Showing posts with label வாங்கிக் கட்டியது. Show all posts
Showing posts with label வாங்கிக் கட்டியது. Show all posts

Sunday, March 29, 2015

மற்றும் பல - 29/03/2015

உத்தமவில்லன் படத்தின் நடனக் காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது.. கமலின் கொள்கைகளில் என்றைக்குமே ஒத்துப்போகாத ஆளாக இருந்தாலும் கமல் நடிப்பில் பெரிய குறை என எதையும் கண்டதில்லை. ஆனால் இந்த நடனக் காட்சி, சத்தியமாக அவுட் டேடட்... ஒரு கிரேஸ் இல்லாமல், நடனம் தெரியாத ஒரு ஆள் ஆடுவதைப் போல், கடைசியில், கடந்த 25 வருடங்களாக ஆடும் இரண்டு கால்களை தூக்கி குதிக்கும் அந்த ஒரு ஸ்டெப் வேறு... ஆண்டவா....
ஒரே ஆறுதல், முதிர்ந்த வயதில் இளம் ஹீரோவைப் போல காண்பித்துக் கொள்ள முயல்வதைப் போலவே, பூஜா குமார் என்ற முதிர் கன்னி ஒருவரையும் சமமாக கூடவே ஆடவைக்கிறார் கமல்..
அங்கு கலை சமநிலையை எட்டிவிட்டது 

-----------------------------------------------------------------------


நேற்று ஏதொ தந்தி தொலைக்காட்சியில் பேட்டி வந்ததாம்... பார்க்க முடியாமல் போனது. காலையிலிருந்து ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் முக்கால்வாசி பதிவுகள் அதைப் பற்றியே... அந்தப் பக்கத்து கொள்கைகள் என்றைக்குமே நடுநிலையை எட்டியதில்லை.. எவ்வளவோ கோவில்களுக்கு எதிரில் பார்த்த பெரியார் சிலைகளைப் போல, எந்த மசூதிக்கு எதிரிலும் இதுவரை பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும் “கடவுள் இல்லை, இல்லவே இல்லை” போன்ற அரும்பெரும் வார்த்தைகளெல்லாம் அந்த சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கமா எனத் தெரியவில்லை.. இந்து மத எதிர்ப்பு, முக்கியமாக பிராமண / பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே அவர்களின் உயரிய கொள்கையாக, காலங்காலமாக இருந்து வருகிறது. 

இதில் பாண்டே ஏதோ கேள்வி கேட்டு மடக்கிவிட்டாராம், எதிரிலிருந்தவர் முழித்து மாட்டிக்கொண்டாராம்.. இதனால் நடக்கப்போவது என்ன? தந்தி ஒரு பார்ப்பன ஆதரவு ஊடகம், பாண்டே ஒரு பார்ப்பன வெறியன், இவர்களுகெல்லாம் கேள்வி கேட்கத் தெரியாது, மீசையில் எதுவும் ஒட்டவில்லை என்றே அந்தப் பக்கத்திலிருந்து எதிர்வினைகள் வரும். (ஏற்கனவே பல மண் ஒட்டவில்லை பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன)
யார் என்ன நிரூபித்தாலும் ஆரியன் / திராவிடன் / பார்ப்பனன் / ஜாதி வெறி என அரைத்த மாவையே அரைத்து வெறுப்பை மட்டுமேதான் அவர்களால் பரப்ப முடியும். இதில் பகுத்தறிவதுதான் அவர்கள் நோக்கமாம்.. வெங்காயம்

யூடியூபில் இருக்கும் ஒரு கமெண்டில் வேறு, இஸ்லாமியர் ஒருவர் வந்து, இந்து மதத்தில் ஜாதி இருக்கிறது, பலருக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை, மசூதியிலெல்லாம் அப்படியில்லை என்று தன் பங்கிற்கு சம்மந்தமே இல்லாமல் ஆஜராகி சர்வமத வழிபாட்டை நடத்தியுள்ளார். 
இதில் இருக்கும் நகை முரண் நான் விளக்கித் தெரியவேண்டியதில்லை. ஒரே ஆறுதல், இந்த முறை அவர்கள் வாங்கிய மொக்கையும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. உங்களயெல்லாம் உம்மாச்சிதான் காப்பாத்தனும்.. 

-----------------------------------------------------------------------

வலியவன் என்றொரு காவியத்தைக் காண நேர்ந்தது. எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணனை, படத்தில் எங்கேயும், எப்போதும் காண முடியவில்லை. கால்ஷீட் கிடைத்து, கதையே இல்லாமல், 15 கோடி பட்ஜெட்டில் அவசர கதியில் படம் தொடங்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஷூட்டிங் ஆரம்பிக்க பூசணிக்காய் உடைத்ததிலிருந்து யோசித்திருந்தால் கூட ஒரு மாதத்தில் கதை என்று ஏதோ ஒன்று கிடைத்திருக்கும். இவ்வளவு மொன்னையான முதல் பாதியை அண்மையில் எந்தப் படத்திலும் பார்க்கவில்லை. திரைப்படங்கள் பார்ப்பதில் உலக மகா பொறுமைசாலியான நானே சீட்டில் நெளிய ஆரம்பித்துவிட்டேன். அண்ணாசாலை சப்வேயில் அத்தனை கூட்டத்தை, அதுவும் ரிச் கேர்ள்ஸ் கூட்டத்தையும் என் வாழ்க்கையில் என்றைக்குமே பார்த்ததில்லை. படத்தில் ஒரே ஆறுதலான ஆண்ட்ரியாவுக்கு ஹீரோவை நினைத்து ஏங்கும் ஒரு (ஹீரோ ஜெய் என்பது முக்கியச் செய்தி) சோலோ பாடல் வேறு. கலி மேலும் முத்திப்போச்சு.. 

-----------------------------------------------------------------------

உலகக் கோப்பை ஒருவழியாக முடிந்து, ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றாகிவிட்டது. இன்னமும் தோனி, கண்ணீர், பிறந்த குழந்தை, கோலி, அனுஷ்கா சர்மா, நக்மா, கங்குலி, யுவராஜ் சிங் என தேசப்பற்று மிக்க இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புலம்பல்கள் தாங்கவில்லை. இதில் பலர் ஃபேஸ்புக் போராளிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க, ஃபைனலில் ஆஸ்திரெலியாவை ஆதரிக்க ஒரு கூட்டமும், இந்தியாவை வீழ்த்திய ஆஸி.யை எப்படி ஆதரிக்கலாம் என ஒரு கூட்டமும் ஒரே நேரத்தில் கிளம்பியது. நம் நாட்டில் இன்னமும் விளையாட்டை விளையாட்டாகவும், சினிமாவை சினிமாவாகவும் பார்க்கும் பக்குவம் பெரும்பான்மை பொது ஜனத்துக்கு வரவில்லை. வர எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. இதில் படிப்பறிவுள்ள, ஃபேஸ்புக் பயன்படுத்தத் தெரிந்த கும்பல் அதிகம் என்பது கவலையளிக்ககூடிய விஷயம். 

It is a thousand times better to have common sense without education than to have education without common sense என ராபெர்ட் கிரீன் இங்கர்சால் கூறியதைப் போல..........

Sunday, August 17, 2014

'எடை'யப்பா


ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்தரங்களின் மேல், சிறு வயது முதலே எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஈர்ப்பு. இன்று வரை அதன் தொழில்நுட்பம் புரியாமல் இருப்பதால், இன்று வரை அதன் மீதான சுவாரசியமும் குறையவில்லை. பல முறை எடை பார்த்திருக்கிறேன். காலுக்கு கீழே வைத்துப் பார்க்கும் சிறிய அளவிலான எடை பார்க்கும் இயந்திரமாக இருந்தாலும் விட்டதில்லை. ஏறி நின்று (எடை) பார்த்து விட்டுதான் மறுவேலை. 

