Friday, June 18, 2010

சில குழப்பங்கள்....

பொதுவாகவே, ரொம்ப யோசிச்சா, அதனால பல குழப்பங்கள் வரும்னு சொல்லுவாங்க. நம்மைச் சுத்தி நடக்கற சில பல விஷயங்களும், இந்த மாதிரி குழப்பங்களுக்கு காரணமா இருக்கும். அப்படி, நான் கவனிச்ச, தெளிவு பெறாத சில விஷயங்கள தான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன்.

குழப்பம் 1
இந்த, கட்டாய மதமாற்ற சட்டம் மாதிரி, கட்டாய ஹெல்மெட் சட்டம் ஒண்ணு எடுத்துட்டு வந்தாங்க. நம்ம அம்பி டிராபிக் ராமாசாமி பேரு கூட அதுல அடி பட்டுச்சு. இப்போ அந்த சட்டம் என்ன ஆச்சுன்னு எனக்கு ஒரே குழப்பம். ஏன்னா, நான் கடந்த ஒண்ணு ரெண்டு மாசமா, ஹெல்மெட் போடாம தான் வண்டி ஓட்றேன். என்னை சுத்தி, பல பேர் அப்படியே. தைரியமா சிக்னல்ல நிக்கறாங்க, போலீஸ் முன்னாடியே நல்லா கைய கால ஆட்டிட்டு போறாங்க. ஆனா, திடீர்னு ஒரு நாள், அவசரமான வேலையா திருவான்மியூர் பக்கம் போயிட்டிருக்கும்போது, ஒரு மாமா புடிச்சு, அவசரத்துல, நியாயம் பேச நேரமில்லாம, அம்பது ரூவா மொய் எழுதிட்டு கிளம்பினேன். திரும்பி அதே வழில வரும்போதும் ஹெல்மெட் இல்லாமா தான் வந்தேன். ஆனா யாரும் தடுக்கலை. இது என்ன எழவு சட்டம்னு, ஒரு ஹேரும் புரியல. யாராவது தெளிவுப்படுத்துங்க. ப்ளீஸ்..போன வாரத்துல ஒரு நாள், நம்ம கேபிளார், ஆட்டோகாரங்களைப் பத்தி ஒரு பதிவு எழுதினாரு. அதுல பின்னூட்டமா, என்னோட இந்த குழப்பத்தை எழுதினேன், பதில் எதுவும் கிடைக்கலை, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

குழப்பம் 2
இதுவும் ஒரு நீதி நியாயம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். கல்வி கட்டணம எல்லா பள்ளிகள்ளையும் இவ்வளவு தான் இருக்கணும்னு ஒரு சட்டம்  வந்துச்சே, அது என்ன ஆச்சு. ஏதொ, நாகர் கோவில், திருநெல்வேலி பக்கம் ரெண்டு மூணு பள்ளிகள், அளவுக்கு அதிகமா கட்டணம் வாங்கறாங்கன்னு கேள்விப்பட்டு நடவடிக்கை எடுத்தாங்களாம். எல்லா பள்ளியும் இப்போ திறந்தாச்சு. சென்னைல இருக்கற எல்லா பள்ளிகல்லையும் இன்னும் பழைய கட்டணம்தான் வசூலிக்கப்படுது. இப்போ அந்த சட்டம் இருக்கா, இல்லையா??  யாராவது கம்ப்ளைன்ட் குடுத்தாதான் நடவடிக்கை எடுப்பாங்களா??? இவங்களுக்கு என்ன தான் பிரச்னை?? மறுபடியும், யாராவது தெ.படுத்துங்க..

குழப்பம் 3
பெண்ணியம் பெண்ணியம்னு நிறைய பேர் பேசறாங்களே, அப்படின்னா என்ன?

குழப்பம் 4
நாத்திகம்னா  அத்திகவாதிகளா குத்தம் சொல்றதா?? அதுவும் முக்கியமா ஒரு மதத்தை மட்டும் குறிவெச்சு தாக்கனுமா?? ஆத்திகவாதிகள் என்ன செய்யறாங்க?? ஒரு காலத்துல வாழ்ந்ததா நம்பப்படுற சிலரை கடவுளாய் பாக்கறாங்க. மூதாதையர்கள், முனிவர்கள் எழுதி வெச்சிட்டு போன வேதங்களை படிக்கறாங்க. முடிஞ்ச வரை அதை கடை பிடிக்கறாங்க. அப்படி பார்த்தா, இந்த நாத்திகமும் ஒரு வகைல மதம் தான?? நூறு வருடங்களுக்கு அப்பறம் வர சந்ததி, நாத்திகத்தை எப்படி அணுகுவாங்க ?? இவங்க இப்போ எழுதற புத்தகங்கள், வெக்கற சிலைகள் எல்லாத்தையும் என்ன பண்ணுவாங்க?? யாரோ எழுதிவெச்சது, எல்லாம் மூட நம்பிக்கை, பகுத்தறிவு வேணும் அப்படி இப்படின்னு அவங்களும் இதே மாதிரி உளறுவாங்களா ??? அப்படிபார்த்த இப்போ இவங்க சொல்றது எல்லாமே வேஸ்ட். பாவம் நாத்திக மதம்.... (வழக்கம் போல நாத்திகவாதிகள், மொக்கையா பின்னூட்டம் போடாம, புள்ளகுட்டிங்கள போய் படிக்க வைங்க)

குழப்பம் 5
சுறா, வேட்டைக்காரன் எல்லாம் ஹிட்டா???

குழப்பம் 6
நான் எப்படி இவ்வளவு மார்க் எடுத்து பாஸ் பண்ணேன்??

குழப்பம் 7
அடுத்து என்ன பண்ணப் போறேன்.

குழப்பம் 8
அடுத்து என்ன பதிவு போடறது??

குழப்பம் 9 
இந்த பதிவுக்கு, பின்னூட்டமும், வாக்குகளும் கிடைக்குமா கிடைக்காதா???

இப்போ புரியுதா?? என் வழி, தனி வழி.....

3 comments:

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்க்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

Ramanathan said...

Atheism is not a religion but when they have to fill up their religion column,they want them not to fill the religion they are not having faith..
and karthick in accept there are some modern atheists who suits wat u said in your blog although u cannot blame the whole atheist community.....

கா.கி said...

@painful
i jus compared atheism with the concept of religion. so in turn, atheism can also be called as religion, cause all atheists have a common belief and view point and follow a set of texts and create new texts.. i hope u get the idea.. im not blaming any, im jus telling...

thanks for ur visit and comment, pls visit often :)