Thursday, May 21, 2009

creatiவெட்டியின் முதல் வருடம்...

என்னுடைய ஞாபகமறதி முத்திடிச்சுன்னு நினைக்கறேன். நான் blog ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடிஞ்சாச்சு. இப்பதான் அந்த விஷயமே strike ஆச்சு. கொஞ்சம் கொஞ்சமா, என் blog, தத்தி தத்தி நடக்க ஆரம்பிச்சிருக்கு. என்ன ஆகுதுன்னு பார்ப்போம். இந்த வேளையிலே, ரமணா ஸ்டைல் statistics கொஞ்சம் பார்க்கலாமா???.
  • ஆரம்பிச்சது மே 3 2008.
  • இதுவரை போட்ட பதிவுகளின் எண்ணிக்கை 87
  • அதுல ஒரிஜினல், அதாவது forward mails, tags மாதிரி எதுவும் இல்லாம, நானேசொந்தமா யோசிச்சு பதிவியது 60
  • கிடைத்த followers 5 (அவர்களுக்கு மிக்க நன்றி)
  • கிடைத்த நண்பர்கள் 5
  • (நான் ஆரம்பிச்சது இல்லாம) தூண்டிவிட்டது 2
  • வாங்கிய அவார்ட்ஸ் 7
  • அதிகமா கமெண்ட் வந்த போஸ்ட் வெட்டுனேன் பாருங்க

இதுக்கு
மேல எதுவும் சொல்றா மாதிரி இல்லை. எனக்கு பெரிய frustration என்னன்னா, என் friends பல பேர் ப்ளோக படிச்சிட்டு, scrap பண்ணியோ, sms பண்ணியோ, chat பண்ணியோ கமெண்ட் சொல்றாங்களே தவிர, இங்க கமெண்ட் போட மாட்டேங்கறாங்க. நானும் பல முறை, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்க, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்கனு சொல்லிட்டேன். ம்ஹூம். எதுவும் நடக்கல. But its ok. நான் ப்ளோகறது, ப்ளோகிகினே தான் இருப்பேன். யாரு படிக்கறாங்களோ இல்லையோ. மற்றபடி, என் ப்லோகை தொடர்ந்து படித்து வரும், அத்தனை நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், நன்றிகள் கோடி.

பெருசா 1உம் நடக்கல

Friday, May 15, 2009

மற்றும் பல....

தினமும் ஒரு சிக்ஸர்
விளம்பர உலகத்திலேயே இதுபோல எதுவும் நடந்தது கிடையாதுன்னு நினைக்கிறேன். Almost, தினமும் ஒரு concept, தினமும் ஒரு AD, தினமும் அது நல்லா இருக்கு, அடுத்து என்னான்னு எதிர்பார்ப்பை கிளப்பிவிடுது. நான் சொல்றது, இப்ப IPL போட்டிகள் நடுவுல ஒளிபரப்பாகும் Vodafone ADs பற்றி. என்னை வேறெந்த விளம்பரமும் இவ்வளவு ஆச்சரியப்படுத்தியதில்லை. அது உண்மையா, கிராபிக்ஸா அப்படீன்னே நிறைய பேருக்கு சந்தேகம். இந்த விளபரம் கிராபிக்ஸ் இல்லையாமா. உண்மையான மனிதர்களுக்கு, அந்த கேரக்டர் ஏற்றாப் போல உடைகள் போட்டு எடுத்துருக்காங்க. அதைப் பார்க்கும்போது ஒருத்தருக்கு, அனிமேஷன்னே தோணும்.