என்றுமே எடையைக் கூட்டவோ, குறைக்கவோ பெரிய அளவில் நான் முயற்சி செய்ததில்லை. சிறு வயது முதலே ஒல்லியான தோற்றம் என்பதால், அவ்வபோது பாதாம் ட்ரிங், பால், தேன், pedia sure, complan என பல கட்டங்களைத் தாண்டி, நிச்சயமாக எதுவும் தேறாது என முடிவுசெய்து முயற்சிகளை கைவிட்டேன். ஆனாலும் அவ்வபோது எடை பார்த்து, அந்த நொடிக்கு மட்டும் வருத்தமடைந்த சந்தர்ப்பங்கள் வந்தன. முதுகலையில் சேரும்போதும் 49 கிலோ மட்டுமே இருந்தேன். முடியும் போது 52. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை, 10 கிலோ வரை ஏறினேன். "ஒரு வழியா டீசண்டான வெயிட் வந்துட்டோம்" என மனதில் தோன்றியதால், முன்பு போல எடை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

பெசண்ட் நகரில் முருகன் இட்லி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். எடை பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால், அங்கிருக்கும் எடை பார்க்கும் நவீன இயந்திரத்தைப் பார்த்தவுடன், காலும் கையும் குறுகுறுக, ஆசை பீறிட, சில்லறை கடன் வாங்கிக் கொண்டு, இயந்திரத்தில் நின்றேன். 76.3 என வர, என் இதயம் ஒரு முறை நின்றது. அதற்கு முக்கியக் காரணம், சில மாதங்கள் முன்பு நான் இதை விட 10 கிலோ குறைவாக இருந்தேன். 

ஒரு காலத்தில் நான் 50 கிலோ வருவதற்கே அரும்பாடு பட்டுள்ளேன். வேலைக்கு போக ஆரம்பித்த பின், தானாக, இயற்கையாக எடை கூடியதால், பெரிதாக கவலைப் பட்டதில்லை. ஆனால், ஒரேடியாக இந்த 10 கிலோ ஏற்றத்தை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் சில்லைற மாற்றி, மீண்டும் முயற்சித்தேன், இம்முறை 77. 

நின்று போன இதயம் வெடித்தது. கண்கள் கண்ட காட்சியை, மூளை ஏற்க மறுத்தது. நண்பர்களிடம் புலம்பிவிட்டு, வீட்டிற்கு வந்தேன். பேச்சு வாக்கில் அப்பாவிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி ஆனார். தலைக்கனத்தினால் உடல் எடை உயர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. அதனால் அப்பாவுக்கும் குழப்பம். "எக்சர்சைஸ் பண்ணு. இவ்ளோ இருக்க கூடாது. வீட்ல எதாவது வேலை செஞ்சாதான" என்று அவர் பங்கிற்கு ஏற்றிவிட, மேலும் கடுப்பானேன். வழக்கம் போல அம்மா மட்டுமே, இந்த வயதிற்கு இது சரியான எடை தான். கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொன்னார். ஆனால் மனம் ஆறவில்லை. எப்படி 10 கிலோ, எப்படி 10 கிலோ என அதீதமான யோசனை.

சில நாட்களுக்கு முன காதி கிராப்ட் கடையில் இருக்கும் இயந்திரத்தில் எடை பார்த்தேன். பழைய எடையான 67-ஐ காண்பித்தது. அபோதுதான் மனதின் பாரமும் இறங்கியது. மு.இ.கடையில் இருக்கும் இயந்திரம் கோளாறு என முடிவு செய்தேன். இப்போது ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. நீங்கள் யாரும் மு.இ. கடை இயந்திரத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வாழ்க அரசாங்க இயந்திரம் !!

Saturday, July 20, 2013

மரியான்


வழக்கமான எதிர்பார்ப்போட, வழக்கமான தேவி தியேட்டர் நடு செண்டர்ல சீட்டு புக் பண்ணி, வழக்கம் போல உட்கார்ந்தா, வழக்கம் போல அழ வெச்சு அனுப்பிய பெரும்பாலான படங்களில் இன்னொரு படம்தான் மரியான்.


கடல் ராசாவா வாழ்ந்துட்டு வர தனுஷ், காதலிக்காக சூடன் நாட்டுக்கு வேலைக்கு போய், ரெண்டு வருஷம் கழிச்சு, திரும்பி வர ரெடியா இருக்கற நாள்ல, அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளால கடத்தடப்படறார் (நம்ம ஊர் ரவுடிகளுக்கு டாடா சுமோ மாதிரி, அவங்க ஊர்ல ஜீப்னு நினைக்கறேன். அயன் படத்துலையும் இப்படிதான் வந்துச்சு) அவர் பத்திரமா ஊர் திரும்பினாரா, காதலர்கள் ஒண்ணா சேர்ந்தாங்களான்னு, டிக்கெட்டுக்கு காசு இருந்தா போய் பாருங்க.


படத்துல தனுஷ், பார்வதி மேனன், ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க. இதனாலயே பார்வதி நிறைய படங்கள்ல நடிக்கறதில்லைன்னு நினைக்கறேன். மற்றபடி, படத்துக்கு தேவையான பாத்திரங்கள் எல்லாம், டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காங்க. முதல் பாதி கொஞ்சம் சுவாரசியமா இருந்தாலும், நிறைய பழக்கப்பட்ட காட்சிகள். எப்படியும் தனுஷ் லவ் பண்ணிடுவாருன்னு தியேட்டர்ல இருக்கற 900+ ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும், ஹீரோயின் கொஞ்சம் சூப்பரா இருக்கறதுனால, மக்கள் கொஞ்சம் பொறுமையோடதான் பாக்கறாங்க. இதையும் மீறி, எல்லாருமே பொறுமையிழந்தது, ரெண்டாவது பாதில. சுவாரசியமே இல்லாத திரைக்கதை. தனுஷ் மணல்ல உருண்டு விழறா மாதிரி, பொத்துனு விழுது, எந்திரிக்கவே இல்லை. வெளிநாட்டு கேமராமேனோட முத்திரை எதுவும் தெரியலை. நம்ம ஊர் ஆட்களே இதை பண்ணிருக்கலாம். மத்த விமர்சனங்கள்ல சிலாகிக்கறா மாதிரி ரஹ்மான் பாடல்கள், பி.இசை ஒண்ணும் படத்துல ஒட்டவே இல்லை. ஆனா, எப்பவும் போல, எல்லா பாட்டுலையும் பல்லவி மட்டும் நல்லா இருக்கு. தனுஷ், பார்வதியோட Top Notch நடிப்பைத் தாண்டி, படத்துலையே நான் ரொம்ப ரசிச்ச காட்சி, தனுஷ் வில்லனை கொல்றது. ”கடல் டா, கடல்” அப்படின்னு மணிரத்னம் சார் படத்தோட பேரை சொல்ல மிரட்ட, அங்கயே வில்லன் பாதி செத்துற்றான்.

இதுக்கு மேல சொல்லி உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. தனுஷோட நடிப்பையும், தமிழ் சினிமால ஒரு ஹீரோயின் சூப்பரா நடிக்கறதையும் பார்க்கணும்னு ஆசை பட்டா, இந்த படத்தை, எதாச்சு ஒரு மல்டிப்ளெக்ஸ்ல பாருங்க. ஏன்னா, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது சுத்தமா ஒத்து வராத படம். எனக்கு மரிYAAAAAAWN....

ஐய்யயோ, இந்தப் பையன் விமர்சனம் எழுதறான். கடல் ஆத்தா, காப்பாத்து

Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா?? 

