Thursday, October 9, 2008

பொம்மை கொலு


prelogue - "Ofcourse, கொலூல பொம்மைதான் வெப்பாங்க, நீ என்ன புதுசா சொல்லிட" அப்படின்னு நீங்க நெனைக்கபோறதா, நானே assume பண்ணிக்கிட்டு, அதுக்கு ஒரு reply குடுக்கறேன்... அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா, கல்யாணத்துக்கும் - பொம்மை கல்யாணத்துக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கோ, அதே மாதிரி தான், கொலு பொம்மைக்கும் - பொம்மை கொலுவுக்கும்.

எப்பவும் நவராத்ரி timela நெறைய "ஆத்துல" கொலு வெப்பாங்க... சரஸ்வதி பூஜை அன்னிக்கு booksa பூஜைல வெச்சு, விஜயதசமிக்கு எடுத்து படிப்பாங்க (கரெக்ட் தான??)... இது போல பண்டிகைகள் கொண்டாட நெஜமாவே நல்ல காரணங்கள் இருக்கு, இருந்தாலும், குடும்பத்துல இருக்குற எல்லாரையும் ஒண்ணா கூட்ட, இது போல பண்டிகைகள் ஹெல்ப் பண்றதா நான் நெனைக்கறேன் (நான் ஆத்திகன் தான்).. இந்த முறையும் நவராத்திரிக்கு எங்க ஆத்துல (வூட்ல) கொலு வெச்சாங்க... ஆனா எப்பவும் இருக்குற ஜோர் இல்ல..

ஏதோ ஸாஸ்த்ரதுக்கு வெச்சா போல ஆய்டுச்சு.. நானும், என் அண்ணனும் செரியா பங்கு எடுத்துக்கல. என் அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் செஞ்சாங்க. இந்த முறைன்னு இல்ல, கடந்த 2-3 வருஷமாகவே இதே கதைதான். கொஞ்சம் வளர்ந்துட்டதா நாங்களே நெனசிக்கிட்டதாலும், சோம்பேறித்தனத்தாலும் இது போல செரியா கலந்துக்க முடியறதில்ல.
இந்த முறை,
  • நான் எழுந்தது 8 மணிக்கு,
  • முன்னாடி நாள் அப்பாகிட்ட எல்லாத்தையும் clean பண்றதா குடுத்த வாக்க காப்பாத்தமுடியல
  • என் வண்டிய clean பண்ணல
  • so overall நான் ஒண்ணுமே பண்ணல.
  • இது போன வருஷத்த விட மோசம்.
Because போன வருஷம் அட்லீஸ்ட் நான் இந்த cleaning processla ஹெல்ப் பண்ணேன். அப்பாவோட கவலை என்னன்னா, அடுத்த வருஷம் எனக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்குமாங்கரதுதான். இது போல வர பண்டிகைகளையும், நம்ம கலாச்சாரத்தையும் (நெஜமாகவே) மதிக்கிற எனக்கு, இது ஒரு பெரிய அவமானம்.. so எனக்கு நானே சொல்லிக்கிற சமாதானம் என்னன்னா

// நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும், நடப்பவை நல்லவைகளாகவே இருக்கட்டும். அடுத்து வரப்போற விசேஷங்கள்ள நம்மளோட sinceritya காமிப்போம்//

என் அப்பா இத படிக்கப்போரதில்ல, இருந்தாலும், for the sake of commitment, சொல்லிக்கறேன்... வாழ்க ஜனநாயகம் ...

2 comments:

Meera said...

Hai .Enna intha ponnu
unn palaya post tukku blog
paranu pakriya. Nan athhellam ippathan
one by one aa padikuren.
Inntha poster potta neeram nee unga vetla cleaning vela parthu irrukalam.
Itthukku ivvalo feel panni irrukavum venam.

கா.கி said...

u can give comments to any post... thats the facility of blog... one more thing, ur not bloggin, ur jus commenting... and this is a post not poster...

thanks for ur comment, atleast ur reading all the posts and commenting....