Showing posts with label punch. Show all posts
Showing posts with label punch. Show all posts

Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா?? 

Saturday, July 9, 2011

வேங்கை - ப.வி

வழக்கமான ஹரியின் படம். இதைச் சொல்லி சொல்லியே போர் அடிக்குது. ஏய், நான் இப்படித்தான், என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு, எல்லாருக்கும் சவால் விட்டிருக்காரு ஹரி. ஆரண்ய காண்டம் பார்த்த கண்ணோட, மூளையோட, மனசோட இந்த படத்தை பாத்தீங்கன்னா,  சத்தியமா பிடிக்காது. நான் எதையும் எதிர்பார்க்கல, ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தேன். ரெண்டரை மணி நேரம், எனக்கும் என் நண்பனுக்கும் நல்லா பொழுது போச்சு.

தனுஷ், தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபை பண்ண முயற்சி பண்றாரு. மத்தபடி, எல்லா ஹரி படத்துலையும் வர கதாபாத்திரங்கள், அங்க இங்க கொஞ்சம் இடம் மாறி இருக்கு. அவ்வளவே. பிரகாஷ்ராஜ் இந்த படத்துக்காக தனியா நடிச்சாரா இல்லை, சிங்கம் படம் எடுக்கும்போதே சேர்த்து ஷூட் பண்ணிட்டாங்களான்னு தெரியலை. தமன்னா இல்லாம, வேற யாராவது நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும். தமன்னா நண்பியும், தனுஷோட தங்கையும், நல்லா இருக்காங்க.. ஹி ஹி... இசை ஓகே.

மறுபடியும் சொல்றேன், இவர் இப்படிதான்னு தெரிஞ்சுகிட்டே எதையும் எதிர்பார்க்காம படம் பாருங்க, நிச்சயம் நல்ல டைம் பாஸ். நாம சுறாவையே தாங்கின இதயங்களாச்சே. வேங்கையெல்லாம் வெங்காயம் சாப்பிடறா மாதிரி :) எப்படி நம்ம ஹரி ஸ்டைல் பன்ச். அப்பறம் சந்திப்போமா. ஆனா இப்படியே போனா, அடுத்த ஹரி படத்தோட விமர்சனம் ரெண்டு வார்த்தைதான் இருக்கும். “ஹரி படம்”

யோவ், இது சாமி படத்துல யூஸ் பண்ணதாம், புதுசா ஒண்ணு வாங்குங்கயா..

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Wednesday, January 26, 2011

மற்றும் பல (26/01/2011)