Tuesday, April 3, 2012

3

கொலைவெறி இவ்வளவு பெரிய ஹிட்டானவுடனே எல்லாருக்குமே படம் சுமாராதான் இருக்கும்னு ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்துடுச்சு. இருந்தாலும் படத்துக்கு ஒரு ஒப்பனிங் வந்துதுக்கு காரணம்னு நான் நினைக்கரது, கொலைவெறியத் தாண்டி, மத்த பாடல்களும் நல்லா இருந்து ஹிட்டானதுனால, தனுஷோட நடிப்பு எப்படி இருக்கும்னு  பார்க்க , முக்கியமா ஐஸ்வர்யா தனுஷ் என்ன பண்ணிருக்காங்கன்னு பார்க்க. இதையெல்லாம் எதிர்பார்த்து வந்த மக்கள், முக்கியமான கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டாங்கன்னே சொல்லணும். செல்வராகவன் எழுதிகொடுத்த கதைய, தனுஷ் டைரக்ட் பண்ணி, ஐஸ்வர்யா பேர் மட்டும் போட்டுகிட்டாங்களோன்னு பலபேருக்கு சந்தேகம் வருது.

எனக்குத் தெரிஞ்ச படத்தோட ப்ளஸ், தனுஷோட அனாயாசமான நடிப்பு. பழக்கப்பட்ட கேரக்டர்ல நடிக்க வெச்சதால, பின்னிட்டாருன்னு நினைக்கறேன். அடுத்து இசை + பின்னணி இசை. பின்பாதில பல இடங்கள்ள ரெண்டு மூணு பீஸை திரும்ப திரும்ப வாசிச்சாலும், போர் அடிக்காம செட் ஆகிருக்கு. அனிருத் அடுத்த படத்துல என்ன பண்ணுவாருன்னு எதிர்பார்க்கறேன். முதல் பாதி ஸ்கூல் காட்சிகள். அதுல வர சிவ கார்திகேயனோட பன்ச், ரெண்டாவது பாதில நண்பனா வர சுந்தரோட பாத்திரம்.  தனுஷ், ஸ்ருதி ரொமான்ஸ். இப்படி சில விஷயங்கள சொல்லலாம்.

மைனஸ், மெதுவா நகர்ற திரைக்கதை, சுவாரசியமில்லாத ரெண்டாவது பாதி, பைபோலர் டிஸ்ஆர்டர்னு சொல்லிட்ட அப்பறமா, அதை வெச்சே கடைசி முக்கால் மணி நேரத்தை ஓட்றது,  ஈசியா சொல்லி புரியவேச்சிருக்கலாமேனு எல்லாருமே கேள்வி கேட்கற லாஜிக் ஓட்டை. அவருக்கு எதனால, எங்க அந்த பிரச்சனை ஆரம்பிச்சுது, அந்த சாமியார், குழந்தை உருவங்கள் யாருன்னு நிறைய கேள்விகளுக்கு விடை இல்ல. பெரிய மனசு பண்ணி, முதல் படத்துக்கு பரவால்லைன்னு சொல்ற பக்குவம் எனக்கில்ல. எல்லாரையும் அழகா ஆழ வெச்சிருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் பண்ணி அழ வெச்சிட்டாங்க ஐஸ்வர்யா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பி.கு - ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தைவிட இதுல நல்லாவே நடிச்சிருக்காங்க and தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடச்சிருமோ. அந்த கிளைமாக்ஸ் நடிப்பு, சான்ஸே இல்ல.

பி.கு 2 - படம் பார்த்த அப்பறம், கண்ணழகா பாட்டு இன்னும் நல்லா இருக்கு

பி.கு 3 - சங்கம் தியேட்டருக்கு எதிரா கேஸ் போடலாம்னு இருக்கேன். டயலாக் ஒரு எழவும் சரியா காதுல விழல. சில காட்சிகள் கட் வேற பண்ணிட்டாங்க. தேவில பார்த்த அப்பறம்தான் விமர்சனமா போஸ்டனும்னு இப்போ போஸ்ட் பண்றேன். தேவி தியேட்டர் சவுண்டை அடிச்சிக்க முடியாது. சங்கம் தியேட்டர் ஆளுங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். 

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - ப.வி


கமல்ஹாசனோட நிறைய படங்கள்ல, அவருக்கு மட்டும் நல்ல பேரு கிடைக்கும். “படம் மொக்கை, ஆனா கமல் பின்னிட்டாரு”னு சொல்லுவாங்க. சூர்யாவும் அப்படிப்பட்ட ஹீரோவாகிட்டாருன்னு நினைக்கறேன். ஆனா, அவரும் கவர்ச்சி நடிகை மாதிரி அடிக்கடி உடம்பை காமிக்கறதை குறைச்சிகிட்டா நல்லா இருக்கும். சூர்யா மாதிரியே படத்துல தென்படற ஒரு ப்ளஸ், வில்லன் ஜானி. மிரட்டிருக்காரு. ஷ்ருதி ஹாசன், முதல் படத்துக்கு பரவாயில்லை. ஆனா மேக்கப் ஜாஸ்தி + தமிழ் கொலை. ரொம்ப சுமாரான மியூசிக், பிண்ணனி இசை, பழக்கப்பட்ட எடிட்டிங்னு கொஞ்சம் tiring.

தமிழன் தமிழன்னு சொல்லியே படத்தை ஓட வெச்சிடலாம்னு நினைச்சாரு போல நம்ம முருகதாஸ். சண்டை காட்சிகள் மகா நீளம். நோக்கு வர்மம்னு சொல்லி சொல்லி, ஒரு கட்டத்துக்கு மேல, யாரு நோக்கு வர்மம்ல திடீர்னு வில்லனா மாறி அடிக்க ஆரம்பிப்பாங்களோன்னு த்ரில்லிங்கா இருக்கு. அழுத்தமில்லாத திரைக்கதைல ஒன்றவே முடியலை. தமிழரோட முயற்சிய குறை சொல்றாங்க, உழைப்ப மதிக்கத் தெரியலை, அது இதுனு பேச்சுக்களும் வரும். அதுக்காக பயந்துகிட்டு படம் சூப்பர்னு சொல்லிடாதீங்க. தமிழர்களை பெருமை படுத்துற எண்ணத்துல இந்தப் படத்தை முருகதாஸ் எடுத்திருக்கலாம். ஆனா சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுவாரசியமா, அழுத்தமா சொல்லிருக்கலாம். முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனா Strictly average - இதை தவிர இந்தப் படத்தை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை.

பி.கு - தெலுங்குல என்னானு டயலாக் பேசுவாங்க?? ஆந்திராலேர்ந்துதான் ஆவக்காய் போச்சுன்னா??

Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் - ப.வி

பொதுவா எனக்கு இந்த மாதிரி படங்கள் பிடிக்கறதில்லை. பொழுதுபோக்குக்கு படம் பார்க்க போய், எதுக்கு பாரமான மனசோட வெளிய வரனும்னு ஒரு எண்ணம். எங்கேயும் எப்போதும் அப்படி ஒரு படம்தான். நம்ம முகத்துல அறையரா மாதிரியான மெசேஜ் ஆனா எங்கேயும், யாரையும் அட்வைஸ் டயலாக் பேச விடலை. ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷர்வானந்த் + படத்துல ஒண்ணு ரெண்டு சீன்ல வர நடிகர்கள் கூட நல்லா நடிச்சிருக்காங்க. சூப்பரான காமெரா, எடிட்டிங். இசை படத்தோட மிகப்பெரிய பலம். அந்த விபத்து காட்சி, ஆடியன்ஸுக்கு தேவையான தாக்கத்தைவிட அதிகமாவே கொடுத்துருக்கு. ஸ்டண்ட் சூப்பர் சுப்பராயன்னு நினைக்கறேன். அசத்திட்டீங்க சார்.

