Saturday, July 20, 2013

மரியான்


வழக்கமான எதிர்பார்ப்போட, வழக்கமான தேவி தியேட்டர் நடு செண்டர்ல சீட்டு புக் பண்ணி, வழக்கம் போல உட்கார்ந்தா, வழக்கம் போல அழ வெச்சு அனுப்பிய பெரும்பாலான படங்களில் இன்னொரு படம்தான் மரியான்.


கடல் ராசாவா வாழ்ந்துட்டு வர தனுஷ், காதலிக்காக சூடன் நாட்டுக்கு வேலைக்கு போய், ரெண்டு வருஷம் கழிச்சு, திரும்பி வர ரெடியா இருக்கற நாள்ல, அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளால கடத்தடப்படறார் (நம்ம ஊர் ரவுடிகளுக்கு டாடா சுமோ மாதிரி, அவங்க ஊர்ல ஜீப்னு நினைக்கறேன். அயன் படத்துலையும் இப்படிதான் வந்துச்சு) அவர் பத்திரமா ஊர் திரும்பினாரா, காதலர்கள் ஒண்ணா சேர்ந்தாங்களான்னு, டிக்கெட்டுக்கு காசு இருந்தா போய் பாருங்க.


படத்துல தனுஷ், பார்வதி மேனன், ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க. இதனாலயே பார்வதி நிறைய படங்கள்ல நடிக்கறதில்லைன்னு நினைக்கறேன். மற்றபடி, படத்துக்கு தேவையான பாத்திரங்கள் எல்லாம், டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காங்க. முதல் பாதி கொஞ்சம் சுவாரசியமா இருந்தாலும், நிறைய பழக்கப்பட்ட காட்சிகள். எப்படியும் தனுஷ் லவ் பண்ணிடுவாருன்னு தியேட்டர்ல இருக்கற 900+ ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும், ஹீரோயின் கொஞ்சம் சூப்பரா இருக்கறதுனால, மக்கள் கொஞ்சம் பொறுமையோடதான் பாக்கறாங்க. இதையும் மீறி, எல்லாருமே பொறுமையிழந்தது, ரெண்டாவது பாதில. சுவாரசியமே இல்லாத திரைக்கதை. தனுஷ் மணல்ல உருண்டு விழறா மாதிரி, பொத்துனு விழுது, எந்திரிக்கவே இல்லை. வெளிநாட்டு கேமராமேனோட முத்திரை எதுவும் தெரியலை. நம்ம ஊர் ஆட்களே இதை பண்ணிருக்கலாம். மத்த விமர்சனங்கள்ல சிலாகிக்கறா மாதிரி ரஹ்மான் பாடல்கள், பி.இசை ஒண்ணும் படத்துல ஒட்டவே இல்லை. ஆனா, எப்பவும் போல, எல்லா பாட்டுலையும் பல்லவி மட்டும் நல்லா இருக்கு. தனுஷ், பார்வதியோட Top Notch நடிப்பைத் தாண்டி, படத்துலையே நான் ரொம்ப ரசிச்ச காட்சி, தனுஷ் வில்லனை கொல்றது. ”கடல் டா, கடல்” அப்படின்னு மணிரத்னம் சார் படத்தோட பேரை சொல்ல மிரட்ட, அங்கயே வில்லன் பாதி செத்துற்றான்.

இதுக்கு மேல சொல்லி உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. தனுஷோட நடிப்பையும், தமிழ் சினிமால ஒரு ஹீரோயின் சூப்பரா நடிக்கறதையும் பார்க்கணும்னு ஆசை பட்டா, இந்த படத்தை, எதாச்சு ஒரு மல்டிப்ளெக்ஸ்ல பாருங்க. ஏன்னா, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது சுத்தமா ஒத்து வராத படம். எனக்கு மரிYAAAAAAWN....

ஐய்யயோ, இந்தப் பையன் விமர்சனம் எழுதறான். கடல் ஆத்தா, காப்பாத்து

No comments: