேன். முடிஞ்ச வரைக்கும் சூப்பரான சத்யம்ல பாக்கறதுனால அவங்களுக்கு கொடுத்தா பரவாயில்லைனு தோணுது. ஆனா 
டிக்கேட் மட்டும் இல்லாம, பார்க்கிங் + காண்டீன் சமாச்சாரங்கள்ல மத்த தியேட்டர்கள் அடிக்கற கொள்ளை, யாரும் கண்டுகிட்டா மாதிரி தெரியலை. 


ரசித்த பாடல்கள்

அய்யய்யயோ நெஞ்சு - ஆடுகளம்
யாரது - காவலன்
நான் ரொம்ப ரொம்ப - சிறுத்தை
கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
என்னமோ ஏதோ, அக நக - கோ
வாடா பின்லேடா - மங்காத்தா
கொலைகாரி, நேற்று இல்லை - தம்பு வெட்டோத்தி சுந்தரம்
நெஞ்சில் நெஞ்சில், நாங்கை - எங்கேயும் காதல்
சந்திக்காத, ஊசெல்லா, நியாலமே - 180
காற்றில் ஈரம் - வெப்பம்
சர சர - வாகை சூட வா
சில்லாக்ஸ் - வேலாயுதம்
காதல் என் காதல் - மயக்கம் என்ன
வில்லாதி வில்லன் - ராஜ பாட்டை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு
Kutta - Pyar ka punchnama
Kalaya Nijama - Sri Rama Rajyam

எனவே, இப்படித்தான் எனது 2011 சினிமா வாழ்க்கை கழிந்தது. 2012ல் மேலும் நிறைய ரூபாய்களையும், சக்தியையும் செலவழித்து, படங்கள் பார்த்து மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு டாடா :)

Monday, January 23, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 3

புது வருஷம் பொறந்து ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் என்ன எண்ணிப் பாக்கறதுனு சில பேர் கேட்கலாம். என்ன செய்ய. ஏற்கனவே யோசிச்சு, ஹின்ட்ஸ் வேற எழுதி பதிவுல ஏத்தாம போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா படிச்சிருங்க. இதுக்கப்பறம் இன்னும் ஒரே ஒரு பதிவுதான். அப்பறம் வழக்கம் போல மொக்கை பதிவுகளை ஆரம்பிக்கறேன்.

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி... முடிவு

கன்னத்தில் குத்துவிட்டால்


நவம்பர் மாசம் விவாசயத்துறை அமைச்சர் சரத் பவார் வாங்கின அறையோட சத்தம் இந்தியா முழுக்க கேட்டுது. ஹர்விந்தர் சிங்னு ஒரு சீக்கிய இளைஞர் அத்தியாவசிய பொருட்களோட விலையேற்றத்துல காண்டாகி, நம்மளை மாதிரி பதிவு மட்டும் போடாம அமைச்சரோட கன்னத்துல ஒரு அறையும் போட்டாரு. 
அடிச்சு முடிச்சிட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது என்னோட பதில்னு கையில கத்திய வெச்சிகிட்டே சத்தமும் போட்டாரு. இதுக்கப்பறம் இன்னும் நிறைய பேர் அடி வாங்குவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கலை. still, கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துட்டு வராங்கன்னு நினைக்கறேன். மாட்டிக்கமாட்டேன்னா கண்டிப்பா நானும் உதை கொடுக்க தயார் :)


கால்-திண்டாட்டம்


அடுத்த அதிர்ச்சி இண்டோர் நகரத்துலேர்ந்து வந்த செய்தி. அந்த ஊர் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களோட விளையாட்டுக்கான செலவுகளை பார்த்துக்க, கிரிக்கேட் ஸ்டேடியத்தை சுத்தம் பண்ணாங்களாம். என்ன கருமமோ. இந்த ஒரு செய்தியே, இந்தியால மற்ற விளையாட்டுகளோட நிலைமையையும்,  கிரிக்கேட்டுக்கு நாம தர தேவையில்லாத முக்கியத்துவத்தையும் காட்டிச்சு. தங்களோட கிழிஞ்ச ஷூக்களையும், விளையாட தேவையான பழைய பொருட்களையும் மாத்த இந்த காசு உதவும்னு அந்த வீரர்கள் சொல்லிருக்காங்க. இந்த நிலைமை அந்த மாநிலத்தில மட்டும்தானா இல்லை எல்லா இடத்துலையுமானு தெரியலை. ஒழுங்கா விளையாட தெரிஞ்சதா சொல்லிக்கற கிரிக்கேட்லையும் மரண அடி வாங்கிட்டு இருக்கோம். இதுக்கு செலவழிக்கற பணத்துல கால்வாசிய மத்த விளையாட்டுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஐடியாக்களை லட்சம் பேர் சொல்லிருப்பாங்க. என்ன நடந்துச்சு. எல்லாரும் ஒரு அறை கொடுத்தா சரியா வரும்னு நினைக்கறேன். 


குடிவெறி


கொலைவெறி ஹிட்டான கையோட தமன்னாவோட பர்த்டே பார்டில தனுஷ் போதைல பாடின கொலைவெறிக்கும் நல்ல ஹிட்ஸ் வந்துச்சு. கூடவே நல்ல போதைல தமன்னாவும் பூனம் பாஜ்வாவும் இருக்காங்க. வேற யாரெல்லாம் இருந்திருப்பாங்க்ன்னு ஊகிக்க முடியுது. இதை பார்த்த அப்பறம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ஒண்ணும் திருந்திடப்போறதில்லைனு நினைக்கறேன். தொடர்ந்து நடிகர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்போம். பாலாபிஷேகம் பண்ணுவோம். கோயில் கட்டுவோம். வாழ்க பாரதம்.

அடுத்த பதிவுல. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள்,  2011 பாடல்கள் + படங்களை பத்தி சொல்லிட்டு, இந்த வருட எண்ணிப்பார்த்தேனை முடிச்சிக்கறேன்.. நன்றி :)

Saturday, January 7, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 2

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..

ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்

நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல  பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும்  சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க.  இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india

டின் டின்

சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.

கொலைவெறி

2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.

தற்கொலை


தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....

Wednesday, January 4, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 1


வருஷக் கடைசில பதிவு போடறேன்னு சொன்னது வழக்கம் போல லேட் ஆனதுக்கு வழக்கம் போல மன்னிக்கனும். போன வருஷத்தை எண்ணிப் பார்த்ததுல, சில விஷயங்கள் நல்லதாவும், பல விஷயங்கள் கெட்டதாவும் நடந்திருக்கு. கெட்ட விஷயங்களை வாழ்க்கைப் பாடமா எடுத்துகிட்டேன். வேற என்ன பண்றது. இப்போ, போன வருஷம் நடந்து, பதிவு போட முடியாம போன சில விஷயங்களைப் பத்தி கடகடன்னு சுருக்கமா சொல்லிடறேன். அதை நீங்க விரிவா படிச்சு தெளிவாய்டுங்க :)

பவர் 

கரென்ட் கட் பிரச்னை பெருசாகி அதுவும் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமா இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, தொடர்ந்து பல இடங்கள்ள பவர் கட் தொடர்ந்துட்டேதான் இருக்கு. என் நண்பர்கள் பல பேர் புலம்பிட்டே இருக்காங்க. இதனால அவங்களோட முக்கியமான வேலைகளும் கெட்டு போறதா பீல் பண்றாங்க. இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சுரணை இழந்து அதை தட்டி கேட்க மறந்துட்டாங்க. அடுத்த எலெக்ஷன்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ (ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்ல இவங்களேதான் வின் பண்ணாங்க). யார் செஞ்ச புண்ணியமோ தெரியலை, என் ஏரியால கரென்ட் கட் ஆகறதே இல்லை. (நான்  திருவல்லிக்கேணி வாசி). அதே மாதிரி இந்த லைப்ரரிய மாத்தற திட்டமும் ஏகோபித்த எதிர்ப்ப சம்பாதிச்சிருக்கு. மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம். இவங்களுக்கு யார் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லிதராங்கன்னு தெரியலை.

BBC பறந்து போச்சு 

என் BBC வேலையை விட்டதைப் பத்தி --> இங்க ரெண்டாவது பத்தில  எழுதிருந்தேன். இன்னமும் சரியான வேலை கெடைக்கல. மத்த துறைகள்ல இருக்கற ஒரு முக்கியமான விஷயம் மீடியால இல்லைன்னு படுது. வேற எங்கயுமே, அந்த கம்பெனி HR ஆளை நேரடியா காண்டாக்ட் பண்ணி வேலை கேட்கலாம். அவங்களும் பொறுப்பா இருக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க. ஆனா, மீடியால மட்டும் HRனு ஒரு ஆள் இருந்தாலும், நாம அனுப்பற resume ஒழுங்கா போய் சேருதானு தெரியலை. கால் பண்ணாலும் ஒழுங்கான பதில் வரதில்லை. முக்கியமா ஏதாவது ஒரு வடிவத்துல சிபாரிசு தேவைப்படுது. கடுப்பா இருக்கு. சும்மா இருக்ககூடாதுன்னு பல வேலைகளை செஞ்சிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம், நமக்குன்னு ஒரு வேலை இல்லாமலா போய்டும்.