ஆனா படத்துக்கு எப்படி U கொடுத்தாங்கன்னு தெரியலை. கண்டிப்பா சின்ன பசங்களும், இளகிய மனசுக்காரங்களும் பார்க்காதீங்க. ரெண்டு சிம்பிளான காதல் கதைகள், அதை நகைச்சுவையோட சொல்லிருக்கற விதம், நிஜமாவே ஒரு விபத்தை பார்க்கறா மாதிரி / விபத்துல இருக்கறா மாதிரி நடக்கற விபத்து, இப்படி, டைரக்டரோட திறமை படத்துல எங்கேயும் எப்பவும் தெரியுது. கண்டிப்பா பாருங்கனு சொல்ல மாட்டேன், ஆனா கண்டிப்பா பார்க்கலாம். படம் பார்த்து முடிச்சிட்டு, இனிமே பஸ்ல போக போகனுமான்னு நினைச்சீங்கன்னா, அதான் டைரக்டரோட வெற்றி. வாழ்த்துக்கள் சரவணன் சார். இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்ததுக்கு, Hats off முருகதாஸ் + ஃபாக்ஸ் ஸ்டார். 

p.s. - அந்த accident scene, final destination படத்தை நியாபகப்படுத்தினாலும், இன்னும் சிறப்பா எடுத்திருந்தா, இதைவிட பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். ஆனாலும், நம்ம ஊருக்கு, இந்த மாதிரி படம், ரொம்ப ரொம்ப புதுசு..

Saturday, September 17, 2011

வந்தான் வென்றான் - ப.வி

மங்காத்தா படம் எதனால ஓடுதுன்னே தெரியலைன்னு சொல்றவங்க, தயவு செஞ்சு வந்தான் வென்றான் படத்தைப் பாருங்க, தெரியும். என்னடா முதல் நாளே படம் ஃபுல் ஆகலியேன்னு நினைச்சேன். செய்தி முன்னாடியே பரவி, எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க போல. உள்ள நுழையும்போதே சில யூத் வார்னிங் பண்ணாங்க. ஆனா என் கிரகம். போய் மாட்டிகிட்டேன். படம் முடிய 30நிமிஷம் இருக்கும்போதே, நிறைய பேர் கிளம்பிட்டாங்க. அவ்வளவு மொக்கை. இல்லை இல்லை, மொக்கைங்கற வார்த்தை கரெக்டா விஷயத்தை கன்வே பண்ணலை. வேற வார்த்தை இருந்தா சொல்லுங்க.

எந்த விஷயத்தைப் பார்த்து இந்த படத்தை ஜீவா ஒத்துகிட்டாருனு தெரியலை. அவருக்கு பெருசா ஒண்ணும் ஸ்கோப் இல்லை. டம்மி. சந்தானமும் இந்த முறை சல்பெடுக்கலை. (அந்த குரல் மாத்தி பேசற காமெடி மட்டும் பரவாயில்லை). டாப்ஸி, டோண்ட் ஸீ. நந்தா படம் முழுக்க ஒரே ரியாக்‌ஷன். வேதநாயகம்னா, ஸாரி ஸாரி, ரமணாணா, பயம். எனக்கு வயத்த வலி, இந்த ரெண்டு டயலாகையும் ஒரே மாடுலேஷன்ல சொல்றாரு. தமனோட இசையும், படத்துல பெரிய நசைதான். ஆக மொத்ததில், இதற்கு மேல் எப்படி கழுவி ஊற்றுவது என்று தெரியவில்லை. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே. ஜீவாவின் கோ படத்தை மறந்து, அதற்கு முன் நடித்த, சிங்கம் புலி, கச்சேரி ஆரம்பம், தெனவட்டு ஆகிய படங்களை, நினைவு கூறுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம்தான், இந்த படத்துக்காக, சொட்ட சொட்ட மழைல நனைஞ்சிகிட்டு போனேன். என்னை மாதிரியே நிறைய பேர் ஈரமான மனசோட வந்திருந்தாங்க. படம் முடிஞ்ச அப்பறம்தான் தெரிஞ்சுது, எங்களை பலி கொடுக்க, ஆண்டவனே குளிப்பாட்டிருக்கான்னு. முடியலடா முருகா....

Sunday, June 19, 2011

அவன் இவன் - ப.வி

”அவனப் பத்தி நான் பாடப்போறேன்,
இவனப் பத்தி நான் பாடப்போறேன்.
அவனும் சரியில்லை, இவனும்தான் சரியில்லை,
 யாரப்பத்தி நான் பாடப்போறேன்”

படம் பாத்துட்டு, பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் போட்ட பாட்டு தான் இது. இதை விட இரத்தின சுருக்கமா இந்த படத்தைப் பத்தி சொல்லமுடியாது. உயிரக்கொடுத்து நடிச்சிருக்குற விஷாலும், ஜி.எம். குமாரும், வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த உழைப்பை தந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சு, இந்தப் படத்துக்காக மட்டும்தான், பாலா, தியேட்டர்ல நிறைய திட்டு வாங்கிருக்காரு. வழக்கமான ஒரு ”பாலா கிளைமாக்ஸ” யோசிச்சிட்டு, அதை சுத்தி ஒரு படம் பண்ணிருக்காரு. ஒண்ணே முக்கால் மணி நேரம், படத்துல என்ன நடக்குதுன்னே புரியலை. யுவனின் இசையும் பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லை.

இன்னும் பாலா தந்த அதிர்ச்சி என்னை விட்டு போகலை. விடுங்க, இதுக்கு மேல டைப் பண்ணா, மரியாதை குறைவா எதாவது சொல்லிடுவேன். விஷால், குமாரைத் தாண்டி படத்துல கவனிக்க வைக்கற ரெண்டு பேர், அந்த குண்டு பையனும், அம்பிகாவும். மத்தபடி, பாலாவை நம்பின விஷால், ஜி.எம்.குமார் + என்னை மாதிரி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு,  பாலா, பெரிய நம்பிக்கைத் திரோகம் பண்ணிட்டாருனு தோணுது. போங்கய்யா, போய் புள்ளைகுட்டிங்களை படிக்க வைங்க, வந்துட்டாங்க, அவன் இவன்னு. !@#$%^*

Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம் - ப.வி

சிம்பிளா சொல்லி முடிக்கறேன். படம் சூப்பர். அங்கங்க வர கொஞ்சம் செயற்கைத்தனமான ரியாக்‌ஷன்ஸும், சூழலும் மட்டுமே எனக்கு பட்ட குறை. மத்தபடி படம் அருமை. அதுவும் யுவன், பிண்ணணில பின்னிருக்காரு. நடிப்பு டிபார்ட்மெண்ட்ல எல்லாருமே அசத்தல், முக்கியமா அந்த பையன் + அவன் அப்பா. வசனங்களும் பக்காவா செட் ஆகிருக்கு. அங்கங்க உலகப்படம் பாக்கறா மாதிரி கூட இருந்துச்சு. பெண்களுக்கு புடிக்காதுன்னு சிலர் சொல்லிட்டு வராங்க. அப்படி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மென்மையான ஆளுங்களுக்கு பிடிக்காதுனு சொல்லலாம். so, மத்தவங்க எல்லாம், கண்டிப்பா படத்தை பாருங்க. Hats off to Kumararaja...  கண்டிப்பா பெரியவங்களுக்கு மட்டும். ஏன்னா இது ஆரண்ய Condom..