பொங்கலுக்கு வந்த படங்கள்ல, ஆடுகளமும் காவலனும் பிடிச்சிருந்துது. சிறுத்தைல காமெடி நல்லா இருந்துச்சு. ஆனா tiring. ஒரு கட்டத்துக்கு மேல அந்த சில்லறைத்தனங்களை பொறுத்துக்க முடியலை. காவலன், விஜயோட நடிப்புக்காகவே ரெண்டாம் முறை பார்த்தேன். இதுவரைக்கும் எந்த விஜய் படத்தையும் ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்த்ததில்லை. முக்கியமா அந்த பார்க் சீன், "எனக்காக கொஞ்சம் வேண்டிக்குங்கனு சொல்லும்போது, ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா"ன்னு கேட்கும்போதும், நிஜமாவே நல்லா இருந்துச்சு. (காவலனின் கோ.பா.சே ரேஞ்சுக்கு மாறிட்டனோ??)
------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் செய் படத்துல இருக்கற அந்த ஒரே ஒரு பாடலை ஒளிபரப்பும்போது பார்த்தேன். அமீர் செம்மையா ஆடிருக்காரு. இவருக்குள்ள இப்படியொரு டான்சாரானு ஆச்சரியமா இருந்துச்சு. அடுத்த ஹிட்டு பாட்டு ரெடி. செவ்வாய் கிரக புகழ் சாரு அவர்கள், மொத்தம் அஞ்சு செகண்ட் வராரு. அவரோட விரல் நல்லா டான்ஸ் ஆடிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
 ரொம்ப கஷ்டப்பட்டு, நேரம் ஒதுக்கி, ஒரு வழியா, கடைசி நாள், புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன். என்னோட ஒரே நோக்கம், சுஜாதாவோட எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும்ங்கறது. இந்த முறை குறு நாவல்கள் இரண்டு, மூணாம் தொகுதிகள், எப்போதும் பெண், ரத்தம் ஒரே நிறம், (என் தொலஞ்சு போன) கனவுத் தொழிற்சாலை மற்றும் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகங்களை வாங்கினேன். நம்ம கேபிளாரோட சினிமா வியாபாரம், ரொம்ப நேரம் தேடிகிட்டு இருந்தேன். நமக்கு தான் பார்வை கீழயே போகாதே ;). அந்த புத்தகம், கீழ் வரிசைல, கடைசில அடுக்கிருந்தாங்க. வாங்கினேன். என் அண்ணன் சுவாரசியாம படிச்சிகிட்டு இருக்கான்.
------------------------------------------------------------------------------------------------------------------
சில சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களை பேட்டிக்காக சந்திச்சேன்... அங்க கிடைச்ச tidbits
  • பாரதிராஜா அடுத்து, தென்கிழக்கு சீமையிலே ஒரு அப்பனும் ஆத்தாளும், அப்படின்னு ஒரு படம் எடுக்க போறாராம். அவருடைய கனவு படம், குற்ற பரம்பரையை கண்டிப்பா எடுப்பேன்னும் சொன்னார்
  • காவலன் படத்தோட இன்னொரு கதாநாயகி மித்ரா குரியன், நல்லாவே தமிழ் பேசறாங்க. ரொம்ப அப்பாவியா, வெள்ளந்தியா இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.
  • நடிகை ராதாவோட மகள் கிருத்திகா, 12ஆம் வகுப்பாம். பார்த்தா அப்படி தெரியலை. 
  • 3 இடியட்ஸ் பத்தின கேள்விகளுக்கு, டைரக்டர் ஷங்கர், ரொம்ப மழுப்பாலனா பதில்களே தந்தார். என்ன நடக்குதுன்னு புரியலை.
  • வைரமுத்துவோட வீடு, அடேங்கப்பானு இருக்கு. விவரிக்க வார்த்தையே இல்லை. ரொம்ப நல்லா பேசினார்.
  • பிரபல புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட்ராமன், காலேண்டர்னு ஒண்ணு போட்டுருக்காரு. நடிகர், நடிகைகள, அந்தக் கால வண்டிகளோட சேர்த்து போட்டோ எடுத்துருக்கார். இவ்வளவு கவனிச்சஅவங்க, காலெண்டர்ல வெறும் தேதிகள் மட்டும்தான் இருக்குனு கவனிக்காம விட்டுட்டாங்க. நாட்கள் இல்லவே இல்லை. அப்பறம் என்ன ______கு இதை காலேண்டர்னு சொல்றாங்க???
 ------------------------------------------------------------------------------------------------------------------
ஐபிஎல்  ஏலம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. ஏலம் விட்ட ரிசர்ட் ஹாட்லி பிரமாதாமா கொண்டு போனாரு. பார்க்கும்போது இருந்த ஒரே ஒரு வயத்தெரிச்சல், இந்த காசெல்லாம் எதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தாம, இப்படி கேவலமா செலவழிக்கராங்களேன்னு தான். ஒரு பக்கம் இந்திய ஏழை நாடுன்னு வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்கடா வெச்சிருக்கீங்க எல்லா காசையும்??
------------------------------------------------------------------------------------------------------------------
 இந்த முறையும் ஆஸ்கர் பந்தயத்துல, நோலனை ஒத்துக்கிட்டாங்க. சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், சிறந்த இயக்குனர்னு, நோலன் ப.படலை. என்ன டகால்டி நடக்குதுன்னு புரியலை. அட்லீஸ்ட் நோலனுக்கு, திரைக்கதைக்கும், படத்துக்குமான அவார்டாவது கிடைக்கணும். ஜெய் ஜக்கம்மா.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா காதலிச்சிகிட்டு இருந்தான். ரெண்டு பேருமே பயங்கர அன்யோன்யமா இருந்தாங்க. ரெகுலரா முகபுத்தகத்துல, நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள்னு போய்கிட்டு இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ தெரியலை, இப்போ பிரிஞ்சிட்டாங்க. அதுல ரொம்பவே மனம் நொந்து போன நண்பன், அந்த பெண்ணை திட்டி நிறைய ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கான். இதை பார்த்த அப்பறம், நான் அடிக்கடி பாக்கற ஒரு பிரபல sms தான் நினைவுக்கு வந்துச்சு


காதலில் தோற்ற ஆணின் மனதின் புண்பட்ட வார்த்தைகள்
அவ ஒரு தேவ____ மச்சி....

நான் இப்போதைக்கு அப்பீட்டு...
     

