Friday, December 23, 2011

ஒண்ணுமே புரியலை


சத்தியமா என்ன நடக்குதுன்னு தெரியலை.
நிறைய ஐடியாக்கள் இருந்தும் ஒரு கோர்வையா உட்கார்ந்து பதிவு போட முடியலை.
அடிக்கடி என் ப்ளாக் பக்கம் வந்து ஏமாறும் ஒரு சில நண்பர்களுக்கு என்னோட சிரம் தாழ்ந்த SORRY.
மன்னிச்சிடுங்க. கூடிய சீக்கரத்துல முன்னாடி மாதிரி FORM வந்துடும்னு நம்பறேன்.
நன்றி. விரைவில் சந்திப்போம்..


p.s. - வழக்கம் போல இந்த வருடக் கடைசியிலும் எண்ணிப் பார்த்தேன் பதிவுகள் எழுத்தப்படும். மீண்டும் நன்றி :)

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - ப.வி


கமல்ஹாசனோட நிறைய படங்கள்ல, அவருக்கு மட்டும் நல்ல பேரு கிடைக்கும். “படம் மொக்கை, ஆனா கமல் பின்னிட்டாரு”னு சொல்லுவாங்க. சூர்யாவும் அப்படிப்பட்ட ஹீரோவாகிட்டாருன்னு நினைக்கறேன். ஆனா, அவரும் கவர்ச்சி நடிகை மாதிரி அடிக்கடி உடம்பை காமிக்கறதை குறைச்சிகிட்டா நல்லா இருக்கும். சூர்யா மாதிரியே படத்துல தென்படற ஒரு ப்ளஸ், வில்லன் ஜானி. மிரட்டிருக்காரு. ஷ்ருதி ஹாசன், முதல் படத்துக்கு பரவாயில்லை. ஆனா மேக்கப் ஜாஸ்தி + தமிழ் கொலை. ரொம்ப சுமாரான மியூசிக், பிண்ணனி இசை, பழக்கப்பட்ட எடிட்டிங்னு கொஞ்சம் tiring.

தமிழன் தமிழன்னு சொல்லியே படத்தை ஓட வெச்சிடலாம்னு நினைச்சாரு போல நம்ம முருகதாஸ். சண்டை காட்சிகள் மகா நீளம். நோக்கு வர்மம்னு சொல்லி சொல்லி, ஒரு கட்டத்துக்கு மேல, யாரு நோக்கு வர்மம்ல திடீர்னு வில்லனா மாறி அடிக்க ஆரம்பிப்பாங்களோன்னு த்ரில்லிங்கா இருக்கு. அழுத்தமில்லாத திரைக்கதைல ஒன்றவே முடியலை. தமிழரோட முயற்சிய குறை சொல்றாங்க, உழைப்ப மதிக்கத் தெரியலை, அது இதுனு பேச்சுக்களும் வரும். அதுக்காக பயந்துகிட்டு படம் சூப்பர்னு சொல்லிடாதீங்க. தமிழர்களை பெருமை படுத்துற எண்ணத்துல இந்தப் படத்தை முருகதாஸ் எடுத்திருக்கலாம். ஆனா சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுவாரசியமா, அழுத்தமா சொல்லிருக்கலாம். முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனா Strictly average - இதை தவிர இந்தப் படத்தை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை.

பி.கு - தெலுங்குல என்னானு டயலாக் பேசுவாங்க?? ஆந்திராலேர்ந்துதான் ஆவக்காய் போச்சுன்னா??

Sunday, October 23, 2011

மற்றும் பல - 23/10/2011

வழக்கம் போல அப்படியே சோம்பேறித்தனத்துல இங்க எதுவும் எழுதாம விட்டுட்டேன். என்னோட பழைய பதிவுகளை கொஞ்சம் பார்க்கலாம்னு நினைச்சா, கடைசியா எழுதின 10 பதிவுகளுமே விமர்சனங்களாவே இருக்கு. சங்கடமா போச்சு. இனிமேலாவது ஒழுங்கா அப்டேட் பண்ண முயற்சி பண்ணனும். தட்டிக் கேட்க ஆள் இல்லாம போச்சுல. அதான்.. :)
-----------------------------------------------------------------------
பிபிசி வேலையை விட்டுட்டேன். என் மேல அக்கறை இருக்கற எல்லாரும் என்னை திட்டியாச்சு. உங்க அக்கறைக்கு நன்றி மக்களே :) ஆனா என்னை புரிஞ்சிகிட்ட யாரும் எதுவும் சொல்லல. அதுவே சந்தோஷமா இருக்கு. பிபிசில வேலை செஞ்ச இந்த ஒரு வருஷம் எப்படி போச்சுனே தெரியலை. எக்கச்சக்க நண்பர்கள், புரிஞ்சிகிட்ட விஷயங்கள், புதுப்புது அனுபவங்கள்னு மிக வேகமான ஒரு வருஷம். நான் எங்கெல்லாம் போக முடியாதுன்னு நினைச்சனோ, யாரையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சனோ, எல்லாமே நடந்துச்சு. (என்னோட facebook ஆல்பம பார்த்தா உங்களுக்கு புரியும் :P) சம்பந்தமே இல்லாத இடங்களுக்கும் போனேன். இந்த முதல் வேலை அனுபவம் கண்டிப்பா என்னோட எல்லா எதிர்கால வேலைகள்லையும் எதிரொலிக்கும்னு நம்பறேன். நன்றி டு பிபிசி :) அடுத்து என்னான்னு கேட்காதீங்க. இன்னும் யோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன் :) 
-----------------------------------------------------------------------
ராக் ஸ்டார் மற்றும் ரா ஒன் படத்தோட பாடல்கள் கொஞ்சம் ஈர்த்திருக்கு.
முதல்ல
, ராக் ஸ்டார்..... 
படத்துக்கு, ரஹ்மான், சூப்பர்லேடிவா இசை அமைச்சிருக்கர்தா இசை விமர்சகர்கள் நிறைய பேர் சொல்றாங்க. பாடல்கள் நல்லா இருந்தாலும் நம்ம நேட்டிவிட்டி இருந்தாதான ஓட்டும். அது எனக்கு கஷ்டம். டில்லி 6க்கு அப்பறம், ஹிந்தில ரஹ்மானோட பெஸ்ட்டுன்னு சில பேர் சொல்றாங்க. நமக்கு ஒண்ணும் புரியல. என்னதான் இருந்தாலும் ரஹ்மானுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
-----------------------------------------------------------------------
குறுஞ்செய்தி என்கின்ற எஸ்.எம்.எஸ்க்கு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க மாண்புமிகு ட்ராய். அதுக்கு அவங்க சொல்ற காரணம், டெலி மார்க்கெட்டிங் ஆளுங்களை கட்டுப்படுத்தவாம். அதுக்கு எதுக்கு நம்ம மடில கை வெக்கணும்னு தெரியலைநிறைய பேர் இந்தக் கட்டுப்பாடை ஆதரிக்கறாங்க. தேவையில்லாத  எஸ்.எம்.எஸ் வராதுன்னு. இவ்வளவு கோடி மக்களை கட்டுப்படுத்த முடியரவனுக்கு, நூறு டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியாதா? இல்லை வேற ஏதாவது காரணங்களாநான் காசு குடுக்கறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு  எஸ்.எம்.எஸ் அனுப்பறதுன்னு நான் முடிவு பண்ணிக்கறேன். இவனுங்க யாரு அதை கட்டுப்படுத்த? இன்னைக்கு இதுல கட்டுப்படுத்தரவனுங்க, நாளைக்கு "நீ இவ்ளோதான் பேசணும், இதுக்கு மேல பேசகூடாது"னு கட்டுப்படுத்தினா?? இதுல ஆச்சர்யம் என்னான்னா, இதுக்கு எதிரா, காதுல விழறா மாதிரி எந்தக் குரலும் வரலை. அவ்வளவு கூடவா யோசிக்க திராணி இல்லாம ஆகிட்டோம்? 
-----------------------------------------------------------------------
ரெண்டு பாட்டுக்காகவே சதுரங்கம் படம் பார்த்தேன். கிளைமேக்சை தவிர படம் சுவாரசியமாத்தான் இருந்துச்சு. சோனியா அகர்வாலைப் பத்தி நிறைய கமெண்ட்ஸ் சொல்லிட்டே படம் பார்த்தோம் நானும் என் நண்பனும். நல்ல வேளை சத்தமா சொல்லலை. பின்னாடி ரோல சோனியாவே உட்கார்ந்திருந்தாங்க. படம் முடிஞ்சா பின்னாடி, வெளிய கரு பழனியப்பன் நின்னுகிட்டு இருந்தாரு. போய் என்ன பேசறதுன்னு தெரியலை. அப்படியே வந்துட்டேன். 
-----------------------------------------------------------------------
முரண் படமும் நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் யோசிச்சா படத்தோட எல்லா டிவிஸ்டயும் பத்தாம் கிளாஸ் பையனே / பொண்ணே (நான் ஆணாதிக்கவாதி இல்லீங்கோ :P ) கண்டுபிடிக்கறா மாதிரி இருந்துச்சு. பிரசன்னா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சேரனுக்கு, எதையோ முழுங்கிட்டு வயித்துல சங்கடம் பண்றா மாதிரியான அதே லுக்கை, படம் முழுக்க மெய்ன்டெய்ன் பண்ணாரு. அவருக்கு ஏத்த ரோல். ஆனா, படம் நல்லா ஓடலைன்னு  கேள்விப்பட்டேன். pity. பாட்டு எல்லாம் மொக்கை. 

Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் - ப.வி

பொதுவா எனக்கு இந்த மாதிரி படங்கள் பிடிக்கறதில்லை. பொழுதுபோக்குக்கு படம் பார்க்க போய், எதுக்கு பாரமான மனசோட வெளிய வரனும்னு ஒரு எண்ணம். எங்கேயும் எப்போதும் அப்படி ஒரு படம்தான். நம்ம முகத்துல அறையரா மாதிரியான மெசேஜ் ஆனா எங்கேயும், யாரையும் அட்வைஸ் டயலாக் பேச விடலை. ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷர்வானந்த் + படத்துல ஒண்ணு ரெண்டு சீன்ல வர நடிகர்கள் கூட நல்லா நடிச்சிருக்காங்க. சூப்பரான காமெரா, எடிட்டிங். இசை படத்தோட மிகப்பெரிய பலம். அந்த விபத்து காட்சி, ஆடியன்ஸுக்கு தேவையான தாக்கத்தைவிட அதிகமாவே கொடுத்துருக்கு. ஸ்டண்ட் சூப்பர் சுப்பராயன்னு நினைக்கறேன். அசத்திட்டீங்க சார்.

ஆனா படத்துக்கு எப்படி U கொடுத்தாங்கன்னு தெரியலை. கண்டிப்பா சின்ன பசங்களும், இளகிய மனசுக்காரங்களும் பார்க்காதீங்க. ரெண்டு சிம்பிளான காதல் கதைகள், அதை நகைச்சுவையோட சொல்லிருக்கற விதம், நிஜமாவே ஒரு விபத்தை பார்க்கறா மாதிரி / விபத்துல இருக்கறா மாதிரி நடக்கற விபத்து, இப்படி, டைரக்டரோட திறமை படத்துல எங்கேயும் எப்பவும் தெரியுது. கண்டிப்பா பாருங்கனு சொல்ல மாட்டேன், ஆனா கண்டிப்பா பார்க்கலாம். படம் பார்த்து முடிச்சிட்டு, இனிமே பஸ்ல போக போகனுமான்னு நினைச்சீங்கன்னா, அதான் டைரக்டரோட வெற்றி. வாழ்த்துக்கள் சரவணன் சார். இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்ததுக்கு, Hats off முருகதாஸ் + ஃபாக்ஸ் ஸ்டார். 

p.s. - அந்த accident scene, final destination படத்தை நியாபகப்படுத்தினாலும், இன்னும் சிறப்பா எடுத்திருந்தா, இதைவிட பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். ஆனாலும், நம்ம ஊருக்கு, இந்த மாதிரி படம், ரொம்ப ரொம்ப புதுசு..

Saturday, September 17, 2011

வந்தான் வென்றான் - ப.வி

மங்காத்தா படம் எதனால ஓடுதுன்னே தெரியலைன்னு சொல்றவங்க, தயவு செஞ்சு வந்தான் வென்றான் படத்தைப் பாருங்க, தெரியும். என்னடா முதல் நாளே படம் ஃபுல் ஆகலியேன்னு நினைச்சேன். செய்தி முன்னாடியே பரவி, எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க போல. உள்ள நுழையும்போதே சில யூத் வார்னிங் பண்ணாங்க. ஆனா என் கிரகம். போய் மாட்டிகிட்டேன். படம் முடிய 30நிமிஷம் இருக்கும்போதே, நிறைய பேர் கிளம்பிட்டாங்க. அவ்வளவு மொக்கை. இல்லை இல்லை, மொக்கைங்கற வார்த்தை கரெக்டா விஷயத்தை கன்வே பண்ணலை. வேற வார்த்தை இருந்தா சொல்லுங்க.

எந்த விஷயத்தைப் பார்த்து இந்த படத்தை ஜீவா ஒத்துகிட்டாருனு தெரியலை. அவருக்கு பெருசா ஒண்ணும் ஸ்கோப் இல்லை. டம்மி. சந்தானமும் இந்த முறை சல்பெடுக்கலை. (அந்த குரல் மாத்தி பேசற காமெடி மட்டும் பரவாயில்லை). டாப்ஸி, டோண்ட் ஸீ. நந்தா படம் முழுக்க ஒரே ரியாக்‌ஷன். வேதநாயகம்னா, ஸாரி ஸாரி, ரமணாணா, பயம். எனக்கு வயத்த வலி, இந்த ரெண்டு டயலாகையும் ஒரே மாடுலேஷன்ல சொல்றாரு. தமனோட இசையும், படத்துல பெரிய நசைதான். ஆக மொத்ததில், இதற்கு மேல் எப்படி கழுவி ஊற்றுவது என்று தெரியவில்லை. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே. ஜீவாவின் கோ படத்தை மறந்து, அதற்கு முன் நடித்த, சிங்கம் புலி, கச்சேரி ஆரம்பம், தெனவட்டு ஆகிய படங்களை, நினைவு கூறுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம்தான், இந்த படத்துக்காக, சொட்ட சொட்ட மழைல நனைஞ்சிகிட்டு போனேன். என்னை மாதிரியே நிறைய பேர் ஈரமான மனசோட வந்திருந்தாங்க. படம் முடிஞ்ச அப்பறம்தான் தெரிஞ்சுது, எங்களை பலி கொடுக்க, ஆண்டவனே குளிப்பாட்டிருக்கான்னு. முடியலடா முருகா....

Saturday, July 9, 2011

வேங்கை - ப.வி

வழக்கமான ஹரியின் படம். இதைச் சொல்லி சொல்லியே போர் அடிக்குது. ஏய், நான் இப்படித்தான், என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு, எல்லாருக்கும் சவால் விட்டிருக்காரு ஹரி. ஆரண்ய காண்டம் பார்த்த கண்ணோட, மூளையோட, மனசோட இந்த படத்தை பாத்தீங்கன்னா,  சத்தியமா பிடிக்காது. நான் எதையும் எதிர்பார்க்கல, ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தேன். ரெண்டரை மணி நேரம், எனக்கும் என் நண்பனுக்கும் நல்லா பொழுது போச்சு.

தனுஷ், தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபை பண்ண முயற்சி பண்றாரு. மத்தபடி, எல்லா ஹரி படத்துலையும் வர கதாபாத்திரங்கள், அங்க இங்க கொஞ்சம் இடம் மாறி இருக்கு. அவ்வளவே. பிரகாஷ்ராஜ் இந்த படத்துக்காக தனியா நடிச்சாரா இல்லை, சிங்கம் படம் எடுக்கும்போதே சேர்த்து ஷூட் பண்ணிட்டாங்களான்னு தெரியலை. தமன்னா இல்லாம, வேற யாராவது நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும். தமன்னா நண்பியும், தனுஷோட தங்கையும், நல்லா இருக்காங்க.. ஹி ஹி... இசை ஓகே.

மறுபடியும் சொல்றேன், இவர் இப்படிதான்னு தெரிஞ்சுகிட்டே எதையும் எதிர்பார்க்காம படம் பாருங்க, நிச்சயம் நல்ல டைம் பாஸ். நாம சுறாவையே தாங்கின இதயங்களாச்சே. வேங்கையெல்லாம் வெங்காயம் சாப்பிடறா மாதிரி :) எப்படி நம்ம ஹரி ஸ்டைல் பன்ச். அப்பறம் சந்திப்போமா. ஆனா இப்படியே போனா, அடுத்த ஹரி படத்தோட விமர்சனம் ரெண்டு வார்த்தைதான் இருக்கும். “ஹரி படம்”

யோவ், இது சாமி படத்துல யூஸ் பண்ணதாம், புதுசா ஒண்ணு வாங்குங்கயா..

Sunday, June 19, 2011

அவன் இவன் - ப.வி

”அவனப் பத்தி நான் பாடப்போறேன்,
இவனப் பத்தி நான் பாடப்போறேன்.
அவனும் சரியில்லை, இவனும்தான் சரியில்லை,
 யாரப்பத்தி நான் பாடப்போறேன்”

படம் பாத்துட்டு, பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் போட்ட பாட்டு தான் இது. இதை விட இரத்தின சுருக்கமா இந்த படத்தைப் பத்தி சொல்லமுடியாது. உயிரக்கொடுத்து நடிச்சிருக்குற விஷாலும், ஜி.எம். குமாரும், வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த உழைப்பை தந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சு, இந்தப் படத்துக்காக மட்டும்தான், பாலா, தியேட்டர்ல நிறைய திட்டு வாங்கிருக்காரு. வழக்கமான ஒரு ”பாலா கிளைமாக்ஸ” யோசிச்சிட்டு, அதை சுத்தி ஒரு படம் பண்ணிருக்காரு. ஒண்ணே முக்கால் மணி நேரம், படத்துல என்ன நடக்குதுன்னே புரியலை. யுவனின் இசையும் பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லை.

இன்னும் பாலா தந்த அதிர்ச்சி என்னை விட்டு போகலை. விடுங்க, இதுக்கு மேல டைப் பண்ணா, மரியாதை குறைவா எதாவது சொல்லிடுவேன். விஷால், குமாரைத் தாண்டி படத்துல கவனிக்க வைக்கற ரெண்டு பேர், அந்த குண்டு பையனும், அம்பிகாவும். மத்தபடி, பாலாவை நம்பின விஷால், ஜி.எம்.குமார் + என்னை மாதிரி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு,  பாலா, பெரிய நம்பிக்கைத் திரோகம் பண்ணிட்டாருனு தோணுது. போங்கய்யா, போய் புள்ளைகுட்டிங்களை படிக்க வைங்க, வந்துட்டாங்க, அவன் இவன்னு. !@#$%^*

Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம் - ப.வி

சிம்பிளா சொல்லி முடிக்கறேன். படம் சூப்பர். அங்கங்க வர கொஞ்சம் செயற்கைத்தனமான ரியாக்‌ஷன்ஸும், சூழலும் மட்டுமே எனக்கு பட்ட குறை. மத்தபடி படம் அருமை. அதுவும் யுவன், பிண்ணணில பின்னிருக்காரு. நடிப்பு டிபார்ட்மெண்ட்ல எல்லாருமே அசத்தல், முக்கியமா அந்த பையன் + அவன் அப்பா. வசனங்களும் பக்காவா செட் ஆகிருக்கு. அங்கங்க உலகப்படம் பாக்கறா மாதிரி கூட இருந்துச்சு. பெண்களுக்கு புடிக்காதுன்னு சிலர் சொல்லிட்டு வராங்க. அப்படி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மென்மையான ஆளுங்களுக்கு பிடிக்காதுனு சொல்லலாம். so, மத்தவங்க எல்லாம், கண்டிப்பா படத்தை பாருங்க. Hats off to Kumararaja...  கண்டிப்பா பெரியவங்களுக்கு மட்டும். ஏன்னா இது ஆரண்ய Condom..

Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை - ப.வி

சுசீந்திரனுக்கு ஹாட் ட்ரிக். படம் எப்படி இருக்குனு சொல்லனும்னா, இந்த வார்த்தைய சொன்னா போதும். அவ்வளவு அழகான, எளிமையான, அமைதியான படம். இரண்டே மணி நேரப் படத்துல இருக்கற பாத்திரங்கள் எல்லாமே மனசுல பதியுது. படம் மொத்தமும் தூவினா மாதிரி, காமெடி கூடவே இருக்கு. எல்லா காட்சியுமே ரொம்ப புதுசா, திரைக்கதை யூகிக்கமுடியாத மாதிரி ஒரு படம். அளவான வசனங்கள், படம் பார்த்தவுடனே, ஒரு பாஸிடிவ் எனர்ஜிய நம்மால உணர முடியும். வழக்கம் போல ராஜா பிண்ணனில பின்னிட்டாரு. அந்த டைட்டிலோட வர இசைய மிஸ் பண்ணிடாதீங்க. ஆனா சில இடங்கள்ள பிண்ணனி இசை கொஞ்சம் பொருந்தல. பூவை கேளு பாட்டும் அவசியமானதா தெரியலை.


குறைனு என்ன சொல்றது, படம் கொஞ்சம் ஸ்லோனு சொல்லலாம், ஆனா அதுதான் படத்துக்கு அழகே. தேவையில்லாத அந்த ஒரு பாட்டு ஒரு குறை. படத்தோட ஆரம்பத்துலயே, படத்தோட காலத்தை சரியா உணர்த்தாம  இருக்கறதும் ஒரு மைனஸ் தான். இதுக்கு மேல எதுவும் தோணலை.
அட்டகாசமான லொகேஷன்ஸ், அதுக்கேத்தா மாதிரி கேமரா, சூப்பரான நடிகர்கள் தேர்வு, ஒவர் ஆக்‌ஷன் பண்ணாத ஆக்டர்ஸ், தோய்வில்லாத ஸ்கிரீன்ப்ளேனு ஒரு ஆர்ப்பாட்டமில்லாத படம். ரிலாக்ஸ்டா போய், என்ஜாய் பண்ணிட்டு வாங்க. கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.


சொல்ல மறந்துட்டனே, குதிரையும் நல்லா நடிச்சிருக்கு!!!!

Sunday, May 8, 2011

எங்கேயும் காதல் - ப.வி

சனிக்கிழமை நைட் படத்துக்கு புக் பண்ணிருந்தேன். அதனால, வெள்ளிக்கிழமைலேர்ந்தே படத்துக்கு பாதகமான விமர்சனம் வர ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டுதான் படத்துக்கு போனேன். சும்மா சொல்லகூடாது, செதுக்கு செதுக்கனு செதுக்கிருக்காரு டைரக்டர் பிரபுதேவா. கதையும் காணோம், திரைக்கதையும் காணோம். படத்துல வர சுமன் மாதிரி, டிடெக்டிவ் வெச்சு தேடினாலும், திரைக்கதைங்கற அம்சம் கிடைக்காது. ரெண்டு மணி நேர மியூசிக் வீடியோல, பாட்டுக்கு நடுவுல சீன் வெச்சா மாதிரி படா டமாஷு.

ஜெயம் ரவி, டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காரு. நல்லா டான்ஸ் ஆடறாரு. ஹன்ஸிகா ஒரு தினுசா இருக்காங்க. கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் வருது. ஆனா சாதரணமா நடிக்க வரலை. சுமன் ஒகே. ராஜூ சுந்தரம் கடுப்பேத்தறாரு. படத்துல ப்ளஸ், படம் ரெண்டே மணி நேரம், அமர்க்களமான கேமரா, லொகேஷன், நாங்கை பாட்டு படமாக்கப்பட்ட விதம். வெள்ளைக்காரங்க தமிழ்ல் லிப் மூவ்மெண்ட் கொடுக்கும்போது, புல்லரிக்குது. ஹன்ஸிகாவுக்கே நிறைய இடங்கள்ல sync ஆகலை. என்னடா கடைசியா பார்த்த ரெண்டு படமும் மொக்கையா இல்லையேனு, நானும் ரமேஷ் அண்ணாவும், எங்களுக்கே கண்ணு வெச்சுகிட்டதுனாலதான், இந்தப் படம் இப்படினு நினைக்கறேன். எங்கேயும் காதல், வெங்காயம் மாதிரி. உரிக்க உரிக்க ஒண்ணும் இல்லை.
நன்றி ரமேஷ் அண்ணா...

Monday, May 2, 2011

SOURCE CODE - ப.வி

கொஞ்சம் குழப்பமான, யோசிக்க வைக்கற படங்கள்னா எனக்கு ஆர்வம் ஜாஸ்தியாகிடும். இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும்போதே, படத்தை பார்க்கணும்னு  முடிவு பண்ணிட்டேன். எதிர்பார்த்த அளவு சூப்பரா இல்லைனாலும், கொடுத்த காசுக்கு மோசமில்லாம இருந்துச்சு.

ஹீரோ ஸ்டீவன்ஸ் ஒரு ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, அவருக்கு முன்னாடி ஒரு மிடில் ஏஜ் பிகர் உட்கார்ந்துகிட்டு “தாங்கஸ் ஷான், உன் அட்வைஸ நான் எடுத்துகிட்டேன்”னு சொல்றா, ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. குழப்பத்துல, அந்த ட்ரைன் சூழல்ல நடக்கற சில விஷயங்கள நோட்டம் விட்டுட்டே பாத்ரூம் போறாரு. கண்ணாடில வேற உருவம் தெரியுது. மறுபடியும் மண்டை காஞ்சு போய் வெளிய வராரு, அந்த பிகர் நிக்குது, பக்கத்து ட்ராக்ல இன்னொரு ட்ரைன் போகுது, பாம் வெடிச்சு, ரெண்டு ட்ரைனும் காலி. இப்போ மறுபடியும் ஹீரோ ஸ்டீவன்ஸ் அதே ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, எல்லா விஷயமும் மறுபடி நடக்குது. இதெல்லாம் என்னா மேட்டர்னு குழப்பத்தோட ஹீரோ கண்டுபிடிக்கறதை, சைன்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து பதில் சொல்லிருக்காங்க.