Sunday, May 8, 2011

எங்கேயும் காதல் - ப.வி

சனிக்கிழமை நைட் படத்துக்கு புக் பண்ணிருந்தேன். அதனால, வெள்ளிக்கிழமைலேர்ந்தே படத்துக்கு பாதகமான விமர்சனம் வர ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டுதான் படத்துக்கு போனேன். சும்மா சொல்லகூடாது, செதுக்கு செதுக்கனு செதுக்கிருக்காரு டைரக்டர் பிரபுதேவா. கதையும் காணோம், திரைக்கதையும் காணோம். படத்துல வர சுமன் மாதிரி, டிடெக்டிவ் வெச்சு தேடினாலும், திரைக்கதைங்கற அம்சம் கிடைக்காது. ரெண்டு மணி நேர மியூசிக் வீடியோல, பாட்டுக்கு நடுவுல சீன் வெச்சா மாதிரி படா டமாஷு.

ஜெயம் ரவி, டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காரு. நல்லா டான்ஸ் ஆடறாரு. ஹன்ஸிகா ஒரு தினுசா இருக்காங்க. கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் வருது. ஆனா சாதரணமா நடிக்க வரலை. சுமன் ஒகே. ராஜூ சுந்தரம் கடுப்பேத்தறாரு. படத்துல ப்ளஸ், படம் ரெண்டே மணி நேரம், அமர்க்களமான கேமரா, லொகேஷன், நாங்கை பாட்டு படமாக்கப்பட்ட விதம். வெள்ளைக்காரங்க தமிழ்ல் லிப் மூவ்மெண்ட் கொடுக்கும்போது, புல்லரிக்குது. ஹன்ஸிகாவுக்கே நிறைய இடங்கள்ல sync ஆகலை. என்னடா கடைசியா பார்த்த ரெண்டு படமும் மொக்கையா இல்லையேனு, நானும் ரமேஷ் அண்ணாவும், எங்களுக்கே கண்ணு வெச்சுகிட்டதுனாலதான், இந்தப் படம் இப்படினு நினைக்கறேன். எங்கேயும் காதல், வெங்காயம் மாதிரி. உரிக்க உரிக்க ஒண்ணும் இல்லை.
நன்றி ரமேஷ் அண்ணா...

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Wednesday, January 26, 2011

மற்றும் பல (26/01/2011)

பொங்கலுக்கு வந்த படங்கள்ல, ஆடுகளமும் காவலனும் பிடிச்சிருந்துது. சிறுத்தைல காமெடி நல்லா இருந்துச்சு. ஆனா tiring. ஒரு கட்டத்துக்கு மேல அந்த சில்லறைத்தனங்களை பொறுத்துக்க முடியலை. காவலன், விஜயோட நடிப்புக்காகவே ரெண்டாம் முறை பார்த்தேன். இதுவரைக்கும் எந்த விஜய் படத்தையும் ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்த்ததில்லை. முக்கியமா அந்த பார்க் சீன், "எனக்காக கொஞ்சம் வேண்டிக்குங்கனு சொல்லும்போது, ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா"ன்னு கேட்கும்போதும், நிஜமாவே நல்லா இருந்துச்சு. (காவலனின் கோ.பா.சே ரேஞ்சுக்கு மாறிட்டனோ??)
------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் செய் படத்துல இருக்கற அந்த ஒரே ஒரு பாடலை ஒளிபரப்பும்போது பார்த்தேன். அமீர் செம்மையா ஆடிருக்காரு. இவருக்குள்ள இப்படியொரு டான்சாரானு ஆச்சரியமா இருந்துச்சு. அடுத்த ஹிட்டு பாட்டு ரெடி. செவ்வாய் கிரக புகழ் சாரு அவர்கள், மொத்தம் அஞ்சு செகண்ட் வராரு. அவரோட விரல் நல்லா டான்ஸ் ஆடிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
 ரொம்ப கஷ்டப்பட்டு, நேரம் ஒதுக்கி, ஒரு வழியா, கடைசி நாள், புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன். என்னோட ஒரே நோக்கம், சுஜாதாவோட எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும்ங்கறது. இந்த முறை குறு நாவல்கள் இரண்டு, மூணாம் தொகுதிகள், எப்போதும் பெண், ரத்தம் ஒரே நிறம், (என் தொலஞ்சு போன) கனவுத் தொழிற்சாலை மற்றும் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகங்களை வாங்கினேன். நம்ம கேபிளாரோட சினிமா வியாபாரம், ரொம்ப நேரம் தேடிகிட்டு இருந்தேன். நமக்கு தான் பார்வை கீழயே போகாதே ;). அந்த புத்தகம், கீழ் வரிசைல, கடைசில அடுக்கிருந்தாங்க. வாங்கினேன். என் அண்ணன் சுவாரசியாம படிச்சிகிட்டு இருக்கான்.
------------------------------------------------------------------------------------------------------------------
சில சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களை பேட்டிக்காக சந்திச்சேன்... அங்க கிடைச்ச tidbits
  • பாரதிராஜா அடுத்து, தென்கிழக்கு சீமையிலே ஒரு அப்பனும் ஆத்தாளும், அப்படின்னு ஒரு படம் எடுக்க போறாராம். அவருடைய கனவு படம், குற்ற பரம்பரையை கண்டிப்பா எடுப்பேன்னும் சொன்னார்
  • காவலன் படத்தோட இன்னொரு கதாநாயகி மித்ரா குரியன், நல்லாவே தமிழ் பேசறாங்க. ரொம்ப அப்பாவியா, வெள்ளந்தியா இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.
  • நடிகை ராதாவோட மகள் கிருத்திகா, 12ஆம் வகுப்பாம். பார்த்தா அப்படி தெரியலை. 
  • 3 இடியட்ஸ் பத்தின கேள்விகளுக்கு, டைரக்டர் ஷங்கர், ரொம்ப மழுப்பாலனா பதில்களே தந்தார். என்ன நடக்குதுன்னு புரியலை.
  • வைரமுத்துவோட வீடு, அடேங்கப்பானு இருக்கு. விவரிக்க வார்த்தையே இல்லை. ரொம்ப நல்லா பேசினார்.
  • பிரபல புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட்ராமன், காலேண்டர்னு ஒண்ணு போட்டுருக்காரு. நடிகர், நடிகைகள, அந்தக் கால வண்டிகளோட சேர்த்து போட்டோ எடுத்துருக்கார். இவ்வளவு கவனிச்சஅவங்க, காலெண்டர்ல வெறும் தேதிகள் மட்டும்தான் இருக்குனு கவனிக்காம விட்டுட்டாங்க. நாட்கள் இல்லவே இல்லை. அப்பறம் என்ன ______கு இதை காலேண்டர்னு சொல்றாங்க???
 ------------------------------------------------------------------------------------------------------------------
ஐபிஎல்  ஏலம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. ஏலம் விட்ட ரிசர்ட் ஹாட்லி பிரமாதாமா கொண்டு போனாரு. பார்க்கும்போது இருந்த ஒரே ஒரு வயத்தெரிச்சல், இந்த காசெல்லாம் எதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தாம, இப்படி கேவலமா செலவழிக்கராங்களேன்னு தான். ஒரு பக்கம் இந்திய ஏழை நாடுன்னு வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்கடா வெச்சிருக்கீங்க எல்லா காசையும்??
------------------------------------------------------------------------------------------------------------------
 இந்த முறையும் ஆஸ்கர் பந்தயத்துல, நோலனை ஒத்துக்கிட்டாங்க. சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், சிறந்த இயக்குனர்னு, நோலன் ப.படலை. என்ன டகால்டி நடக்குதுன்னு புரியலை. அட்லீஸ்ட் நோலனுக்கு, திரைக்கதைக்கும், படத்துக்குமான அவார்டாவது கிடைக்கணும். ஜெய் ஜக்கம்மா.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா காதலிச்சிகிட்டு இருந்தான். ரெண்டு பேருமே பயங்கர அன்யோன்யமா இருந்தாங்க. ரெகுலரா முகபுத்தகத்துல, நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள்னு போய்கிட்டு இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ தெரியலை, இப்போ பிரிஞ்சிட்டாங்க. அதுல ரொம்பவே மனம் நொந்து போன நண்பன், அந்த பெண்ணை திட்டி நிறைய ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கான். இதை பார்த்த அப்பறம், நான் அடிக்கடி பாக்கற ஒரு பிரபல sms தான் நினைவுக்கு வந்துச்சு


காதலில் தோற்ற ஆணின் மனதின் புண்பட்ட வார்த்தைகள்
அவ ஒரு தேவ____ மச்சி....