Thursday, December 30, 2010

மற்றும் பல (30/12/2010)

கடைசி ரெண்டு மூணு வாரத்துல, நிறைய சினிமா ஆட்களைப் பார்த்துட்டேன். கிடைக்கற சாக்குல ஃபோட்டோவும் எடுத்து, சும்மா ஸீனுக்கு ஃபேஸ்புக்கல போடறேன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல வரவேற்பு...
 ------------------------------------------------------------------------------------------------------------------
மன்மதன் அம்பின் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க மாட்டேன்னு அறிவிச்ச அன்னைக்கு சாயங்காலமே நீக்கப்படும்னு அறிவிச்சது செம்ம காமெடி. கமலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ரசிகர்களும், அடுத்த எலெக்‌ஷன்ல திமுகவுக்கு ஓட்டு போடற ஆட்களும் ஒரே மாதிரிதான். இவங்க ரெண்டு பேருக்குமே என்ன சொன்னாலும் புரியாது, உரைக்காது. அதனால, இப்படிப்பட்ட ஆட்களோட விவாதத்துல இறங்காதீங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
 இப்பவே சிறந்த படத்துக்கான ஆஸ்கார் எந்தப் படத்துக்குப் போகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்துல வந்த ப்ளாக் ஸ்வான் அப்படிங்கற படத்துக்கும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. எனக்கென்னமோ இன்செப்ஷன் படத்துக்கு கொடுக்கலாம்னு தோணுது. ஏற்கனவே இருக்கறத வெச்சி ஒண்ணும் பண்ணாம, புதுசா ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை சிக்கலாக்கி, மக்களுக்கு புரியறாமாதிரி தந்து, அவங்களை யோசிக்கவும் வெச்ச படம் இது. வேற என்ன தகுதி எதிர்பார்க்கறாங்கன்னு தெரியலை. ஆஸ்கார் கமிட்டிக்கும், இயக்குனர் நோலனுக்கும் ஆகாதுன்னு வேற பேசிக்கறாங்க. ம்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் சங்க விழா ஒண்ணு வெச்சாங்க. மொக்கையா டான்ஸ், பாட்டுனு போய்கிட்டு இருந்த விழாவுல, அப்பப்போ யாராவது வந்து கலகலப்பாக்குனாங்க. ஆனா, ராஜாவும், பாராதிராஜாவும் பேசினது, சகிக்கலை. ராஜா இன்னும் ஒரு குழந்தை மாதிரியே சண்டை போடுறத பார்க்கும்போது மகேந்திரன் சார் சொன்னது தான் ஞாபகம் வருது. பாரதிராஜாவும் சளைக்காம சண்டை போட்டாரு. ரெண்டு பெரிய மனுஷங்க இப்படி பண்ணது, நல்லாவே இல்லை. அதே நேரத்துல, யுவன், வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன் மேடைல ஜாலியா பேசிகிட்டதைப் பார்க்க நல்லா இருந்த்துச்சு. Little Girls are wiser than men அப்படிங்கற கதையும் ஞாபகம் வந்துது. கடைசி வரைக்கும் ரஜினி இண்டர்வியூவை போடாம ஏமாத்திட்டாங்க. :(
------------------------------------------------------------------------------------------------------------------
புதுசா ஆரம்பிச்சிருக்கற தேவியின் டால்பி 3டி, டிக்கெட் காசு போக 30ஓவாயும் கண்ணாடிக்கு கொடுக்கணுமாம். அங்க எந்த 3டி படமும் பார்க்க வேணாம்னு இருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்னியின் Tangled படம், இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகும்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா மாதிரியே, சீரியலும் எடுத்தா நல்லா இருக்கும்னு பல காலமா சொல்லிகிட்டு இருக்கேன். அதுவும் பிலிம்ல எடுத்து, அதே தரத்துல கொடுத்தா கண்டிப்பா வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். நான் நினைச்சதை, இயக்குனர் கவுதம் மேனன் பண்ணப்போறாரு. சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டிலதான் இத சொன்னாரு. அவருடைய ஃபோட்டான் கதாஸ் நிறுவனமே தயாரிக்கற இந்த டி வி சீரிஸ், ஏ ஆர் ரகுமானின் இசைல இருக்கப்போகுது. இன்னும் எந்த சேனல்னு முடிவு பண்ணலியாம். CSI, Friends ரேஞ்சுல, தமிழ்ல ஒரு சீரியல்னு நினைக்கவே நல்லா இருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சேர்ந்து  http://sa-pa-sa.blogspot.com/ அப்படின்னு, ஒரு இசை சம்பந்தப்பட்ட blog ஆரம்பிச்சிருக்கோம். படிச்சுப் பாருங்க..

Sunday, May 30, 2010

மற்றும் பல...