Revolution  2020

இந்த வருஷம் வெளியான சேட்டன் (மலையாளி இல்லை) பகத்தோட இந்த நாவல், ப்ரீ ஆர்டர் பண்ணி, ரிலீசுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து சேர, ஒரே மூச்சுல படிச்சேன். அவரோட க்ளீஷே நிறைய இருந்துது.  ஒவ்வொரு கேரக்டரோட உணர்வுகளை கரெக்டா சொல்லிருந்தாலும், ஒரு கட்டத்துல கதை எழுத்தாளரோட கண்ட்ரோல்ல இல்லையோன்னு தோண ஆரம்பிச்சுது. க்ளைமாக்ஸ்ல அது conform ஆச்சு. ஆனாலும் சேட்டனுக்கு மற்றுமொரு வெற்றி.

Facebook Page
என்ன கருமத்துக்கெல்லாம் page ஆரம்பிக்கறதுன்னு இல்லையா. இந்த page பாருங்க. https://www.facebook.com/Tamilanchors . என்ன ஒரு மகா வெட்டி வேலை. சாதாரண போட்டோ இல்லமா, டிவில வரதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேற போடறாங்க. இதை சில பேர் ஷேர் வேற பண்ணாங்க. கலி முத்திடுச்சுனு தெரிஞ்சுது.

நானும் ஜட்ஜ் ஆனேன்


காலேஜ்ல நடந்த பாட்டு போட்டியோட முதல் ரவுண்டுக்கு என்னை நாட்டமையா வர சொல்லி என் ஜூனியர்ஸ் கூப்டாங்க. முதல்ல தயக்கமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். அங்க போன அப்பறம், இன்னும் பல பேர் என்னை ஞாபகம் வெச்சிருக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. வழக்கம் போல பல ப்ளாஷ் பேக் நிகழ்வுகள் வந்து மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துது. என்ன செய்ய. its all fate.

தொடரும்.....

Friday, December 31, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2010

போன வருஷங்கள்ல நான் எழுதின எண்ணிப்பார்த்தேன் பதிவுகளுக்கு மக்கள் கொடுத்த  அமோக (!!!!) வரவேற்ப்பை முன்னிட்டு. இந்த வருஷக் கடைசியிலும் வழக்கம் போல, 2010ல் எனக்கு பிடிச்ச, படங்கள் + பாடல்கள் பற்றிய ஒரு பதிவு... இந்தப் படங்கள் பிடிக்க பெரிய காரணங்கள் என்ன இருந்திடப் போகுது. அதனால, ரொம்ப நீட்டி முழக்காம, பெயர்களையும், சில படங்களுக்கு நான் எழுதின விமர்சனங்களோட லிங்கையும் கொடுத்திருக்கேன்.

பிடித்த படங்கள்
  • ஆயிரத்தில் ஒருவன்
    நிறைய பேர் வறுத்தெடுத்தாலும், இந்தப் படம் நல்ல அனுபவம். ரசிகர்கள்னு பொதுவா சொல்ல முடியல, ஆனா படத்துக்கான மனநிலைய எனக்கு சரியா செட் பண்ணிச்சு... விமர்சனம் --> இங்க முதல் பத்தியில.
  • கோவா
    மறுபடியும், ஊர் ஆயிரம் சொன்னாலும், எனக்கும், என் நண்பர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம். செம்ம கலாட்டா... விமர்சனம் --> இங்க
  • விண்ணைதாண்டி வருவாயா
    மூணு தடவை தியேட்டர்லையே பாத்தேன். இதுக்கு மேல எதாவது சொல்லணுமா?? சிம்பு பேர், கார்த்திக்னு இருந்தது முக்கியமான காரணம்...
  • சிங்கம்
    இந்த வருஷத்தோட சிறந்த மாஸ்னு சொல்லலாம். எந்திரனைவிட செம்ம மாஸ்.
  • பாஸ் என்கிற பாஸ்கரன்
    நோ நான்சென்ஸ் படம்னு சொல்லலாம். ரொம்ப light-hearted, feel good படம். விமர்சனம் -->இங்க ஆறாவது பத்தியில ரெண்டே லைன்..
  • எந்திரன்
    தலைவரோட மேஹ்........ ப்ளாக் ஷீப் சீனுக்காகவே ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன். இன்னொருமுறை பார்க்கலாமான்னு யோசிக்கறேன். ஷங்கர் என்கிற ஒற்றை ஆளோட சாதனை. மேக்கிங் பார்த்த அப்பறம், இன்னமும் பிடிச்சுது... விமர்சனம் --> இங்க
உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
  • இன்ஸெப்ஷன்
    (இதை பத்தி நான் எழுத்திய சில உரைநடை விளக்கப் பதிவுகள்
    இங்க --> ஒண்ணு - இன்னொன்னு - இன்ன்ன்னொன்னு - கடைசியா ஒண்ணு)
  • ஹாரி பாட்டர் 7
    நான் பாட்டர் fan. அதை விட எம்மா வாட்ஸன் fan. இதுக்கு மேலையுமா காரணங்கள் தேவை??
  • UnStoppable
    படம் நல்லா விறு விறுனு இருக்குனு சொல்லுவாங்களே. அப்படி இருந்துச்சு...
  • டாய் ஸ்டோரி 3 - விமர்சனம் --> இங்க
  • ஷட்டர் ஐலாண்ட்
  • கராதே கிட்
  • How to Train your Dragon
  • Kick - Ass
  • Easy A .. விமர்சனம் --> இங்க  ரெண்டாவது பத்தி
  • The Social Network.. விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தி
மொக்கை கொடுத்த/வாங்கிய படங்கள்
  • தமிழ் படம் - விமர்சனம் ---> இங்க மூணாவது பத்தியில.
  • கச்சேரி ஆரம்பம் - விமர்சனம் --> இங்க
  • பையா - விமர்சனம் --> இங்க
  • ராவணன் - விமர்சனம் --> இங்க
  • இனிது இனிது
    ஒரிஜினல்ல இருந்த எளிமை, இதுல இல்லாதது பெரிய குறை. பெருசா ஒன்றமுடியலை.
  • நந்தலாலா
    மிஷ்கினின் திமிருக்கும், கர்வத்துக்கும் கிடைச்ச சரியான் அடி. ரொம்ப ஸ்லோ.
    நான் பெரிய அறிவாளி இல்லை. அதனால் கூட இந்தப் படம் பிடிக்காம இருந்திருக்கலாம்...
  • ரத்த சரித்திரம்
    ரத்தம் மட்டும்தான் இருந்தது.. சரித்தரம் ஒண்ணுத்தையும் காணோம்.
  • ஈசன் - விமர்சனம் --> இங்க  முதல் பத்தியில
  • Owl - Guardian - விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தியில
  • அவதார்
    மொக்கை வியட்னாம் காலனி கதைய, ரீ மாடல் பண்ணி கொடுத்து ஊரை ஏமாத்திட்டாங்க். டெக்னிகலா நிஜமாவே மிரட்டலான படம். ஆனா கதை திரைக்கதையெல்லாம் அப்படியே ஒரு மொக்கை தமிழ் படம் மாதிரி இருந்த்து எனக்கு பெரிய disappointment.
  • மன்மதன் அம்பு - விமர்சனம் ----> இங்க கடைசி பத்தியில
ரசித்த பாடல்கள்
கொஞ்சம் பெரிய லிஸ்டு. ஓவரா வர்ணிக்காம பெயர்களை மட்டும் எழுதறேன்...
  • ஆரோமலே (கலெக்டர்ஸ் எடிஷன்ல இருக்கற ஸ்ரேயா கோஷல் வெர்ஷனும் சேர்த்து) - விண்ணைத்தாண்டி வருவாயா
  •  ஹே துஷ்யந்தா - அசல்
  • இது வரை -கோவா
  •  என் காதல் சொல்ல - பையா
  • தாக்குதே - பாணா காத்தாடி
  • அடடா மழைடா - பையா
  • அம்மா தல்லே - புலி (தெலுங்கு)
  • பெஹெனே தே - ராவண் (இந்தி)
  • கிளிமஞ்சாரோ - எந்திரன்
  • ஊத்து தண்ணி - மகிழ்ச்சி
  • உன்னை கண் தேடுதே - வ கு.க
  • அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
  • இமைத்தூதனே - இளைஞன்
  • நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
  • Love the Way you Lie - Eminem ft Rihaana - Recovery
விட்டுப்போனவை
  • என் நெஞ்சில் - பாணா காத்தாடி
  • ஏழேழு தலைமுறைக்கும் - கோவா
  • சிரிக்கிறேன் - பலே பாண்டியா
  • Dhochey, பவர் ஸ்டார் - புலி (தெலுங்கு)
  • அரிமா அரிமா - எந்திரன் - அருமையான picturization.
  • உச்சுக் கொட்ட - மகிழ்ச்சி
  • உஸ்ஸுமலரசே - உத்தம்புத்திரன்
  • காதல் வந்தாலே - சிங்கம்
  • தகிடுதத்தோம் - மன்மதன் அம்பு
  • தோழா வானம் - இளைஞன்
  • நாங்கை - எங்கேயும் காதல்
பொதுவா நான் சிறந்த படம், பாட்டுனு அவார்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, இந்த வருஷம் கொடுக்கலாமோன்னு தோணுது... அதனால,
என்னை பொறுத்த வரைக்கும், இந்த வருஷத்தோட
சிறந்த பாடல் கோவா படத்துல வர இது வரை,
சிறந்த படம் - விண்ணைத்தாண்டி வருவாயா...
சிறந்த இசையமைப்பாளர் - யுவன்








எல்லாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..