படம், கிராபிக்ஸ், எடிட்டிங், காமெரானு டெக்னிக்கலாவும் சூப்பர், நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நம்ம ரஸல் பீட்டர்ஸும் ஒரு சின்ன ரோல் பண்ணிருக்காரு. ஹீரோயின் கொஞ்சம் முத்தின கேஸ்தான், இருந்தாலும் இந்த படத்துக்கு பரவாயில்லை. ஹீரோ ஜேக், ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு விஷயம் தெரியவந்து தெளிவாகறதை, நல்லா வேறுபடுத்தி நடிச்சிருக்காரு. இந்த மாதிரி ஜானர் படங்கள் விரும்பறவங்க, கண்டிப்பா பார்க்கலாம். இன்ஸெப்ஷன் அளவு இல்லைனாலும், நல்லாதான் இருக்கு. படம் புரியாதவங்க பின்னூட்டத்துல கேளுங்க, விளக்கறேன் :)

Sunday, May 1, 2011

வானம் - ப.வி

படத்தோட டைட்டிலை படிக்கும்போதே, நிறைய பேர் ’வேணாம்’னுதான் படிக்கறாங்க. அவ்வளவு மோசமான படமில்லை. ஆனா சூப்பர் படமும் இல்லை. ஒரே நேரத்துல நாலு பேரலல் கதைகளை சொல்றது தமிழ் சினிமாவுக்கு புதுசுதான், ஆனாலும் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்து சுவாரசியமா சொல்லிருக்கலாம். இடைவேளை வரை, என்ன சொல்லவராங்கன்னே பிடிபடலை. அனுஷ்காவோட கதைய, தெலுங்குலேர்ந்து அப்படியே டப்பிருக்காங்க, கொஞ்சம் கூட ஒட்டலை. நல்லா இருந்த பாடல்களோட காட்சிகளும், சொதப்பல் ரகம்தான். சில பாடல்கள் தேவையே இல்லை.

படத்துல ஹைலைட், வழக்கம்போல சந்தானம் காமெடி, முக்கியமா சில இடங்கள்ல சிம்புவோட நடிப்பு, சரண்யா + அந்த தாத்தா நடிப்பு. ஒரு மத-நல்லிணக்க மெசேஜ சுத்தி கதையா, இல்லை, நாலு கதைக்கும் ஒரே கிளைமாக்ஸா இப்படி ஒரு மெசேஜ் சொல்லி முடிக்க வந்தாங்களான்னு, பத்து கெட்டெப் தசாவதாரம் மாதிரி ஒண்ணும் புரியலை. மெசேஜும், சுதந்திர தினத்துக்கு போடற ஸ்கூல் டிராமா மாதிரி இருந்துச்சு. ரொம்ப மேலோட்டமான, அரைவேக்காட்டுத்தனமான மெசேஜ். யாருமே பார்க்ககூடாத, மொக்கை படமில்லை. பட், இன்னும் கூட நல்லா இருந்திருக்கலாம். முடிஞ்சா பாருங்க.

பி.கு - போன பதிவுல, தேவி தியேட்டர்ல சவுண்டு நல்லா இல்லைனு எழுதிருந்தேன். ஆனா, வானம் படம் பாரடைஸ்ல பார்த்தேன். சவுண்டு வழக்கம் போல சூப்பர். கோ படத்துல தான் ஏதோ பிரச்சனையோ??

Monday, April 25, 2011

கோ - ப.வி

சாதரணமா கேட்கும்போது நம்ப முடியாத கதையா இருக்கறத, நம்பறா மாதிரி, கொஞ்சம் மசாலா தூவி எடுத்திருக்காங்க. ரொம்ப தோண்டினா, முதல் பாதி கொஞ்சம் நீளம், தேவையில்லாத வெண்பனி, அமளி துமளி பாடல்கள் மாதிரி சில குறைகள் தெரியலாம். ஆனா, ரெண்டே முக்கால் மணி நேரமுமே நல்ல எண்டெர்டெயின்மெண்ட். ஜீவா, அஜ்மல், (கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ்,) அந்த எடிட்டர், பியா, சிறகுகள் அணி, இப்படி எல்லாருமே கச்சிதமா நடிச்சிருக்காங்க. ஹீரோயின் கார்த்திகாவை தவிர. பாவம் நடிக்கவும் வரலை, அவ்வளவு சூப்பராவும் இல்லை. ஓவர் மேக்கப். அயன் மாதிரியே, இதுலையும், விட்டு போன குட்டி குட்டி டீடெய்ல்ஸை, ஃப்ளாஷ்பாக்ல சொல்றது, டெக்னாலஜிய யூஸ் பண்றதுனு சில விஷயங்கள் இருக்கு. நல்ல திருப்பங்களோட, வசனங்களோட சுறுசுறுப்பான படம். கண்டிப்பா பாருங்க. மிஸ் பண்ணாதீங்க.

எப்பவும் தேவி தியேட்டர்ல சவுண்டு சும்மா பட்டைய கிளப்பும். ஆனா, கோ பார்க்கும்போது ரொம்ப மோசமா இருந்துச்சு. முக்கியமா பாட்டும், பிண்ணனியும் ஒழுங்கா sync ஆகாம, செம்ம கடுப்பு. யார் கண் பட்டுதோ. வேற தியேட்டர்ல பாருங்க.

Thursday, April 14, 2011

மற்றும் பல (14/04/2011)

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டா, சித்திரை ஒண்ணானு காவலன் வடிவேல் மாதிரி சில பேர் கன்பீஸ் ஆகிருக்காங்க. நிறைய பேர் தெளிவாதான் இருக்காங்க.  தமிழ் புத்தாண்டு வாழ்த்தை சொல்லிகிட்டுதான் இருக்காங்க. காலங்காலமா அதை தமிழ் புத்தாண்டா கொண்டாடிட்டு, ஒரு தனியாளோட விருப்பத்துக்கு / சுயநலத்துக்கு ஏத்தா மாதிரி மாத்தினதை யாரும் பெருசா எடுத்தக்கலை. இந்த நாள்ல ஒண்ணுமே பண்ணாமா இருக்கறவங்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. அவங்களுக்கு லீவு கிடைச்சா போதும். 
------------------------------------------------------------------------------------------------------------------
எப்பவுமே ஸ்டேடியம் போய் மேட்ச் பாக்கறது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் என் தொழிலுக்காக அப்படி பார்க்க வேண்டியிருந்தது. சேப்பாக்கம்  மைதானத்துல நான் பார்த்த முதல் மேட்ச், இந்த ஐ.பி.எல்ல சென்னை-கொல்கத்தா ஆடின மேட்ச். அதுவும் மீடியா பாக்ஸ்ல, ஏசில உட்கார்ந்து பார்த்தது நல்ல அனுபவம். ஆனா, இந்த முறை ஐ.பி.எல் மோகம் கொஞ்சம் கம்மி ஆகிருக்கரா மாதிரி தெரியிது. நானும் பெருசா ஒன்னும் ஃபாலோ பண்ணலை. நிறைய ஆட்டம் ஃபிக்சிங் மாதிரியே வேற இருக்கு. என்ன எழவோ.
------------------------------------------------------------------------------------------------------------------
விவேக்கை பெட்டி எடுக்கும்போது சுவாரசியமான விஷயம் ஒண்ணு சொன்னாரு. காதலுக்கு மரியாதைல, விஜயோட ஃபிரெண்டா, இவர்தான் முதல்ல கூப்டான்கலாம். ஆனா, அந்த சமயத்துல, காதல் மன்னன் படத்துக்காக இவர் உதவி செஞ்சிகிட்டு இருந்ததால இவரால நடிக்க முடியலியாம். அடுத்து அழகிய தீயே படத்துல, இவர்தான் கதாநாயகனா நடிக்க வேண்டியதாம். சில கருத்து வேறுபாடுனால நடிக்க முடியாம போய், இன்னிவரைக்கும் ராதா மோகன் படங்களை மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கறதா வருத்தப்பட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்னரை மாசமா எதுவும் எழுதலை. வழக்கம் போல வேலைகள். சோம்பேறித்தனம். writers block. இப்படி நிறைய காரணங்கள். 
------------------------------------------------------------------------------------------------------------------
180 படத்தோட ஆடியோ ரிலிஸ், சம்பிரதாயமா, சத்யம் தியேட்டர்ல நடந்துச்சு. வழக்கம் போல, மேடைல பாடினவங்க, பாடலை, வாய் அசைச்சாங்க. வாசிச்சவங்க கை அசைச்சாங்க. ஃபான்டம் காமெரால 2500fpsல ஷூட் பண்ணிருக்காங்க. விஷுவலா நல்லா இருக்கு. டிரைலர் பெரிய எதிர்பார்ப்பு எதையும் உருவாக்கலை. ஒரு பாடல்ல சித்தார்த்தும் பிரியா ஆனந்தும் நெருக்கமா இருந்தது, ஆர்யாவை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருச்சு போல. அவர் பேசும்போது, அத பத்தியே சொல்லிக்கிட்டு இருந்தாரு. வர வர இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ரொம்ப கடியாயிருக்கு. 
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மொக்கை ஷார்ட் பிலிம் எடுத்திருக்கோம். எடிட்டிங் போய்கிட்டு இருக்கு. 
-----------------------------------------------------------------------------------------------------------------
நிறைய பரபரப்புக்கு மத்தியலா எலெக்ஷன் முடிஞ்சு போச்சு, யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காதுன்னு நினைக்கறேன். முதல் முறையா ஓட்டு போட்டேன். சல்பியா முடிஞ்சிருச்சு. 
------------------------------------------------------------------------------------------------------------------
பாலாவோட அவன் இவன் படத்துல, சூப்பர் சிங்கர்ல பாடின பிரியங்கா, ஸ்ரீ நிஷா, நித்தியஸ்ரீ மூணு பேரையும் ஒரு பாட்டுல, பாட வெச்சிருக்காங்க. பாட்டோட பிரிவியூ amazon.comல இருக்கு. இப்போதைக்கு பிரியங்கா குரல் மட்டும்தான் கேட்குது. பொண்ணு மிரட்டிருக்கு. கேட்டுப் பாருங்க.

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Monday, February 21, 2011

PLAYLIST - JANUARY '11

ஆடுகளத்தோட அய்யயோ, எங்கேயும் காதலின் நெஞ்சில் நெஞ்சில் + நாங்கை ஆகிய பாடல்கள் இன்னமும் லிஸ்ட்ல இருக்கு. புதுசா உள்ள வர பாடல்கள்

கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
மெதுவான ஷாட்ஸ், கீழயே பார்க்கற ஹீரோ, இதோட, மிஷ்கின் படத்தை அடையாளப்படுத்தும் இன்னொரு விஷயம் இந்த மஞ்சப் புடவை பாடல். கார்திகேயன்னு ஒருத்தர் நல்லா பாடிருக்காரு. நல்ல catchy டியூன். முதல் முறை கேட்டவுடனேயே பிடிச்சிருந்துது. அமீர் ஆட்டமும் சூப்பர். ஆனா, படத்தோட பார்க்கும்போது தேவையில்லைனுதான் தோணிச்சு.

என்னமோ ஏதோ, அக நக - கோ
என்னமோ ஏதோ, ட்ரெய்லர்ல கேட்டவுடனேயே அடுத்த ஹிட்டு ரெடின்னு முடிவு பண்ணிட்டேன். ஹாரிஸ் பிராண்ட் பாட்டு. அக நக பாடலும் அப்படிதான். அதுவும், நடுவுல ஒரு தெலுங்கு வரிகள் வர இடம் ரொம்ப அழகா இருக்கு. என்னதான் பாடல்கள் நல்லா இருந்தாலும், ஹாரிஸ் கொஞ்சம் அரச்ச மாவையே அரைக்கராறு. கவனிச்சிகிட்டா நல்லா இருக்கும்.

ராக்கெட் ராஜா - சிறுத்தை
ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு நல்ல ஹீரோ என்ட்ரி சாங். வழக்கம் போல, வித்யாசாகர் பேரு வெளிய வராமலே பாடல் ஹிட் ஆகிடுச்சு. போன ஜென்மத்துல என்ன பண்ணாரோ பாவம், எக்கச்சக்க ஹிட் பாடல்கள் கொடுத்தும் புகழடைய முடியல. கவலைபடாதீங்க சார், நாங்க இருக்கோம். 

யுவன் இசைல, பேசு, பதினாறு ஆகிய படங்கள் வந்தாலும், பாடல்கள் பெருசா எடுபடலை. போனா போகட்டும்னு இசையமைச்சா மாதிரி இருக்கு. அதே மாதிரி, ராஜாவின் அய்யன்னு ஒரு படம், அதுலயும் பாடல்கள் ரொம்ப சுமார்தான். ராஜாவோட பழைய பாடல்களோட ஒப்பிட்டு பார்க்கும்போதே, அய்யன் பாடல்கள் கொஞ்சம் பழசா இருக்கு. மணிரத்னம், பாலுமகேந்திரா மாதிரியான டைரக்டர்ஸ் மறுபடியும் எப்போதான் ராஜாவோட சேருவாங்களோன்னு இருக்கு.

இந்த மாசத்துலேர்ந்து, ஒவ்வொரு ப்ளேலிஸ்ட்லயும் எனக்கு பிடிச்ச பழைய பாடல்களை, ஒண்ணு ஒண்ணா உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். அது வேற மொழிப் பாடலா கூட இருக்கலாம். இந்த மாத பிளாஷ்பேக் பாடல், சுபாஷ் படத்துல வர ஹே ஸலோமா ஸலோ..


படம் ப்ளாப்னு தான் நினைக்கறேன். இருந்தாலும், இந்தப் பாடல், சில்க் ஸ்மிதாவோட கடைசி பாடல்னு விளம்பரப்படுத்தப்பட்டு கொஞ்சம் கவனிக்கப்பட்டுது. உங்கள்ள எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கும்னு தெரியலை. வித்யாசாகர் - அர்ஜுன் காம்பினேஷன்ல நிறைய நல்ல பாடல்கள் இருக்கு. அதுல இதுவும் ஒண்ணு. வில்லன் கும்பல் நடுவுல, ஹீரோ மாறுவேஷம் போட்ட, அங்க வர ஒரு ஐட்டமோட பாடரா மாதிரி ரொம்ப புதுமையான சிச்சுவேஷன். மறைந்த பாடகி சுவர்ணலதாவோட, வித்யாசாகரே பாடியிருக்காரு. குரல் சில இடங்கள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி இருக்கும். மொத்த பாடல்லையே ஒரு charm இருக்கும்.கேட்டுப் பாருங்க. 

Wednesday, January 26, 2011

மற்றும் பல (26/01/2011)

பொங்கலுக்கு வந்த படங்கள்ல, ஆடுகளமும் காவலனும் பிடிச்சிருந்துது. சிறுத்தைல காமெடி நல்லா இருந்துச்சு. ஆனா tiring. ஒரு கட்டத்துக்கு மேல அந்த சில்லறைத்தனங்களை பொறுத்துக்க முடியலை. காவலன், விஜயோட நடிப்புக்காகவே ரெண்டாம் முறை பார்த்தேன். இதுவரைக்கும் எந்த விஜய் படத்தையும் ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்த்ததில்லை. முக்கியமா அந்த பார்க் சீன், "எனக்காக கொஞ்சம் வேண்டிக்குங்கனு சொல்லும்போது, ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா"ன்னு கேட்கும்போதும், நிஜமாவே நல்லா இருந்துச்சு. (காவலனின் கோ.பா.சே ரேஞ்சுக்கு மாறிட்டனோ??)
------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் செய் படத்துல இருக்கற அந்த ஒரே ஒரு பாடலை ஒளிபரப்பும்போது பார்த்தேன். அமீர் செம்மையா ஆடிருக்காரு. இவருக்குள்ள இப்படியொரு டான்சாரானு ஆச்சரியமா இருந்துச்சு. அடுத்த ஹிட்டு பாட்டு ரெடி. செவ்வாய் கிரக புகழ் சாரு அவர்கள், மொத்தம் அஞ்சு செகண்ட் வராரு. அவரோட விரல் நல்லா டான்ஸ் ஆடிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
 ரொம்ப கஷ்டப்பட்டு, நேரம் ஒதுக்கி, ஒரு வழியா, கடைசி நாள், புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன். என்னோட ஒரே நோக்கம், சுஜாதாவோட எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும்ங்கறது. இந்த முறை குறு நாவல்கள் இரண்டு, மூணாம் தொகுதிகள், எப்போதும் பெண், ரத்தம் ஒரே நிறம், (என் தொலஞ்சு போன) கனவுத் தொழிற்சாலை மற்றும் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகங்களை வாங்கினேன். நம்ம கேபிளாரோட சினிமா வியாபாரம், ரொம்ப நேரம் தேடிகிட்டு இருந்தேன். நமக்கு தான் பார்வை கீழயே போகாதே ;). அந்த புத்தகம், கீழ் வரிசைல, கடைசில அடுக்கிருந்தாங்க. வாங்கினேன். என் அண்ணன் சுவாரசியாம படிச்சிகிட்டு இருக்கான்.
------------------------------------------------------------------------------------------------------------------
சில சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களை பேட்டிக்காக சந்திச்சேன்... அங்க கிடைச்ச tidbits
  • பாரதிராஜா அடுத்து, தென்கிழக்கு சீமையிலே ஒரு அப்பனும் ஆத்தாளும், அப்படின்னு ஒரு படம் எடுக்க போறாராம். அவருடைய கனவு படம், குற்ற பரம்பரையை கண்டிப்பா எடுப்பேன்னும் சொன்னார்
  • காவலன் படத்தோட இன்னொரு கதாநாயகி மித்ரா குரியன், நல்லாவே தமிழ் பேசறாங்க. ரொம்ப அப்பாவியா, வெள்ளந்தியா இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.
  • நடிகை ராதாவோட மகள் கிருத்திகா, 12ஆம் வகுப்பாம். பார்த்தா அப்படி தெரியலை. 
  • 3 இடியட்ஸ் பத்தின கேள்விகளுக்கு, டைரக்டர் ஷங்கர், ரொம்ப மழுப்பாலனா பதில்களே தந்தார். என்ன நடக்குதுன்னு புரியலை.
  • வைரமுத்துவோட வீடு, அடேங்கப்பானு இருக்கு. விவரிக்க வார்த்தையே இல்லை. ரொம்ப நல்லா பேசினார்.
  • பிரபல புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட்ராமன், காலேண்டர்னு ஒண்ணு போட்டுருக்காரு. நடிகர், நடிகைகள, அந்தக் கால வண்டிகளோட சேர்த்து போட்டோ எடுத்துருக்கார். இவ்வளவு கவனிச்சஅவங்க, காலெண்டர்ல வெறும் தேதிகள் மட்டும்தான் இருக்குனு கவனிக்காம விட்டுட்டாங்க. நாட்கள் இல்லவே இல்லை. அப்பறம் என்ன ______கு இதை காலேண்டர்னு சொல்றாங்க???
 ------------------------------------------------------------------------------------------------------------------
ஐபிஎல்  ஏலம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. ஏலம் விட்ட ரிசர்ட் ஹாட்லி பிரமாதாமா கொண்டு போனாரு. பார்க்கும்போது இருந்த ஒரே ஒரு வயத்தெரிச்சல், இந்த காசெல்லாம் எதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தாம, இப்படி கேவலமா செலவழிக்கராங்களேன்னு தான். ஒரு பக்கம் இந்திய ஏழை நாடுன்னு வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்கடா வெச்சிருக்கீங்க எல்லா காசையும்??
------------------------------------------------------------------------------------------------------------------
 இந்த முறையும் ஆஸ்கர் பந்தயத்துல, நோலனை ஒத்துக்கிட்டாங்க. சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், சிறந்த இயக்குனர்னு, நோலன் ப.படலை. என்ன டகால்டி நடக்குதுன்னு புரியலை. அட்லீஸ்ட் நோலனுக்கு, திரைக்கதைக்கும், படத்துக்குமான அவார்டாவது கிடைக்கணும். ஜெய் ஜக்கம்மா.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா காதலிச்சிகிட்டு இருந்தான். ரெண்டு பேருமே பயங்கர அன்யோன்யமா இருந்தாங்க. ரெகுலரா முகபுத்தகத்துல, நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள்னு போய்கிட்டு இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ தெரியலை, இப்போ பிரிஞ்சிட்டாங்க. அதுல ரொம்பவே மனம் நொந்து போன நண்பன், அந்த பெண்ணை திட்டி நிறைய ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கான். இதை பார்த்த அப்பறம், நான் அடிக்கடி பாக்கற ஒரு பிரபல sms தான் நினைவுக்கு வந்துச்சு


காதலில் தோற்ற ஆணின் மனதின் புண்பட்ட வார்த்தைகள்
அவ ஒரு தேவ____ மச்சி....

நான் இப்போதைக்கு அப்பீட்டு...
     

