Saturday, July 27, 2013

EA - சில அலட்சியங்கள்....


ஃபேஸ்புக்கில், நண்பர் கேபிளாரும், சுரேகா அவர்களும் ஆரம்பித்த குழுமம், கேட்டால் கிடைக்கும். வாடிக்கையாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வை, வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள். இன்று, அந்த குழுமத்தில் இருக்கும் பலர், அவர்கள் கேட்டுப் பெற்ற அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். சில பதிவுகளைப் பார்த்து, நானும் பல புதிய தகவல்களை மண்டையில் ஏற்றியிருக்கிறேன். இன்று, எனக்கு நேர்ந்த அனுபவத்தினால், சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அவற்றை அங்கே பதிவிட்டு, இங்கே காபி பேஸ்டுகிறேன். இதைப் படிக்கும் அன்பர்கள், இப்பதிவை முடிந்த வரை, மற்றவரிடத்தில் பகிருங்கள். நன்றி.  
//இங்கு பலர், எக்ஸ்பிரஸ் அவென்யூவில், அவர்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அங்கு கேட்டு கிடைத்த சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளனர். இதோ, இன்று என் முறை.

புதிதாக ஆடை வாங்க, பல நாட்களாக திட்டமிட்டு, முடியாமல், வேறு வழியில்லாமல், நேரமின்மையால், பக்கத்தில் இருக்கும் EAவிற்கு செல்லலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். நண்பருக்கு, பசித்ததால், முதலில், அங்கு பேஸ்மன்ட் 1ல் இருக்கும் பிட் ஸ்டாப் எனும் கடைக்குச் சென்றோம்.


1. நண்பர் சாப்பிட்டார். நான் தண்ணீர் கேட்கப் போக, வழக்கம் போல, தண்ணீர் கொடுப்பதில்லை என்றும், பாட்டில் தான் வாங்க வேண்டும் என்றும், கிளிப்பிள்ளை போலக் கூறினார் கல்லாவில் இருந்த அப்பாவி இளைஞர். “வர கஸ்டமருக்கு ஃப்ரீயா தண்ணி தர வேண்டியது உங்க கடமை, உங்க மேனஜருக்கு சொல்லுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றோம். கண்டிப்பாக வேறொரு சந்தர்பத்தில், கேட்டு வாங்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன் (என் பிரச்சனை, நேரமின்மை). அடுத்து, இரண்டாவது தளத்தில் இருக்கும் மேக்ஸ் என்ற கடைக்குச் சென்றோம்.

2. 2000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கிவிட்டு, வெளியே வரும்போது, அங்கிருந்த ஃப்ளெக்ஸில், 1400 ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு 200 மதிப்புள்ள வவுச்சர் தரப்படும் என்ற விளம்பரம் இருந்தது. மீண்டும் நான் உள்ளே சென்று, கவுண்டரில் இருந்தவரிடம் “வவுச்சர் இருக்குன்னு போட்டிருக்கீங்க, எதுவும் தரலியே”

“அது maxx ப்ராடக்ட்ல மட்டும்தான் சார்”

“ஆமாம், பாருங்க, நான் வாங்கினது எல்லாம் உங்க பிராண்ட் தான்” என எடுத்த ஆடைகளை எடுத்து காமிக்க. எனக்கு பில் போட்ட நபரைக் கூப்பிட்டு, “சரியா பார்க்க மாட்டியா, எடுத்து குடு” என சொல்ல, அவர் வவுச்சர் எடுக்க சென்றார்.
நான் விடாமல் அவரிடம் “ஏன் சார், கஸ்டமருக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைதான, அவங்க வந்து கேட்கற அளவுக்கு வெச்சீப்பீங்களா”

”நாங்க செக் பண்றோம் சார், இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சு, சாரி” என சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். கேட்டு கிடைத்த வவுச்சருடன் திரும்பினோம்..
 
 3. அடுத்து, பார்க்கிங்க் கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்த நபர்

“70rs சார்” என்றார்.

நான் “எவ்வளவு நேரம் ஆகிருக்கு” என கேட்க

“3rd hourல வெளிய வந்துருக்கீங்க” என பதில் வந்தது

"அதுக்கு 50rs தான? weekendலதான 70” என கேட்டேன்.

“ஆமா சார், 50 ரூபாதான்” என சொல்லிவிட்டு, கொடுத்த 100 ரூபாய்க்கு, 50 ரூபாய் மிச்சம் தந்தார். வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

1. இதில் எவ்வளவு வாடிக்கையாளர்கள், தண்ணீர் கொடுக்க வேண்டியது உணவகத்தின் பொறுப்பு என்பதைத் தெரியாமல் இருப்பார்கள்? இருக்கிறார்கள்? இன்றும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

2. என்னைப் போல, பார்த்து கேட்காமல் போனவர்களால், மேக்ஸ் நிறுவனத்திற்கு, எவ்வளவு 200 ரூபாய் வவுச்சர்கள் லாபத்தில் சேர்ந்திருக்கும்?

