Saturday, November 1, 2008

காதல் கசக்குதய்யா - Part 1

பி.கு.feelingsa நான் எதுவும் சொல்ல வரல. இது காதல் கசக்குதய்யானு ஆரம்பிக்கற ஒரு பாட்டு பற்றி சொல்ற பதிவு..

என்னோட இரண்டாம் கிளாஸ் படிக்கும்போதுதான் முதல் தடவை ஒரு பாட்டுப் போட்டியில கலந்துகிட்டேன். என்னோட முதல் பாடல் "காதல் ரோஜாவே" from "ரோஜா", அதுல எனக்கு first prize. அதுக்கப்பறம் நெறைய போட்டிகள்ள கலந்துகிட்டு நெறைய மொக்கைகளும், சில பரிசுகளும் வாங்கிருக்கேன். காலேஜ் போன அப்பறம் கூட, பாட்டு போட்டி பழக்கத்த விடாம வெச்சிருந்தேன். முதல் வருஷம் நான் கலந்துகிட்ட ஒரு போட்டியாலதான் எனக்கு ஒரு ஞானோதயம் கெடச்சுது..

காலேஜ்ல என்னோட சீனியர்s, airtel super singer புகழ், கௌதம் பரத்வாஜ் and காதல் படத்துல வர்ற "தொட்டு தொட்டு என்னை" பாடல் பாடுன ஹரிணி. அதுவரைக்கும் பல பரிசுகள் வாங்கினவங்க, அவங்களோட final yearla, organising teamla வந்துட்டாங்க. So, அவங்க மேற்பார்வைல நடந்த ஒரு போட்டிக்கு நான் போனேன், நான் நல்லா(!!!) பாடுறத பாத்துட்டு(கேட்டுட்டு), கௌதம் என்னபத்தி கேட்டாரு. விசாரிச்சதுல அவருக்கு என் அண்ணன நல்லா தெரியும்னு தெரிஞ்சுது. (என் அண்ணனும் அதே கல்லூரிதான்)

கௌதம் பரிச்சயம் கெடச்சதுனால, பல போட்டிகள் பற்றி தெரிய ஆரம்பிச்சுது (including ஆஹா பாடலாம் in DD). ஆனா காலேஜ் annual day song competition பற்றி எனக்கு சொல்ல மறந்துட்டாரு. competition finals எங்க காலேஜின் பெரிய ஹால்ல நடக்கும். So அத shoot பண்ண சொல்லி எங்க சார் சொல்லும்போதுதான் எனக்கு அந்த போட்டிய பத்தி தெரியவந்துச்சு. போற வழில கௌதம் வர, நான் அவர பாத்து, ஏன் சொல்லலனு கேட்டேன். அவர் நெஜமாகவே மறந்து போயிருந்தாரு, organiser வேற.

So அத ஒரு பெரிய mattera எடுத்துக்காம (பெருந்தன்மையோட) "சரி அடுத்த முறை கலந்துக்கறேன்"னு சொல்லிட்டேன். நானும் என் cameraman friend பிரேமும், கொஞ்ச நேரம் அங்க கேமாராவும் கைகளுமா அலைஞ்ச அப்பறம், திடீர்னு கௌதம் என்கிட்டே வந்து, "நாங்க பத்து participants செலக்ட் பண்ணிருந்தோம், அதுல ஒரு பையன் வரல, அதுக்கு பதிலா நீ பாடுறியா"னு கேட்டாரு, நானும் இதுல என்ன இருக்குன்னு நெனச்சிகிட்டு சரின்னு சொன்னேன்.

பிரேம், "என்ன பாட்டு பாடப்போறே"னு கேட்டான். அந்த காலகட்டத்துல, என்னோட இன்னொரு friend ரகுநாத், ஆண் பாவம் படத்துல வர்ற "காதல் கசக்குதய்யா" பாடல டவுன்லோட் பண்ண சொல்லி கேட்டுகிட்டிருந்தான். நானும் டவுன்லோட் பண்ணேன், அத எங்க ஆடியோ லேப்ல போட்டு கேட்டுகிட்டே இருப்போம். So, அந்த பாடல் பாடலாம்னு முடிவு பண்ணேன். Judge யாருனா, டைலாமோ பாடல பாடுனா திருமதி.சங்கீதா ராஜேஸ்வரன். கடைசியா என்னோட முறை வந்துச்சு. பாடறத்துக்கு மேடை ஏறினேன்......

தொடரும்....

http://www.city.sendai.jp/kikaku/kokusai/english/images/simc.jpg
இவ்ளோ பிரம்மாண்டமா இல்லனாலும், ஏதோ இருந்துச்சு

6 comments:

Lancelot said...

machi ipppadi oru suspenseaa...waiting for the kadhal kasakuthaiyaa song(its the theme song of me 6 mathangal munbhu vaarai :P)

Anonymous said...

mama.... Your blog is really nice... Like reading the words of great writers like Yugi sedhu, Crazy mohan, Madhan etc.. I hope oneday u also will come like that.. my best wishes for that da machi.. Keep it up....

கா.கி said...

@lancelot
appadi enna aachu?? can i expect a post regarding it in ur blog??

@swami
hey, thanks a lot da... i hav a long way to go and no one can be compared to ppl lik crazymohan.. anyways, i'l try to live up to ur hope... :)

Lancelot said...

blog thaanae eluthitaa pochu...

I am writing the english blog today...officela tight work onnum panna mudiyala...thadangalluku mannikavum..

கா.கி said...

@lancelot
forgiven... summa PG padikkara enakke time bloga avvalvaa time illa...neenga officer, so konjam kashtamdhan..

Lancelot said...

ethungaa...intha Indian la veraa Senthil mathiri oppicerungala???