Friday, December 12, 2008

கதை பண்றது....Part-1

கதை பண்றதுனா என்னான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும் சொல்றேன். சும்மா வேலை செய்யாமலே செய்யறாப் போல பாவ்லா பண்றதுதான் கதை பண்றது. உதாரணத்துக்கு, நம்ம வடிவேல் காமெடி ஒண்ணுத்துல, ஒரு ஆள் பஸ் தள்ளாமையே "ஹே தள்ளு தள்ளு தள்ளு"னு கதை பண்ணுவார். இத மாதிரி பல பேர் இருக்காங்க. ஆனா நான் சொல்லவந்தது இந்த கதை பண்றதப் பத்தி இல்ல, இது நெஜமாவே ஒரு சிறுகதையோ, தொடர்கதையோ, சினிமாவுக்கான கதையோ பண்றதப் பத்தி....

கதை எழுதனும்னு நான் எப்பவும் முயற்சி பண்ணது இல்ல. ஆனா சின்ன வயசிலேர்ந்தே நிறைய படிச்சிருக்கேன். அப்பெல்லாம் மாலைமதினு ஒரு novel + வாரப் பத்திரிக்கை ஒண்ணு வரும். அதுல வர கதைகள் பல, குப்பையா இருந்தாலும், சும்மா படிக்கற பழக்கதுக்காக வீட்ல வாங்குவாங்க. என் அம்மாவும் நிறைய படிப்பாங்க. கதை கவிதை எல்லாம் எழுதுவாங்க. அவங்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததுனால ஆர்வம் குறைஞ்சுடுச்சு. ஆனா அவங்களால எனக்கும் நிறைய படிக்கற பழக்கம் வந்தது. (ஆனா எனக்கு கவிதை ரசிக்கவும் எழுதவும் தெரியாது)...

நான் முதல்ல ஒரு முழு novel படிச்சது ஒரு ரயில் பயணதப்போ. அப்ப நான் 3rd ஸ்டாண்டர்ட் படிச்சிகிட்டு இருந்தேன். கதையோட பேர்கூட காவல் கல்யாணம். கதை செரியா ஞாபகம் இல்ல. அதெல்லாம் விடுங்க, இப்ப என்ன சொல்ல வரேன்னா, நான் நெறைய கதை பண்ணிருக்கேன்/படிச்சிருக்கேன் அப்படீங்கறதுதான். இதோட, லைப்ரரி மெம்பெர் வேற. கேக்கணுமா, ஒரே கதைதான் (ஒன்லி தமிழ் கதைகள், நோ peters). இப்படியாக போய்கிட்டு இருந்த கதைல, சுஜாதா சார் கதைகள் என்னை ரொம்ப influence பண்ணிச்சு. ஒரு கதை எப்படி இருக்கணும்னு நான் அவரோட பல கதைகள படிச்சுதான் கத்துகிட்டேன்.

என்னோட இளங்கலை பட்டப் படிப்பு (அதான் UG) ரெண்டு semesterlayum, ஒரு படம் எடுக்கணும். முன்ன ஒரு பதிவுல சொன்னா மாதிரி, எடுத்த படம் ஒண்ணு. கடைசி ஸெம்ல ஒரு குறும் படம் (ஷார்ட் பிலிம்) எடுக்கணும். அதுக்கான கதைய ரெடி பண்ண சொன்னாரு எங்க சார். எனக்கு ரொம்ப நாளாவே சுஜாதவின் சிறுகதைகள்ல ஏதாவது ஒண்ண எடுக்கனும்னு ஆசை. ஆனா கூட இருக்குற என்னோட ஒரு நண்பன் சுஜாதா கதைகள்ல ஒண்ண எடுக்கப்போராத சொன்னதுனால நான் என்னோட திட்டத்த கை விட்டேன். எனக்கு ஒரு பெரிய problem. என்னால ஒரு பழைய conceptku புதுசா பல modifications பண்ணி/ improvise பண்ணி நாசம் பண்ண தெரியும். ஆனா புதுசா ஒரு கான்செப்ட் யோசிச்சு கெடுக்க பல நாள் டைம் வேணும்.

ஆனா, எங்களுக்கு இருந்ததோ ரொம்ப கம்மியான டைம். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். நீங்களும் யோசிச்சுகிட்டே இருங்க, மீதிய அடுத்த பதிவுல சொல்றேன்.......


இத தான காலங்காலமா பண்றேன்.....

p.s.இது lancelot போட்ட பதிவுனால பாதிப்பு அடைஞ்சு எழுதுன பதிவு இல்ல. இத நான் ஒரு 20 நாளாவே draftla save பண்ணி வெச்சுருக்கேன்...

6 comments:

Lancelot said...

thalai suspense thangala...waiting for the story...

கா.கி said...

enna thala ne... naane kudukkaadha build-up u giving???
"ippadi yethi vittu yethi vitte......."

Lancelot said...

arasiyalla ithellam saatharan appa...please update soon...en thalayae vedichudum pola irukku en thalayae vedichudum pola irukku...(SJ Surya style)

swathi paul(dew drop) said...

hey the first novel i read was robinson crusoe.i remember.even my mom reads a lot.balakumaran fan

கா.கி said...

@swathi
amma thamizh..
ponnu peter....
gud...

Anonymous said...
This comment has been removed by the author.