இனிமே, பதிவு எழுத நேரமே இல்லைன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே மக்கள், "ஆமா, நீங்க ரொம்ப பிஸி, அதான, அட போயா"னு கத்தறாங்க. அதனால, இனிமே அப்படி சொல்ல வேணாம்னு பாக்கறேன். இருந்தாலும், திடீர் திடீர்னு காணாம போறதுக்கு காரணம் இருக்கணும் இல்லையா, அதுவும் இல்லாம என் ரசிகப் பெருமக்கள் வேற வருத்தப்படுவாங்களா, அதனாலா ஒரு சின்ன விளக்கம் கொடுக்க கடமை பட்டிருக்கேன்..

பதிவு எழுதாம இருக்கா இப்போ ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சின்னதா நான் ஒரு internship பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்து, i just run of ideas a bit fast. தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதேன்னு நினைக்காதீங்க, தமிழ்ல கரிக்டா சொல்ல முடில. மனசுல இருக்கறத, சரியா பதிவு வடிவத்துக்கு மாத்த முடியல. வேற சில பிரச்சனைகளும் இருக்கு. ஆனா, அதெல்லாம் ஒரு நாலு வருஷம் கழிச்சு சொல்றேன், ஞாபகப்படுத்துங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
திரை விமர்சனப் பதிவுகள், ரொம்பவே clicheவா ஆகிட்டு வருது. வார்த்தைப் பிரயோகம், பாராட்டும்/திட்டும் விதம், எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. என்னோட சில விமர்சனங்களும் அப்படி மாறி வர்றத உணர்ந்து தான், ஒரு பத்தில விமர்சனம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இருந்தாலும், இன்னமும் நம்ம கேபிள் ஷங்கர் சாரோட பதிவுகளுக்கு, ஹிட்ஸ் குவியுது. அவர், சத்யம் தியேட்டர், சன் டிவி, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஆகிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
சுறாவோட தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டேன். வழக்கம் போல விஜய், "படம் ஹிட்டு"ன்னு பெட்டி குடுக்க, அடுத்த நாளே ரெட் கார்ட் போடப் போறாங்கன்னு செய்தி வருது. இதையே படமா எடுத்துருக்கலாம், செம்ம காமெடியா இருந்திருக்கும் and இரும்புகோட்டை முரட்டு சிங்கம், எனக்கும் ரொம்ப புடிச்சுது. முக்கியமா, அந்த translator சாம்ஸ் மற்றும் பாஸ்கர், காட்சிக்கு காட்சி கோல் அடிக்கறாங்க. பாடல்கள் ஒண்ணும் வேலைக்கு ஆகல. மறுபடியும், ஜி.வி.பிரகாஷ்சுமார் தான். முக்கியமா, குழந்தைகள் படத்துல, அந்த லக்ஷ்மி ராய் பாட்டு, totally irrelevant...
------------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு முன்னாடி, என் ஆங்கில அறிவுக்கு வந்த சோதனையைப் பத்தி எழுதியிருந்தேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, இந்த இரண்டு வருடங்கள்ல, என் ஆங்கிலம் கொஞ்சம் நல்லாவே improve ஆகிருக்குன்னு நினைக்கறேன். சில வார்த்தைகள், வாக்கியங்கள், பீட்டர்ல மட்டுமே சிந்திக்க வருது. முக்கியமா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்கவே மாட்டேங்குது. (and vice-versa). எப்படியோ, நானும், பீட்டர்ல கொஞ்சம் சீன் போட முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. பார்க்கலாம், 'எதாவது' நடக்குதான்னு... ;)
------------------------------------------------------------------------------------------------------------------
வேலை இன்னும் கிடைக்கல, கிடைச்ச அப்பறம் கண்டிப்பா சொல்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
"உன் பிரச்சனைக்கு அவன் காரணமா, இல்ல இவன் காரணமா இல்ல அந்த பொண்ணு காரணமா"னு கேள்வி கேட்ட என் நண்பன் கிட்ட, சமீபத்தில் நான் உதிர்த்த தத்துவம்.. "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, எல்லாத்துக்கும் என் எண்ணமும் செயலும் மட்டுமே காரணம். வேற யாரும் இல்லை. அதனால FV". (fv means freeya vidu). கரெக்டாதன சொல்லிருக்கேன். Sometime i get too philosophical you see.. :P..