3. எப்படியும் மால்களில் பார்க்கிங்க் கட்டணம் அதிகம் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் எவ்வளவோ நண்பர்கள், சரியாகப் பார்க்காமல், 70 ரூபாயை கொடுத்து விட்டு வந்திருக்கலாமே?

கேட்டால் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எப்படி கேட்பது, எதையெல்லாம் கேட்பது என்பது பற்றிய விழிப்புணர்வு, பெரும்பாலனவர்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த குழுமத்தில் இருக்கும் சக உறுப்பினர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என, ஒரு குறுகிய வட்டத்திலேயே விழிப்புணர்வு இருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை வாடிக்கையாளர் விழிப்புணர்வு பற்றிய தகவல்களை, இன்னும் பல்லாயிரம் பேருக்குத் தெரிவிக்க, வேறேதேனும் வழியுள்ளதா? ஃபேஸ்புக் பயன்படுத்தாத பெரும்பான்மையினருக்கு இதைக் கொண்டு செல்வது எப்படி? இதைப் பற்றி ஏற்கனவே யாராவது இங்கு பேசியிருக்கிறார்களா ? அதற்கான தீர்வு ஏதேனும் கிடைத்ததா?
//

Saturday, July 20, 2013

மரியான்


வழக்கமான எதிர்பார்ப்போட, வழக்கமான தேவி தியேட்டர் நடு செண்டர்ல சீட்டு புக் பண்ணி, வழக்கம் போல உட்கார்ந்தா, வழக்கம் போல அழ வெச்சு அனுப்பிய பெரும்பாலான படங்களில் இன்னொரு படம்தான் மரியான்.


கடல் ராசாவா வாழ்ந்துட்டு வர தனுஷ், காதலிக்காக சூடன் நாட்டுக்கு வேலைக்கு போய், ரெண்டு வருஷம் கழிச்சு, திரும்பி வர ரெடியா இருக்கற நாள்ல, அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளால கடத்தடப்படறார் (நம்ம ஊர் ரவுடிகளுக்கு டாடா சுமோ மாதிரி, அவங்க ஊர்ல ஜீப்னு நினைக்கறேன். அயன் படத்துலையும் இப்படிதான் வந்துச்சு) அவர் பத்திரமா ஊர் திரும்பினாரா, காதலர்கள் ஒண்ணா சேர்ந்தாங்களான்னு, டிக்கெட்டுக்கு காசு இருந்தா போய் பாருங்க.


படத்துல தனுஷ், பார்வதி மேனன், ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க. இதனாலயே பார்வதி நிறைய படங்கள்ல நடிக்கறதில்லைன்னு நினைக்கறேன். மற்றபடி, படத்துக்கு தேவையான பாத்திரங்கள் எல்லாம், டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காங்க. முதல் பாதி கொஞ்சம் சுவாரசியமா இருந்தாலும், நிறைய பழக்கப்பட்ட காட்சிகள். எப்படியும் தனுஷ் லவ் பண்ணிடுவாருன்னு தியேட்டர்ல இருக்கற 900+ ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும், ஹீரோயின் கொஞ்சம் சூப்பரா இருக்கறதுனால, மக்கள் கொஞ்சம் பொறுமையோடதான் பாக்கறாங்க. இதையும் மீறி, எல்லாருமே பொறுமையிழந்தது, ரெண்டாவது பாதில. சுவாரசியமே இல்லாத திரைக்கதை. தனுஷ் மணல்ல உருண்டு விழறா மாதிரி, பொத்துனு விழுது, எந்திரிக்கவே இல்லை. வெளிநாட்டு கேமராமேனோட முத்திரை எதுவும் தெரியலை. நம்ம ஊர் ஆட்களே இதை பண்ணிருக்கலாம். மத்த விமர்சனங்கள்ல சிலாகிக்கறா மாதிரி ரஹ்மான் பாடல்கள், பி.இசை ஒண்ணும் படத்துல ஒட்டவே இல்லை. ஆனா, எப்பவும் போல, எல்லா பாட்டுலையும் பல்லவி மட்டும் நல்லா இருக்கு. தனுஷ், பார்வதியோட Top Notch நடிப்பைத் தாண்டி, படத்துலையே நான் ரொம்ப ரசிச்ச காட்சி, தனுஷ் வில்லனை கொல்றது. ”கடல் டா, கடல்” அப்படின்னு மணிரத்னம் சார் படத்தோட பேரை சொல்ல மிரட்ட, அங்கயே வில்லன் பாதி செத்துற்றான்.

இதுக்கு மேல சொல்லி உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. தனுஷோட நடிப்பையும், தமிழ் சினிமால ஒரு ஹீரோயின் சூப்பரா நடிக்கறதையும் பார்க்கணும்னு ஆசை பட்டா, இந்த படத்தை, எதாச்சு ஒரு மல்டிப்ளெக்ஸ்ல பாருங்க. ஏன்னா, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது சுத்தமா ஒத்து வராத படம். எனக்கு மரிYAAAAAAWN....

ஐய்யயோ, இந்தப் பையன் விமர்சனம் எழுதறான். கடல் ஆத்தா, காப்பாத்து

Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா??