Showing posts with label Thanks giving. Show all posts
Showing posts with label Thanks giving. Show all posts

Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

Thursday, May 21, 2009

creatiவெட்டியின் முதல் வருடம்...

என்னுடைய ஞாபகமறதி முத்திடிச்சுன்னு நினைக்கறேன். நான் blog ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடிஞ்சாச்சு. இப்பதான் அந்த விஷயமே strike ஆச்சு. கொஞ்சம் கொஞ்சமா, என் blog, தத்தி தத்தி நடக்க ஆரம்பிச்சிருக்கு. என்ன ஆகுதுன்னு பார்ப்போம். இந்த வேளையிலே, ரமணா ஸ்டைல் statistics கொஞ்சம் பார்க்கலாமா???.
  • ஆரம்பிச்சது மே 3 2008.
  • இதுவரை போட்ட பதிவுகளின் எண்ணிக்கை 87
  • அதுல ஒரிஜினல், அதாவது forward mails, tags மாதிரி எதுவும் இல்லாம, நானேசொந்தமா யோசிச்சு பதிவியது 60
  • கிடைத்த followers 5 (அவர்களுக்கு மிக்க நன்றி)
  • கிடைத்த நண்பர்கள் 5
  • (நான் ஆரம்பிச்சது இல்லாம) தூண்டிவிட்டது 2
  • வாங்கிய அவார்ட்ஸ் 7
  • அதிகமா கமெண்ட் வந்த போஸ்ட் வெட்டுனேன் பாருங்க

இதுக்கு
மேல எதுவும் சொல்றா மாதிரி இல்லை. எனக்கு பெரிய frustration என்னன்னா, என் friends பல பேர் ப்ளோக படிச்சிட்டு, scrap பண்ணியோ, sms பண்ணியோ, chat பண்ணியோ கமெண்ட் சொல்றாங்களே தவிர, இங்க கமெண்ட் போட மாட்டேங்கறாங்க. நானும் பல முறை, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்க, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்கனு சொல்லிட்டேன். ம்ஹூம். எதுவும் நடக்கல. But its ok. நான் ப்ளோகறது, ப்ளோகிகினே தான் இருப்பேன். யாரு படிக்கறாங்களோ இல்லையோ. மற்றபடி, என் ப்லோகை தொடர்ந்து படித்து வரும், அத்தனை நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், நன்றிகள் கோடி.

பெருசா 1உம் நடக்கல

Monday, March 9, 2009

மறுபடியும் பார்ரா....

இப்ப பூர்ணா அக்கா எனக்கு அவார்ட் givings...நான் அவகளுக்கு அவார்ட் குடுத்த ஒரே காரணத்துனாலதான் குடுக்கராங்களோன்னு தோணுது... இருந்தாலும் accountla keeping... குடுத்த அவார்ட் "significant blogger award". காரணம் "for constantly encouraging me in the blogosphere"... encouraging எல்லாம் நமக்கு சகஜம். இதுக்கு ஒரு award குடுத்து என்னை கௌரவப் படுத்தியதற்கு நன்றி.. :)

இதோ அந்த award

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo7w2jmowm1Rr7zE1-iiUo5XZuTVGncHnB34EPpMqjHNsDoW-9B1Xe1EomRAKM2f77v79u_dayu1UP1AFRn7jBVfHC1FcAbnfqMUQKgCPWl0X_Sjlbfip-7D61cFRutZnKf-nh33acYfU/s320/SignificantBloggerAwards.jpg

Friday, December 5, 2008

Butterfly Effect....ச்சே... sorry.... award..