இந்த நேரத்துல, வேற ஒரு காமெடி நினைவுக்கு வருது. போன வருஷம், என் பேரைச் சொல்லி, எடை பாக்கற மெஷின்ல, என் நண்பிகள் சில பேரு, சீட்டு எடுத்தாங்க, (என்ன பாசம் பாருங்க) அதுல என்ன போட்டிருந்துதுனா, "நீங்கள் சிந்தித்து கொண்டே இருப்பாதால், உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது". இப்போ நினைக்கறேன், "So true"
------------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் சொல்லிட்டேன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கறேன். மீண்டும், மீண்டு வருக... இப்போதைக்கு நான் ஜூட்டு...

எங்க போயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்...

Sunday, October 11, 2009

அதாகப்பட்டது சார்....

வாணி அக்கா (நான் ரொம்ப சின்ன பையனாக்கும் ;) ஒரு tag கொடுத்துருக்காங்க. அதாவது, என் வாழ்க்கைல, நான் உபயோகப்படுத்தற, பிரபலமான brands பத்தி. எவ்வளவு வேணும்னாலும் சொல்லலாம். இருந்தாலும், கொஞ்சம் லிமிட்டிக்கறேன்...

காலைல எழுந்ததுமே, முதல்ல பல்லு தேய்க்கணும். அதுக்கு நான் பயன்படுத்துவது, உங்கள் ஹிமாலாயா டூத் பேஸ்ட். பல பேர் கேள்விப் பட்டிருக்கவே மாட்டீங்க. இனிமே கேள்விப் படுவீங்க. இதை நான் வாங்க இரண்டு காரணங்கள். 1. இது ஒரு சுதேசி product. 2. நிஜமாவே நல்லாத்தான் இருக்கு.

அடுத்ததா குளிக்க use பண்றது, godrej Cinthol soap. டாக்டர் பல பேர் இததான் recommend பண்ணாங்க. அடுத்து, இதுவும் சுதேசி product.

பயன் படுத்தற கைப்பேசி, சோனி எரிக்சன் k810i. முதல்ல நோக்கியா வெச்சிருந்தேன். அது செத்துப் போனதால, இப்ப சோனி. பேரு தான் சோனி, (என்னை மாதிரி ;) ஆனா நல்லா உழைக்குது (இதுவும் என்னை மாதிரி). உள்ள இருக்குற சிம் கார்டு, airtel.

அடுத்ததா, நான் சாப்பிடுவது, அம்மா பிராண்ட் சமையல். அதாவது எங்கம்மா கையால சமைச்சுப் போடுறத சாப்பிடுவேன். ரொம்ப நாளா பயன்படுத்தரேனே, அதனால, இதுவும் எனக்கு பிராண்ட் மாதிரி தான். (வேறு எங்கும் கிடைக்காது :)

தினமும் சாப்பிடற, நோவர்டிஸ் கம்பெனியோட trioptal மாத்திரைகள். என் நிதானத்திருக்கும், தெளிவிற்கும், இதுவே காரணம்.   
   
இது தவிர, நிறைய பேர் பயன்படுத்தற விண்டோஸ், மோசெர் பேயர் cd, ஹீரோ ஹோண்டா வண்டின்னு என் வாழ்க்கைல பல பிராண்டுகளின் பங்கு கீது.

இந்த நேரத்துல, நான் உங்க கிட்ட கேக்கறது ஒண்ணே ஒண்ணு தான். முடிஞ்ச வரை, இந்தியால தயாரிக்கற பொருட்களையே பயன் படுத்துங்க. தரம் சரியில்லைனு நினைக்கற ஆளுங்க, அட்லீஸ்ட், உங்க அன்றாட வாழ்க்கைல, ஒரு பொருளையாவது, சுதேசி பொருளா மாத்துங்க. கீழ, இருக்குற சுதேசி பொருட்களோட விவரங்களை தரேன், மற்றவங்களுக்கும் குடுங்க. இது, இந்திய பொருளாதாரம் வளரவும் ஒரு பெரிய உதவியா இருக்கும். மறுபடியும் சொல்றேன், அட்லீஸ்ட் ஒரு பொருளையாவது தொடர்ந்து வாங்குங்க. அகிம்சைல மட்டும் இல்லாம, இந்த விஷயத்துலையும் காந்திய follow பண்ணுங்க. இதுல எவ்வளவு பொருட்களை நீங்க அன்றாடம் பயன்படுத்தறீங்கன்னு பாருங்க. ஜெய்ஹிந்த்

BATHING SOAP:
USE   - CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
INSTEAD OF - LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE



TOOTH PASTE:
USE   - NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK
INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT  


TOOTH BRUSH:
USE - PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B 


SHAVING CREAM:
USE - GODREJ, EMANI
INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETE



BLADE:
USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA
INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365 , GILLETTE


TALCUM POWDER:
USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS
INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER



MILK POWDER:
USE - INDIANA , AMUL, AMULYA
INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID. 


