Friday, May 15, 2009

மற்றும் பல....

தினமும் ஒரு சிக்ஸர்
விளம்பர உலகத்திலேயே இதுபோல எதுவும் நடந்தது கிடையாதுன்னு நினைக்கிறேன். Almost, தினமும் ஒரு concept, தினமும் ஒரு AD, தினமும் அது நல்லா இருக்கு, அடுத்து என்னான்னு எதிர்பார்ப்பை கிளப்பிவிடுது. நான் சொல்றது, இப்ப IPL போட்டிகள் நடுவுல ஒளிபரப்பாகும் Vodafone ADs பற்றி. என்னை வேறெந்த விளம்பரமும் இவ்வளவு ஆச்சரியப்படுத்தியதில்லை. அது உண்மையா, கிராபிக்ஸா அப்படீன்னே நிறைய பேருக்கு சந்தேகம். இந்த விளபரம் கிராபிக்ஸ் இல்லையாமா. உண்மையான மனிதர்களுக்கு, அந்த கேரக்டர் ஏற்றாப் போல உடைகள் போட்டு எடுத்துருக்காங்க. அதைப் பார்க்கும்போது ஒருத்தருக்கு, அனிமேஷன்னே தோணும்.

பிரகாஷ்
வர்மா என்கிறவர்தான் இந்த விளம்பரங்கள இயக்கிருக்கார். இந்த கதா/விளம்பரப் பாத்திரங்கள உருவாக்க ரொம்ப பாடுபட்டிருக்கார். மொத்தம் மூணு வாரம் முன் ஏற்பாடுகள் மட்டுமே பண்ணிருக்கார். இன்னும் பல trivia இருக்கு. இந்நேரத்துக்கு அதெல்லாம் உங்களுக்கு forward mailla வந்திருக்கணும். அப்படி ஒரு வேளை உங்களுக்கு வரலைன்னா, கமெண்ட்ல உங்க மெயில் id mention பண்ணி, சொல்லுங்க. நான் அனுப்பறேன்..
-------------------------------------------------------------------------------------------------
Sadist
போன பதிவுல, என் டைரியை பற்றி நான் எழுதினதுக்கு (அதுவும் தூய தமிழில்), ரொம்ப நாளைக்கு அப்பறம், நிஜமாகவே நல்ல feedbacks வந்தன. என் நண்பர் ஒருவர், ஒரு படி மேலே போய், "உன் டைரிய படிக்க கொடு"னு கேட்டார். தரமாட்டேன்னு சொன்னதுக்கு, "நீ ஒரு sadist, எதிர்ப்பார்ர்பை கிளப்பி விட்டு, இப்ப வெறுப்பேத்தர"னு சொல்லிட்டார்.

நான் எழுதியதன் நோக்கம், என் நடையை நானே ஒரு வகையில சோதிச்சிக்கிட்டேன். உருப்படியா எதுவும் எழுதி ரொம்ப நாள் ஆகுதே, So, நம்மளால ஒழுங்கான நடைல எழுத முடியுதான்னு பார்க்கவே எழுதினேன், அதுவுமில்லாம, எழுதிய டைரிய படிச்சுப் பார்க்கும்போது, ஒரு மாதிரி திருப்தியாவே இருக்கு. என்னோட டைரிய படிக்கனும்னு கேட்ட அன்பர்கள் எல்லாருக்கும் , SORRY.
-------------------------------------------------------------------------------------------------
எண்ணங்கள்
தேவையில்லாத சிந்தனைகள் நிறைய தோணுது. நிறைய மனிதர்களோட பழகும் போது, அவங்களோட நடவடிக்கைகள கவனிக்க தோணிது. "நான் ஏன் அதெல்லாம் கவனிக்கறேன்" அப்படீங்கற எண்ணமும் parallela ஓடிகிட்டு இருக்கு. ஆனா இதுதான் மனித இயல்பு அப்படீன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கறேன். இவ்வளவு வித்தியாசமான attitudes இருக்குற ஆட்களோட பழகும் வாய்ப்பு, ஒரே சமயத்துல கிடைக்கும்போது, அதை ஒரு learning experiencea தான் நான் எடுத்துக்கறேன். எல்லாருமே, தினமும், அவங்களோட செயல்களால என்னை ஆச்சரியப் படுத்தறாங்க. அது, சில சமயங்கள்ல பாஸிடிவாகவும், பல சமயங்கள்ல நெகடிவ்வாகவும் இருக்கு.

நாம எவ்வளவு importance கொடுத்தாலும், நம்மை மதிக்காத, எந்த பிரச்சனையும் இல்லைனாலும், "சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை, நான் தீர்த்து வைக்கறேன்"னு சொல்ற, ஓவரா பொது நலத்துல அக்கறைன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்துற, நட்புக்கும் காதலுக்கும் சரியானா வரைமுறை பிரிக்கத் தெரியாத, இப்படி பலதரப்பட்ட ஆட்கள, ஒரு குறுகிய கால கட்டத்துல சந்திச்சிருக்கேன். இந்தப் பதிவ படிச்சிட்டு, "யாரைப் பற்றி சொல்ற??"னு யாரும் என்னை கேட்க வேண்டாம். உங்களுக்கு உண்மையான பதில் கிடைக்காது. நீங்களாகவே யாரையும் கற்பனை பண்ணிக்கவும் வேண்டாம். அது தவறாகவே இருக்கும்.

2 comments:

Karthik Lollu said...

//நட்புக்கும் காதலுக்கும் சரியானா வரைமுறை பிரிக்கத் தெரியாத, இப்படி பலதரப்பட்ட ஆட்கள//

Kake ungalukku ethana proposals??

கா.கி said...

@karthik

innum edhuvum varla boss... i jus said abt the things i saw not the one i experienced...