Monday, June 15, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -1

நம்ம சிகாமணிக்கு, தமிழ் சினிமான்னாலே aversion. நல்ல கதையம்சம் இருக்குற படம் வருதேன்னு சொன்னா கூட, "என்ன நூத்துல ஒரு படம். அதாவது, நூறு shit வந்தா, ஒரு Hit" அவ்வளவுதான்னு சொல்லுவான். அதுவும் நம்மூரு படத்துல வர காதல் காட்சிகள்னா, அவன் வாய்லேர்ந்து கலர் கலரா கெட்ட வார்த்தைகள் வரும். "*#@!த பாட்டா எழுதறானுங்க, எழுதுற lyrics எல்லாம் !@#று மாதிரி இருக்கு. மேட்டர் படத்துல எல்லாத்தையும் காமிக்கரானுங்க, ஆனா இவனுங்க எழுதுறது அத விட வக்கிரமா யோசிக்க வைக்கும்"னு பொங்கி எழுந்துருவான்.

ஒரு நாள், வழக்கம் போல இத மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தவன நிறுத்தி "நீ எவ்வளவு சொன்னாலும், இத மாதிரி சின்னபுள்ளத்தனமான படம் எடுக்கவும் கொஞ்சம் அறிவு வேணும். எங்க, உன்னால முடியுமா?? நீ விமர்சனம் மட்டும்தான் பண்ண லாயக்கு"னு சொன்னேன். "ஆமாம், பெரிய அறிவு. மண்டைல மசாலான்னு சொன்னத உன் directors எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு, ஒரே மொக்க மசாலா படமா தள்ளிகிட்டு இருக்காங்க. நான் அவங்கள விட மோசமா யோசிச்சு ஒரு கதை சொல்லட்டா??"னு கேட்க, நான் சரின்னு சொன்னேன் ... அவன் ஆரம்பிச்சான்...

"அதாவது, இது ஒரு மசாலா படத்துக்கான கதை. படத்தோட ஹீரோ பேரு சைதாபேட்டை, படத்தோட பேரும் சைதாபேட்டை. நம்ம, ஹீரோ, கலைஞர் ஆர்ச் பக்கத்துல டீ கடை வெச்சிருக்காரு.மொத சீனே மோதலோட ஆரம்பிக்குது ரொம்ப நாளா கடன் சொல்லி டீ குடிக்கிற, அந்த பேட்டை தாதா ஆளுங்கள அடிச்சு வெரட்டுராறு. கேள்வி கேட்க வந்த தாதாவையும் பின்னி பெடலேடுக்குராறு. அடிச்சு முடிசித்ட், "டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"னு மொக்கையா பன்ச் dialogue விட்டு,

//சைதாபேட்டை சைதாபேட்டை சைதாபேட்டை,
ஒரு ஆத்து ஆத்துனா, நீ கண்ணம்மாபேட்டை//னு intro சாங் பாடுரார்.

ஒரு நாள் அந்த பக்கமா வர நம்ம ஹீரோயின், ஹீரோ டீ ஆத்துற ஸ்டைல பார்த்து மயங்கி, ஊட்டில போய், "டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க. இவங்க கருமம் புடிச்ச லவ்வு, கன்னாபின்னான்னு develop ஆவுது. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ, அந்த ஏரியா counsilor மாதிரி, ஏரியா பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைக்கறார். அதே சமயத்துல, லவ்வே புடிக்காத ஹீரோயினோட அண்ணன், ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். இதுல பெரிய ஹீரோ யாரவது நடிச்சாக்கா, அவங்களுக்கு ஏத்த மாதிரி,
"மழைல மனுஷன்தான் நனைவான், புயல் நனையாது"னு பன்ச் டயலாக் எதையாவதோ சேர்த்துக்கலாம். எப்பூடி????"

சொல்லி முடிச்ச சிகாமாணிய ஏற இறங்க பாத்துட்டு, "நீ தமிழ் சினிமாவால இவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன்னு தெரியாம போச்சுடா. இந்த ஒரு கதை தான் யோசிச்சியா, இல்லை இன்னும் இருக்கா??"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஆமாம் இதுக்கெல்லாம் உட்கார்ந்து யோசிக்கறாங்க, இன்னொரு கதை சொல்றேன் கேட்கறியா"னு ஆரம்பிச்சான். அந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான கதைய எப்படிதான் யோசிச்சானோன்னு இருக்கு........

......will continue

12 comments:

Karthik said...

Lollo Lollu!!!


Nee adicha mayir poghum

naa adhicha uyir poghum

Karthik said...

nee adicha onnuku thaan poava

naa adicha nee moonuke pova...

Ore kuthu... Avan apdiye graphics la moon la poi ukarnthukiraan!!

கா.கி said...

@karthik
thoranai baadhippu innum pogaliyaa...

Anonymous said...

//டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"// - he he
thangamudiyala :)

//டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க// - mini budget padama ?

ithe Shankar direct panna

t t ..italy nu italy la poi eduthuruparau..

I know I know the source of inspiration for sigamani is Perarasu...

கா.கி said...

@vani
aduthu shankar style kadhai onnu varudhu... inspiration is not only perarasu. all the masala film directors...

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

I read most of your postings... Unga writingsla nalla humour irukku... I am liking it...

கா.கி said...

@AK
Nandri. meendum varuga...

kanagu said...

/* ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். */

sema comedy thalaiva... :) punch ellam classu... vijay mattum itha paatharuna unga friend avaroda 50th film ku director aayiduvar :P

innum continue ah... super.. naanga nalla sirippom :)

கா.கி said...

@kanagu
vijayoda 50th padam, idha vida kevalamaa irukkum... innum rendu DIFFERENT kadhai irukku... sirikka vaikka muyarchi panren...

Anonymous said...

Ini ingu dan pravesam :)

கா.கி said...

@ak
edho onnu, vandha seri...