SHAMPOO:
USE - LAKME, NIRMA, VELVET
INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE 



MOBILE CONNECTIONS
USE - BSNL, AIRTEL
INSTEAD OF - HUTCH


இந்த tagஐ சர்வேசன் அண்ணனுக்கும் (நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியும் இருந்தாலும்....), கனகு அண்ணனுக்கும், தம்பி கிருஷ்ணா குமாருக்கும், கார்த்திக் தம்பிக்கும், பூர்ணா மேடமுக்கும் பாஸறேன்......


Nandri வாணி அவர்களே. உங்களால எனக்கு ஒரு நல்லா விஷயம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது....

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

Wednesday, July 1, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -2

முதல் பகுதி -->இங்க<--

தொடர்ந்தான் சிகாமணி, "அதாவது படம் எவ்வளவு கேவலமா இருந்தாலும், பிரம்மாண்டத்த வெச்சு ஒட்டிரலாம்னு பல பேர் நினைக்கறதால, அத மாதிரியே ஒரு கதை. மொத சீன்லயே மவுண்ட் ரோடு LIC பில்டிங் மேல ஒரு டைனோசர் நிக்குது". உடனே நான், "அது எப்படி மச்சான். கிராபிக்ஸ்ஸா??". "இல்லைடா, ஒரு யானைக்கு டைனோசர் make up போட்டு நிக்க வெக்கறோம். இதுக்கு, ஆப்ரிக்கா வனப் பகுதிலேர்து ஒரு make up மேன வரவழைப்போம். இன்னும் கேளு. அந்த டைனோசர பார்க்க, மவுண்ட் ரோடு முழுக்க ஜனங்க குவியறாங்க"

"எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட். என்னப் பண்றதுன்னே தெரியாம குழப்பத்துல இருக்குற நம்ம டைனோசர், பக்கத்துல இருக்குற பில்டிங் எல்லாத்தையும், தன் வாலாலையும், காலாலையும், (சென்சார்) அடிச்சு நொறுக்குது. அத கிராபிக்ஸ் பண்றோம். ஆனா, ரியலிஸ்டிக்கா இருக்கணுமே, அதனால, மவுண்ட் ரோட்ல இருக்குற எல்லா பில்டிங்குக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கிறோம். சுண்ணாம்பு பரவுதே. அப்புறம், அந்த டைனோசர அழிக்க, இந்திய ராணுவமே அங்க குவியுது. விமானப் படைலேர்ந்து, பிளைட்டெல்லாம் வருது. குண்டு போட்டு, டைனோசர அழிக்கப் பாக்கறாங்க, ஆனா எதுவும் நடக்கலை"

"கீழ இருக்குற மக்கள், என்ன ஆகப் போகுதோன்னு, அன்னாக்கா ஆ போட்டு, ஆகாயத்தை பார்க்க சொல்ல, நம்ம ஹீரோ, டைனோசர் ஸ்டொமக்க கிழிச்சிகிட்டு வெளிய வந்து, டைனோசர அழிக்கராறு. எப்பூடி??"

"மச்சான், பேரரசு உடம்புல, ஷங்கர் ஆவி புகுந்தா மத்திரி இப்படியொரு கதை யோசிச்சு வெச்சிருக்கியே. பட்ஜெட் எவ்வளவு??"

"10 கோடி"

"பத்துமா??"

"மொத சீனுக்கு கரெக்டா இருக்கும்"

"அடப்பாவி, முதல் சீனுக்கேவா. ரைட் விடு. எனக்கு கொஞ்சம் கியாரா இருக்கு, நான் வரட்டா??"

"அட இருடா. அடுத்து நாம எப்ப பார்க்கறது. இந்த கதயவே முடிக்கல. ஆனா, சிம்பிளா இன்னும் ஒரே ஒரு கதை சொல்றேன். கேட்டுட்டு போயேன்"

"நான் பாவம்ல. சரி சீக்கரமா சொல்லு. ஆனா இதோட நிறுத்திக்க. start music"

முதல்ல அவ்வளவு சிம்பிளா இருக்கும்னு நினைக்கல. கதைல இருக்குற செண்டிமென்ட கேட்டு எனக்கு வயறு upset ஆகிருச்சுனா பாருங்களேன்.