    

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Friday, October 22, 2010

இவங்க பண்ற காமெடிக்கு.....

எங்களுக்கு ஜர்னலிசம் சொல்லி கொடுக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் சொன்னாங்க. தமிழ்நாட்ல, ரஜினி, கருணாநிதி அண்ட் ஜெயலலிதா, இவங்க எது பண்ணாலும் அது முக்கியமான நியூஸ். இதுல முக்கியமா நம்ம சூப்பர் ஸ்டார், முக்கினா முனகினா, எது பண்ணாலும் நியூஸ். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரஜினி எப்பவுமே விளம்பரங்கள் பின்னாடி ஓடினது இல்லை. அவர் பின்னாடிதான் எல்லா விளம்பரங்களுமே. சென்னைல, NDTV ஹிந்து அப்படின்னு ஒரு சுமாரான நியூஸ் சானல் வந்துகிட்டு இருக்கு. நடுவுல, ஹாண்ட்ஸ் அப் அப்படீங்கற ப்ரோக்ராம்ல, வெங்கட் பிரபு + தமிழ் பட டைரக்டர் + இந்த சானல், எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி பரபரப்பு க்ரியேட் பண்ணாங்க.அப்போதான் நிறையே பேருக்கு இந்த சேனலைப் பத்தி தெரிய வந்துச்சு.

இதே சேனல்ல, சென்னை ஸ்பீக்ஸ் அவுட் அப்படின்னு தரை மொக்கையா ஒரு விவாத நிகழ்ச்சி போய்கிட்டு இருக்கு. போன வாரத்துல ரஜினிய  வெச்சி ஏதொ டாபிக். நிறைய பேர் அதைப் பத்தி சொன்னதால, யூ டியூப்ல பார்த்தேன். ஞானி + சுதாங்கன் ரஜினிக்கு எதிராகவும், சின்மயி + ஸ்ரீதர் பிள்ளை ஆதரவாகவும் பேசினாங்க. உளறினாங்கனு சொல்றதுதான் கரெக்டா இருக்கும். எந்த சைடும் ஒழுங்கா பேசாம, ஒரே மேலோட்டமான விவாதமாவே இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த பதிவு எதுக்குன்னா, தயவு செஞ்சு இந்த மாதிரி மொக்கை ப்ரோக்ராமை என்கரேஜ் பண்ணாதீங்க.

இதோ அந்த ரஜினி விவாதம் எபிசொட்....











ஞானி + சுதாங்கன் ரெண்டு பேருக்கும் நல்லாவே வயசாகிடுச்சுன்னு நினைக்கறேன்... இதுல சுதாங்கன் வேற தப்பு தப்பா ஸ்டாடிஸ்டிக்ஸ் கொடுக்கறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சின்மயி அவங்க ட்விட்டர் பக்கத்துல, "ரஜினிக்கு ஆதரவா பேச நாங்க இருந்தோம், எதிர்த்து பேசதான் ஆள் இல்லை. அதனாலதான் சுதாங்கன்னும் ஞானியும் பேசினாங்க. அவங்க ரெண்டு பேருமே ரஜினி ரசிகர்கள் தான். ஆள் இல்லாததால, அவங்க பேசினா பிரச்னை வராதுன்னு நினைச்சதால, அவங்கள பேச வெச்சாங்க"ன்னு சொல்லிருக்காங்க.. யார் இன்னா சொன்னான் என்ன, தூற்றுவார் தூற்றட்டும். கீழ இருக்கற படங்களைப் பாருங்க. ஒரு மெகா ஹிட்டு படம் கொடுத்த மனுஷன் மாதிரியா இவர் இருக்கறாரு...???

 
 

Monday, September 6, 2010

நான் எடுத்த இன்செப்ஷன்

இந்தப் படத்துக்கும் இன்செப்ஷனுக்கு இருக்கற ஒரே ஒற்றுமை, ரெண்டுமே ஒப்பன் எண்டிங். அவ்வளவே. அதனாலையோ என்னமோ, இன்செப்ஷனோட முடிவை நான் யூகிச்சிட்டேன். இந்த படம் எடுத்து ரெண்டரை வருஷம் ஆவுது. ஏற்கனவே -->இங்க<-- இதை பத்தி சொல்லிட்டேன், இருந்தாலும் இன்செப்ஷன் காத்தடிக்கும்போதே தூத்திக்கலாம்னு... தயவு செஞ்சு பாக்காதவங்களும், ரிப்பீட் ஆடியன்சும், உங்க கருத்துக்களை சொல்லுங்க...

Wednesday, August 18, 2010

Inception பதில்கள் - 3

இன்னும் தொடருது...

@ஜெய்
//படத்துல புரியாதது காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... //
 கண்டிப்பா அப்படி இல்லை...

//நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு,
நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்... //
இருக்கலாம்... ஆனா நூறு சதவீதம் அப்படியேன்னு நினைக்கவும் முடியாதே...

//இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா... //
நோலனுக்கு வேற வேலையே இல்லைங்க. வாங்க ஆர்க்யூ பண்ணுவோம் :)

//முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) //
அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்...

//முடிவு கனவுன்னு சொல்லணும்னா.......அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...//
எனக்கு அதே மாதிரி டிரெஸ்னு தான் தோணுது..

//குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்... //
நீங்களும் காப் மாதிரியே பேசறீங்களே...

//ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ...//
கண்டிப்பா அது  ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க.

//அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)//
இதை ரெண்டு விதமா சொல்லலாம். அவர் தண்ணிக்குள்ள மயக்கத்துல இருக்கார்னும், ஏற்கனவே லிம்போல இருக்கறதால, அங்கேர்ந்தே சைட்டோவா தேடற வேலைய தொடங்கரார்னும் வெச்சுக்கலாம். ஏன்னா, ஃபிஷர காப்பாத்தின அப்பறம், அவர் எந்த கிக்கும் பயன்படுத்தலை

//ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்............
மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)//
இது என்னோட புரிதல் கூடவும் கொஞ்சம் ஒத்துப்போகுது. ஃபிஷர் செத்ததா முடிவு பண்ணவே இல்லை. இயாம்ச ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டுதான் அவங்க லிம்போவுக்கு போறாங்க.

//நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்.....அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க... //
அது லிம்போதாங்கர்துல இன்னும் என்னக்கு எந்த டவுட்டும் வரலை. இனிமேலும் வராதுன்னு நினைக்கறேன்.

//இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... //
அதுதான் டைரக்டரும் எதிர்பார்க்கறார்...
 
//மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக்....... தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா?//
இந்த இடத்துல, இன்னொரு interpretationஉம் சில பேர் முன்வைக்கறாங்க. இயாம்சொட இடத்துல போயிட்டு, அந்த செடேஷன பரிசோதிக்கற இடத்துலேர்ந்து (தாத்தா டயலாக் அப்பறம்) எல்லாமே காபோட கனவுன்னும் சொல்றாங்க.

//Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one.//
படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது.

@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.

//ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.//
தல, நானும் கனடா கபோதிக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்கள refer பண்ணி, இதைப் பத்தி எழுதி, ஒரு மெயில் அனுப்பினேன். பப்ளிஷ் பண்ணலை. இலக்கியவாதிகள மதிக்கத் தெரியாத கம்மனாட்டி பசங்க.. இதைப் பத்தி, ராணி முத்துல வேலை செய்யற என்னோட தோழிகிட்ட கூட, டப்ளிங்க்ல ஒக்காந்து பேசியிருக்கேன்.

@ஜெய் 
//நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?//
கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் ....

@ஜெய் + பாலி
ஸ்வேதா யாரு??

அடுத்த பதிவுல, நண்பர் பத்மநாபன் கேட்டா மாதிரி, படத்தோட கதைய முடிஞ்சவரைக்கும் சிம்பிளா எழுதறேன்.. மறுபடியும் எல்லாருக்கும் நன்றி.. :)
கேள்விகள் இல்லாமையே பதில் சொன்னா அதுக்கு என்ன பேரு???

Thursday, August 12, 2010

Inception பதில்கள் - 2

போன பதிவுல சொன்ன பதில்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா, அதுவே கமெண்ட் பேஜ்ல நிறைய வந்துருச்சு. அதனால தனிப்பதிவா போட்டு, கல்லா கட்டலாம்னு பாக்கறேன் :P

@எஸ் கே -
மிக்க நன்றி :)

@பாலி -
தல, நீங்க வேற ஒரு முக்கியமான வேலைல இருந்தாதால உங்க வேலை பளுவ குறைக்க முயற்சி செஞ்சேன் :)
கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது. இத மாதிரி ரெண்டு மூணு சந்தேகங்களுக்காகவே ரெண்டு முறை படத்தை பார்த்தேன்...
அண்ட்மன்னிக்கவும், முதல் கேள்விய ஒழுங்கா படிக்காம பதில் சொல்லிட்டேன். ஓபன் எண்டிங்னு சொன்னது முடிவ. ஆரம்பம் லிம்போதான்..
ஏன், விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னீங்க??? இங்க கண்டிப்பா வேற யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க. கவலைபடாதீங்க.