யாரோ எங்கயோ ஆரம்பிச்ச ஒரு விஷயம், இப்ப இங்க வந்துருக்கு.. இதுக்கு முன்னாடியே நான் ஒண்ணு - ரெண்டு - மூணு - tag ஏத்துகிட்டேன்... இப்ப அடுத்ததா விருதுனு சொல்லி ஒரு tag அனுப்பிருக்காரு தோழர் (கம்யூனிஸ்ட் இல்ல) அருண்குமார்... என் ப்லோக் ரொம்ப படிச்சு, (பித்து) புடிச்சு போய் எனக்கு இந்த அவார்ட் குடுத்திருக்கார்... அவரோட ப்ளோக்ல என்ன சொல்லிருக்கார்னா...
"நண்பா நமக்குள் நிறைய ஒற்றுமைகள் (உருவத்தை தவிர)...உன் ப்லோக்கிற்கு நிறைய பேர் வருகை தருகிறார்கள் அதனால் சில சமூக கருத்துக்களை தெரிவிப்பாயானால் இன்னும் நன்றாக இருக்கும். நீ தன்னடக்கம் உள்ளவன் என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இந்த அவார்டை ஏற்று கொள்ளுமாறு 50வது வட்டத்தின் சார்பாக பணிவண்புடன் கேட்டு கொண்டு, வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். தம்பியின் நாமம் வாழ்க ! வீரத்தளபதி நாமம் வாழ்க ! !"

தலைவா, தங்களது நம்பிக்கைக்கும் பாராட்டிற்கும் நன்றி.. நான் ஆரம்பத்திலேயே கூறியது போல், சமுதாயத்திற்கு கருத்துக்கள் தெரிவிக்க எனக்கு விருப்பமும் அனுபவமும் இல்லை. அதோடல்லாமல் அதைப் போன்ற ப்ளோகுகள் வலையில் ஏராளம். இருந்தாலும், சமுதாயத்தை கெடுக்கும் அளவிற்கு எனது பதிவுகள் இருக்காது என உறுதியளிக்கிறேன். என் ப்ளோகிற்கு நிறைய வாசகர்கள் இருப்பதைப்ப் போன்ற புரளிகளை கிளப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வீரத் தளபதி என்ற பட்டம், அண்ணன் ரித்தீஷ் அவர்களயே சாரும் எனவே, எனக்கு வேறு ஒரு பட்டம் யோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். செந்தமிழ் கொஞ்சம் கஷ்டமா கீது. இப்ப சாதா"ரணமா" சொல்றேன். நண்பர் சொன்னது போல எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு. நான் இவர சந்திச்சது முதல் முதல ஒர்குட்ல "copy cat filmmakers" அப்படீங்கற communityla. ஹாரி பாட்டர் vs நம்ம ஊர் புராணம் மாதிரி ஒரு தலைப்புல, ரெண்டு பேருமே நம்ம ஊர் புராணத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுனோம்.

அங்க ஆரம்பிச்சது எங்க நட்பு இப்ப இங்க வந்துருக்கு. வேற வழியில்லாமாதன் எனக்கு இந்த அவார்ட் குடுக்குராரோனு கூட தோணுது. நண்பா any sarcasm here??? ஏதோ விடுங்க, குடுத்துட்டாரு. இந்த அவார்ட் வாங்குனவங்க செய்ய வேண்டிய காரியங்கள் சிலது கீது, அது இன்னானா...
  • Put the logo on your blog.
  • Link the person who awarded it to you.
  • Link the bloggers you are about to honor.
எனவே பாருங்க, இடது பக்கம் மேல லோகோ போட்டுட்டேன். Already நம்ம தல என் "அக்கம் பக்கம்" லிஸ்ட்ல இருக்காரு. வலது பக்கம் "lancelot"னு இருக்கு பாருங்க. அடுத்து நான் யாருக்கு இந்த அவார்ட் தரப்போறேன்னா என் ஜூனியர் சுவாதிக்கு . பொண்ணோட language செம்ம ஷார்ப், அதே மாதிரி தான் பதிவுகளும். மேடமுக்கு வருது பாருங்க கோவம், நீங்களே போய் படிச்சு பாருங்க. வாழ்த்துக்கள் சுவாதி. என்னதான் என் அறிவுரையின் பேர்ல நீ ப்ளோக் பண்றதா இருந்தாலும், உனக்கு குரு என்கிற விதத்துல உன்னை பாராட்ட வேண்டியது என் கடமை. All the best, keep blogging. (try to divide paragraphs in ur blog)

அவ்வளவே, எனது கடைமை இப்போதைக்கு முடிந்தது. நான் வரேன். அண்ணன் அருணிற்கு மீண்டும் எனது நன்றி.