......will end in next post

Monday, June 15, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -1

நம்ம சிகாமணிக்கு, தமிழ் சினிமான்னாலே aversion. நல்ல கதையம்சம் இருக்குற படம் வருதேன்னு சொன்னா கூட, "என்ன நூத்துல ஒரு படம். அதாவது, நூறு shit வந்தா, ஒரு Hit" அவ்வளவுதான்னு சொல்லுவான். அதுவும் நம்மூரு படத்துல வர காதல் காட்சிகள்னா, அவன் வாய்லேர்ந்து கலர் கலரா கெட்ட வார்த்தைகள் வரும். "*#@!த பாட்டா எழுதறானுங்க, எழுதுற lyrics எல்லாம் !@#று மாதிரி இருக்கு. மேட்டர் படத்துல எல்லாத்தையும் காமிக்கரானுங்க, ஆனா இவனுங்க எழுதுறது அத விட வக்கிரமா யோசிக்க வைக்கும்"னு பொங்கி எழுந்துருவான்.

ஒரு நாள், வழக்கம் போல இத மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தவன நிறுத்தி "நீ எவ்வளவு சொன்னாலும், இத மாதிரி சின்னபுள்ளத்தனமான படம் எடுக்கவும் கொஞ்சம் அறிவு வேணும். எங்க, உன்னால முடியுமா?? நீ விமர்சனம் மட்டும்தான் பண்ண லாயக்கு"னு சொன்னேன். "ஆமாம், பெரிய அறிவு. மண்டைல மசாலான்னு சொன்னத உன் directors எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு, ஒரே மொக்க மசாலா படமா தள்ளிகிட்டு இருக்காங்க. நான் அவங்கள விட மோசமா யோசிச்சு ஒரு கதை சொல்லட்டா??"னு கேட்க, நான் சரின்னு சொன்னேன் ... அவன் ஆரம்பிச்சான்...

"அதாவது, இது ஒரு மசாலா படத்துக்கான கதை. படத்தோட ஹீரோ பேரு சைதாபேட்டை, படத்தோட பேரும் சைதாபேட்டை. நம்ம, ஹீரோ, கலைஞர் ஆர்ச் பக்கத்துல டீ கடை வெச்சிருக்காரு.மொத சீனே மோதலோட ஆரம்பிக்குது ரொம்ப நாளா கடன் சொல்லி டீ குடிக்கிற, அந்த பேட்டை தாதா ஆளுங்கள அடிச்சு வெரட்டுராறு. கேள்வி கேட்க வந்த தாதாவையும் பின்னி பெடலேடுக்குராறு. அடிச்சு முடிசித்ட், "டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"னு மொக்கையா பன்ச் dialogue விட்டு,

//சைதாபேட்டை சைதாபேட்டை சைதாபேட்டை,
ஒரு ஆத்து ஆத்துனா, நீ கண்ணம்மாபேட்டை//னு intro சாங் பாடுரார்.

ஒரு நாள் அந்த பக்கமா வர நம்ம ஹீரோயின், ஹீரோ டீ ஆத்துற ஸ்டைல பார்த்து மயங்கி, ஊட்டில போய், "டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க. இவங்க கருமம் புடிச்ச லவ்வு, கன்னாபின்னான்னு develop ஆவுது. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ, அந்த ஏரியா counsilor மாதிரி, ஏரியா பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைக்கறார். அதே சமயத்துல, லவ்வே புடிக்காத ஹீரோயினோட அண்ணன், ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். இதுல பெரிய ஹீரோ யாரவது நடிச்சாக்கா, அவங்களுக்கு ஏத்த மாதிரி,
"மழைல மனுஷன்தான் நனைவான், புயல் நனையாது"னு பன்ச் டயலாக் எதையாவதோ சேர்த்துக்கலாம். எப்பூடி????"

சொல்லி முடிச்ச சிகாமாணிய ஏற இறங்க பாத்துட்டு, "நீ தமிழ் சினிமாவால இவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன்னு தெரியாம போச்சுடா. இந்த ஒரு கதை தான் யோசிச்சியா, இல்லை இன்னும் இருக்கா??"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஆமாம் இதுக்கெல்லாம் உட்கார்ந்து யோசிக்கறாங்க, இன்னொரு கதை சொல்றேன் கேட்கறியா"னு ஆரம்பிச்சான். அந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான கதைய எப்படிதான் யோசிச்சானோன்னு இருக்கு........