@சர்வேசன்
//லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?//
எனக்கு நிஜமாவே உங்க கேள்வி புரியலைன்னுதான் சொல்லணும் :(
இருந்தாலும் கொஞ்சம் விளக்கிடறேன்.
முதல் லெவல் -  யூசுபின் கனவு - அங்க கிக் அந்த தண்ணில விழற வண்டி
இரண்டாவது லெவல் -  ஆர்தரின் கனவு - அங்க கிக் லிப்ட்டு
மூணாவது லெவல் - இயாம்ஸோட கனவு - அங்க கிக் அந்த இடம் தகர்க்கபடுவது, அப்போதான் எல்லாரும் அப்படியே கீழ இருக்கற அஸ்திவார பள்ளத்துல விழுவாங்க.
நாலாவது லெவல் - யாரோட கனவும் இல்லை, லிம்போ - அங்க கிக் எப்படியாவது நாம லிம்போல இருக்கோம்னு உணர்ந்து, சாவறது or free fallaa கீழ விழறது...

@ஜெய்
//அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... //
மிக்க நன்றி :)

//இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை...//
வாங்க பழகலாம் :))

//நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்...//
எனக்கு பாம்பே டைம்ஸ் படிக்கற தோழி கூட இல்லை... யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. :(
நான் சென்னை டைம்ஸ் படிப்பேன் :P

// கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா//
மொத்த டெம்ப்ளேட் தான் மாத்தணும் தல ;(

//முதல் காட்சி ரியல் இல்லைதானே?//
மறுபடியும் மன்னிச்சு.. கேள்விய ஒழுங்கா பார்க்கலை..அது ரியல் இல்லை. லிம்போ

//இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல/?
நேரடியா எங்கயும் சொல்லல. ஆனா சில டயலாக் imply பண்ணுது. அதனாலதான் சொன்னேன்.

// எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...?//
ஃபிஷர் போனது காபின் லிம்போவுக்கு. அதனால அவரை ஈசியா கண்டுபுடிக்கறாங்க. முதல்ல டென்ஷன் ஆவர்துக்கான காரணம், அவங்க அவங்களோட லிம்போவுல காணாம போயிடுவாங்கன்னு காரணத்துனால. சைட்டோவ காப்பத்த காபுக்கு எவ்வளவு காலம் புடிச்சிதுனு படத்துல சொல்லல. ஆனா அவர் சைட்டோவை கண்டு புடிக்கும்போது,  சைட்டோ தொண்டுக்கெழமா இருக்கறாரு. காபிற்க்கும் ஒரு 40-50 வயசு இருக்கறா மாதிரி முடி எல்லாம் நரைச்சிருக்கு.

//ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க??//
மால் அங்க வரக்கூடாதுன்னு தான், கனவுகளோட ஆர்க்கிடேக்ச்சர காப் தெரிஞ்சிக்காம இருக்காரு. ஆனா, அரியாட்னே எமேர்ஜன்சி என்ட்ரி பத்தி சொல்லும்போது காபும் அதை கேட்டுடறார். அதனால மாலுக்கும் இப்போ அங்க எப்படி போறதுன்னு தெரியும். அப்படிதான் மால் அங்க வராங்க. ஹீரோவின்  மனைவி எப்பவுமே லிம்போலதான் இருக்காங்க. காபுக்காக வெயிட் பண்றாங்க. இங்க முக்கியாமான விஷயம், லிம்போல இருக்கறதும், ஒவ்வொவொரு முறையும் பிளான கெடுக்கர்தும் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.

//மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?//
திருத்தம், மூணாவது லெவல்ல அடிபட்டு, நாலாவது லிம்போவுக்கு போயிட்டு, மறுபடியும் மூணாவது லெவலுக்கு வரார். வீரியம் குறைஞ்சு போய், திரும்ப defibrillatorஅ கிக்கோடா சின்கரனைஸ் பண்ணி அவர உயிரோட கொண்டு வராங்க.

//சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? //
அதானால்தான் அரியாட்னே சுட வரும்போது தடுத்து, அவர் லிம்போலயே இருக்காரு.

//அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?//
அவங்க ஒரு பதட்டத்துல சுட வரும் போதுதான் காப் சொல்லுவாரு, சைட்டோ இந்த நேரத்துக்கு இறந்துருப்பாறு, அதனால அவர தேடி கூப்ட்டுட்டு வரேன்னு.

//மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...//
நான் கவனிக்கலை. ஒரு யூகத்துலதான் சொன்னேன்.

//ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு?//
முன்னாடியே சொன்னா மாதிரி, இதுக்கு எந்த significanceஉம் இருக்கணும்னு அவசியம் இல்லை. நாம கொஞ்சம் ஓவராவே யோசிக்கறோம் ;)

// நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும்//
இத மாதிரி ஓபன் எண்டிங் படங்கள்ல, தப்பு எது, ரைட்டு எதுன்னு சொல்லவே முடியாது.

 மறுபடியும் கேள்வி கேட்ட எல்லாருக்கும் நன்றி. இன்னும் இருந்தாலும் கேளுங்க. எதையும் தாங்கும் 'இதையும்'.. :)

இன்னுமா நான் யாருன்னு தெரில??? ஹா ஹா ஹா

Inception பதில்கள்

என்னடா சின்னப் பையனாச்சேன்னு யாரும் கேள்வி கேட்காம விட்டுருவாங்களோன்னு நினைச்சேன். இருந்தாலும், என்னையும் மதிச்சு சில கேள்விகள் கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இப்போ பதில்களுக்கு போவோம்.

திரு பத்மநாபனின் கேள்வி
  • please explain the story na?
முதல்லையே போட்டாரு பாருங்க ஒரு போடு. கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடிச் சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு வந்துடறேன்.

திரு ரமியின் கேள்விகள்

  • Is the movie is begin in dream or real?
 அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending.
  • Actually what is the climax in this movie?
பாசிடிவா சொல்லனும்னா, அவங்க வெற்றிகரமா வேலைய முடிச்சிட்டு, நாயகன் காப் தன்னோட குழந்தைங்களோட இணையராருனு வெச்சிக்கலாம். இல்லை, நெகடிவா போனா, காப் வேலையை சரியா முடிக்காம, லிம்போல மாட்டிகிட்டாருனு வெச்சிக்கலாம். இல்ல, ஒரு தரப்பினர் சொல்றா மாதிரி, படம் முழுக்கவே, காபோட கனவா இருக்கலாம். இதுக்கு பதில் இல்லைனு சொல்றதுதான் உண்மையான பதிலா இருக்கும். 
  • Different between extraction and inception?
ரொம்ப சிம்பிள். Extraction - சப் கான்ஷியஸ்ல / மண்டைல இருக்கற ஒரு விஷயத்தை திருடறது. Inception - அப்படியே உல்டா. அவங்க சப் கான்ஷியஸ்ல, அவங்களுக்கே தோணுவது மாதிரி ஒரு எண்ணத்த விதைப்பது. இதுல, Inception தான் ரொம்பக் கடினமான வேலை, ஏன்னா, விதைக்கற எண்ணம் அந்நியமா இல்லாம, அவங்களே யோசிச்சா மாதிரி இருக்கணும். 
  • Is there any explanation in movie that these are all possible or not?
இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன். இதெல்லாம் சாத்தியமா இல்லையான்னு இந்தப் படத்துல எங்கயும் ஆதாரத்தோட காமிக்கல.

திரு ஜெய்யின் கேள்விகள்
  • அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?

    அது லிம்போதான்..
  • அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா? 
                  அது லிம்போதான்னு நான் சொல்றதுக்கான காரணங்கள். லிம்போ யாரோட கனவும் கிடையாது. அது ஒரு பொரம்போக்கு நிலம் மாதிரி. அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். தெரிஞ்ச இடத்துக்கு நாம ஈசியா மத்தவங்கள கூட்டிட்டு போறதில்லியா, அது மாதிரி. ஹீரோவும் அரியாட்னேயும், ஹீரோவோட கனவுல இருக்கற லிம்போவுக்கு போறாங்க. ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. ஏன்னா, அவங்களோட முதல் + கடைசி விருப்பம் காபோட எப்பவும் ஒண்ணா இருக்கனும்ங்கறது மட்டுமே. அரியாட்னேயும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்பி வரதுதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே. லிம்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிகிட்டு வராத பாக்கற அர்யாட்னே, மேல உள்ள லெவல்ல கிக் ஆரம்பமானதா உணர்ந்து, ஃபிஷர கீழ தள்ளி விட்டுட்டு, தானும் குதிக்கறாங்க.
  • ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
அது லிம்போதான். காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க. ஃபிஷரின் வலியின்மைக்கான காரணங்கள், என்னோட யூகத்தின் அடிப்படைல சொல்லனும்னா,  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டு திரும்ப வந்ததுனால இருக்கலாம். ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம்.
  • ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு? 
செத்துப்போனவுடனே  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டாரு. உடனே, மாலும் சுடப்படறாங்க. முன்னாடியே சொன்னா மாதிரி, லிம்போவுக்கு போயிட்டு வந்தவங்களால, மறுபடியும் அதுக்குள்ள சுலபமா போக முடியும். போன பதில்ல சொன்னா மாதிரி, காபுக்காக ஃபிஷர பணயக்கைதி மாதிரி ஒழிச்சு வெக்கறாங்க மால். இதுல முக்கியமான விஷயம், இது எல்லாமே, காபையும் அறியாம, அவரோட குற்றஉணர்வின் பிரதிபலிப்பான மால் செய்யறாங்க. உண்மையான மால் எப்பவோ இறந்து போய்ட்டாங்க.
  • முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)
இது சொல்ல வந்த காண்டக்ஸ்ட்ல நீங்க எடுத்துக்கலைன்னு நினைக்கறேன். அவங்க லிம்போலதான் இருக்காங்க. நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். ஆங்கிலத்துல வர டயலாக் இதுதான், "Don't lose yourself!! Find Saito and bring him back!"  . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க.
  • ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?
ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு.

  • முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?
கண்டிப்பா ஓபன் எண்டு தான். ரெண்டு வாட்டி டோட்டம் விழுந்ததற்கான காரணம் ரொம்ப சிம்பிள்னுதான் நான் நினைக்கறேன். அதோட சரியான வடிவமைப்பும், எடையும், எப்படி வேலை செய்யும்னும்  காபுக்கு நல்லாவே தெரியும். அது ஏன் அவர் கனவுல ஒழுங்க வேலை செய்யக்கூடாது. முக்கியமா, டோட்டம், நாம மத்தவங்க கனவுல இருக்கோமா இல்லையாங்கறத சொல்லுமே தவற, நம்மலோடதுல இல்லை.
  • க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), 
முன்னாடியே sollitten. ஓபன் எண்டு.
  • ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.
அப்படியும் ஷட்டர் ஐலாண்ட் மாதிரி யோசிக்கலாம். ஒப்பன் எண்டு தான்
  • ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?
சில நேரங்கள்ல, டைரக்டர் சொல்ல வராத விஷயங்களைக் கூட நாமே புரிஞ்சிப்போம். அப்படியே தான் நீங்க கேட்கறதும் இருக்கு, அதனால, அதே மாதிரியே பதிலும் சொல்றேன்.  ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். நிஜத்துல அதுவரை அவர் போடாததுக்கு காரணம், தன்னோட மனைவியோட நியாபகங்களும், அது தர குற்ற உணர்வும் தான். கிளைமாக்ஸ்தான் படத்தோட முதல் காட்சி. அப்படி அது வேற காட்சியா இருந்தா, படம் முழுக்கவே ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துக்கலாம். ஷட்டர் ஐலாண்ட் தியரிய அடிப்படையா வெச்சு, ஹீரோ தன்னோட குற்ற உணர்வ போக்க, இதையே திரும்ப திரும்ப செய்யறாருன்னு வெச்சிக்கலாம்.

திரு சர்வேசன் கேட்ட கேள்வி
  • பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?
நீங்க முதல்ல வர பனிச்சரிவ  சொல்றீங்கன்னு நினைக்கறேன். அது, அவங்க முதல் லெவல்ல வர van நிலை தடுமாறி ஒரு ரோலிங் அடிச்சிட்டு நிக்கர்துனால ஏற்படுவது. அது நல்ல வேளையா கிக்கா மாறாம, எல்லாரும் அதை மிஸ் பண்ணிடறாங்க. அந்த  அதிர்வு, பனிச் சரிவோட போய்டுது.இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக. (தில்லாலங்கடி கிக்கு இல்லை)

இன்னும் கேள்விகள் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க, அதுக்கு பார்ட் 2 பதிவு போட்டுடலாம். திரு பத்மநாபன் கேட்டா மாதிரி, வேற ஒரு பதிவுல, முழுக்கதையும் சொல்றேன். ஒரு வேளை நான் சொன்னதும், என்னோட புரிதலும் தப்பா இருந்தா திருத்துங்க. கேள்வி கேட்ட அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.. :)



இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??


Monday, August 9, 2010

Inception பற்றிய கேள்விகளுக்கு

நான் ஏதொ பெரிய லாடு லபக்கு தாஸ் மாதிரி பேசறேன்னு நினைக்காதீங்க... இந்தப் படம் எனக்கு கொஞ்சம் நல்லாவே புரிஞ்சிருச்சுனு தைரியத்துல சொல்றேன். உங்களுக்கு இந்த படத்தைப் பத்தின எதாவது சந்தேகம் இருந்தா, பின்னூட்டமா போடுங்க, பதில் சொல்றேன். பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மூடிகிட்டு இருக்கும்போது, உனக்கென்னனு ஈகோவோட யோசிக்காதீங்க. ஏதொ என்னால முடிஞ்ச சமூக சேவை.. :)

பி.கு யாரும் எந்த சந்தேகமும் கேட்காம மொக்கை கொடுத்துருவாங்கனு ஒரு பயமும் இருக்கு. இருந்தாலும் பரவால்ல. வந்தா மலை.

பி.கு 2 - ஏதோ யோசிச்சேன். மறந்துட்டேன்

எதுவா இருந்தாலும் தைரியமா பயப்படமா கேளுங்க...

Thursday, August 5, 2010

எந்திர-ப்-புலி

சீனியாரிட்டி படி, புலி படத்தோட பாடல்கள் பற்றி பேசுவோம்/சறேன்

புலி, தெலுங்கு படம். சிரஞ்சீவி தம்பி, பவன் கல்யான் ஹீரோவா நடிக்கறார். நம்ம BF எஸ்.ஜே. சூர்யா (best friend)  டைரக்டர். இவங்க காம்பினேஷன்ல முதல்ல வந்த, தமிழ் குஷி ரீமேக், ஆந்திரப் பிரதேசத்துல மிகப் பெரிய ஹிட்டு. அதனால, இந்தப் படத்துக்கு நியாயமான எதிர்பார்ப்பு இருக்கு. மியூசிக் வேற நம்ம ஆஸ்கர்மான். So, அதுக்கும் எதிர்பார்ப்பு. படத்துல மொத்தம் ஆறு பாடல்கள். ரகுமானின் தாக்கத்தோட, சூர்யாவோட தாக்கம் அதிகமா இருக்கு. ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த பாடல்கள். எல்லா பாடலைப் பற்றியும் ஓரிரு வரி/வார்த்தைகள்..


பவர் ஸ்டார் - அநேகமாக ஒபெனிங் சாங். நல்ல ரிதம். ஹோசன்னா விஜய் பிரகாஷ் பாடிருக்கார். கூடவே தன்வி, தெலுங்கையும் கடிச்சு துப்பிருக்காங்க. தெலுங்கு சுமாரா தெரிஞ்ச எனக்கே தெரியுது, லிரிக்ஸ் கொஞ்சம் காமெடியா இருக்குனு. மத்தபடி, பாடல் சூப்பர் ஹிட் ஆக நிறைய அறிகுறிகள் இருக்கு.

அம்மா தல்லே - ஆங்கிலத்துல டங் டிவிஸ்டர்ஸ்னு சொல்லுவாங்க, அதுமாதிரி, வார்த்தைகளை வேகமா அடுக்கிட்டே போறாங்க. அழகா பாடவும் செஞ்சிருக்காங்க, பாடகி சுஜாதாவோட பெண் ஸ்வேதா. கூட நம்ம நரேஷ் ஐயர். இந்தப் பாடலைப் பற்றி ஒரு சின்ன எக்ஸ்ட்ரா பிட்டு. நியூ படத்துல உபயோகப்படுத்த முடியாமப் போன மார்கண்டேயா பாடலோட வாடை, இந்தப் பாடல்ல, பலம்மா இருக்கு.

மாரலண்டே
- ரஹ்மானே பாடிருக்கார். அவரோட ரசிகர்கள் சொல்றா மாதிரி, திரும்ப திரும்ப கேட்டாலும், முதல் ரெண்டு பாடல்கள் இம்ப்ரெஸ் பண்ண அளவுக்கு, இது ஈர்க்கலை. ரஹ்மானோட கே.எம் மியூசிக் கன்செர்வேடரி மாணவர்களோட சேர்ந்து இந்தப் பாடலை பண்ணிருக்கார். நாட்டுக்கு நல்லது பண்ண, அட்வைஸ் பண்றா மாதிரி வருது பாடல். வெயிட்டான orchestration.

மஹ மாயே
- அடுத்த டூயட். நம்ம குச்சி சுச்சி பாடிருக்காங்க. ஜாவேத் அலியோட இணைஞ்சு. கேட்க கேட்க பிடிக்கக் கூடிய பாடல். ரஹ்மானோட பெஸ்ட் இல்லை. இருந்தாலும் ரசிக்கலாம். திரைல நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

தோச்சே
- கேட்டவுடனே ஐட்டம் நம்பர்னு உரைக்கும் பாட்டு. காஷ் n க்ரிஸ்ஸினு இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்திருக்கார். இதான் அவங்களுக்கு முதல் திரைப்படப் பாடல்னு நினைக்கறேன். இவங்க ரெண்டு பேர் பாடறது நல்லா இருந்தாலும், ஸ்ரேயா கோஷல் பாடும்போதுதான் அந்தப் பாட்டுக்கே ஒரு அழகு சேருது. இந்தப் பாடல்லயும் நல்ல ரிதம். நல்ல டியூன்.

நம்மகம் - கடவுள் கிட்ட நம்பிக்கை வேண்டி ஒரு பாடல். காற்றில் வரும் கீதமே ஸ்டைல்ல, சித்ரா, மதுஸ்ரீ மற்றும் ஹரிணி சேர்ந்து பாடியிருக்காங்க. ரொம்ப அழகான மெலடி. நைட்டு இந்தப் பாடலை கேட்டீங்கன்னா, தூக்கம் நிச்சயம். ரொம்ப மினிமம் ஆர்கெஸ்ட்ரா. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒத்து வராத, நல்ல, (உண்மையான) பக்திப் பாடல்.

மொத்தத்துல புலி, ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த ஒரு மசாலா ஆல்பம். எல்லா தரப்பினருக்கும், எதாவது இருக்கு. மாஸான  சிவாஜிக்கு பிறகு, அடுத்த மாஸ் படம். ரஹ்மானிடமிருந்து (எனக்கு) ஒரு இன்ப அதிர்ச்சி. மிஸ் பண்ணிறாதீங்க. --> இங்க க்ளிக்கினா<-- எல்லாப் பாடல்களையும் கேட்க லிங்கிருக்கேன்.
 
அடுத்து நம்ம ஊர் பரபரப்பான எந்திரன் பாடல்களுக்கு போவோம்

அதிசயமா, புலி படப் பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு, எந்திரன் படப் பாடல்கள் ஈர்க்கலை. உடனே "Rahman Songs requires repeated listening, it should grown on you, you are anti-rahman, uncle-ரஹ்மான்", அது இதுனு கமெண்ட் போடத் துடிக்காதீங்க. எனக்கு முதல் தடவை கேட்கும்போது புடிக்கலன்னா, எவ்வளவு தடவை முயற்சி பண்ணி முக்கினாலும் புடிக்காது. உதாரணத்திற்கு, எனக்கு இன்னைக்குவரை, சக்கரக்கட்டி படப் பாடல்களும், ஹிந்தி கஜினி படப் பாடல்களும் புடிக்கலை. எந்திரன் ரொம்ப மோசமான ஆல்பம் கிடையாது. ஆனா, ரஹ்மானோட பெஸ்ட்டும் கிடையாது. இன்டர்நேஷனல் ரசிகர்களை மனசுல வெச்சே இசையமச்சா மாதிரி இருக்கு. டெக்னோ மியூசிக்கோட ஓவர்டோஸ்னு சொல்லலாம். பாடல்களைப் பற்றி ஓரிருவரி, 

அரிமா அரிமா - வீரபாண்டி கோட்டையிலே பாடலைப் போல, ரிச் orchestration. ஆனால், ஹரிஹரன் பாடுவது இரைச்சலாதான் இருக்கு. ஹீரோவின் புகழ் பாடி ஆரம்பிக்கும், இன்னொரு எம்.ஜி.ஆர் ஸ்டைல் டூயட் (oxymoron??)

பூம் பூம் / சிட்டி டான்ஸ் - டான்ஸ் ப்ளோர்களுக்கு ஏத்த பாட்டு. சிட்டி டான்சைப் பாடல்னு சொல்றதை விட, ஒரு கூடை சன்லைட் மாதிரி, சப்தங்களோட கோர்வைனு சொல்லலாம்.

இரும்பிலே ஒரு - முன்னாடி சொன்ன காஷ் N க்ரிஸ்ஸியோட சேர்ந்து ரஹ்மான் பாடிருக்கார். அதிரடிக்காரன் ஸ்டைல் பாடலாக இருக்காலாம். காஷ் பாடற இடங்கள் எல்லாம், aqua பார்பி கேர்ள் பாடலை நியாபகப்படுத்துது. ஏனோ....

காதல் அணுக்கள் - இந்த ஆல்பத்தோட, முதல் முணுமுணுக்கக்கூடிய பாடல். ஹோசனா பாடலுக்கு அப்பறமா, விஜய் பிரகாஷின் அடுத்த ஹிட் என்பது ஏறக்குறைய உறுதி. என்னைப் பொறுத்த வரை, ரொம்பச் சாதரணமான பாடல். அதனாலதான் ஹிட் ஆகுமோ என்னவோ.

கிளிமான்ஜாரோ
- எனக்குப் பிடித்த ஒரே பாடல். சின்மயி வித்தியாசமான முறைல, கொஞ்சம் கீச்சுனு பாடிருக்காங்க. குலுவாலிலே பாடல் மாதிரி, ரொம்ப வித்தியாசமான பாடல். catchy. கண்டிப்பா ஹிட்டு.

புதிய மனிதா
- சம்பிரதாயமான ஹீரோ ஒப்பனிங் சாங் இல்லை இது. பாடல் ஆரம்பிச்சு, பில்ட் அப் எல்லாம் வந்து, எஸ் பி பி பாட ஆரம்பிக்க ஒண்ணரை நிமிஷம் ஆகுது. வழக்கம் போல தன்னோட சவுண்ட் இஞ்சினியரிங் வித்தையை காமிச்சிருக்கார் ரஹ்மான். டிப்பு குமாரு மாதிரி ஆகிடக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க . அவ்வளவு மோசம் இல்லை, இருந்தாலும் not "that" impressive.

எனவே மக்களே, சமீபத்துல வந்த, ரெண்டு ரஹ்மான் படப் பாடல்கள்ல, என் ஓட்டு, புலி பாடல்களுக்கே. ஒரு வேளை, எந்திரன் பாடல்களோட காட்சியமைப்பு, எல்லா ஷங்கர் படப் பாடல்கள் மாதிரி, ஈர்க்கலாம். ஆனா, தனிச்சு நிற்கும்போது, வழக்கம் போல நிறைய
அடி வாங்குது. ஆனா, எப்பவுமே ஷங்கர் படத்தோட பாடல்கள் சுமாரா இருந்தாதான், அவரால, விஷுவலா நல்லா காட்சியமைக்க முடியுது.  (ஒரு சிலப் பாடல்களைத் தவிர)


Tuesday, June 29, 2010

விவாதங்களும்.... விமர்சனங்களும்...

இதைப் பற்றி எவ்வளவு பேசினாலும் நமக்கு உரைக்காதென்று நினைக்கிறேன். இருந்தும், எதாவது சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதே. அதனால், தொடருகிறேன். கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற ரீதியில், விவாதங்களால் விமர்சனங்களா, இல்லை வி.ளால் வி.களா என, இன்று வரை சரியாக கண்டறிய முடியவில்லை. பதிவு என்னவாக இருந்தாலும், அதற்க்கு ஒரு எதிர் வினையை பதிவு செய்தே ஆக வேண்டுமென, பல பேர் இருக்கிறார்கள். அது பொதுவான ஒரு இச்சையாகவே தோன்றுகிறது. ஏனென்றால், எல்லாவற்றைப் பற்றியும் நமக்கு ஒரு கருத்து இருக்கவே செய்கிறது, அதைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும்போது, நாம் தவறவிடுவதில்லை.

ஒரு கருத்தை, விரும்பி பதிவு செய்யும்போது, அதை நியாயப்படுத்த தேவையில்லை என்பதே என் கருத்து. ஒரே வார்த்தையில் பிடிக்கிறது, பிடிக்கவில்லையென சொன்னால் கூட, சில சமயங்களில் போதுமானதே. இருந்தும், இங்கே மற்றவர்களை நம்பவைப்பது அல்லது கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்ற மறைமுகக் கட்டாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இல்லை, இருப்பாதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். அதற்க்கான காரணங்களை அடுக்குகிறோம். அதற்காகா வரும் எதிர் வினைகளில் சில, எதிரி வினைகளாகக் கூட மாறுகின்றன. பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் என தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு வகையில், இதெல்லாம் நம் மனதில் அல்பமான சந்தோஷத்தைக் கொடுக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

பின்னூட்டங்களும், எதிர் வினைகளும் தவறு என்பது என் கருத்தல்ல. அவை ஒரு வகையில், நம்மைக் கண்காணிக்கும் cctv காமெராக்களைப் போல. நாம் கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நம்மைக் கட்டுபாட்டிற்குள்ளும் வைக்கும். ஆனால், அதே சமயத்தில், பதிவு எழுதுபவர்கள் / பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. யார் எழுதுவதென்பது தெரியாது அல்லவா. ஒரு வகையான அனானிமிட்டி. (சுஜாதாவின் பாலம் சிறு கதையில் இந்த கருத்தைச் சொல்லியிருப்பார்) அதனால், சில சமயங்களில் கருத்துக்களைத் திணிக்க முற்படும்போதுதான் பிரச்சனையே. நானும் பல நேரங்களில் அதை அனுபவித்திருக்கிறேன். (முக்கியமாக சினிமா விமர்சனங்களில், எனக்கே இப்படியென்றால், நம் கேபிளாரின் நிலைமை பாவம்...)