Thursday, December 4, 2008

வெட்டுனேன் பாருங்க...

இந்த மாதிரி ஆகும்ன்னு நினைச்சே பாக்கல. ஆனா இதுக்கு நான் காரணம் இல்ல. என்ன சுத்தி இருக்குற "சமுதாயமும்" "மக்களும்"தான் காரணம். நானும் எவ்ளோதான் முயற்சி பண்றது..........................
நீங்க திட்டுறதுக்கு முன்னாடி மேட்டர் என்னான்னு சொல்றேன். என் பிறந்தநாளுக்கு (இன்னிக்கு - 4/12) கேக் வெட்டுனதப் பற்றிதான் நான் மேல சொன்ன விஷயம் எல்லாம்...

என் கிளாஸ்ல யாருக்காவது பர்த்டேனா கேக் வெட்டி கொண்டாடுறது வழக்கம். அந்த பிறந்தநாள் குழந்தைக்கு புடிக்குதோ இல்லையோ, எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி, அத சாப்பிடவும் செய்யாம மூஞ்சில அடிச்சு வெளையாடுரதுனு அன்னிக்கு ஒரே பாசம்ஸ் of இந்தியாவா மாறிடுவாங்க. எனக்கு இந்த கேக் வெட்டி கொண்டாடுறதுல விருப்பம் கிடையாது. அதே சமயத்துல யாராவது கேக் வெட்டுன அவங்க கைய புடிச்சு நியாயம் பேசமாட்டேன். ஏன்னா என் பாலிசி எனக்கு.

எப்பவும் date of birth கொண்டாடாம, ஸ்டார் பர்த்டே மட்டும்தான் கொண்டாடுவேன். ஏதோ தமிழ் பித்துன்னு வெச்சுக்கோங்களேன். அதுவும் இல்லாம நான் பிறந்தது கார்த்திகை தீபம் அன்னிக்கு (பெயர் காரணம் கவனிக்க). ஏதோ அன்னிக்கு ஊரே சந்தோஷமா இருக்கும், நாம இன்னும் எக்ஸ்ட்ராவான சந்தோஷத்தோட இருப்பமேனு ஒரு நல்ல எண்ணம்தான். இன்னிக்கு பிறந்தநாள் ஆர்பாட்டம் எதுவும் இல்லாம, வழக்கம் போல காலேஜ் போனேன். ஆனா விஷயம் தெரிஞ்ச ரெண்டு பேர் விஷ் பண்ணதுல எல்லாருக்கும் மேட்டர் தெரிஞ்சுபோச்சு...

உடனே எனக்கு தெரியாம கேக் வாங்க பிளான் போட்டாங்க. (கொஞ்சம் மெதுவா பேசிருக்கலாம்) நானும் ரொம்ப தன்னடக்கத்தோட "மக்களே, எனக்கு கேக் வெட்டுவது புடிக்காது, எனக்கு அதுல நம்பிக்க இல்ல. So, தயவுசெஞ்சு வாங்கிடாதீங்க"னு சொன்னேன். கேப்பாங்களா?? "மவனே மத்தவங்க பொறந்தநாள்ல மூஞ்சுல கேக் பூசும்போது மட்டும் பாத்துகிட்டு சும்மா இருந்தல்ல, இன்னிக்கு வா நீ மாட்டுனா"னு நெனச்சிருப்பாங்க போல.
"கான்டீன் வா"னு சொல்லிட்டு, Galleryla கேக் வெச்சு வெட்ட சொன்னாங்க.

