Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..

    

8 comments:

ம.தி.சுதா said...

அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

Philosophy Prabhakaran said...

இது தசாவதாரம் படத்தில் சொல்லப்பட்ட chaos theory வகையறா தானே...

S said...

"To know what *would* have happened, child?" said Aslan. "No. Nobody is ever told that."

— C.S. Lewis (Aslan, in Prince Caspian, Chapter 10)

கா.கி said...

@ம.தி
நன்றி...

@பிலாசபி
அதே அதே

@S
நானும் சொல்லலை. சும்மா predict பன்றேன்... thats all :)

எஸ்.கே said...

உண்மைதான் வாழ்க்கையின் பல தருணங்கள் மாறியிருந்தால் வாழ்க்கையும் மாறியிருக்கலாம்! வித்தியாசமான தலைப்பு/பதிவு நிச்சயம் தொடர்கிறேன்!

கா.கி said...

@எஸ்.கே
நன்றி :)

kanagu said...

நல்ல பகிர்வு கா.கி :)

உண்மையிலேயே சில விஷயங்கள் நாம் தேர்வு செய்யும் இல்லை தேர்வு செய்யபட்ட பாதையினால் மாறி போகிறது..

நானும் எழுத முயற்சி செய்கிறேன்.. :)

கா.கி said...

@kanagu
மிக்க நன்றி... கண்டிப்பா எழுதுங்க