பிரகாஷ்
வர்மா என்கிறவர்தான் இந்த விளம்பரங்கள இயக்கிருக்கார். இந்த கதா/விளம்பரப் பாத்திரங்கள உருவாக்க ரொம்ப பாடுபட்டிருக்கார். மொத்தம் மூணு வாரம் முன் ஏற்பாடுகள் மட்டுமே பண்ணிருக்கார். இன்னும் பல trivia இருக்கு. இந்நேரத்துக்கு அதெல்லாம் உங்களுக்கு forward mailla வந்திருக்கணும். அப்படி ஒரு வேளை உங்களுக்கு வரலைன்னா, கமெண்ட்ல உங்க மெயில் id mention பண்ணி, சொல்லுங்க. நான் அனுப்பறேன்..
-------------------------------------------------------------------------------------------------
Sadist
போன பதிவுல, என் டைரியை பற்றி நான் எழுதினதுக்கு (அதுவும் தூய தமிழில்), ரொம்ப நாளைக்கு அப்பறம், நிஜமாகவே நல்ல feedbacks வந்தன. என் நண்பர் ஒருவர், ஒரு படி மேலே போய், "உன் டைரிய படிக்க கொடு"னு கேட்டார். தரமாட்டேன்னு சொன்னதுக்கு, "நீ ஒரு sadist, எதிர்ப்பார்ர்பை கிளப்பி விட்டு, இப்ப வெறுப்பேத்தர"னு சொல்லிட்டார்.

நான் எழுதியதன் நோக்கம், என் நடையை நானே ஒரு வகையில சோதிச்சிக்கிட்டேன். உருப்படியா எதுவும் எழுதி ரொம்ப நாள் ஆகுதே, So, நம்மளால ஒழுங்கான நடைல எழுத முடியுதான்னு பார்க்கவே எழுதினேன், அதுவுமில்லாம, எழுதிய டைரிய படிச்சுப் பார்க்கும்போது, ஒரு மாதிரி திருப்தியாவே இருக்கு. என்னோட டைரிய படிக்கனும்னு கேட்ட அன்பர்கள் எல்லாருக்கும் , SORRY.
-------------------------------------------------------------------------------------------------
எண்ணங்கள்
தேவையில்லாத சிந்தனைகள் நிறைய தோணுது. நிறைய மனிதர்களோட பழகும் போது, அவங்களோட நடவடிக்கைகள கவனிக்க தோணிது. "நான் ஏன் அதெல்லாம் கவனிக்கறேன்" அப்படீங்கற எண்ணமும் parallela ஓடிகிட்டு இருக்கு. ஆனா இதுதான் மனித இயல்பு அப்படீன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கறேன். இவ்வளவு வித்தியாசமான attitudes இருக்குற ஆட்களோட பழகும் வாய்ப்பு, ஒரே சமயத்துல கிடைக்கும்போது, அதை ஒரு learning experiencea தான் நான் எடுத்துக்கறேன். எல்லாருமே, தினமும், அவங்களோட செயல்களால என்னை ஆச்சரியப் படுத்தறாங்க. அது, சில சமயங்கள்ல பாஸிடிவாகவும், பல சமயங்கள்ல நெகடிவ்வாகவும் இருக்கு.

நாம எவ்வளவு importance கொடுத்தாலும், நம்மை மதிக்காத, எந்த பிரச்சனையும் இல்லைனாலும், "சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை, நான் தீர்த்து வைக்கறேன்"னு சொல்ற, ஓவரா பொது நலத்துல அக்கறைன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்துற, நட்புக்கும் காதலுக்கும் சரியானா வரைமுறை பிரிக்கத் தெரியாத, இப்படி பலதரப்பட்ட ஆட்கள, ஒரு குறுகிய கால கட்டத்துல சந்திச்சிருக்கேன். இந்தப் பதிவ படிச்சிட்டு, "யாரைப் பற்றி சொல்ற??"னு யாரும் என்னை கேட்க வேண்டாம். உங்களுக்கு உண்மையான பதில் கிடைக்காது. நீங்களாகவே யாரையும் கற்பனை பண்ணிக்கவும் வேண்டாம். அது தவறாகவே இருக்கும்.

Tuesday, May 12, 2009

நான் கெடுத்த பாட்டு நம்பர் 2

-->இங்க<-- சொன்னது போலவே, மறுபடியும் feel பண்ணி மிக்ஸ் பண்ண பாடல் இது. கலக்கப்பட்ட ரெண்டு பாடல்கள் 1. உன் சமையல் அறையில் + 2. kaise kahen (from hindi film Shiva). மிக்ஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. இப்ப போஸ்ட் எதுவும் போட யோசனை வரலை, அதான் என் ப்ளோகை படிக்க வர அந்த 4 கோடி ஆட்களை ஏமாத்த வேண்டாம்னு, ஒரு filler. கேட்டுட்டு எப்படி கீதுன்னு கமெண்டுங்க.


Dil - Shiva Mix | Upload Music