அப்பவும் ஏதாவது சீன் create பண்ணி கேக் வெட்ரத புறக்கணிக்கலாமானு பார்த்தேன். But அவங்க பாசமா வாங்கிட்டு வந்தத அப்படி பண்ணா நல்லா இருக்காதுனு பட்டுது. எனவே நானும் வெட்டுனேன் பாருங்க, வழக்கம் போல யாரும் சரியா கேக் ஈட்டாம, என் முகத்துக்கே குறி வெச்சு பூசுனாங்க. இவுங்கள இன்னான்னு சொல்றது. இது இல்லாம என் அளவு (உயரத்துல)ஒரு பெரிய greeting கார்டு + leather purse(உள்ள காசுதான் இல்ல) அன்பளிப்பு வேற. இப்படியாகத்தானே என் பிறந்தநாள் என் கல்லூரி நண்பர்களுடன் இனிதே நடந்து முடிந்தது.

அடுத்த முறை எப்படி இருந்தாலும் கேக் வெட்டக்கூடாதுனு முடிவு பண்ணிருக்கேன். என் எண்ணங்களுக்கு என் நண்பர்கள் மரியாதை குடுப்பாங்கன்னு நம்பறேன். இத்தருணத்திலே, என்னை வாழ்த்திய அனைத்து உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகளும், இந்தத் தருணம் வரை பிறந்தநாளை மறந்து 'belated wishes" சொல்லப்போகிறவர்களுக்கு மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியா ஒரு குட்டி அறிவுரை + கவிதை..

Veg கேக்,
Non-Veg கேக்,
எதுவா இருந்தாலும் சரி..
கேக் வெட்டுறது தப்பு இல்ல...
கேக்காம வெட்டுறதுதான் தப்பு...
!!!...

small correction Its "Karthick Krishna"

Friday, November 7, 2008

காதல் கசக்குதய்யா - Part 2

முதல் பாகம் படிக்காதவங்க --> இங்க போய் <-- படிச்சிட்டு அப்பறம் தொடருங்க...

என் முறை வந்ததும் பாடறத்துக்கு மேடை ஏறினேன். கூட வாசிக்க ஒரு drumpad + keyboard இருந்துச்சு.. அவங்க குத்து மதிப்பா வாசிக்கறதா சொன்னாங்க. நான் வழக்கம் போல பெருசா பீல் பண்ணாம " காதல் கசக்குதய்யானு" ஆரம்பிச்சேன். அவ்வளவுதான். எல்லாரும் கத்த ஆரம்பிச்சாங்க. கத்தல்னு சொல்றத விட, ஆரவாரம்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும். அவ்ளோ ஆரவாரத்துக்கு மத்தியில, கண்ண மூடிகிட்டு நெஜமாவே ரொம்ப ரசிச்சு பாடினேன்.

பாடி முடிச்சு மேடை இறங்கி வரும்வரை ஆரவாரமும் கைதட்டலும் நிக்கல. கீழ இறங்கி வந்ததும், தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லாம் பாராட்ட ஆரம்பிச்சுடாங்க. இதுவரைக்கும் நான் பாடின எல்லா சமயங்கள்ளையும், பாடி முடிச்சவுடனே எல்லாரும் பாராட்றது சகஜம் (என்ன தன்னடக்கம்!!!). அந்த மாதிரி பலபேர் பாராட்டுனாலும், நெறைய தடவ எனக்கு பரிசு கிடைச்சதில்ல. இதுவும் அது மாதிரி ஒரு பாராட்டுதான்னு நெனச்சேன். ஆனா, எனக்கு கெடச்சது முதல் பரிசு. நம்பவே முடியாத ஒரு தருணம் அது.

போட்டில participate பண்ணவே முடியாதுங்கற நிலைம போய், முதல் பரிசுனா எப்படி நம்ப முடியும். வாய்நெறைய, நம்பமுடியாத சிரிப்போட போய், prize வாங்கினேன். நான் பாடினத விட, பாடினதுக்கும், அந்த பாட்டிற்கும் கெடச்ச கைதட்டலும் ஆரவாரமும்தான் எனக்கு பரிசு வாங்கி கொடுத்துச்சு. அப்பதான் புரிஞ்சிகிட்டேன், போட்டிகள்ள, judgea விட, பாட்டு கேக்கற ரசிகர்களோட response தான் முக்கியம்னு. அடுத்த ரெண்டு வருஷம், என் காலேஜ்ல நடந்த ரெண்டு பாட்டு போட்டிலயும் (வருசத்துக்கு ஒண்ணுதான் நடக்கும்) நான்தான் first prize வாங்கினேன்.