Monday, January 17, 2011

ஆடுகளம்

வந்த பொங்கல் படங்களில் odd one out. முழுக்க கமெர்ஷியல் படம்னும் சொல்ல முடியலை. அவார்டு படம்னும் சொல்ல முடியலை. நல்லா இருந்துச்சா இல்லையான்னு கேட்டா, கண்டிப்பா நல்லா இருந்துச்சு. ரொம்பவே தரமான படம். ஆனா, படம் பார்த்து முடிச்ச அப்பறம் ஏதோ ஒண்ணு நெருடுது. என்னான்னு சொல்லத் தெரியலை. திரைக்கு முன்னால, பின்னால, எல்லா விஷயமுமே ரொம்ப நல்லா இருக்கு. ஜெயபாலன், தனுஷ், கிஷோர், தப்சி எல்லாருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. ராதாரவி + சமுத்திரக்கனியோட டப்பிங் அருமையா இருக்கு. புதுசான ஒரு களத்தை காமிச்சு, நம்மை அதுல ஒன்ற வெச்சதுலையே டைரக்டர் பாதி ஜெயிச்சுட்டார். செவல் சண்டைகள் கிராபிக்ஸ் பல இடங்கள்ள கண்டுபிடிக்க முடியலை. நிறைய விஷயங்களை ரொம்ப டீடெய்லா காமிச்சது, டைரக்டரோட ஸின்சியாரிட்டிய காமிக்குது. ஆனாலும், முதல் பாதியோட momentum, ரெண்டாம் பாதில குறைஞ்சிடுது.


ஹீரோவோட அம்மா இறந்ததால மட்டுமே ஹீரோயின் காதலிக்கறாங்கன்னு நம்ப முடியலை. பேட்டைக்கரரோட கதாபாத்திரம், படத்தோட ஆரம்பத்துல ரொம்ப பக்குவமா நடந்துக்கராமாதிரி காமிச்சிட்டு, பிற்பாதில, பொறாமையோட திரியாருன்னு காமிச்சது, அப்படி இருந்தவரே பொறாமைல இப்படி ஆகிட்டாருன்னு உணர்த்தவானு தெரியலை. ரொம்பவே இயல்பான வசனங்கள், காட்சியமைப்பு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு புத்திசாலி ஹீரோயின் கதாபாத்திரம்னு படத்துல நிறைய ப்ளஸ்தான். இருந்தாலும், முதல்ல சொன்னாமாதிரி, ஏதோ ஒண்ணு இடிக்குது. கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமா அனுபவமா இருக்கும். ஒரு சில அவார்டு வாங்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
வெற்றிமாறன் நிறைய நம்பிக்கை கொடுக்கறாரு. பார்க்கலாம்.

p.s.ஹீரோ ஹீரோயின் சேர்ந்திட்டாலும், இது Happy Ending படமான்னு சொல்ல முடியலை..

p.s.2 தைரியமா filmography போட்ட நம்ம வெற்றிமாறனுக்கு ஒரு ஓ போடுங்க.

Sunday, January 16, 2011

காவலன்

இந்தப் பொங்கலின் இன்ப அதிர்ச்சி காவலன். நினைச்சே பார்க்கலை. இப்படி ஒரு விஜய் காணாம போயிட்டாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா,  கலக்கிட்டாரு. இதைதானைய்யா பண்ணணும்னு இவ்வளவு நாள் சொல்லிகிட்டு இருந்தோம். இப்பவாச்சும் உரைச்சுதே. ரொம்ப சிம்பிளான, அழகான கதை. தன் ஹீரோயிஸத்தை சண்டைக் காட்சிகள்ள மட்டும் வெச்சிட்டு, மீதி நேரம் மொத்தமும், மனுஷன் நிஜமாவே நடிச்சிருக்காரு. அசின் ஒட்டலை. ரொம்ப மேலோட்டமா நடிச்சிருக்காங்க. வடிவேல் ஒரு சில இடங்கள்ல சிரிக்க வைக்கிறாரு. மத்தவங்க எல்லாம் கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க. பாடல்கள் நல்லா இருக்கு. பிண்ணனி இசை பரவாயில்லை. மறுபடியும் விஜய் பற்றி சொல்லனும்னா, ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்காரு. அருமையான உடல் மொழி. தாய்மார்களுக்கு நிச்சயம் பிடிக்கும். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருக்கு. நான் இன்னொரு முறை பார்க்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். வித்தியாசமான கிளைமாக்ஸ். கண்டிப்பா குடும்பத்தோட பாருங்க..
Simply superb feel good movie...

p.s.1 - அபிராமி தியேட்டர்ல கடைசி வரிசைல உட்கார்ந்து பார்த்தேன். பாட்டெல்லாம் sound pan ஒழுங்கா இல்லாம, sync ஆகாம, ரொம்பவே படுத்திருச்சு. நல்ல பாடல்கள் எல்லாம் கேட்க மோசமா இருந்துச்சு... disappointing... யாராச்சும் அவங்ககிட்ட சொல்லுங்கப்பா...

Saturday, January 15, 2011

சிறுத்தை

பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. ஒரு டபுள் ஆக்‌ஷன் மசாலா படத்துல என்னவெல்லாம் இருக்கும்னு நினைக்கறீங்களோ, என்னவெல்லாம் நடக்கும்னு நினைக்கறீங்களோ, அதெல்லாம் அட்சரம் பிசகாம நடக்குது. போக்கிரி ஹீரோ, அவனோட அல்லக்கை காமெடியன், லூசு ஹீரோயின், அவளோட தாராள கவர்ச்சி, இன்டெர்வல் ட்விஸ்டு, குழந்தை செண்டிமெண்டு, வில்லன் வீட்ல ஐடம் பாட்டு, கிளைமாக்ஸ்க்கு முன்னாடி வர குத்து பாட்டுனு இப்படி நிறைய. என்னதான் தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்திருக்கோம்னு வழக்கம்போல சொல்லிகிட்டாலும்,பலத்த தெலுங்கு வாடை படம் முழுக்க இருக்கு. இந்த மாதிரி படமெல்லாம் இன்னும் எடுக்கறாங்களான்னு அதிசயமா கூட இருந்துச்சு. கார்த்தியின் நல்ல நடிப்பு, சந்தானத்தின் சூப்பர் காமெடி மட்டுமே படத்துல எனக்கு புடிச்ச விஷயம். கூட பார்த்த என் நண்பன், B, C சென்டர்ஸ்ல ஓடிரும்னு சொன்னான். அவங்க கூட இப்பெல்லாம் இந்த மாதிரி படம் பார்க்கறாங்காளான்னு தெரியலை. உங்களுக்கு மசாலா படங்கள் பிடிக்கும்னா, கண்டிப்பா பாருங்க, படம் போர் அடிக்கலை. ஆனா பார்த்த திருப்தி எனக்கில்லை. முதலுக்கு மோசமில்லாம ஓடிரும்னு நினைக்கறேன்.ரொம்ப வெட்டியா இருந்தா முயற்சி பண்ணுங்க...

p.s. படத்தை விஜய் டிவி வாங்கிட்டாங்க

p.s.2 - ரிப்பீட்டு - சந்தானம் காமெடி சூப்பரோ சூப்பர்.