......will continue

Saturday, February 21, 2009

F வார்த்தையும் - ஓ வார்த்தையும்

p.s. இந்தப் பதிவை, அம்பிகள், அப்பாவிகள் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்...(அப்பதான படிப்பீங்க ;)

உங்களில் எவ்வளவு பேர் கெட்ட வார்த்தை பேசுவீங்க? நான் பேசுவேன். அதுவும் கோபம் வந்தா, நானேகூட காது கொடுத்து கேட்க முடியாத படி திட்டுவேன். இருந்தும், ஒரு சென்னை தமிழனா, நான் என் கடமைய சரியா செய்யறேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. பொதுவா சினிமால கெட்ட வார்த்தைகள் வந்தா அந்த "டோயங்" சத்தம்தான் நிறைய வரும்.

நம்மூரு சினிமாக்கள், ஆபாசத்துலையும், கெட்டவார்த்தைகள்ளையும் மட்டுமே உலகத்தரத்த அடைஞ்சிகிட்டு இருக்கு. ஆனா, ஒரு சில நல்ல படங்கள்ல கெட்ட வார்த்தைகள் வரும்போதும் "டோயங்" சத்தம் வந்து எரிச்சல் குடுக்கும். சென்சார் செய்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. ஏதோ மக்கள், இதனால மட்டுமே கெட்டு போய்டுவாங்க, இல்லைனா அவங்க ரொம்ப அப்பாவினு நினைப்பாங்க போல. U படத்துல சென்சார் செய்யறது ஓகே, ஆனா A படத்துலையுமா??

ஹாலிவுட்ல, படங்களோட certification ஏத்தா மாதிரி அதோட contents இருக்கும். அங்கயும் சில சமயங்கள்ல, கெட்ட வார்த்தைகள் மாட்டுவதுண்டு. இங்க நாம எப்பவும் கேட்கும்/சொல்ற ஒ** வார்த்தை மாதிரி, அங்க F*** வார்த்தை. படங்கள்ல மட்டும் இல்லாம, பாடல்கள், புத்தகங்கள் எல்லதுலயுமே அந்த வார்த்தைய முடிஞ்ச வரை சென்சார் பண்ணிருவாங்க. ஒரு முறை நான் லோக்கல் trainla வரும்போது கேட்ட conversation, சரியான காமெடி. ஒரு பையன் போன்ல யார பத்தியோ இங்கிலீஷ் + தமிழ்ல மாறி மாறி பேசுறான். இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னானா, அவன் கெட்ட வார்த்தைய பேச மட்டுமே தமிழ் use பண்ணான்.

அவன் பேசுனதுல ஒரு சில வரிகள் (கரெக்டா புரிஞ்சிகிட்டு படிங்க) ,
"மச்சான், i was comin da, ஒ** he didnt notice. ஒ** i was lik fell down. ஒ** it was all of A sudden. ஒ** i didnt expect. ok மச்சான், where are U now.... ஒ** no, wait in this side, ஒ**................................". இப்படியாக ஒ** ஒ**னு பேசிகிட்டே இருந்தான். தமிழ் எப்படியெல்லாம் வளருது பாருங்க. இங்க மட்டும் இல்ல, ஹிந்தி பேசுற பல பேர், கெட்ட வார்த்தைய மட்டும் தமிழ்ல பேசி கேட்டிருக்கேன். அது ஏன்னு தெரியல. ஒரு வேலை, தமிழ் ரொம்ப expressive மொழியா இருப்பதனால இருக்கும். ஆனா ஒரு விஷயம், மந்திரம் சொல்றதுனால எப்படி உடம்புல positive vibes வருமோ, அது மாதிரி, கெட்ட வார்த்தைகள் பேசுனா நம்ம உடம்புல மட்டும் இல்ல, நம்மள சுற்றி இருக்குற எல்லார் உடம்புலயும், மனசுலயும் negative vibes வரும்.

எனவே, கெட்ட வார்த்தை பேசும் அன்பர்கள், அதனை குறைக்கவோ, ஒழிக்கவோ பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நானும் கடுமையான முயற்சி செய்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ் (ஒ** எப்படி நம்ம தமிழ் பற்று)

http://sororitysecrets.files.wordpress.com/2008/08/bad_words.jpg

p.s. எந்த இங்கிலீஷ் படத்துல, maximum f word வருதுன்னு யாருக்காவது தெரியுமா???

Saturday, January 3, 2009

ஒரு தடவ resolution எடுத்தா, என் பேச்சை......

எல்லாரும் நியூ இயர் resolution எடுப்பாங்க... அத செஞ்சு முடிக்காம, அடுத்த வருஷம் இன்னொரு புது resolution எடுப்பாங்க. ஆனா நான் எப்பவுமே மாற மாட்டேன். என்னோட default resolution, எப்பவுமே, 1024 x 768 and
19 inch ஸ்க்ரீன்ல 1440 x 900..... ;)


சில நல்ல கார்டூன்ஸ்.....