Second year "பனிவிழும் மலர்வனம்" and third year, போக்கிரி படத்துல வர "வசந்த முல்லை" பாடல்களும் பாடினேன். அந்த ரெண்டு வருஷமும் judgea வந்தது, எனக்கு முதல் வருஷம் studenta இருந்து ஹெல்ப் பண்ண என்னோட சீனியர்s, கௌதம் பரத்வாஜ் and ஹரிணி. இந்த hat-trick அடிச்சதுல, என்ன விட, என் அம்மாவுக்கும் நண்பர்களுக்கும்தான் ரொம்ப பெருமை. இந்த வெற்றிகள்ள என் seniors பங்கும் இருக்கு. அவங்க நான் எப்ப பாடுனாலும் நல்லா உற்சாகப்படுத்துவாங்க.

இப்ப recenta, என்னோட PG first yearla, போன வாரம் எங்க காலேஜ்ல (அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த பாட்டு போட்டியிலையும், முதல் முறையா (அதாவது இந்த காலேஜ்ல முதல் முறையா), காதல் கசக்குதய்யா பாடல் பாடி first prize வாங்கினேன். பரிசு வாங்கினதும், அந்த மேடைலையே, இளையராஜா sirku ஒரு தாங்க்ஸ் சொன்னேன். என் seniorsoda விருப்பத்திற்கு இணங்க, காதல் கசக்குதய்யா பாடல நான் பல மேடைகள்ல சும்மா போய் பாடிருக்கேன். என் நண்பன் ரகுவும் அந்த பாடல பாடும்போது ரொம்ப ரசிப்பான்.

So, இதுதான் காதல் கசக்குதய்யா பாடல் என் வாழ்க்கைல ஒரு அங்கமா மாறின கதை. இத்தருணத்திலே, என்னை சிறு வயதிலிருந்து, பாட உற்சாகப்படுத்திவரும் என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும், என் seniorskum முக்கியமாக இளையராஜாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கீழ அந்த play buttona கிளிக்கினா அந்த பாடல் கேட்கலாம்... கவலை படவேண்டாம், இது நான் பாடினது இல்ல, original version of the song...
காதல் கசக்குதய்யா முற்றும்..

Saturday, November 1, 2008

காதல் கசக்குதய்யா - Part 1

பி.கு.feelingsa நான் எதுவும் சொல்ல வரல. இது காதல் கசக்குதய்யானு ஆரம்பிக்கற ஒரு பாட்டு பற்றி சொல்ற பதிவு..

என்னோட இரண்டாம் கிளாஸ் படிக்கும்போதுதான் முதல் தடவை ஒரு பாட்டுப் போட்டியில கலந்துகிட்டேன். என்னோட முதல் பாடல் "காதல் ரோஜாவே" from "ரோஜா", அதுல எனக்கு first prize. அதுக்கப்பறம் நெறைய போட்டிகள்ள கலந்துகிட்டு நெறைய மொக்கைகளும், சில பரிசுகளும் வாங்கிருக்கேன். காலேஜ் போன அப்பறம் கூட, பாட்டு போட்டி பழக்கத்த விடாம வெச்சிருந்தேன். முதல் வருஷம் நான் கலந்துகிட்ட ஒரு போட்டியாலதான் எனக்கு ஒரு ஞானோதயம் கெடச்சுது..