உதா'ரணத்திற்கு' எனது இசை ரசனையை எடுத்துக்கொள்ளலாம். சமீபத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியின் போது, வழக்கம் போல மக்களின் எண்ணங்கள் பலவாறு இருந்தன. முறையாக இசையைக் கற்றவன் என்ற முறையில், எனக்கும் அதில் சில கருத்துக்கள் இருந்தன. அந்நிகழ்ச்சியில் பாடிய ஸ்ரீகாந்த் என்ற சிறுவனைப் பற்றிய எனது கருத்துக்கள், நிறைய எதிர் வினைகளைச் சந்தித்தன. அடிப்படை சங்கீதம் தெரிந்த யாராலுமே சொல்ல முடியும், அந்த சிறுவன் சுமாராகத்தான் பாடினான் என்று. அந்தச் சிறுவனின் திறமையை குறை சொல்லவில்லை. ஆனால், அதில் பாடிய மற்றவர்களை வைத்து பார்க்கும்போது, சங்கீதத்தில், இந்தச் சிறுவன் செல்ல வேண்டிய தூரம், மிக அதிகமானது. இது குறித்து ஆரம்பமான விவாதங்களில் நான் கலந்துகொள்ளவில்லை. யாராவது ஆரம்பித்தாலும், அப்படியா, சரி என்று பேச்சை மாற்றி விடுவேன். அவர்களுடைய வாதம், விஜய் ரசிகர்கள், விஜயின் படத்தை ஆதரித்து பேசுவது போலவே இருந்தது.

பாக்யராஜின் திரைப்படம் ஒன்றில் வரும் எனக்குப் பிடித்த வசனம் "ஒரு முடிவ எடுக்கனும்னு பேச ஆரம்பிச்சா, எதாவது ஒரு முடிவ எடுத்தடலாம், ஆனா மனசுல ஒண்ணும் முடிவு பண்ணிட்டு பேச ஆரம்பிச்சா, அப்படி பேசறதே வேஸ்ட்". இங்கே பெரும்பாலான விவாதங்கள் அப்படிதான் ஆரம்பிக்கின்றன. ஆங்கிலத்தில் "constructive
argument" என்று சொல்லுவார்கள். இங்கு அதுவே முன்னுக்கு பின் முரணான வார்த்தைகளாகிவிட்டன (oxymoron). "இப்போ முடிவா நீ என்ன சொல்ல வர"என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. நான் எதுவுமே சொல்லவரவில்லை. ஒரே ஒரு விஷயம்தான். நம்முடைய நம்பிக்கைக்குரிய விஷயங்கள், மற்றவர்களுடைய விவாதத்திற்குரிய விஷயங்களாக இருக்கக் கூடாது. அப்படி ஆகிவிட்டால், நம் நம்பிக்கையின் மீது நமக்கே சந்தேகம் வந்துவிடும்.


நீ எப்படிடா கார்த்திய தப்பா பேசலாம்

Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

Sunday, March 21, 2010

குழப்பMATICAL

மு.கு - தலைப்பு கொடுத்து உதவிய பாலா அண்ணாவிற்கு நன்றி...

என்ன எழுதறது, எப்படி எழுதறதுன்னு ஒண்ணுமே புரியல. ஆனா, எழுத மட்டும் நிறைய விஷயம் இருக்கு. நான் பார்த்த விண்ணைத்தாண்டி வருவாயா, 3 இடியட்ஸ், படங்களை பத்தி எழுதறதா, இல்ல IPL பத்தி எழுதறதா, இல்ல சாரு நித்யானந்தா, சாரி, சாரு நிவேதிதா பத்தி எழுதறதா, இல்ல பதிவுலகத்துல பல முறை பதிவப்படுற ராஜா-ரஹ்மான், அஜித்-விஜய், ஆத்திகம்-நாத்திகம் மாதிரியான விஷயங்கள் பற்றிய என்னோட எண்ணங்களை எழுதறதா, இல்ல என் ரிசர்ச் பத்தி எழுதறதானு, இப்படி பத்தி பத்தியா எழுத விஷயம் இருந்தும், அவகாசமும்  இல்ல, பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

போஸ்ட் எழுதுவது எப்படின்னு நான் பல பேருக்கு அட்வைஸ் பண்ண காலம் போய், இப்போ நானே திருவிழாவுல தொலஞ்ச குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டிருக்கேன். ஆனாலும், பாடின வாயும், ஆடின காலும், எழுதுன கையும் சும்மா இருக்காதுன்னு சொல்றா மாதிரி, வந்துட்டு சும்மா போகக் கூடாது இல்லையா, அதனால ஒரு சில விஷயங்களை சொல்லிட்டு போறேன். என் முதுகலைப் பட்டப் படிப்பு இன்னும் இரண்டு மாதங்கள்ல நிறைவடையுது. என் மேல அக்கறையுள்ள பல பேர், அடுத்து என்ன பண்ண போறேன்னு பார்க்கும்போதெல்லாம் விசாரிக்கறாங்க. ஆனா, சாமி சத்தியமா சொல்றேன், அடுத்து என்ன பண்றதுன்னு நான் இன்னும் முடிவு பண்ணலை. எனக்கு எல்லாமே குழப்பமாதான் இருக்கு. நான் இளங்கலை (UG) சேரும்போதே எந்த திட்டமும் போட்டு சேரலை. எல்லாரும் படிக்கறா மாதிரி என்னால ஒரு இடத்துல உட்கார்ந்து, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க முடியாது.

என் அண்ணன், "உன்னை மாதிரி ஆளுங்களுக்குனே விஸ் காம், எலக்ட்ரானிக் மீடியா படிப்பு இருக்கு. அப்ளை பண்ணு"னு சொல்லவே, நானும் விண்ணப்பிச்சு, ஒரு வழியா படிச்சும் முடிச்சேன். அப்பவே எங்க வூட்ல சொன்னேன், வேலைக்கு போறேன்னு. ஆனா, வீட்ல ஒரு முதுகலை பட்டதாரி கூட இல்லையே, நீ முயற்சி பண்ணலாமேன்னு சொல்ல, அண்ணா யுனிவர்சிடீல நமக்கெல்லாம் கிடைக்காதுன்னு அசைக்க முடியாத நம்பிக்கையோட நானும் விளையாட்ட அப்ளிக்க, அது வினையாகி, நான் நுழைவுத் தேர்வுல செலக்ட் ஆகி, இப்போ இப்டி பதிவிகிட்டு இருக்கேன். அடுத்து ஏதாவது டி.வி சேனல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமான்னு யோசனை பண்ணிகிட்டிருக்கேன்.

ரொம்ப தெனாவட்டா பேசறதா நினைக்காதீங்க. என் நிலைமை அப்படி... இருந்தாலும், ஏதாவது பண்ணிருவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஏன்னா இது வரை என் வாழ்க்கைல எதுவுமே நான் பிளான் பண்ணதில்லை. ஆனாலும் நான் பெருசா எதுவும் கவலை இல்லாம, நல்லாதான் இருக்கேன். இனிமேலும் அப்படியே தான் இருப்பேன்னு நினைக்கறேன். பழகிடுச்சுல்ல. பாக்கலாம் ஏதாவது நடக்காமலா போயிரும். அதானால, என்னுடைய இந்த குழப்பமான மன நிலைய புரிஞ்சிகிட்டு, ரெகுலரா பதிவலைன்னா, உங்க வீடு பிள்ளையா நெனச்சு என்ன மன்னிச்சு விட்டுருங்க. வரட்டா... டாட்டா...  
                    
நீங்க சொல்லுங்க. இப்போ நான் என்ன செய்ய...

Sunday, December 13, 2009

டெலிவெட்டியும் கிரியேடிவெட்டியும்

சக பதிவர்கள் பல பேர், பல விதமான போட்டிகள, தொடர்ந்து நடத்திட்டு வராங்க. அப்படி ஒரு போட்டிதான் இந்த டெலிவெட்டி. நான் நடத்தலைங்க. கலந்துகிட்டேன். இத நடத்துறது BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம். அவங்க ப்ளோக்ல சில பல வருஷங்களாகவே இத நடத்திட்டு வராங்க. ரொம்ப சிம்பிள் விளையாட்டுங்க. படம் பார்த்து கதை சொல்றா மாதிரி பெயர்கள் சொல்லணும். அவ்வளவே. இது வரை எனக்கு கலந்துக்க ஆர்வம் எதுவும் வந்ததில்லை. ஆனா கடந்த போட்டி, நம்ம தலைவர் ரஜினியப் பற்றி. விடுவனா. எல்லா படமுமே சல்பியா இருந்ததால டக்கு டக்குனு பதில மைல் பண்ணிட்டேன். First come first serve மாதிரி, முந்துபவர்களுக்கே பரிசுன்னு நினைக்கறேன். இன்னிக்கு முடிவுகள பார்த்தா, என் பேரும் முதலிடப் பட்டியல்ல இருக்கு. 15/15... எப்பூடி?? இதனால நான் சகல மாணவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.... ஒண்ணும் இல்லை. எல்லாரும் நல்லா இருங்க. BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம்-க்கு நன்றி.

சொல்ல மறந்துட்டனே, www.blogeswari.blogspot.com படிக்க மறக்காதீங்க. அவா இவா பாஷைல இவங்க அடிக்கிற நக்கல் இருக்கே, நான் படிச்ச தம்லீஷ் ப்ளோக்லையே இதுலதான் உச்சக்கட்டம். அப்படி ஒரு நையாண்டி. முக்கியமா இவங்க கந்தசாமி படத்துக்கும், குர்பான் படத்துக்கும் எழுதியிருக்குற விமர்சனம், ஒரு பானை சோறு.
வோட்டு போட மறக்காதீங்க. (சேய், நானும் இப்படி கேட்க ஆரம்பிச்சுட்டனே)




இதெல்லாம் வரலாறுல இடம்பிடிக்கும். 
எனக்கு சிலை வெப்பாங்க. பசங்க நோட்ஸ் எடுப்பாங்க..... 