நான் இப்போதைக்கு அப்பீட்டு...
     

Monday, January 17, 2011

ஆடுகளம்

வந்த பொங்கல் படங்களில் odd one out. முழுக்க கமெர்ஷியல் படம்னும் சொல்ல முடியலை. அவார்டு படம்னும் சொல்ல முடியலை. நல்லா இருந்துச்சா இல்லையான்னு கேட்டா, கண்டிப்பா நல்லா இருந்துச்சு. ரொம்பவே தரமான படம். ஆனா, படம் பார்த்து முடிச்ச அப்பறம் ஏதோ ஒண்ணு நெருடுது. என்னான்னு சொல்லத் தெரியலை. திரைக்கு முன்னால, பின்னால, எல்லா விஷயமுமே ரொம்ப நல்லா இருக்கு. ஜெயபாலன், தனுஷ், கிஷோர், தப்சி எல்லாருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. ராதாரவி + சமுத்திரக்கனியோட டப்பிங் அருமையா இருக்கு. புதுசான ஒரு களத்தை காமிச்சு, நம்மை அதுல ஒன்ற வெச்சதுலையே டைரக்டர் பாதி ஜெயிச்சுட்டார். செவல் சண்டைகள் கிராபிக்ஸ் பல இடங்கள்ள கண்டுபிடிக்க முடியலை. நிறைய விஷயங்களை ரொம்ப டீடெய்லா காமிச்சது, டைரக்டரோட ஸின்சியாரிட்டிய காமிக்குது. ஆனாலும், முதல் பாதியோட momentum, ரெண்டாம் பாதில குறைஞ்சிடுது.


ஹீரோவோட அம்மா இறந்ததால மட்டுமே ஹீரோயின் காதலிக்கறாங்கன்னு நம்ப முடியலை. பேட்டைக்கரரோட கதாபாத்திரம், படத்தோட ஆரம்பத்துல ரொம்ப பக்குவமா நடந்துக்கராமாதிரி காமிச்சிட்டு, பிற்பாதில, பொறாமையோட திரியாருன்னு காமிச்சது, அப்படி இருந்தவரே பொறாமைல இப்படி ஆகிட்டாருன்னு உணர்த்தவானு தெரியலை. ரொம்பவே இயல்பான வசனங்கள், காட்சியமைப்பு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு புத்திசாலி ஹீரோயின் கதாபாத்திரம்னு படத்துல நிறைய ப்ளஸ்தான். இருந்தாலும், முதல்ல சொன்னாமாதிரி, ஏதோ ஒண்ணு இடிக்குது. கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமா அனுபவமா இருக்கும். ஒரு சில அவார்டு வாங்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
வெற்றிமாறன் நிறைய நம்பிக்கை கொடுக்கறாரு. பார்க்கலாம்.

p.s.ஹீரோ ஹீரோயின் சேர்ந்திட்டாலும், இது Happy Ending படமான்னு சொல்ல முடியலை..

p.s.2 தைரியமா filmography போட்ட நம்ம வெற்றிமாறனுக்கு ஒரு ஓ போடுங்க.

Sunday, January 16, 2011

காவலன்

இந்தப் பொங்கலின் இன்ப அதிர்ச்சி காவலன். நினைச்சே பார்க்கலை. இப்படி ஒரு விஜய் காணாம போயிட்டாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா,  கலக்கிட்டாரு. இதைதானைய்யா பண்ணணும்னு இவ்வளவு நாள் சொல்லிகிட்டு இருந்தோம். இப்பவாச்சும் உரைச்சுதே. ரொம்ப சிம்பிளான, அழகான கதை. தன் ஹீரோயிஸத்தை சண்டைக் காட்சிகள்ள மட்டும் வெச்சிட்டு, மீதி நேரம் மொத்தமும், மனுஷன் நிஜமாவே நடிச்சிருக்காரு. அசின் ஒட்டலை. ரொம்ப மேலோட்டமா நடிச்சிருக்காங்க. வடிவேல் ஒரு சில இடங்கள்ல சிரிக்க வைக்கிறாரு. மத்தவங்க எல்லாம் கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க. பாடல்கள் நல்லா இருக்கு. பிண்ணனி இசை பரவாயில்லை. மறுபடியும் விஜய் பற்றி சொல்லனும்னா, ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்காரு. அருமையான உடல் மொழி. தாய்மார்களுக்கு நிச்சயம் பிடிக்கும். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருக்கு. நான் இன்னொரு முறை பார்க்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். வித்தியாசமான கிளைமாக்ஸ். கண்டிப்பா குடும்பத்தோட பாருங்க..
Simply superb feel good movie...

p.s.1 - அபிராமி தியேட்டர்ல கடைசி வரிசைல உட்கார்ந்து பார்த்தேன். பாட்டெல்லாம் sound pan ஒழுங்கா இல்லாம, sync ஆகாம, ரொம்பவே படுத்திருச்சு. நல்ல பாடல்கள் எல்லாம் கேட்க மோசமா இருந்துச்சு... disappointing... யாராச்சும் அவங்ககிட்ட சொல்லுங்கப்பா...

Saturday, January 15, 2011

சிறுத்தை

பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. ஒரு டபுள் ஆக்‌ஷன் மசாலா படத்துல என்னவெல்லாம் இருக்கும்னு நினைக்கறீங்களோ, என்னவெல்லாம் நடக்கும்னு நினைக்கறீங்களோ, அதெல்லாம் அட்சரம் பிசகாம நடக்குது. போக்கிரி ஹீரோ, அவனோட அல்லக்கை காமெடியன், லூசு ஹீரோயின், அவளோட தாராள கவர்ச்சி, இன்டெர்வல் ட்விஸ்டு, குழந்தை செண்டிமெண்டு, வில்லன் வீட்ல ஐடம் பாட்டு, கிளைமாக்ஸ்க்கு முன்னாடி வர குத்து பாட்டுனு இப்படி நிறைய. என்னதான் தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்திருக்கோம்னு வழக்கம்போல சொல்லிகிட்டாலும்,பலத்த தெலுங்கு வாடை படம் முழுக்க இருக்கு. இந்த மாதிரி படமெல்லாம் இன்னும் எடுக்கறாங்களான்னு அதிசயமா கூட இருந்துச்சு. கார்த்தியின் நல்ல நடிப்பு, சந்தானத்தின் சூப்பர் காமெடி மட்டுமே படத்துல எனக்கு புடிச்ச விஷயம். கூட பார்த்த என் நண்பன், B, C சென்டர்ஸ்ல ஓடிரும்னு சொன்னான். அவங்க கூட இப்பெல்லாம் இந்த மாதிரி படம் பார்க்கறாங்காளான்னு தெரியலை. உங்களுக்கு மசாலா படங்கள் பிடிக்கும்னா, கண்டிப்பா பாருங்க, படம் போர் அடிக்கலை. ஆனா பார்த்த திருப்தி எனக்கில்லை. முதலுக்கு மோசமில்லாம ஓடிரும்னு நினைக்கறேன்.ரொம்ப வெட்டியா இருந்தா முயற்சி பண்ணுங்க...

p.s. படத்தை விஜய் டிவி வாங்கிட்டாங்க

p.s.2 - ரிப்பீட்டு - சந்தானம் காமெடி சூப்பரோ சூப்பர்.