காலேஜ்ல என்னோட சீனியர்s, airtel super singer புகழ், கௌதம் பரத்வாஜ் and காதல் படத்துல வர்ற "தொட்டு தொட்டு என்னை" பாடல் பாடுன ஹரிணி. அதுவரைக்கும் பல பரிசுகள் வாங்கினவங்க, அவங்களோட final yearla, organising teamla வந்துட்டாங்க. So, அவங்க மேற்பார்வைல நடந்த ஒரு போட்டிக்கு நான் போனேன், நான் நல்லா(!!!) பாடுறத பாத்துட்டு(கேட்டுட்டு), கௌதம் என்னபத்தி கேட்டாரு. விசாரிச்சதுல அவருக்கு என் அண்ணன நல்லா தெரியும்னு தெரிஞ்சுது. (என் அண்ணனும் அதே கல்லூரிதான்)

கௌதம் பரிச்சயம் கெடச்சதுனால, பல போட்டிகள் பற்றி தெரிய ஆரம்பிச்சுது (including ஆஹா பாடலாம் in DD). ஆனா காலேஜ் annual day song competition பற்றி எனக்கு சொல்ல மறந்துட்டாரு. competition finals எங்க காலேஜின் பெரிய ஹால்ல நடக்கும். So அத shoot பண்ண சொல்லி எங்க சார் சொல்லும்போதுதான் எனக்கு அந்த போட்டிய பத்தி தெரியவந்துச்சு. போற வழில கௌதம் வர, நான் அவர பாத்து, ஏன் சொல்லலனு கேட்டேன். அவர் நெஜமாகவே மறந்து போயிருந்தாரு, organiser வேற.

So அத ஒரு பெரிய mattera எடுத்துக்காம (பெருந்தன்மையோட) "சரி அடுத்த முறை கலந்துக்கறேன்"னு சொல்லிட்டேன். நானும் என் cameraman friend பிரேமும், கொஞ்ச நேரம் அங்க கேமாராவும் கைகளுமா அலைஞ்ச அப்பறம், திடீர்னு கௌதம் என்கிட்டே வந்து, "நாங்க பத்து participants செலக்ட் பண்ணிருந்தோம், அதுல ஒரு பையன் வரல, அதுக்கு பதிலா நீ பாடுறியா"னு கேட்டாரு, நானும் இதுல என்ன இருக்குன்னு நெனச்சிகிட்டு சரின்னு சொன்னேன்.

பிரேம், "என்ன பாட்டு பாடப்போறே"னு கேட்டான். அந்த காலகட்டத்துல, என்னோட இன்னொரு friend ரகுநாத், ஆண் பாவம் படத்துல வர்ற "காதல் கசக்குதய்யா" பாடல டவுன்லோட் பண்ண சொல்லி கேட்டுகிட்டிருந்தான். நானும் டவுன்லோட் பண்ணேன், அத எங்க ஆடியோ லேப்ல போட்டு கேட்டுகிட்டே இருப்போம். So, அந்த பாடல் பாடலாம்னு முடிவு பண்ணேன். Judge யாருனா, டைலாமோ பாடல பாடுனா திருமதி.சங்கீதா ராஜேஸ்வரன். கடைசியா என்னோட முறை வந்துச்சு. பாடறத்துக்கு மேடை ஏறினேன்......

தொடரும்....

http://www.city.sendai.jp/kikaku/kokusai/english/images/simc.jpg
இவ்ளோ பிரம்மாண்டமா இல்லனாலும், ஏதோ இருந்துச்சு

Thursday, October 2, 2008

நன்றி சர்வேசன்...

என்னுடைய -->இந்த<-- பதிவுல, surveysan அப்படிங்கரவர, tag பண்ணிருந்தேன்.. அவரும் பெரிய மனசு பண்ணி நம்ம tag ஏத்துகிட்டாரு... surveysan யாருங்கறத பத்தி அவ்வளவா தெரியல.. ஆனா அவரோட blog ரொம்ப சுவாரசியமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கு... நான் தொடர்ந்து follow பண்ண ஆரம்பிச்சுட்டேன்..
tag ஏற்றுக்கொண்டதற்கு நன்றி survey சார்... வாழ்க உமது சேவை...