Monday, November 30, 2009

மேல் படிப்பு

மு.கு. நகைச்சுவை உணர்வு இல்லாத பொண்ணுங்க, தயவு செஞ்சு கெளம்புங்க, காத்து வரட்டும்...
  
நீங்க நினைக்கற மேல் படிப்பு இல்லைங்க இது. நான் சொல்லப் போறது Male, அதாவது பசங்க படிக்கற படிப்பு பத்தி. 'அதென்ன படிப்புல male படிப்பு female படிப்பு. எல்லாம் ஒண்ணுதான. இதுல என்ன பெரிய ஆராய்ச்சி பதிவு வேண்டி கெடக்கு', இதான உங்க டவுட்டு. கண்டிப்பா வித்தியாசம் இருக்குங்க. எல்.கே.ஜில ஆரம்பிச்சு, இப்போ post graduation வரைக்கும் நான் இந்த வித்தியாசத்தை பாத்துகிட்டு இருக்கேங்க. எஸ்.ஜே சூர்யா சொல்றாப்போல, சில சமயங்கள்ல, பொண்ணுங்க படிக்கறத பார்த்தா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கும். பசங்களுக்கு, Pass - Fail, இப்படி ரெண்டு  மேட்டர் தான் முக்கியம். ஆனா பொண்ணுங்களுக்கு???????????  வாங்க அலசுவோம்.

எப்பவும், படிச்சிகிட்டே இருந்து, எப்பாவாச்சும் சும்மா இருப்பாங்கல்ல, அப்போ, மத்த விஷயங்களை யோசிக்கறவங்க பொண்ணுங்க. ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க,  இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க.

இந்த பசங்க பொண்ணுங்க வித்தியாசம், பரீட்சை சமயங்கள்ல பாத்தீங்கன்னா அப்பட்டமா தெரியும். எனக்கு தெரிஞ்சு, முக்கால் வாசி பசங்க (என்னையும் சேர்த்து), பரீட்சைக்கு முன்னாடி நாள்தான் படிக்க ஆரம்பிக்கறதே. அதுவும் மனப்பாடம் பண்றதெல்லாம் இல்லை. சும்மா, அப்டீ திருப்பி பாக்கறது. அப்படி பார்க்கும்போதுதான், நம்மகிட்ட சில நோட்ஸ் இல்லைன்னே தெரியவரும். சரி, நம்ம தோஸ்து எவனாவது வெச்சிருப்பானான்னு மெசெஜோ, காலோ பண்ணா, அவன் "மச்சான், படிக்க ஆரம்பிச்சுட்டியா?? கேடி நாய்டா நீ. எதுவும் படிக்கலை படிக்கலை சொல்லியே நிறைய மார்க் வாங்கிருவ. ஒ*!@ உன்னை நம்பவே கூடாதுடா". இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நாயும் அங்க புக்க வெச்சிகிட்டு முக்கிட்ருப்பான்.                                          

எதுக்கு phone பண்ணமோ, அதில்லாம, வெட்டியா வேற ஏதாவது பேசிட்டு வெச்சிருவோம். சரி, பரவாயில்லைன்னு, வெக்கத்தை விட்டு பொண்ணுங்க யாருக்காவது phone பண்ணுவோம். அவங்க விடுவாங்க பாருங்க ரீலு. "ஹே, நான் சத்தியமா படிக்கலபா. Group study பண்ணலாம்னு நினைச்சோம், ஆனா முடியலை. காலைல அம்மாகூட வெளியில போயிட்டேன். அப்பறம் வீட்ல ஒரே வேலை (சாஞ்சிகிட்டு TV பாக்கறது ஒரு வேலையா) கொஞ்ச நேரம் முன்னாடிதான் புக்கை கையில எடுத்தேன், கரெக்டா நீ கால் பண்ற". அடுத்த முக்கியமான விஷயம், அந்த பொண்ணு எப்பவோ இதெல்லாம் படிச்சிருக்கும். சும்மா ஒரு தடவை பார்த்தாலே அதுக்கு எல்லாம் ஞாபகத்துல வந்துரும்.

சில பொண்ணுங்க, ஹாரி பாட்டர் hermione மாதிரி, புத்தகத்துல இருக்கறத வார்த்தைக்கு வார்த்தை மனபாடம் செஞ்சு ஒப்பிபாங்க. நான் பல முறை இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்து, அடங்கொக்கா மக்கான்னு ஷாக் ஆகிருக்கேன். சில நல்ல பொண்ணுங்க, எக்ஸாம் ஹால்ல நமக்கு சொல்லியும் தரதுண்டு. அவங்கெல்லாம் வாழ்க. சிலதுங்க, அப்படியே எழுதற ஷீட் மேல படுத்துகிட்டு எழுதுங்க. உள்ள இறங்கி தூர் வாருதோன்னு சந்தேகம் கூட நமக்கு வரு. என்ன சிக்னல் குடுத்தாலும் திரும்பாம இருந்து பல்பு குடுத்துருவாங்க. இடி இடிச்சா கூட "யாரோ கடுகு தாளிக்கரான்களோ" reaction தான் கிடைக்கும்.

வெளியில வந்து, ஏன் திரும்பியே பார்க்கலைன்னு கேட்டா, "நீ கூப்டியா???" அப்படின்னு கேப்பாங்க. இதெல்லாம் இருக்கட்டும். அந்த எக்ஸாம் பேப்பர் குடுக்கும்போது வரும் பாருங்க reactions. வாய்ப்பே இல்ல. எவ்வளவு மார்க் போட்டாலும், குடுத்த ஆள் கிட்ட போய், "சார், இதுல மார்க் கம்மி, இதுல total கம்மி, இங்க நான் நல்லாதான எழுதியிருக்கேன் ஏன் இப்படி மார்க் போட்டுருக்கீங்க??" அப்டி இப்டி ஏதாவது நொட்டு சொல்லி, வாத்தியாருக்கே அவர் படிச்ச படிப்பு மேல சந்தேகம் வர அளவுக்கு நச்சரிச்சு, குறைந்தபட்சம் அரை மார்க்காவது கூடுதலா வாங்கிட்டு, வெற்றி களிப்புல ஒரு இளிப்பு வேற இருக்கும் பாருங்க......

பசங்க பாவமா, என்ன மார்க், என்ன கேள்வி, என்ன பதில்னு புரியாம இருப்பானுங்க. முடிஞ்ச வரைக்கும், கரெக்ஷன் பண்ண பேப்பர்ல சந்தேகம் எதுவும் கேக்காம கமுக்கமா இருப்பாங்க. ஏன்னா நம்மாளுக்குதான் கேள்வியே ஒழுங்கா தெரியாதே. எங்க ஏதாவது  ஏடாகூடமா கேட்டு இருக்குற மார்க்கும் போய்டுமோன்னு ஒரு கிலி இருக்கும். குடுத்து முடிச்சிட்டு போன அப்புறம், பொண்ணுங்க மத்தியில, அத பத்தி ஒரு மணி நேரம் விவாதம் வேற நடக்கும். "அந்த சாருக்கு என்னை பிடிக்கலை, அதான் மார்க் கம்மி. அன்னிக்கு நான் அந்த மேடமுக்கு குட் மார்னிங் சொல்லல, அந்த காண்டுல சரியா கரெக்ஷன் பண்ணலை"னு புதுப் புது காரணமா, கும்பலா, கண்டுபுடிச்சிகிட்டிருப்பாங்க.

பொறவு யார் highest மார்க் அப்படின்னு calculation வேற நடக்கும். "நீ என்னைவிட ஜஸ்ட் மூன்றை மார்க் ஜாஸ்தி. பரவாயில்லை, நான் fail ஆயிருவேன்னு நினைச்சேன்"னு மனசாட்சியே இல்லாம பேசுவாங்க. ஒருத்தி 98, இன்னொருத்தி 95 வாங்கிருப்பா. எந்த பொண்ணுங்களையும் அசிங்கப் படுத்த நான் இந்த பதிவை போடலைங்க. எல்லாம் ஒரு பொறாமைலதான். என்னுடைய இஸ்கூல் படிப்புலேர்ந்து, இப்போ PG வரைக்கும் இதே கதை தாங்க. என்ன, இப்போ சில பொண்ணுங்க பீட்டர்ல feel பண்றாங்க. பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. பொண்ணுங்க இப்படிதான் எப்பவுமேவா, இல்லை எப்பவுமே இப்படிதானான்னு எனக்கு ஒரே குழப்பம்.

வேணும்னா நான் சொன்னதை டெஸ்ட்டு பண்ணி பாக்கலாம். இந்த பதிவை நீங்க படிச்சிட்டு, பொறவு வேற ஒரு பொண்ணை படிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு படிச்சிட்டு, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க அப்படி கிடையாது, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்" அப்படின்னு சொல்லிச்சுன்னா, அதுவே என் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. நான் கடைசில "HENCE PROVED" அப்படின்னு சேத்துக்கறேன். :))))




வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??