Thursday, December 30, 2010

மற்றும் பல (30/12/2010)

கடைசி ரெண்டு மூணு வாரத்துல, நிறைய சினிமா ஆட்களைப் பார்த்துட்டேன். கிடைக்கற சாக்குல ஃபோட்டோவும் எடுத்து, சும்மா ஸீனுக்கு ஃபேஸ்புக்கல போடறேன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல வரவேற்பு...
 ------------------------------------------------------------------------------------------------------------------
மன்மதன் அம்பின் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க மாட்டேன்னு அறிவிச்ச அன்னைக்கு சாயங்காலமே நீக்கப்படும்னு அறிவிச்சது செம்ம காமெடி. கமலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ரசிகர்களும், அடுத்த எலெக்‌ஷன்ல திமுகவுக்கு ஓட்டு போடற ஆட்களும் ஒரே மாதிரிதான். இவங்க ரெண்டு பேருக்குமே என்ன சொன்னாலும் புரியாது, உரைக்காது. அதனால, இப்படிப்பட்ட ஆட்களோட விவாதத்துல இறங்காதீங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
 இப்பவே சிறந்த படத்துக்கான ஆஸ்கார் எந்தப் படத்துக்குப் போகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்துல வந்த ப்ளாக் ஸ்வான் அப்படிங்கற படத்துக்கும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. எனக்கென்னமோ இன்செப்ஷன் படத்துக்கு கொடுக்கலாம்னு தோணுது. ஏற்கனவே இருக்கறத வெச்சி ஒண்ணும் பண்ணாம, புதுசா ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை சிக்கலாக்கி, மக்களுக்கு புரியறாமாதிரி தந்து, அவங்களை யோசிக்கவும் வெச்ச படம் இது. வேற என்ன தகுதி எதிர்பார்க்கறாங்கன்னு தெரியலை. ஆஸ்கார் கமிட்டிக்கும், இயக்குனர் நோலனுக்கும் ஆகாதுன்னு வேற பேசிக்கறாங்க. ம்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் சங்க விழா ஒண்ணு வெச்சாங்க. மொக்கையா டான்ஸ், பாட்டுனு போய்கிட்டு இருந்த விழாவுல, அப்பப்போ யாராவது வந்து கலகலப்பாக்குனாங்க. ஆனா, ராஜாவும், பாராதிராஜாவும் பேசினது, சகிக்கலை. ராஜா இன்னும் ஒரு குழந்தை மாதிரியே சண்டை போடுறத பார்க்கும்போது மகேந்திரன் சார் சொன்னது தான் ஞாபகம் வருது. பாரதிராஜாவும் சளைக்காம சண்டை போட்டாரு. ரெண்டு பெரிய மனுஷங்க இப்படி பண்ணது, நல்லாவே இல்லை. அதே நேரத்துல, யுவன், வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன் மேடைல ஜாலியா பேசிகிட்டதைப் பார்க்க நல்லா இருந்த்துச்சு. Little Girls are wiser than men அப்படிங்கற கதையும் ஞாபகம் வந்துது. கடைசி வரைக்கும் ரஜினி இண்டர்வியூவை போடாம ஏமாத்திட்டாங்க. :(
------------------------------------------------------------------------------------------------------------------
புதுசா ஆரம்பிச்சிருக்கற தேவியின் டால்பி 3டி, டிக்கெட் காசு போக 30ஓவாயும் கண்ணாடிக்கு கொடுக்கணுமாம். அங்க எந்த 3டி படமும் பார்க்க வேணாம்னு இருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்னியின் Tangled படம், இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகும்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா மாதிரியே, சீரியலும் எடுத்தா நல்லா இருக்கும்னு பல காலமா சொல்லிகிட்டு இருக்கேன். அதுவும் பிலிம்ல எடுத்து, அதே தரத்துல கொடுத்தா கண்டிப்பா வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். நான் நினைச்சதை, இயக்குனர் கவுதம் மேனன் பண்ணப்போறாரு. சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டிலதான் இத சொன்னாரு. அவருடைய ஃபோட்டான் கதாஸ் நிறுவனமே தயாரிக்கற இந்த டி வி சீரிஸ், ஏ ஆர் ரகுமானின் இசைல இருக்கப்போகுது. இன்னும் எந்த சேனல்னு முடிவு பண்ணலியாம். CSI, Friends ரேஞ்சுல, தமிழ்ல ஒரு சீரியல்னு நினைக்கவே நல்லா இருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சேர்ந்து  http://sa-pa-sa.blogspot.com/ அப்படின்னு, ஒரு இசை சம்பந்தப்பட்ட blog ஆரம்பிச்சிருக்கோம். படிச்சுப் பாருங்க..

Wednesday, December 29, 2010

நாலு படம் - நாலு பத்தி

இந்த மாதம் பார்த்த நான்கு படங்களைப் பற்றிய என் எண்ணங்கள்...

ஈசன்
எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பார்த்த பிறகு நினைத்தேன். சுப்ரமணியபுரம் பார்க்கும்போதும், கிளைமாக்ஸ் வரை, என்ன ஒரே வெட்டு குத்து, என சலித்துக்கொண்டேன். கிளைமாக்ஸ் உண்மையாகவே அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படத்திலும் அப்படி எதாவது இருக்குமென, ஐந்து வயது குழந்தைகூட யூகிக்க்கூடிய வகையில் அமைந்திருந்த கதையை, பார்த்துக் காத்திருந்தேன். கடைசி வரை ஒன்றும் வரவில்லை. பழிவாங்கும் ஆள் மட்டும் புதுசே தவிர, காரணங்கள் எல்லாம் ஒன்று தான். ஒரு சில வசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், (எனக்கு) ஏமாற்றமே.

Easy A
தன இமேஜை காப்பாற்றிக்கொள்ள, ஹீரோயினி, தான் ஒருவனோடு டேட்டிங் போனதாக தன நண்பியிடம் சொல்ல, அதை ஒட்டுக் கேட்கும் இன்னொரு பெண், பள்ளி முழுவதும் அதைப் பற்றி பரப்ப, பிறகு தனது gay நண்பனின் இமேஜைக் காப்பாற்ற, ஒரு பார்டியில், மூடிய கதவிற்கு அந்தப்பக்கம், அவனோட செக்ஸ் வைத்துக்கொளவது போல் பாவனை செய்ய (பாய்ஸ்), இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அத்தனை பையன்களும், இவளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாய், சிலர் இவளின் ஒப்புதலுடனும், சிலர் பொய்யும் சொல்ல ஆரம்பிக்க, இவளின் இமேஜ் என்னவாகிறது என்பதை, நிறைய நகைச்சுவை, கொஞ்சம் செண்டிமெண்ட் + கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினி எம்மா ஸ்டோனின் தெளிவான நடிப்பு, படத்தைக் காப்பாற்றுகிறது. நல்ல பொழுதுபோக்கு.

The Social Network
இந்தப் படம், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பெர்கின் கதை என சொல்லப்படுகிறது. ஸுக்கர்பெர்கின் ஒன்றிரண்டு பேட்டிகளைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. ஆரம்பம் முதல், முடிவு வரை, படம் எந்த விதத் தோய்வும் இன்றிச் செல்கிறது. பைட் கிளப் இயக்குனர் ஃபிஞ்சரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நடித்த அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாய் ஹீரோ ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், கிட்டத்தட்ட அப்படியே ஸுக்கர்பெர்கின் உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் கார்பீல்டும் நன்றாகவே நடித்திருந்தார்கள். அருமையான திரைக்கதை, வசனங்கள். (ஸப்டைடில்ஸாய நமஹ:) நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மன்மதன் சொம்பு
உலகநாயகன், கலைஞானியின் படைப்பை விமர்சனம் செய்யும் அளவு எனக்குத் தகுதியிருக்கிறதா எனத்தெரியவில்லை. அதனால், எதுவும் சொல்வதற்கில்லை..
என்ன சார், ஃபர்ஸ்ட் காபி பார்த்தே உஷார் ஆகிட்டீங்க போல??

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Sunday, September 26, 2010

மற்றும் பல... (26/9/2010)

ஒரு வழியா வேலை கிடைச்சிடுச்சுனு சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் அவ்வளவு தீவிரமா தேடி, எல்லாம் எடத்துலயும் NO VACANCY போர்ட் பார்த்து, காண்டாகி, வேலையே கிடைக்கலைன்னு கத்தலை. என்னோட முதல் இன்டர்வியூ  இதுதான். அதுலயே வேலை கிடைச்சிடுச்சு. அதனாலயே ரொம்ப சந்தோஷம். காலை முதல் இரவு வரை அயராது உழைக்கர்தால, பதிவ டைம் தேட வேண்டியதா இருக்கு. வழக்கம் போல, எதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதனும்னு நினைக்கும்போது, ஒண்ணு வேற யாராச்சும் எழுதிருவாங்க, இல்லை எனக்கு மறந்துரும். அது மாதிரிதான் எந்திரன் பத்தி எழுத நினைச்சதும்....
------------------------------------------------------------------------------------------------------------------
காலைலதான் எழுதலாம்னு நினைச்சேன், நம்ம கேபிள் முந்திகிட்டாரு. ஆனா, அவரு எழுதின பாயிண்ட் of வியூ வேற. நான் எழுத நினைச்சது, இந்த தியேட்டர்கள் பண்ற அநியாயத்தை பத்தி. சென்னைல முக்கால்வாசி தியேட்டர்கள்ள, முதல் மூணு நாள் டிக்கெட்டையும் கார்பரேட்டுக்கு குடுத்துட்டாங்க. என்ன ஒரு அநியாயம். நிறைய காசு தரவங்களுக்கு தான் டிக்கெட்டுன்னு, இது என்ன ஏலத்துல எடுக்கறா மாதிரி. இன்னொரு முக்கியமான விஷயம், முதல் மூணு நாள் டிக்கெட்டு மாயாஜால்ல இருந்தாலும், அங்க அந்த மூணு நாளைக்கும், ரூ.320 தான் டிக்கெட் ரேட். காம்போ ஏதொ சாப்ட தராங்க. அது கம்பல்ஸரியாம். செம்ம டென்ஷன் ஆகிட்டேன். மீதி டிக்கெட் இருக்கற தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு, இல்ல, அட்டு தியேட்டரா இருக்கு. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.
p.s. படம், முதல் நாலு நாளைக்கு எல்லாம் இடத்துலையும் fullu. இப்பவே  வெற்றி விழா கொண்டாடிடலாமே ???   
------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை ஆரம்பிச்ச முதல் வாரத்துலயே, பசங்க படக்குழுவைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கெடச்சுது. சசிகுமார் நிஜமாவே சூப்பர் ஆளு. ரொம்ப எளிமையா இருந்தாரு. பேசறாரு. செம்ம காஷுவலா இருக்காரு. எல்லாரும் பார்த்து கத்துக்கணும்...
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சிலர் முதுகுல குத்துவாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்ச சில பேர் முகத்துலேயே குத்திட்டாங்க. பல நாள் பழகின நட்பை, எப்படி நொடியில தூக்கிப் போட்டு அசிங்கப் படுத்தமுடியுதுன்னு தெரியலை. நம் முகத்துக்கு நேர நம்மை பத்தி தப்பா சொன்னா கூட பரவாயில்லை, மத்தவங்க கிட்ட, ஏதொ நாம கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசறது எல்லாம் சுத்த பத்தாம் பசலித்தனம். அதுவும் அவங்க குடுக்கற justifications எல்லாம் கேட்கணுமே, அட அட அட, ரொம்பவே அருமையா இருக்கும். அது ஏன் கூட இருக்கற இவ்வளவு நாள் நம்ம குறைகள் இவங்களுக்கு தெரியாம, பிரியக்  காரணங்கள் தேடும்போது மட்டும் கிடைக்குதுன்னு தெரியலை. இதை எல்லாம், எக்கச்சக்க டைம் + எனர்ஜி செலவு பண்ணி, இவங்களுக்காக உதவின சமயங்கள்லையே சொல்லிருந்தா, அப்பவே கொஞ்சம் நம்மளோட பாசத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம். இப்ப, ஏமாற்றமும், கண்ணீரும்தான் மிச்சம். அவங்கள சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை, என்னை உதைக்கணும். இவங்களையெல்லாம் நான் ஒதுக்கப்போரதில்லை. எனக்கு நல்ல பாடங்கள கத்து கொடுத்திருக்காங்களே. அதனால, இன்னும் என் நண்பர்களாதான் பார்க்கறேன். இதை படிக்கற என் நண்பர்கள் சிலருக்கு, உங்களை குத்தம் சொல்றா மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொதுவா சொன்னேன்...
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் லண்டன் லேன்சை வருக வருக என வரவேற்கிறேன்....சீக்கரமா வந்து ட்ரீட் குடுங்க பாஸு..
------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வாரங்கள்ல, இன்ஸோம்ன்யா, அப் இன் தி ஏர் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் பார்த்தேன். இன்ஸோம்ன்யா சூப்பரா இல்லைனாலும், நல்லா இருந்துச்சு. நம்ம அல்-பசினோ பின்னிட்டாரு. ராபின் வில்லியம்சும் நல்லா நடிச்சிருந்தாரு. அப் இன் தி ஏர் படம், கொஞ்சம் எதார்த்தத்தோட நல்லா இருந்தாலும், மொக்கையா முடிச்சிட்டாங்க. பாஸ், ரொம்ப நாள் கழிச்சு, தியேட்டரே வாய் விட்டு சிரிச்சிகிட்டே இருந்ததை பார்த்தேன். எல்லாரும் சந்தானத்தை பாராட்டினாலும், இப்படி ஈகோ எதுவுமே இல்லாம நடிச்ச ஆர்யாவுக்கு ஒரு சபாஷ். இதுலயும் படத்தோட முடிவு மொக்கை...
------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்கேப் சினிமாஸ்ல couple seatனு  சொல்லி ஏமாத்தறாங்க (எதுவும் விபரீதமா நினைக்காதீங்க). அதுவும், அறுவது ரூவா பார்க்கிங்குக்கே போயிடுது. ஆனா, எப்பவும் கூட்டம் அள்ளுது. கவனிக்க, இந்தியா ஏழை நாடு.
------------------------------------------------------------------------------------------------------------------
காமன் மேனோட காசையெல்லாம், காமன்வெல்த்னு, வெளுத்துக்கட்டி, ஊழல்ல புது சாதனையே பண்ணிருக்காங்க. மீடியாவோட எந்த குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லாம, தட்டி கழிக்கறாங்க. இப்ப, இத வெச்சு பார்வர்ட் ஜோக் எல்லாம் வருது. நாட்டுக்கே வெட்க கேடான இத வெச்சி, ஒரு கூட்டம் உட்கார்ந்து, காமெடி பண்ண யோசிச்சிகிட்டு இருக்கு. ஊழல் பண்றவங்களுக்கு, இவங்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ரெண்டு பேருமே பொறுப்பில்லாதவங்கதான். இப்ப முடிஞ்ச ரமணா படத்துல காமிச்சா மாதிரி, இவனுங்க எல்லாரையும் எதாவது பண்ணனும்னு தோணுது... ஓ@!#@ தேவ@!#$%(&%)$&)....
------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா டக்கருன்னா என்ன????